loader
எச்ஆர்டி கோப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட டத்தோ முகமது ஷாமிருக்கு வாழ்த்துகள்! -டத்தோ ஹாஜி அப்துல் அமிட்

எச்ஆர்டி கோப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட டத்தோ முகமது ஷாமிருக்கு வாழ்த்துகள்! -டத்தோ ஹாஜி அப்துல் அமிட்


கோலாலம்பூர், ஜன.27-
எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட டத்தோ முகமது ஷாமிர் அப்துல் அஸிஸ் அவர்களுக்கு மிம்காய்ன் தலைவரும் ஏசான் குருப் தோற்றுநருமான டத்தோ ஹாஜி அப்துல் அமிட் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

முகமது ஷாமிர் முன்பு அமானா இக்தியார் மலேசியாவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் அமானா இக்தியார் கிட்டத்தட்ட 99.98 விழுக்காடு சரியான திருப்பிச் செலுத்தும் விகிதத்தை அடைந்திருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதன் விகிதம் 100-ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் முகமது ஷாமிர் அவரது புதிய பதவிக்கு ஏராளமான அனுபவங்களுடன் வந்துள்ளார்.

திறன் மேம்பாடு, பணியாளர் பயிற்சி, மனித மூலதன நிலைத்தன்மை ஆகியவற்றில் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் கவனத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையாக அவரது நியமனம் பார்க்கப்படுவதாக டத்தோ ஹாஜி அப்துல் அமிட் தன் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News