loader

All News

செபுத்தே, ஏப் 17-
தனது அரசியல் வாழ்வில் கட்சியில் உறுப்பினராக தனது மக்கள் சேவையை தொடங்கியவர் அனிதா வேலாயுதம் பிள்ளை.

கடந்த 10 வருடங்களாக கட்சியிலிருந்து பொது மக்களுக்கும்
செபுத்தே தொகுதி மக்களுக்கும் இவர் வழங்கிய சேவைகள் அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை செபுத்தே கெஅடிலான் தொகுதி தலைவராக வெற்றி பெற்றதே அதற்கு தக்க சான்றாக விளங்குகிறது.

வருகின்ற 19 ஏப்ரல் 2025-இல் நடைபெறவிருக்கும் செபுத்தே கெஅடிலான் தொகுதி தேர்தலில் அனிதா தனது தொகுதி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார்.

தனது தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளையும் தூரநோக்கு திட்டங்களையும் வழங்குவதற்கே மீண்டும் செபுத்தே கெஅடிலான் தொகுதித் தலைவருக்கு போட்டியிடுவதாக அனிதா வேலாயுதம் பிள்ளை கூறினார்.

மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த இவர் கெஅடிலான் கட்சி ஸ்ரீகண்டி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

கட்சியின் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் சேவையாற்றிருப்பதாக கூறிய இவர், மக்களுக்கும் கல்வி உதவி, மருத்துவ உதவி, இயற்கை பேரிடர் கால உதவி என கால நேரம் பாராமல் சேவையை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செபுத்தே தொகுதி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு இன, மத பேதமின்றி தொடர்ந்து சேவையாற்றுவேன் என்றார் அனிதா.

மேலும் ஒற்றுமை மடானி அரசாங்கத்தின் கொள்கைப் படி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மாற்றங்களையும் திட்டங்களையும் கொண்டுவர லட்சியம் கொண்டுள்ளதால், தொகுதியிலுள்ள உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை தனக்களித்து மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று அனிதா கேட்டுக் கொண்டார்.

இவரை தொடர்ந்து அனிதா அணியிலிருந்து டத்தோ டாக்டர் வோங் ஏங் யுவான் துணைத் தலைவருக்காவும் மற்றும் ஹிஷாமுடின் முகமட் ஹல் ஹஜா உதவித் தலைவருக்காக போட்டியிடுகிறார்கள்.

கோலாலம்பூர், ஏப்.18-
பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் தம்பி அப்துல்லா பகுதியில் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி லிட்டில் டாக்காவாக மாறிவருகிறது என டத்தோ கலைவாணர் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்பாக கடந்த 12 ஆம் திகதி அன்று சம்பந்தப்பட்ட இடத்தில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய டத்தோ கலைவாணர், அந்நியர்கள் சட்டத்திற்கு புறம்பாக மாளிகை கடைகள், உணவகங்கள், முடித்திருத்தும் கடைகள் போன்றவற்றை இங்கு நடத்தி வருவதாகவும், இது உள்நாட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாகவும்   தெரிவித்திருந்தார்.

மேலும் அவர்கள் அங்கு சட்ட சட்டவிரோத சிகரெட்டுகள், மதுபானங்கள், உள்நாட்டு அரிசி மற்றும் சமையல் எண்ணெய்களை வியாபாரம் செய்து வந்தததை ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் அம்பலப்படுத்தினார்.

இந்த செய்தி தொடர்பான காணொளி நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில மலாய் ஊடகங்கள் மற்றும் தமிழ் ஊடகமான தமிழ் லென்ஸ்சின் டிக் டாக் கணக்கிலும் பகிரப்பட்டிருந்தது. தமிழ்லென்ஸ்சில் பகிரப்பட்ட அந்த காணொளியை இதுவரையில்  சுமார் 1.1 மில்லியன் மக்கள் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, மாநில அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கலத்தில் இறங்கி அதிரடி சோதனைதை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடத்தப்பட்ட் அதிரடி சோதனையின் வழி  அங்கு செயல்பட்டு வந்த சட்டவிரோத கடைகள்  மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் சில கடைகள் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு இருந்த பல சட்டவிரோத குடியேறிகளும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்று டத்தோ கலைவாணர் நேரடியாக காலத்தில் இறங்கி இந்த நடவடிக்கைதை மேற்கொண்டது மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு விவகாரத்திலும் நேரடியாக களத்தில் இறங்கி செயல்படுவது டத்தோ கலைவாணர் அவர்களின் கொள்கையாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இத்தனை நாட்களாக சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு அந்த இடத்தில்  ஆதிக்கம் செய்துக்கொண்டிருந்த அந்நியர்களின் ஆணவத்தை அடக்கி காட்டியுள்ளார் டத்தோ கலைவாணர்.

இந்த இவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஏப்.16-
ஜாலான் செராஸ் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் (பெர்தாமா) கூட்டு முயற்சியாக அறிமுகம் செய்யும் 'வாசிப்பை நேசிப்போம்' 61 நித்திரை கதைகள்  திட்டம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை வளப்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த அற்புதமான கூட்டு முயற்சியில் முன்னாள் மாணவச் சங்கங்களையும் சமூகத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, நித்திரை கதைகள் தொகுப்பை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் இளைய தலைமுறையை ஒரே  இலக்குடன் செயல்பட பெரிதும் ஊக்குவிக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதுடன் கதை சொல்லும் களத்தை உருவாக்கி, மாணவர்களின் மொழி ஆற்றலை மேம்ப்படுத்த முடியும்.

இந்த வாசிப்பை நேசிப்போம்- 61 நித்திரை கதை புத்தகத்தை ஆசிரியர்கள் நிரோஷா கோபால், கஸ்தூரி ராமலிங்கம் ஆகியோர் எழுதி தயாரித்துள்ளனர்.

இந்த வாசிப்பு திட்டத்தின்அறிமுக விழா இன்று பிரிக்பீல்ட்சிலுள்ள அன்னலட்சுமி உணவகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தொழில் முனைவோத் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சரின் மூத்த செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் தொடக்கி வைத்தார்.

ஆகவே நித்திரைக் கதைகள் எனும் புத்தகத்தை வாங்கி உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கோ வாங்கி தாராளமாக வழங்கலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

மேல் விவரங்களுக்கு  017-6834685 என்ற எண்ணுடன் பார்த்திபன் ராமசந்திரனை தொடர்புக் கொள்ளலாம்.

கோலாலம்பூர், ஏப்.16-
நாட்டில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பொது கருத்தை வெளியிட மக்கள் பயம் கொள்கின்றனர். ரேபோமாஸி என்ற சொல்லுக்கு இப்பொழுது இடமில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.

மதம், இனம், அரசர் குறித்து பேசக்கூடாது  என்ற 3R சட்டம் அமலுக்கு வந்த பின்னர் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் சுதந்திரமாக தங்களின் கருத்துகளை வெளிப்படுத்த தயங்குகின்றனர்.

தப்பி தவரி இந்த மூன்று விஷயங்களை பற்றி பேசினால் விசாரணை, தடுப்புக் காவல், தண்டனை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைய சூழலில் இந்த மூன்று விஷயங்கள் சார்ந்துதான் பல பிரச்சினைகள் எழுந்த வண்ணமாக உள்ளது என மகாதீர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சில தனிநபர்களின் குற்றத்தைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் தற்போது தங்கள் திறனுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படவில்லை.

அதற்கும் மேலாக, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தனிநபர்களின் வழக்குகள் நிறுத்தப்பட்டது மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறியுள்ளார்.

ரேபோமாஸி என்ற சொல் தற்போது மக்களின் வாயை மூட வைத்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை சாடி அவர் கருத்தை பதிவுசெய்துள்ளார்.

கோலாலம்பூர்,ஏப்.16-
2025 பிகேஆர்  தேர்தல் தற்போது  பரபரப்பாக களைகட்டி வருகிறது. குறிப்பாக, புக்கிட் பிந்தாங் தொகுதியில் நடைபெறும் ஐந்து முனைப் போட்டி  மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.  

இந்த தொகுதியில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களில் சிவமலர் கணபதி பேராளர்களின் தேர்வாக இருக்கிறார்.

15 ஆண்டுகளாக பிகேஆர் கட்சியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சிவமலர், சமூகப் போராளியாகவும் மனித உரிமை வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். தற்போது சிவமலர், கட்சியின் மத்திய கட்டொழுங்கு வாரியத் துணைத்தலைவராகவும்,  கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷலிஹா முஸ்தாபாவின் (Dr. Zaliha Mustafa)   சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.

தொகுதி வாக்குப்பதிவு, ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநில வாரியாக நிகழும் இந்த தேர்தலில், கூட்டரசு பிரதேச பகுதியில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தேர்தல் குழுவின் அறிவிப்பின்படி, கூட்டரசு பிரதேச வாக்குப்பதிவு ஆன்லைன் வாயிலாக  மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் கலமிறங்கியுள்ள சிவமலர் கணபதி கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட உறுப்பினராவார். இம்முறை இவர் தொகுதிக்கு போட்டியிடுவதை கட்சியின் தலைமைத்துவம் வரவேற்பதாக தெரிகிறது. இவருக்கான ஆதரவும் பெருகி வருவதாக நம்ப தகுந்த வட்டரங்கள் தெரிவித்துள்ளன.

கோலாலம்பூர், ஏப். 15-

மனிதவள அமைச்சின் எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநராக எனது பயணத்தை மிகுந்த பெருமையுடனும் நன்றியுடனும் நிறைவு செய்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் அமிட் தாவூத் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகள் உண்மையிலேயே நிறுவனத்திற்கும் எனக்கும் உண்மையிலேயே நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இது துணிச்சலான லட்சியம், தீர்க்கமான நடவடிக்கை, வாழ்வின் அர்த்தமுள்ள பயணமாகும்.

நான் முதன் முதலில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது எச்ஆர்டி கோர்ப்பை மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டிற்கான ஒரு தெளிவான குறிக்கோளால் உந்தப்பட்டேன்.

இன்று அந்த பணியை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் நான் கற்பனை செய்து பார்க்க முடியாத வழிகளில் அதை மீறி எச்ஆர்டி கோர்ப்பை மேம்படுத்திய பெருமிதத்துடன் நான் வெளியேறுகிறேன்.

இவ்வேளையில் எங்களது உள்நாட்டு, அனைத்துலக பங்குதாரர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எச்ஆர்டி கோர்ப் வாயிலாக சேவை செய்யவும், வழிநடத்தவும், கட்டமைக்கவும் வாய்ப்பளித்ததற்கு இறைவனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் அமிட் தாவூத் கூறினார்.

உலு சிலாங்கூர், ஏப்.13-

நேற்று சிலாங்கூர் மாநிலத்தில்  பி.கே.ஆர் கட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில்  உலு சிலாங்கூர் தொகுதியில் 3,016 வாக்கு பெற்று  மாபெரும் ஆதரவோடு டாக்டர் சத்ய பிரகாஷ் தனது தலைவர் பதவியை தக்க வைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் தொகுதி தலைவர் ஜூன் 993 வாக்குகள் பெற்ற நிலையில்  கலைச் செல்வன் 609 வாக்குகள் பெற்றார்.

அந்த தொகுதியை பொறுத்தவரை 5,538 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். அதில் 4,618 பேர் வாக்கு அளித்துள்ளனர்.

இதற்கு முன் டாக்டர் சத்ய பிரகாஷ்  தேசிய உதவித் தலைவர் பதவிற்கு தான் பேட்டியிட உள்ளதாக அறிவித்த நிலையில், துணை  அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

டத்தோஸ்ரீ ரமணன் தனது சுங்கை பூலோ தொகுதியில் போட்டியின்றி தேர்வு பெற்ற நிலையில், கடந்த வாரம் வரை  டாக்டர் சத்ய பிரகாஷை விட முன்னிலையில் இருந்தார்.

முன்முனை போட்டியில் பல தடைகளைத் தாண்டி டாக்டர் சத்ய பிரகாஷ் தனது தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இப்போது ஒரு படி முன்னேறி அவரும் கலத்தில் சமநிலையில் வந்துள்ளார்.
தனது அடுத்த கட்ட இலக்காக உதவி தலைவர் பதவிற்கான தேர்தலை  எதிர்கொள்ள  தயாராகிவிட்டார்.

நாடு தழுவிய நிலையில் தமக்கு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும் அவர்களின் ஆலோசனையின் பெயரில் தாம் முதல் முறையாக  உதவி தலைவர் பதவிற்கு போட்டியிட உள்ளதாக டாக்டர் சத்ய பிரகாஷ்  அன்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

அந்த வகையில் தேசிய ரீதியான தனது அரசியல் கலத்தை நோக்கி தனது பயணத்தை தீவிர படுத்தியுள்ளார் டாக்டர் சத்ய பிரகாஷ்.

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர், ஏப். 12-
செந்தூல்  கேடிஎம் குடியிருப்பில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வெ.42 ஆயிரம் மதிப்புடைய வீடுகளை கட்டித் தருவதாக மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய வாக்குறுதி என்ன ஆனது? 12 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதிகள் நிரைவேற்றப்படவில்லை என மக்கள் கூறினர்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் கேடிஎம் குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கு 21 மாடிகள் கொண்ட வீடுகளை கட்டி தருவதாக ஓய்டிஎல் நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது.

மூன்று ஆண்டுகளில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது என்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி ஈஸ்வரி தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அப்போது நிறுவப்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற விளம்பர அறிவிப்பு பலகை அப்படியே உள்ளது.

ஆனால் இதுவரை எந்தவொரு வீடும் கட்டப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இப்போது எங்களுக்கு வாக்குறுதி கொடுத்த இடத்தில் வீடுகள் கட்டப்படவில்லை.

மாறாக வேறு இடத்தில்  வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளில் குடியேறும் படி மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டது.

ஆனால் இந்த புதிய வீடுகளை பார்க்க அனுமதி இல்லை. உள்ளே செல்லவும் அனுமதி இல்லை.

நிபந்தனை அடிப்படையில் வீடுகளை தருகிறோம் என்று நிறுவனம் கூறுகிறது.

இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்களிடம் மகஜரை வழங்கினர்.

மகஜரை பெற்றுக் கொண்ட பிரபாகரன் இந்த விவகாரம் தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறினார்.

பல ஆண்டுகளாக இந்த மக்கள் வீடு கிடைக்குமென்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை எந்த பதிலும் இல்லை. இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சொன்னார்.

தாப்பா, ஏப்.12-
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனை போட்டி எழுந்துள்ளது.

தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் யுஸ்ரி பக்ரி (எண்1), பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலிக் (எண் 2), பிஎஸ்எம் வேட்பாளர் பவானி கன்னியப்பன் (எண் 3) ஆகியோர் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதை தொடர்ந்து இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

இன்று காலை தாப்பா டேவான் மெர்டேக்காவில் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ள மூன்று வேட்பாளர்களின் கட்சி ஆதரவாளர்கள் இங்கு திரண்டனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஏப்.10-
பிபிபி கட்சியின் வலிமையை உறுதிப்படுத்தவும் அதனை வெளிப்படுத்துவும் காலம் வந்து விட்டது. இன்னும் இரு ஆண்டுகளில் அரசியல் வட்டாரத்தில் நம் கட்சி வலுவான கட்சி என்பதை நாம் காட்டுவோம் என அதனை தேசியத் தலைவர் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

கடந்த 1953ஆம் ஆண்டில் பிபிபி கட்சி தொடங்கப்பட்டது. இக்கட்சி தொடங்கப்பட்டு தனிச்சையாகவும் வலுவான கட்சியாகவும் செயல்பட்டது.

கடந்த 1974ஆம் இக்கட்சி தேசிய முன்னணியின் தோழமைக் கட்சியாக இணைந்தது. அந்த சமயம் அது அதன் தனித்துவத்தை இழந்தது. அதன் பிறகு 1993ஆம் ஆண்டு சிறந்த தலைமைத்துவம் கிடைத்தது. கட்சியும் வலுவாக செயல்பட்டது.

அதன் பிறகு தலைவர் கட்சியின் கொள்கையின் பாதையிலிருந்து விலகினார். அதன் பின்னர் கட்சியில் பல பிரச்சினைகள். நீதிமன்ற வழக்குகளையும் கட்சி சந்தித்தது.

இதனால் கடந்த 6 ஆண்டுகளாக நிறைவு ஆண்டு விழா நடைப்பெறவில்லை.

ஆனால் இன்று கட்சி முறையான தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாக செயல்படுவதாக பிபிபி தலைமைத்துவ கட்டத்தின் முன் புறத்தில் நடைப்பெற்ற கட்சியின் 72ஆம் ஆண்டு விழாவில் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

நம் கட்சி அரசியல் வட்டாரத்தில் வலுவான கட்சி என்பதை தெரியப்படுத்த நமக்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ளன. அடுத்த பொதுத் தேர்தலில் நாம் யார் என்று கட்டுவோம் என்றார்.

கட்சியை வலுப்படுத்த என்னால் மட்டும் முடியாது. ஒரு கையத் தட்டினால் ஓசை வராது. ஆகையால் கட்சியின் தலைமைத்துவம், மாநில தலைவர், உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவரும் கடுமையாக செயல்பட்டு நம் கட்சியின் வலுவை வெளிப்படுத்துவோம் என இந்நிகழ்ச்சியில் அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்/ படம்: காளிதாசன் இளங்கோவன்

ஷா ஆலம், ஏப். 10-
உலு சிலாங்கூரிலுள்ள இந்துக்களின் நீண்ட கால  கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மின் சுடலையை அமைப்பதற்கான திட்டத்தை மாநில அரசு உறுதி செய்துள்ளது.

சுமார் 17 லட்சம் வெள்ளி செலவிலான இந்த மின்சுடலையை கோலகுபு பாருவில் அமைப்பதற்கு நிர்வாணா குழுமம் இணைக்கம் தெரிவித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

இன்று காலை நான் நிர்வாணா மலேசியா குழுமத்தின் துணைத் தலைவருடன் சந்திப்பு நடத்தினேன். அந்த சந்திப்பில் கோலகுபு பாருவில் இந்துக்களுக்காக மின்சுடலை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

கோலகுபு பாரு, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தின் விண்ணப்பத்தின் பேரில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் முழு ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.

இந்த திட்டப் பணிகளை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் மேற்பார்வையிடுவார் என அவர் மேலும் சொன்னார்.

சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் என்ற முறையில் நான் சொந்தமாக களமிறங்கி இப்பகுதியில் உள்ள இந்துக்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளேன்.

17 லட்சம் வெள்ளி மதிப்பிலான இந்த சமூகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிர்வாணா நிறுவனம் முன்வந்துள்ளது.
இது வெறும் கட்டடம் சம்பந்தப்பட்ட மேம்பாடு கிடையாது. மாறாக, அங்கீகாரத்தின் அடையாளமாகவும் எதிர்பார்ப்புகளுடன் இத்தனை நாட்கள் காத்திருந்த மக்களின் குரலுக்கு வழங்கப்பட்ட மரியாதையாகவும் விளங்குகிறது.

இதுதான் எங்களின் அணுகுமுறை. வெறும் முழக்கமல்ல, வெறும் வார்த்தை ஜாலமல்ல, நாங்கள் பணிகளை முன்னிறுத்துகிறோம். செயல்களின் வழி நிரூபிக்கிறோம்.

மக்களின் ஆதரவைப் பெறுவது, உண்மையான பலன்களைத் தருவதன் மூலமே தவிர இனிப்பான வார்த்தைகளால் அல்ல என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

மக்களுக்கான திட்டங்களை வெற்றியடையச் செய்வதில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு ஒற்றுமைக்கான பலமாக விளங்குவதை இது நிரூபிக்கிறது என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டார்.

 

கோலாலம்பூர், ஏப்.10-
விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடித்து இன்று வெளியான கூட் பேட் அக்லி (GBU)  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக நம் உள்நாட்டு கலைஞர் டாக்கியின் பாடல் GBU திரைப்படத்தில் இருப்பது பரவலாக பேசப்பட்டது. இங்கு மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பாடகர் டாக்கிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது டிரெய்லரில் டாக்கியின் பாடல் காட்சி அடங்கிய காணொளி பரவலாக பகிரப்பட்டதிலிருந்து நமக்கு தெரிய வந்தது.

