loader
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம்: லைசென்ஸ் பெற்ற ஏஜெண்டுகளை அழைத்து மனிதவள அமைச்சு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்! -PAPA சங்கம் வலியுறுத்து

அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம்: லைசென்ஸ் பெற்ற ஏஜெண்டுகளை அழைத்து மனிதவள அமைச்சு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்! -PAPA சங்கம் வலியுறுத்து

கோலாலம்பூர் பிப் 15-
அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் விவகாரம் தொடர்பாக லெசென்ஸ் பெற்ற ஏஜென்சிகளை அழைத்து மனிதவள அமைச்சு ஒரு சுமூகமான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia  கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பூர்வமாக அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் லெசென்ஸ் பெற்ற மலேசிய ஏஜென்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வேண்டும்.

நாங்கள் முறையாக பதிவு பெற்ற ஏஜென்சிகள்.

நாங்கள் செய்யும் வேலைக்கு மட்டுமே ஊதியம் வாங்குகிறோம்.

வெளிநாட்டு ஏஜென்சிகள் தொழிலாளர்களிடம் 20,000 வெள்ளி பணத்தை வாங்கிக் கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதனால் பணத்தை கொடுத்து தொழிலாளர்கள் அவதி படுகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர் ஏஜென்சிகளுக்கு அனுமதி வழங்க  வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருக்கிறோம்.

எவ்வித முறைகேடு இல்லாமல் அந்நியத் தொழிலாளர்களை சட்டப் பூர்வமாக நாட்டிற்கு தருவிக்கும் அனுமதியை பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia உதவித் தலைவர் சுரேஷ் டான் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

இந்த தருணத்தில்
அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் மூன்றாம் தரப்பு - இடைத்தரகர்கள் யார் என்பதை மனிதவள அமைச்சு தெளிவு படுத்த வேண்டும்.

நேப்பாளம் மற்றும் வங்காள தேச தொழிலாளர்களை நாட்டிற்கு தருவிக்கு தலா 20,000 வெள்ளி வாங்குவது  ஏஜென்சிகள் நாங்கள் அல்ல.

ஆகவே இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண மனிதவள அமைச்சை சந்தித்து கலந்துரையாட தயாராக இருக்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் Persatuan Agensi Pekerjaan Malaysia ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பாகோ சிவா கலந்து கொண்டார்.

நாட்டில் பல துறைகளில் குறிப்பாக சிறுதொழில் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உதவ சங்கம் தயாராக இருக்கிறோம்.

இருப்பினும் அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்கு வரவழைக்க சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News