பத்துமலை, பிப் 4-
பத்துமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் போது, பல ஆண்டுகளாக இடைவிடாது தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் 5 பேருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அவர்களில், நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் திருமதி பரிமளா கிருஷ்ணா அவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில், சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தப் பாராட்டை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் மற்றும் டத்தோஸ்ரீ நடராஜா ஆகியோர் வழங்கினர்.
ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவின் போது பத்துமலையில் திரளாக கூடும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டுதல், உதவி மற்றும் சேவை வழங்குவதில் திருமதி பரிமளா கிருஷ்ணா முக்கிய பங்காற்றி வருகிறார். பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அவரது தன்னார்வ சேவை, சமூக சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திருமதி பரிமளா கிருஷ்ணா,
“பக்தர்களுக்கு சேவை செய்வதே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய பலன். இருப்பினும், இந்த பாராட்டு என் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது” என தனது நன்றியை தெரிவித்தார்.
தைப்பூசம் போன்ற மகத்தான சமய விழாக்களில் தன்னார்வலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், திருமதி பரிமளா கிருஷ்ணா போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில்,
கோலாலம்பூரைச் சேர்ந்த திருமதி பத்மாவதி,
பிரீக்ஃபீல்ட்ஸைச் சேர்ந்த திருமதி எம்.எஸ். ராணி,
திரு. மகேந்திரன்
மற்றும் திரு. கோவிந்தன் ஆகியோரும் இடம்பெற்றனர்.
0 Comments