இப்படி டிரெய்லரே அதிரடியாக கொண்டாடப்பட்ட வேளையில், GBU திரைப்படம் இன்று உலகளவில் வெளியீடு கண்டுள்ளது.

நம் நாட்டில் இத்திரைப்படத்தின் முதல் காட்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மலேசிய அஜித் ரசிகர் தலைமை நற்பணி மன்றம் முதல் காட்சியை ஷா ஆலமிலுள்ள TSR Cinemaவில் கொண்டாடியது. இந்த முதல் காட்சியை காண 1,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலையிலேயே அங்கு கூடினர்.

பட்டாசு வெடிப்பு, இயற்கை பனி தூவல் என ஆர்ப்பாட்டமாக இத்திரைப்படத்தின் முதல் காட்சிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த முதல் காட்சிக்கு MS Malik Stream நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ மாலிக் வருகையளித்திருந்தார். அணிச்சல் வெட்டிய பிறகு ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை காண திரையரங்குக்குள் நுழைந்தனர்.

தல அஜித் குமாரை மீண்டும் திரையில் காண அவர்கள் அனைவரும் காத்திருந்தனர். திரைப்படம் திரையிட்டது முதல் திரைப்படம் முடிந்து பதிவின்போதான காட்சிகள் ஒளிப்பரப்ப்பட்ட வரை ரசிகர்கள் ஆரவாரம் பெரும் அளவில் இருந்தது.

முற்றிலும் வேறுப்பட்ட கோணத்தில் இத்திரைப்படம் இருந்தது. அஜித்தின் ஸ்டைலான நடிப்பு, மாஸ் எண்ரி, ஆடல், ஸ்டன் காட்சிகள் என இத்திரைப்படம் தல டக்கர் டோய் என்பதற்கேற்ப அமைந்திருந்தது.

விறுவிறுப்பான கதை ஓட்டம், அஜித்தின் மாஸ் சீன்கள், நகைச்சுவை பேச்சு, 90ஆம் ஆண்டு பாடல்களின் ரீமிக்ஸ் என தொண்டைத் தண்ணீர் வற்றும் அளவிற்கு ரசிகர்களை கூச்சலிடச் செய்தது.

அதற்கும் மேலாக அஜித்தின் கார் ஸ்ஜேஸ் சீன் போது நம் உள்நாட்டு கலைஞர் டாக்கி வருகையும் அவரின் அதிரடியான பாடலும் அட்டகாசமான ஆட்டமும் திரையரங்கையே அதிர வைத்தது.

இப்படி அடுக்கடுக்காய் காட்சியமைப்புகளின் சிறப்பை கூறலாம். அஜித்தின் முழுமையான மாஸை வெளிப்படுத்திய திரைப்படம் இதுவாகும்.

அதிலும் உடல் எடையை குறைத்து அஜித் கிளின் ஷேவ்வில் வரும் காட்சி வேற லேவல் என்றுதான் கூற வேண்டும்.

நடிகை திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், அதிலும் குறிப்பாக நடிகை சிம்ரன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது.

தல அஜித்தின் ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை இத்திரைப்படத்தில் முழுமைப்படுத்தியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். முழுமையாக ரசிகர்களுக்காகவே இத்திரைப்படத்தின் காட்சிகள் அமைந்துள்ளது. கதைக்கு அதிக முக்கியதுவம் வழங்காமல் Fan Boys-க்காக உருவாக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும்.

ரவுடியாக இருந்த தந்தை மகனுக்காக திருந்தியது, பிறகு மகனுக்காக மறுப்படியும் டானாக மாறியது என்பதை தொட்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இப்படி அஜித்குமாரின் அல்டிமேட் நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் அமோக வெற்றியை பெறும் என நம்பப்படுகிறது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர்,ஏப்.9-
உள்நாட்டு திரைப்படங்கள் என்றாலே அது ஒரே பாணியில்தான் இருக்கும். காட்சியமைப்புகளும் திருப்தியாக இருக்காது, கதையும் சுமாராதான் இருக்கும் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காமல் தற்போதைய நம் உள்நாட்டு திரைப்படங்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இம்மாதம் 17ஆம் தேதி உள்நாட்டு திரையரங்குகளில் வெளியிடு காணவுள்ள Sight and Sound in love பார்வையின் மொழி என்ற திரைப்படம் புதிய பாணியில் இதுவரை உள்நாட்டு திரைப்படத்தில் காணாத கதை அம்சத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

காதலை அடிப்படையாக கொண்ட படம் என்பது அதன் போஸ்டரிலேயே தெரியவந்தது. இம்ம்...காதல் படமா என்ற சிந்தனையில்தான் இப்படத்தின் முன்னோட்ட காட்சியை காண சென்றேன்.

ஆனால் காதலை கருவாக வைத்து புதிய பாணியில் இயக்குநர் சந்தோஷ் கேசவன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பார்வையின் மொழி என்ற இத்திரைப்படத்தில் தமிழ் பெயருக்கு ஏற்ற கதை அம்சத்தை இத்திரைப்படம் கொண்டுள்ளது.

பார்த்து, பேசி காதலித்த அனுபங்கள்தான் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் காதலியை பார்க்க முடியாமல் காதலனிடம் பேச முடியாமல் காதலை வெளிப்படுத்திய காட்சிகள் இன்னும் என் மனதைவிட்டு மறையவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அருண் மற்றும் அவருக்கு ஈடுகொடுத்து ஒருபடி முக பாவனையிலேயே தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள கதாநாயகி ரூபினி அவர்கள்தான் இந்த திரைப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர் என்று கூறலாம்.

இத்திரைப்படத்தின் காட்சியமைப்புகளில் சில காட்சிகள் இழுவையாக இருந்தாலும் கூட அதனை பெரிதாக பேசவிடாமல் இதர காட்சியமைப்புகள் அனைத்துலக தரத்தில் அமைந்துள்ளன.

காமெடி, காதல், சண்டை என்ற பாணியில் உள்நாட்டு திரைப்படங்களை பார்த்து கொண்டிருந்த நமக்கு இத்திரைப்படம் மாற்றலான காதல் கதையாக அமைந்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை, அவர்களின் தற்போதைய வாழ்க்கைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி என்ன பங்களிக்கிறது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI முறை அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியமைத்துள்ளது என்பதனையும் இத்திரைப்படம் நமக்கு வெளிப்படுத்துகிறது.

இப்படி திறமையான நடிப்பு, புதுமையான காதல் கதை என இத்திரைப்படத்தின் சிறப்புகளை கூறும்போது அதன் இசையை பற்றி கூறாமல் இருக்க முடியாது. இசையமைப்பாளர் ஜேயின் கைவண்ணத்தில் அமைந்துள்ள பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

உள்நாட்டு திரைப்படம்தானே...என்ன இருக்க போது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற முறையில் தற்போது நமது உள்நாட்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு பார்வையின் மொழி என்ற இத்திரைப்படம் சான்றாக அமைந்துள்ளது.

பார்வை இழந்த அருண் தன் காதலை வாய் பேச முடியாத ரூபனியிடம் தெருவிப்பதை மையாக கொண்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. அவர்களின் காதல் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது என்பதை திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இத்திரைப்படத்தை IGGY தயாரித்து வெளியிட்டுள்ளார். ஆகையால் இம்மாதம் 17ஆம் தேதி உள்நாட்டு திரையரங்குகளில் வெளியிட காணவுள்ள இத்திரைப்படத்தை பொதுமக்கள் திரையரங்குகளில் கண்டு உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

சுபாங்ஜெயா, ஏப் 8-
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஜிவி ரைட் இலவச பயண சேவையை வழங்குகிறது.

ஜிவி ரைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் மாண்ட் இதனை தெரிவித்தார்.

உள்ளூர் இ-ஹெய்லிங் சேவை வழங்குநரான ஜிவி ரைட் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக தற்போது சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவு வழங்குவது தான் இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

நம்பகமான போக்குவரத்திற்கான அவசரத் தேவையை உணர்ந்து,

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் வேலை, பள்ளி, மருத்துவ சந்திப்புகள், பிற அத்தியாவசியத் தேவைகளுக்குச் செல்ல உதவும் வகையில் ஜிவி ரைட் இலவச சேவையை வழங்குகிறது.

இம்முயற்சி ஜிவி ரைட்டின்சமூக ஆதரவுக்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

மேலும் அன்றாட வழக்கங்களுக்கு இடையூறு ஏற்படுவதை மிகக் குறைவாக உறுதி செய்கிறது.

இதன் மூலம் சமூகத்துடன் எப்போதும் இருப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை ஜிவி ரைட் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

குறிப்பாக இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையை உறுதி செய்வதற்கும், மக்களின் ஆதரவை திருப்பித் தருவதற்கும் எங்கள் வழி இதுவாகும்.

இந்த திட்டத்தை ஒருங்கிணைக்க சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் எங் ஷீ ஹான், நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டுள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் ஜிவி ரைட் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்று கபீர் மாண்ட் கூறினார்.

கோலாலம்பூர், ஏப்.6-
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி வரும்  ஆலய பதிவு, நிலப்பிரச்சினை மற்றும் நிர்வாக பிரச்சினையை கண்காணிக்க  ஒழுங்குமுறை குழுவை அமைப்பது குறித்து பிரதமர் துறை அமைச்சிடம் மகஜர் வழங்கப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனிடம் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் மகஜரை வழங்கினார்.

மலேசிய இந்து சங்கம் மற்றும் மலேசிய இந்து அமைப்புகளின் ஒத்துழைப்பில்  கோவில்களின் பதிவு, நில உரிமை, மற்றும் நிர்வாகத் தகராறுகள் போன்ற பிரச்சினைகளை கையாளும் அங்கீகாரத்தை அந்த ஒழுங்குமுறை அமைப்பு பெற்றிருக்க வேண்டும் என   மலேசிய இந்து சங்கத்தின் செயலாளர் விநாயக மூர்த்தி தெரிவித்தார்.

ஆரம்ப காலகட்டதில் இருந்து ஆலயங்களின் பிரச்சினைகளை மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் போன்ற சமய இயக்கங்கள் கண்காணித்து வருகிறது.
அதுமட்டுமின்றி இந்து ஆலயங்களின் அடிப்படை பிரச்சினைகள் என்னவென்று எங்களுக்குத்தான் தெரியும். இதுநாள் வரையில் அதனை முறையாக கையாண்டு வருகிறோம் என அவர் கூறினார்.

இதன் தொடர்பாக இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள கலாமண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் 500  கோவில்களை பிரதிநிதித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் உள்ள அனைத்து கோவில்களின் நிர்வாகம் மற்றும் சட்டபூர்வமான நிலையை மேம்படுத்துவதற்கான  தீர்வுகளை முன்வைக்கும் நோக்கத்துடன் இச்சந்திப்புக் கூட்டம்  நடைபெற்றது.

அத்துடன் இந்த கூட்டத்தில்  இந்து ஆலயங்களில் டிஜிட்டல் பதிவு அமைப்பு என்ற திட்டமும் முன்வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலும்  முறையாக பதிவு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் நிதி அறிக்கைகள் உள்ளிட்ட முழுமையான நிர்வாக விபரங்களை வைத்திருக்க வேண்டிய தேவையை உறுதி செய்யும் இத்திட்டமும் முன்வைக்கப்பட்டது.

இவை அனைத்தையும் கையாளும் இந்த ஒழுங்குமுறை அமைப்பு, மலேசியா இந்து சங்கத்தின் தலைமையில் இயங்கும். முக்கிய இந்து அமைப்புகள் இதில் இணைந்து செயல்படுவார்கள். எந்த கோவிலின் நிர்வாகத்தையும் இந்த அமைப்பு நேரடியாக கையாளாது, ஆனால் பெரும்பான்மையான கோவில் உறுப்பினர்கள் கோரும்போது மட்டும் தலையிடும்.

எனவே அரசாங்கம் இந்த யோசனையை கவனமாக பரிசீலித்து, குறுகிய காலத்திலேயே அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய திட்டமாக இதனை  செயல்படுத்த வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கனேசன் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர், ஏப் 6-
பி. கே.ஆர் கட்சி தேர்தலில் சுங்கை பூலோ தொகுதித்  தலைவர் தேர்தலில்  போட்டியின்றி தேர்வு பெற்ற டத்தோ ஸ்ரீ ரமணன் தற்போது தேசிய ரீதியான   உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் முன்னிலை வகித்து வருகிறார்.

முக்கியமான அரசியல் தலைவர்களான  டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இசா உதவித் தலைவருக்கு போட்டியிட உள்ளதாகவும். அதே நேரத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்  அமிருதீன் சாரி, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் ஆகியோர் உதவித் தலைவருக்கு போட்டியிட உள்ளதாக  அறிவித்த நிலையில், தொழில் முனைவோர்  மற்றும் கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் அவர்களும் இந்த பதவிற்கு போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக டத்தோ ஸ்ரீ ரமணன் அறிவித்த நிலையில்,  மற்றொரு பக்கம் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற  பக்காத்தான் ஒருகிணைபாளரும்   பி.கே.ஆர் கட்சியின் நடப்பு  தேசிய துணைச் செயலாளருமான டாக்டர் சத்ய பிரகாஷ் அவர்களும்  உதவித் தலைவர் பதவிற்கு போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.

இப்போது உள்ள சூழ்நிலையில் டத்தோ ஸ்ரீ ரமணன்  தனது சுங்கை பூலோ தொகுதியில் போட்டியின்றி தேர்வு பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

டாக்டர் சத்ய பிரகாஷ்  உலு சிலாங்கூர் பி.கே.ஆர் தொகுதியில் போட்டி பெற்று வெற்றி பெறும் நிலையில் தேசிய ரீதியான அவரது அரசியல் பயணம் நிர்ணயிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாக  பேசப்படும் தகவல்,  டத்தோ ஸ்ரீ அன்வாரின் அமைச்சரவையில் புதிய மாற்றம் ஒன்று ஜ.செ.க மற்றும் பி.கே.ஆர் கட்சி தேர்தலுக்கு பிறகு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அந்த வகையில் அமைச்சரவையில் இருக்கப்போவது டத்தோ ஸ்ரீ ரமணன் னா ? அல்லது டாக்டர் சத்ய பிரகாஷ் சா ? என்பது  பி.கே.ஆர் கட்சி தேர்தலுக்கு பிறகு தெரியும் !

செய்தி:  வெற்றி விக்டர்

 

கோலாலம்பூர், ஏப்.3-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இன்று காலை (மலேசிய நேரம்படி அதிகாலை 4 மணிக்கு) வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

அறிவிப்பின் போது டிரம்ப் வைத்திருந்த அட்டவணையின்படி, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக மலேசியா 11ஆவது இடத்தில் இருந்தது.

மலேசியா, அமெரிக்கப் பொருட்களுக்கு 47 சதவீத வரி விதித்துள்ளதாகவும், அந்நாட்டின் பரஸ்பர கட்டணத்தை 24 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாகவும், இது அந்த விகிதத்தில் பாதியை விட சற்று அதிகம் என்றும் அவர் கூறினார்.

சீனா மற்றும் சிங்கப்பூருக்குப் பிறகு, மலேசியப் பொருட்களுக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

சுபாங் ஜெயா, ஏப்.2-

சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸிலுள்ள பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாய் நேற்று தீப்பிடித்து எரிந்த  சம்பவம் தொடர்பாக இரண்டு கட்டுமான நிறுவனங்கள் மீது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் ஒரு முக்கிய குத்தகை நிறுவனமும் அதன் ஒப்பந்தக்காரரும் அடங்குவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமர் கான் செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார்.

இந்த தீ விபத்து அருகிலுள்ள ஒரு கட்டுமானப் பணியின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சமூக ஊடகங்களில் பரவலாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக மக்கள் பகிர்ந்த புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் அப்பகுதியில் பொறியியல் இயந்திரங்கள் செயல்பட்டிருப்பது தெரிகிறது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து தெரிவித்த சுபாங் மாவட்ட போலீஸ் தலைவர்  ACP வான் அஸ்லான் வான் மாமாட்,
111 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இவர்களில் 80 பேர் புத்ராஜெயா, சைபர்ஜெயா, செர்டாங் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

அத்துடன், மலேசியா சுகாதாரத்துறை அமைச்சர் ஜுல்கிப்லி அகமட் மற்றும் பண்டார் தூன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அசிசா வான் இஸ்மாயில், நேற்று செர்டாங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த தீவிபத்தால் 235 வீடுகளும், 399 வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 87 வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. 225 வாகனங்களும் தீக்கிரையாகி உள்ளன.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டு கட்டுமான நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வரும் வரை, போலீசார் மேலதிக தகவல்கள் வெளியிடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், ஏப் 2-
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும், ஆசிரியருமான செல்வி சாந்தா காளியப்பன் அவர்கள் எழுதிய 'விடியல் தூரமில்லை' சிறுகதைத் தொகுப்பு நூல், எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு வெளியீடு காண உள்ளது.

இந்த நிகழ்ச்சி பிரிக்பீல்ட்ஸ், மலேசிய பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர், சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இந்நிகழ்ச்சியைத் தலைமையேற்று நூலை வெளியிடுகிறார்.

மேலும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் அவர்களின் முன்னிலையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெறும்.

இவ்வேளையில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள மற்றும் பொது மக்கள்  அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேல் விவரங்களுக்கு  016-444 2029 என்ற எண்ணில் திரு. ம. முனியாண்டி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

 

சுபாங் ஜெயா, ஏப்.2-
சுபாங் ஜெயாவின் ஜலான் புத்ரா ஹர்மோனி புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மொத்தம் 20 ஏஜென்சிகள் பாதுகாப்பு நிலையை அறிய இன்று காலை அங்கு விசாரணையை தொடங்கியுள்ளன.

அவற்றில் தேசிய போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை,  டிஎன்பி மின்சாரா வாரியம், பொதுப்பணித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்ட அலுவலகங்கள் ஆகியவை அடங்கும்.

அங்குள்ள ஜாலான் பெர்சியாரான் ஹர்மோனி கட்டம் கட்டமாக தற்பொது மூடப்பட்டு வருகிறது. அமலாக்கப் பிரிவினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக அச்சாலை மூடப்படும். அதன் பின்னர் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்றும் சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் விசாரணையை தொடர்ந்து சம்பந்தப்பட்டா ஏஜென்சிகளுடன் கலந்து பேசப்படும் என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையில்,  எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்களின் இழப்புகளை மதிப்பிடுவது உட்பட பல முக்கிய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் சேதமடைந்த வீடுகளின் நிலைமையை நாங்கள் சோதனையிடவுள்ளோம். வெடிச் சம்பவத்தில் வீட்டின் சுவர்களில் பிழவுகள் அல்லது கூரைகள் இடிந்து விழும் அபயாம் இருந்தால் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு கருதி அவற்றை நாங்கள் இடிக்கவுள்ளோம்.

அனைத்து வேலைகளையும் சீக்கிரமாக முடிக்கவும் விசாரணையை துரித படுத்தவும் பிர மாநிலங்களிலிருந்து தீயணைப்பு மீட்பு படையினர் இங்கு வரவழைக்கப்படவுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஏப்.2-

தலைநகரில் கோயில் இடமாற்றம் சர்ச்சையைத் தொடர்ந்து, மே 13 கலவரத்தை மீண்டும் நடத்த அழைப்பு விடுத்து இன வெறுப்பைத் தூண்டும் சமூக ஊடகப் பயனருக்கு எதிராக தேசிய ஒற்றுமை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (SKMM) அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் படி சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலேசியர்களின் நல்லிணக்கமும் ஒற்றுமையும் பேணப்படுவதை உறுதி செய்வதில் தேசிய ஒற்றுமை அமைச்சு உறுதிபூண்டுள்ளது.

எனவே, ஒற்றுமையை குழைப்பது உட்பட வெறுப்பைத் தூண்டும் எந்தவொரு அறிக்கை அல்லது செயலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் X சமூக வலைத்தள பக்கத்தில் கூறினார்.

