loader

All News

பெஸ்தாரி ஜெயா, ஜூலை 15-
பெஸ்தாரி ஜெயா சுங்கை டாரா ஸ்டார்த்மோர் தோட்டம் (கல்லுகுழி)
அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில்  2026 ஆம் ஆண்டுக்கான ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் ஜூலை 17 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, பஜனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல் ஆடி வெள்ளி பூஜை ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 24, ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் ஆடி வெள்ளி வழிபாடுகள் நடைபெறுவதாக ஆலயத்தின் தலைவர் திரு.இராம கணேசன் தெரிவித்தார்.

நிறைவாக செப்டம்பர் 4-ஆம் தேதி கோகுலாஷ்டமி மற்றும் மகாலட்சுமி பூஜை நடைபெறவுள்ளது.
ஆடி மாதம் முழுவதும் நடைபெறும் அனைத்து சிறப்பு வழிபாடுகளிலும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், சிறப்பு பூஜைகளுக்கான உபயம் மற்றும் காணிக்கை வழங்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தை 016-3758273 (ஆலயத்தலைவர்) அல்லது 016-8417335 ( ஆலய அர்ச்சகர்) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்

பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்தநாள் விழாவையொட்டி, சமூக மற்றும் பொதுச் சேவைகளுக்காக டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முருகன் த/பெ துரைசாமி அவர்களுக்கு, Darjah Gemilang Pangkuan Negeri (D.G.P.N.) என்ற உயரிய மாநில விருது வழங்கப்பட்டு, அதனுடன் “டத்தோஸ்ரீ” என்ற கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது, மதம், சமூக நலன், மாநில வளர்ச்சி மற்றும் நாட்டிற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையையும், பல ஆண்டுகளாக வழங்கி வரும் பங்களிப்பையும் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கப்பட்டதையொட்டி, மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, Dato’-Dato’ Indian Muslim Malaysia அமைப்பின் நிறுவனர் YH. Dato’ Mohammed Gazali bin Haji Mohd Hussain தனது வாழ்த்து செய்தியில், டத்தோ’ ஸ்ரீ முருகன் துரைசாமி அவர்கள் நல்ல உடல்நலம், மேலும் பல வெற்றிகள் மற்றும் இறையருளுடன் தொடர்ந்து சமூகத்திற்கும், பினாங்கு மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் D.G.P.N. விருது வழங்கப்பட்டிருப்பது, டத்தோஸ்ரீ முருகன் துரைசாமியின் நீண்டகால அர்ப்பணிப்புக்கும் சேவைக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

 

புத்ராஜெயா, ஜூலை 11-
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரை பார்ட்டி வாவாசான் நெகாரா (Parti Wawasan Negara – WAWASAN NEGARA) என மாற்றியதை, மலேசிய சங்கங்களின் பதிவுத் துறை (RoS) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தப் பெயர் மாற்றம் 2026 ஜூலை 6 அன்று RoS-ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த அதிகாரப்பூர்வ அங்கீகாரம், அக்கட்சிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதுடன் மலேசிய அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் பரவலான அரசியல் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

பார்ட்டி வாவாசான் நெகாரா (Parti Wawasan Negara), பெரிக்கத்தான் நேஷனல் (Perikatan Nasional – PN) கூட்டணியின் முக்கிய அங்கக் கட்சிகளில் ஒன்றாக குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கூட்டணியின் அரசியல் வலிமையும் எதிர்கால திசையும் மேலும் வலுப்பெறும் என நம்பப்படுகிறது.

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான புதிய சட்டத்தை உருவாக்கும் பணியில் இலக்கவியல் அமைச்சு முக்கியமான அடுத்த கட்டத்தைத் தொடங்கியுள்ளது.


தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) வழி, 2026 ஜூலை மாதம் முழுவதும் பல்வேறு தரப்பினருடன் கலந்தாய்வு அமர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த அமர்வுகளின் நோக்கம், முன்மொழியப்பட்ட AI சட்டம் குறித்து விளக்குவதோடு, அரசு அமைப்புகள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்பதாகும்.


சர்வதேச மதிப்பீட்டு அளவுகோல்கள் அடிப்படையிலும், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையிலும், இந்தக் கலந்தாய்வு அமர்வுகள் கொள்கை உருவாக்கத்தின் முக்கிய கட்டமாக அமைந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும், பல்வேறு துறைகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, அனைவரின் கருத்துகளையும் உள்ளடக்கிய முழுமையான சட்டத்தை உருவாக்க இந்தச் செயல்முறை உதவும்.
AI தொழில்நுட்பம் இன்று கல்வி, சுகாதாரம், வணிகம், அரசுச் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் வேகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் நன்மைகள் அதிகமாக இருந்தாலும், தவறான பயன்பாடு, பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பொறுப்புணர்வு போன்ற அம்சங்களும் முக்கியமானவை. அதனால்தான், AI-ஐ பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் பயன்படுத்த உதவும் சட்டம் ஒன்றை இலக்கவியல் அமைச்சு உருவாக்கி வருகிறது.

இந்தச் சட்டம், AI தொடர்பாக மலேசியாவில் உருவாக்கப்படும் முதல் பொதுவான சட்டக் கட்டமைப்பாக இருக்கும். இது தற்போதுள்ள சட்டங்களை மாற்றுவதற்காக அல்ல. மாறாக, பல்வேறு துறைகளில் AI-ஐ பயன்படுத்துவதற்கான ஒரே மாதிரியான அடிப்படை வழிகாட்டுதல்களை வழங்கும்.


இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இடர்-அடிப்படையிலான (Risk-Based) அணுகுமுறையாகும். அதாவது, ஒரு AI அமைப்பு ஏற்படுத்தக்கூடிய அபாயத்தின் அளவைப் பொறுத்து, அதற்கான பொறுப்புகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் நிர்ணயிக்கப்படும்.

அதோடு, AI பயன்பாட்டில் ஏற்படும் பிரச்சினைகளைப் பதிவு செய்யும் முறை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் புதிய AI தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகச் சோதிக்க உதவும் AI Sandboxes போன்ற ஏற்பாடுகளும் இதில் இடம்பெறும்.


2026 ஜூன் 24 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெளிவுபடுத்தியதுபோல், இந்தச் சட்டம் AI வழி உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை நேரடியாகக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.


2026 ஜூலை 10 முதல், Unified Public Consultation: (UPC) https://upc.mpc.gov.my/ இணையத் தளத்தின் வழி நாடு முழுவதும் பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பெறப்படும் அனைத்து கருத்துகளும் சட்ட முன்வரைவு இறுதிப்படுத்தப்படும் முன் பரிசீலிக்கப்படும்.


AI சட்டம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று இலக்கவியல் அமைச்சு வலியுறுத்துகிறது. அனைவரின் கருத்துகளையும் மதித்து, வெளிப்படையான முறையில் இந்தச் சட்டம் உருவாக்கப்படும்.

