loader

All News

கோலாலம்பூர், அக்.14-
மஇகா இளைஞர் பிரிவு, பள்ளி மாணவர்களை உட்படுத்திய சமீபத்திய அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களால், குறிப்பாக பள்ளியில் பாலியல் வன்கொடுமை, எஸ்பிஎம் மாணவரின் தற்கொலை மற்றும் இன்று நடந்த கொலை சம்பவம் ஆகியவற்றால் பெருத்த கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்திலும், பள்ளி நேரத்திலும் நடந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கின்றது. தீவிரமான சமூக மற்றும் நன்னெறி நெருக்கடியைப் பிரதிபலிக்கும் இந்த சூழ்நிலையினை உடனடியாகவும் முழுமையாகவும் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

பள்ளிகள் மாணவர்கள் கல்வி கற்கவும், எதிர்காலத்தை உருவாக்கவும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும், மன உளைச்சலையோ அச்சத்தையோ ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது என அவர் சொன்னார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலத்தினை முன்னுரிமையாக கருத வேண்டுமே தவிர, ஒரு சிறு பிரச்சினையாக அலட்சியப் படுத்தக் கூடாது.

ஆதலால், மஇகா இளைஞர் பிரிவு, மலேசிய கல்வி அமைச்சு மற்றும் அதன் தொடர்புடைய இலாகாக்கள் பின்வரும் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்துகிறது:
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை வலுப்படுத்துதல், முக்கியமாக பகடிவதை, தொந்தரவு மற்றும் அத்துமீறல் தொடர்பாக ரகசிய புகார் அளிக்கும் வழிகளை உருவாக்குதல்,
மாணவர்களுக்கு குறிப்பாக முக்கிய தேர்வுகளுக்கு முன்பு, மனநல பரிசோதனை மற்றும் கட்டாய வழிகாட்டி ஆலோசனைகளை செயல்படுத்துதல்,
மாணவர்களிடையே மன அழுத்தம் அல்லது தீய நடத்தைகளை ஆரம்பத்திலேயே  கண்டறிந்து களைய பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்,
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறையுடன் இணைந்து பள்ளி வளாகங்களில் திடீர் ஆய்வு செய்தல் அவசியமாகும்.

ஒவ்வொரு மாணவரின் உயிரிழப்பும் வெறும் புள்ளிவிவரமல்ல. அவர்கள் நாட்டின் எதிர்காலமாக அமைய வேண்டியவர்கள், அவர்களின் இழப்பு குடும்பங்களையும் சமுதாயத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. இனிமேலும் வெறும் அறிக்கைகளோ உறுதிமொழிகளோ இல்லாமல், தீவிரமான மற்றும் உறுதியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் இது.

மஇகா இளைஞர் பிரிவு, இந்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பாகவும், பாதுகாக்கப்பட்டவர்களாகவும் உணர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் கல்வி அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,அக்.14-
பிரதமர் துறையின் கூட்டரசு அமைச்சரின் அரசியல் செயலாளராக வழக்கறிஞர் சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னிலையில் சிவமலர் கணபதி இன்று காலை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான சிவமலர் கணபதி சுகாதார அமைச்சருக்கும், கூட்டரசு அமைச்சருக்கும் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவரின் தொடர் சமூகநலன் நடவடிக்கைகளின் மூலமாக தற்போது கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலெவாவின் அரசியல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் எனும் சாதனையையும் வழக்கறிஞர் சிவமலர் கணபதி நிகழ்த்தியுள்ளார். அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண சிவமலர் கணபதி முக்கிய பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கில், அக். 11 —
மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுடன் இணைந்து, ரக்கான் மூடா ரக்கான் லித்தார் முயற்சியின் கீழ், முதல் முறையாக இந்திய பெண்களுக்கான கார் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் அக்டோபர் 11ஆம் திகதி 2025 (சனிக்கிழமை) அன்று டெங்கிலிலுள்ள Tapak Lepark வளாகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்வில் பல இந்திய பெண்கள் தங்களது தனிப்பட்ட கார்களுடன் கலந்து கொண்டு தங்கள் ஆர்வத்தையும் திறமையையும் அவர்கள் நவீன முறையில் அலங்கரித்த கார்களின் மூலமாக வெளிப்படுத்த உள்ளனர்.

அத்துடன், இந்த கார் கண்காட்சியில் அழகு படுத்தப்பட்ட பெண்களின்  கார்கள் மற்றும் அதி நவீன சூப்பர் பைக்குகள் போன்ற வாகனங்களும் காட்சிப்படுத்தப்படும் என இந்நிகழ்ச்சியின் திட்ட இயக்குநர் பவீத்தரன் இளங்கோவன் தெரிவித்தார்.

இது ஒரு சாதாரண கார் கண்காட்சி அல்ல; இளைஞர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் விழா என அவர் கூறினார்.

இந்நிகழ்வை மேலும் மெருகூட்டும் வகையில் பொதுமக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டு களிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு பவீத்தரன் இளங்கோவன் (தொலைபேசி: 010-396 1002 என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு  தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.

இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு  இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள  பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி  சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு  தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.

இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு  இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள  பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி  சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

கோலாலம்பூர், அக.8-
தொழில்நுட்ப மேம்பாட்டை கையாழ உணவக முதலாளிகளுக்கும் நிர்வாக பணியாளர்களுக்கும் சிறப்பு பயிற்சியை வழங்க இம்முறை அறிவிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் சிறப்பு மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என பிரிமாஸ் எனப்படும் இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கூறினார்.

இன்றைய சூழலில் உணவக உரிமையாளர்கள் பல வகையான சவால்களை எதிர்கொள்கின்றனர். அதில் முதன்மையாக அந்நிய தொழிலாளர்கள் தேவை இருந்தாலும் அதை சரிகட்ட தொழில்நுட்ப பயன்பாடு பற்றிய புரிதல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு AI தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு மிகவும் அவசியம் என அவர் சொன்னார்.

இதன் மூலம் தொழிலாளர் பிரட்சினையை அவர்கள் களையலாம். ஆகையால் அரசாங்க சிறப்பு நிதியை ஒதுக்கி அவர்களுக்கு பயிற்சியை வழங்க முன்வரவேண்டும் என சுரேஸ் கூறினார்.

இன்றைய நிலையில் இந்திய உணவக உரிமையாளர்களுக்கென சுமார் 8,000 அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் தொடர்பில் பல பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னர் gantian முறையை அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இருந்தாலும் தொழிலாளர் பிரச்சினை தீர்ந்தப்பாடில்லை என அவர் சொன்னார்.

இதற்கு மத்தியில் நாட்டில் விலைவாசி ஏற்றம் எங்களுக்கு மற்றொரு பெரும் பாரமாக அமைகிறது. அடிப்படை பொருட்களின் விலை ஏற்றம் காண்பது எங்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. அடிப்படை பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியம். விலைவாசி ஏற்றம் தொடர்ந்தால் அதனை சரிகட்ட உணவு விலையை நாங்கள் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர் சொன்னார்.

பிரிமாஸிசின் 25ஆவது வெள்ளி விழா நேற்று தலைநகரிலுள்ள பிரசித்திப் பெற்ற தங்குவிடுதியில் நடைப்பெற்றது. 25 ஆண்டுகள் என்பது சாதரண விடையம் அல்ல என சங்கத்தின் காப்பாளர் டத்தோ ரேனா ராமலிங்கம் தெரிவித்தார்.

உணவக துறையில் இந்திய இளைஞர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அங்காடி கடை வழி அவர்கள் இத்துறையில் கால் பதித்து குளிர்சாதண வசதி கொண்ட உணவகம் வரை உருவாக்கி அவர்கள் இத்துறையில் சாதனை படைக்க வேண்டும்.

இத்துறையில் தான் 40 ஆண்டுகள் உள்ளதாகவும் தொடக்க காலத்தில் பல இன்னல்கள் மத்தியில் இந்த தொழிலை ஆரம்பித்து விடமுயற்சியுடன் அயராத உழைப்பால் இன்று இந்நிலையை அடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

ஆகையால் முறையான பயிற்சியை பெற்று இளைஞர்கள் இத்துறையில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

கிள்ளான், அக்.8-
காபி, டீ பிரியர்களின் தேர்வாக அமைந்துள்ள மெட்ராஸ் பேக்கரி கடையின் புதிய கிளை தற்போது கிள்ளான், தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ், மஸ்ஜிட் இந்தியா ஆகிய பகுதிகளில் இந்த கடையின் கிளைகள் உள்ளன. எப்போது சென்றாலும் வாடிக்கையாளர் அக்கடைகளில் நிரம்பி இருப்பது வழக்கம்.

வாடிக்கையாளர்களின் ருசிக்கு ஏற்ப காபி, டீ உடன் பலகாரங்களும் அங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடை தெங்கு கிளானாலும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டதாக அதன் இயக்குநர்களான புர்ஹான் மற்றும் டெனேஸ் ஆகியோர்கள் கூறினர்.

அண்மையில் தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் மெட்ராஸ் பேக்கரி கடை திறக்கப்பட்டது. இந்த கடையின் திறப்பு விழாவிற்கு டத்தோ டி.மோகன், கொடை வள்ளர் ஓம்ஸ் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்து கடையை திறந்து வைத்தனர்.

அதன் பின்னர் நடிகர் பிரேம்ஜி கடைக்கு சிறப்பு வருகை புரிந்ததுடன் டீ குடுத்து விட்டு தமிழகத்தில் குடிப்பதுபோல் ருசியாக இருப்பதாக கூறினார்.

டீ, காபி மட்டுமின்றி, பலகாரங்கள், முறுக்கு வகைகள், கேக் வகைகள் என பலவகை இந்த கடையில் உள்ளது. இந்த கடையின் மற்றொரு சிறப்பாக பழசாரும் விற்கப்படுகிறது. பழங்களை கொண்டு இங்கு அலங்காரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவகாடோ பழச்சாறு இந்த கடையில் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேர்வாக இந்த பழச்சாறு உள்ளதாக புர்ஹான் மற்றும் டெனிஸ் கூறினர்.

தீபாவளியை முன்னிட்டு கிள்ளான் லிட்டல் இந்தியாவில் மெட்ராஸ் பேக்கிரியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு உடைகள் மற்றும் தேவைப்படும் பொருட்களை வாங்க இங்கு வரும் மக்கள் தங்களின் தாகத்தை தீர்க்கவும் பசியை ஆற்றவும் தாரளமாக மெட்ராஸ் பேக்கரிக்கு வரலாம் என அவர்கள் கூறினர்.

கோலாலம்பூர் அக் 7-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகள் இப்போது தத்தளிக்கிறார்கள்.

அவர்கள் வியாபாரம் செய்ய ஏன் முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேள்வியை எழுப்பினார்.

இம்முறை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி கடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா முக்கிய சாலைகளில் கடைகளை அமைத்தது ஏன்?

போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கும் வேளையில் இந்த கடைகளால் மேலும் மிக மோசமான  நெரிசல் ஏற்படும்.

அதிலும் இம்முறை ஏன் மாற்று திறனாலிகளுக்கு கடைகள் கொடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கும் கடைகள் கொடுக்கப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.

உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்து மற்றவர்களுக்கு கடைகள் கொடுத்தது ஏன் என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.

விலாயா மாநில முன்னாள் துணை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் என்னையும் அழைத்து  இது குறித்து ஆலோசனை கேட்டு இருக்கலாம்.
அதையும் செய்யவில்லை. ஒரு பகுதி ரோட்டை அடைத்து கடைகளை அமைத்தது முறையல்ல என்று அவர் சொன்னார்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. அனைத்தையும் முறை படுத்துங்கள்.

முறையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் சொன்னார்.

விடுபட்டு போனவர்களுக்கு கடைகளை ஏற்படுத்தி கொடுங்குகள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கடை விவகாரம் தொடர்பாக பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று களம் இறங்கினார்.

விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன், பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், சிகாம்பூட் தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர்,அக்.5-
நடிகரும் இயக்குநருமான தனுஷ், அருண்விஜய், சத்யராஜ் மற்றும் பல முன்னணி கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம், மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகி, தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.

இத்திரைப்படம் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய அளவிற்கு அற்புதமாக இயக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

அனைவரும் திரையரங்குகளில் நேரடியாக வந்து இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என நடிகர் தநுஷும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் கூறுகையில்,
மலேசியாவில் தரமான தமிழக திரைப்படங்களை கொண்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சி. தனுஷ் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டும்.

குடும்ப கதையான இத்திரைப்படம் தனி ஒரு பாணியில் இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை குடும்பத்தினருடம் தாரளமாக கண்டுக் கழிக்கலாம் என அவர் சொன்னார்.

இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி அண்மையில் செராஸ், வேலோசிட்டி மாலின் திரையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகமான ரசிகர்கள் திரண்டதால் நிகழ்ச்சி விழாவைப் போல இருந்தது.

கோலாலம்பூர் அக் - 2
இஸ்ரேலியப் படைகளால் குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு  ம.இ.கா  கவலையை வெளிப்படுத்தியது மற்றும் கப்பலில் உள்ள அனைத்து மனிதாபிமான ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் சர்வதேசத் தலைமையை பயன்படுத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவாகவும் நிபந்தனையின்றி விடுவிப்பதற்கு வாதிடுமாறு நாங்கள்  கேட்டுக்கொள்கிறோம்.

சர்வதேச கடல் பகுதியில் அமைதியான மனிதாபிமானப் பணியை இடைமறிப்பது சர்வதேச சட்டத்தின் மதிப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.

அதோடு காசா மக்களின் துன்பத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.

அமைதி மற்றும் மனிதாபிமான நிவாரணத்திற்கான காரணத்தை மலேசியா நீண்ட காலமாகப் பாதுகாத்து வருகிறது. இது சம்பந்தமாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காசாவிற்கு மனிதாபிமான உதவி தடையின்றி வழங்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) உள்ளிட்ட சர்வதேச அமைப்பின் தலையீட்டை தீவிரப்படுத்துமாறு  அரசாங்கத்தை  கேட்டுக்  கொள்வதாக டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், அக்.2-
கூடாரத்தை மாற்றுங்கள், விளக்குகளை பொருத்துங்கள், இங்கு அமைக்கப்பட்ட கூடாரம், நுழை வாசல் பதாகை பாதுகாப்பாக இல்லை என்ற பிரிக்பீல்ட்ஸ் வியாபாரிகளின் குமுறல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டாத பட்சத்தில் இயற்கையின் காதிற்கு எட்டியவாறு ஒவ்வொன்று நடந்து வருகிறது.

இரு நாட்களுக்கு முன்பு பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் அமைக்கப்பட்டிருந்த நான்கு கூடாரங்கள் காற்றில் பறந்தன.

இன்று அங்கு நுழைவாசலில் அமைக்கப்பட்டிருந்த பதாகை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்துள்ளது. நல்ல வேளை மக்கள் யாரும் இதில் பாதிக்கப்படவில்லை.

பார்க்கும் இடமெல்லாம் மடானி சின்னம். இது தீபாவளி சந்தையா அல்லது மடானி அரசாங்கத்தின் எக்ஸ்போ வா என்று தெரியவில்லை என பலர் பேசிவருகின்றனர்.

தீபாவளி வாழ்த்து என்ற சொல்லும் இல்லை தீபாவளி கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அங்கு எந்த அழகாரங்களும் இல்லை. அதற்கும் மேல் விளக்குகள் இல்லாத நிலையில் இருள் சூழ்ந்த நிலையில் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொருத்தப்பட்டுள்ள கூடாரங்கள் தீபாவளி வியாபாரத்திற்கு பொருத்தமாக இருக்காது, கூடாரங்களும் பாதுகாப்பாக இல்லை என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியிருந்தார். அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் பொருட்படுத்தவில்லை.

நேற்று அங்குள்ள வியாபாரிகளும் இதையைதான் சொன்னார்கள். இரவுக்குள்ள பெரிய கூடாரங்கள் மாற்றப்படும் என ஒரு தரப்பு கூறியது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பாதுகாப்பற்ற நிலை கூடாரங்களும் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலட்சிய போக்கு ஏன்?

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை அமைக்கும் விவகாரத்தில் அனுபவம் நிறைந்தவர்கள் பல கருத்துகளை கூறியும் சம்பந்தப்பட்ட அரசு தரப்பு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இவ்வளவு நடந்த பின்னர் இன்று கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரி சிவமலர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். 8x8 உள்ள கூடாரங்களை 10x10 என்ற அளவில் மாற்றி தருவதாக கூறியுள்ளார். கூடாரங்கள் கொஞ்சம் பெரிதாக மாற்றப்பட்டாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி அவர் விவரிக்கவில்லை. தீபாவளி அலங்காரம் இதன் பின் நடக்கும் என சிவமலர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் கூடாரம் அமைப்பதிலும் பாதுகாப்பிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இம்முறை யார் எடுத்த முடிவு என்று தெரியவில்லை கூடாரங்கள் பிரதான சாலையில் பொருத்தப்பட்டுள்ளன. தீபாவளி காலத்தில் பிரிக்பீல்ட்ஸில் சாலை நெரிசல் கடுமையாக இருக்கும். ஆனால் இம்முறை இருந்த சாலையும் பாதி மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறி வசனம்தான் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. எதை செய்தாலும் பிலான் பன்னிதான் செய்யனும் என்ற வசனத்திற்கு ஏற்ப பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை ஏற்பாடுகள் அமைந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

சாதரண மழை, காற்றிற்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசம்பாவிதம் நடக்கிறது. கனத்த காற்று வீசினால் என்னதான் நடக்குமோ தெரியவில்லை.

முறையான பாதுகாப்பு இல்லாதது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தலாம். இதனால் அந்த பகுதியில் வியாபாரம் குறையவும் வாய்ப்பு உள்ளன. அதனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தீபாவளி என்றாலே அது ஒளியை பிரதிபலிக்கும். இதனை கருத்தில் கொண்டு தீபாவளி கொண்டாட்டத்தை போல பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை பகுதியில் அலங்காரங்களும் விளக்குகளும் பொருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அதே நேரத்தில் இந்த முறை கலை நிகழ்ச்சி நடத்தபடாது எனவும்.. அதற்கு யாரும்  இது வரை விண்ணப்பம் செய்ய வில்லை என சிவமலர் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், செப்.28-
சிறந்த கவிதைகளை படைப்பதற்கு நம் குரலிலுள்ள சக்தி விரலிலும் இருப்பது அவசியம் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கவிதைகளை படைப்பதில் நாம் மொழியை கையாழும் விதம்தான் அதனை காலம் கடந்து வாழ வைக்கும் என இன்று மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைப்பெற்ற மனிதம் தேடும் மனிதன் நூல் வெளியீட்டு விழாவில் அவர் சொன்னார்.

தமிழகத்திலிருந்து பிழைப்பை தேடி இங்கு வந்து நாளிதழில் பல கவிதை படைப்புகளை எழுதி புகழ்பெற்ற கவிஞர் பெர்னாட்ஷாவின் கவிதை நூழை இன்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெளியிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இந்த நூலிலுள்ளா கவிதைகளை அவர் எழுதியுள்ளார். இந்த நூழை அன்றே வெளியிட எண்ணம் கொண்டபோது உடல் நல குறையால் கவிஞர் மீண்டும் தமிழகத்திற்கு சென்ற பின்னர் தற்போதுதான் அவரின் நூல் படைப்புகள் தற்போது நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

இந்த நூலில் படைக்கப்பட்டுள்ள மரபுக் கவிதைகள் பொருள் சொல்லும் விதத்தில் மாறுப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அண்மையில் வெளியீடு கண்ட கவிதை நூல்களில் இந்த நூல் சிறந்த கவிதை நூலாக உள்ளாதாக அவர் சொன்னார்.

மேலும் அவர் கடந்து வந்த பாதையில் அவருக்கு உதவியவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அந்த உதவிகளை பற்றி அவர் கவிதை வரியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.

இன்று நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு பிரமுகர்களாக நிலநிதி கூட்டுறவுக் கழகத்தின் இயக்குநர் டத்தோ சகாதேவன், மலேசிய  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆலோசகர் ராஜேந்திரன், வணக்கம் மலேசியா செய்தி இணைய தளத்தின் உரிமையாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஷா ஆலம், செப்.28-
பல ஆண்டு காலமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு தற்போது என் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற அரசியலுக்கு வருவதாக சமூக சேவகரும் புரட்சி அமைப்பின் தோற்றுநருமான உமாகாந்தன் தெரிவித்தார்.

இந்நாட்டில் அன்று தொட்டு இன்று வரை இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.

சமுதாயத்தின் குரலாக இருப்பேன் என கூறி இன்று ஆட்சியில் அமர்ந்துள்ள பல இந்திய தலைவர்கள் இன்று மௌனம் சாதிக்கின்றனர். நம் சமுதாயத்தின் தேவைகளை பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. வாய் பேச்சில் வீரனாக இருந்தவர்கள் இன்று எதையும் சாதிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதனால் சமுதாயத்திற்காக எதையும் செய்யாத தலைவர்களை பற்றி பேசுவதை விடுத்து நாங்களே சமுதாயத்திற்கு சேவையாற்றவும் நம் சமுதாயத்தின் தேவைகளை கேட்டு பெறுவதற்கு முன் வந்துவிட்டதாக உமாகாந்தன் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் அவரை அதற்கு தீர்வு கிடைத்ததில்லை. ஒரு பிரச்சினைக்கு மக்கள் கூடி குரல் கொடுத்தால் மட்டுமே தற்காலிக தீர்வு கிடைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தலைவர்கள் களத்தில் இறங்கி தீர்வு கிடைக்க போராடியதும் இல்லை. அதை பற்றி கவலையும் அவர்களுக்கு இல்லை. அதனால் இளைஞர்கள் நாங்கள் தற்போது மலேசிய இந்திய மக்கள் கட்சியில் (எம்ஐபிபி) இணைந்து அரசியல் களத்தில் கால் பதித்து எங்களின் பிரச்சினைகளை நாங்களே சரி செய்ய தயாராகிவிட்டோம் என அவர் சொன்னார்.