அமீர் ரிட்வான் என்ற பெயரிலுள்ள X வலைத்தள கணக்கில் இந்தியர்களுக்கு (கெலிங்) எதிர்பாக மலாய்காரர்கள் போரை நடத்துவது மிகவும் நல்லது என்றும் அப்பொழுதுதான் இந்தியர்களுக்கு அவர்களின் தற்போதைய நிலை தெரியவரும் என்றும் அந்நபர் சர்ச்சையான கருத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் இந்திய சமூகத்தை "முட்டாள்கள்" என்று வர்ணிப்பதன் மூலம் அவமதித்ததுடன் நாட்டின் மக்கள் தொகையில் ஏழு விழுக்காடு பிரதிநிதித்துவப்படுத்தினாலும் சட்டவிரோதமான நிலத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களை இந்தியர்கள் கட்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஏப்.1-
இன்று காலை புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் மொத்தம் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

தாமான் ஹார்மோனியில் 37 வீடுகளும், அதன் பக்கத்திலுள்ள கம்போங் சுங்கை பாருவில் 10 வீடுகளும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர் டிசிபி முகமட் ஜைனி அபு ஹாசன் தெரிவித்தார்.

மருத்துவ தளமாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில் தற்போது மொத்தம் 49 பேர் உள்ளனர். இந்த நோக்கத்திற்காக கோயிலைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக ஆலய நிர்வாகக் குழுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28-
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவரை அவமானப்படுத்தும் அளவிற்கு பேசிய ஆலய தலைவரின் செயல் கண்டிக்கத்தக்கது என சிலங்கூர் மாநில மஇகாவின் இளைஞர் பிரிவு அமைப்பு செயலாளர் தயாளன் சாடினார்.

பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரை அந்த ஆலயத்தின் தலைவர் என நம்பப்படும் நபர் இதை பார்க்க எனக்கு அருவருப்பாக உள்ளது, ஆலயத்தின் உள்ளே சக்கர நாற்காலியில் உட்கார வேண்டாம் வெளியே போங்கள் என கடுமையாக பேசியதாக தயாளன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது. அந்த காணொளியில் சம்பவ இடத்தில் இருந்த பெண் ஒருவர் அங்கு நடந்த சூழலை பற்றி அக்காணொளியில் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த பெரியவரை திட்டிய அந்த நபர் ஆலய தலைவர் என நான் நினைக்கின்றேன். ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் என்னிடம் அப்படிதான் சொன்னார்கள் என அப்பெண் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி ஆலய தலைவர் என நம்பப்படும் அந்த ஆடவரின் நடவடிக்கை குறித்து நிறைய பக்தர்கள் தன்னிடம் புகார் செய்ததாகவும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அவர்  நிறைய இடையூறுகள் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக அந்த ஆலயத்தில் பக்தர்களின் வளிபாட்டு சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஆலயத்தின் முன் புறம் கார் நிறுத்துவதில் கூட அவர் பிரச்சினை கொடுப்பதாகவும் பொது மக்கள் தன்னிடம் புகார் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அந்த ஆலயத்திற்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் அவர் மீது வெறுப்பில் இருப்பதாகவும்,  சிலங்கூர் மாநில மஇகாவின் இளைஞர் பிரிவு அமைப்பு செயலாளர் என்ற முறையில் அவரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் தயாளன் தெரிவித்தார்.

ஆலயங்களின் பிரதிநியாக திகழும் மலேசிய இந்து சங்கம் இவ்விவகாரம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உலு சிலாங்கூர், மார்ச் 28-
பிகேஆர் கட்சியின்  துணை பொதுச் செயலாளர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் வரவிருக்கும் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள், நண்பர்கள் மற்றும் தனது உலு சிலாங்கூர்  கிளையின் உறுப்பினர்களுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவை தான் எடுத்ததாக அவர் வெளியிட்ட  அறிக்கையில் கூறினார்.

இந்த போட்டியில் தான் வெற்றி பெற்றால் இளைய தலைமுறை மற்றும் தொழில்முனைவோர்களை கட்சியில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

மேலும்  கட்சியில் அடிப்படை உறுப்பினர்களின் குரல் முடிவெடுப்பதில் பிரதிபலிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு உறுப்பினரும் கட்சிக்காக பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிகேஆர் ஒரு கூட்டணி கட்சியாக மட்டும் இருக்கக்கூடாது, அது நாட்டை முன்னேற்றும் தலைமைக்கட்சியாக இருக்க வேண்டும். கட்சியில் பலமான கொள்கைகள் மற்றும் மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் நடவடிக்கைகள் இருப்பது அவசியம் என தாம் நினைப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே 2025 ஆம் ஆண்டின் கட்சியின் தேசிய மாநாட்டில் தேர்தல் தொடர்பான நடுநிலைத்தன்மை  இருக்கக்கூடாது என்பதால், அவர் அம்மாநாட்டின் இயக்குநர் 
பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த பொறுப்புக்கு தகுந்த  வேறு ஒருவரை கட்சித் தலைமைத்துவம் தேர்வு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின்  உதவித் தலைவர்  பதவிகளுக்கு  மொத்தம் 9 இடங்கள் உள்ளன. அதில் 4 பேர் கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவர். 3 பேர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிப்பர். இரண்டு பதவிகள் பிகேஆர் இளைஞர் மற்றும் பிகேஆர் மகளிர் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

நடப்பில் இருக்கும் 5 உதவித் தலைவர்களான  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அமினுடின் ஹாருன், நிக் நஸ்மி நிக் அகமட் ,சாங் லிஹ் காங், நூருல் இஸ்சா ஆகியோர் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.

இருப்பினும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் ஹவாங் உசானி ஷாரி ஆகிய இருவரும் இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இவ்வாண்டு நடைபெறும் பிகேஆர் தேர்தல் மிக முக்கியமானது. ஏனெனில் இது அன்வார் இப்ராஹிம் பிரதமராக ஆன பிறகு நடக்கும் முதல் கட்சித் தேர்தல். கடந்த 2018 தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதால், கட்சி உறுப்பினர்களின் தீர்மானம் எதிர்கால அரசியல் கோட்பாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது என கூறிய அவர், தான் உதவி தலைவர் பதவிக்கு போட்டி இடுவதை உறுதி செய்தார்.

- காளிதாசன் இளங்கோவன்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 27-
பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படும் பேஸ்புக் பதிவு தொடர்பாக  மத போதகர் ஜம்ரி வினோத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள  தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலை இடமாற்றம் செய்வது தொடர்பாக சர்ச்சையான பதிவை அவர் வெளியிட்டது தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல்துறைத் தலைவர் ரசாருடின் ஹுசைன் கூறினார்.

தற்போது ஜம்ரி பாடாங் பெசார் மாவட்ட காவல் தலைமையகத்தின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் நாளை கங்கார் நீதிமன்றத்தில் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர், மார்ச் 27-
கோவில்-மசூதி விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் மலாய்க்காரர்களின் கோபத்தை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜாஹிட் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் ஊழல் வழக்குகள் மீது கோபம் இல்லை என்றும் புகார் கூறினார்.

ஊழலுக்கு எதிராகவும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராகவும் அதே அளவிலான கோபத்தை நாம் காட்டினால் (சபாவில் நடந்து வரும் ஊழல் போல) சமூகத்திற்கும் நாடும் முன்னேற்றத்திற்கு உதவும் சிறந்த தலைவர்களை நம்மால் கொண்டுவர முடியும் என்று கூறினார்.

முகநூலில் முந்தைய பதிவில், வழிபாட்டுத் தலங்களுக்கு நிலம் அல்லது நிதி உதவி போன்றவற்றில் அரசாங்கம் முஸ்லிமல்லாதவர்களுக்கு சலுகைகளை வழங்கும்போது முஸ்லிம்கள் ஏமாற்றமடைவது குறித்து ஜாஹிட் கவலை தெரிவித்தார்.

முஸ்லிம்கள் திருப்தி அடைய போதுமான மசூதிகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி உதவிகள் உள்ளன. இருப்பினும், சமீபத்தில் கோலாலம்பூரில் உள்ள கோவில் பிரச்சினை குறித்து சமூக ஊடகங்களில் அவர்கள் மிகவும் கோபமாக இருப்பதை நான் காண்கிறேன்.

முஸ்லீம் அல்லாதவர்களும் வரி செலுத்துவோர். தேசிய கருவூலத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள், எனவே அவர்கள் அரசாங்க உதவிக்கு உரிமையுடையவர்கள் என்று ஜாஹிட் வலியுறுத்தினார்.

அவர்கள் மலேசியர்கள். அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டும் சேவை செய்யவில்லை. அது அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கூட்டாட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது.

எனவே, இந்த பிரச்சினையை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துபவர்களால் பாதிக்கப்பட வேண்டாம் என்று அவர் அனைவரையும் அறிவுறுத்தினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


சிப்பாங், மார்ச் 27-
சீனாவின் ஷென்சென் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் பயனித்தின்போது அதன் இயந்திரம் ஒன்றில் தீப்பிடித்ததால், திரும்பி அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 10.37 மணிக்கு தனக்கு அவசர அழைப்பு வந்ததாகக் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு வண்டியுடன் ஒன்பது உறுப்பினர்களும், விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (AFRS) யைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களுடன் மற்றொரு தீயணைப்பு இயந்திரமும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கேஎல்ஐஏ விமான நிலையம் 2இல் இருந்து இரவு 9.59 மணிக்கு புறப்பட்ட விமானம் இன்று அதிகாலை 12.08 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் 171 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.

ஏர்பஸ் ஏ320-216 ரக விமானத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டது. விமானம் தரையிறங்குவதற்கு முன்பு ஹாலோன் முறை வழி தீ அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நியூமேடிக் குழாய் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர், மார்ச் 27-
கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்விக்கூடங்களிலுள்ள அனைத்து மாணவர்களும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஜாலுர் கெமிலாங் சின்னத்தை அணிய வேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, சின்னம் அணிவதற்கான வழிகாட்டுதல்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதியன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த விதி அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (IPG) ஆகியவற்றுக்குப் பொருந்தும், மற்ற கல்வி நிறுவனங்களும் இதை செயல்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன.

மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே தேசபற்று மற்றும் நாட்டின் மீதான அன்பை வளர்ப்பதில் கல்வி அமைச்சு முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே, இந்த பற்று தொடர்ந்து நிலைத்து வளருவதை உறுதிசெய்ய அடிமட்ட அளவில் ஒரு முயற்சியாக இது செயல்படுத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

புத்ராஜயா, மார்ச் 26-
நோன்புப் பெருநாள் முதல் நாளில் RAHMA திட்டத்தின் மூலம் அனைத்து  மலேசியர்களின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு குறைந்தபட்சம் கூடுதல் 5GB தரவு அளவை வழங்குவதாக
மடானி அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இந்த கூடுதல் தரவு அளவுக்கான செலவுகளை முழுவதும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹாமி ஃபட்சில் தெரிவித்தார்.

இந்த கூடுதல் தரவு அளவு, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் விதிமுறை மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 24 மணி நேரத்திற்கு இச்சேவை செல்லுபடியாகும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து  தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கிய ஒத்துழைப்பிலும், அதே வேளையில்  தகவல் தொடர்பு அமைச்சு மேற்கொண்ட  முயற்சிகளையிலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.
மாடானி அரசின் சமூக உறவுகளை வலுப்படுத்தும் புதிய ஊக்கமளிப்பு திட்டமாகவும் இது அமையும் என ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

மக்களுக்கான இந்த ஊக்கமளிப்பு திட்டத்தின்  மூலம், நாட்டிலுள்ள சுமார் 45 மில்லியன் தொலைதொடர்பு பயணிட்டாளர்களுக்கு இது பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆன்லைன் தொடர்பின் மூலம் சமூக உறவுகளை மேலும் நெருக்கமாக்கும் நோக்கத்தையும் இச்செயல்திட்டம் ஏற்படுத்தும்.

இந்த  RAHMA ஊக்கமளிப்பு திட்டம் குறித்த  விவரங்கள்  தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் விரைவில் அறிவிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, மார்ச் 26-
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா (வயது 48) இன்று மார்ச் 25 ஆம் தேதி சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

1976 செப்டம்பர் 11ஆம் தேதி கிராமத்தில் பிறந்த மனோஜ், 1999ஆம் ஆண்டு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் சமுத்திரம் படத்தில் 2001 ஆம் ஆண்டு அல்லி அர்ஜுனா
2002,  மகா நடிகன் 2004,.அன்னக்கொடி 2013, மாநாடு 2021, விருமன் 2022, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்புக்கு அப்பால், இயக்குநராகவும் பணியாற்றிய மனோஜ், மார்கழி திங்கள் என்ற  2023 இல் வெளியாகிய  திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், மணிரத்னம் இயக்கிய பொம்பை மற்றும் தயாரிப்பாளர்
ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தில்  இயக்குநர்களுக்கு உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மனோஜ் 2006ஆம் ஆண்டு நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு அர்த்திகா, மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

மனோஜின் மறைவு தமிழ் திரைப்பட உலகத்தையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்க வைத்துள்ளது


கோலாலம்பூர், மார்ச் 25-
நோன்பு மாதத்தில் நோன்பு எடுக்கும் அன்பர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை வழங்குவதுடன் மலேசியர்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

அந்த வகையில் நோன்பு துறப்பை முன்னிட்டு தீயணைப்பு படையினர், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு நோன்பு கஞ்சியை மஇகா இளைஞர் பிரிவினர் வழங்கினர்.

தலைநகரிலுள்ள தீயணைப்பு நிலையம், டாங் வாங்கி போலீஸ் தலைமையகம் ஆகிவற்றில் இவர்கள் நோன்பு கஞ்சியை வழங்கியதுடன் பரிசுக் கூடைகளையும் வழங்கினர்.

அதனை தொடந்து மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள செமுவா ஹாவ்ஸ் பேரங்காடியின் முன் கூடிய அவர்கள், அங்குள்ள மக்களுக்கும் நோன்பு கஞ்சியை விநியோகம் செய்தனர்.

நோன்பு மாதத்தில் இஸ்லாமியர்களுடன் இணைந்து அவர்களுடன் நோன்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வரவேற்கத்தக்கது.

அந்த வகையில் கடந்த வாரம் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோரின் ஏற்பாட்டில் மஇகா நேதாஜி மண்டபத்தில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசு சாரா இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு துறந்தனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மலேசியர்கள் மத்தியில் ஒற்றுமையை மேலோங்கச் செய்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மஇகா இளைஞர் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்ததுடன் தொடர்ந்து வரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம் என அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் மஇகா இளைஞர் பிரிவினர் 300 பாக்கெட்டுகள் நோன்பு கஞ்சியை விநியோகம் செய்ததாகவும் அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 25-
நாட்டில் சர்ச்சையாக இருந்த மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்திற்கு தற்போது சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது.

இந்த ஆலயத்திற்கு அருகில் மஸ்ஜிட் மடானி பள்ளிவாசல் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட வேளையில் வரும் 27ஆம் தேதி நடைப்பெறவுள்ள இந்த கல் நிறுத்தும் விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் என்ன நடக்கிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது சுமுகமான தீர்வு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மதியம் 3 மணியளவில் கூட்டரசு  பிரதேச அமைச்சர் டத்தோ ஜாலெஹா அலவலுவகத்தில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த தீர்வு கிடைத்ததாக மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

தற்போது அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் 4,000 சதுர அடியில் புதிய நிலம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அதற்கான உறுதி கடிதத்தை அமைச்சர் ஆலயத்தின் பிரதிநிதி பார்த்திபனிடம் வழங்கியுள்ளார். இதன் வாயிலாக அந்த ஆலயம் தொடர்ந்து மஸ்ஜிட் இந்தியாவில் செயல்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் சொன்னார்.

அதேநேரத்தில் தற்போது ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலத்திற்கு நிரந்திர நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த புதிய ஆலயம் கட்டி முடிக்கும் வரை தற்போதைய இடத்தில் ஆலயம் இயங்குவதற்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சொன்னார்.

இது இந்திய சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. ஒற்றுமையாக இருந்தால் நாம்மால் சாதிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது.

இந்த வேளையில் அரசாங்கத்திற்கும், பிரதமருக்கும், கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் மற்றும் ஆலயத்தை பாதுக்காக துணை நின்ற எல்லோருக்கும் தாம் நன்றியை தெரிவித்து கொள்வதாக அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், மார்ச் 25-
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலின் இருப்பிடம் தொடர்பான சர்ச்சைக்கு இன்று தீர்வுக்கானப்படும் நிலையில் உள்ளது என மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

கோயில் நிர்வாகக் குழு, அருகிலுள்ள புதிய இடத்திற்கு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை
மாற்றுவதற்கு சம்மதித்துள்ளதாக அதன் செயலாளர் கார்த்திக் குணசீலன் தெரிவித்தாதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று நடந்த கோலாலம்பூர் நகராண்மைக்கழக (DBKL) அதிகாரிகளுடன் நடந்த கலந்தாலோசனையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்
இந்த விவகாரத்தை சமாதானமாக முடிக்க உதவிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி என கார்த்திக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் கோயில் நிர்வாகமும் கோலாலம்பூர் நகராண்மைக்கழகமும் புதிய இடத்திற்கான தொழில்நுட்ப விவரங்களை இறுதி செய்ய ஆலோசனை நடத்த உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று காலை இந்த விவகாரம் சட்டத்திற்குட்பட்ட முறையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போதைய கோயில் 1893ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் அதிகாரத்திற்கு வந்த இந்த நிலம், 2014ஆம் ஆண்டு ஜாக்கல் குழுமத்திற்குக்  விற்கப்பட்டது.

சமீபத்தில் ஜாக்கல் குழுமம் அங்கு "மஸ்ஜிட் மடானி" என்ற பெயரில் ஒரு பள்ளிவாசல் அமைக்கத் திட்டமிட்டதைத் தொடர்ந்து இன்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரும் 27 ஆம் தேதி  வியாழக்கிழமை நடைபெறவிருக்கும்  பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தாம் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர், மார்ச் 25-
எவ்வித  எதிர்ப்புகள் இருந்தாலும் மார்ச் 27ஆம் தேதி திட்டமிட்டப்படி
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில்
அடிக்கல் நாட்டுவிழா நடக்கும் என்றும் அதில் தான் கலந்து கொள்வேன் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உருவாக்கப்படவுள்ள மஸ்ஜிட் மடானி கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் வியாழக்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் என இன்று புலௌபோல் போலீஸ் பயிற்ச்சி மையத்தில் நடந்த  218ஆவது போலீஸ் தின விழாவில் உரையாற்றும் போது இதனை உறுதிப்படுத்தினார்.

"கோயில் நிர்வாகத்திற்கும் இதையே சொல்கிறேன். நாங்கள் தோழர்களாக இருக்கிறோம், ஒடுக்குபவர்களாக இல்லை. வதந்திகளையும் தவறான தகவல்களையும் நம்ப வேண்டாம்,
குறிப்பிட்ட  தேதியில் மசூதியின் அடிக்கல்  நாட்டப்படுவதை நான் உறுதி செய்கிறேன். கோயில் நிர்வாகக் குழு அமைதியாகவும் நல்ல முறையிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இஸ்லாமிய மத விவகார வாரியம் (MAIWP), சம்பந்தப்பட்ட  நிறுவனம் மற்றும் DBKL என அனைவருடனும் மதிப்புடனும் மரியாதையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுதியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில், மாநிலத் தலைமை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர், தேசிய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மசூதியை கட்டுவதற்கான அனுமதி ஏற்கனவே 2019ஆம் ஆண்டிலேயே வழங்கப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.

முன்பாக, Lawyers for Liberty (LFL) எனும் அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜைத் மாலிக், “இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் அவசரமாக இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தவறான முடிவாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும், “இம்மசூதி அமைப்பதற்காக கோயிலை மாற்றுவது மாறுபட்ட மதங்களை கொண்ட நாடு என்ற மலேசியக் கொள்கையுடன் ஒத்துப்போகுமா?” என அவர் கேள்வியும் எழுப்பியிருந்தார்.

கோலாலம்பூர், மார் 24-
சுபாங் வட்டார வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் இலவச கட்டண சேவையை ஜிவி ரைட் வழங்குகிறது.

ஜிவி கார் வேன்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் சிங் மாண்ட் இதனை கூறினார்.