பொறுப்பான AI பயன்பாட்டை ஊக்குவிப்பதன் வழி, மலேசியாவை பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய AI நாடாக உருவாக்கும் "2030-ஐ நோக்கிய AI நாடு" என்ற தேசிய இலக்கை நோக்கி அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பள்ளிகளை மூடுவதற்கு பாஸ் (PAS) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) திட்டமிட்டுள்ளதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்ற அரசியல் அவதூறு வாக்கு சேகரிக்க டி.ஏ.பி மற்றும் பக்காத்தான் ஹாராப்பான்  செய்யும்   குறுக்கு புத்தி என சிலாங்கூர் பாஸ் ஆதரவு பேரவையின் (DHPP) தலைவர் ஸ்ரீ ஜலராமன் சுலியாராஜு தெரிவித்துள்ளார். இப்படி தான் தேசிய முன்னணி வெற்றி அடைந்தால் நஜீப் வெளியே வருவார் என அவதூறு பரப்பினார்கள். இப்போது வாக்கு சேகரிக்க இப்படி ஒரு அவதூறை  இப்போது ஜொகூர் மாநிலத்தில் சொல்கின்றனர்.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான உண்மைத் தகவலும், கட்சிக் கொள்கையும் அல்லது தேர்தல் அறிக்கையும் ஆதாரமாக இல்லை என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், பாஸ் அல்லது பெரிக்காத்தான் நேஷனல் தமிழ் பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாகக் கூறும் அதிகாரப்பூர்வ ஆவணம், கட்சிக் கொள்கை அல்லது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

அவ்வாறு ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால், அந்த குற்றச்சாட்டுகளை உடனடியாகத் திரும்பப் பெற்று, குறிப்பாக இந்திய சமூகத்தினரிடமும், மலேசிய மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் அனைத்து இன மக்களுக்கும் கல்வி பெறும் உரிமையை பாஸ் மதிக்கிறது என்றும், தமிழ்ப்பள்ளிகள் உட்பட எந்த மொழிவழிப் பள்ளியையும் மூடுவதற்கான அதிகாரப்பூர்வ கொள்கையோ முடிவோ பாஸ் கட்சியிடம் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவது பொறுப்பற்ற செயல் மட்டுமல்லாமல், நாட்டின் பல்லின ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மக்கள் உண்மையான தகவல்களைப் பெற வேண்டுமே தவிர, அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பொய்ப் பிரச்சாரங்களை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதியையும், பரஸ்பர மரியாதையையும், உண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் சிலாங்கூர் டிஎச்பிபி தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்று
ஸ்ரீ ஜலராமன் சுலியாராஜு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜொகூர், ஜூலை 7 –
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா போட்டியிடும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.இ.கா  வெற்றி பெற வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.

ஜொகூரில் வாழும் இந்திய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மாநில ஆட்சியில் ம.இ.கா இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்த இந்தியத் தலைவர்களே அவற்றுக்கு சிறந்த தீர்வுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

எனவே, ம.இ.கா-வை பிரதிநிதித்து ஜொகூரில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்யுங்கள் .

மக்கள், சமூகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கருத்தினை அவர், பெர்லிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஇகாவின் முன்னாள் மூத்த தலைவர்கள், இளைஞர் மற்றும் மகளிர் பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் தேசிய முன்னணிக்கு (பாரிசான் நேஷனல்) ஆதரவை வலுப்படுத்துவதையும், மஇகா வேட்பாளரான சகோதரர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர் பன்னீர்செல்வமும் நேரில் கலந்துகொண்டார்.

மேலும், மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவி திருமதி சரஸ் நல்லதம்பி, மஇகா மூத்த மகளிர் தலைவிகளின் பொறுப்பாளர் திருமதி ஆர். விக்னேஸ்வரி பாபுஜி மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பெர்லிங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர். தேசியத் தலைவர் மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்தக் கலந்துரையாடல் அமைந்தது.

கூட்டத்தில், ஜொகூர் மாநிலத்தில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக மஇகாவும் தேசிய முன்னணியும் முன்னெடுத்து வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 6-
இளம் பெண்களும் பல்வேறு துறைகளில் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார் 15 வயதான கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன். தனது துடிப்பும் திறமையும் கொண்டு கால்பந்து அரங்கில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

கிளானா ஜெயா PKNS அரங்கில் ஜூன் 28 ஆம் நாள் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான FAM Liga Puteri Cup Final இறுதிப்போட்டியில், Penang Indian FC அணி வீரத்துடன் விளையாடி, Perlima United FC அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திய பினாங்கு இந்தியன் FC, உறுதியான மனநிலையுடன் ஆட்டத்தின் போக்கையே தம் பக்கம் மாற்றிக்கொண்டது.

இதன் விளைவாக, வெற்றிக் கிண்ணத்துடன் 5,000 வெள்ளி ரொக்கப் பரிசும் அணிக்கு வழங்கப்பட்டது.

இந்தத் தொடரில் கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன் 7 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து, லீகாவின் சிறந்த கோல் வீராங்கனையாகத் திகழ்ந்தார்.

கெடா மாநிலம் கூலிம் பகுதியில் உள்ள கலாடி இடைநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவியாவார் இவர்.

அணித் தலைவர் ஸ்ரீ சங்கர் கூறுகையில், “இது நீண்ட கால உழைப்பின் பயனும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடும் ஆகும். தனுஶ்ரீ வெறும் கோல் அடிக்கும் வீராங்கனை அல்ல; முக்கிய தருணங்களில் ஆட்டத்தை மாற்றும் ஆற்றல் கொண்டவர்,” எனப் பெருமிதம் தெரிவித்தார்.

இவ்வாறு, தன் இளமைப் பருவத்திலேயே திறமையால் விளையாட்டு உலகில் முத்திரை பதித்து, பினாங்கு இந்தியன் FC அணிக்கு மகுடம் சூட்டியுள்ளார் கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன்.

கோலாலம்பூர், ஜூலை 6-
பகாங் மாநிலம், ரவூப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் புதிதாகக் கட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்ற ராஜகோபுரத்தின் அஷ்டபந்தன பஞ்சகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 12, 2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.

பல ஆண்டுகளாக பக்தர்களின் ஆதரவுடனும், ஆலய நிர்வாகத்தின் முயற்சியுடனும் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான ராஜகோபுரம், ஆலயத்தின் ஆன்மிகப் பெருமையையும், திராவிடக் கோயில் கட்டிடக்கலையின் சிறப்பையும் பிரதிபலிக்கும் புதிய அடையாளமாக விளங்குகிறது.

இந்த ராஜகோபுர கும்பாபிஷேகம், ரவூப் மற்றும் சுற்றுவட்டார இந்து மக்களுக்கான முக்கிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 11, 2026 (சனிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு, வாணவேடிக்கை மற்றும் வான ஒளிக்காட்சி (Sky Display) நடைபெறவுள்ளது.

குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டு இந்த அரிய ஆன்மிக நிகழ்வைக் கண்டு இறையருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மஇகாவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள உள்ளார். மேலும், கவுரவ விருந்தினராக மசீச தேசிய பொதுச் செயலாளரும் பகாங் மாநில மசீச தலைவருமான டத்தோக் சோங் சின் வூன் பங்கேற்கவுள்ளார்.

இந்த மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆலயத் தலைவர் டத்தோ கே. தமிழ்செல்வன் தலைமையில், ரவூப் இந்து ஆலய சபா  மற்றும் அதன் நிர்வாகக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மகா கும்பாபிஷேகம், புதிய ராஜகோபுரத்தின் திருப்பணியை நிறைவு செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மட்டுமன்றி, பக்தர்களின் ஒற்றுமையையும் இறைநம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஆன்மிக விழாவாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜாசின், ஜூலை 6-

i-NEXTECH புத்தாக்க போட்டியில் எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரு விருதுகளை வென்று சாதித்துள்ளனர்.

i-NEXTECH 2026 எனும் 3ஆவது அனைத்துலக அடுத்த தலைமுறை புத்தாக்க தொழில்நுட்பக் கண்காட்சி ஜாசினில் நடைபெற்றது.

மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 239 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இருந்து ஸ்ரீ திருமுருகன் சக்தீஸ்வரன், திவ்யா தருமராஜ், தனுஸ்ரீ பிரவின் குமார் ஸ்ரீ தர்ஷன் சக்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைமையாசிரியர் அனுராதா, பொறுப்பாசிரியர் நிர்மலா ஆகியோர் தலைமையில் இம்மாணவர்கள்  இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

கடும் சவால்கலுக்கு மத்தியில் எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
இரு விருதுகளை வென்றனர்.

ஜூனியர் கண்டுபிடிப்பாளர் பிரிவில் தங்கப் பதக்கம், சிறந்த விளக்கக் காணொளிக்கான சிறப்பு விருதும் அவர்கள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஜூலை 6-
இந்திய சமுதாயத்தின் வாக்கை பெற்றுக்கொண்டு நம் சமுதாயத்தை மாய உலகத்தில் வைத்துக் கொண்டிருக்கும்   பிரதமரரும் பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான அன்வாருக்கு  இந்திய சமுதாயம் பாடம் புகட்ட வேண்டும் என எம் .ஏ .பி கட்சியின் தலைவரான பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாடு  தொடர்பான எந்த திட்டத்தை கொண்டுச் சென்றாலும் அதற்கு அன்வார் கொடுக்கும் ஒரே பதில்  இது இன ரீதியான திட்டம் என அதை ஒதுக்கி வைத்து விடுவார்.

அது மட்டும் அல்ல  ஆலய விவகாரத்தில்  குழந்தையையும்  கில்லி விட்டு தொட்டிலையும்  ஆட்டிவிடும் வேலையை அன்வார் செய்து வருகிறார்.  இதை அவர் செய்தது அரசியலுக்காக.. இவரது வலையில்  இந்திய சமுதாயம் விழுந்து விட கூடாது, அம்னோ பாஸ் பெர்சத்து போன்ற கட்சிகள் அன்வார் விரித்த வலையில் சிக்க வேண்டாம் என நான்  கருத்தும் தெரிவித்தேன் கடிதமும் அனுப்புனேன்.

அதுமட்டுமின்றி அவர் ஆட்சி காலத்தில் பயன் படுத்திய சில வார்த்தைகள் இந்தியச் சமுதாயத்தை காயமும் படுத்தியது.

ஆனால் நம் மக்கள் தெளிவாக சில கருத்துகளை அமைதியாக கொடுத்தனர். எல்லா வினைக்கும் எதிர் வினையாக 16 ஆவது பொது தேர்தலில் விடை கிடைக்கும், பதில் கொடுப்போம் என மக்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் இந்திய மக்கள் ஜொகூர் தேர்தலில்" ASALKAN BUKAN PH "  என்ற நிலைப்பாட்டில்  PN அல்லது BN கட்சிக்கு ஆதரவு கொடுத்து  அன்வாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.

அதே போல் இந்திய மக்கள் வரும் பொது தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பானை அடியோடு புறக்கணித்து  இந்திய சமுதாயத்திற்கு ஆதரவும் கொடுக்க தெரியும், எங்களை துச்சமாக நினைத்தால் தூக்கி எறியவும் தெரியும் என்பதை அன்வாருக்கும் பாக்காத்தான் ஹாராப்பானுக்கும்  பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.

தொடங்கட்டும் முழக்கம் " ASALKAN BUKAN PH " என்றார் அவர்.

செய்தி : வெற்றி விக்டர் - காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 6-
இந்திய சமுதாயத்தின் வாக்கை பெற்றுக்கொண்டு நம் சமுதாயத்தை மாய உலகத்தில் வைத்துக் கொண்டிருக்கும்   பிரதமரரும் பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான அன்வாருக்கு  இந்திய சமுதாயம் பாடம் புகட்ட வேண்டும் என எம் .ஏ .பி கட்சியின் தலைவரான பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாடு  தொடர்பான எந்த திட்டத்தை கொண்டுச் சென்றாலும் அதற்கு அன்வார் கொடுக்கும் ஒரே பதில்  இது இன ரீதியான திட்டம் என அதை ஒதுக்கி வைத்து விடுவார்.

அது மட்டும் அல்ல  ஆலய விவகாரத்தில்  குழந்தையையும்  கில்லி விட்டு தொட்டிலையும்  ஆட்டிவிடும் வேலையை அன்வார் செய்து வருகிறார்.  இதை அவர் செய்தது அரசியலுக்காக.. இவரது வலையில்  இந்திய சமுதாயம் விழுந்து விட கூடாது, அம்னோ பாஸ் பெர்சத்து போன்ற கட்சிகள் அன்வார் விரித்த வலையில் சிக்க வேண்டாம் என நான்  கருத்தும் தெரிவித்தேன் கடிதமும் அனுப்புனேன்.

அதுமட்டுமின்றி அவர் ஆட்சி காலத்தில் பயன் படுத்திய சில வார்த்தைகள் இந்தியச் சமுதாயத்தை காயமும் படுத்தியது.

ஆனால் நம் மக்கள் தெளிவாக சில கருத்துகளை அமைதியாக கொடுத்தனர். எல்லா வினைக்கும் எதிர் வினையாக 16 ஆவது பொது தேர்தலில் விடை கிடைக்கும், பதில் கொடுப்போம் என மக்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் இந்திய மக்கள் ஜொகூர் தேர்தலில்" ASALKAN BUKAN PH "  என்ற நிலைப்பாட்டில்  PN அல்லது BN கட்சிக்கு ஆதரவு கொடுத்து  அன்வாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.