இதற்கிடையில் இன்று எம்ஐபிபி கட்சியின் கோத்தா ராஜா தொகுதியின் தொடக்க விழா நடந்தது. இந்த தொகுதியின் கீழ் 3 சட்டமன்றங்கள் அதாவது கோத்தா கெமுனிங், செந்தோசா, சுங்கை கண்டீஸ் ஆகியவை உருவாக்கப்பட்டன.

எம்ஐபிபி கட்சியின் தேசியத் தலைவர் புனிதன் தலைமையில் இந்த தொடக்க விழா நடைப்பெற்றதுடன் கோத்தா ராஜா தலைவராக உமாகாந்தன் அறிவிக்கப்பட்டார்.

தொடக்க விழாவில் இந்த தொகுதியிலுள்ள வெள்ளப் பிரச்சினை, வெளிநாட்டவர்களின் ஆதிக்கம், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் என 7 கோரிக்கைகளை உமாகாந்தன் முன்வைத்ததுடன் இத்தொகுதியின் கிழ் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10,000 உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், செப்.25-
செந்தூல், ஜாலான் ஈப்போ அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடையை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தற்போதைய சூழ்நிலை இந்திய இளைஞர் அதிகமாக வியாபாரத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். உணவகம், முக ஒப்பனை நிலையங்கள், ஜவுலிக் கடைகள் என பல துறைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தூல், ஜாலான் ஈப்போவில் மகாராஜா ஜவுலிக்கடைக்கு அருகில் தற்போது செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடை திறக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் பல ஜவுலிக்கடைகள் இருந்தால்தான் பெண்களுக்கு பிடிக்கும். அவர்களுக்கு தேவையானவற்றை அவர்கள் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த வகையில்தான் பல காலமாக சீனர்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நம் இனத்தவர்களும் இதேபோன்று ஒற்றுமையாக ஒரே இடத்தில் பல வியாபாரங்களை மேற்கொள்வதை வரவேற்பதாக ஜவுலிக்கடை திறப்பு விழாவின் போது அவர் சொன்னார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று செந்தூல் ஸ்ரீ குமரன் திறக்கப்பட்டுள்ளது. பட்டு சேலைகள், பஞ்சாபி சூட், சிறுவர்களுக்கான பாரம்பரிய உடைகள் என புதிய டிசைன்களில் பல வகை உடைகள் செந்தூல் ஸ்ரீ குமரன் ஜவுலிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் திரளாக வந்து இந்த கடையில் வாங்கிக் கொள்ளலாம்.

 

கோலாலம்பூர், செப்.25-
செந்தூல், ஜாலான் ஈப்போ அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடையை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தற்போதைய சூழ்நிலை இந்திய இளைஞர் அதிகமாக வியாபாரத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். உணவகம், முக ஒப்பனை நிலையங்கள், ஜவுலிக் கடைகள் என பல துறைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தூல், ஜாலான் ஈப்போவில் மகாராஜா ஜவுலிக்கடைக்கு அருகில் தற்போது செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடை திறக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் பல ஜவுலிக்கடைகள் இருந்தால்தான் பெண்களுக்கு பிடிக்கும். அவர்களுக்கு தேவையானவற்றை அவர்கள் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ள முடியும்.

இதே போன்றுதான் பல காலமாக சீனர்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நம் இனத்தவர்களும் இதேபோன்று ஒற்றுமையாக ஒரே இடத்தில் பல வியாபாரங்களை மேற்கொள்வதை வரவேற்பதாக ஜவுலிக்கடை திறப்பு விழாவின் போது அவர் சொன்னார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று செந்தூல் ஸ்ரீ குமரன் திறக்கப்பட்டுள்ளது. பட்டு சேலைகள், பஞ்சாபி சூட், சிறுவர்களுக்கான பாரம்பரிய உடைகள் என புதிய டிசைன்களில் பல வகை உடைகள் செந்தூல் ஸ்ரீ குமரன் ஜவுலிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் திரளாக வந்து இந்த கடையில் வாங்கிக் கொள்ளலாம்.

கோலாலம்பூர், செப்.23-
நிலையில்லா அரசியல் சவால்களை மஇகா இன்னும் வலுவாக எதிர்கொள்ள வேண்டும் என டேசா பண்டான் மஇகா கிளைத் தலைவர் எம். செல்வேந்திரன் என்ற செல்வன் கூறினார்.

மஇகா நேற்று திடீரென முளைத்த கட்சி அல்ல. சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு இந்நாட்டின் இந்திய சமுதாயத்திற்காக உரிய சேவைகளை செய்து வரும் மகத்தான கட்சி.

மஇகா என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய பல பேர் இன்று ஊமையாகி விட்டனர்.

இதற்கு ஆட்சியிலும் அரசாங்கத்திலும் மஇகா இருந்த போது செய்தததை இப்போது எந்த கட்சியினாலும் செய்ய முடியவில்லை.இதனை பலர் இப்போது தான் உணர்கின்றனர்.

ஆக எதிர்கால அரசியலில் மஇகா நிலையான இடத்தை பிடிக்க வேண்டும். அதற்கு கட்சியின் உள்ள அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டும்.
குறிப்பாக இந்திய சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அவ்வகையில் டேசா பண்டான் மஇகா கிளை கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு வழங்கும்.

அவர்கள் காட்டும் வழியில் பயணிக்கும் என்று செல்வேந்திரன் கூறினார்.

டேசா பாண்டான் மஇகா கிளையின் அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் இக்கூட்டத்திற்கு தலைமையேற்றார்.

இக்கூட்டத்தில் ஆர்.டி. சுந்தரம், அரசு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செரண்டா, செப்.23-
நம் சமுதாயம் நிலைத்திருக்க நமது மொழி, கலாச்சாரம், பண்பாட்டை நாம் காப்பது அவசியமாகும் என உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின்  ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் தெரிவித்தார்.

தமிழ்மொழியை கற்பதனால் நமக்கு பல வகையில் நன்மை உண்டு. அதனை கற்க தவறியவர்களுக்குதான் அதன் அருமை புரியும் என அவர் சொன்னார்.

மேலும் நாம் குறிக்கோளை முன்வைத்து அதாவது நமது எதிர்கால ஆசையை உறுதி செய்து விட்டுதான் அதற்கான மேற்கல்வியை நாம் தொடர வேண்டுமென என அவர் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.

நம் வாழ்க்கையில் எந்த நிலைக்கு சென்றாலும் நம்முடையை பெற்றோர்களை போற்ற வேண்டியது நமது கடமையாகும். அவர்கள் நமக்காக செய்த தியாகங்களை நினைவில் வைத்து நாம் செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.

இதற்கிடையில் இன்று அந்தாரா காப்பியிலுள்ள எஸ்பி கேர் தலைமையக மண்டபத்தில் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி எழுதவுள்ள மாணவர்களுக்கு பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிலங்கூர் மாநில கல்வி இலாகாவின்  தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் செங்குட்டுவன், உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப.புவனேஸ்வரன், எழுத்தாளர் சிவலெனின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

செரண்டா, செப். 23-
உலுசிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த
107 இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு எஸ் பி.எம். தமிழ்மொழி பயிற்சி பட்டறை இன்று அந்தாரா காபி விஸ்மா எஸ்பி கேர் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த பயிற்சி பட்டறை க்கான இடம் மற்றும் உணவு செலவுகளை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையை சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ் மொழிப் பிரிவு உதவி இயக்குநர் செங்குட்டுவன் வீரன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ் மொழி  கற்றல் கற்பித்தல் குழு , உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகா ஆகியவற்றுடன் இணைந்து இந்த பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, கிராமத் தலைவர் முரளி, பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சிவலெனின் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சிவலெனின் மலாயா கணபதி வாழ்வும் போராட்டாமும் புத்தகம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.

கோலாலம்பூர், செப்.20-
பொழுது போக்குகாக ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடர்ந்த  ஷேடோபெக் மோட்டார் சைக்கிள் குழுவின் தோற்றுநர் டத்தோ ஆனந்த் இன்று அந்த பொழுது போக்கை சாதனையாக்கியதுடன் மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் நீண்ட தூரம் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மலேசியர் என்ற பெருமையையும் உலகின் உயர்ந்த எல்லையான உம்லிங் லா பாஸைக்கை ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் கடந்த முதலாவது மலேசியர் என்ற இரட்டைச் சாதனையை படித்தை மலேசிய சாதனை புத்தகத்தில் அவர் இடம் பிடித்தார்.

அதுபோன்ற கரடு முரடான பாதையில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் கடக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டுவதற்காக அவர் இந்த சாதனையை மேற்கொண்டு இன்று சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

அவரை பாராட்டும் வகையில் நேற்று தலைநகரிலுள்ள ரோட் 77 ஹார்லி டேவிட்சன் மையத்தில் விருந்து நிகழ்ச்சியுடன் கூடிய பாராட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மலேசிய சாதனை  புத்தக விருதை அவரிடம் அதிகாரிகள் வழங்கிச் சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கலந்து கொண்டார்.

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (வயது46) உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.

சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா பட துவக்க விழா தளத்தில் ரத்த வாந்தி எடுத்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

தர்ம சக்கரம் படம் தொடங்கி, மாரி, இதற்குதானே ஆசைப்பட்டாய், தேசிங்குராஜா, புலி, விஸ்வாசம், இரும்புதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரோபோ சங்கர்.

ஜொகூர் பாரு, செப்.12-
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜொகூர் பாரு, பிலாஸா தாசேக் எல்எஃப்எஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டு முதல் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 10,000 சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்ளனர். அன்றைய தினத்தில் சுமார் 200 பேர் முதல் காட்சியில் கலந்து கொண்டனர். இந்த முதல் நாள் சிறப்பு காட்சியை ஜொகூர் மாநில சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கொண்டாட்டம் ஆடல் பாடல், அணிச்சல் வெட்டுதல், சிறுவர்களுக்கு பரிசு வழங்குதல் உட்பட இன்னும் பல்வேறு அம்சங்களுடன் நடைபெற்றது.

இளைஞர்களின் கூட்டமைப்பில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இதுபோன்ற அமைப்புகளில் இந்திய இளைஞர்கள் இணைந்து செயலாற்றும்போது அவர்கள் மத்தியில் ஒற்றுமை மேலோங்குவதுடன் தீயச் செயல்களில் ஈடுபடும் போக்கு தவிர்க்கப்படும் என ஜொகூர் மாநில சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் ஜெயமலர் தெரிவித்தார்.

திரைப்படம் மிக சிறப்பாக இயக்கப்பட்டுள்ளது. இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்ததாக குறிப்பிடப்பட்டது

கோலாலம்பூர் செப்- 12
கடந்த இரண்டு ஆண்டுகளாக. கருஞ்சட்டை  இளைஞர் படை தந்தை  பெரியார் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தினர்.

தந்தை பெரியாரின் 147 ஆவது   பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி பன்னாட்டு  இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு தலைநகர்  Chinese assembly hall மண்டபத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறவுள்ளது.

இதற்கு முன் எதிர்வரும் செப்டெம்பர்  17 ஆம் திகதி இயங்கலை நிகழ்ச்சி  நடைப்பெறவுள்ளது.

இரவு 8.30 மணிக்கு my periyaar முகநூல் அகப்பக்கத்தில் மலேசிய ,இலங்கை, அஸ்திரேலியா  தமிழ் நாடு என பல பேச்சாளர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

இதில்  தமிழக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி  சிறப்புறை வழங்க இருக்கிறார்.

அதே நேரத்தில் 21 ஆம் திகதி சீன அசெம்பளி மண்டபத்தில்  நடைப்பெறும் கருத்தரங்கு 2 பிரிவாக நடைப்பெறவுள்ளது.

காலை 10 மணி முதல்  மதியம் 12 மணி வரை மலாய் அமர்வும், மதியம் 2 மணி  முதல் 4  மணி வரை  தமிழ் அமர்வு நடைப்பெறும் என  ஏற்பாட்டாளர் நாகேன்  தெரிவித்தார்.

கருஞ்சட்டை இளைஞர் படை குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திய பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு, இவ்வாண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

தன்னார்வ ஆய்வாளர் சாமிநாதன், ஊடகவியலாளர் இளவெனில் மற்றும் களப் பணியாளர் - கவிஞர் கெளசல்யா ஆகியோர் இதில் உரையாற்றுவார் கள்.

திராவிட மற்றும் பெரியார் சிந்தனையின் தேவை மலேசிய சமுதாயத்தில் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று ஏற்பாட்டுக் குழு  தோழர் நாகேன் தெரிவித்தார்.

கருத்தரங்கில்
மலேசியர்களிடயே வலுத்துள்ள மத இன நல்லிணக்க பிரச்சனைகளை மாற்று சிந்தனையின் வழி எவ்வாறு கையாளலாம் என்று கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்
தோழர் நாகேன் :
016-5910564 
தோழர் யோகி : 016-5432572
தோழர் கௌசல்யா : 011-36321725 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

பெட்டாலிங் ஜெயா, செப்.9-
இசைத்துறையில் அதிலும் இந்திய இளைஞர்கள் மத்தியில் பல திறமையான DJ-க்கள் உள்ளனர். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பீட் தலைவன் போட்டி நடைப்பெறவுள்ளது.

இந்த போட்டியை செந்தோசா சட்டமன்ற தொகுதி, அஜெண்டா சூரியா, ரியல் ஜோக்கி, திரினித்தி சொலுஷன் நிறுவனம், செஜாத்ரா செந்தோசா சிலாங்கூர் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போட்டியில் சுமார் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெ.12 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் காத்து கொண்டிருக்கிறது.

இந்த போட்டிக்கான பதிவு நாளை 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையும். அதனை தொடர்ந்து இம்மாதம் 26ஆம் தேதி முதல் கட்ட தேர்வு நடைப்பெறும். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் 5ஆம் தேதி இப்போட்டிக்கான அரையிறுதி சுற்று நடைப்பெறும். அடுத்ததாக தீபாவளி கொண்டாட்டம் கலந்து இந்த போட்டியின் இறுதிச் சுற்று 15ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைப்பெறவுள்ளது.

இசைத்துறையில் இந்திய இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் கூடுதல் வருமானத்தை பெற்றுத் தர இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு 012-5803605 (மணி போய்), 017-3149462 (ஹார்டி பி) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

 

கோலாலம்பூர், செப்.9-
சிலம்பம் போட்டி சுக்மாவில் இடம் பெறவில்லை என்றதும் பல தரப்பினர் இதன் தொடர்பில் குரல் கொடுத்தனர். அதன் பின்னர் சுக்மாவில் சிலம்பம் போட்டி இணைக்கப்பட்டது.

இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் நம் தற்காப்பு கலையான சிலம்பத்தை காக்க நாம் இணைந்து இந்த கலையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென மஇகா விளையாட்டுப் பிரிவுத் தலைவர் எண்ரூ டேவிட் தெரிவித்தார்.

அந்த வகையில் மலேசிய சிலம்ப கழகத்துடன் இணைந்து மஇகா விளையாட்டுப் பிரிவு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிலம்ப கிண்ணத்தை இம்மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை கெடா லுனாஸ், ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டியில் நாடு தழுவிய அளவில் 300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த போட்டி 30 பிரிவுகளாக நடக்கவுள்ள வேளையில்,12 குழுக்கள் கலந்து கொள்ளவர். 

இந்த போட்டிக்கான பதிவு நடந்து முடிந்து விட்டது. மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மத்தியில் சிலம்பத்திற்கு அதிக வரவேற்பு இருப்பது இந்த போட்டியில் பதிவு செய்துள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை நமக்கு எடுத்து காட்டுகிறது.

நமது பாரம்பரிய கலைகள், தற்காப்பு கலை ஆகியவற்றை வளர்ப்பதற்கும் பாதுகாக்கவும் மஇகா தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை நடத்தும் என எண்ரூ டேவிட் தெரிவித்தார்.

இந்த சிலம்ப போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா 14ஆம் தேதி நடைப்பெறவுள்ளதாகவும் அதனை அதிகாரப்பூர்வமாக மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைப்பார் என எண்ரூ தெரிவித்தார்.

இந்த போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் இன்று செராஸில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்வுடன் கழக பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர், செப்.9-
மலேசிய மக்கள் சக்தி கட்சியில் கடந்த 16 ஆண்டுகள் உழைத்து ஓடாய் தேய்ந்து போனதுதான் மிட்சம் என கூறிய அக்கட்சியின் உதவித் தலைவரான மணிவண்ணன், இன்றுடன் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கட்சி தலைமைத்துவம் முறையான காரணமின்றி என்னை கட்சியிலிருந்து 3 ஆண்டுகள் இடை நீக்கம் செய்துள்ளது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கூறவும் வாய்ப்பு வழங்கவில்லை.

என் மீது குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விளக்கத்தை வழங்க காரணம் கோரும் கடிதத்தையும் கட்சி கேட்கவில்லை. மேலும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரும் என்னிடம் பேசவில்லை என பேரா மாநில  மலேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவருமான அவர் கூறினார்.

எனக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என்னோடு இணைந்து என் தொகுதியான லுமூட் கிளை உறுப்பினர்களான 1,500 பேர் கட்சியை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளனர் என இன்று செந்தூல் மெட்ராஸ் காபே உணவகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் மணிவண்ணன் கூறினார்.

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விளக்கம் மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சியில் எனது சேவைகள் அடங்கிய முழு விவரங்களை புத்தகம் வடிவில் தயாரித்து கட்சி தலைமையிடம் நான் வழங்கியுள்ளேன். ஆனால் இதுவரை அதன் தொடர்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மேலும் என்னை இடைநீக்கம் செய்தது தொடர்பில் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சம்ரியின் சிறப்பு அதிகாரியிடமும் புகார் கூறினேன், ஆனால் அவர்களும் அதனை கண்டுக் கொள்ளவில்லை என அவர் வருத்தத்துடன் கூறினார்.

ஆகையால் மலேசிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து தான் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அவர் அறிவித்ததுடன் தனது அரசியல் பயணம் இத்துடன் முடிந்து விடாது, அது தொடரும் என்றார்.

கோலாலம்பூர், செப் 6-
உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக்  தடை செய்யப்பட வேண்டும். இதற்கான அழுத்தத்தை அரசு கொடுக்க வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

சமீபத்தில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறியதாவது;
தொடர்ந்து அதிகரித்து வரும் இணையப் பகடிவதைப் பிரச்சினையை களைவது குறித்து டிக்-டாக் தளம் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.
குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு எதிரானதை கையாளத் தவறியதற்காகவும், முன்னர் வாக்குறுதியளித்தபடி கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமிக்காததையும் அதை பற்றிய விவரங்கள் இதுவரை வழங்கப்படாததையும் அவர் கடுமையாக கண்டித்து பேசியுள்ளார்.

மேலும் மறைந்த ஈஷா மீதான கொடுமைப்படுத்துதல் வழக்கு போன்ற சம்பவங்கள் உட்பட இந்தப் பிரச்சினையைத் தீர்க்க டிக் டாக் தவறியது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈஷாவின் மரணத்தின் போது இதே பிரச்சினையை நான் முன்பு எழுப்பினேன். ஒருவரின் உயிரைப் பறித்த இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவு புதுமையான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் கண்டித்தேன்.

இருப்பினும் டிக் டாக் போன்ற சமூக ஊடக தள வழங்குநர்கள் மொழியை தானாக அங்கீகரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது விந்தையானது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், மொழி சரிபார்ப்பு, ஆபாசமான மொழி, ஊடக தளத்தால் தானாகவே கண்டறியப்பட்டு, பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எதுவும் சாத்தியமற்றது அல்ல.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆபாசமான, வன்முறையான மொழியைக் கண்டறிவதற்கான வழிகளை தள வழங்குநர்கள் அடையாளம் காண வேண்டும். 

இந்த நடவடிக்கையின் மூலம், பாதி பிரச்சனை தீர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

சமூகத்தில் இப்போது பேசப்படும் இணைய பகடிவத  உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்திருக்க வேண்டும். 

வன்முறை, ஆபாசமான, முரட்டுத்தனமான  கருத்துக்களை இடுகையிடுவதன் விளைவாக எழும் பிரச்சினைகளை தடுக்க வேண்டும்.

இருந்தாலும் டிக் டாக் இன்னமும் விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளது. ஆக அதற்கான அழுத்தத்தை அரசு டிக் டாக்கிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பல நாடுகளில்  டிக் டாக்கைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கோலாலம்பூர்,செப்.5-
தி்ருஓணம் பண்டிகையை  மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசிய மலையாளிகள் அனைவருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்  தமது இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த ஓணம் பண்டிகை நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவுகளோடு இணைந்து  கொண்டாட வாழ்த்துவோம்.

ஓணம் பண்டிகையின் பின்னணியாக பல இதிகாசங்களும். புராணக் கதைகளும் இருந்தாலும்,  இத்திருநாளை கொண்டாடும் வகையில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்திய அத்தனை விஷயங்களும் நமது வாழ்வியலோடு இரண்டரக் கலந்தவை என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வீட்டைச் சுத்தம் செய்வது முதல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புத்தாடை அணிவது, பெரியோரை வணங்குவது, ஆலயத்திற்குச் செல்வது  என ஒவ்வொரு செயலுக்கும் ஆழந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த கொண்டாட்டத்தில் ஓணம் பெண் பண்டகை திருநாள் பெருமையையும் பிறர் உணரச் செய்வோம். 

மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. வருடத்திற்கு ஒரு முறைதான் என ஆடம்பரம் இல்லாமல், சிக்கனமாகச் செலவு செய்வோம். பல இன மக்கள் வாழும் மலேசியாவில், அனைவரும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தோடு திருஓணம் பண்டிகையை கொண்டாடுவோம்என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பண்டிகைகள், கொண்டாட்டங்களின் தத்துவமே பண்பாடுகளைப் பேணிக்காத்து ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருப்பதே. இறைவழிபாடு பெரியோரை வணங்குதல் என ஒவ்வொரு செயலுக்கும் ஆழந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில்  பெருமையையும் பிறர் உணரச் செய்வோம் என்று திருஓணம் பண்டிகை வாழ்த்து செய்தியில் டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து மலையாள சமூகத்தினருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள் என மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துக் கொண்டார்.

மலையாள மக்களின் அறுவடைத் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஓணம், மலேசியாவில் பெருமளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இயற்கை வளம், விவசாயம், உடல் உழைப்பு, வளமான வாழ்க்கைக்கு நன்றி செலுத்துதல், சமூக ஒற்றுமை என நல்ல எண்ணங்களையும், நலமிக்க செயல்களையும் சிறியோர் பெரியோரிடையே விதைக்கும் முக்கிய பங்காக ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் விளங்குகிறது.

வாசலில் கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து, விதவிதமாக உணவு சமைத்து நண்பர்கள், உறவினர்களை அழைத்து விருந்து வைத்து கொண்டாடப்படும் இந்த பண்டிகை மலேசியர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் திருநாளாகவும் விளங்குகிறது என அவர் சொன்னார்.

குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணம் இது. வெவ்வேறு கலாச்சாரமும், பழக்க வழக்கமும் நம் வாழ்க்கையை இன்னும் வண்ணமயமாக்குகிறது என்றால் அது மிகையாகாது.

தொடர்ச்சியான கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான தருணங்களும்  இருந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் வாழ்க்கை அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வளமான வாழ்க்கையாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள் என டத்தோஸ்ரீ சரவணன் அவரின் வாழ்த்து அறிக்கையில் கூறியிருந்தார்.

பத்துகேவ்ஸ், செப் 3-
துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (MPTB) சார்பில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அன்று பத்து கேவ்ஸ், செங்ஹா மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி, வெற்றிகரமாக நிறைவடைந்தது என தலைவர் முனைவர் விக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி, கடந்த 1992 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பயின்ற பயிற்சி ஆசிரியர்கள், தங்கள் கல்லூரிக் கால நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. பள்ளிப் பருவத்தைப் போல, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி நாட்களும் வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயம். கல்வி, விளையாட்டு, கலை எனப் பல அனுபவங்கள், நட்பின் ஆழத்தை உணர்த்திய நாட்கள். அந்த அரிய நினைவுகள் மீண்டும் உயிர் பெற்றது.

இந்தச் சந்திப்பில், ஆசிரியர்களுடன், அவர்களுக்குப் பாடம் கற்பித்த விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இது, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உறவைப் புதுப்பிக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. வாழ்வின் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றவர்கள், மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்று கூடி, தங்கள் நினைவுகளை மீட்டெடுத்த தருணம் பல கண்களைக் குளமாக்கியது என அவர் கூறினார்.

மேலும், தப்பா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்த நிகழ்விற்கு மேலும் பெருமை சேர்த்தார்.

இந்த மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்து அயராது உழைத்த ஆசிரியர் மற்றும் முனைவர் விக்டர் ஆசீர்வாதம் அவர்களின் ஏற்பாடுகள் மிகவும் பாராட்டிற்குரியது. அவரது செயற்குழுவினரின் அர்ப்பணிப்பு, நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவரது விடாமுயற்சி இல்லையெனில், இந்த அழகான ஒன்றுகூடல் சாத்தியமாகியிருக்காது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பலரின் வாழ்வில் ஒரு புதிய பாதையை வகுத்தது. அந்தப் பாதையில் பயணித்தவர்கள், மீண்டும் சந்தித்து தங்கள் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது, ஒரு காலப் பயணத்தைப் போன்றது. இந்த நிகழ்ச்சி, முன்னாள் மாணவர்களின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அத்தியாயமாக அமைந்தது. மீண்டும் ஒருமுறை அனைவரையும் ஒன்றிணைத்து, இனிமையான நினைவுகளை மீட்டெடுக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்
சமர்பணம் என தலைவர் முனைவர் விக்டர் கூறினார்.

கோலாலம்பூர், செப்.2-
பெஸ்தாரி ஜெயா, லாடாங் புக்கிட் பாடோங்கிலுள்ள ஆலயம் ஒன்றில் திருவிழாவில் வானை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட ஆசாமியை போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் தொடர்பில் நேற்று மாலை 3.50 மணிக்கு கிடைத்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசாமியை இரவு 8 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்ததாக கோல சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் அஸாஹருடின் தஜுடின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் மேல் விசாரணைக்காக இம்மாதம் 4ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கோல சிலாங்கூர், செப்.2-
சிலாங்கூர் மாநிலத்தில் பத்து மலை முருகன் ஆலயத்தை அடுத்து பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்கும் கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலயம் தொடர்பில் சில நாட்களாக பல சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வரப்பட்டு வந்தது.

ஆலய உறுப்பியத்தில் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆலய செயலாளரை கண்டு பேசி அல்லது கடிதம் அனுப்பி பிரச்சினைக்கு தீர்வுக் கண்டிருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது ஆலயத்திற்குதான் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த பிரச்சினை தீர்ந்தாலும் ஆலயத்திற்கு ஏற்பட்ட கலங்கத்தை மாற்ற முடியுமா என ஆலயத் தலைவர் கண்ணதாசன் பரசிவன் கேள்வி எழுப்பினார்.

ஆலயத்தின் உறுப்பிய சந்தா செலுத்துவதற்கு இறுதி நாள் ஜனவரி 31 ஆகும். ஆனால் இதுநாள் வரை இன்னும் சிலரை அந்த தொகையை செலுத்தாமல் உள்ளனர். ஆலய உறுப்பிய சந்தாவை செலுத்தாதவர்களை அரவனைத்து செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். ஆகையால் இந்த பிரச்சினையை களைய அவர்கள் செயலாளருடன் இணைந்து பேசி கட்டணத்தை செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஆலயம் என்றால் அதன் நிர்வாகத்தில் சில தவறுகள் இருக்கதான் செய்யும். ஆகையால் வருங்கால சவால்களை எதிர்கொள்ள ஆலயம் முறைப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

மேலும் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் கட்டப்படவுள்ள மின்சுடலை கட்டுமானத்திற்கு அரசு மானியம் வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஆலயத்தின் 60ஆவது பொதுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை ஆலய மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகையளித்திருந்த உறுப்பினர்கள் அவர்களின் கருத்துகளையும் குறைகளையும் முன் வைத்தனர். உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆலய தலைவர் முறையான பதிலை அளித்தார்.

கோலாலம்பூர், செப். 1-
நெகிரி செம்பிலான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி மாணவர் வசந்த் அபிநந்தன் (வயது 8) அனைத்துலக யோகா போட்டியில் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அண்மையில் கோலாலம்பூர் பண்டார் துன் ரசாக் அனைத்துலக இளைஞர் மையத்தில் நடைபெற்ற அனைத்துலக யோகா போட்டியில் மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் பொதுவான ஆசனம் பிரிவில் மூன்றாம் இடத்தையும், சாம்பியன்ஷிப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் வசந்த் அபிநந்தன் வென்றார்.

மேலும் நீண்டகால ஆசனம் பிரிவில் ஆசியா உலகச் சாதனை ஏற்படுத்தி சிறப்பிக்கத்தக்க பெருமையையும் அவர் பெற்றார்.

68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவினர்  நான்கு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினர் என ம.இ.கா பினாங்கு இளைஞர் பிரிவு தலைவர் ரூபராஜ் தாமோதிரன் தெரிவித்தார்.

மேஃபிஸ்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி, மலாக்கோஃப் தோட்ட தமிழ்ப்பள்ளிகளில்  ரூபராஜ் தாமோதிரன்  பள்ளி வாளகத்தை ஜோடித்து கொடுத்தது மட்டும் அல்லாமல்  அங்குள்ள மாணவர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி அவர்களுடன்  சேர்ந்து  கொண்டாடினார்.

பினாங்கு மாநில இளைஞர் பிரிவு துணைத் தலைவர்  ருக்குமாறன்  பாயான் லேபாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கொடிகளை வழங்கி அவர்களுடன் கொண்டாடினார்.

அதே நேரத்தில்  பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு செயலாளர்
மகாதேவன்  பழனியாண்டி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கி அவர்களுடன் கொண்டாடினார்.

தேசப்பற்றை வளர்ப்பது நமது கடமை. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிரை விட்ட நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அடுத்த தலைமுறைக்கு அதனை நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என ரூபராஜ் தெரிவித்தார்.

கோலாலம்பூர் ஆக 29-
ம இகா தேசிய இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி Sri Gombak KSL Sports Futsal அரங்கில் பெனால்டி கிக் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் குழுக்களுக்கு வெறும் 250 வெள்ளி மட்டுமே கட்டணமாக செலுத்த விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு குழுவில் ஐந்து ஆட்டக்காரர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு பிரிவில் நான்கு குழுக்கள் விளையாடும்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் குழுவுக்கு 10,000 வெள்ளி ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 3,000 வெள்ளி, 3,4 ஆவது இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படும்.

ஐந்து முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் குழுக்களுக்கு தலா 250 வெள்ளி வழங்கப்படும்.

ஆக மொத்தம் 16,000 வெள்ளி ரொக்கப் பரிசாக வெற்றியாளர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் குழுக்கள் 016-6448635 அல்லது 010-2668981 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர்,  ஆக.28-
மலேசியாவில் தமிழ் கல்வியின் முன்னேற்றம்,  மற்றும் இடைநிலைப்பள்ளியில் அதிகமான மாணவர்கள் தமிழ் மொழியை  பாடத்திட்டமாக எடுக்க ஒரு கொள்கை ரிதீயான மாற்றம் அவசியம் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் காந்தா  தெரிவித்தார்.

கடந்த ஆண்டு  எஸ்.பி.எம் தேர்வில் சுமார் 29.6% விழுக்காடு  மாணவர்கள் ஏ பெற்ற நிலையில், 63 விழுக்காடு மாணவர்கள் ஏ பெறவில்லை. அதோடு 6 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது நிதிர்சன உண்மை.

தமிழ் மொழியில் ஏ பெரும் மாணவர்களின் தேர்ச்சியை 80 விழுக்காட உயர்த்தும் நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம், தமிழ் சார்ந்த கல்வி மான்களுடன் இப்போது ஒரு குழுவை உருவாக்கி 3 திட்டத்தை வகுத்து உள்ளது.

முதல் திட்டமாக இந்த ஆண்டு எஸ்.பி.எம் - எஸ்.டி.பி.எம் தேர்வில் தமிழ் மொழியை தேர்ச்சி பாடமாக எடுத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு கருத்தரங்கை அக்டோபர் 5 திகதி மலாயா பல்கலைக்கழக மண்டபத்தில் ஏற்பாடு செய்ய உள்ளது.

இதில் மாணவர்களுக்கு பாடம் தொடர்பான சில நுணுக்கம்,  சில வழிகாட்டு முறையை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி  தமிழ்ப்பள்ளி படித்து இடைநிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமார் 60 விழுக்காடு மாணவர்கள் தான் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்ப் பாடத்தை தேர்வு பாடமாக எடுக்கின்றனர். 40 விழுக்காடு மாணவர்கள் அதனை தவிர்த்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளது. அது ஆராய பட்டு அதற்கும் கொள்கை ரீதியான  தீர்வை எடுக்க இந்த குழு முயற்சி எடுக்கவுள்ளது.

மாணவர்களின் கட்டுரை எழுதும் தரத்தை மேம்படுத்த 2ஆவது திட்டமாக தேசிய ரீதியில் கட்டுரை எழுதும் போட்டி  மலேசிய  தமிழ் எழுத்தாளர்  சங்கத்தின் ஆதரவோடு வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடத்தப்படும் என்றார் சுரேன்.

இந்த போட்டி மூன்று பிரிவாக வகுக்கப்பட்ட நிலையில் 4,5,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி ஒரு பிரிவும், படிவம் 1,2,3 மாணவர்களுக்கான போட்டி ஒரு பிரிவும், படிவம் 4,5,6 மாணவர்களுக்கான போட்டி  என மூன்று பிரிவாக நடத்தப்படும் என்றார்.

மிக முக்கியமான மூன்றாவது திட்டம் இது வரை நாட்டிலும் உலக ரீதியிலும் யாரும் செய்யாத ஒரு மாநாடாக அமைய போகிறது.
உலக ரீதியில் உள்ள தமிழ் கல்விமான்களை கொண்டு  மிகபெரிய தமிழ் கல்வி மாநாடு நடத்தப்படவுள்ளது.

தமிழ் கல்வி, அதன் முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் தொடர்பான மாநாடாக இது அமையும். மலேசிய கல்வி முறையில் தமிழ் மொழி முன்னேற்றம் அடைந்து,  மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கொள்கை ரீதியான மாற்றம் அவசியம். கல்வி அமைச்சு சார்ந்த அதிகாரிகள் உட்பட கல்வி அமைச்சரையும் இந்த மாநாட்டிற்கு அழைத்து, விளக்கம் கொடுத்து, கொள்கை ரீதியான  மாற்றங்கள் தொடர்பான திட்டங்களும் அதன் மூலமாக நிகழப்போகும் மாற்றங்கள் தொடர்பாக விளக்கமும் கொடுக்க உள்ளோம். இப்போது உள்ள சூழலில் தமிழ் மொழி பாடத்திற்கு கொள்கை ரீதியான மாற்றம் அவசியம்.  அந்த மாற்றத்தின் அரங்கமாக அந்த மாநாடு அமையும். அதற்காக  தமிழ் சார்ந்த அனைத்து  இயக்கமும் கைகோர்த்து ஒற்றுமையாக இந்த முயற்சியை முன் எடுத்துள்ளோம் என  சுரேன் காந்தா தெரிவித்தார்.


கோலாலம்பூர், ஆக.28-
பிபிஆர் கம்போங் முஹிபா குடியிருப்பிலுள்ள சில வீடுகளில் டிபிகேஎல் நீர் விநியோகத்தை துண்டித்ததால் மக்கள் இன்னலுக்குள்ளாகியுள்ளதாக பிபிபி கட்சியின் செயலாளர் சத்தியா தெரிவித்தார்.

நீர் சேவைக்கான கட்டனத்தை அங்குள்ள சில மக்கள் முறையாக செலுத்தாததால் இந்த முடிவை டிபிகேஎல் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது டிபிகேஎல் கருணை காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நீர் துண்டிக்கப்பட்டதால் அந்த குடியிருப்பிலுள்ள அதிகமான தனித்து வாழும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதுமான மாத வருமானம் இல்லை. அதனால் அவர்களால் முறையாக கட்டணத்தை செலுத்த முடியவில்லை என தன்னிடம் முறையிட்டதாக அவர்   சென்னார்.

நீர் சேவை இல்லாததால் அந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளால் பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் நீர் இல்லாமல் குழந்தைகளுக்கு உணவுகளை தயாரிக்க முடியவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட மக்கள் இன்று டிபிகேஎல் தலைமையகத்தில் கூடினர். அவர்களுக்கு உதவும் பொருட்டு பிபிபி கட்சியினர் அங்கு கூடியிருந்தனர்.

அவர்களின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து சத்தியா, டத்தோ பண்டாரிடமும் கூட்டரசுப் பிரதேச அமைச்சரிடமும் மகஜரை வழங்கினார். இரு தரப்பின் பிரதிநிதிகள் அந்த மகஜரை பெற்றுக் கொண்டனர்.

முறையான வருமானமின்றி தவிக்கும் இந்த தனித்து வாழும் தாய்மார்களுக்கு சமூக நல உதவிகள் பிரிவின் கீழ் மித்ரா உதவ முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்த மக்கள் நீர் சேவை கட்டணத்தை கட்டவே முடியாது என கூறவில்லை. தவணைக் காலம் கொடுங்கள் கொசஞ்சம் கொஞ்சமாக கட்டுவதாகதான் கூறுகிறார்கள். ஆகையால் அவர்கள் உதவ டிபிகேஎல் முன்வர வேண்டும் என்று சத்தியா வலியுறுத்தினார்.

புத்ராஜெயா, ஆக.28-
தொடர் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வட இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்களை விரைவில் விமானங்கள் மூலம் வெளியேற்ற மலேசியா ஏற்பாடு செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு, புது டில்லியில் உள்ள மலேசிய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜம்மு மற்றும் லே, லடாக்கில் சிக்கித் தவிக்கும் மலேசிய குடிமக்கள் குறித்த தகவல்கள் தூதரகத்திற்கு கிடைத்துள்ளன. அவர்களை வெற்றிகரமாகத் தொடர்பு கொண்டு, விரைவில் கிடைக்கக்கூடிய விமானங்களில் அவர்கள் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், ஆக.28-
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTM) கேடட் சம்சூல் ஹாரிஸ் ஷம்சுதீனின் உடல் வரும் வெள்ளிக்கிழமை காலை தோண்டி எடுக்கப்படும் என்று குடும்ப வழக்கறிஞர் நரான் சிங் தெரிவித்தார்.

செமெனியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய கல்லறையில் அந்த இளைஞனின் தாயார் உம்மு ஹம்மான், தடயவியல் நிபுணர் டாக்டர் பூபிந்தர் சிங், அதிகாரிகள் மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையினர் முன்னிலையில் இது நடைபெறும் என்று அவர் கூறினார்.

பின்னர் உடல் உடனடியாக இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை (HKL) தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்படும்.

சம்சூல் ஹாரிஸின் மரணத்தை விசாரிக்க ஒரு சிறப்பு குழுவை அமைப்பதில் விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையை, குறிப்பாக அதன் இயக்குநர் எம். குமாரை நரான் சிங் பாராட்டினார்.

உமு ஹம்மான் பீயின் விண்ணப்பத்தை நீதித்துறை ஆணையர் பூபிந்தர் சிங் குர்சஹான் சிங் நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அவரின் சடலம் நாளை 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

தோண்டி எடுக்கும் பணியை மேற்பார்வையிடவும், தோண்டி எடுக்கும் நாளில் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தவும் காவல் துறைத் தலைவர் அல்லது அவரது அதிகாரிக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

தோண்டி எடுக்கும் பணியை மேற்பார்வையிடவும், தடயவியல் நோயியல் நிபுணரின் அறிக்கையை நியாயமான காலத்திற்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 29ஆம் தேதி சம்சூல் ஹாரிஸ் மரணமுற்றதை தொடர்ந்து அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இரண்டாவது பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரின் தாயார் இம்மாதம் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

 

கோலாலம்பூர், ஆக.27-
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று புடு, கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது தொடர்ந்து பக்தர்கள் அதிகமாக வர தொடங்கினர்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று பிள்ளையாரை வணக்கிச் சென்றனர். 

இதற்கிடையில் ஆலயத்திற்கு வந்த பக்தர்களின் பசியை ஆற்றும் வகையில் தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அன்னதானத்தை வழங்கினார். 

ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்தி அன்று கோர்ட்மலை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானத்தை வழங்குவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இம்முறை 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் தயார் செய்யப்பட்டு பரிமாரப்பட்டது.

இன்று காலை நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் புக்கிட் அமான் குற்றவியல் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ குமார், இந்திய உலோகம் மறுசுழற்ச்சி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை ஆலயத்தின் ரதம் ஊர்வலம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

ஷா ஆலம், ஆக.25-
ஷா ஆலம் செக்‌ஷன் 24இல் உள்ள கார் பட்டறையில் நேற்று ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி சேதமடைந்தன.

இந்த தீச்சம்பவத்தில் அந்த பட்டறையில் வேலை செய்து வந்த 30 வயதுடைய உள்ளூர்வாசி தீக்காயங்களுக்குள்ளானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் அமலாக்கப் பிரிவின் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து இரவு 11.31 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தவுடன் ஷா ஆலம் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். தீச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பட்டறை 90 விழுக்காடு சேதமடைந்தது. மேலும் அந்த பட்டறையிலிருந்து 37 கார்களும் 7 மோட்டார் சைக்கிள்களும் தீயில் சேதமடைந்ததாக அவர் சொன்னார்.

நள்ளிரவு 12.26 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் அதிகாலை 2.31 தீயணைப்பு பணிகள் முடிவடைந்ததாக அவர் சொன்னார்.

 

கோலாலம்பூர், ஆக.25-

பாலஸ்தீன மக்களுக்கு, குறிப்பாக காசாவில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு கூடுதலாக வெ.100 மில்லியன் மானியத்தை அறிவித்தார்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் அறிவித்த வெ.100 மில்லியன் நிதிக்கு கூடுதலாக இந்த ஒதுக்கீடு இருப்பதாக அன்வார் கூறினார்.

 

தான் எங்கு சென்றாலும்  பாலஸ்தீன சகோதரர்களை  ஒருபோதும் விட்டுச் செல்ல மாட்டேன். அவர்களுக்கு உதவுவேன் என அவர் மேடையில் கூறினார்.

 

மடானி அரசாங்கத்தின் சார்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெ.100 மில்லியன் நிதியை அரசு அங்கீகரித்தது.

 

நிதியின் தொடக்கமாக மலேசிய அரசாங்கம் வெ.100 மில்லியனை வழங்கும் என்று நேற்றிரவு அவர்  டத்தாரான் மெர்டேகாவில் நடந்த மலேசியாகு பெர்சாமா காசா ஒன்றுகூடல் மற்றும் பிரார்த்தனையில் கூறினார்.

