கோலாலம்பூர்,ஜன.16-
தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாட்ட டத்தோ தி.மோகன் தலைமையில் நேற்று செமினியில் கிரமத்தில் நடப்போதுபோல் நடைப்பெற்றது.
நகர பகுயில் பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தினால் மக்கள் அதிலமாக திரலுவதில்லை. ஆனால் தோட்டத்திற்குள் கிரமத்தில் நடப்பதுபோல் கோலாகலமாக நடைப்பெற்ற இந்த விழாவில் மக்கள் அதிகலவில் திரண்டுள்ளது நம்மிடையை இன்னும் கலச்சார உணர்வு மேலோங்கி இருப்பதை காட்டுவதாக மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இந்த கொண்டாட்டம் தமிழகத்தில் நடப்பதை போல பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் மினி ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதனை வெகுவாக காண மக்கள் இங்கு அதிகமாக திரண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதற்கிடையில்,
தமிழ் புத்தாண்டு என்று கூறி தை 1ஆம் தேதியிலும் சித்திரை 1-இலும் கொண்டாடுவது அவர் அவர் இஷ்டம். அவரவர் நம்பிக்கை நாம் மதித்து நடப்போம் என அவர் ஆலோசனை வழங்கினார்.
இந்த விவகாரத்தில் இன்னும் பல சர்ச்சைகள் எழுந்துதான் வருகிறது. ஆகையால் யாரும் யாரையும் குறை சொல்ல தேவையில்லை. அவரவர் விருப்பதுடன் கொண்டாடட்டும். அவரவர் நம்பிக்கையை நாம் ஏற்கதான் வேண்டும் என்றார் அவர்.
நம் கலாச்சாரத்தை காக்க டத்தோ தி.மோகன் இந்த முயற்சியை எடுத்துள்ளார். நம் நாட்டில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கு இந்த கொண்டாட்டம் ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது.
சமுதாயம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. யார் சமுதாயத்திற்காக செயல்பாடுகளை முன்வைக்கிறார்களோ அவர்களை சமுதாயம் மதிக்கும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் மேலும் கூறினார்.
0 Comments