அதே போல் இந்திய மக்கள் வரும் பொது தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பானை அடியோடு புறக்கணித்து  இந்திய சமுதாயத்திற்கு ஆதரவும் கொடுக்க தெரியும், எங்களை துச்சமாக நினைத்தால் தூக்கி எறியவும் தெரியும் என்பதை அன்வாருக்கும் பாக்காத்தான் ஹாராப்பானுக்கும்  பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.

தொடங்கட்டும் முழக்கம் " ASALKAN BUKAN PH " என்றார் அவர்.

செய்தி : வெற்றி விக்டர் - காளிதாசன் இளங்கோவன்

நாமக்கல், ஜூலை 6–
நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் முதன்மை விருந்தினராக மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்துகொண்டதுடன் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா விருதையும் பெற்றுக் கொண்டார்.

விருதைப் பெற்ற பின்னர் அவர், கவியரசு கண்ணதாசனின் இலக்கியப் பங்களிப்புகள், தமிழ்மொழி வளர்ச்சியில் அவர் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் அவரது படைப்புகளின் காலத்தால் அழியாத சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

மேலும், விருதுக்கான ஏற்புரையையும் நிகழ்த்தி, இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய விழா ஏற்பாட்டாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் அரசு பரமேஸ்வரன், திரு. பசுமை சத்தியமூர்த்தி, மருத்துவர் குழந்தைவேலு, திரு. காந்தி கண்ணதாசன், திரு. பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் திரு. வி.பி. குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கூலாய் ஜெயா, ஜூலை 2-

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட என் மகன் அருண்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தாயார் தேவி உருக்கத்துடன் தெரிவித்தார்.

21 வயதான அருண்குமார் ஒரு அமைதியான இளைஞர். எப்போதும் தன் குடும்பத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பார், அவரது மரணம்  அவரின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாமல், எங்கள் அனைவரின் கனவுகளையும் ஒன்றாகச் சிதைத்துவிட்டது.

கடந்த மே 21ஆம் தேதி பெக்கான் நெனாஸில் உள்ள உணவகத்தின் முன்பு நடந்த திட்டமிடப்பட்டதாக நம்பப்படும் ஒரு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத 52 வயதான கே. தேவி, தனது மகனின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு உறவினர்கள் எங்களுக்குத் தெரிவித்தபோதுதான் இந்தச் சம்பவம் பற்றித் தெரியவந்தது.

சம்பவத்திற்கு முன்பு, அவனிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. மாறாக, அவர் வழக்கம் போல் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்,

நாங்கள் வங்கிக்குச் சென்றுவிட்டு,  வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது என்று அவர் கூறினார்.

அருண்குமார் கொலை வழக்கில் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், இன்னும் சிலர் பிடிபடாமல் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

அவர்களையும் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என போலிசாரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அவர்கள் சுதந்திரமாக இருக்கும் வரை, எங்கள் வாழ்க்கை அமைதியாக இருக்காது என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை 2 –
டிரெய்னோகேட் மலேசியா (Trainocate Malaysia) மற்றும் சிலாங்கூர் யூத் கம்யூனிட்டி (SAY) இணைந்து ஏற்பாடு செய்த Trainocate AI Training என்ற சமூக அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சித் திட்டம், கடந்த ஜூன் 6 முதல் கோலாலம்பூரில் உள்ள KL Eco City-யில் நடைபெற்றது.


எதிர்கால டிஜிட்டல் திறன்களையும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான அடிப்படை அறிவையும் இளைஞர்களுக்கு வழங்கும் நோக்கில் நடைபெற்ற இப்பயிற்சியில், மொத்தம் 120 பேர் பங்கேற்றனர். அவர்களில் மலேசியா ஸ்ரீ சாரதா தேவி இல்ல நலச்சங்கத்தைச் சேர்ந்த 28 மாணவர்களும் இடம்பெற்றனர்.


இந்த 28 மாணவர்களும் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது, அவர்களின் கற்றலுக்கான அர்ப்பணிப்பையும், முன்னேற்றத்திற்கான உறுதியையும் வெளிப்படுத்துகிறது. தரமான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியின் மூலம் பின்தங்கிய குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தி வரும் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் பணியில் இது மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.


பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களை கௌரவிக்கும் வகையில், Trainocate Career Jumpstart 30th Celebration & Graduation Hi-Tea நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் தேதி சன்வே ரிசார்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில இளவரசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், Trainocate Group Holdings (Japan), Trainocate Malaysia மற்றும் Selangor Youth Community (SAY) ஆகிய அமைப்புகளின் நிர்வாகக் குழுவினரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


விழாவில் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தைச் சேர்ந்த 28 மாணவர்களும் தங்களது பயிற்சி நிறைவு சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். மேலும், இல்லத்தைச் சேர்ந்த சுசிதாரா ஜெகன் இந்நிகழ்ச்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக (Emcee) சிறப்பாகப் பொறுப்பேற்று நிகழ்ச்சியை வழிநடத்தினார்.


அதேவேளை, சாருமதி சண்முகம், டிரெய்னோகேட் AI பயிற்சித் திட்டத்தில் பெற்ற அனுபவங்களையும், தனது கற்றல் பயணத்தையும் சிலாங்கூர் மாநில இளவரசர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பகிர்ந்து உரையாற்றினார்.
இருவரின் தன்னம்பிக்கை, பேச்சுத்திறன் மற்றும் தொழில்முறை அணுகுமுறை ஆகியவை, ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தில் வழங்கப்படும் ஒழுக்கம், கல்வி மற்றும் ஆளுமை வளர்ப்பின் சிறந்த வெளிப்பாடாக அமைந்தன.


இந்நிகழ்வில் பங்கேற்று பட்டதாரி மாணவர்களை ஊக்குவித்த சிலாங்கூர் மாநில இளவரசருக்கு ஸ்ரீ சாரதா தேவி இல்ல நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.


அதேபோல், இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் திறன் பயிற்சிகளை வழங்கிய Trainocate Malaysia, Trainocate Group Holdings (Japan) மற்றும் Selangor Youth Community (SAY) ஆகிய அமைப்புகளுக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்காக ஸ்ரீ சாரதா தேவி இல்ல நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள உஞ்சனை கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான, வரலாற்று மற்றும் ஆன்மிகச் சிறப்புமிக்க திருவோண சக்கரவர்த்தியார் ஆலயம் தற்போது பராமரிப்பின்றி புதர்கள், செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலயத்தை சீரமைக்க வேண்டும் என, கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆலயம் சக்தி வாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். இங்கிருந்து பசும்பால் அக்காலத்தில் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆலயத்தின் முன்புறத்தில் குளமும், பின்புறத்தில் மயானமும் அமைந்துள்ளன. மேலும், ஆலயத்தைச் சுற்றி முருகப்பெருமான் உள்ளிட்ட பல தெய்வங்களின் சிலைகள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது காடு மண்டி மறைந்துள்ளதால், உடனடியாக சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உஞ்சனை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருவதால், இந்த ஆலயம் சீரமைக்கப்பட்டால் பக்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் பெரும் பயனளிக்கும். கண்டதேவி ஆலயத்தைப் போல, உஞ்சனை திருவோண சக்கரவர்த்தியார் ஆலயமும் புகழ்பெற்ற திருத்தலமாக வளர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, தமிழக முதலமைச்சர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஆலயத்தை முழுமையாக சீரமைத்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உஞ்சனை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன்

கோலாலம்பூர்,ஜூலை 2-
மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (National Chamber of Commerce and Industry of Malaysia – NCCIM) ஏற்பாடு செய்த 6ஆவது தேசிய பொருளாதார மாநாடு இன்று சிறப்பாக நடைபெற்றது.