 

மேலும் நாட்டிலுள்ள கோப்ராட் நிறுவனங்களும் காசா மக்களுக்கு உதவ முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர், ஆக.23-
செந்தூலிலுள்ள தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியின் 81ஆம் ஆண்டு பள்ளிப் போட்டி விளையாட்டு இன்று நடைப்பெற்றது.

இந்த போட்டியில் சிவப்பு, நீலம், பச்சை என மூன்று அணிகளில் மாணவர்கள் இடம் பெற்று போட்டி விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.

இம்முறை விளையாட்டு போட்டியின் இல்லங்கள் பழங்களை அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டதுடன் மாணவர்களும் கண்கவரும் வண்ணங்களில் உடை அணிந்து அணிவகுத்து சென்றனர்.

ஆரோக்கியமாக வாழ பழங்களை உண்பது அவசியம் எனும் கருப்பொருளில் சிவப்பு இல்லம் ஸ்ட்ராபெர்ரி பழத்தையும் நீல இல்லம் புலுபெர்ரி பழத்தையும் பச்சை இல்லம் அவகாடோ பழத்தையும் முன்னிரித்தி அலங்காரங்களை செய்திருந்தனர்.

மேலும் பள்ளியின் பாலர்ப்பள்ளி மாணவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

பள்ளிகளில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட அதில் பெற்றோர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அது வெற்றிப்பெறும். மேலும் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் அவர்கள் ஆரோக்கியமாக வாழ இதுபோன்ற போட்டி விளையாட்டுகள் நடத்தப்படுவதாக பள்ளியின் தலைமையாசிரியர் திரேசா அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

பெட்டலிங் ஜெயா, ஆக.21-
உலகமே டிஜிட்டல் உலக நோக்கி பயணிக்கும்போதும் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அதிலிருந்து பின் தங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிஜேஎஸ்1 தமிழ்ப்பள்ளிக்கு டத்தோ டி.மோகன் ஸ்மார்ட் டிஜிட்டல் பலகையை அன்பளிப்பாக வழங்கினார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில் கட்டப்பட்ட  6 புதிய தமிழ்ப்பள்ளிகளில் இந்த பள்ளியும் ஒன்றாகும். அந்த வகையில் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக டத்தோ டி.மோகன் கூறினார்.

இந்த பள்ளிக்கு மேலும் 6 வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் டிஜிட்டல் பலகைகள் தேவைப்படுகிறது. ஆகையால் நல்லுள்ளங்கள் இந்த தமிழ்ப்பள்ளிக்கு உதவ முன்வர வேண்டுமென அவர் கூறினார்.

டிஜிட்டல் உலகில் நாம் பயணிக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இதுபோன்ற உதவிகளை மித்ரா (இந்தியர் உறுமாற்றம் திட்டம்) வழி செய்யலாமே என்ற கேள்விக்கு, இதனை முழுமையாக வரவேற்பதாக அவர் கூறியதுடன் பயன்படுத்தி முடிக்க முடியாத மித்ரா மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என அவர் வலியுறுத்தினார்.

வரும் காலங்களில் டிஜிட்டல் முறையில்தான் கற்றல் கற்பித்தல் முறை நடத்தப்படும். புத்தகங்களின் பயன்பாடு குறைந்து விடும். ஆகையால் நம் மாணவர்கள் இந்த வளர்ச்சியில் ஒருபோதும் பின் தங்கிவிடக் கூடாது.

மேலும் இந்த பள்ளியில் அனைத்து அடிப்படை தேவைகள் செய்து தரப்பட்டுள்ளது. இருந்தபோதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. ஆகையால் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் நம் பிள்ளைகளை இந்த தமிழ்ப்பள்ளியில் சேர்க்கும்படியும் தமிழ்ப்பள்ளிகளுக்கு பெற்றோர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் டத்தோ டி.மோகன் கேட்டுக் கொண்டார்.

சிரம்பான் ஆகஸ்ட் - 17
இன்று நடைபெற்ற நெகரி செம்பிலான்  மாநில ம.இ.கா மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்
எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது  என தெரிவித்தார்.

ஆறுவது ஆண்டு காலம் ம.இ.கா என்ன செய்தது என நண்டு சிண்டு எல்லாம் பேசுகிறார்கள்.  "கிளை தொகுதி மாநில தலைவர்களே" ! குறை சொன்னவர்கள் இன்று தான்  மத்திய அரசாங்கத்தில் உள்ளனர் ,அதோடு 2008-க்கு  பிறகு தான் சிலாங்கூர் மற்றும் பினாங்கில் மாநிலத்தில்  ஆட்சியில் இருந்தனர்.

இனி தொகுதி மாநில ரீதியில் பட்டியலை எடுங்கள்  எடுத்து போடுங்கள்
ம .இ.கா என்ன என்ன செய்தது என்பதை பார்கட்டும்  சமுதாயம்.

எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது ! ஆகையால் இனியும் மவுனம் வேண்டாம்  பட்டியலை போடுங்கள் என்றார்.

தோட்ட புரத்தில் இருந்து வெளியே வந்த  இந்தியர்களுக்கு கைகொடுக்க TAFE கல்லூரி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு ,  மருத்துவத்திற்காக AIMST பல்கலைக்கழகம் அதன் மூலம் வேலை வாய்ப்பு, வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி , அதன் வாயிலாக உருவான பட்டதாரிகள் பல்லாயிரம்.

அதுமட்டுமா! ஆலயம், தமிழ் பள்ளி சீரமைப்பு ,மாணவர்களுக்கு கல்வி உதவி, இந்தியர்களுக்கு சமூகநல உதவி , என வட்டார ரீதியில்  ம.இ.கா செய்ததை பட்டியல் எடுங்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.

இதுவரை 240 மில்லியன் கல்வி கடன் உதவி செய்த நாங்களா திருடர்கள் ?  ஒன்றுமே செய்யாமல் குறையை மட்டும்  சொல்லி ஆட்சிக்கு வந்த இவர்களை பட்டியல் போட சொல்லுங்கள் என்றார் சரவணன்.

இது ம.இ.காவின் 40 ஆண்டு கால கல்வி புரட்சி  !

இனியும் மவுனம் வேண்டாம்,
எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது !

அவர்களின்  வாயை அடைக்கும் வகையில் பட்டியலை திரட்டுங்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.

செய்தி ; வெற்றி விக்டர்/ காளிதாசன் இளங்கோவன்

சிரம்பான் ஆகஸ்ட்-17
ம.இ.காவின் நெகரி செம்பிலான் மாநிலத்தின் 79 பேராளர் மாநாட்டை ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் இன்று தொடக்கி வைத்தார்.

சிறப்புரை ஆற்றிய அவர் பேசுகையில்
இந்த ஒற்றுமை அரசாங்கத்தை  அமைக்கும் போது ம.இ.காவின் தலைவர் டான் ஸ்ரீ.விக்னேஸ்வரன் ம.இ.காவுக்கு எத்தனை பதவி வேண்டும் என்று  அழுத்தம் கொடுக்கவில்லை கோரவில்லை.

ஆனால் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கட்சி என்ற முறையில் ம.இ.காவிற்கு அவர்கள் அமைச்சரவை பதவி கொடுத்திருக்க வேண்டும். அந்த கடமை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்றார்.

அந்த வகையில் ம.இ.கா  பொருமை காத்து இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்தது. அதன் பின் மாநில தேர்தல் நடந்த போது  கண் துடைப்புக்கு ம.இ.கா எத்தனை இடத்தில் போட்டியிட விரும்புவதாக கடமைக்கு ஒரு பெயர் பட்டியலை கேட்டு ,ரமணா படத்தில் வருவது போல் பரபரப்பை காட்டி இறுதியாக  அவர்களே ஒரு முடிவை எடுத்துக்கொண்டனர். பிறகு இந்த முடிவுக்கு வருந்துகிறோம் என சொல்லி ம.இ.கா வெற்றிப்பெற்ற ஒரு சட்ட மன்றத்தில் மட்டுமே  போட்டியிட சொன்னார்கள் அதுவும் இறுதி நேரத்தில்.

அப்போது ம.இ.கா அந்த தேர்தலை புறக்கணித்தது , உடனே ம.இ.கா அலுவலகத்தை தேடி வந்தார் பிரதமர் , இந்த தேர்தலில் உங்கள் ஒத்துழைப்பு தேவை எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று  பிரதமர்  ம.இ.கா உறுப்பினர்கள் மத்தியில்  சொன்னார்.

தேர்தல் முடிந்த பின் அவரும் அமைதியானார், ஒரு அமைச்சரவை மாற்றம்  அதிலிலும் ம.இ.கா அங்கம் வகிக்க வில்லை.

அதன் பின் ம.இ.காவின் கட்டிட அடிகள் நாட்டு விழாவிற்கு தேசிய முன்னணியின் தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஷாஹிட் ஹமிடி வருகை தந்தார். அப்போதும் இந்தியர்கள் விவகாரங்களை பேச அமைச்சரவையில்  இந்திய பிரதிநிதி இருக்க வேண்டும்  என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.

அவரும் சொன்னார் கவலை வேண்டாம் எனக்கு தெரியும் என்ன செய்யனும் என்று. அப்போது இவர்கள் இருவரும்   " செய்யனும்" என்று சொன்ன வார்த்தைக்கு இப்போது தான் அர்த்தமே புரிந்தது.
நல்லா செய்தார்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.

ம.இ.கா அதன் அரசியல் எதிர்காலத்தை   அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவேண்டிய கட்டாயத்தை  இவர்கள் உருவாக்கி விட்டனர்.

விரைவில் ம.இ.கா அதன் அடுத்த அரசியல் பயணத்திற்கான முடிவை எடுக்கும் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

செய்தி :வெற்றி விக்டர் / காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17-
நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பகிடிவதை சம்பவங்களால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

இதைத் தடுக்கும் வகையில் அரசு உடனடியாக துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதி போராட்டம்  நடத்தப்படும் என மலேசிய பெர்சத்து ஒருங்கிணைப்பு நிர்வாகக் குழுவின் செலாயாங் தொகுதி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ரீஜன் குமார் ரத்ணம் தெரிவித்தார்.

அண்மையில் மட்டும், இந்த பகிடிவதையால் இரண்டு உயிரிழப்புகள் உட்பட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ரவாங் பகுதியில் தனது தலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி அமைதி போராட்டம் நடத்தியதாக ரீஜன் தெரிவித்தார்.

மேலும், பகிடிவதையில் உயிரிழந்த தவனேஷ்வரிக்கு ஆதரவாக சமூக சேவகர் ஜனா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது போராட்டம் நியாயமானதாகும்; அவருடன் இணைந்து நாங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை குரல் கொடுப்போம் என ரீஜன் உறுதியளித்தார்.

இந்த வகையான சம்பவங்கள் இன, மத பேதமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதால் அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூகத்தில் ஏற்படும் பகிடிவதை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்க சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பகிடிவதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல பகிடிவதைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இணையப் பகிடிவதையால் கூட உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என்பது கவலைக்குரியது. நாளுக்கு நாள் இந்த பிரச்சினை சமூகத்தை தீவிரமாகப் பாதித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

-காளிதாசன் இளங்கோவன்


கோலாலம்பூர், ஆக.15-

POP எண்டர்டெயின்மென்ட் ஏற்பாட்டில் பிரபல திரைப்பட பாடகி சின்மயி ஸ்ரீபாதா தலைமையில் முத்த மழை  எனும்  இசை நிகழ்ச்சி இம்மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள Zepp அரங்கத்தில்  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இணைந்து பாடவுள்ளனர். மாலை 7 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி தொடங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ள பொதுமக்கள்  Great Ticket அகபக்கத்தின் மூலம் டிக்கேட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். 

மேலும் கூடுதல் தகவல் பெறுவதற்கு வாட்ஸ் ஆப் ஹாட்லைன் 017-308 9994  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர், ஆக. 11-

பகிடிவதையால் நாட்டில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய பெர்சத்து ஒருங்கிணைப்பு நிர்வாக குழுவின்
செலாயாங் தொகுதி ஒருங்கிணைப்பு  குழுத் தலைவர் ரீஜன் குமார் ரத்ணம் வலியுறுத்தினார்.

அண்மையில் இணையத் துன்புறுத்தலின் விளைவாக இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தவனேஷ்வரி மற்றும் ஜாரா கைரினா மகாதீர்  ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் இன, மத பேதமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதால் அரசாங்கம் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

அத்துடன், சமூகத்தில் ஏற்படும் பகிடிவதை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்க சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தற்பொழுது பகிடிவதை அதிகமாக ஏற்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சமூக ஊடகங்களின் வழியாகவும் நிறைய பகடிவதைகள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முன்னதாக இணைய பகடிவதையாளும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே நாளுக்கு நாள் இதன் தாக்கம் நமது சமுதாயத்தை பெரிதளவில் பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஆக.11-

தமிழகத்திலிருந்து புத்தகங்களை தருவித்து இங்கு விற்பனை செய்து வரும் முதன்மை நிறுவனமான ஜெயபக்தி நிறுவனம், தற்போது மும்மொழியில் திருக்குறள் நூலை வெளியீடு செய்யவுள்ளது.

இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயபக்தி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இந்த முயற்சியை முன்னெடுத்து தற்போது மும்மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளது.

இந்த புத்தகம் முழு வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டில் முதல் மும்மொழி திருக்குறள் நூல் இதுவாகும் என்றும் இந்த நூல் அறிமுக விழா கூடிய விரைவில் நடத்தப்படும் என்றும் ஜெயபக்தி நிறுவனத்தின் தோற்றுநர் கு.செல்வராஜூ தெரிவித்தார்.

இந்த புத்தகத்தில் திருக்குறள் தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மூன்று மொழிகளில் தனித் தனி நூல்கள் வெளியிடப்படவுள்ளது.

ஆகையால் வாழ்வியலை நமக்கு சொல்லித் தரும் இந்த அருமையான புத்தகம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

இதற்கிடையில், நாட்டில் பல சிறு வணிகர்கள் புத்தக விற்பனையை செய்து வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து புத்தகங்களை தருவிப்பதில் அவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு உதவியாகவும் உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் முதல் ஜெயபக்தியில் மொத்த விற்பனையில் புத்தகங்கள் விற்கப்படவுள்ளதாகவும் டத்தோ கு.செல்வராஜூ தெரிவித்தார்.

மேலும் ஆடி மாத இறுதி வெள்ளியான இம்மாதம் 15ஆம் தேதி ஜாலான் ஈப்போ, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் 108 சங்காபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைப்பெறவுள்ளதால் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.


ஷா ஆலம், ஆக.10-
இளம் சாதனையாளர்களை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோல்டன் எம்பாயர் மீடியா ஏற்பாட்டில் 60 இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இளம் சாதனையாளர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் இந்த விருது விழாவை ஏற்பாடு செய்ததாக கோல்டன் எம்பாயர் மீடியா நிறுவனத்தின் தோற்றுநர் மகேந்திரன் தெரிவித்தார்.

இந்த விருது விழாவில் கல்வி, விளையாட்டு, கலைத் துறைகளில் சாதனைப்படைத்த இளம் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது விழாவிற்கு பல நல்லுள்ளங்கள் பலர் தனக்கு உதவி கரம் நீட்டியதாகவும் விருது பெற்ற பிள்ளைகளின் பெற்றோரும் முழு ஆதரவு வழங்கியதாக மகேந்திரன் தெரிவித்தார்.

இளம் வயதில் சாதனை படைத்துள்ள இந்த சிறுவர்களை தொடர்ந்து நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்த அங்கீகாரம் அவர்களை எதிர்காலத்திலும் பல சாதனைகளை புரிய வழிவகுக்கும் என அவர் சொன்னார்.  

இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் இதற்கு முன்பு பெண்களை கௌரவிக்கும் வகையில் சாதனை பெண்கள் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டத்தோ சூரியா பிரகாஷ் கோல்டன் எம்பாயர் மீடியா செண். பெர்ஹாட் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.


ஷா ஆலம், ஆக.10-
இந்திய திருமண ஏற்பாடுகளை செய்யும் தொழில் துறையில் உள்ள அணைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியில் WPAM அமைப்பு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று  அதன் தலைவர் வேதகுமார் ராஜகோபால் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று இரண்டாம் ஆண்டாக ஷா ஆலம் டிஎஸ்ஆர் மாநாட்டு மண்டபத்தில் மாபெரும் ஒன்றுக்கூடல் விருந்து உபசரிப்பு  சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்த தொழில் துறையை சார்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

இந்திய திருமண தொழில் துறையை சார்ந்தவர்களின் நலனை காக்க இந்த அமைப்பு முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

புகைப்படக் கலைஞர்கள், திட்டமிடுபவர்கள், அலங்கார நிபுணர்கள், உணவு பரிமாறுபவர்கள், வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், ஒப்பனையாளர்கள் உள்ளிட்ட திருமணத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இந்த அமைப்பு ஒன்றிணைக்கிறது.

இந்த துறையை சார்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை கலந்து பேசிய அதனை களைவதே இந்த அமைப்பின் முதல் நோக்கமாகும்.

மேலும் எங்களின் தேவைகளை அரசாங்கத்திடம் கேட்டு பெருவதற்கும் இந்த அமைப்பு உறுதுணையாக இருக்கும்.


அனைவரின் நலனை காக்க இந்த அமைப்பு பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

மேம்பாட்டு தொழில் முனைவோர் அமைச்சு மூலம் பல நல்ல திட்டங்களை முன்னெடுக்க இந்த அமைப்பு பாடுபடும்.

மேலும் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு  துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மற்றும் அவரின் தனி சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன் ஆகியோரின் உதவியுடன் உறுப்பினர்களுக்கு தெங்குன் கடனுதவி பெற்று தர ஏற்பாடுகளை செய்வோம் என்றார் அவர்.

திருமண ஏற்பாட்டுக்கான விலை கட்டுப்பாடு மற்றும் சுற்றுலா வீசாவில் வந்த இங்கு திருமண தொழில்துறையில் சம்பாதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல தரப்பட்ட விஷசங்களை முன்னெடுக்கவுள்ளாதாக அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஆக. 9-
மித்ரா சினார் சஹாயா உதவி திட்டத்தின் கீழ் கஷ்டப்படும் 793 இந்திய குடும்பங்களுக்கு மித்ராவின் கீழ் வெ.1,139,730 உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக மித்ரா சிறப்புக் குழுத் தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

கஷ்டப்படும் மற்றும் பேறு குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் இந்த சினார் சஹாயா உதவி நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று ஸ்தாப்பாக், ஆயர் பானாஸ், ஸ்ரீ இந்தான் பைடூரி, ஸ்ரீ கூச்சிங், பத்து ஆகிய பகுதிகளிலுள்ள 8 குடும்பங்களை பிரபாகரன் நேரடியாக சந்தித்து உதவித் தொகையை வழங்கினார்.

ஏழ்மை நிலையுள்ள மக்கள் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு மாதம் 500 வெள்ளி வீதம் மூன்று மாதங்களுக்கு 1,500 வெள்ளி வழங்கப்படும்.

மித்ரா விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதற்கான விளக்கத்தை நான் நாடாளுமன்ற தொடரில் தெரிவித்து விட்டேன். ஆகையால் இந்த சர்ச்சைகளை பெரிது படுத்த வில்லை.

மேலும் மித்ராவின் கீழ் உதவிகள் முறையாக தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றால் அதன் திட்டங்களை வகுத்த தலைமைத்துவம் தொடர்ச்சியாக இருப்பது அவசியம். அவ்வப்போது மாற்றங்கள் வந்தால் வகுக்கப்பட்ட திட்டங்கள் வெற்றியடையாது. ஒரு கப்பலின் கேப்டன் தேவையில்லாமல் மாற்றப்பட்டு கொண்டுருந்தால் அந்த கப்பல் அதன் எல்லையை அடைய முடியாது என அவர் சொன்னார்.

சுங்கை பட்டாணி, ஆக 7-
எதிர்கால விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதற்கும் உயிரி தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஏம்ஸ்ட் பல்கலைக்கழக அறிவியல் புலமும் எம்.ஆர்.எஸ் கல்வி நிலையமும் இணைந்து வழங்கிய ஸ்தெம் பட்டறை (ஏம்ஸ்ட் பயோஸ்பார்க்) கடந்த ஜூலை 19 ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பட்டறையில் சுமார் 50க்கும் மேற்பட்ட படிவம் 4, படிவம் 5  மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
வலுவான கல்வி போதனைகளும் அதிநவீன வசதிகளுடன், மாணவர்கள் நேரடி அனுபவத்தையும் உயிரி தொழில்நுட்பம், தொடர்புடைய அறிவியல் துறைகளில் நுண்ணறிவையும் பெற ஒரு சிறந்த சூழலை வழங்கியது.
ஸ்தெம் பட்டறை, நடைமுறை நடவடிக்கைகள், தொடர்புடைய ஆய்வகங்கள்,
ஆராய்ச்சியாளர்களின் செயல்விளக்கங்கள், மாணவர்கள் கேள்விகளைக் கேட்கவும் உயிரி தொழில்நுட்பத்தில் தொழில் பாதைகளை ஆராயும் வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்பட்டன. 
ஏம்ஸ்ட் பல்கலைக்கழக அறிவியல் புல பேராசிரியர் டாக்டர் லீ சு யின் கூறுகையில், இந்தப் பட்டறை மாணவர்களுக்கு ஸ்தெம் கல்வி எதிர்காலத்திற்கு என்பதை எடுத்து கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலத்திற்கும் வளர்ந்து வரும் உயிரி தொழில்நுட்பம் மூலம் உள்ள வேலை வாய்ப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உயிரி தொழில்நுட்ப புலத்தில் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க இங்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இந்தப் பட்டறையில் கலந்து கொண்டு ஆய்வுகளை மட்டும் பார்த்து தெரிந்து கொண்டு போகாமல், இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஸ்தெம் பட்டறையில் கலந்து கொண்ட எம்.ஆர்.எஸ் கல்வி நிலைய மாணவர்கள் கூறுகையில், இது மிகவும் பயனுள்ளதாகவும் நிறைய கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். அதோடு, இதன் மூலம் ஸ்தெம் எதிர்காலத்தில் பல வேலை வாய்ப்புகளை வழங்கும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

கோலாலம்பூர் -ஆகஸ்ட் 6

சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டி தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா யோவின் அறிவிப்பில் 2026-ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடைபெறவுள்ள  சுக்மா போட்டியில் கூடுதலாக  நான்கு விளையாட்டுகள் போட்டிகள் அதாவது சதுரங்கம், E- விளையாட்டு, கிரிக்கெட் மற்றும் கபடி இணைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 34 விளையாட்டுகள் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அந்த முடிவை தாம் வரவேற்பதாக டி.எஸ்.கே இயக்கத்தின் தலைவர்  டத்தோ சிவகுமார் தெரிவித்தார்.