மலேசியர்களின் இதயங்களில் இடம் பெற்று வரும் உள்ளூர் இ-ஹைலிங் சேவை நிறுவனமான  ஜிவி ரைட்,

சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களுக்கு  ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த இலவச பயண சேவை பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளது.

சுபாங் ஜெயா சமூகத்தினரிடமிருந்து கிடைத்த அசாதாரண வரவேற்பின் வாயிலாக  சுபாங் ஜெயாவில் இலவச கட்டண ஊக்குவிப்பு சலுகையை நாங்கள் நீட்டிக்கவுள்ளோம்.

மேலும் பாதுகாப்பான, சிறந்த தரமான உள்ளூர் இ-ஹைலிங் சேவையை அறிமுகப்படுத்துவதோடு,

சுபாங் ஜெயா மக்கள் அளித்த ஆதரவைப் பாராட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுபாங் இலவச சேவை பிரச்சாரம் வரும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும்.

மேலும் ஜிவி ரைட்டின் 1 மில்லியன் இலவச சேவை பிரச்சார முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

இது அதிகமான வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை முயற்சிக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஜிவி ரைட்டின் இந்த இலவச சேவையை பெறுவதற்கு "கூகிள் பிளே ஸ்டோர்" அல்லது "ஆப்பிள் ஆப் ஸ்டோர்" வழியாக ஜிவி ரைட் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மேலும் வாடிக்கையாளர்கல் பயணிகளாகப் பதிவை முடிக்க வேண்டும். வழக்கம் போல் பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் பிக்-அப் இடம் சுபாங் ஜெயா பகுதிக்குள் இருந்தால் மட்டும் போதும்.

ஒவ்வொரு வாடிக்கையாளரும்  ஒரு நாளைக்கு ஒரு இலவச பயனத்திற்கு மட்டுமே தகுதியுடையவர்கள்.

அதிகபட்ச இலவச கட்டண வரம்பு 30 ரிங்கிட் ஆகும். இதில் சுங்கச் சாவடி கட்டணமும் அடங்கும்.

கட்டணம் 30 ரிங்கிட்டை விட அதிகமாக இருந்தால், பயணிகள் மீதமுள்ள தொகையை ஓட்டுநருக்கு செலுத்த வேண்டும் என்று கபீர் சிங் கூறினார்.

கோலாலம்பூர், மார்ச் 24-
நிலம் டி.பி.கே.எல் பெயரில் இருக்கும் போது ஒண்டவந்தவர்களிடம் தெரிவிக்க வேண்டும்  என்ற அவசியம்  மாநகர மன்றத்திற்கு இல்லை என   அம்னோ இளைஞர் பிரிவு தலைவர்  அக்மால் ஆனவனமாக பேசியுள்ளார்.

ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர்  நேற்று நடைப்பெற்ற. செய்தியாளர் சந்திப்பில்,

இந்த ஆலயம் பழைமை வாய்ந்த  ஆலயம்  மகர மன்றத்தின் அனுமதியுடன் இருந்த ஆலயம்  என பல விளக்கம் கொடுத்த நிலையில்,

மாநகர மன்றம்   இந்த நிலத்தை விற்பதற்கு  முன் விற்பனை தொடர்பாக ஆலயத்திடம் பேச்சு வார்த்தை நடத்தாதது ஏன்  என்ற கேள்வியை  முன் வைத்தனர்.

அந்த நிலத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டு இருக்கும் பட்சத்தில்  அதற்கு முறையான தீர்வை கொடுக்காமல் நிலத்தை விற்றது ஏன்? நிலத்தை
வாங்குபவர்களுக்கும் தெரியும் அங்கு ஆலயம் உள்ளது என்று, பிற்காலத்தில் சிக்கல்  ஏற்படும் என்பதை  உணர்ந்து ஆரம்பத்திலேயே மாநகர மன்றத்திடம் பேசிருக்காலம் .

அப்போது  மாநகர் மன்றம் நிலத்தை விற்றுவிட்டு  இன்று தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கோயில் எழுப்பபட்டுள்ளது என்ற தோற்றத்தை காட்டுவது சரியில்லை என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  மற்றும் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தனர்.

இந்த கருத்திற்கு அம்னோ இளைஞர் பிரிவு  தலைவர் அக்மால் ஒண்டவந்தவர்களுக்கு எதற்கு மாநகர மன்றம்  பதில் கொடுக்க வேண்டும் என ஆனவமாக பதில் கொடுத்துள்ளார்.

நிலம் மாநகர மன்றத்துடையது.  அவர்கள் நிலத்தை விற்க ஏன் அவர்கள் இவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றுள்ளார்.

60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் இவர்களுடைய இப்படி பட்ட ஆணவ பேச்சால்  தான் அம்னோ இன்று மக்கள் ஆதரவை இழந்து  நிற்கிறது என்பதை அக்மால் போன்றவர்கள்  இளம் அரசியல்வாதிகள் அறிய வேண்டும்.

புறம்போக்கு நிலமோ ,மாநகர மன்ற நிலமோ மூன்று இன மக்கள் வாழும் நாட்டில் இதுநாள் வரை ஒரு வீட்டை உடைத்தாலோ அல்லது கடைகளை உடைத்தாலோ அல்லது வழிபாட்டு தளத்தை உடைத்தாலோ முதலில் சுமூகமாக  பேச்சுவார்த்தை நடத்தி எல்லா தரப்புக்கும்   நியமான ஒரு முடிவு எடுக்கப்படுவதுதான் அடிப்படை  நிர்வாக பக்குவம்.

அப்படி அக்மால் சொல்வது போல் ஒண்டவந்தவர்களிடம்  மாநகர மன்றம் தெரிவிக்க  தேவையில்லை என்றால்  இந்த தலைநகரில் இன்னும் பேச்சுவார்த்தையில் பல குடியிருப்பு பகுதி ,கடைகள், வழிப்பாட்டு தளங்கள் உள்ளன.  மாநகர மன்றத்தின் நிலத்திலும்  ,தனியாருக்கு விற்கப்பட்ட நிலத்திலும். அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல்  அவர்களுக்கு ஒரு சுமூகமான  தீர்வு கிடைக்காமல் துரத்த சொல்கிறாரா அக்மால் ?  இதனை அவர் வெளிப்படையாக பாதிக்கபட்ட மக்களிடம் ஆணவமாக  சொல்லமுடியமா  ?

கடந்த காலங்களில் அம்னோவின் இப்படிபட்ட ஆனவ  பேச்சால் தான் மக்கள் இவர்களை வெறுத்தார்கள் என்பதை அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் நினைவில் வைக்க வேண்டும்.

செய்தி : வெற்றி விக்டர்


கோலாலம்பூர், மார்ச் 23-
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் ஏற்பாட்டில் மணிமன்ற நாள் விழாவில் 15 பேருக்கு மணிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசியத் தலைவர் முருகன் மணியம் தலைமையில் இன்று கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ Star Banguet Hall மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மணிமன்றத் நாள் கொண்டாடப்பட்டது.

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி. மோகன் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டு இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஓர் இளைஞர் ஒரு விளையாட்டு என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வழி இந்திய இளைஞர்கள் அதிகமாக விளையாட்டு துறையில் ஈடுபட முடியும் என முருகன் மணியம் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை வரவேற்ற டத்தோ டி.மோகன், மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் இத்திட்டத்திற்கு உறுதுணையாக இருந்து செயல்படும் என சொன்னார்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் மேனாள் உதவித் தலைவர்களான ரவீந்திரன் பெருமாள், தொப்ளா கவுண்டர் கோவிந்தசாமி, மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவை நிர்வாக மன்ற முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ராமசாமி, தமிழ் மலர் ஆசிரியர் தேவேந்திரன் குஞ்சு குட்டன், மணியம் நாகலிங்கம், ஜோன் கென்னடி சவேரியார், பாலா பாலா சந்திரபிரகாசம், தேவேந்திரன் கலைச்செல்வம், நாராயணன் சண்முகவேல், திருமதி ரேணுகா தேவி ராமசாமி, இரவிக்குமார் நடேசன், குமார் ஆறுமுகம், இரத்தினகுமார் சுப்பிரமணியம்,  ராமசாமி நடேசன், அமரர் மணிபிரதாபன் செல்லமுத்து ஆகியோருக்கு மணிப்பட்டம விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தெலுக் இந்தான், மார்ச் 21-
28.85 கிலோ மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தியதாக நான்கு நபர்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  என். மகேந்திரன் (வயது48), பி. வசந்தன் (வயது 45), பி. சிவகணேஷ் (வயது 43) மற்றும் என். தேவந்தரன் (வயது 33) ஆகியோர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் வாயிலாக தமிழ் மொழியில் குற்றச்சாட்டுகளை கேட்டறிந்த பின்னர்  அவர்களிடமிருந்து எந்தப் பதில்களும் பதிவுசெய்யப்படவில்லை.

இதவர்கள் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு  27,050 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தல் ஆகும்
மேலும்  இரண்டாம் குற்றச்சாட்டாக  1,800 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தல் பதிவாகியுள்ளது.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் கடந்த  மார்ச் 12 ஆம் தேதி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரையில்  பாகான் டத்தோ மாவட்டத்திலுள்ள ஊலு பெர்னாம், காம்புங் பாரு சுங்காய் துவாவில் உள்ள லாட் 15040 என்ற  இடத்தில்  நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

செக்‌ஷன் 39B இன் கீழ்1952 ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள்  பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மரணதண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தது 15 பிரம்படிகள் வழங்கப்படும்.

இதனிடையே இந்த குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை துணை அரசு வழக்கறிஞர்  இஸ்ஸுதின் ஃபாக்ரின் ஹம்தான் நடத்தினார், மேலும் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட போதைப்பொருள் குறித்து வேதியியல் அறிக்கையை (Chemical Report) கிடைக்கப்படும் வரையில்  வழக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி நைதாதுல் அதிரா அஸ்மான் வழக்கின் அடுத்த விசாரணை நாளாக ஜூன் 3 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளார்.

இதநிடையே  கடந்த மார்ச் 16 ஆம் தேதி அன்று, உலு பெர்னாம், பகான் டத்தோ பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  RM1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை போலீசார் கண்டுபிடிக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளனர்.

-காளிதாசன் இளங்கோவன்

தாப்பா, மார்ச் 21-
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு ஏதுவும் இல்லை , கல்வி ஒன்றே  மேம்பாட்டிற்கும் மனித மூலதனத்திற்கும் அஸ்திவாரம் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கூறினார்.

தாப்பாவில் இன்று காலை நடைபெற்ற “மீண்டும் பள்ளிக்கும் போகலாம்”
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு  கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது மட்டுமின்றி அந்த மாணவர்களுக்கான  கல்வி உதவிகளையும் வழங்கினார்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய அவர், கல்வியே அழிவற்ற செல்வம் என குறிப்பிட்டார்.

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டில் தாப்பாவில் தொடங்கப்பட்ட “டி'சாரா” திட்டத்தின் மூலம், தொடக்கப்பள்ளியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற பி40 பிரிவு மாணவர்கள் 100 பேருக்கு, உயர்கல்விக்கூடம் செல்லும் வரை வழிகாட்டல் மற்றும் மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்த திட்டத்தினை மேலும் விரிவாக்கும் நோக்கில், கல்வியில் பின்தங்கிய 100 மாணவர்களை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அவர்களின் தனித்திறமையை வளர்த்து வெற்றி பெற உதவ “டி'சாரா” திட்டத்தின் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” எனும் கருத்தை முன்வைத்த அவர், கல்வியுடன் தொழில் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு நினைவூட்டினார்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், மார்ச் 20-
என்னை மீறி மஸ்ஜிட் இந்தியா ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தின் ஒரு கல்லைக்கூட அசைக்க முடியாது என பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் சூளுரைத்தார்.

தற்போது இந்த ஆலயத்தின் விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளது.

இன்று காலை கோலாலம்பூர் மாநகர் மன்றம் DBKL (Datuk bandar) தரப்பு ஆலயத்திற்கு  சென்றுள்ளது.

அது குறித்து அத்தரப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆலயம் இடிப்படாது என்ற கூற்றை டத்தோ பண்டார் தரப்பு கூறியதைத் தொடர்ந்து, அதனை அரசு உறுதிச் செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறேன். இந்த ஆலயம் ஒருபோது உடைபடாது. அதனை நான் உறுதியாக கூறுகிறேன் என அவர் அழுத்தமாக கூறினார்.

கடந்த 8 மாதங்களாக ஆலய நிர்வாகத்தினர் இந்த விவகாரம் குறித்து அரசுடன் சிறந்த முறையில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஒரு தெளிவான விடைக் கிடைக்கும் என நான் பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன். ஆகையால் மக்கள் பொருமை காக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் நான் பல கூட்டங்களில் கலந்து பேசியுள்ளேன். அதனால் என்னை மீறி ஆலயத்தின் ஒரு கல்லையும் நகர்த்த முடியாது என அவர் மீண்டும் உறுதியாக சொன்னார்.

இதற்கிடையில், ஆலய நிர்வாகம் மற்றும் அரசு இடையே நடந்து வரும் பேச்சு வார்த்தை சிறந்த முறையில் முடிந்தால் மட்டுமே ஆலயம் இடம் மாற்றம் குறித்தும் முடிவு செய்ய முடியும் என அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், மார்ச் 20-
வரும் 27 மார்ச் அன்று, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உடைக்கபடாது. அனைவருக்கும் ஏதுவாக இட மாற்றம் செய்ய முன்னேற்பாடுகள் நடைபெறும்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, கோயில் நிர்வாகத்தினர் இந்த பிரச்சினை தொடர்பாக என்னை அனுகினர். அதன் பின்னர் பலமுறை இது தொடர்பாக பல விவாதங்களும் சந்திப்புகளும் நடந்ததை நான் இங்கு பதிவு செய்கிறேன்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனுடன் இணைந்து இதற்கான சுமூகத் தீர்வை எட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறேன்.

இந்தப் பிரச்சனைக்கு நியாயமாகவும், பக்தர்களைப் புண்படுத்தாத வகையிலும், அனைத்துத் தரப்புக்கும்  இணக்கமான தீர்வை எட்ட இந்த முயற்சியை நான் மேற்கொண்டு வருகிறேன்.

இந்தக் கோவிலுக்கு நல்லதொரு தீர்வை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில், அனைத்து வழிகளும் ஆராயப்படுவதை உறுதி செய்வதற்காக நான் இந்த விஷயத்தை அமைச்சரவையில் பல முறை எழுப்பியுள்ளேன்.

கோயிலை இடமாற்றம் செய்வதற்கான மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏதுவான சிறந்த முடிவைப் பெறுவதற்கு விவாதங்கள் நடந்தன.

கோலாலம்பூரில் பரபரப்பான ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மார்ச் 27 அன்று உடைக்கப்படாது. கோயிலை புதிய இடத்திற்கு மாற்ற, கோவில் நிர்வாகத்திற்கு நியாமான கால அவகாசம் வழங்கப்படும் என கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமினா முகமது ஷெரீப் இன்று கோவில் நிர்வாகத்திடம் நேரில் சென்று உறுதியளித்தார்.

இந்த இடத்தில் மசூதி ஒன்றை எழுப்ப முன்னேற்பாடுகள் நடைபெறப் போகிறது என தெரிவிக்கபட்டதும் பக்தர்கள் பீதியடைந்தனர்.; இந்தத் திட்டம் குறிப்பிட்ட நிலத்தில் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான ஒரு தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறதாகவும், அதனால் ஆலயம் உடைபடும் அபாயம் உள்ளதால் பலர் கவலையுற்றனர்.

இந்தக் கோவிலுக்கு நல்லதொரு தீர்வை எட்ட நாம் பாடுபடும் போது, அனைத்து தரப்பினரும் சுமூகமான முறையில், ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தமது அறிக்கையில் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,மார்ச் 19-

தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் 130ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் இன்னும் கொஞ்ச நாட்களில் உடைக்கப்பட விருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

இது தொடர்பாக நாளை காலை 11 மணி அளவில் டத்தோ அம்பிகா தலைமையிலான lawyer for liberty என்னும் வழக்கறிஞர் குழு செய்தியாளர் சந்திப்பை நடத்த விருப்பதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிலத்தில் ஒரு ஆலயம் இருக்கும் பட்சத்தில் அந்த ஆலயத்திற்கே நிலத்தை வழங்க அரசு தரப்பு முடிவு எடுக்காமல் ஏன் அங்கு மஸ்ஜிட் மடானி கட்ட அரசும் மாநகர மன்றமும் முடிவெடுத்து உள்ளனர்? இது உண்மையா? என்பதற்கான விடையை அவர்கள் தான் கொடுக்க வேண்டும்.

இந்த ஆலயத்தில் இப்படி ஒரு பிரச்சினை தலைதூக்கும் போது அங்கு பார்வையிட சென்ற நமது இந்திய முழு அமைச்சர் கோபிந்த் சிங் , இது தொடர்பாக அரசு தரப்பில் பேசி என்ன முடிவு காணப்பட்டது என்பதை மக்களுக்கு தெரிவிப்பாரா?

அதோடு கூட்டரசு பிரதேச ஆலயம் மற்றும் தமிழ்ப்பள்ளி விவரகாரத்திற்கு பொறுப்பு வகித்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனும் மாநகர மன்றம் மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்திருப்பார். இந்த பேச்சு வார்த்தையின் அதிகாரபூர்வ முடிவு தான் என்ன என்பதை அவர் சொல்வாரா?

இந்த விவகாரத்தில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு என்று நம்புகிறோம்.

இப்போது அந்த ஆலயம் உடைக்கப்பட்டு அங்கு மஸ்ஜித் மடானி கட்டப்படுவது உண்மையா?

விரைவில் இந்த ஆலய பகுதிக்கு பிரதமர் நேரடியாக வருகை தர போவதாக ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்படி பிரதமர் அங்கு வருகை தருவது

ஆலயத்தை காப்பாற்றவா? அல்லது உடைக்கவா? என இப்போது பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தரக்கூடிய பொறுப்பு

அரசு தரப்பில் அதாவது மாநகர மன்றம், கூட்டரசு பிரதேச அமைச்சர், அமைச்சர் கோபிந்த் சிங், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆகியோரிடம் உள்ளது.

மக்களிடம் தெரிவிப்பார்களா?

பிரதமரின் வருகை தொடர்பாக வெளிவந்த தகவல் உண்மையா? பொய்யா? என்பதை பிரதமர் துறை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டால் மட்டுமே வெளிச்சம்.

இதனிடையே நாளை வழக்கறிஞர் குழு இந்த ஆலயம் தொடர்பாக எற்பாடு செய்துள்ள செய்தியாளர் சந்திப்பில் என்ன திடிக்கிடும் தகவலை சொல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 19 –

இனம் மதம் பாராமல் உதவி தேவைபடுபவர்களுக்கு தக்க சமயத்தில் உதவியளிப்பது நாட்டில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் என மஹிமாவின் தலைவர், மஇகாவின் பொருளாளர், மற்றும் டிஎஸ்கே குழுமத்தின் நிர்வாகத்தினருமான டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்தார்.

 

அந்த வகையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு பி40 பிரிவைச் சொந்தவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மற்றும் இறை நம்பிக்கை கொண்ட ஏழை எளிய மக்களுக்கு நன்கொடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியதாக அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை கோலாலம்பூர் ஜாலான் புத்ரா பகுதியில் உள்ள ஹைட்ராபாத் உணவகத்தில் நோன்பு திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து ஏழை மக்களுக்கு இந்த உதவிகளை டத்தோ சிவகுமார் வழங்கியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வு PERKIM சபா பெர்ஹாட் கூட்டுறவுக் கழகம் மற்றும் மலேசிய இஸ்லாமிய ரவ்தா உதவி அமைப்புகளின் ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்டது.

இது போன்ற உதவித் திட்டங்களை நாம் செய்வதன் வழி அனைத்து சமூகத்தினரிடமும் அன்பு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை உணர்வை வளர்க்க முடியும் என்று அவர் கூறினார்.

எங்களிடம் இருந்து இந்த உதவிகளை பெற்றவர்கள் எங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்ததுடன், ரமலான் மாதத்தில் இத்தகைய உதவிகள் மிகுந்த அர்த்தமுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தனர் என டத்தோ சிவகுமார் பெருமிதம் கொண்டார்.