நாட்டின் ஐந்து முக்கிய வர்த்தக சம்மேளனங்கள் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

மாநாட்டை பொருளாதார துணை அமைச்சர் லியு சின் தோங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இதில் தொழில்துறையினர், வர்த்தகர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உரையாற்றுகையில், தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தில் தற்போது 630-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்களில் சுமார் 150 பேர் இந்திய தொழில்முனைவோர்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த தேசிய பொருளாதார மாநாடு ஆறாவது முறையாக நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, உலகளாவிய பொருளாதாரச் சவால்கள், போர் காரணமாக ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மாநாட்டில் விரிவாக ஆய்வு செய்யப்படுவதாகக் கூறினார்.

மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில், நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையிலான பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தேசிய வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே இந்த தேசிய பொருளாதார மாநாடு நடத்தப்படுவது வழக்கமாக இருப்பதாகவும், மாநாட்டில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளில் பலவற்றை அரசு இதுவரை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருவதாகவும் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசு இந்த மாநாட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதற்கான சான்றாகவே பொருளாதார துணை அமைச்சர் நேரில் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டை மையமாகக் கொண்ட தனித்துவமான பொருளாதார மாநாட்டை இந்த ஆண்டுக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமரராஜா தெரிவித்தார்.

இந்த மாநாட்டை மைக்கி (MAICCI) உள்ளிட்ட இந்திய வர்த்தக மற்றும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் மூலம் அரசுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயனுள்ள கொள்கைப் பரிந்துரைகளை வழங்குவதே முக்கிய நோக்கமாகும் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஜுன் 30-

பி.பி.ஆர் வீடு கிடைக்க கோலாலம்பூர் மாநகர மன்றத்திடம் விண்ணப்பம் செய்த  நிலையில்  அவருக்கு  கடந்த ஜூன் 15ஆம் திகதி  இந்தான் பைடுரியில்  பி.பி.ஆர் வாடகை வீடு மாதம் 124 வெள்ளிக்கு கிடைத்துள்ளது.

ஆனால் 14 நாட்களுக்குள் அவர் வீட்டுக்கான  முன் பணத்தை  (செலுத்தி) வீட்டு சாவி எடுக்க வேண்டும் என மாநகர மன்றத்தின் கடிதத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி நந்தகுமார் மாநகர மன்றத்தின் கடிதத்திற்கு  14 நாட்களில்  பதில் கொடுக்காத நிலையில்  அவருக்கு கொடுக்க பட்ட வாய்ப்பு  பறிக்கப்பட்டு மற்ற விண்ணப்பதாரர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதாரண தொழிலாளியான பி 40 பிரிவை சேர்ந்த  நந்தகுமாரால் மாத இறுதியான இத்தருணத்தில் அந்த பணத்தை திரட்ட இயலாத நிலையில் தவித்த போது, அவர் ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர்  டத்தோ ஏ. கே ராமலிங்கத்தை நேற்று சந்தித்தார்.

மாதம் முடிய இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலை நிலவரத்தை டத்தோ ராமலிங்கத்திடம் அவர் விளக்ககினார். உடனடியாக அவருக்கு தேவையான முன் பணத்தை டத்தோ ராமலிங்கம் வழங்கி   அந்த வீடு அவருக்கு கிடைக்க உதவி செய்தார்.

தவித்த நேரத்தில் டத்தோ ஏ.கே ராமலிங்கத்தை சந்தித்தேன். ம.இ.கா எனக்கு கை கொடுத்தது என  நந்தகுமார் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், ஜூன் 27-
தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோக நிறுவனங்களில் ஒன்றான பப்ளிக் கோல்டு, 2025/26 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட தொழில்முனைவோர்களை கௌரவிக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவிலான Award Recognition Night (ARN) 2026 விருது வழங்கும் விழாவை மலேசியா அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) பிரம்மாண்டமாக நடத்தியது.

"One Team, Endless Records, Legacy Continues" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் 3,200-க்கும் மேற்பட்ட Public Gold Business Owners (PGBOs) பங்கேற்றனர்.

இந்த விழாவில் பப்ளிக் கோல்டு குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டத்தோஸ்ரீ லூயிஸ் ங் மற்றும் Aurora Italia International Berhad நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தின் ஸ்ரீ இவோன் லிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2008-ஆம் ஆண்டு பினாங்கில் தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்டு, தற்போது மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், துபாய், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு, உலகளவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.

2025/26 நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த விற்பனை RM27 பில்லியனை கடந்துள்ளது. மேலும், தகுதி பெற்ற தொழில்முனைவோருக்கு RM490 மில்லியன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிறுவனம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் துபாயில் 161 தங்க ஏடிஎம்களை (Gold ATM) நிறுவியதற்காக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கின்னஸ் உலகச் சாதனை அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் ARN விழாவில் 24-க்கும் மேற்பட்ட விருது பிரிவுகளில் மொத்தம் 1,422 சிறந்த தொழில்முனைவோர் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை RM30.98 மில்லியன் ஆகும்.

கடந்த நிதியாண்டில் 780 பேருக்கு வழங்கப்பட்ட RM15.81 மில்லியன் பரிசுத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகமாகும்.
விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக Million Star Triple Diamonds விருதைப் பெற்ற துவான் ஹாஜி ஸுல்கிப்லி பின் ஷாபி மற்றும் புவான் ஹாஜா நஜ்டா பிந்தி முகமது ஹுசைன் ஆகியோர், சிறந்த தலைமைத்துவம் மற்றும் வணிக சாதனைகளுக்காக மொத்தம் RM2.27 மில்லியன் நிதி வெகுமதியை பெற்றனர்.

மேலும், கடந்த 18 ஆண்டுகளாக வலுவான வணிக வலையமைப்பை உருவாக்கிய Million Star Double Diamond Mahagurus விருதைப் பெற்ற துவான் சியுகோர் ஹாஷிம் மற்றும் புவான் ஜோனைனா நூர்டின் ஆகியோர் RM1.03 மில்லியன் வெகுமதியை பெற்றனர்.