இருப்பினும்  இந்தியர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பம் இதில் இடம்பெறவில்லை என்பது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி  சுக்மா  உச்சமன்ற குழு  2026  சுக்மா போட்டியில் சிலம்பத்தைப் பதக்க விளையாட்டாக சேர்க்க தீர்மானிக்கப்பட்டதையும், 2024 ஆகஸ்ட் 20-ஆம் திகதி  சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டியில்   அமைச்சர் உறுதியளித்ததையும் நாம் மறக்க முடியாது.

அப்போதெல்லாம் உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அந்த தீர்மானம் என்னாயிற்று?  டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

மடானி அரசாங்கம் பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கும் எனவும், இந்திய இளைஞர்களுக்கு சுக்மா வாயிலாக கபடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று அது பேச்சுகளாகவே முடிந்து விடுவதோடு,  இந்திய இளைஞர்களின் நம்பிக்கையை சிதைக்கும் சூழ்நிலையை அது உருவாக்கியுள்ளது.

"ஒலிம்பிக்கில் இல்லை என்ற காரணம்  முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைகளில் இளைஞர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இவர்களுக்கு இது ஒரு கலை மட்டுமல்ல; வாழ்க்கையின் ஓர் அடையாளமாகவும், வாய்ப்பாகவும் உள்ளது. இதைப் புரிந்து கொண்டு சுக்மாவில் சிலம்பம் தவிர்க்கப்படக்கூடாது என சிவகுமார் தெரிவித்தார்.

இதனை  மறுபரிசீலனை செய்து, எதிர்காலத்தில் இத்தகைய புறக்கணிப்புகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விளையாட்டு என்பது ஓர் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது நாடு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தியாகும். எனவே, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை சுக்மாவில் கட்டாய விளையாட்டாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என எதிர்பார்கிறோம் என்றார் சிவகுமார் !

கோலாலம்பூர், ஆக 6-

மலேசிய புகைப்படக் கலைஞர் தினேஷ் ஸ்ரீதரனின் லட்சிய கனவுக்கு தோல் கொடுக்கும் வகையில்  மஇகா 15 ஆயிரம்  வெள்ளி நிதி வழங்கி பேருதவி செய்துள்ளது.

கென்யாவின் மசாய் மாறா தேசியக் காடுகளில் உள்ள உயிரியல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உலகப் புகழ்பெற்ற National Geographic Societyயுடன் கைகோர்த்து  அவர் செய்யபோகும்  புகைப்பட அவன பணிக்காக  மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்  இந்த விதியை வழங்கினார்.

இந்த  பயணத்திற்கான முன் ஏற்பாடு சவால்கள் அவருக்கு இருந்தபோதும் மஇகா வழங்கிய நிதி  உதவியுடன் தினேஷ் இந்த வார இறுதியில் கொன்யாவுக்கு பயணமாக உள்ளார். அவரின் திட்டமான ‘Echoes of the Savannah’ எனும் புகைப்படக்  அவன முயற்சியை அங்கு சென்று துவங்க உள்ளார்.

அன்மையில்  வெளியிட்டப்பட்ட செய்தியின் அடிப்படையில் செனட்டர் டத்தோ சி. சிவராஜா அவர்கள், இன்று மதியம் மஇகாவின்  தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் கவனத்துக்குக் இந்த விவகாரத்தை  கொண்டு சென்றார்.

அதன் பின்  வெறும் 3 மணி நேரத்திற்குள் மஇகா விரைவான நடவடிக்கை எடுத்து, இந்த நிதியுதவியை அவருக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இது நம் சமுதாயத்திற்கு பெருமைக்குரிய தருணம். மலேசிய இளைஞர்களின் உறுதி மற்றும் கனவுகளை உணர்த்தும் பயணம் இது. உலகரங்கில் மலேசியாவின் புகைப்பட கலையை வெளிப்படுத்த தினேஷுக்கு மஇகாவின் சார்பில் வழங்கும் ஆதரவு இது என நிதிக்கான காசோலை வழங்கும் போது டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

பத்துமலை, ஆகஸ்ட் 3
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பரந்த வெளிச் சிந்தனைக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில், ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் 31ஆவது சிறப்பு கல்வி யாத்திரை இன்று காலை பத்துமலை திருத்தலத்தில் பக்தியுடன் தொடங்கியது.

இந்த அறிவுப் பயணம் மூலம் மாணவர்கள் நூற்பயிற்சிக்கு அப்பால், நடைமுறை அறிவு, பாரம்பரிய வரலாற்று விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் மீதான பொறுப்பு, மற்றும் குழு ஒற்றுமை ஆகிய பல்வேறு வாழ்க்கைத் திறன்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை பெறுகின்றனர்.

பத்துமலை ஸ்ரீ முருகன் கோயிலின் புனித சூழலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  இந்த கல்வி யாத்திரை, அதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பையும் சக்தியையும் வழங்கும் வகையில் அமைகிறது.

இவ்வகை கல்வி யாத்திரைகள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், சமூக விழிப்புணர்வுக்கும் தூண்டுகோலாக இருக்கும் என்பது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் நம்பிக்கையாக திகழ்கிறது. பக்தி நியானத்துடன் பத்துமலை முருகனை காண பயணத்தை தொடங்கினார்கள் மாணவர்கள்.

-காளிதாசன் இளங்கோவன்

சுங்கை சிப்புட், ஆக.2-
எடுத்ததற்கெல்லாம் 60 ஆண்டுகளாக மஇகா என்ன செய்தது என்று பேசி பேசி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்திய பிரநிதிகள் தற்போதும் என்னதான் செய்கிறார்கள் என்பது இன்று அனைவருக்கும் புரியும்.

மஇகாவை குறைக்கூறிய ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அவர்கள் நாற்காலிகளை சூடேற்றி அமர்ந்துகொண்டுதான் இருக்கிறார்களே தவிர சமுதாயத்திற்காக எதுவும் செய்த பாடில்லை என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகாவை குறை சொல்வதற்காகவே மைக்கா ஹோல்டிங்ஸை பற்றி பேசுவார்கள். ஆனால் மைக்கா ஹோல்டிங்ஸை மஇகா நிர்வாகம் செய்யவில்லை என்பதை அவர்கள் புரிந்து பேசுவதில்லை.

மேலும் குறைகளை பற்றி பேசுபவர்களுக்கு மஇகாவின் நிறையை பற்றி பேச நேரம் இல்லாமல் போய்விட்டது. வெ.480 மில்லியன் கடனில் இருந்த ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கடன் கட்டி முடிக்கப்பட்டது பற்றி பேச ஆளில்லை என அவர் சொன்னார்.

இன்றை நிலையில் நாட்டில் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், நமது உரிமைகள் அனைத்தும் சுயம்பு லிங்கம் போல் சொந்தமாக கிடைத்து அல்ல. இவற்றை பெற்று தந்தது மஇகாதான். இப்பொழுது நமது மொழி, ஆலயம், பள்ளிகளுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் மஇகாதான்.

அதனால் அரசியல் ஓட்டத்தில் மஇகாவை எப்படி வலுப்பெற செய்வது என்பது எங்களுக்கு தெரியும். மக்கள் விழித்து கொண்டனர். ஆகையால் இந்தியர்களின் எதிர்காலத்திற்காக எந்தவொரு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த மஇகா தாயாராக உள்ளதாக சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் நடைப்பெற்ற பேரா மாநில மஇகாவின் 79 பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து அவர் பேசினார்.

சுங்கை சிப்புட், ஆக.2-
நம் நாட்டிலுள்ள இந்தியர்களின் நலன் காக்கவும் குரல் கொடுக்கவும் உள்ள ஒரே கட்சி மஇகாதான். அதனை தவிர வேறு கட்சி இல்லை. புதிதாக பிறக்கவும் முடியாது என பேரா மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ ராமசாமி தெரிவித்தார்.

நமது சமுதாயம், சமயம், மொழி, தமிப்பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றை காக்கும் தார்மிக பொறுப்பை மஇகா கொண்டுள்ளது. அதனை இதுவரை முறையாக செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.

ஆலய பிரச்சினைகள் என்றாலும் இனம் சம்பந்தமான பிரச்சினை என்றாலும் முதல் குரல் கொடுப்பது மஇகாதான். அதனால்தான் மஇகா இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் தாய்க்கட்சியாக விளங்கி வருவதாக சுங்கை சிப்புட்டிலுள்ள துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் நடைப்பெற்ற பேரா மாநில மஇகாவின் 79ஆவது பேராளர் மாநாட்டில் பேசியபோது அவர் சொன்னார்.

மேலும் மஇகாவை மேலும் வலுப்பெற செய்ய கட்சியில் அதிகமான இளைஞர்களை கொண்டு வரவேண்டும். அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்கும் முன் நம் கட்சியில் அதிக வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் உறுமாற்றத்திற்கு கல்வி மிகவும் அவசியம். அந்த வகையில் மஇகா ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை டேவ் தொழில்நுட்ப கல்லூரியையும் உறுவாக்கியது. இந்த இரு உயர்க்கல்விக் கூடங்களில் கீழ் பல மாணவர்களுக்கு கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் அவர் எடுத்துச் சொன்னார்.

இதற்கிடையில் தேசிய மஇகா உருவாக்கும்  சமூகநல திட்டங்களுக்கு பேரா மாநில மஇகா உறுதுணையாக இருக்கும் என அவர் சொன்னார்.

பேரா மாநில 79ஆவது பேராளர் மாநாட்டை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார்.

கோலாலம்பூர் ஆகஸ்ட் -2
தற்போது வேலை வாய்ப்பு, வாடகை வீடு விளம்பரங்களில் காட்டப்படும் இனப்பாகுபாடுகள்  மன கசப்பை ஏற்படுத்துகிறது இது தொடர்பாக 
எம்.பிக்கள்  நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ  சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக  புக்கிட் பெண்டேராவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷர்லினா அப்துல் ரஷித் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரின்  எதிர்ப்பு குரல்  நான் மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படி பட்ட  அறிவிப்பு விளம்பரங்கள்  நீண்ட காலமாக இருந்தாலும், மிகச் சில தலைவர்களே இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.

வேலை வாய்ப்புகள்,  வீடு வாடகைகளுக்கு வழங்குவதும் ஒரு குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு வெளிப்பட்டையாக இப்போது அதிகளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

தங்கள் பணிகளைச் செய்வதில் புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் இருக்கும் பல பட்டதாரிகளுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சரியான வேலைகள் வழங்கப்படுவதில்லை.

இனம், மொழி காரணங்களால் தகுதியானவர்கள் ஒதுக்கித் தள்ளப்படுகிறார்கள்.
இதனால் பதவிகளை வகிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வாடகைக்கு வீடுகள், அறைகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கலுடன், உண்மையில் தேவைப்படுபவர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தை இன்னும் துல்லியமான  மட்டத்தில் விவாதிக்க  ஷர்லினா நாடாளுமன்ற கூட்டத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அதே வேளையில் அவர் தொடர்புடைய அமைச்சர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷர்லினாவின் துணிச்சல்
பாராட்டுக்குரியது.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு. காரணம் அவரது கட்சி தான் ஆட்சியிலும் உள்ளது.

ஆக இந்த விவகாரத்தல் கொள்கை மட்டத்தில் பேசி அதை சட்டமாகவும் மாற்ற வேண்டும்.

இதனால் இந்த விஷயத்தை செய்பவர்கள் எதிர்காலத்தில் பயப்படுவார்கள்.

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இது தொடர்பாக  வாதிட்டு அதை ஒரு சட்டமாகப் பெறுவது பொருத்தமானதாகும்.

குறிப்பாக மடானி அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்கும் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் இந்தப் பிரச்சினையை ஜசெக கட்சியின் மத்திய தலைமையின் பார்வைக்கு இதனை  கொண்டுச் செல்லவேண்டும். அதன் பின் மத்தியத் தலைமை  மத்திய அரசை வலியுறுத்த வழி வகுக்க வேண்டும்.

இதனால் நமது  நாட்டில் நீண்ட காலமாகப் பரவி வரும் இந்தப் பிரச்சினையை ஒழிக்க முடியும் என்று டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

மஇகா மற்றும் ஜசெக இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பேராக் மஇகா இளைஞர் அணி இப்போது ஒரு வெளிப்படையான தீர்வை வழங்க பொது விவாதத்திற்கு தயாராகியுள்ளது.

பேராக் மஇகா இளைஞர் அணித் தலைவர் தியாகேஷ் கணேசன், இந்திய சமூகத்தின் பிரச்சினை குறித்து விவாதிக்க புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துளசியை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதில் மஇகா மற்றும் ஜசெகவின் செயல்திறன் குறித்து விவாதம் புரிய தான் பரிந்துரைத்ததாக தியாகேஷ் கூறினார்.

மஇகாவின் இடங்கள் சட்டமன்றத்திலோ அல்லது மக்களவையிலோ குறைவாக இருந்தாலும், கட்சி இன்னும் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் திறனை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

மஇகா இந்திய சமூகத்தை ஏமாற்றுவதாக ஜசெக நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

ஜசெக இப்போது 40 நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளது மற்றும் பக்காத்தா ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியாக இருக்கும்போது, ஜசெக என்ன சாதித்துள்ளது என்பதை விளக்குமாறு துளசிக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

எனவே, துளசியின் வெளிப்படையான விளக்கத்தை நான் கேட்க விரும்புகிறேன்.
இந்து கோயில்களின் இடமாற்றம் மற்றும் இடிப்பு, இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இடங்கள் பற்றியும் பேசுவோம், மேலும் மலேசிய இந்திய உருமாற்ற பிரிவு (மித்ரா) தொடர்பான பிரச்சினையை மறந்துவிடக் கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

தன் தொகுதி மக்களுக்கான பங்களிப்பை கருத்தில் கொண்டு துளசி இந்த விவாதத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த விவாதத்தை சமூக ஊடகத்தில் நேரடியாக ஒளிப்பரப்ப படுவதையும் தாம் வரவேற்பதாக தியாகேஷ் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, ஆக 1
B40 வருமானக் குழுவைச் சேர்ந்த உயர்க்கல்வி மாணவர்களை ஆதரிக்க அதிக நிதி ஒதுக்குமாறு மாணவர் தலைவர்களும் கல்வி ஆதரவாளர்களும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.

அத்தகைய மறு முதலீடு, விற்பனை மற்றும் சேவை வரியின் (SST) வரம்பின் சமீபத்திய விரிவாக்கத்தை நன்மைக்கான சக்தியாக மாற்றும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

உயர்கல்வி அமைச்சர் ஷம்ரி அப்துல் காதிர் கல்வித் துறையில் SSTயின் தாக்கத்தை மதிப்பாய்வு செய்தாலும், பாதிக்கப்படக்கூடியவர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைக் குறைக்க அவசர நடவடிக்கை தேவை என்று மாணவர் குழுக்களும் சிவில் சமூக அமைப்புகளும் கூறுகின்றன.

SST வருவாயை கல்விக் கட்டணங்களுக்கு மானியமாக வழங்க பயன்படுத்தலாம். குறிப்பாக அதிக விலை கொண்ட திட்டங்களுக்கு அது பயன்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் லிம் ஜிங் ஜெட் வலியுறுத்தினார்.

வணிக வழியை நம்பியிருப்பதைக் குறைக்கவும், உயர்கல்வியில் தனியார்மயமாக்கலைத் தடுக்கவும் பொதுப் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டு பட்ஜெட்டிற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்களுக்கு சுமை இல்லாமல் பல்கலைக்கழக செயல்பாடுகளைத் தக்கவைக்க உயர் கல்வி அமைச்சகம் மூலம் சில SST நிதிகளை அரசாங்கம் திருப்பிவிடலாம்.

மேலும் பல்கலைக்கழக வளாக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், வீட்டு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலமும் மாணவர்களுக்கு பயனளிக்க SST வருவாயைப் பயன்படுத்தலாம் என்றும் லிம் கூறினார்.

இதற்கிடையில்,முன்னாள் உம்சு தலைவர் நசிரா அப்துல்லா கூறுகையில், SST வருவாயை இலக்கு மானியங்கள் மற்றும் அவசர உதவிகளை அறிமுகப்படுத்த பயன்படுத்தலாம் என்றார்.

இதில் வளாகத்தில் மானிய விலையில் உணவு, தள்ளுபடி செய்யப்பட்ட இணையத் திட்டங்கள், இலவச அல்லது குறைந்த விலை டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வாடகை அல்லது வளாகத்திற்கு வெளியே போக்குவரத்துக்கான நிதி உதவி ஆகியவை அடங்கும் என்றும் அவர் சொன்னார்.

மனநல ஆலோசனை மற்றும் பயிற்சி கொடுப்பதற்கு SST விரிவாக்க வருவாயிலிருந்து நிதியளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களின் கல்வித் திறனில் அடிக்கடி தலையிடும் நிதி அழுத்தத்தைக் குறைக்க உதவுவதன் மூலம் B40 குடும்பங்களுக்கு இதுபோன்ற நடவடிக்கை ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நசிரா கூறினார்.

வாஷிங்டன், ஆக 1-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின் அடிப்படையில் மலேசியா 19 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31, 2025 அன்று டிரம்ப் கையெழுத்திட்ட கட்டண விகிதத்தை மேலும் சரிசெய்யும் ஆவணம் வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, டிரம்ப் மலேசியாவிற்கு 25 சதவீத வரி விகிதத்தை நிர்ணயித்தார், ஆனால் நேற்று அவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் கட்டணக் குறைப்பைத் தூண்டிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

கோலாலம்பூர், ஆக 1-
அதிகரித்து வரும் தேவை, அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு, மலேசியா தனது சுகாதார அமைப்பின் எதிர்காலத்தைப் பாதுகாக்க துணிச்சலான சுகாதார நிதி சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்லி அகமட் கூறினார்.

மலேசியாவின் வரி நிதியுதவி பெற்ற சுகாதாரப் பராமரிப்பு முறை நீண்ட காலமாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறது. ஆனால் நாடு இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது, இது தொற்றாத மற்றும் தொற்றக்கூடிய நோய்கள், நெரிசலான வசதிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகியவற்றின் இரட்டைச் சுமையுடன் போராடுகிறது என்று அவர் சொன்னார்.

அதனால் பல காலமாக நாம் சுகாதாரத்திற்காக குறைவாகச் செலவழித்து வருவதால், நாம் அடிப்படையில் ஒரு சிக்கலில் உள்ளோம். அதைத்தான் கருவூலமும் கூறுவதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த அமைப்பை எவ்வாறு பாதுகாப்பது என்பது மட்டுமல்ல, அதை எவ்வாறு மாற்றுவது மற்றும் அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் சவாலாகும் என்று நேற்று இரவு எம் ரிசார்ட் ஹோட்டலில் நடந்த 7வது மலேசிய மடானி அறிஞர்கள் மன்றத்தில் ஒரு குழு உறுப்பினராகப் பேசும்போது அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை 31-
இந்தியர்களின் நலனை காக்கும் வகையில் இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த அரசு உடனடியாக சிறப்பு பிரிவை அமைக்க வேண்டுமென மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 13ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்தால். அதில் இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

இவற்றை செயல்படுத்த மித்ரா அப்பால் சிறப்பு பிரிவை அரசாங்கம் அமைக்க வேண்டும் என அவர் சொன்னார்.

இந்திய ஆலோசனைக் குழுவின் கீழ் ஒரு நிலையான சமூக, பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவப்பட வேண்டும்.

இது சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் குழுவின் செயலகமாகவும் செயல்படும்.

இந்திய ஆலோசனைக் குழுவின் கீழ் ஒரு தலைமைக் குழுவால் வழிநடத்தப்பட வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 38 முக்கிய பகுதிகளில் சமூகப் பொருளாதார மேம்பாட்டு பிரிவுகள் நிறுவப்பட வேண்டும்.

அவை இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதத்தை உள்ளடக்கிய பகுதிகளாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இது தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த வேண்டும்.

இந்த பிரிவுகள் உள்ளூர், நகர்ப்புற அரசு நிறுவனங்களில் திறமையான பணியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிமட்ட மட்டத்தில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு, முன்னேற்றத்தை இயக்குவதற்கு அரசாங்க சொத்தாக செயல்படும் என்று அவர் கூறினார்.

13ஆவது மலேசியத் திட்டம்,  இந்திய சமூக செயல் திட்டம் 2.0 ஆகியவற்றின் இலக்குகளுக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவதில் மஇகாவின் முன்மொழியப்பட்ட பிரிவு தொடர்ச்சியை உறுதி செய்யும்.

