loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், அக்.14-
மஇகா இளைஞர் பிரிவு, பள்ளி மாணவர்களை உட்படுத்திய சமீபத்திய அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களால், குறிப்பாக பள்ளியில் பாலியல் வன்கொடுமை, எஸ்பிஎம் மாணவரின் தற்கொலை மற்றும் இன்று நடந்த கொலை சம்பவம் ஆகியவற்றால் பெருத்த கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்திலும், பள்ளி நேரத்திலும் நடந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கின்றது. தீவிரமான சமூக மற்றும் நன்னெறி நெருக்கடியைப் பிரதிபலிக்கும் இந்த சூழ்நிலையினை உடனடியாகவும் முழுமையாகவும் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

பள்ளிகள் மாணவர்கள் கல்வி கற்கவும், எதிர்காலத்தை உருவாக்கவும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும், மன உளைச்சலையோ அச்சத்தையோ ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது என அவர் சொன்னார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலத்தினை முன்னுரிமையாக கருத வேண்டுமே தவிர, ஒரு சிறு பிரச்சினையாக அலட்சியப் படுத்தக் கூடாது.

ஆதலால், மஇகா இளைஞர் பிரிவு, மலேசிய கல்வி அமைச்சு மற்றும் அதன் தொடர்புடைய இலாகாக்கள் பின்வரும் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்துகிறது:
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை வலுப்படுத்துதல், முக்கியமாக பகடிவதை, தொந்தரவு மற்றும் அத்துமீறல் தொடர்பாக ரகசிய புகார் அளிக்கும் வழிகளை உருவாக்குதல்,
மாணவர்களுக்கு குறிப்பாக முக்கிய தேர்வுகளுக்கு முன்பு, மனநல பரிசோதனை மற்றும் கட்டாய வழிகாட்டி ஆலோசனைகளை செயல்படுத்துதல்,
மாணவர்களிடையே மன அழுத்தம் அல்லது தீய நடத்தைகளை ஆரம்பத்திலேயே  கண்டறிந்து களைய பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்,
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறையுடன் இணைந்து பள்ளி வளாகங்களில் திடீர் ஆய்வு செய்தல் அவசியமாகும்.

ஒவ்வொரு மாணவரின் உயிரிழப்பும் வெறும் புள்ளிவிவரமல்ல. அவர்கள் நாட்டின் எதிர்காலமாக அமைய வேண்டியவர்கள், அவர்களின் இழப்பு குடும்பங்களையும் சமுதாயத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. இனிமேலும் வெறும் அறிக்கைகளோ உறுதிமொழிகளோ இல்லாமல், தீவிரமான மற்றும் உறுதியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் இது.

மஇகா இளைஞர் பிரிவு, இந்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பாகவும், பாதுகாக்கப்பட்டவர்களாகவும் உணர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் கல்வி அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,அக்.14-
பிரதமர் துறையின் கூட்டரசு அமைச்சரின் அரசியல் செயலாளராக வழக்கறிஞர் சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னிலையில் சிவமலர் கணபதி இன்று காலை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான சிவமலர் கணபதி சுகாதார அமைச்சருக்கும், கூட்டரசு அமைச்சருக்கும் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவரின் தொடர் சமூகநலன் நடவடிக்கைகளின் மூலமாக தற்போது கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலெவாவின் அரசியல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் எனும் சாதனையையும் வழக்கறிஞர் சிவமலர் கணபதி நிகழ்த்தியுள்ளார். அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண சிவமலர் கணபதி முக்கிய பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கில், அக். 11 —
மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுடன் இணைந்து, ரக்கான் மூடா ரக்கான் லித்தார் முயற்சியின் கீழ், முதல் முறையாக இந்திய பெண்களுக்கான கார் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் அக்டோபர் 11ஆம் திகதி 2025 (சனிக்கிழமை) அன்று டெங்கிலிலுள்ள Tapak Lepark வளாகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்வில் பல இந்திய பெண்கள் தங்களது தனிப்பட்ட கார்களுடன் கலந்து கொண்டு தங்கள் ஆர்வத்தையும் திறமையையும் அவர்கள் நவீன முறையில் அலங்கரித்த கார்களின் மூலமாக வெளிப்படுத்த உள்ளனர்.

அத்துடன், இந்த கார் கண்காட்சியில் அழகு படுத்தப்பட்ட பெண்களின்  கார்கள் மற்றும் அதி நவீன சூப்பர் பைக்குகள் போன்ற வாகனங்களும் காட்சிப்படுத்தப்படும் என இந்நிகழ்ச்சியின் திட்ட இயக்குநர் பவீத்தரன் இளங்கோவன் தெரிவித்தார்.

இது ஒரு சாதாரண கார் கண்காட்சி அல்ல; இளைஞர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் விழா என அவர் கூறினார்.

இந்நிகழ்வை மேலும் மெருகூட்டும் வகையில் பொதுமக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டு களிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு பவீத்தரன் இளங்கோவன் (தொலைபேசி: 010-396 1002 என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு  தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.

இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு  இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள  பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி  சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு  தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.

இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு  இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள  பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி  சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.