அதேவேளை, Public Gold Leadership Seminar (PGLS) 2026 தலைமைத்துவப் பயிற்சி திட்டத்திற்கு தகுதி பெற்ற 949 தொழில்முனைவோர்கள் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் மற்றும் இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா நகரங்களில் நடைபெறும் வெளிநாட்டு தலைமைத்துவ பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதற்காக நிறுவனம் இதுவரை RM22 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
நிகழ்வின் மற்றொரு முக்கிய அம்சமாக, உலகளவில் 1,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்படும் ஒரு அவுன்ஸ் 999.9 தூய தங்கத்தில் உருவாக்கப்பட்ட Malayan Tiger Gold Coin அறிமுகப்படுத்தப்பட்டது.

மலேசியாவின் தேசிய அடையாளமான மலாயன் புலியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாணயம், வலிமை, தைரியம் மற்றும் நீடித்த செழிப்பை குறிக்கிறது.

விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ லூயிஸ் ங், "பப்ளிக் கோல்டின் ஒவ்வொரு சாதனையும் எங்கள் தொழில்முனைவோர், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்காளிகளின் அர்ப்பணிப்பின் பலனாகும். 'ஒரே அணி' என்ற ஒற்றுமையுடன் நாம் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து, எங்கள் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்வோம்," என்றார்.

2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 1 கோடி வாடிக்கையாளர்களை சேவையளிக்கும் இலக்குடன், கல்வி, தொழில்நுட்ப புதுமை மற்றும் மூலோபாய கூட்டாண்மைகள் மூலம் மலேசியாவிலும் பிராந்திய அளவிலும் தனது வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த பப்ளிக் கோல்டு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர், ஜூன் 27-
தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோக நிறுவனங்களில் ஒன்றான பப்ளிக் கோல்டு, 2025/26 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட தொழில்முனைவோர்களை கௌரவிக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவிலான Award Recognition Night (ARN) 2026 விருது வழங்கும் விழாவை மலேசியா அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) பிரம்மாண்டமாக நடத்தியது.

"One Team, Endless Records, Legacy Continues" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் 3,200-க்கும் மேற்பட்ட Public Gold Business Owners (PGBOs) பங்கேற்றனர்.

இந்த விழாவில் பப்ளிக் கோல்டு குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டத்தோஸ்ரீ லூயிஸ் ங் மற்றும் Aurora Italia International Berhad நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தின் ஸ்ரீ இவோன் லிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2008-ஆம் ஆண்டு பினாங்கில் தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்டு, தற்போது மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், துபாய், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு, உலகளவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.

2025/26 நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த விற்பனை RM27 பில்லியனை கடந்துள்ளது. மேலும், தகுதி பெற்ற தொழில்முனைவோருக்கு RM490 மில்லியன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிறுவனம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் துபாயில் 161 தங்க ஏடிஎம்களை (Gold ATM) நிறுவியதற்காக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கின்னஸ் உலகச் சாதனை அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் ARN விழாவில் 24-க்கும் மேற்பட்ட விருது பிரிவுகளில் மொத்தம் 1,422 சிறந்த தொழில்முனைவோர் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை RM30.98 மில்லியன் ஆகும்.

கடந்த நிதியாண்டில் 780 பேருக்கு வழங்கப்பட்ட RM15.81 மில்லியன் பரிசுத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகமாகும்.
விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக Million Star Triple Diamonds விருதைப் பெற்ற துவான் ஹாஜி ஸுல்கிப்லி பின் ஷாபி மற்றும் புவான் ஹாஜா நஜ்டா பிந்தி முகமது ஹுசைன் ஆகியோர், சிறந்த தலைமைத்துவம் மற்றும் வணிக சாதனைகளுக்காக மொத்தம் RM2.27 மில்லியன் நிதி வெகுமதியை பெற்றனர்.

மேலும், கடந்த 18 ஆண்டுகளாக வலுவான வணிக வலையமைப்பை உருவாக்கிய Million Star Double Diamond Mahagurus விருதைப் பெற்ற துவான் சியுகோர் ஹாஷிம் மற்றும் புவான் ஜோனைனா நூர்டின் ஆகியோர் RM1.03 மில்லியன் வெகுமதியை பெற்றனர்.

அதேவேளை, Public Gold Leadership Seminar (PGLS) 2026 தலைமைத்துவப் பயிற்சி திட்டத்திற்கு தகுதி பெற்ற 949 தொழில்முனைவோர்கள் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் மற்றும் இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா நகரங்களில் நடைபெறும் வெளிநாட்டு தலைமைத்துவ பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதற்காக நிறுவனம் இதுவரை RM22 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
நிகழ்வின் மற்றொரு முக்கிய அம்சமாக, உலகளவில் 1,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்படும் ஒரு அவுன்ஸ் 999.9 தூய தங்கத்தில் உருவாக்கப்பட்ட Malayan Tiger Gold Coin அறிமுகப்படுத்தப்பட்டது.

மலேசியாவின் தேசிய அடையாளமான மலாயன் புலியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாணயம், வலிமை, தைரியம் மற்றும் நீடித்த செழிப்பை குறிக்கிறது.

விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ லூயிஸ் ங், "பப்ளிக் கோல்டின் ஒவ்வொரு சாதனையும் எங்கள் தொழில்முனைவோர், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்காளிகளின் அர்ப்பணிப்பின் பலனாகும். 'ஒரே அணி' என்ற ஒற்றுமையுடன் நாம் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து, எங்கள் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்வோம்," என்றார்.

2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 1 கோடி வாடிக்கையாளர்களை சேவையளிக்கும் இலக்குடன், கல்வி, தொழில்நுட்ப புதுமை மற்றும் மூலோபாய கூட்டாண்மைகள் மூலம் மலேசியாவிலும் பிராந்திய அளவிலும் தனது வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த பப்ளிக் கோல்டு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர், ஜூன் 26 –
25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள மலேசிய வீரர்கள் முழு பலத்துடன் போட்டியிட்டு, அனைத்துலக அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி வலியுறுத்தினார்.

25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், இப்போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 350 அனைத்துலக வீரர்கள் கலந்து கொண்டிருப்பது போட்டியின் உயரிய தரத்தையும் சிறப்பையும் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

மேலும், போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வீரர்களையும் அவர் வரவேற்று, விளையாட்டு மூலம் நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒற்றுமையும் மேலும் வலுப்பெற வாழ்த்துத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

கோலாலம்பூர்,ஜூன் 26-
தலைநகரிலுள்ள தித்திவாங்சா மண்டபத்தில் 25ஆவது மைலோ சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் தொடக்க விழா இன்று நடைப்பெற்ற வேளையில் அதனை துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 1,850 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 350 சர்வதேச வீரர்களும், 1,500 உள்ளூர் வீரர்களும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு வயது மற்றும் திறன் பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டி, சர்வதேச நட்புறவை வலுப்படுத்துவதோடு, கராத்தே விளையாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியது.