இந்திய சமூகத்தின் எந்தப் பிரிவும் பின் தங்கியிருக்காது என்பதையும், சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப மேம்பாட்டு முயற்சிகள் திறமையாகவும், வெளிப்படையாகவும், பதிலளிக்கும் விதமாகவும் செயல்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும்.

இந்த செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம்,  அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்ற மஇகா தயாராக உள்ளது.

இதன் மூலம் மலேசிய இந்திய சமூகத்தினருக்கு நியாயமான, சமமான, வளமான எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை 31-தொடக்கக்கல்விக்கும் உயர்நிலைக் கல்விக்கும் பாலமாக அமைந்துள்ள இடைநிலைக் கல்வியை கட்டாயமாக அறிவித்துள்ள கல்வி அமைச்சகத்திற்கு  நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக மஇகா கல்விக்குழு தலைவரும் தேசிய உதவி தலைவர்களில் ஒருவருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, மாணவர்கள் பாதியில் நின்று விடுகின்ற நிலை காலங்காலமாக தொடர்கிறது.
இதற்கு சில நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும்.

அதேவேளை இது குறித்து அரசத் தரப்பில் கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லை என்ற நிலை நிலவுவதால் இத்தகையப் போக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக கடந்த ஆண்டு ஏறக்குறைய 15 ஆயிரம் மாணவர்கள் தங்களுக்கான எஸ்பிஎம் தேர்வில் அமரவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஆகும்.

இந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 10 விழுக்காட்டு மாணவர்கள் இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற நிலையில் ஏறக்குறைய 1,500 இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதாமல் தவிர்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கக்கூடும்.

இப்படிப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்திலிருந்து விலகி நிற்பதுடன் தங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிக் கொள்கின்றனர்.

இதையெல்லாம் அவதானித்துதான் மஇகாவின் கல்விக் குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், மேலவை உறுப்பினராக சேவையாற்றிய காலத்தில் ஆரம்பக் கல்வியை கட்டாயம் ஆக்கியதைப் போல இடைநிலைக் கல்வியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று பல கட்டத்தில் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அரசத் தரப்பில், குறிப்பாக கல்வி அமைச்சகத்தின் சார்பில் 'ஆலோசிக்கப்படும்-பரிசீலிக்கப்படுகிறது' என்ற மட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டதே தவிர விரைவான முடிவு எடுக்கப்படாத நிலையில், இன்று மடாணி அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், ஆரம்பக் கல்வியைப் போல இடைநிலை கல்வியும் கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவு மிகவும் பொருத்தமான முடிவு என்றும்  இடைநிலைக் கல்வியை பாதியில் நிறுத்துகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் சட்ட  நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருப்பது அதைவிட சிறந்த முடிவு என்றும் மேனாள் செனட்டருமான டத்தோ நெல்சன் தெரிவித்துள்ளார்.

உயர்க்கல்வி பெறாவிட்டாலும் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தாலே தன்னுடைய கல்விப் பயணத்தை ஒரு மாணவர் ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டார் என கருத இடம் உண்டு.

கல்வியில் நாட்டம் இல்லாத மாணவர்கள்கூட மேற்கொண்டு 'திவெட்' போன்ற தொழில்திறன் பயிற்சிகளிலும் தனி தொழில்நுட்ப பயிற்சிகளிலும் சேர்ந்து தங்களின் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் மஇகாவின் கல்விக் குழு சார்பில் இத்தகைய கருத்தை அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

அதற்கான நல்வினை இன்று விளைந்துள்ளது. அதனால் கல்வி அமைச்சகத்திற்கு மஇகா சார்பிலும் மஇகா கல்விக் குழு சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், ஜூலை 30-
நாடறிந்த கவிஞர் திரு. தமிழ் செல்வம் காத்தமுத்து அவர்கள் எழுதிய 'புதிய ஓலைச்சுவடி' எனும் கவிதைத் தொகுப்பு நூல், எதிர்வரும் 9/8/2025, சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு வெளியீடு காண உள்ளது.

இந்த நிகழ்ச்சி ம.இ.கா. தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இந்நிகழ்ச்சியைத் தலைமையேற்று நூலை வெளியிடுகிறார்.

இவ்வேளையில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள மற்றும் பொது மக்கள்  அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேல் விவரங்களுக்கு  016-444 2029 என்ற எண்ணில் திரு. ம. முனியாண்டி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

புத்ரா ஜெயா, ஜூலை 30 -
இந்தியர்களைத் தொடர்புடைய விசயங்கள் அமைச்சரவையில் கவனிக்கப்படுவதில்லை என சிலர் பரப்பும் தகவல் முற்றிலும் தவறானது என்றும், இது அரசாங்கத்தை பற்றிய தவறான கண்ணோட்டத்தை காட்டுகிறது என ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசாங்கத்தில் தான் AIMST பல்கலைக்கழகம், TAFE கல்லூரி மற்றும் MIED கல்வி உதவித்தொகைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்திய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழி வகுத்தது.

மேலும் மலேசியாவில் பிறந்த இந்தியக் குழந்தைகளுக்கான பிறப்பு பதிவு மற்றும் MyKad வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த 2023இல் உள்துறை அமைச்சின் கீழ் சிறப்பு செயற்பாட்டு குழு அமைக்கப்பட்டதையும், இதன் மூலம் ஆவணமின்றி வாழும் இந்தியர்களின் நிலைமையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

TVET மூலம் இந்திய இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்க, அறிவியல், இன்ஜினியரிங், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற துறைகளில் படிப்பதற்காக நிதி உதவிகள், வெளிநாட்டு பயிற்சிகள், மற்றும் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 500 இந்திய இளைஞர்கள் சீனாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் (MISI) எனும் புதியத் திட்டம் மனிதவள அமைச்சின் கீழ் வெ.30 மில்லியன் ஒதுக்கீடு கொண்டு செயல்படுத்தப்படுவதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

மக்கள் நலக் கவுன்சில் தலைமையில், இந்திய மாணவர்களில் கல்வி விட்டுவிடும் பிரச்சனையை தீர்க்கும் வகையில் முழுமையான ஆய்வு மற்றும் நடவடிக்கைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் மலேசிய இந்து சங்கம் இணைந்து நடத்திய தேசிய இந்து கோயில் மாநாட்டின் தீர்மானங்களை அரசு ஏற்றுக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில்,
கோயில் நிலங்கள் சட்டபூர்வமாக பதிவுசெய்யப்படுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியர்களைச் சார்ந்த அனைத்து  பிரச்சினைகளுக்கும்  சம்பந்தப்பட்ட  அமைச்சுகள் மூலம் தொடர்ந்து  முடிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதனால், இந்திய சமூகத்தின் பிரச்சனைகள் அமைச்சரவையில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்ற எந்தவொரு கருத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், ஜூலை 30-
இம்மாதம் 4ஆம் தேதி வரையில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்று மோசடி கும்பலிடம் சிக்கியுள்ள 139 மலேசியர் இன்னும் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் மியன்மார், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல்  ஜூலை 4ஆம் தேதி வரை பதிவான கும்பலால் பாதிக்கப்பட்ட 672 மலேசியர்களில் இவர்களும் அடங்குவர். மேலும் அந்த எண்ணிக்கையில் 533 பேர் அதாவது 79 சதவீதம் பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மலேசிய குடிமக்களை, குறிப்பாக இளைஞர்களை, ஏமாற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி கும்பலை உள்துறை அமைச்சு தீவிரமாகப் பார்க்கிறது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ சைப்புடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

தேசிய காவல்துறை மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் கும்பலை ஒடுக்குவதற்கும்,
இந்தக் குற்றத்தின் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உள்துறை அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

குவாந்தான், ஜூலை 30-
கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த நிலையில் அதில் பயணித்து தலைமையாசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரா, குவாய் இடைநிலைப்பள்ளி பள்ளியின் அருகிலுள்ள பிரதான சாலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஜெராண்டுட், டுரியான் ஈஜாவ் இடைநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முகமட் சப்ரி பாக்கார் (வயது 59) பலியானதாக பெரா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஸுல்கிப்ளி நாசிர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் கம்போங் குவாயிலுள்ள தன் சகோதரர் வீட்டிற்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு தீப்பற்றியுள்ளது.

சம்பந்தப்பட்ட கார் 80 விழுக்காடு தீயில் சேதமடைந்தது. இருப்பினும், கார் தீப்பற்றுவதற்கு முன்பு அங்கிருந்த பொதுமக்கள் காரில் சிக்கியவரை வெளியே கொண்டு வந்ததாக ஸுல்கிப்ளி தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-
காஜாங்கிலுள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியரை முகத்தில் குத்தியதுடன் மிரட்டிய குற்றத்திற்காக 14 வயதுடைய மாணவன் ஒருவனை போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் மாணவன் ஒருவனால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக 29 வயதுடைய ஆசிரியர் செய்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவன் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

உடற்கல்வி பாடத்தின்போது சம்பந்தப்பட்ட மாணவன் கலந்து கொள்ளாததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அவரை கண்டித்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது அம்மாணவன் ஆசிரியரின் சட்டையை பிடித்து மிரட்டியதுடன் அவரை முகத்தில் குத்திய சம்பவங்களை அங்குள்ள மற்றொரு ஆசிரியர் தன் கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட மாணவன் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். இந்த விவகாரம் செக்‌ஷன் 323 மற்றும் 506 குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக நஸ்ரோன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜூலை 30-
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியத்தின் (EPF) மொத்த முதலீட்டு வருமானம் RM18.31 பில்லியனாக 13 சதவீதம் சரிந்ததற்கு பங்குச் சந்தையின் பலவீனமான செயல்பாடே காரணம் என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெ20.99 பில்லியனாக அதன் முதலீட்டு வருமானம் இருந்ததாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் (MOF) கூற்றுப்படி, உள்நாட்டு பங்குச் சந்தையில் அதிக முதலீட்டையும் நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டு சொத்துக்களின் விற்பனையுடன் எந்த தொடர்பும் இல்லை.

இந்த நிலைமைக்கு அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக இறுக்கம் மற்றும் அமெரிக்காவின் நிச்சயமற்ற வர்த்தகக் கொள்கைகள் காரணமாகும்.

பல மத்திய வங்கிகள் பணவியல் கொள்கையைத் தளர்த்தத் தொடங்கியுள்ள போதிலும், உலகளாவிய நிலையற்ற அரசியல் நிலை, நிதி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிராந்திய மோதல்கள் குறித்த கவலைகள் சந்தை உணர்வைக் குறைத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று அவர் நேற்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கூறிப்பட்டுள்ளது.

இருப்பினும், நிலையான முதலீட்டு செயல்திறனைப் பராமரிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, மூலோபாய சொத்து ஒதுக்கீட்டால் (SAA) வழிநடத்தப்படும் ஒழுக்கமான முதலீட்டு அணுகுமுறையை ஊழியர் சேமநிதி வாரியம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை, பொங்கல் திருநாள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்ரா நடனத்தையும் பாணிபூரியையும் திணிக்கின்ற ஜனநாயக செயல் கட்சி-ஜசெக'விற்கு மலேசிய இந்திய காங்கிரஸ்-மஇகா'விற்கும் மஇகா உறுப்பியம் பெற்றுள்ள தேசிய முன்னணிக்கும் இடையிலான விவகாரத்தில் தலையிடுவதற்கு எந்த அவசியமும் இல்லை; அதைப்போல ஜசெக-வின் புந்தோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரனுக்கு அருகதையும் இல்லை என்று மஇகா தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

2022 நவம்பர் 19 பொது தேர்தலுக்குப்பின் எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாத  சூழ்நிலையில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு துணை நின்றது தேசிய முன்னணி தான்; அத்தகைய தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான  மஇகா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் இந்திய சமுதாயம் சார்ந்த ஆதங்கத்தையும் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் வெளிப்படுத்தினால், இதுகுறித்து துளசி மனோகரனுக்கோ அவர் இடம்பெற்றுள்ள ஜசெக'விற்கு என்ன நேர்ந்தது?

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து மஇகா விலக வேண்டும் என்று தடித்தனமாக பேசுகின்ற அவசியம் துளசி மனோகரனுக்கும் அவரின் முதலாளிகளான சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜசெக'விற்கும் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருக்கின்ற கல்வி மற்றும் பொருளாதார சிக்கல், குறிப்பாக மித்ரா விவகாரம், இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்கல்வி வாய்ப்பு குறித்த பிரச்சினை, இந்திய பாரம்பரிய வர்த்தகத் துறையினர் எதிர்கொள்கின்ற தொடர் சிக்கல் குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனை குறித்தெல்லாம் துளசி மனோகரனும் ஜசெக'வும் வாய்  திறப்பதில்லை.

தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2200 மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளிலிருந்து ஆயிரத்தை சீன சமூகத்திற்கு மடை மாற்றியது யார்? இது பற்றி துளசியும் ஜசெகா'வும் மூச்சு விட்டுதுண்டா?

அதைப்போல தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் தமிழ் பள்ளிகளுக்காக ஒரு மில்லியன் நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கினார் பிரதமர் நஜீப்; ஜசெக அதிகாரத்திற்கு வந்தவுடன் அது இல்லாமல் போய்விட்டது; மித்ராவிற்கு இவ்வாண்டுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை என தெரிகிறது இதுகுறித்து துளசி யும் துளசி இடம்பெற்றுள்ள கட்சியும் பேசியது உண்டா?

ஆர்டிஎம் தமிழ்ச் செய்தி பிரிவில் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் பத்து நிமிட உலகச் செய்தி அறிக்கையும் இரவு 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் 10 நிமிட செய்தித் தொகுப்பும்  ஐந்தைந்து நிமிடங்களாக குறைக்கப்பட்டது ஜசெகா அதிகாரத்திற்கு வந்தவுடன் என்பது துளசிக்கு தெரியுமா?

அதைப்போல இந்து சமயத்தையும் இந்து மக்களையும் பழித்தும் இழுத்தும் சமயப் பிரச்சாரகர்கள் பேசுகின்ற பொழுதெல்லாம் துளசி தள்ளிநின்று வேடிக்கை பார்த்தாரேத் தவிர இது குறித்து கேள்வி எழுப்பியது உண்டா?

ஜசெக மத்திய நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்தூரி பட்டு, ஜ. அருள் குமார் போன்றவர்களும் நியமனத்தின் மூலம் இடம்பெற்று இருக்கின்ற துளசி போன்றவர்களும் எந்த நேரத்திலும் இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதில்லை; வாய் திறப்பதில்லை.

தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் தொட்டதற்கெல்லாம் குரல் எழுப்பி வாதாடிய ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது நாடாளுமன்றத்திற்கு வெறுமனே வந்து செல்கின்றனரேத் தவிர இந்திய சமுதாயம் குறித்து எதற்காகவும் குரல் எழுப்புவதில்லை.

மலேசிய இந்திய சமுதாயத்தில் அடையாளத்தில் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கின்ற ஜசெக, அதன் பங்களிப்பையும் கடப்பாட்டையும் ஒழுங்காக செய்வதை விட்டுவிட்டு, மஇகா குறித்தும் மஇகா இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி சம்பந்தப்பட்ட விவகாரத்திலும் பேசவோ தலையிடுவதற்கோ துளசிக்கு கடுகளவும் அருகதை இல்லை என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்வதாக சிவ சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயா, ஜூலை 26-
சிறுத்தொழில் வர்த்தகர்களையும் வளர்ந்து வரும் வர்த்தகர்களையும் அங்கீகரிக்கும் வகையில் ரிபுவான் முத்தியாரா செக்கால் ஹோல்டின்ங்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனமும் இந்தியாவைச் சேர்ந்த ஒன்றுப்பட்ட இளைஞர் மன்றம் ஆகியவை இணைந்து விருது விழாவை நடத்தியது.

வர்த்தகர்கள் மட்டுமின்றி பிற துறைகளை சார்ந்த வளர்ந்து வரும் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது விழாவில் 4 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

சமூக வலைத்தளத்தில் முக்கியமான கருத்துகளை முன்வைத்து தலைமைத்துவத்தை கொண்டுள்ளவர்கள் இந்த விருது விழாவில் கௌரவிக்கப்பட்டதாக ரிபுவான் முத்தியாரா செக்கால் ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் தோற்றுநர் விஷாலினி பழனி தெரிவித்தார்.

மேலும் இந்த விருது விழாவில் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனைப்படைத்து நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்த டத்தோ மகேந்திரன் மற்றும் டத்தோ மோகனதாஸுக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நம் சமுதாயத்தில் வியாபாரத் துறையில் கால்பதித்து முன்னேறி வரும் வர்த்தகர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது விழாவை முதல் முறையாக எங்களின் நிறுவனத்தின் கீழ் ஏற்பாடு செய்துள்ளோம். தொடர்ந்து சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதற்கிடையில் டிசிபி டத்தோ சசிகலா தேவி, தொழிலதிபர் டத்தோ சுரேஷ் ஆகியோருக்கு இந்த விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 30 சாதனையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக விஷாலினி பழனி தெரிவித்தார்.

தாப்பா, ஜூலை 27-
கடந்த சனிக்கிழமை டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த தூருன் அன்வார் பேரணியில் இந்தியர்கள் அதிகளவில் கலந்து கொள்ளாததை அரசாங்கம் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம் என மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

இந்த பேரணியில் இந்தியர்கள் அதிகமாக கலந்து கொள்ளாதது நாட்டில் தற்போது நடப்பதை அவர்கள் ஆதரிப்பதாக நாம் நினைத்து கொள்ள முடியாது. மேலும் இந்த பேரணி அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பேரணியாக அமைந்துள்ளது.

ஆகையால் குறைந்த எண்ணிக்கையில் இந்தியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டது அவர் அரசாங்கத்தை நம்புவதாக அர்த்தமாகாது. இந்த பேரணி அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இதனை எச்சரிக்கையாக எடுத்து கொள்வது அரசின் கையில்தான் உள்ளது. என்னை பொருத்தவரை இது ஒரு தற்போது நிலையை நமக்கும் உணர்த்து ஒரு விழிப்பு மணியாகும். இதை தவரைதான் நாங்கள் தேசிய முன்னணி ஆட்சியில் புரிந்தோம் என அவர் சொன்னார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. ஆகையால் அதனை அரசு புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பூச்சோங், ஜூலை 26-
மக்களுக்கு உதவும் திட்டத்தை அரசு முன்னெடுக்கும் படசத்தில் உதவி தேவைப்படும் தரப்பினருக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் நாட்டிலுள்ள பி40 பிரிவினர்களுக்கான உதவித் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.

அதனைவிடுத்து, அனைவருக்கும் ரஹ்மா திட்டத்தின் வழி வெ.100 வழங்குவதில் எந்த பயனும் இல்லை என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

எனக்கும் என் மனைவிக்கும் அரசாங்கம் வெ.100 கொடுப்பதினால் என்னதான் பயன் என அவர் வினவினார்.

முந்தைய ஆட்சியில் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரிம் உதவித் தொகையை வழங்கினார். அப்பொழுது அது தேர்தலுக்கான லஞ்சம் என எதிர்க்கட்சியினர் குறைக்கூறினர். ஆனால் இன்றைய ஆட்சி அவர்கள் கையில். அதுவும் அனைத்து மக்களுக்கும் வெ.100ஐ வழங்கவுள்ளதாக அறிவிப்பு செய்வதன் உள் அர்த்தம்தான் என்ன? இதுவும் லஞ்சம்தானே என டத்தோ டி.மோகன் கூறினார்.

பொருளாதார நிலையில் மக்களின் நிலையை உயர்த்த அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்திய சமுதாயத்திற்கு உதவும் பொருட்டு மித்ரா தொகையை வெ.200 மில்லியனாக உயர்த்தலாம். ஆகையால் புதிய உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அது மக்களுக்கு தேவையானதா என்பதை அரசு அறிந்திருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

இதற்கிடையில் அன்வார் விலக வேண்டும் என்ற பேரணி தலைநகரில் நடப்பதை பற்றி அவரிடம் கேட்டபோது, அது அன்வாரின் கர்மா என அவர் கூறினார்.

நாட்டில் பல பேரணிகள் அவரின் தலைமையில்தான் நடந்தது. பேரணிகள் நடத்துவதை ஊக்குவித்தவரே அவர்தான். தற்போது அந்த கர்மா அவரை தாக்குகிறது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் தாக்கும் என தான் நினைத்து பார்க்கவில்லை என்றார் டத்தோ டி.மோகன்.

பூச்சோங் பண்டார் புத்ரியில் இன்று ஸ்ரீ பிஸியோ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

புத்ராஜெயா, ஜூலை 25-
சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றம் செய்யாதவர்கள் தண்டனை அனுபவிப்பதாகவும் அவர்களின் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று அரசு அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரி உள்துறை அமைச்சில் தேசிய நட்புறவு பொதுநல அமைப்பு மகஜர் வழங்கியது.

சொஸ்மா சட்டத்தை நிறுத்த வேண்டுமென நாங்கள் கூறவில்லை மாறாக குற்றம் செய்யாதவர்களை இன்னும் சிறையில் வைத்திருப்பதைதான் நாங்கள் ஏற்க மறுக்கிறோம்.

உண்மையிலேயே அவர்கள் குற்றம் செய்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துங்கள். மாறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நியாயமற்ற செயல்.

இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பங்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறது.

குற்றம் செய்தவர்களுக்கு நியாயம் கேட்டு நாங்கள் இங்கு வரவில்லை மாறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயம் வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என அமைப்பின் தலைவர் ஜோசப் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைப்புடி நஸுத்தியோன் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் சீர்தூக்கி பார்த்து ஒரு முடிவை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சின் தரப்புடன் தொடர்பு கொண்டு தீர்வுக் கிடைக்கும் வரை போராடுவோம் என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று உள்துறை அமைச்சிடம் மகஜர் வழங்க அமைப்பை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அமைச்சகத்தின் நுழைவாசல் அருகில் கூடி மகஜரை வழங்கினர்.

