மக்கள் சேவையை தொடர அனிதா செபுத்தே கெஅடிலான் தொகுதி தலைவருக்கு மீண்டும் போட்டியிடுகிறார்!.
2025-04-18 05:18:49கேப் கேனவரல், மார்.19-
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர்.
அவர்களை மீட்க சென்ற 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று அதிகாலை புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'போயிங்' நிறுவனத்தின், முதல் விண்கலமான 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.
இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.
தற்பொழுது அந்த இரு வீரர்களும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, நாசா விஞ்ஞானிகளையும், மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கோலாலம்பூர்,பிப்.26-
டாமன்சாரா - ஷா ஆலமை இணைக்கும் டேஷ் நெடுஞ்சாலையால் ஏற்பட்ட விபத்தில் சுமார் 35 மீட்டர் மேம்பாளத்திலிருந்து பெண் மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், நெடுஞ்சாலையில் 30 முதல் 35 மீட்டர் உயரத்தில் இருந்து பெண் தூக்கி வீசப்பட்டு விழுந்திருக்கலாம் என்று நம்பப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஷாருல்நிஜாம் ஜாஃபர் கூறினார்.
முன்னதாக போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) மாலை 6.50 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்தது என்று அவர் கூறினார்.
இந்த விபத்தில் 30 வயதுடைய உள்நாட்டு பெண் பலியானார். மோட்டார் சைக்கிளில் வளைவான சாலையில் செல்லும்போதும் கட்டுப்பாட்டை இழந்து அப்பெண் காரில் மோதி மேம்பாலத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.
விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41ன் படி விசாரணை நடத்தப்படும் என அவர் சொன்னார்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட வெடிச் சம்பவம்: 20 ஏஜென்சிகள் விசாரணையை மேற்கொள்வர்!.
2025-04-01 21:32:11தீப்பற்றி எரிந்தது கேளிக்கை விடுதி: 60 பேர் பலி! நுாற்றுக்கணக்கானோர் காயம்.
2025-03-17 03:29:353R விவகாரம்: விசாரணை அறிக்கை நாளை சட்டத்துறை அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்படும்!.
2025-03-16 04:41:28நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை செய்தியாளர் நந்தகுமார் மறுத்தார்!.
2025-03-13 19:31:00அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க டத்தோஸ்ரீ சரவணன் விவாதத்தை நிறுத்தினார்!.
2025-03-10 22:03:56திருமுறை மாநாட்டில் சங்கரத்னா’ விருது பெற்றார் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்!.
2025-03-02 00:51:54