புத்ராஜெயா கராத்தே சங்கத் தலைவர் தியாகு பொன்னையா  தலைமை உரையாற்றியபோது இத்தகவலை வழங்கினார்.

கோலாலம்பூர், ஜூன் 25-
இயற்கையுடன் கலந்த இசை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நியோன் நிலவு 2.0’ இசை நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமை (27ஆம் தேதி) மோரிப் கடற்கரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் முதல் பதிப்பான நியோன் நிலவு அருவி ஓரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை கடற்கரைச் சூழலில் இசை ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மாலை 2 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகளுடன், புதையல் தேடும் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் லாபம் முழுமையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பிரபல பாடகர்களான வேல்முருகன் மற்றும் அருள் பிரகாசம் ஆகியோர் தங்களது கலைப் படைப்புகளை வழங்கவுள்ளனர். அதேவேளையில் உள்ளூர் கலைஞர்களான சந்தேஷ், குமரேஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

நியோன் நிலவு 2.0 இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டு நிறுவனமான ஜெனிராவின் இயக்குநர் ரூபன், மேற்கண்ட தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செந்தூலிலுள்ள ரூட்ஸ் 88 ஸ்போர்ட் பாரில் இந்த நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த பார் இந்த நிகழ்ச்சியின் ஆதரவாளர்களில் ஒன்றாகும்.

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளர்களான எசான் குரூப், புளு பிரதர்ஸ் என அனைத்து நிறுவனங்களுக்கும் ஜெனிரா நிறுவனத்தின் சார்பில் ரூபன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், ஜூன் 25-
ஜொகூர் மாநிலத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் தலைமைத்துவ முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் டிரா மலேசியா 10 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் தோட்டப்புறங்களில் வாழ்ந்த பெரும்பாலான இந்தியர்கள் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததன் மூலம் கல்வி, தொழில்நுட்பம், வணிகம், தொழில்முனைவு, பொது சேவை மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனையாளர்கள் உருவாகியுள்ளதாக டிரா மலேசியா தெரிவித்துள்ளது.

எனினும், சமூகத்தின் ஒரு பகுதியினர் இன்னும் நகர்ப்புற வறுமை, கல்வி இடைநிறுத்தம், வேலைவாய்ப்பின்மை, குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சினைகள், போதைப்பழக்கம், சமூகச் சீர்கேடுகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொண்டு வருவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஜொகூரில் 4 மக்கள் சேவை மையங்களை உருவாக்குதல், தொழில்முனைவோர் மற்றும் வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துதல், மலிவு விலை வீட்டு வசதி மற்றும் வீட்டுரிமைத் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனைவருக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதோடு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்துதல், குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு காணுதல், அரசாங்கக் குழுக்கள், அரசாங்க இணை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குதல், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குடும்பங்களின் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துதல், மாநில அளவில் சமூக மேம்பாட்டு குழுவொன்றை அமைத்து அனைத்து முன்னெடுப்புகளையும் ஒருங்கிணைத்து கண்காணித்தல் ஆகிய பரிந்துரைகளையும் டிரா மலேசியா வலியுறுத்தியுள்ளது.

இந்த பரிந்துரைகள் வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், நடைமுறைப்படுத்தக்கூடிய சமூக மேம்பாட்டுத் திட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாக டிரா மலேசியா தெரிவித்துள்ளது.

அதேவேளை, இத்திட்டங்கள் வெற்றிபெற மக்களின் பங்களிப்பும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள டிரா மலேசியாவின் தலைவர் டத்தோ சரவணன், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்களது வாக்குரிமையின் சக்தியைப் பயன்படுத்தி சமூக தேவைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோலாலம்பூர், ஜூன் 25-
சமூக வலைத்தளங்களில் மஇகா குறித்து பரப்பப்படும் அவதூறுகளையும் பொய்யான தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மஇகாவின் தேசிய  உதவித் தலைவர் டத்தோ முருகையா கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, ஜொகூரில் உள்ள மஇகா கட்டடம் விற்கப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.

“மஇகாவைப் பற்றிய தவறான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை எட்டு பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மஇகாவின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் எட்டு முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, கூட்டுப் பிரார்த்தனை, குடும்ப தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

அடுத்ததாக, சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் வரும் ஜூன் 28ஆம் தேதி காலை முதல் மாலை வரை 152 தொகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்றார்.

இந்த மருத்துவ முகாம்களில் அனைத்து இன மக்களும் பங்கேற்று பயனடையலாம் என்றும், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், ஜூலை 4ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுப் போட்டி, இரு மாநிலங்களின் இடைத்தேர்தல் காரணமாக ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மஇகா தொகுதிகளிலும் நெடுஓட்ட நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு எஸ்.எம். முத்து தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

வரவிருக்கும் ஜொகூர் மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு, 56 பகுதிகளில் மஇகா பிரதிநிதிகள் களமிறங்கி தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணியின் முக்கியமான கோட்டையாகும். இம்முறையும் இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். தேசிய முன்னணி 50 இடங்களை வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ளது,” என்றும் டத்தோ முருகையா கூறினார்.

கோலாலம்பூர்,ஜூன் 20-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படாத வரை அந்த கூட்டணியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என மலேசிய முன்னேற்ற கட்சியின் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தற்போது பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் தலைமைகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.

எனினும், பெரிக்காத்தான் நேஷனலில் சில உள்பிரச்சினைகள் நிலவுவதால், இரண்டு மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் தங்களது இயக்கம் கவனம் செலுத்தவில்லை என்றும், தங்களது முக்கிய இலக்கு அடுத்த பொதுத் தேர்தலே என்றும் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தியர்களை தேசிய பொருளாதாரத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தினார். “மருத்துவ சேவை மட்டுமே அனைவருக்கும் சமமாக கிடைக்கிறது. அதற்கு அப்பாற்பட்ட பல துறைகளில் இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளையும் வாய்ப்புகளையும் வழங்குவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவற்றை உறுதியாகக் கேட்டு பெறக்கூடிய தலைமைத்துவம் தற்போது இல்லை,” என்றார்.

மேலும், அனைத்து இந்திய அடிப்படையிலான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்திய சமுதாயத்தின் குரலாக செயல்பட வேண்டும் என தாம் முன்மொழிந்ததாகவும், மூத்த இந்திய அரசியல் கட்சியான மஇகா இதற்கு தலைமை தாங்க வேண்டும் என்று ஆர்எம்13 பட்ஜெட் தொடர்பான விவாதங்களின் போது அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

“பொய்களை நம்பிக்கொண்டிருக்கும் வரை நமது சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றமடைந்து கொண்டே இருக்கும். மாயையான அரசியல் வாக்குறுதிகளிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும்.

இந்தியர்களின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்க எந்த அரசியல் கட்சிக்கும் துணிச்சல் இல்லை. இந்திய சமுதாயம் அடிமை மனப்பான்மை கொண்ட தலைவர்களை வைத்திருக்கும் வரை, சமூகமும் அடிமைகளாகவே பார்க்கப்படும்,” என்றும் வேதமூர்த்தி கடுமையாக விமர்சித்தார்.