கேப் கேனவரல், மார்.19-

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர்.

அவர்களை மீட்க சென்ற 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று அதிகாலை புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

 

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'போயிங்' நிறுவனத்தின், முதல் விண்கலமான 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.

இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

தற்பொழுது அந்த இரு வீரர்களும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, நாசா விஞ்ஞானிகளையும், மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

செரம்பான், மார்ச் 18-

செரம்பானில் உள்ள கிங் ஜார்ஜ் வி இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ரேய் ஷாமன் மற்றும் நிக்சன் யாப்

2025 ஆம் ஆண்டுக்கான இளைஞர்களின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தீர்வுகளை முன்வைக்கும் உலகளாவிய

போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இவ்விருவரும்

உலகளவில் சிறந்த 11 அணிகளில் இடம்பிடித்து சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் புதுமைக்கான விருதுகளையும் வென்றுள்ளனர்.

இவர்கள் உருவாக்கிய ENVIROGARD சாதனம், காற்று மாசுபாட்டை கண்காணித்து, தரவுகளை சேகரித்து, பாதுகாப்பு எச்சரிக்கைகளை வழங்கும் ஒரு புதுமையான கண்டுபிடிப்பு ஆகும்.

உலகளவில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் பல உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளதால், இந்தப் பிரச்சினையை தடுக்கும் முன்முயற்சியாக இதை உருவாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் 2022 ஆம் ஆண்டில் F1 in Schools Malaysia போட்டியில் முதல் தடவையாக பங்கேற்று, மூன்றாம் இடம் மற்றும் சிறந்த அணிக்கான ரீதியில் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்பின், பல்வேறு தேசிய & சர்வதேச STEM போட்டிகளில் பங்கேற்று, இந்தோனேசியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்து, கண்டுபிடிப்புகளையும் இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ENVIROGARD உருவாக்கம் 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டு, 2025 ஜனவரியில் முடிக்கப்பட்டதாக ரே ஷாமன் மற்றும் நிக்சன் யாப் ஆகியோர் தெரிவித்தனர்.

நாங்கள் கற்ற கணினி அறிவியல் பாடம் மிகவும் கடினமானது. இருப்பினும் நாங்கள் உற்சாகத்துடன் எங்களின் கண்டுபிடிப்பை முன்னெடுத்தோம் என்று அவர்கள் கூறினர்.

வெற்றியை அறிவித்தபோது, "இந்த வெற்றி எங்களுக்கே எதிர்பாராதது!" என்று ரே ஷாமன் உற்சாகமாக பகிர்ந்துள்ளார். “இந்த போட்டி எங்கள் பள்ளி வாழ்க்கையின் முக்கியமான தருணமாகும். இறுதிநேரம் வரை உழைத்தோம். கடின உழைப்பின் பலன் கிடைத்திருக்கிறது” எனவும் அவர் கூறினார்.

இவ்வேளையில் தங்களின் வெற்றிக்கு பெறும் ஆதரவாக இருந்த எங்களின் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இதனைத்தொடர்ந்து

SPM தேர்வுக்கு பின், தாங்கள் ENVIROGARD சாதனத்தை மேம்படுத்த AI மற்றும் Machine Learning முறை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

மேலும், இருவரும் எதிர்காலத்தில் ஒரு தொழில்முனைவோராக ஆகும் முயற்சியில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வேளையில் இவர்கள் இளைய தலைமுறைக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளனர்: "தோல்வி ஏற்பட்டாலும் முயற்சியை கைவிடாதீர்கள். வெற்றி என்பது கடைசி இலக்காக இருக்க முடியாது; தொடர்ந்து வளர்ச்சியடையுங்கள் என்பதாகும்.

-காளிதாசன் இளங்கோவன்

ஜொகூர் பாரு, மார்ச் 17-

நோன்பு மாதத்தில் சாப்பிட்டதற்காக 21 வயது சீன இளைஞரை ஆடவர் ஒருவர் பல முறை அறைந்துள்ள வீடியோ பரவலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணி அளவில் சம்பந்தப்பட்ட இளைஞரிடமிருந்து புகாரை பெற்றதாகவும், விரைவில் இச்சம்பவம் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பால்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறினார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில்

மாட்ர் ஒன்றில் அமர்ந்து உணவு உண்ணும் வேளையில் அங்கு வந்த மலார்காரர் ஒருவர் அந்த சீன இளைஞரிடம் தனது மதத்தை என்னவென்று கேட்டுள்ளார்.

பின்பு அந்த இளைஞரின் அடையாள அட்டையை (MyKad) காண்பிக்குமாறும் அவர் கேட்டுள்ளார். அச்சமயம் சம்பந்தப்பட்ட இளைஞர் அதை அவரிடம் கொடுக்க மறுத்தபோது அந்த ஆடவர் அவரை இருமுறை கன்னத்தில் அறைந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு X சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது இச்சம்பவம் மக்கள் மத்தியில் புகைந்து வருகிறது.

இளைஞரை அறைந்த அந்த ஆடவரின் நடவடிக்கையை கண்டித்து நிறைய பேர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே போலீஸ் தரப்பில் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 323ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சம் வெ.2,000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என பால்வீர் சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் நிலையத்தை 07-5563122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கோசானி, மார்.17-

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் கோசானி நகரில், 'பல்ஸ்' என்ற இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது.

இதில், நேற்று அந்நாட்டின் பிரபல ஹிப் ஹாப் இசைக்குழுவான டி.என்.கே., குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது.

அதை காண கேளிக்கை விடுதியில் 1,500க்கும் மேற்பட்டோர் கூடினர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

அதிகாலை 3:00 மணியளவில் இசை நிகழ்ச்சி நடந்த மேடையில், கூட்டத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில் பைரோடெக்னிக்ஸ் எனப்படும் நீண்ட நேரம் எரியும் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டன

அதிலிருந்து விழுந்த தீப்பொறிகளால் அரங்கத்தில் தீ பிடித்தது.

இதை கவனித்த இசைக்குழுவினர், அனைவரையும் வேகமாக வெளியேறும்படி மைக்கில் அறிவித்தனர்.

இருப்பினும் மளமளவென பரவிய தீயால் கட்டடத்திற்குள் கரும்புகை சூழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, 60 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்

தமிழ்நாடு, மார்.16-

கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ.டாக்டர் எம்.சரவணன் கலந்துக்கொண்டார்.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழ்நாட்டு அமைச்சர்கள்,  கல்விமான்கள் உலகப் பேரறிஞர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், கவிப்பேரரசின் மகாகவிதை எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை  முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள் வெளியிட முதல் நூலை டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் பெற்றுக்கொண்டார்.

 

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகள் கவிஞர் என்கின்ற எல்லையைத் தாண்டி. வாழ்வியலுக்குத் தேவையான   சமுதாயத்தை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்தக்கூடிய பல விஷயங்களைக் கொண்டுள்ளன என சரவணன் தெரிவித்தார்.

 

தமிழுக்கும் இலக்கியத்திற்கும் மகுடம் சூட்டும் விழாவாக அமைந்த இந்த பன்னாட்டுக் கருத்தரங்கை

தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்.

கோலாலம்பூர், மார்ச் 16-

சமூக ஊடகங்களில் 3R விவகாரம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை நாளை திங்கட்கிழமை சட்டத்துறை அதிகாரியின் (AGC) அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்குரிய அந்த நபரின் விளக்கக் குறிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை நாளை சட்டத்துறை அதிகாரியின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும், அங்கு மேலும் நடவடிக்கை பற்றிய முடிவு எடுக்கப்படும் என போலீஸ் தலைவர் ரசாருடின் உசேன் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய நபர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்ட வீடியோவின் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனை அடுத்து அவர் மீது பினாங்கு பத்து கவானில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை பதிவு செய்தனர்.

இதற்கிடையில், ஒன்பது நிமிட வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் போதகரைப் பற்றிய விமர்சனத்தைக் குறிப்பிடுவதோடு, மதம், இனம், அரசமைப்பு 3R, பாதுகாப்புப் படைகள் மற்றும் பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு 1948 தூண்டுதல் எதிர்ப்பு சட்டம் - பிரிவு 4(1)1998 தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் - பிரிவு 233 என்ற சட்டப்பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படும்.

கோலாலம்பூர், மார்.14-

மலேசிய கருணை கரங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைமையில், எதிர்வரும் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை "மண் வாசனை" என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் தமிழர் பாரம்பரிய நடனங்கள் அடங்கிய 7 முக்கிய நடனங்கள் இடம்பெறவிருக்கின்றன.

அவற்றில் கரகாட்டம், மயிலாட்டம், பொம்மை ஆட்டம்,

கோலாட்டம், புலியாட்டம், அக்னிஆட்டம், குதிரையாட்டம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.

இதனை அடுத்து மேலும், பாடல்கள், நடனங்கள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் பாரம்பரிய தமிழ் உடையில் வருவதன் மூலம் சிறந்த பாரம்பரிய ஆடைக்கான பரிசுகளை வெல்ல வாய்ப்பும் உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர்  டத்தோ கோபால்  கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்.

மாலை 6 மணி முதல் தொடங்கப்படும் இந்நிகழச்சியில்  சுமார்

300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொள்வார்கள் என எற்பாட்டுக்குழுவினர் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நிகழ்வில் கலந்து கொள்ளும் மக்களுக்கு வெளிநாட்டு பயண விமான டிக்கெட் வெல்லும் அதிர்ஷ்டக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க ஏற்பாடு குழு தலைவர் சுப்ரா அழைப்பு விடுத்துள்ளார்.

ஷா ஆலம், மார்ச் 14-

மலேசியாகினி செய்தியாளர் பி. நந்தகுமார் மீது இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் எம்ஏசிசி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

42 வயதான அந்த மூத்த செய்தியாளர், இந்தச் சட்டத்தின் பிரிவு 16 இன் கீழ் குற்றச்சாட்டை மறுத்தார். இந்தச் சட்டத்தின்படி, 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், பெறப்பட்ட லஞ்சத் தொகையை விட ஐந்து மடங்குக்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

பல்வேறு வெளிநாட்டு தொழிலாளர் தருவிக்கும் கும்பல்களை பற்றி விவரங்களை இதற்கு முன்னர் நந்தகுமார் அம்பலப்படுத்தியுள்ளர். அவர் பாகிஸ்தான் முகவரிடமிருந்து வெ.20,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

சிப்பாங், மார்ச் 14- சிப்பாங், டேசா விஸ்டாவில் வன்முறையாளர்களான மூன்று அந்நிய நாட்டு குற்றவாளிகளை போலீசார் அதிகாலையில் சுட்டுக் கொன்றனர்.

35 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று ஆண் குற்றவாளிகள், கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரைச் சுற்றி 17 கொள்ளைகள் மற்றும் வீடு திருட்டு சம்பவங்களில்  ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் அனைவரும் டேசா விஸ்டாவில் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பைக் கொள்ளையடிக்க முயன்ற பின்னர் காட்டுப் பகுதியில் ஓடி மறைந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.

சம்பந்தப்பட்ட வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றபோது வீட்டின் உரிமையாளர் அவர்களை கண்டதை தொடந்து அந்த மூவர் அருகிலுள்ள காட்டிற்குள் ஓடி மறைந்துள்ளனர்.

பின்னர் புகார் கிடைத்து அங்கு விரைந்த போலீசார் காட்டுக்குள் மறைந்திருந்த மூவரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போலீசாரை கண்டதும் அம்மூவரும் ஆயுதங்களை கொண்டு தாக்க முயன்றதால் பாதுகாப்பு கருதி போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக அவர் சொன்னார்.

இந்த கும்பல் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இதனால் சுமார் வெ.1 மில்லியன் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது துரித விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பலில் மொத்தம் 5 பேர் உள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருவதாக அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


தெமர்லோ,மார்ச் 13-
நேற்று இங்குள்ள லுரா செமந்தன் ரமலான் சந்தையில் பல பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததற்காக 41 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

@zackRazBundle என்ற பயனரால் பதிவேற்றப்பட்ட 21 வினாடிகள் கொண்ட டிக்டோக் காணொளியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும், பின்னர் அது சமூக ஊடகங்களில் வைரலானதாகவும் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் உதவி ஆணையர் மஸ்லான் ஹாசன் தெரிவித்தார்.

இதுவரை, 23, 26 மற்றும் 27 வயதுடைய மூன்று பெண்களிடமிருந்து காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. அவர்கள் முறையே ஒரு வர்த்தகர், ஒரு காசாளர் மற்றும் ஒரு விற்பனை உதவியாளர் ஆவர்.

மார்ச் 6 மற்றும் 10ஆம் தேதிகளில் ரமாலான் சந்தைக்கு நோன்பை முடிக்க உணவு வாங்க நடந்து சென்றபோது சந்தேக நபர் தங்களை பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரில் தெரிவித்ததாக அவர் கூறினார்.

பெண்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட சந்தேக நபரை அங்குள்ள் பொதுமக்கள் பிடித்து வைத்து, நேற்று மாலை 5.30 மணியளவில் அங்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 


கோலாலம்பூர், மார்ச் 13-
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ், கடந்த வாரம் தன்னுடன் நடந்த சந்திப்பில் கட்சியை விட்டு வெளியேறும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், கோத்தா ராஜா அம்னோ பிரிவுத் தலைவருமான அவர் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கத் தேவையில்லை என்று அவரிடம் தெரிவித்ததாக அகமட் ஜாஹிட் கூறினார்.

தெங்கு ஜஃப்ருல் இன்னும் அம்னோவில் உறுப்பினராகதான் உள்ளார். அவர் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் கோத்த ராஜா அம்னோ பிரிவுத் தலைவராகவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் வெற்றி பெற்ற கட்சியின் உச்சமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் இப்போது அவசரப்பட்டு முடிவெடுக்கத் தேவையில்லை என்று கட்சியின் கருத்தை தான் அவரிடம் முன்வைத்ததாக ஜாஹிட் கூறினார்.

அந்த வகையில் தன் ஆலோசனையை கேட்டு துங்கு ஜப்ரூல் இன்னும் கட்சி உறுப்பினராகவே இருப்பதாக நேற்று உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ உச்ச செயற்குழுவுடனான நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


ஷா ஆலம், மார்ச் 13-
சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் பாஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியும் என்று பாஸ் சிலாங்கூர் நம்பிக்கை தெரிவித்தது.

குறிப்பாக கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா போன்ற பாஸ் கட்சியால் ஆளப்படும் மாநிலங்களில் பிறந்து சிலாங்கூர் மாநில குடியிருப்பாளர்களாக வாழ்பவர்கள் இந்த மாற்றத்தை கொண்டு வரலாம் என அக்கட்சியின் ஆணையர் அப்துல் ஹலிம் தமுரி கூறினார்.

சிலாங்கூரில் வாழும் மக்கள் சிலாங்கூரில் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக ஷா ஆலம, சுங்கை பூலோ, பாங்கி, செகிஞ்சன், செமினி மற்றும் செபாங் போன்ற பகுதிகளுக்கு ஆதரவு தேவை.

தயவுசெய்து சிலாங்கூரில் வசிப்பவர்கள் சிலாங்கூரில் வாக்களியுங்கள். இது மிகவும் எளிதானது. வாக்குச்சாவடியை மாற்ற தபால் நிலையத்திற்கு மின்சாரம் அல்லது தண்ணீர் கட்டண ரசீதை கொண்டு செல்லுங்கள் என்று அவர் நேற்றிரவு ஷா ஆலமில் ஊடகவியலாளர்களுடன் ஒரு உரையாடல் அமர்வில் கூறினார்.

பாஸ் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை PH-BN இலிருந்து பறிக்கும் முயற்சியில் பிற மாநிலங்களைச் சேர்ந்த அதன் ஆதரவாளர்கள் சிலாங்கூரில் வாக்காளர்களாக மாற வேண்டும் என்ற கருத்தை பாஸ் சிலாங்கூர் ஆதரிக்கிறதா என்று கேட்டபோது, ​​பாயா ஜராஸ் சட்டமன்ற உறுப்பினரான அப்துல் அலிம் இவ்வாறு கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர், மார்ச் 12-
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட விசாரணையில் ரொக்கம் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அம்னோ மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எம்ஏசிசியால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கத்திற்கும் அம்னோவின் தேர்தல் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

எம்ஏசிசியால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கக் கட்டிகளுடன் அம்னோ ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை என்பது எங்கள் கருத்து.

அதற்கு அரசியல் நிதி அல்லது அம்னோவால் செய்யப்பட்ட வசூல்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் சொன்னார்.

இந்த வழக்கில் வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணையை நடத்துவதை அம்னோ எம்ஏசிசியிடம் விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், மார்ச் 12-

இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜம்ரி வினோத் மீதான விசாரணை குறித்து அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்காக போலீசார் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்ரி வினோத் மீது இதுவரை 894 போலீஸ் புகார்கள் வந்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

சமீபத்தில் அவர் மீது பல்வேறு தரப்பினர் அளித்த போலீஸ் புகார்களைத் தொடர்ந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உரையாடலைப் பதிவு செய்யும் நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணை அறிக்கைகள் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

விசாரணை அறிக்கை இன்னும் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர், மார்ச் 12-
2024ஆம் ஆண்டு 15 மணிநேரம் இடைவிடாது உடல் பயிற்சி செய்து உலக அளவில் சாதனை படைத்த பின்னர் இவ்வாண்டு மலேசிய அளவில் 3 சாதனைகளை படைக்கும் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளார் பகாங் கோல லிப்பிஸை சேர்ந்த 28 வயதுடைய ஜெய் பிரபாகரன் தேவர் குணசேகரன்.

அதற்காக நாள்தோறும் கடுமையான உடல் பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார். ஸ்கூவாட், லேக் எக்ஸ்டென்ஷன், ஜம்பிக் ஜெக்ஸ் ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டு அவர் இச்சாதனையை படைக்கவுள்ளார்.

மேலும் இம்மூன்று சாதனைகளை படைப்பதற்கான பயிற்சிகளை இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து தாம் தொடங்கி விட்டதாக டாக்டர் கேஜே என்று அழைக்கப்படும் அவர் கூறினார்.

ஒருநாளைக்கு மூன்று முறை பயிற்சியில் ஈடுபடுகிறேன். இம்முறை மேற்கொள்ளப்படும் இந்த மூன்று சாதனைகளும் கால்களை பயன்படுத்தி செய்யப்படவிருப்பதால் கால்களுக்கு அதிக பயிற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

இம்முறை மேற்கொள்ளப்படும் இச்சாதனைக்கு நான் என் உடல் எடையை குறைத்தாக வேண்டும். குறைந்தபட்சம் 30 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்பதனால் உணவு முறையில் அதிக அக்கறை காட்டி வருகிறேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் தாம் மேற்கொண்டு வரும் கடுமையான பயிற்சி தனக்கு வெற்றியை அளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இத்தகைய முயற்சிகள் வருங்கால இளைஞர்களுக்கு ஊக்குவிப்பாகவும் அமையும். உடல் பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மனதை வலுப்படுத்தும். இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் நல்ல வழியில் செல்வதற்கு தாம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வதுதான் தனது ஆசை என டாக்டர் கேஜே தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் நடைப்பெறவுள்ள இப்போட்டியில் ஒவ்வொரு உடல் பயிற்சியையும் வழங்கப்பட்டிருக்கும் 5 மணிநேரத்திற்குள் குறைந்தபட்சம் 3,000 முறை செய்வதற்கு தாம் உத்தேசியத்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில் இந்த சாதனைகளை மேற்கொள்ள தமக்கு பக்கபலமாக இருக்கும் தாயார், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு டாக்டர் கேஜே நன்றியை தெரிவித்து கொண்டார்.

பங்கோர், மார்ச் 11-
பங்கோர் தீவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் மாசி மகத் திருவிழா நாளை காலை முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.

இதனிடையே இன்று இரவு பங்கோர் தீவில் உள்ள பாசிர் போகா ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் எடுக்கப்பட்டு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்த புனித விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்துக்கொண்டார்.

மேலும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தி, அம்மனின் அருளைப் பெற்றனர்.