கோலாலம்பூர், ஜூலை 25-
அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட சிறப்பு அறிவிப்பின்போதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் ரஹ்மா உதவித் திட்டத்தின் வழி மாதத்திற்கு வெ.100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மோசடி கும்பல் ஒன்று மக்களை ஏமாறறும் வகையில் இந்த உதவித் திட்டத்திற்கான பதிவு என ஒரு இணைய பதிவை பரப்பி வருகிறது. இதனை மக்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என
நிதி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்த உதவித் திட்டத்திற்கு எந்த விண்ணப்பமும் தேவையில்லை என்று அமைச்சு சமூக ஊடக தளமான Instagram இல் விளக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற போலி செய்திகளால் எளிதில் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாவிட்டால் இணைய இணைப்பையும் (link)  திறந்து பார்க்க வேண்டாம். மோசடிக்கு ஆளாகாமல் தவிர்க்க கவனமாக இருங்கள் என நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கோலாலம்பூர், ஜூலை 25-
ரஷ்யாவின் அமுர் பகுதியில் நேற்று நடந்த AN-24 விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அமுர் பகுதியில் நடந்த விமான விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு தான்ன் மிகவும் வருத்தமடைந்ததாகவும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் அனுதாபங்களை தெரிவிப்பதுடன் பிராத்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.

விமானம் தரையிறங்கும் கட்டத்தில் தீப்பிடித்து எரிந்ததாகவும், விபத்து நடந்த இடத்தில் நடத்தப்பட்ட வான்வழி ஆய்வில் யாரும் உயிர் பிழைத்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உட்பட 46 பயணிகள் இருந்தனர்.

கோலாலம்பூர், ஜூலை 25-
அன்வார் பதவி விலக வேண்டும் என நாளை டத்தாரான் மெர்டேக்காவில் நடத்தப்படவுள்ள பேரணியில் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவுத் தலைவர் அவ்னான் அமிமி தாயிப் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி பேரணி பிரதமர் மீதான எங்களின் எதிர்ப்பை காட்டுகிறது. மாறாக நாங்கள் பக்காத்தான் ஹராப்பானை ஆட்சி கலைக்க கூறவில்லை என்றார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் நாங்கள் இந்த பேரணியை நடத்தவுள்ளோம். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் திறமைசாளிகள் பலர் உள்ளனர் அவர்களின் ஆட்சி நடத்தப்படலாம். அப்படியும் அங்கு ஆள் இல்லை என்றால் ஆட்சியை எங்களிடம் (பெரிக்காத்தான் நேஷன்ல்) கொடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரிக்காத்தான் நேஷனல் பிரதமருக்கு எதிராக வாக்கெடுப்பை வழங்கியபோதும் பிரதமர் பதவையை அன்வார் தற்காத்து கொண்டார். ஆனால் எங்களின் இந்த போராட்டம் தொடரும். அதற்கு ஆதரவாக பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தைரியத்துடன் முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஜூலை 24-
இந்து மதத்தை இழிவுப்படுத்தும் செயல்கள், குறிப்பாக ஷம்ரி வினோத் மற்றும் பிர்டாவ்ஸ் மீது நாடு தழுவிய அளவில் பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்த போதிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதராங்கள் இல்லை என்று அண்மையில் சட்டத் துறை அமைச்சர் கூறியிருப்பது நாட்டிலுள்ள இந்துகளின் மனதை பெரிதளவு பாதித்துள்ளதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள 3R சட்டம் ஒருசராவருக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை ஒட்டுமொத்த இந்து சமயம் வண்மையாக கண்டிக்கிறது. எங்களை பொருத்தவரை எந்த மதமாக இருந்தாலும் அதனை இழிவாக பேசுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறோம்.

கடந்த ஓராண்டு காலமாக சில தரப்பினர் இந்து சமயத்தை இழிவுப்படுத்தி பேசி வருகின்றனர். அவர்கள் மீது சட்டம் ஏன் பாயவில்லை? அரசாங்கம் தயங்குகிறாதா இல்லையென்ற சட்ட ஒருசாராவர்களுக்கு மட்டுதான் பயனளிக்கிறதா என டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேள்வி எழுப்பினார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் சமுதாயத்தின் பிரதிநிதிகள் என்றும் சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை வண்மையாக கண்டிக்கிறோம். எங்கள் இனத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் கட்சிபேதங்களை தாண்டி சமுதாயம் என்ற குடையின்கீழ் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் என அவர் சொன்னார்.

இன்று நடந்த நாடாளுமன்ற தொடருக்கு பின்னர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவரங்களை கூறினர்.

கிள்ளான், ஜூலை 22-
மலேசிய இந்தியர் உருமாற்ற அமைப்பின் ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 20, 21ஆம் தேதிகளில் Klang Centro Mall முதல் மாடியில் மாபெரும் அளவில் தீபாவளி கல்யாண பசார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதன் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷான் தெரிவித்தார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவில் 62 கடைகள் இடம் பெறும்.

இந்த விழாவில் நாட்டின் புகழ்பெற்ற கலைஞர் டார்க்கி, சந்தேஷ், பாலன் காஷ், அருண் போய், உட்பட மண்ணின் மைந்தர்கள் பங்கேற்கும் இன்னிசை விழாவும் இடம் பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.

சுமார் 15,000 பேரின் வருகையை எதிர்பார்க்கிறோம்.இதுவரை 60 விழுக்காடு கடைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த தீபாவளி கல்யாணம் பசார் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இதனிடையே இந்த தீபாவளி கல்யாணம் பசார் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்களது கார்களை நிறுத்த 750 இட வசதிகள் உள்ளன என்று விக்ரம் தெரிவித்தார்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய மண்டபத்தில் தீபாவளி கல்யாணம் பசார் நடைபெறுவதால் பொதுமக்கள் திரண்டு வந்து விழாவில் கலந்து கொள்ளலாம்.

மேலும் போதுமான கழிப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த தீபாவளி கல்யாணம் பசார் நிகழ்வில் கடைகளை எடுக்க விரும்புவோர் 016 - 2757465 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், ஜூலை 21-
கிரீன் பாக்கெட்டின் நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ வீரா ஷாகுல் தாவூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருவதாக  தொழில்நுட்ப தீர்வு வழங்குநர் நிறுவனமான கிரீன் பாக்கெட் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

டத்தோ வீரா ஷாகுல் ஷாகுல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு துறைகளில் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் மாற்றத்தை உருவாக்குவதற்கும் வலுவான பொது தனியார் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் அவரது திறனுக்காக பரவலாக மதிக்கப்பட்டதாக கிரீன் பாக்கெட் தெரிவித்துள்ளது.

எனது  இந்தப் பங்கு ஒரு நிறுவனத்தை வழிநடத்துவது மட்டுமல்ல, தொழில்நுட்பத்தை நிஜ உலக முன்னேற்றத்துடன் இணைப்பதை கொண்டதாகும்.

மேலும் மலேசியாவிற்கு அப்பால் கிரீன் பாக்கெட் நிறுவனத்தின் தாக்கத்தை அதிகரிப்பதை கொண்டதாகும் என்று டத்தோ  வீரா ஷாகுல் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

கிரீன் பாக்கெட் வட்டார வளர்ச்சி, உள்ளடக்கிய கண்டுபிடிப்புகளில் தனது கவனத்தை கூர்மைப்படுத்தும் நிலையில்,

எனது நியமனம் வணிக வெற்றியைத் தாண்டிச் சென்று ஆசியான், அதற்கு அப்பால் நேர்மறையான இலாக்கவியல் மாற்றத்திற்கான ஒரு ஊக்கியாக மாறுவதற்கான நிறுவனத்தின் நோக்கத்தைக் குறிக்கிறது என்று அவத் கூறினார்.

முன்னதாக டத்தோ வீரா ஷாகுல் சமீபத்தில் எச்ஆர்டி கோர்ப்பின் தலைமை நிர்வாக இயக்குநாக பதவி வகித்தார்.

அவர் தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை முடித்த பின்னர் ஏப்ரல் மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

எச்ஆர்டி கோர்ப் வாயிலாக நாட்டின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் மேம்பாட்டு திட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார்.

இது  மில்லியன் கணக்கான மலேசியர்களையும் தொழில், கல்வி,  அனைத்துலக அமைப்புகளைச் சேர்ந்த ஆதரவாளர்களையும் உள்ளடக்கியது.

தேசிய எல்லைகளுக்கு அப்பால், துறைகள், புவியியல் பகுதிகளைத் தாண்டிய மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவதில் டத்தோ வீரா ஷாகுல் தனது திறமைக்காக அங்கீகரிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கை ரெங்காம், ஜூலை 21-
பிறவியிலேயே பார்வையை இழந்தாலும் கல்வியில் உயர்ந்த சாதனையைப் பெற்று மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் ஆசிரியர் லட்சுமி பிரியா.

அவரது முயற்சி, மனதின் வலிமையும் விடாமுயற்சியும் தான் வெற்றிக்கான விசை என்பதை  நினைவூட்டுகிறது. அந்த வகையில்  ஶ்ரீ முருகன் நிலையம் தனது மாணவர்களுக்கு ஆசிரியர் லட்சுமி பிரியாவை அடையாளம் காட்டி அவர்களுக்கு மன வலிமையையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளது.

ஸ்ரீ முருகன் நிலையம் தனது மாணவர்களுக்கு
கல்வி ஜெயம் மற்றும் கல்வி விரதம் 2025
என்ற திட்டத்தின் வழி தன்முனைப்பு கருத்தரங்கை நடத்தியது.

நேற்று சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளியின்  மாநாட்டு மையத்தில்   காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடந்த இந்த நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் “கல்வி ஜெயம்” திட்டம், பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் பெற்றோரின் பங்களிப்பை வலியுறுத்தும் ஒரு தனித்துவமான முயற்சியாகும். இது பாடநூல் மையமில்லாமல், தமிழ் மரபின்  முறை மற்றும் வாழ்வியல் அடிப்படைகளுடன் சிந்தனையை வளர்க்கும் திட்டமாக அமைந்துள்ளது.

நிகழ்வில், மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், பெற்றோர்கள் எவ்வாறு கல்வி பயணத்தில் தீவிரமாக பங்கேற்கலாம், வீட்டுப்பாடங்களுக்கு உதவலாம், மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் நற்பண்புகளை ஊக்குவிக்கலாம் என்பன குறித்த பல்வேறு கருத்தரங்குகள், செயன்முறை பயிற்சிகள் மற்றும் யுக்திகள் பகிரப்பட்டன.

திருவள்ளுவர் வலியுறுத்திய "கற்க கசடறக் கற்ற பிற பின்னும் நிற்க அதற்குத் தக" எனும் பாடலை அடிப்படையாகக் கொண்ட “கல்வி ஜெயம்” திட்டம் அறிவு சார்ந்த கல்வியை மட்டுமல்லாமல், வாழ்க்கை வழிநடத்தும் பண்பாட்டு கல்வியையும் வலியுறுத்துகிறது.

இந்நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாக “கல்வி விரதம்” என்ற நிலைத்த முயற்சி அறிமுகம் செய்யப்பட்டது. கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம் என்பதை சுட்டிக்காட்டும் இவ்விரதம், தனிநபர் வளர்ச்சி, ஆன்மீக உயர்வு மற்றும் சமூக நலனுக்கான முழுமையான அர்ப்பணிப்பாகும்.

டான்ஸ்ரீ எம். தம்பிராஜா அவர்களின் பார்வையின் அடிப்படையில், கல்வி என்பது மதிப்புமிக்க சமூகப் பணியாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தின் விளக்கமாகவும் இந்த விழா அமைந்தது. ஒவ்வொரு இல்லமும் ஒரு குருக்குள நிலையமாக, பெற்றோர்களும் குழந்தைகளின் முதல் குருவாகச் செயல்பட வேண்டும் என்பது விழாவின் முக்கியக் கோரிக்கையாகும் என்பதை ஶ்ரீ முருகன் நிமையம் தெரிவித்தது.

“கல்வி ஜெயம் திட்டம், பெற்றோரின் தீவிர பங்களிப்புடன்  இந்திய சமுதாயத்தில் ஒரு புதிய கல்விப் புரட்சியை உருவாக்கும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அறிவித்தது.

-காளிதாசன் இளங்கோவன்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 20-
நாடே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த மலேசிய இந்து சங்கத் தேர்தலில் நடப்பு தலைவர் தங்க கணேசன் வெற்றி பெற்று மீண்டும் தலைவரானார்.

இன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மலேசிய இந்து சங்கத்தின் 48ஆவது பேராளர் மாநாடு மற்றும் தேர்தலும் நடைபெற்றது.

மொத்தம் 10 பேராளர்கள் பதவிக்கு இரு அணி சார்பில் 20 பேர் போட்டியிட்டனர்.
வெற்றி அணிக்கு தங்க கணேசன் தலைமை ஏற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணிக்கு கணேஷ் பாபு தலைமை ஏற்றார்.

கடந்த இரண்டு வாரங்களாக பிரச்சாரம் அனல் பறந்தது.
இந்நிலையில் இன்று காலையில் 2,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் திரண்டு வந்து வாக்களித்தால் யார் வெற்றி பெறுவார்கள் என ஆவல் எதிரொலித்தது.

ஆலயங்கள் சார்பில்  வாக்களிக்க தனி பிரிவு , பேராளர்கள் சார்பில் வாக்களிக்க தனி பிரிவு மற்றும் ஆயுள் கால உறுப்பினர்கள் வாக்களிக்க தனி பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலை நான்கு மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நடப்பு தலைவர் தங்க கணேசன் 1,102 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.

அவரின் அணியைச் சேர்ந்த கோபி 1,091 வாக்குகள்,சுஜித்திரா 1,064 வாக்குகள், ஹரிதாசன் 1,064 வாக்குகள், சதீஷ் 1,041 வாக்குகள், ஏரா பெருமாள் 1,034 வாக்குகள் பெற்றனர்.

கணேஷ் பாபு அணியைச் சேர்ந்த முனைவர் டாக்டர் முரளி 1,031 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதே சமயம் தங்க கணேசன் அணி சார்பில் தினகரன் 1,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கணேஷ் பாபு 1,028 வாக்குகள் பெற்று 9 இடத்திற்கு தேர்வு பெற்றார்.

தங்க கணேசன் அணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷான் 1,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

இம்முறை வெற்றி கூட்டணி அணி சார்பில் மொத்தம் 8 பேர் வெற்றி பெற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணி சார்பில் கணேஷ் பாபு மற்றும் டாக்டர் முரளிதரன் வெற்றி பெற்றனர்.

மொத்தம் 10 இடங்களில் 8 இடங்களில் தங்க கணேசன் அணியினர் வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது.

கடுமையான போட்டிக்கிடையே தங்க கணேசன் அணி வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே தங்க கணேசன் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாலகிருஷ்ணன் புதிய துணை தலைவராகவும் உதவித் தலைவர்களாக டத்தோ மோகன் ஷான், விநாயக மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசிய இந்து சங்கத்தின் புதிய செயலாளராக காண மூர்த்தி மற்றும் பொருளாளராக ஏரா பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 19-
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முன்னணி மதிப்புமிக்க உலோக வர்த்தக நிறுவனமும் Public Gold  இணைந்து கடந்த ஒரு ஆண்டில் சாதனை புரிந்த 3,000-க்கும் மேற்பட்ட Public Gold வர்த்தகர்களை கௌரவிக்கும் விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது.

இந்த பெருவிழா, மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையமான MITEC-இல் நடைபெற்றது. இதில் Public Gold குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவரான டத்தோ வீரா லூவிஸ் ஏங், மற்றும் Aurora Italia International Berhad-இன் நிர்வாக இயக்குநர் டத்தின் வீரா யுவோன் லிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

2008 ஆம் ஆண்டு பினாங்கு  புக்கிட் ஜம்பூலில் ஒரு சிறிய கடையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த Public Gold, நான்கு ஆண்டுகளில் பினாங்கின் தொழிற்சேமிப்பு பகுதியில் உள்ள விஸ்மா Public Gold-இற்கு வளம் பெற்றது.

அதனை தொடர்ந்து இன்று மெனாரா துன் ராசாக் எக்சேன்ஸ் (TRX) எனும் கட்டடத்திற்கு அறுகாமையில் Public Gold தலைமை அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும்  சுமார் 19 கிளைகள், இண்டோனேசியாவில் 6, சிங்கப்பூரில் 1 மற்றும் சமீபத்தில் துபாயிலும் ஒரு கிளையையும் அமைத்துள்ளது Public Gold.

கடந்த வருமான கணக்கின் படி Public Gold RM20.58 பில்லியன் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இதுவரையில் மொத்தம் இரண்டுமில்லியன் நபர்கள் பதிவு செய்த வாடிக்கையாளர்களாக உள்ளனர். இது, நிறுவனத்தின் வலிமை மற்றும் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது.

இந்த வளர்ச்சியின் பின்னணியில், PGBOs என்ற வியாபார முன்னோடிகள் மற்றும் நம்பிக்கையான வாடிக்கையாளர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அவர்களின் உழைப்பு மற்றும் தாராள எண்ணத்துக்கு நன்றியறிதலாக, வருடாந்திர விருது வழங்கும்  நிகழ்வு இவ்வாண்டு மிக  சிறப்பாக நடப்பட்டது.

நிகழ்வில் மொத்தம் 23 க்கும் மேற்பட்ட விருது பிரிவுகள் உட்பட, வெ15,814,963.63 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில்  780 பேர் விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டதோடு ,சிறந்த விருது பெற்றவர்களில் Triple Diamond பட்டம் பெற்ற ஜூல்கிப்லி பின் ஷாப்பி மற்றும்
நஜ்தா பிந்தி முகமது ஹுசைன்  அவர்களுக்கு வெ.877,294.84 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இவர்களின் வியாபார பெருமையை மலேசியாவிலும், பிற நாடுகளிலும் பரப்பியமைக்கு இது பாராட்டாக அமைந்தது.

ரவூப், ஜூலை 10-
ரவூப் வட்டார இந்து சங்க பேரவையின் ஏற்பாட்டில் 47ஆவது திருமுறை ஓதும் போட்டி ரவூப் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது.

திருமுறை ஓதும் போட்டி, குழு போட்டி, பதிகப்பாராயணம், பஞ்சப்புராணம், பேச்சுப் போட்டி என நடைப்பெற்ற வேளையில் இப்போட்டிகளில் 24 மாணவர்கள் பங்குக் கொண்டனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 22 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கு கொள்ள தகுதித் பெற்றதாக ரவூப் இந்து சங்கத்தின் துணைத் தலைவர் செல்வகுமாரா தெரிவித்தார்.

மாணவர்கள் மத்தியில் நமது சமயத்தை வளர்க்க இதுபோன்ற போட்டிகள் தொடந்து நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போட்டிக்கான பரிசு கோப்பைகளை திரு பார்த்திபன் நன்கொடையாக வழங்கிய வேளையில், ரவூப் இந்து ஆலய சாபா போட்டியில் கலந்து கொண்டவர்கள் உட்பட வருகையாளர்களுக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்தனர். அதுமட்டுமின்றி இந்த சமய போட்டியை நடத்த இடம் கொடுத்ததுடன் ரவூப் தமிழ்ப்பள்ளி நிர்வாக முழு ஆதரவை வழங்கியது.

இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பகாங் மாநில இந்து சங்கத்தின் பொருளாளர் மகேந்திரன், ரவூப் இந்து ஆலய சாபாவின் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வருகையளித்தனர்.

சமய போட்டிகளில் தங்களின் பிள்ளைகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களின் வருகையும் அமோகமாக இருந்ததுடன் இந்த போட்டியை முறையாக நடத்த முழு ஆதரவை அவர்கள் வழங்கியதாக ரவூப் இந்து சங்க பேரவையின் தலைவர் நவீன்ராஜ் தெரிவித்தார்.

இதற்கிடையில் மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டிக்கு தகுதிப் பெற்றவர்களுக்கு ரவூப் இந்த சங்க பேரவையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.

பெஸ்தாரி ஜெயா, ஜூலை 10-

நாளையத் தலைவர்கள் அமைப்பின் ஏற்பாட்டிலான
பாரதி பாவனை கவிதை பயிலரங்கு  சுல்தான் சுலாய்மான் ஷா இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் பல இலக்கிய ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கவிதைப் பயிலரங்கிற்கு பெருமை சேர்த்தனர்.

நிகழ்வின் தலைமை ஏற்பாடுகளை, அமைப்பின் தலைவர்  டர்வின் போஸ் சந்திர போஸ் தலைமையில் அமைப்பின் செயலவை உறுப்பினர்கள் எடுத்து நடத்தினர்.

பயிற்றுநராக அழைக்கப்பட்ட 'வளர்பிறை கவிஞர்' சிவா (சுங்கைப்பட்டணி), பாரதியின் பாவனைக்கவிதைகளை ஆழமாக பகுத்து விளக்கி, கவிஞர் பாரதியின் எண்ணங்கள், மொழி வளம், அவரது கவித்திறன் மற்றும் சமூகத்துடன் அவர் வைத்த உறவுகளைப் பற்றிய பயனுள்ள உரையையும், கவிதை பயிற்சியையும் வழங்கினார்.

நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் அவருடைய வழிகாட்டலால் பெரும் இனிமையும், இலக்கிய ஆர்வமும் பெற்றனர். சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு பயன் பெற்றுள்ளது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டர்வின் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஒரு முக்கிய தருணமாக, தமிழ் மொழிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கௌரவம் செலுத்தும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை, சந்தனமாலை மற்றும் நினைவுச்சின்னங்களை வழங்கி, அமைப்பின் தலைவர் டர்வின் போஸ் உரையாற்றியபோது,
நாளைய தலைமுறைகளுக்கு ஊக்கமாக இருந்ததற்கும், தமிழ் மீது விருப்பத்தை விதைத்ததற்கும் இவ்வாசிரியர்கள் செய்த பணி நினைவாகும். அவர்களை கௌரவிப்பது எங்கள் கடமையாகும் எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வின் முடிவில், இத்திறமையான நிகழ்வை நடைமுறைக்கு கொண்டு வந்த அனைத்து ஆதரவாளர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், சமூக ஊடகங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அமைப்பு தனது நன்றி பாராட்டுக்களை தெரிவித்தது.

கடந்த ஆறு முறை நிகழ்வை ஏற்பாடு செய்தும் வெற்றிகரமாக நடத்த முடியாமல் பின்னடைவை சந்தித்த அமைப்பு, இந்த முறையில் விடாமுயற்சியின் மூலம் இலட்சியத்தை நனவாக்கியமை அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இவ்வேளையில் இந்நிகழ்விற்கு நன்கொடை வழங்கி  பேருதவி ஆற்றிய இயக்கவியல் அமைச்சர் மாண்புமிகு கோபின் சிங் டியோ அவர்களுக்கும், செந்தில் குமார் டத்தோ முருகையா மற்றும் திரு.எஸ். சுஹன் சுப்பிரமணியம்  அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இந்நிகவிற்கு முழு ஆதரவு வழங்கி முழு ஊக்குவிப்பு வழங்கிய
பகாங் மாநில ஆசிரியர் திரு.ஜெயஸ்ரீ செல்வேந்திரன் ஜெயசிங் தனபல்,
அமைப்பின் தோற்றுனர் சந்திர போஸ் மணிவேலு, ஆலோசகர் அங்கமுத்து ராமசாமி, சுல்தான் சுலாய்மான் ஷா இடைநிலைப்பள்ளி
மண்டப நிர்வாகம் மற்றும்  சுல்தான் சுலாய்மான் ஷா இடைநிலைப்பள்ளி
தமிழ்மொழி ஆசிரியர் பெருமாள்
ஆகியோருக்கு அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தலைவர் டர்வின் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6-
தரமான உணவு நாம் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்றால் நாம் மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். ஆகையால் மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள சைக்கிளில் உலக முழுதும் சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய தாம் தயாரிவிட்டதாக இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கூறுகிறார்.

அந்த வகையில் இந்தியாவில் 20 மாநிலங்களை கடந்து தற்போது மலேசியாவை வந்தடைந்துள்ளதாகவும் இந்த பயணம் நியூயார்க் வரை தொடரும் என்றார் அவர்.

இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள இஷா யோகா நிலையத்தில் சஹிலின் சைக்கிள் பயணத்தை மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்தை வரவேற்கும் வகையில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. சஹிலுக்கு பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் சிறப்பு செய்தார்.

சத்குரு-வின் மண்ணை காப்போம் என்ற பிரச்சாரம் தன்னை ஈர்த்ததாகும், 65 வயதுடைய அவரே இந்த பிரச்சாரத்திற்காக மோட்டார் சைக்கிளில் வளம் வந்தது தன்னை கவர்ந்து இந்த பிரச்சாரத்தை என்னையும் முன்னெடுக்க செய்ததாக சஹில் தெரிவித்தார்.

மண்ணை காப்போம் என்ற பிரச்சாரத்திற்காக உலக நாடுகளுக்கு சைக்கிளில் பயணம் செய்யவிருப்பதாக கூறியபோது பெற்றோர் அதனை மறுத்தனர். இருந்தும் கொஞ்ச பணத்துடன் இந்த பிரச்சாரத்தை தாம் தொடர்ந்ததாக அவர் சொன்னார்.

இயற்கை வழங்கிய மண் வளத்தை நாம் காக்க மறந்தால் வருங்காலத்தில் மண் வளத்தை இழந்து விடும். நம்மாலும் ஆரோக்கியமான உணவை உண்ண முடியாது. அதுமட்டுமின்றி 2008 முதல் 2013 வரை மலேசிய மண் வளம் 58% விழுக்காடு குறைந்துள்ளது. இது பிற நாடுகளை காட்டிலும் பரவாயில்லை என்றாலும் தற்போது உள்ள நிலை நீடித்தால் இங்கு மட்டுமல்ல உலக முழுவதிலும் நம்மால் இயற்கை உணவு பெற முடியாது நிலை ஏற்படும்.

தற்போது மேற்கொள்ளப்படும் விவசாய முறையில் செடிகள் செழிப்பாக இருக்க ரசாயண கலந்த உரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு செழிப்பான உற்பத்தியை விளைவித்தாலும் மண் வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேம்பாடு கண்ட பல நாடுகளில் பல கட்டடங்கள் அதன் சிறப்பாக உள்ளன. இது அந்த நாட்டிற்கு பெருமை அளிப்பதாக நாம் நம்புகிறோம். ஆனால் அந்த நாடுகள் மண் வளத்தை இழந்து வருகின்றனர். எவ்வளவுதான் உயரமான கட்டடங்கள் இருந்தாலும் கூட ஆரோக்கியமான உணவுகள் கிடைக்காத பட்சத்தில் அந்த நாடுகள் பஞ்சத்தை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

ஆகையால் ஆரோக்கியமான வாழ்க்கை நாம் தொடர்ந்து வாழ மண் வளத்தை காப்போம் என சஹில் தெரிவித்தார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவிலிருந்து அவர் ஈப்போவிற்கு பயணிக்கிறார். அதனை தொடந்து மறுநாள் பினாங்கிலிருந்து நாட்டை கடந்து அவரின் பயணம் நியூயார்க் வரை தொடரவுள்ளது.

-காளிதாசன் தியாகராஜன் / காளிதாசன் இளங்கோவன்

வட அமெரிக்கா, ஜூலை 4-
வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் பேரமைப்பு (FeTNA) 38-வது தமிழ் மாநாட்டின் முதல் நாளான இன்று, Raleigh மாநாட்டு மையத்தில், முதன்மை உரை வழங்கியதில் மகிழ்ச்சி என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

FiTEN - FeTNA International Tamil Entrepreneur Summit, உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டின் தொடக்க நிகழ்வுடன் தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து திரண்டுள்ள நமது சமுதாயத்தின் திறமைமிக்க தொழில்முனைவோர், பார்வையாளர்கள், நவீன சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டை ஒரு உலகத் தரத்திலான தீர்வுகளை உருவாக்கும் தளமாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என அவர் சொன்னார்.

நாளைய தலைமுறை எதிர்கொள்ளும் மாற்றங்கள், சவால்கள் எதுவாக இருந்தாலும், நமது பாரம்பரியத்தையும், மொழி மற்றும் கலாச்சாரத்தை முன்வைத்து, தொழில் முனைவோர்களின் மூலமாக நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க இலக்கியத்தின் உயிருள்ள செய்தியை மறுபடியும் உலகிற்கு நினைவூட்டும் விதமாக, இந்த மாநாடு அனைவருக்கும் திறந்தவெளி தளமாக அமைந்துள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

லண்டன், ஜூலை 3-
லிவர்பூல் அணியின் பிரபல தாக்குதல் ஆட்டக்காரரான டியோகோ ஜோத்தா கார் விபத்தில் சிக்கி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டியோகோ ஜோத்தாவின் மரண
செய்தி உலக அளவிலான கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

28 வயதான டியோகோ ஜோத்தா தனது 26 வயதான தம்பி ஆண்ட்ரே சில்வாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அவர் செலுத்திய கார் A-52 நெடுஞ்சாலையில் உள்ள Palacios de Sanabria என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியது.

இந்த விபத்தில் சிக்கிய
இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தகவலை தெரிவித்தனர். 

மேலும் மருத்துவரகள் அக்காரில் பயணித்த டியோகோ ஜோத்தா மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும்  இறந்ததை உறுதிப்படுத்தினர்.

கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி, தனது நீண்ட காலத் துணைவி ரூட் கார்டோசோவைத் திருமணம் செய்த இரண்டு வாரங்களுக்குள் இந்தத் துயரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டியோகோ ஜோத்தா -  ரூட் கார்டோசோவா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களிடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வேளையில் சமூக ஊடகங்களில் அவரின் உயிரிழப்புக்கு வீரர்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 3-
13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக 11 பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

கல்வி, பொருளாதாரம்,  தொழில் திறன் பயிற்சி தொடர்பாக இந்த பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக நான்கு பயிற்சி பட்டறைகள் நடத்தி ஆய்வுகளை திரட்டினோம்.
சமுதாயத்தின் கருத்துகளை கேட்டறிந்து அதன் பின்னர் இந்த 11 பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டது.

இந்த பரிந்துரைகளை பொருளாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மியிடம் ஜூன் 23 ஆம் சமர்ப்பித்து விட்டோம் என்று அவர் சொன்னார்.

மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஒரு சமமான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதேசமயம் மித்ரா மீதான நம்பிக்கையை மீண்டும் தட்டியெழுப்ப வேண்டும்.

மேலும் கல்வியை பாதியிலேயே கைவிடும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது பெரும் கவலை அளிக்கிறது.

இதற்கு உடனடியாக சிறந்த  தீர்வு காண வேண்டும். ஒரு கல்வி கற்ற சமுதாயமாக இந்தியர்கள் இருக்க வேண்டும்.

இந்திய மாணவர்கள் கல்வியை முழுமையாக முடிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி கல்வி வழங்கப்பட வேண்டும்.
இதன் வழி அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். அதேசமயம் அனைத்து குழந்தைகளுக்கும் பாலர்பள்ளி கல்வி  கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் வணிக துறை, பசுமை தொழில்நுட்ப துறை, இளம் தொழில் முனைவோர் துறையில் இந்தியர்கள் அதிக அளவில் கால் பதிக்க உதவிட வேண்டும். கல்வி, பொருளாதரத்தில் பின் தங்கி விட்ட இந்திய சமுதாயத்திற்கு உதவிட அரசாங்கம் முன் வர வேண்டும்.

மக்கள் தொகையில் 6.1 விழுக்காடாக இருக்கும் இந்திய சமுதாயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறந்த நிலையில் இருக்க நமது மாணவர்கள், இளைஞர்கள், மகளிர்கள் உருமாற்றம் பெற வேண்டும்.

குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ் பள்ளிகள் இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்வது இந்த பரிந்துரையில் முக்கிய அங்கமாகும்.

அதேசமயம் பாலர் பள்ளிகள் இல்லாத தமிழ்ப் பள்ளிகளில் கண்டிப்பாக பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.

பிரதமர் துறை அமைச்சின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனுடன் இணைந்து அரசு சார்பற்ற இயக்கம்  இந்த பரிந்துரைகள் தயாரிப்பில் பங்கு எடுத்ததாக அவர் சொன்னார்.

இன்று பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங் மகாராஜா உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர்,ஜூன் 30-
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 38-ஆவது தமிழ் விழாவில் பங்கேற்கும் பொருட்டு, மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமையில் எண்மர் அடங்கிய குழு இன்று அமெரிக்கா நோக்கி புறப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவின் முதல் நாளில், உலகத் தமிழர்கள் ஒன்றும் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முன்னிறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

இந்த நிகழ்வில், உலகத் தமிழர்களின் ஆளுமையான முக்கியப் பிரமுகராக, டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரையாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அவர் நேற்று நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கலந்துகொண்டார். இன்றைய தமிழ் விழாவிலும் பங்கேற்கும் வகையில் அமெரிக்கப் பயணமாகியுள்ள அவர், உலகளவில் தமிழ் மொழியையும் தமிழர் கலாச்சாரத்தையும் பறைசாற்றி வருவது பெருமைக்குரியது.

கோலாலம்பூர், ஜூன் 30-
நாட்டின் முதன்மை கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டில் வெ.40 மில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன் தெரிவித்தார்.

நாட்டில் மிகவும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் சங்கங்களில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் விளங்கி வருகிறது.

கூட்டுறவு சங்கம் தனது அங்கத்தினர்களுக்கு பலவிதமான சலுகைகள் நன்மைகள் வழங்குவதால் மலேசிய கூட்டுறவு ஆணையம் நமது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தை மிகவும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் சங்கங்களில் ஒன்றாக மதிப்பீடு செய்துள்ளது.

மேலும் மலேசிய கூட்டுறவு ஆணையம் நமது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தை 3 ஆவது இடத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் இரு இடங்களில் அரசாங்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இதற்கு அடுத்த படியாக தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் வெற்றிகரமாக வளர்ச்சிக்கு அங்கத்தினர்களின் பேராதரவு முக்கிய காரணம் ஆகும்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் கடந்த 57 ஆண்டுகளாக பலவிதமான சலுகைகளை அங்கத்தினர்களுக்கு வழங்கி வருகிறது என அவர் சொன்னார்.

இன்று பெட்டாலிங் ஜெயா ஆர்மாடா தங்கும் விடுதியில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் 57 ஆவது ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈடு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு சந்தாதாரர்கள் முதலீடு செய்த தொகையிலிருந்து 50 விழுக்காட்டை கூட்டுறவு சங்கம் அவர்களுக்கு போனாஸாக வழங்கியது. அதேபோல் இவ்வாண்டு மேலும் 50 விழுக்காட்டை போனஸாக வழங்கவுள்ளதாகவும் இது 60 ஆயிரம் அங்கத்தினருக்கும் நன்மை அளிக்கும் என்றும் அவர்  சொன்னார்.

கோலாலம்பூர், ஜூன் 29-
இந்திய மாணவர்கள் கல்வியில் வெற்றிப் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் கடந்த 43 ஆண்டுகளாக எஸ்எம்சி கல்வி நிலையத்தை டான்ஸ்ரீ தம்பிராஜா வழிநடத்தி வந்துள்ளார்.

கல்விக்காக அவர் செய்த புரட்சி இன்று பல பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

அவரின் மறைவு நமக்கு வருத்தத்தை அளித்தாளும் அவர் சொல்லிச் சென்ற வார்த்தைகள் நமக்கு தொடர்ந்து ஊக்குவிக்கும் என சுரேந்திரன் கூறினார்.

அவரின் பாதையில் செல்லும் அனைத்து மாணவர்களின் வெற்றிதான் அவரின் ஆத்மாவை சாந்தியடைய வைக்கும் எனவும் சுரேந்திரன் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா தமது 83 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மறைவை முன்னிட்டு இன்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப் பள்ளியில் நினைவஞ்சலி பிரார்த்தனை நடைபெற்றது.

டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜாவின் புதல்வி சுமித்ரா இதில் கலந்து கொண்டார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் , மாணவர்கள்,  பெற்றோர்கள் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜாவுக்கு கண்ணீரோடு அஞ்சல் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்துகேவ்ஸ், ஜூன் 28-
ஆலயப் பிரச்சினைகளை முறையாக கையாளுவதற்கு  இந்து புளூபிரிண்ட் ஒன்றை தயார் செய்யும் பணிகளை மஹிமா துரிதமாக மேற்கொண்டு வருகிறது என்று மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

இந்தியர் புளூபிரிண்ட் எனப்படும் திட்ட வரைவு குறித்து பேசப்பட்டு வரும் வேளையில் மஹிமா  இந்துக்களுக்கு என புளூபிரிண்ட்டை தயார் செய்யும் முயற்சியில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மஹிமாவின் துணைத் தலைவர் வழக்கறிஞர் டத்தோ செல்வம் மூக்கையா வாயிலாக இந்த திட்டம் மிக  துரிதமான முறையில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில்  இந்து சமயம், ஆலயங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் புகைந்து வருகிறது.
இந்த பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இது வரையில் எடுக்கப்பட வில்லை.

இப்பிரச்சினைகள் அனைத்திற்கும்   முழுமையாக தீர்வு காணும் வகையில்  இந்த புளூபிரிண்ட் மிகவும்  அவசியமானதாக அமையும் என நம்பப்படுகிறது.

அதே வேளையில் மஹிமாவின் கீழ் சட்ட பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்கஞர் ஸ்ரீதரன் தலைமையேற்பார் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன்

தெலுக்கிந்தான், ஜூன் 25-

ஹிலிர் பேராக் சமூக நலன் இயக்கம் மற்றும் மலேசிய இலக்கவியல் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பேராக் மாநிலக கலை கலாச்சார  இலாகாவின் ஆதரவோடு ஒரு சிறப்பான கலை கலாச்சார இரவு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 29 ஆம் தேதி 2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தெலுக்கிந்தான் ஜலான் மகாராஜா லேலாவில் உள்ள A2Z இவென்ட் ஸ்பேஸ், அரங்கத்தில் நடைபெறவுள்ளது என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான சிவபாலன் தெரிவித்தார்.

தமிழ், தெலுங்கு, வைசாகி மற்றும் விசு
புத்தாண்டுகளின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க இந்திய பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், அதிர்ஷ்டச்சீட்டு நிகழ்வு (lucky draw) மற்றும் பாரம்பரிய உணவுவிருந்து போன்ற பல்வேறு கலை, கலாச்சார அம்சங்கள் இந்நிகழ்ச்சியில்  இடம்பெறவுள்ளன.

மேலும் இந்நிகழ்ச்சி குறித்த விவரங்கள் பெறுவதற்கு 0165474402 / 011-36270047/ 012-5565553 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

செந்தூல்,ஜூன் 25-
ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் அரசுகவி கவியரசு கண்ணதாசன் நினைவுகளோடு இம்மாதம் 29ஆம் தேதி, ஜாலான் ஈப்போ செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில், பிற்பகல் ஒன்றரை மணிக்குத் தொடங்குகிறது.

மங்கல இசையுடன் தொடங்கும் இவ்விழாவில், செயலாளர் கரு.கார்த்திக் அவர்களின் வரவேற்புரை, கவிஞர் கோவதன் அவர்களின் கவிதை, கவிஞர்  பெர்னாட்ஷா அவர்களின் 'வள்ளுவன் வழியில் கண்ணதாசன்' எனும் தலைப்பில் உரையும் முதல் அங்கமாக இடம்பெறும்.

தமிழ்நாட்டில் இருந்து சிறப்புச் சொற்பொழிவாளர்கள் தமிழ்ச்சுடர் தாமல் கோ.சரவணன் மற்றும் இசைவாணி திருமதி.இந்திரா விஜயலட்சுமி அவர்கள் 'காலத்தால் அழியாத காவியம்' மற்றும் 'சமூகத்தின் பழுது போக்கிய கவியரசர்' எனும் தலைப்புகளில் முறையே பேசுவார்கள்.

ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவில், ஐந்து மலேசிய இந்தியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவர். மொழி இனம் கலை கலாச்சாரம் என்ற அடிப்படையில் பிரசித்தி பெற்றவர்களுக்கும், மக்களுக்குச் சேவையாற்றியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 250க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த வருடமும் ஐந்து பேர் இந்த விருதைப் பெறவிருக்கிறார்கள்.

மதிப்பிற்குரிய டத்தோ ஸ்ரீ தெய்வீகன், ஓவியர் லேனா, கமல சரஸ்வதி, விஜய வாகினி மற்றும் எல்.ராமன் அவர்களுக்கு இந்த வருடம் விருது வழங்கப்பட விருக்கிறது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும், கண்ணதாசன் அரவாரியத்தின் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்கள் கண்ணதாசன் விழாவிற்குத் தலைமை தாங்கி தலைமை உரையாற்றி தொடக்கி வைப்பார். உலகத் தமிழர்களின் மத்தியில் பிரசித்தி பெற்ற டத்தோ ஸ்ரீ அவர்களின் உரையும் இதில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய ஆர்வலர்களும், தமிழன்பர்களும், கண்ணதாசன் பிரியர்களும் தவறாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

வாஷிங்டன்,ஜூன் 24-
இஸ்ரேல் ஈரான் இடையே மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின.

இதற்கு பதிலடியாக நேற்றிரவு(ஜூன் 23) ஈரான் ஏவுகணைகளால் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று(ஜூன் 24) இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும் என டிரம் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,ஜூன் 24-
இஸ்ரேல் ஈரான் இடையே மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின.

இதற்கு பதிலடியாக நேற்றிரவு(ஜூன் 23) ஈரான் ஏவுகணைகளால் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று(ஜூன் 24) இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும் என டிரம் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.


செரண்டா, ஜூன் 22-
நம் இனத்தில் குறைகளை பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தால் நம்மால் சாதனை படைக்க முடியாது. குறை பேசுவதை தவிர்த்து விட்டு சாதனை படைப்பதற்கு நாம் முக்கியதுவம் வழங்க வேண்டுமென உலு சிலாங்கூர் பிகேஆர் தொகுதித் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் வலியுறுத்தினார்.

நாம் சாதனை படைக்க நம் இனத்தில் ஒற்றுமை மிகவும் அவசியமாகும். ஒற்றுமையாக செயல்பட்டால் நம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சொன்னார்.

இன்று மலேசிய இந்து சங்கம் புக்கிட் சொந்தோசா வட்டார பேரவையின் ஏற்பாட்டில் செராண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 47ஆவது திருமுறை ஓதும் விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

மாணவர்கள் மத்தியில் முன்னேற்றத்தையும் சமய கல்வியையும் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. சமய கல்வியை கற்ற மாணவர்கள் ஒருபோதும் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள். ஆகையால் சிறு வயதிலேயே மாணவர்களை நாம் சமய கல்வி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும்.

இந்திய மாணவர்கள் மத்தியில் சமயம், பண்பாடு, இனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி தெரிவிக்க வேண்டுமென அவர் சொன்னார்.

இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமுறை ஓதும் போட்டி, தேவாரம், வர்ணம் தீட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Recent News