இந்த மாசி மகத் திருவிழா, பங்கோர் தீவின் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும். இவ்விழாவில் சீன சமூகத்தினரும் இந்து சமூகத்தினருடன் இணைந்து பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இது சமூக நல்லிணக்கத்தைக் காட்டுகிறது.

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், பங்கோர் தீவில் அமைந்துள்ள ஒரே இந்து ஆலயமாகும். இந்த ஆலயம், அதன் அழகிய வடிவமைப்பால் பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கிறது.

மொத்தத்தில், பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மாசி மகத் திருவிழா, பக்தர்களின் பெரும் பங்கேற்புடன், சமூக நல்லிணக்கத்தைக் காட்டி மிக சிறப்பாக நடைபெறும் திருவிழாவாக அமைகிறது.

கோலாலம்பூர் மார்ச் 11-

அரசாங்கத்தின்  வேண்டுகோளுக்கு இணங்க  நாட்டின் சுபிட்சம் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டத்தோஸ்ரீ எம்.சரவணன் விவாதத்தை  நிறுத்தினார். அரச மலேசிய போலீஸ் படை, ஒற்றுமை அமைச்சு,  உள்துறை அமைச்சு, ம.இ.கா,  மக்கள் என பலரது வேண்டுகோளுக்கு இணங்க  இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதே வேளையில்  மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்த்து சம்ரி வினோத் போன்றவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையை  ஒட்டு மொத்த  இந்திய சமுதாயம் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.

ஆகையால்  அரசாங்கம் சம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்ரி வினோத்  மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ,இந்திய சமுதாயம் அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும்.

மக்கள் நலன் , நாட்டின் அமைதியை  காக்க ஒரு தலைவராக நான் எடுத்த முடிவு  மக்களின் நலனுக்காக  மட்டுமே தவிர பயந்தோ பனிந்தோ கிடையாது.

அதே நேரத்தில்  அரசாங்கமும் மக்கள் குரலை மதித்து சம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய சமுதாயத்தின்  குரலை இந்த அரசு  மதிக்க வேண்டும்.

அப்படி மதிக்காத பட்சத்தில்  வரும் காலங்களில்  இந்த அரசாங்கம் இந்திய  சமுதாயத்தின்  ஆதரவை இழக்கும் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

 

கோலாலம்பூர், மார்ச் 10-
மதம் அல்லது இன வெறுப்பைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாம் மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

பிற மதத்தை அவமதிப்பதை மன்னிக்க முடியாது. அதோடு, பிற மதத்தை அவமதிப்பவர்கள் அதற்கான விளைவினை கட்டாயம் சந்திக்க வேண்டும். இதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7, 2025) அன்று, அமைச்சரவையில் இந்த விஷயம் எழுப்பப்பட்டதாகவும், மேலும் இதுபோன்ற வழக்குகளில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு கிட்டியதாகவும் அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார்.  

தகவல் அமைச்சர் டத்தோ பாஹ்மி பட்சில் அதே நாளில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டது, இந்த சர்ச்சையின் அவசரத்தை புலப்படுத்துகிறது. 

காவல்துறையில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

இருந்தாலும் கூட, சிலர் வேண்டும் என்றே, இதே சர்ச்சையை மீண்டும் மீண்டும் எழுப்புவதை நாம் காண்கிறோம். இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்குவதோடு, பலரைச் சினமடையச் செய்கிறது. ஆகவே இந்த நிலைமையை கருத்தில் கொண்டு காவல்துறையினர் விரைவாகச் செயல்பட வேண்டும் என அமைச்சர் கூறினார். 

பிற மதத்தை அவமதிக்கும் இது போன்ற பதிவுகளையும் அறிக்கைகளையும் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறினார். 

அவர்கள் மீது உடனடியாகச் சட்டம் பாய வேண்டும். இதுபோன்ற சர்ச்சையை சமாளிக்க சட்ட விதிகள் உள்ளன. இந்த விதிகள் அமல்படுத்தப்படாவிட்டால் அவை அர்த்தமற்றவையாக ஆகிவிடும் என அமைச்சர் கோபிந் சிங் கூறினார்.

புத்ராஜெயா,மார்ச் 10-

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானிய ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் செய்வதற்கான வாய்ப்பு எப்போதும் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர், எழும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பின் மூலம் விவாதிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் எதிர்க்கட்சி விதியின் வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் (MoU) திருத்தம் செய்யலாம் என்றும் கூறினார்.

“எதிர்க்கட்சியில் இருந்தபோது நான் ஐந்து கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். அமர்ந்து பேசினால் வரைவில் திருத்தம் செய்யலாம். வெளியில் இருந்து பேசுவதால் ஒன்றும் நடக்க போவதில்லை. நீங்கள் ஹீரோவாக விரும்பினால், முதலில் படிக்கவும் என்று அவர் இன்று சைபர்ஜெயாவில் உள்ள உள்நாட்டு வருவாய் வாரிய கட்டத்தில் நடைபெற்ற 29 வது வருவாய் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானிய ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நிர்ணயித்த நிபந்தனைகளை ஏற்காததற்கு கட்சிக்கு அதன் சொந்த காரணங்களும் அடிப்படையும் இருப்பதாக நேற்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அன்வார் இவ்வாறு கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

புத்ராஜெயா,மார்ச் 10-
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானிய ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் செய்வதற்கான வாய்ப்பு எப்போதும் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர், எழும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பின் மூலம் விவாதிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் எதிர்க்கட்சி விதியின் வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் (MoU) திருத்தம் செய்யலாம் என்றும் கூறினார்.

“எதிர்க்கட்சியில் இருந்தபோது நான் ஐந்து கூட்டங்களை நடத்தியிருக்கிறேன்.  அமர்ந்து பேசினால் வரைவில் திருத்தம் செய்யலாம். வெளியில் இருந்து பேசுவதால் ஒன்றும் நடக்க போவதில்லை.  நீங்கள் ஹீரோவாக விரும்பினால், முதலில் படிக்கவும் என்று அவர் இன்று சைபர்ஜெயாவில் உள்ள உள்நாட்டு வருவாய் வாரிய கட்டத்தில் நடைபெற்ற 29 வது வருவாய் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானிய ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நிர்ணயித்த நிபந்தனைகளை ஏற்காததற்கு கட்சிக்கு அதன் சொந்த காரணங்களும் அடிப்படையும் இருப்பதாக நேற்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அன்வார் இவ்வாறு கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

டாமன்சாரா, மார்ச் 10-

ஸ்ரீ மதுரை வீரன் சங்கிலி கருப்பர் ஆலயத்தின் 18ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா நேற்று மார்ச் 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ்வேளையில் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்திற்கு சிறப்பு வருகை தந்த டாமன்சாரா தேசிய முன்னணி மற்றும் மசீச தலைவர் ஜிதி. தான் அவர்களை ஆலய தலைவர் அன்பழகன் கொளவித்து வரவேற்றார்.

மேலும், டாமன்சாரா மஇகா இளைஞர் பிரிவு மற்றும் சிலாங்கூர் மாநில மத்திய செயலவை உறுப்பினர் தயாளன், எம்ஜிஆர் விஜயசேகர் உள்ளிட்ட பலர் திருவிழாவில் கலந்துகொண்டு மதுரை வீரன் மற்றும் சங்கிலி கருப்பர் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு பெருமளவில் பக்தர்கள் திருவிழாவில் திரண்டிருந்தனர்.

திருவிழாவின் ஒரு பகுதியாக, சிறப்பு பூஜை, அர்ச்சனைகள், மற்றும் பக்தர்களுக்கான சிறப்பு அன்னதானம் நடத்தப்பட்டது. ஆலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா பக்தர்களிடையே ஆன்மிக உணர்வை அதிகரித்ததுடன், அதிகமான இளைஞர்கள் திருவிழாவில் கலந்துக் கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கினர்.

கோலாலம்பூர், மார்ச் 10-

இந்த நாட்டின் மூவினத்தின் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் இந்துக்களை காயப்படுத்தி இந்த நாட்டின் நிலைதன்மையை சீர்குலைக்கும் சம்ரி வினோத்தை அரசாங்கம் உடனே கைது செய்ய வேண்டும் என்று மலேசிய தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர் வழியுறுதினார்.

இவர் மீது நாடுதளுவிய நிலையில் மக்கள் புகார் கொடுத்து. போலீஸ் விசாரனை செய்கிறார்கள் என போலீஸ் படைத் தலைவர் தெரிவித்தார்.

அவர் பதிவு செய்த சர்ச்சையான பதிவை நீக்க தகவல் தொடர்பு துறை அமைச்சிடம் புகார் கொடுத்து அந்த புகார் எம்.சி.எம்.சி வாயிலாக முகநூல் நிறுவனத்திற்கு அனுபப்பட்டு அந்த பதிவு நீக்கப்பட்டது.

இப்படி இருக்கும் போது...இவர் மீது விசாரனை நடக்கும்போதும், அமைச்சின் வாயிலாக பதிவு நீக்கப்பட்டப் போதும் , திமிர் பிடித்த தனமாக மீண்டும் அந்த பதிவை பதிவேற்றம் செய்து உள்ள சம்ரி வினோத் இந்த அரசையும் அரசாங்கத்தையும் மதிக்காததை காட்டுகிறது.

இந்த நாட்டில் ஏதோ ஒரு பிரிவினையை கொண்டுவரும் உள் நோக்கத்துடன் இவர் செயல்படுகிறார். இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. அந்த பொறுப்பின் அடிப்படையில் சம்ரி வினோத்தை கைது செய்யும் படி மலேசிய தமிழ்ப்பத்திரிக்கையாளர் சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர் அரசாங்கத்தை கேட்டு கொண்டார்.

கோம்பாக், மார்ச் 8-

இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் இனவாத கருத்துகளை முகநூலில் வெளியிட்ட ஷம்ரி வினோத் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பு

போலீஸ் புகார் அளித்துள்ளது.

இன்று கோம்பாக் வட்டார தலைமை போலீஸ் நிலையத்தில் சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பின் தலைவர் மாரன் தலைமையில் 15 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.

ஷம்ரி வினோத்தின் இச்செயல் மலேசியாவின் சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மலேசியா ஓர் சிறந்த நாடு,

பல இன மக்கள் ஒற்றுமையாக வாழும் நம் இந்நாட்டில், இது போன்ற இனவாதம், மற்றும் சமூகங்களுக்கிடையே  பிளவை ஏற்படுத்தும் வகையிலான பதிவினை வெளியிட்டு சர்ச்சையை ஏப்படுத்தியுள்ள ஷம்ரி வினோத் போன்றவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

தொலைத்தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 மற்றும் குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பொருத்தமான சட்டங்களின் கீழ், ஜாம்ரி வினோத்திற்கு எதிராக உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அவர் வலியுறுத்தியுள்ளார்.

நமது நாட்டின் ஒற்றுமை, மரியாதை மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்க்கொண்டதாகவும்,

மலேசியர்களாகிய நாம் அனைவரும் இவ்வேளையில்  இனவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கமும் அதிகாரிகளும் நீதியுடன், விரைவாக செயல் படுவார்கள் என நம்புகிறோம். மலேசியாவின் ஒற்றுமை மற்றும் பண்பாட்டு பல்முகத்தன்மையை பாதுகாப்பது  அனைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இவ்விவகாரத்தில் இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுத்த மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் சொன்னார்.

 

கோலாலம்பூர்,மார்ச் 9-

ம.இ.கா இளைஞர் பிரிவை சார்ந்த தமிழ் ஈஸ்வரன்  எம்.சி.எம்.சி-க்கு கொடுத்த புகாரை தொடர்ந்து 24 மணி நேரத்தில்  அந்த புகார் முகநூல் (meta)  நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு இப்போது சம்ரி வினோத்தின் சர்ச்சையான பதிவு ஆகற்றப்பட்டதாக  தமிழ் ஈஸ்வரன் தெரிவித்தார்.

சமீபத்தில் சம்ரி வினோத் எனப்படும்    நபர் வெளியிட்ட முகநூல் பதிவு  ஒன்று இந்துகளின் மனம் காயப்படும் அளவில் சர்ச்சையாக இருந்தது.

இவர் மீது நடவடிக்கை அவசியம் தேவை என ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோஸ்ரீ  எம்.சரவணன், முன்னாள் துணை அமைச்சர் ராம் கர்பால், எம்.பிகளான பி.பிரபாகரன், ராயர் சட்டமன்ற உறுப்பினரான குணராஜ் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

அதோடு பல கட்சிகள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் பொது மக்களும் போலீஸ் புகார் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜெளுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் ஏன் சம்ரி வினோத்தின்  பதிவு இன்னும் அகற்றப் படவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இதற்கு இடையில்  ம.இ.காவின் இளைஞர் பிரிவை சார்ந்த தமிழ் ஈஸ்வரன் இது தொடர்பாக எம்.சி.எம்.சி-க்கு புகார் கொடுத்த நிலையில் அந்த புகார் முகநூல்  நிறுவனமான (Meta) -வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்களது விதிமுறை வரையறையை அந்த பதிவு மீறி உள்ளதால் அந்த பதிவு முகநூலில் இருந்து அகற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து   உடனே நடவடிக்கை எடுத்த அமைச்சர்  டத்தோ ஃபாமி ஃபட்சில்  மற்றும் எங்களுக்கு இது தொடர்பாக (எந்த முறையில் புகார் கொடுப்பது) என ஆலோசனை வழங்கிய டத்தோ சிவபாலன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவிப்பதாக தமிழ் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இந்த  செய்தி தொடர்பாக தகவல் தொடர்பு துறை அமைச்சிடம் கேட்ட போது அவர்கள் இதனை  உறுதி செய்தனர்.

டாமான்சாரா, மார்ச் 8-
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளை போற்றும் முக்கிய நாளாகும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நாளில் பெண்களுக்கு மலர் கொடுத்து அவர்களை மகிழ வைத்தார் மஇகாவின் சிலாங்கூர் மாநில மகளிர் பிரிவு துணைத் தலைவியும், டாமான்சாரா தொகுதி மகளிர் தலைவியுமான புவனேஷ்வரி தனசேகரன்.

இனம்,மதம் பாகுபாடு இன்றி மகளிர் என்ற அடிப்படையில் அனைவருக்கும்
மலர் கொடுத்து அவர்களுக்கு உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அவர்.

ஒவ்வொரு ஆண்டும், மகளிர் தினம் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் முன்னேற்றம் அவர்கள் கடந்து செல்லும் தடைகள் என்பது
2025ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ஆகும்.

அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் இக்கட்டான வாழ்க்கை சூழ்நிலையில் பல இன்னல்களை மட்டுமல்லாது பல சவால்களையும் கடந்து பெண்களும்  வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைந்து வருகின்றனர்.

குடும்பத்திற்காகவும் நாட்டிற்காகவும் அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு அளவில்லாது. அவர்களளின் பங்களிப்பை பாராட்டி இந்த புனித தினத்தித்தன்று நாம் அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.

நான் ஒர் பெண் என்ற அடிப்படையில் மற்ற பெண்களை மகிழ வைப்பதில் எனக்கு மிக்க சந்தோஷம். அந்த வகையில் அவர்களுக்கு மலர் கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதன் மூலம் நான் அவர்களை மகிழ வைத்திருக்கிறேன் என நம்புகிறேன்.

இவ்வேளையில்  நாம் அனைவரும் இதே போன்று தொடர்ந்து பெண்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும். அதுமட்டுமின்றி பெண்களின்  சமத்துவத்திற்காகவும் குரல் கொடுக்க வேண்டும்  என புவனேஷ்வரி தனசேகரன் தெரிவித்தார்.

கோம்பாக், மார்ச் 7-

இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் இனவாத கருத்துகளை வெளியிட்ட ஷம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெர்துபுஹான் பெர்கெராக் செபாயா சிலாங்கூர் தலைவரும், தேசிய மஇகா இளையர் மன்றத்தின் உறுப்பினருமான

விக்னேஸ்வரன் கோபால் சிங்கம் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

இன்று கோம்பாக் வட்டார தலைமை போலீஸ் நிலையத்தில் விக்னேஸ்வரன் உட்பட ஹென்ட்றி குமார், தேவா, தேர்ரி ராஜ், தசராஜ் மற்றும் தினாலன் அகியோர் ஷம்ரி வினோத்திற்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளனர்.

ஷம்ரி வினோத்தின் இச்செயல் மலேசியாவின் சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பல இன மக்கள் ஒற்றுமையாக வாழும் நம் நாட்டில், இது போன்ற இனவாதம், மற்றும் சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு செயலுக்கும் இடமில்லை.

தொலைத்தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 மற்றும் குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பொருத்தமான சட்டங்களின் கீழ், ஜாம்ரி வினோத்திற்கு எதிராக உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நமது நாட்டின் ஒற்றுமை, மரியாதை மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்க்கொண்டதாகவும்,

மலேசியர்களாகிய நாம் அனைவரும் இவ்வேளையில் இனவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கமும் அதிகாரிகளும் நீதியுடன், விரைவாக செயல் படுவார்கள் என நம்புகிறோம். மலேசியாவின் ஒற்றுமை மற்றும் பண்பாட்டு பல்முகத்தன்மையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

யூஎஸ்ஜே, மார்.7-

இந்த நாட்டின் அமைதியை கெடுக்கும் நபர்கள் மீது சொஸ்மா சட்டம் பாய வேண்டும் என தேசிய மஇகாவின் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர்

கேசவன் கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில் தற்பொழுது இந்து சமயத்தை இழிவு படுத்தி பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஷம்ரி வினோத் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று மஇகாவின் இளைஞர் படையோடு கேசவன் யூஎஸ்ஜே (8 )போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் அளவிற்கு இந்து சமயத்தையும் இந்துக்களின் வழிப்பாட்டு முறையையும் இழிவுப்படுத்தும் வகையில் ஷம்ரி வினோத் என்பவர் முகநூலில் பதிவு செய்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அவரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்து நாடு தழுவிய அளவில் பல இடங்களின் அரசியல் தலைவர்கள், அரசு சாரா இயக்கங்களின் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் மஇகாவின் சார்பில் மஇகா சிலாங்கூர் இளைஞர் பிரிவு தலைவர் கோபிராஜ், இளைஞர் பிரிவின் தகவல் தொடர்பு தலைவர் நவின்ட்ரன், சுபாங் வட்டார இளைஞர் பிரிவு தலைவர் தர்வின், செப்பாங் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் குணா மற்றும் செந்தில் குமார் அகியோர்

ஷம்ரி வினோத் மீது போலீசார் சொஸ்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்துள்ளனர்.

சமயத்தை இழிவு படுத்தும் சம்பவங்கள் அன்மைய காலமாக குறைந்து காணப்பட்டது.ஆனால் தற்பொழுது நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் இது போன்ற சம்பவங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

ஷம்ரி வினோத்தின் நடவடிக்கையை கண்டித்து இன்று மஇகாவின் தேசிய துணைத் தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த காணொளியில், தொடர்ந்து இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் ஷம்ரி வினோத் போன்ற நபர்கள் மீது அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அது மட்டுமின்றி இவர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க இது ஒரு பாடமாக இருக்கும் அதோடு நாட்டின் அமைதியும் சீராக இருக்கும் என்றார்.

அதன் அடிப்படையில் நாங்கள் இன்று இந்த போலீஸ் புகாரை செய்தோம் என கேசவன் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

பெஸ்தாரி ஜெயா, மார்.7-

இந்து சமயத்தை இழிவு படுத்தி பதிவுகளை தொடர்ச்சியாக  வெளியிட்டு வரும்  ஷம்ரி வினோத்  மீது  கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெஸ்தாரி ஜெயா வட்டார இளைஞர்கள் போலீஸ் புகார் செய்துள்ளனர்.

நாட்டில் தற்பொழுது இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்ப்படுத்தும் அளவிற்கு இந்து சமயத்தையும் இந்துக்களின் வழிப்பாட்டு முறையையும்  இழிவுப்படுத்தும் வகையில் ஷம்ரி வினோத் என்பவர் முகநூலில் பதிவு செய்து வருகிறார்.

அன்மையிலும் அப்படி ஒரு பதிவு வந்தது. இதனை தொடர்ந்து அவரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்து நாடு தழுவிய அளவில் பல இடங்களின் அரசியல் தலைவர்கள், அரசு சாரா இயக்கங்களின் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
ஷம்ரி வினோத்  மீது போலீசார் சொஸ்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று இரவு அவ்வட்டார போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

சமயத்தை இழிவு படுத்தும்  சம்பவங்கள் அன்மைய காலமாக குறைந்து காணப்பட்டது.ஆனால் தற்பொழுது ஷம்ரி வினோத் போன்ற  நபரால்  அது மீண்டும் தொடரப்பட்டு உள்ளது.

ஷம்ரி வினோத்தின்  நடவடிக்கையை கண்டித்து இன்று மஇகாவின் தேசிய துணைத் தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த காணொளியில் அவர் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் ஷம்ரி வினோத் போன்ற நபர்கள் மீது அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அது மட்டுமின்றி இவர்கள்  சொஸ்மா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க இது ஒரு பாடமாக இருக்கும் நாட்டின் அமைதியும்  சீராக இருக்கும் என்றார்.

அதன் அடிப்படையில் நாங்கள் இன்று இந்த போலீஸ் புகாரை செய்தோம் என பெஸ்தாரி ஜெயா வட்டார இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

- காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர் மார்.6.

இந்து சமயத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் சமயப்போதகர் எனச் சொல்லிக் கொள்ளும் சம்ரி வினோத் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்து சமயத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் சம்ரி வினோத்திற்கு எதிராக இந்துகள் அனைவரும் ஒன்று திரண்டு போலீஸ் புகார் செய்ய வேண்டும்.

அரசியல் நம்பிக்கைகளைத் தாண்டி இந்து சமயத்தின் மாண்பை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைவோம் என்ற அவரது கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வரவேற்கிறது என்று அதன் தலைவர் மோகனன் பெருமாள் தெரிவித்தார்.
 
பல்வேறு தரப்பினர் இந்து சமயத்தை தொடர்ந்து விமர்சிப்பதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

"ஒரு சம்ரி வினோத்துக்கு ஆதரவளித்து  ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்து விட வேண்டாம்" என தப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் . சரவணன் முன்வைத்துள்ள கருத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசாங்கம் மிக முக்கியமான கோரிக்கையாக கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து ஒட்டு மொத்த இந்து சமூகமும் ஒன்று திரண்டு சம்ரி  வினோத்திற்கு எதிராக போலீஸ் புகார் செய்ய வேண்டும் என டத்தோஸ்ரீ சரவணன் முன்வைத்துள்ள கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வரவேற்கிறது.

இந்து சமயத்துக்கு எதிரான தொடர் தாக்குதலை நடத்தி வருவதை சம்ரி வினோதி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அரச மலேசியப் போலீஸ் படை அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில்  போலீஸ் புகார் செய்ய வேண்டும் என சங்கம்  தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது என்று   மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், ,மார்ச்.5-

தைப்பூசத்தின் போது இந்துக்கள் வேல் வேல் என்று கூறி போதையில் பேய் பிடித்தவர்கள் போன்று ஆடுகிறார்கள் என்று சமய போதகர் ஜம்ரி வினோத் சர்ச்சைக்குரிய விசயத்தை பதிவு செய்துள்ளதை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கண்டித்துள்ளார்.

காவடி ஏந்தி நேர்த்திக் கடனை பூர்த்தி செய்துள்ள டத்தோஸ்ரீ  சரவணன், அவர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக்கள் பொறுப்பற்றதாகவும் மிகவும் அவமரியாதைக்குரியதாகவும் உள்ளது என கூறியுள்ளார்.

இந்து உணர்வுகளை வெளிப்படையாக புறக்கணிக்கும் வகையில் இந்த கருத்துக்கள் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

இது மடானி அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படும் 3ஆர் எனப்படும் இனம், மதம், அரச ஆட்சியாளர்கள் கொள்கைகளின் தெளிவான மீறலாகும். 

இதுபோன்ற எரிச்சலூட்டும் அறிக்கைகள் நமது நாட்டின் நல்லிணக்கத்தை அச்சுறுத்துகின்றன. இது தண்டிக்கப்படாமல் போகக்கூடாது என்று அவர்  கூறினார்.

பல போலிஸ் புகார்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஆத்திரமூட்டலைத் தடுக்க போலிஸ், அரசாங்கம் விரைவான தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜம்ரியின் தொடர்ச்சியான குற்றங்கள் மலேசியாவின் பல மத சமூகத்தின் மீது முழுமையான உணர்திறன், மரியாதை இல்லாததைக் காட்டுகின்றன.

அவரது வார்த்தைகள் இந்து நம்பிக்கை, அதன் கலாச்சாரம் பாரம்பரியத்திற்கு நேரடி அவமானமாகும்.

ஜம்ரி இந்து மதத்தை அவமதிப்பது இது முதல் முறை அல்ல.

ஆகையால் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோனை டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு முறையும் அவர் இதுபோன்ற புண்படுத்தும் கருத்துக்களைச் சொல்லும்போது,  பொறுப்பைத் தவிர்க்க பலவீனமான சாக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார். 

இந்த முறை அது முடிவுக்கு வர வேண்டும். நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறினார்.

கோல சிலாங்கூர், மார்ச் 5-

மலேசிய இந்து சங்கம் கோல சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 25ஆவது ஆண்டு பொதுக்கூட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 ஆம் தேதி ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில், சிலாங்கூர் பிரதிநிதியாக தலைமையேற்ற சங்கப்பூஷன் மனோகரன் கிருஷ்ணன், தலைவர் பன்னீர்செல்வம் வேலு தலைமையிலான மலேசிய இந்து சங்கம் கோல சிலாங்கூர் வட்டாரப் பேரவை, சமய பணிகளில் திறம்பட செயல்பட்டு வருவதாக, புகழாரம் சூட்டினார்.

 

குறிப்பாக, சிலாங்கூரில் துரிதமுடன் பல்வேறு சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் வட்டார பேரவைகளில், கோலசிலாங்கூரும் ஒன்று என கூறிய அவர், தலைவருக்கு முதுகெலும்பாக இருந்துவரும் செயலவை உறுப்பினர்களைப் பாராட்டினார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பன்னீர்செல்வம் வேலு, முன்னாள் தலைவர்களின் அருட்சேவைகளை நினைவுக்கூறியதுடன் ஆலய நிர்வாகங்களின் கடப்பாட்டை விவரித்தார்.

 

குறிப்பாக, திருவிழாக்காலங்களில் ரத ஊர்வலங்களின் போது, போலீஸ் வழங்குகின்ற நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கு ஏற்ப ஆலய நிர்வாகங்கள் செயல்பட வேண்டுமென்றும், ஆலயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இந்து சங்கத்தை நாடும்படியும் கேட்டுக்கொண்டார்.

 

அதேவேளையில், கூட்டத்தில் பேசிய கோல சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் செயலாளர் ரெ.பூபாலன், இந்து சங்கம் முன்னெடுக்கின்ற சமய நிகழ்ச்சிகளில், சுற்றுவட்டாரத்திலுள்ள இந்து மாணவர்களை பங்கேற்க செய்யும்படி, உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, அக்கூட்டத்தில், கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு, பொன்னாடைப் போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

சங்க உறுப்பினர்கள், ஆலய பிரதிநிதிகள் என 60க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

சுங்கை பட்டாணி, மார்ச்.5-

பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த "ஏம்ஸ்ட் நமது தேர்வு" எனும் மிகப்பெரிய திட்டம் எதிர்பார்த்தைவிட மாபெரும் வெற்றி கண்டது.

தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி தலைமையில்

இந்த "ஏம்ஸ்ட் நமது தேர்வு" எனும் மாபெரும் திட்டம் மிகவும் சிறப்பான முறையில் மாபெரும் வெற்றியினை எட்டியது.

இந்நிகழ்வில் சுமார் 1,121 மாணவர்களுடன் 487 பெற்றோர்களும் மற்றும் 250 நிகழ்வின் ஏற்பாட்டளர்களும் கலந்துக் கொண்டனர்.

இந்த திட்டத்திற்கான உண்ணதமான சிந்தனைத் தோன்றிய கனமே டான் ஸ்ரீ எம்.இராமசாமி அவர்கள் தனது நிர்வாக குழுவினரின் ஆதரவுடன் கடந்த ஒரு மாத காலமாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

இந்திகழ்வில் முறையே 1,121 மாணவர்கள் கலந்துக்கொள்வதை உறுதி செய்வதற்கு, இந்நிகழ்வு தொடர்பான விவரங்கள் ஊடகங்கள் மூலமாகவும், பள்ளிகள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தல் மூலமாகவும் விவரங்கள் கொண்டு சேர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பதிவுகளை இணையம் வாயிலாக பதிவு செய்வதை உறுதி செய்யப்பட்டது. இவ்வாராக பதிவு செய்தலின் வழி மாணவர்களின் வருகை மற்றும் எண்ணிக்கை முறையே ஏற்ப்பாட்டுக் குழுவினர் உறுதி செய்தனர்.

இந்நிகழ்வோட்டம் நேர்த்தியாகவும் சிறப்பான முறையில் நடந்தேரவும் அனைத்துத் தொகுதி தலைவர்களும் ஏற்பாட்டு குழுவினரும் மேற்பார்வையிட்டு செயல்பட்டனர்.

இம்முயற்சியின் வழி, மாணவர்களும் பெற்றோர்களும் மஇகாவின் கல்விக்கூடமான ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அனைத்து கல்வித்துறைகளையும் அதன் வழி பெறப்படும் கல்வியினைப் பற்றியும் அறிந்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் வழி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்திய சமுதாயத்திற்கு மஇகா ஏம்ஸ்ட் பல்கலைகழகம் ஏற்படுத்தியுள்ள சலுகைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வருகைப்புரிந்த மாணவர்களுக்கு ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கக் கூடிய, சான்றிதல் கல்வி ,அடிப்படைக்கல்வி,பட்டையக்கல்வி,இயங்கலை கல்வி போன்ற வாய்ப்புகள் பற்றிய விவரங்களைத் தெரிந்தும் பகிர்ந்தும் கொண்டனர்.இத்துடன் தொழில்திறன் கல்வி தொடர்பான விளக்கமும் வருகைப்புரிந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதன் வழி மாணவர்கள் கைத்தொழில் கற்று வாழ்க்கையில் மேன்மை அடைய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதனை அறிந்தனர்.

தொடர்ந்து நமது தலைவர் டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் இந்திய சமுதாய மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்பான கருத்துளைத் தனது உரையில் எடுத்துரைத்தார். அவரின் சிறப்புரையில் நமது இந்திய சமுதாயம் வாழ்வில் முன்னேற கல்வி ஒன்றே ஏணிபடியாக இருப்பதை வழியுறுத்தினார்.

இன்று நடந்தேறிய நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள வாய்ப்பின் வழி கல்வில் சிறந்து விளங்க ஊக்கம் அளிப்பதை தெளிவுப்பெற்றனர்.இதன் வழி நிகழ்வின் நோக்கத்தினை அனைவரும் வெற்றிகரமாக அடைந்ததை டான் ஸ்ரீ அவர்கள் மகிழ்வுடன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மார்ச் 4-

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு எடுக்கப்படும் காவடி நடனத்தை கேலி செய்தவர்கள் மீது தகவல் தொடர்பு துறை தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் மிகவும் பிரபலமான அஸ்ட்ரோ ஏரா எப்.எம் வானொலி நிறுவனத்தின் ஊழியர்கள் காவடி நடனத்தை கேலி செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு MCMC க்கு உத்தரவு பிறப்பித்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சிலுக்கு சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏரா எப்.எம். ஊழியர்கள் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மதத்தை கேலி செய்யும் தரப்பினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கையை முன் வைக்கிறது என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச்.4-

காவடி நடனத்தை இழிவுப்படுத்தி கேலியாகக் வீடியோ வெளியிட்ட Era FM வானொலி நிலையத்தின் மூன்று அறிவிப்பாளர்களை Astro Audio நிறுவனம் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக Atro Audio வெளியிட்ட செய்திக்குறிப்பில், அறிவிப்பாளர்கள் தங்களின் தவறை ஏற்றுக்கொண்டு பொது மன்னிப்பு கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட வேதனை மற்றும் ஏமாற்றத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். எங்கள் பார்வையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இவ்விவகாரத்தை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்போம் என்று தெரிவித்தனர்.

மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில், Astro நிறுவனம் எதிர்காலத்தில் உள்ளடக்கங்களை தீவிரமாக மதிப்பீடு செய்யவதாகவும் உறுதியளித்துள்ளது.

அந்த வீடியோவில் அறிவிப்பாளர்கள் "வேல், வேல்" என கத்திக்கொண்டே கிண்டலாக சிரித்துள்ளனர்.

இந்த வீடியோ வெளியான பிறகு ERA FM கடும் எதிர்ப்பை சந்தித்ததால், Astro Audio அதை அகற்றியதுடன், அசாத், நபில் அகமத், மற்றும் ரதின் அமீர் அஃபண்டி ஆகிய மூவரையும் இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த விவகாரம் மலேசியா முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அவர்களுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Astro நிறுவனம் தவறுக்காக மன்னிப்பு கோரியதுடன், எதிர்காலத்தில் உள்ளடக்கங்களை அதிக கவனத்துடன் பரிசீலிக்குவதாகவும், மதச்சார்பற்ற மற்றும் மதிப்புமிக்க மீடியா சூழலை உருவாக்குவதை உறுதி செய்வதாகவும் Astro நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் மார்ச் 4-

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து காணிக்கை செலுத்தி வருவது பாரம்பரியமாகும்.

காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வேல் வேல் காவடி நடனத்தை இப்போது நாட்டில் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஏரா எப்.எம் வானொலி கேலி செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் தெரிவித்தார்.

மலேசிய நாடு பல்லின மக்களைக் கொண்டது.இங்கு அனைவரும் சகோதரத்துடன் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

யாரும் எந்த மதத்தையும் இனத்தையும் புண்படுத்த கூடாது என்று அரசாங்கம் பலமுறை வலியுறுத்தி வருகிறது.

இருப்பினும் இதையும் மீறி சிலர் மதத்தையும் சமயத்தையும் கேலி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்பது வாடிக்கையாகி விட்டது.இந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் மார்ச் 4-

புனிதமான காவடி நடனத்தை வேல் வேல் என உச்சரித்து நகைச்சுவையாக இந்து மதத்தை கேலி செய்த ERA FM ஊழியர்களின் இளிவான செயல் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வானொலி நிலையத்தின் ஊழியர்கள் பிற மத சடங்குகளை கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த செயல்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு புகார்கள் வந்துள்ளன என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.

MCMC தலைமையகத்திற்கு வருமாறு ஆஸ்ட்ரோ மற்றும் வானொலி நிலைய நிர்வாகத்தை அழைப்பது உள்ளிட்ட விரிவான விசாரணையை நடத்துமாறு MCMC-க்கு உத்தரவிட்டுள்ளதாக பாமி தெரிவித்தார்.

தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்று அவர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், மார்ச் 4-

சமீபத்தில் ஒரு காணொளியில், "வேல் வேல்" பாடும் போது புனிதமான காவடி நடனத்தை நகைச்சுவையாகக் காட்டி இந்து மதத்தை கேலி செய்த ERA FM ஊழியர்களின் இளிவான செயலை மஇகா வன்மையாக கண்டிப்பதாக அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இச்செயல் மலேசியாவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கை மற்றும் மரபுகளுக்கு அப்பட்டமான அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஊடகமாக இருந்து கொண்டு ERA FM இந்த வகையான புண்படுத்தும் செயலை செய்திருக்கக்கூடாது. மத மற்றும் கலாச்சார உணர்வுகள் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாவிட்டால், அவர்களின் ஊழியர்கள் ஊடகத்துறையில் பணியாற்ற முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர் என டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இது நகைச்சுவை அல்ல, இந்து சமூகத்தை ஆழமாக புண்படுத்தும் கேலிக்கூத்து. இத்தகைய செயல் தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகும். மலேசியா பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு முக்கிய ஊடகம் அத்தகைய உணர்வற்ற மற்றும் புண்படுத்தும் செயலை அனுமதிக்கும் போது, ​​அது பிளவை உருவாக்கி, நமது பன்முக கலாச்சார சமூகத்தின் கட்டமைப்பை சேதப்படுத்துகிறது.

இந்த மூர்க்கத்தனமான நடத்தைக்காக ERA FM மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ERA FM இந்து சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் இந்த கேலியை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எந்த ஒரு மதத்தையும் இப்படி கேலி செய்யக்கூடாது, இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுபவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

இதுபோன்ற செயலை தண்டிக்காமல் விடுவது மற்ற ஊடகங்களுக்கு எதிர்காலத்திற்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்பதால், அந்த நிலையத்திற்கு எதிராக செயல்படுமாறு தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி பட்ஸிலை அவர் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர், மார்ச் 3-

கடந்த ஆண்டில் போலீஸ் படையின் கீழ் 35,368 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதுடன் இதனால் வெ.1.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 34,495 மோசடி சம்பவங்கள் பதிவாகிய வேளையில் வெ.1.2 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை மூன்று விழுக்காடு உயர்ந்துள்ளது.

இந்த மோசடி சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு மொத்தம் 41,701 வணிக குற்ற வழக்கு அறிக்கைகள் கிடைத்ததாகவும், அவற்றில் 84.5 சதவிகிதம் மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் கடந்த ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 24,388 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மோசடி உள்ளிட்ட வணிகக் குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் மொத்தம் 25,829 நபர்கள் கைது செய்ய இது வழிவகுத்தது. மொத்தம் 16,813 வழக்குகள் நீதிமன்றத்தில் வெற்றிகரமாகத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

வாஷிங்டன், மார்ச்.3-

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.

தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புடினைப் பற்றி கவலைப்படுவதைக் குறைத்து, சட்டவிரோத குடியேற்றங்கள், வன்கொடுமை சம்பவங்கள், போதைப்பொருள் மற்றும் கொலைகாரர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதைப் பற்றி அதிக நேரம் கவலைப்பட வேண்டும்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் நான் பதவியேற்ற முதல் ஒரு மாதத்திற்குள் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை வரலாற்றுச் சிறப்புமிக்க அளவிற்குக் குறைக்க முடிந்தது.

நமது நாட்டின் மீதான படையெடுப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் எல்லை ரோந்துப் படையினரால் 8,326 சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் அனைவரும் விரைவாக நம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

கோலாலம்பூர், மார்ச் 3-

பூமிபுத்ராக்களுக்கான ஒதுக்கீட்டை ஒப்பிடும்போது, ​​பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கான ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்குமாறு அரசாங்கத்தை ஜசெக தலைவர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

2022 ஆம் ஆண்டு பெரிகாத்தான் நேஷனல் (PN) அரசாங்கத்தின் பட்ஜெட்டில் பூமிபுத்ராக்களுக்கு வெ.11.4 பில்லியன் ஒதுக்கப்பட்டது. அதேவேளையில் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வெ.345 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

பூமிபுத்ராக்களுக்கு உதவ அரசு எந்த தொகையை வழங்கினாலும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் கோரப்படுவது என்னவென்றால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் மானியத்தில் மூன்று சதவீதத்தை பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வழங்குவதை காட்டிலும் அதனை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உதாரணத்திற்கு பூமிபுத்ராகளுக்கு 12 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டால், 10 சதவிகிதம் அல்லது வெ.1.2 பில்லியன் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த செயலானது அனைத்து மக்களையும் கவனித்துக் கொள்ளும் ஒற்றுமை அரசாங்கத்துடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

பெட்டாலிங் ஜெயா,மார்ச் 3-

மக்கள் நீதிக் கட்சி(PKR) கோலா சிலாங்கூர் கிளையின் ஆண்டு கூட்டத்தில் நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொளி  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த காணொளியில் இரு தரப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்  ஏற்படுவது போன்ற  காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த பெண் ஒருவர் மற்றொரு நபரை ஆவேசமாக திட்டுவதைப் போன்றும் கட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த காணொளியில் இரு பெண்கள் மற்றொரு ஆண் ஒருவரிடம் வாக்குவாதம் செய்வதும், அவர்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் அவர்களை
தடுக்க முயல்வதும் போன்று அந்த காணொளியின் வழி தெரியவருகிறது.

கட்சி கூட்டத்தில் ஏன் கத்தி எடுக்கும் பேச்சு, எதற்காக என் அம்மாவை அடிக்க வந்தீங்க என்ற வார்த்தைகளை அந்த பெண் பயன்படுத்துவது காணொளியை பார்க்கும் நமக்கு குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறது. தலையும் புரியல வாலும் புரியல...

உண்மையில் அங்கு என்ன நடந்தது? ஆண்டுக் கூட்டம் கலவரமானதற்கு என்ன காரணம் என்று  PKR கோலா சிலாங்கூர்  தலைவர் தீபன் சுப்பிரமணியம் விளக்கம் கொடுப்பாரா?

எனினும், இந்த கலந்துரையாடலின் விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த வாக்குவாதம் நடந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் கிளையின் செயலாளர் விக்னேஸ்வர் கிருஷ்ண மூர்த்தி, பெஸ்தாரி ஜெயா காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

மேலும்  இந்த வாக்குவாதம் தொடர்பாக தனிப்பட்ட முறையில்  ஊடகம் ஒன்று இச்சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டதற்கும்  தீபன் சுப்பிரமணியம், புகார் அளிக்க உள்ளதாக தமிழ் ஊடகம் ஒன்றில் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- காளிதாசன் இளங்கோவன்

புத்ராஜெயா, மார்ச் 3-

"மலேசிய குடும்பம்" விளம்பர பிரச்சாரத்திற்காக அரசு செலவழித்தது தொடர்பான எம்ஏசிசி விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சந்தேகத்திற்குரியவர் என்று எம்ஏசிசி தலைவர் அஷாம் பாக்கி தெரிவித்தார்.

இன்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பெரா எம்.பியுமான இஸ்மாயில் சப்ரி, புதன்கிழமை சாட்சியத்தை பதிவு செய்ய அழைக்கப்படுவார்

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வெ.177 மில்லியனுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கம் குறித்து புலனாய்வாளர்கள் அவரை விசாரிக்கவுள்ளதாக அஷாம் பாக்கி தெரிவித்தார்.

ஏனென்றால், இந்தப் பணத்தைக் கண்டுபிடித்தபோது அவருக்கு பிரிவு 36 (எம்ஏசிசி சட்டம்) கொடுக்கப்பட்டது, மேலும் அவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டது என்று புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அஷாம் கூறினார்.

சைபர் ஜெயா, மார்ச் 2-

மஇகா தேசிய துணைத் தலைவரும்

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணனுக்கு இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா’ விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சைபர் ஜெயா பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் அவருக்கு இந்த உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி தங்க கணேசன் முன்னிலையில் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ வைத்திலிங்கம் இந்த விருதை டத்தோஸ்ரீ சரவணனுக்கு எடுத்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய டத்தோஸ்ரீ எம். சரவணன், திருமுறையே சைவநெறிக் கருவூலம்" எனும் கருப்பொருளைக் கொண்டு,  மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் திருமுறை மாநாட்டிற்குத் தலைமைதாங்கி திறந்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.

 

திருமுறை சைவ நெறியின் ஆதாரம். திருமுறையின் உண்மை அர்த்தங்களையும், அதன் ஆன்மிக வளங்களையும் உலகிற்கு எடுத்துரைக்கும் இம்மாநாடு, நமது பாரம்பரியத்தை வருங்கால தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் முக்கியப் பணியைச் செய்கின்றது என அவர் தெரிவித்தார்.

சுபாங் ஜெயா,பிப்.26-

மக்களின் வாழ்வாதார செலவினத்தை தளர்த்தும் நோக்கில், GV Ride எனும் இ-ஹேலிங் நிறுவனம் மார்ச் மாதம் முழுவதும் இலவசப் பயணங்களை வழங்கும் சிறப்பு முயற்சியை அறிவித்துள்ளது.

இந்த சேவை சுபாங், பெட்டாலிங் ஜெயா மற்றும் காஜாங் பகுதிகளில்  கிடைக்கப்படும். அவ்வகையில் இந்த திட்டம் மலேசியர்களுக்கான ஒரு மில்லியன் இலவசப் பயணங்களை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் GV Car Ventures Sdn Bhd (GVV) நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி கபீர் சிங் மாண்ட் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார சிக்கல்களை நாங்கள் நன்கு அறிவோம். தினசரி செலவுகளை சமாளிக்க மக்களுக்கு கஷ்டம் ஏற்படும் சூழலில் இந்த இலவசப் பயண சேவை நாங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுக்கு அது ஒரு நிவாரணமாக இருக்கும்.

குறிப்பாக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த சேவை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று சன்வே பிரமிட்டில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் அவர்  கூறினார்.

மேலும் இத்திட்டத்தின் வழி GV Ride தனது அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான பயணம், மின்னியல் கட்டணம் மற்றும் வெளிப்படையான விலை நிர்ணய அமைப்பு போன்ற பல அம்சங்களுடன் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க முயல்வதாக அவர் சொன்னார்.

 

GV Ride இன் படி, ஒவ்வொரு பயனரும் ஒரு நாளைக்கு சவாரியை வெ.30 கட்டண வரம்புடன் அனுபவிக்க தகுதியுடையவர்கள். இந்த கட்டணத்தில் டோல் கட்டணம் சேர்க்கப்படும்.

 

கட்டணம் வெ.30ஐ விட அதிகமாக இருந்தால், பயனர் கூடுதல் நிலுவைத் தொகையை மட்டுமே செலுத்த வேண்டும்.

கோலாலம்பூர்,பிப்.26-

டாமன்சாரா - ஷா ஆலமை இணைக்கும் டேஷ் நெடுஞ்சாலையால் ஏற்பட்ட விபத்தில் சுமார் 35 மீட்டர் மேம்பாளத்திலிருந்து பெண் மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், நெடுஞ்சாலையில் 30 முதல் 35 மீட்டர் உயரத்தில் இருந்து பெண் தூக்கி வீசப்பட்டு விழுந்திருக்கலாம் என்று நம்பப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஷாருல்நிஜாம் ஜாஃபர் கூறினார்.

முன்னதாக போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) மாலை 6.50 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்தது என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் 30 வயதுடைய உள்நாட்டு பெண் பலியானார். மோட்டார் சைக்கிளில் வளைவான சாலையில் செல்லும்போதும் கட்டுப்பாட்டை இழந்து அப்பெண் காரில் மோதி மேம்பாலத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.

விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41ன் படி விசாரணை நடத்தப்படும் என அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், பிப்.26-

பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) மற்றும் வியட்நாம் ஓய்ல் என் கேஸ் குரூப் (பெட்ரோவியட்நாம்) ஆகியவை வியட்நாமில் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை துரிதப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த இரு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கவனம் செலுத்தி வியட்நாமில் இருந்து மலேசியாவிற்கு மின் உற்பத்தியை தீவிரமாக ஊக்குவித்து வருவதாக நிதியமைச்சருமான அவர் கூறினார்.

எரிசக்தி உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆசியானில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ASEAN Power Grid (APG)-க்கு இணைங்க இணங்க இந்த முன்முயற்சி உள்ளது" என்று பிரதமர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோலாலம்பூர்,பிப்.26-

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மானியம் வழங்குவது தொடர்பில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் மட்டும்தான் என்னை வந்து சந்தித்ததாகவும் மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை சந்திக்கவில்லை என்றும் துணைப் பிரதமர் ஃபடிலா யூசோப் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சிக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய விவாதத்தை நிர்வகிக்கும் அரசாங்க ஆலோசனைக் குழுவின் தலைவரான ஃபடிலா, சைட் சாடிக்கின் முன்மொழிவு ஒட்டுமொத்த எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றார்.

ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

அதனால் எந்த சைட் சாடிக்கை தவிர வேறு எந்த தரப்பும் என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்கிறேன் என இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த நவம்பரில் நடந்த நாடாளுமன்ற அமர்வில், மானியம் ஒதுக்கீடு தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக ஃபடிலா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், பிப்.25-

வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் உதவித் தொகை வழங்கப்படும் 10 கிலோ உள்ளூர் வெள்ளை அரிசி வெ.26க்கு சந்தையில் விற்பனை செய்யப்படும் என்றும் இந்த விற்பனை 400,000 ஏழை குடும்பத் தலைவர்களை இலக்காகக் கொண்டது, இதில் 77,000 வரிமை கோட்டின் கீழ் உள்ள ஏழைகளும் அடங்வர் என அரிசி மற்றும் நெல் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை இயக்குநர் டத்தோ பட்ருல் இஷாம் முகமட் தெரிவித்தார்.

 

ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு முறை அரிசி வாங்கும் போது அவர்களுக்கு அதிகபட்சம் 2 பாக்கெட்டுகள்தான் விற்பனை செய்யப்படும்.

மலேசியர்கள் ஆண்டுக்கு சராசரியாக 77 கிலோ அரிசியை உட்கொள்வதால், விநியோகம் போதுமானதாக இருப்பதாக பட்ருல் இஷாம் நம்பிக்கை தெரிவித்தார்.

எனது குழு ஒரு கட்டுப்பாட்டு முறையை நிறுவியுள்ளது.

 

மேலும் சில்லறை விற்பனையாளர்களுக்கு கொள்முதல்களைக் கட்டுப்படுத்த ஒரு குறிப்பிட்ட உத்தரவை நாங்கள் வெளியிடுவோம் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற BPT மானிய அமலாக்க முறை தொடர்பான சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள 36,000 உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களுக்கும், Jualan Agro Madani மற்றும் Jualan Rahmah-விற்கும் இந்த உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகிக்கப்படும் என்று பட்ருல் இஷாம் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், பிப். 25-

இந்திய தொழில் முனைவோருக்கு உதவ பேங்க் ராக்யாட்டின் BRIEF–i கடனுதவி திட்டத்தின் கீழ் பத்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று தெரிவித்தார்.

ஏற்கெனவே BRIEF–i திட்டத்திற்கு பேங்க் ராக்யாட் 50 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. தற்போது கூடுதலாக மேலும் 50 மில்லியனை பேங்க் ராக்யாட் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் வழி BRIEF–i திட்டத்திற்கு பேங்க் ராக்யாட் 100 மில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த BRIEF–i திட்டம், மலேசிய இந்திய சமூகம் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்கான ஓர் அர்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

அதே வேளையில்,

இந்திய சமூக தொழில் முனைவோரை ஆதரிப்பதன் மூலம், அனைவருக்கும் வளமான பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வரை 512 இந்திய தொழில் முனைவோருக்கு 4 கோடியே 90 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இன்று பேங்க் ராக்யாட் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற விழாவில் மேலும் பத்து தொழில் முனைவோருக்கு கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பேங்க் ராக்யாட் தலைவர் டத்தோ முகமட் இர்ஃபான் முகமட் முபாராக், துணை அமைச்சரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

-காளிதாசன் இளங்கோவன்


கோலாலம்பூர்,பிப்.25-
முந்தைய மக்களவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட ஆறு சட்டங்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது ஷரியா நீதிமன்ற சிவில் நடைமுறை (கூட்டரசு பிரதேசங்கள்) (திருத்தம்) சட்டம் 2025 ஐ உள்ளடக்கியது என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கூறினார்.

கூடுதலாக, தரவு பகிர்வு சட்டம் 2025; தேசிய ஊதிய பேச்சுவார்த்தை கவுன்சில் (திருத்தம்) சட்டம் 2025; இஸ்லாமிய சட்ட நிர்வாகம் (கூட்டரசு பிரதேசங்கள்) (திருத்தம்) சட்டம் 2025; அறங்காவலர்கள் (ஒருங்கிணைப்பு) (திருத்தம்) சட்டம் 2025 மற்றும் அறங்காவலர்கள் (திருத்தம்) சட்டம் 2025 ஆகும்.

இன்று மக்களவையில் நடைபெற்ற அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

தங்காக், பிப்.25-
நேற்று இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் ஐந்து ரப்பர் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் இயந்திரங்களில் ஒன்று வெடித்ததில் தொழிற்சாலை தொழிலாளர்கள் இருவர் பலியான வேளையில் ஏழுவர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் 40 முதல் 50 வயதிற்குட்பட்ட இரு உள்நாட்டு ஆடவர்கள் பலியாகினர். அவ்விருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

பிற்பகல் 2 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், மூன்று வெளிநாட்டினர் உட்பட ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்காக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

அவர்களில் ஆறுவர் உள்ளூர்வாசிகள் என்றும், மற்ற மூவர் வங்காளதேசம், நேபாளம் மற்றும் மியான்மரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தொழிற்சாலையில் ஐந்து இயந்திரங்களைப் பராமரித்து வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

இயந்திரங்களில் ஒன்று திடீரென வெடித்து ஒன்பது தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவர் பலத்த காயமடைந்ததுடன் சிகிச்சையின் போது உயிரிழந்தனர். அதே நேரத்தில் காயமடைந்த மற்ற ஏழு பேர் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர், பிப்.25-
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள தித்திவாங்சா எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் பார்வையற்ற ஒருவர் ரயிலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த பிரசரானா சிறப்புக் குழு அமைத்துள்ளது.

இந்த அறிக்கையின் முடிவுகள் போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுவனத்திடம் (APAD) சமர்ப்பிக்கப்படும் என்று பிரசரானா மலேசியா பெர்ஹாட் ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

இந்தக் குழுவால் முன்மொழியப்பட்ட மேம்பாட்டு முயற்சிகளை பிரசாரணா உடனடியாக செயல்படுத்தும்.

இந்த சம்பவத்தால் பிரசரானா மிகவும் வருத்தம் அடைந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தகுந்த மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர்,பிப்.25-
இந்த ஆண்டு ஏழு மாநிலங்களில் மொத்தம் 17 புதிய பள்ளிகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், கிளந்தான், தெரெங்கானு, சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களை உள்ளடக்கிய எட்டு தொடக்கப் பள்ளிகளும் ஒன்பது மேல்நிலைப் பள்ளிகளும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

"2025 பட்ஜெட்டில், 2024 இல் 26 பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 44 புதிய பள்ளிகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை முறையே 2023 மற்றும் 2022 இல் ஒன்பது (கட்டப்பட்ட) பள்ளிகளையும் (2021) 11 பள்ளிகளையும் விட மிக அதிகம் என அவர் சொன்னார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு முடிவடையும் மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் (PPPM) 2013-2025-க்கு பதிலாக ஒரு புதிய கல்வித் திட்டத்தை கல்வி அமைச்சு உருவாக்கி வருகிறது.

2026-2035 காலகட்டத்தை உள்ளடக்கிய இந்தத் திட்டம், நாட்டின் கல்வி முறையை தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ஃபட்லினா தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

ஜெராம்,பிப்.24-
நெடுங்காலமாக சொந்தக் கட்டடம் இல்லாமல் இயங்கி வந்த ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலக்கவியல் அமைச்சர் உறுதியாகக் கூறினார். 

இன்று பள்ளி மேளாலர் வாரியம் ஆர்.ஓ.எஸ்-ல் முறையாகப் பதிந்து கொண்டது.  

பள்ளி மேளாலர் வாரியம், ஆர்.ஓ.ஸ் எனப்படும் சங்கப் பதிவு இலாகாவில் பதிவு  பெறச் சிக்கலை எதிர்நோக்கியதாக  தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அதற்கு நல்லதொரு வழி கிடைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

இலக்கவியல் அமைச்சு, கல்வியமைச்சின் ஒத்துழைப்போடு செயல்பட்டதன் வழி, பதிவு இலாகாவில் பள்ளி மேலாளர் வாரியம் முறையாகப் பதிந்து கொண்டதாக அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார். 

ROS இன் கீழ் இதுவரை பதிவு செய்யப்படாத பள்ளி வாரியத்தின் (LPS) நிலை காரணமாக இந்த பள்ளி நிரந்தர கட்டடம் கட்டுவதில் தாமதத்தை எதிர்கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்குடன் தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சினை குறித்து கலந்துரையாட  சிறப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்கொள்ளும் சவால் பற்றியும் விவாதிக்கப்பட்டது. 

அதன் விளைவாக இன்று, ​ ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் வெற்றிகரமாக ROS இல் பதிவு செய்துள்ளது. 

இந்த வளர்ச்சியை நான் வரவேற்கிறேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளோம். பள்ளி அதன் சொந்தக் கட்டடத்தில் இயங்குவதற்கான உடனடித் தீர்வைக் காண நாங்கள் இப்போது கல்வி அமைச்சுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நெடுங்காலமாக முறையான கற்கும் வசதியின்றி, கெபினில் இயங்கி வந்த ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம் பலரது கண்டனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முதற்கட்ட தீர்வாக இந்த ஆர்.ஓ.எஸ் பதிவு அமைந்துள்ளது என அவர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.

 

பிரிக்பீல்ட்ஸ், பிப்.24-
கோலாலம்பூர் தர்மசக்தி வேதாந்த குருகுலம் மலேசியா ஏற்பாட்டில் 18ஆவது பிரமாண்ட மகா சிவராத்திரி வரும் 26ஆம் தேதி புதன்கிழமை இரவு 8 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தின் சங்கீதா அபிவிருத்தி சபாவில் நடைபெறவுள்ளது.

தர்ம சக்தி ஆசிரமத்தின் ஏற்பாட்டில் மகா சிவராத்திரி மகத்தான முறையில் நடைபெறும். அபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களின் மேல் மகா கும்பமேளா திருவேனி சங்க தீர்த்தம் தெளிக்கப்படும். 

ஒவ்வொரு செயலும் தர்மத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். பூஜ்ய ஸ்ரீ ஆர்.எஸ்.என்.ஐயங்காரின் வழிக்காட்டுதலின் கீழ் தர்ம சக்தி வேதாந்த குருகுலம் மீண்டும் 18ஆவது ஆண்டாக மகா சிவராத்திரி ரத ஊர்வலமும் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரத ஊர்வலம் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கந்தசாமி கோயிலிலிருந்து துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெறும். பரதநாட்டியம், பஜனைகள் மற்றும் நிகச்சிகளை கண்டு களிக்க பக்தர்கள் அழைக்கப்படுகின்றனர்.

மகத்தான மற்றும் மங்கலகரமான கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ்வதன் மூலம் தீய காலகட்டத்தை நல்ல காலகட்டமாக உருமாற்றம் செய்யலாம்.

மகா சிவராத்திரி உற்சவத்தை நடத்தும் புரோகிதர்கள் கண்டிப்பாக சைவ உணவு உண்பதைப் பின்பற்றும் அதேவேளையில் சத்யம் தர்மத்தை கடைப்பிடிப்பார்கள்.

உற்சவத்தின் பங்கேற்பாளர்கள் அளப்பரிய பலன்களை அடைவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கோலாலம்பூர், பிப்.24-
பொது நிதி கசிவுக்கு வழிவகுத்த அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பொது சேவைகள் துறையில் (JPA) மொத்தம் 311 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (LKAN) அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து இது நிகழ்ந்ததாக பிரதமர் துறை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம் துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

ஜனவரி 14ஆம் தேதி நிலவரப்படி, எச்சரிக்கைகள், அபராதங்கள், சம்பள இடைநீக்கங்கள், பதவி இறக்கம் மற்றும் பணிநீக்கம் உள்ளிட்ட 311 அதிகாரிகள் மீது பொதுப் பாதுகாப்புத் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

"இதற்கிடையில், நீதிமன்றத்தில் இரு ஊழியர்கள் மீது தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மக்களவையில் எஸ். கேசவனின் (PH-சுங்கை சிப்புட்) துணை கேள்விக்கு பதிலளித்தபோது கூறினார். 

தணிக்கை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளபடி, பொது நிதியை மோசடி செய்ததாக நம்பப்படும் அரசு ஊழியர்கள் மீது என்ன தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேசவன் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

2012 முதல் ஜனவரி 2025 வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பொது நிதி கசிவு தொடர்பான மொத்தம் 12,393 பிரச்சினைகள் தணிக்கையாளர் தலைமை கணக்காளர் அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அவற்றில் 11,594 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 799 தொடர் நடவடிக்கைகளில் உள்ளதாகவும் குலா கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

Recent News