​பேராக் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் டாக்டர் சந்தரசேகரன் சுப்பிரமணியம், சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கல்வி அமைப்பான 'சர்வதேச அமைதி மனித உரிமைகள் கல்வி கவுன்சில்' (IPHREC) வழங்கும் மிக உயரிய 'ராஜதந்திர தூதுவர்' (Royal Ambassador) விருதைப் பெற்றுள்ளார்.

அண்மையில் இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கல்வி மாநாட்டில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை உலக அரங்கில் பெறும் முதல் மலேசியர் மற்றும் முதன்மைப் வெற்றியாளர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

​கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சுமார் 4 ஆண்டுகாலம் IPHREC அமைப்பின் உலகளாவிய கல்வி இயக்குநராக அவர் ஆற்றிய மிகச் சிறந்த நிர்வாகத் திறன் மற்றும் தலைமைத்துவத்தின் அடிப்படையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய IPHREC அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், கற்றல் என்பது அனைத்து நிலைகளிலும் தொடர வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 'அனைவருக்கும் கல்வி' எனும் கொள்கையை பெரிதும் வலியுறுத்தி வருகிறார்.

இதன் மூலமே, வேலைவாய்ப்புச் சூழலையும் மனித வாழ்க்கையையும் எதிர்கொள்வதற்கான முழுமையான மனித மேம்பாட்டை உருவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

​உலக அரங்கில் சுற்றுப்புறச் சூழல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், மலேசியாவிலும் சர்வதேச அளவிலும் பல கல்வி சார்ந்த பயிற்சிகளையும் நடத்தியுள்ளார். பேராசிரியர் டாக்டர் சந்தரசேகரனின் இந்த உலகளாவிய கல்விப் பங்களிப்பானது—சர்வதேச மாநாடுகள், கல்வியாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள், மாணவர்களுடனான அறிவுப் பகிர்வு அமர்வுகள் மற்றும் கல்வித் தர மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் வழி மலேசியாவின் புகழை உலக அரங்கில் ஓங்கச் செய்துள்ளது.

நாட்டின் எல்லையற்ற பெருமிதமாக விளங்கும் இவருடைய இந்த வெற்றி, ஒட்டுமொத்த தேசத்தாராலும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

மக்கள் ஓசை நாளிதழின் பணியாளரான யோகேஸ்வரன் அழகனின் மறைவு மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தமிழ்லென்ஸ் இணைய ஊடகத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்களது  ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்

செகாமாட், ஜூன் 15–

கடந்த 43 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டு மைதான நில பிரச்சினைக்கு மடானி அரசாங்கம் தீர்வை கொடுத்துள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த இப்பிரச்சினை காரணமாக, பள்ளி மாணவர்களுக்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சி பல ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. குறிப்பாக ஹாக்கி விளையாட்டில் மாவட்ட மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள பள்ளி மாணவர்களுக்கு, இந்த மைதானம் நீண்டகால தேவையாக இருந்து வந்தது.

கடந்த மே 31ஆம் தேதி, செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா பள்ளிக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் வழி மாநில கல்வித்துறை, மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட நில அலுவலகம் வைத்திருந்த நில எல்லை ஆவணங்களுக்கும், MY LOT செயலியில் காணப்பட்ட தகவல்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த முரண்பாடுகளே இது நாள் வரையிலும் இப்பிரச்சினை நீடிக்க முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் தொகுக்கப்பட்டு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, இன்று கல்வி அமைச்சர் நேரடியாக பள்ளிக்கு வருகை தந்து, நிலத்தைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப அனுமதிக் கடிதத்தை வழங்கினார்.

இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முதல் முக்கியமான படியாக இந்த அனுமதிக் கடிதம் கருதப்படுவதுடன், கல்வி தொடர்பான பிரச்சினைகளில் மடானி அரசாங்கம் காட்டி வரும் அர்ப்பணிப்பிற்கும் இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சு, ஜொகூர் மாநில கல்வித்துறை, செகாமாட் மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளி நிர்வாகம், பிஐபிஜி, சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தபா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது வெறும் நிலப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல; மாணவர்களின் திறமைகளை வளர்க்கவும், அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் உருவாக்கப்படும் புதிய வாய்ப்பாகும், என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர், ஜூன் 12–
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி அண்மையில் பத்துமலை திருத்தளத்தில் நடைப்பெற்றது.

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர்களின் நலன் கருதி வம்சம் அமைப்பு இந்த யாகத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாகத்தில் தங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 54 தம்பதியர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாகத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை, டாக்டர் உமா மாரியப்பன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றனர். ஆகையால் காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி குருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.

மலேசியாவில் முதல் முறையாக இந்த புத்திர காமஸ்தி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த பெருமை வம்சம் அமைப்பையே சேறும்

கோலாலம்பூர், ஜூன் 12–
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி அண்மையில் பத்துமலை திருத்தளத்தில் நடைப்பெற்றது.

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர்களின் நலன் கருதி வம்சம் அமைப்பு இந்த யாகத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாகத்தில் தங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 54 தம்பதியர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாகத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை, டாக்டர் உமா மாரியப்பன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றனர். ஆகையால் காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி குருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.

மலேசியாவில் முதல் முறையாக இந்த புத்திர காமஸ்தி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த பெருமை வம்சம் அமைப்பையே சேறும்.

சிரம்பான், ஜூன் 4-
36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம், 16ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் நாளை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படவுள்ளது.

இவ்விவரத்தை நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன், தனது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார்.
மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதன் மூலம், மாநிலத்தின் புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான 16ஆவது மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர், ஜூன் 2 –

எஸ்.பி.எம் தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ்மொழியைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் நிர்வாகி சுரேன் கந்தா அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கையின் மூலம் அவர் முன்வைத்துள்ள பிரச்சினைகள் கவலைக்குரியவை என்றும், மாணவர்களின் மொழிக் கல்வி உரிமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் விவகாரமாக இதனை அணுக வேண்டும் என்றும் சிவமலர்  தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த 13,688 மாணவர்களில், 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தை எழுதியவர்கள் வெறும் 7,609 பேர் மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், இது சுமார் 45 விழுக்காடு வீழ்ச்சியைக் காட்டுவதாகச் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

இந்த வீழ்ச்சி பள்ளி மட்டத்திலான அமலாக்கம், நிர்வாக நடைமுறைகள் குறித்தும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே உள்ள  விழிப்புணர்வு உட்பட மேலும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்விக்கு வழங்கப்படும் ஆதரவு போன்ற அம்சங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்புவதாக அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழ்மொழிக் கல்விக்கான அணுகலை எளிதாக்கும் வகையில் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டதை நினைவுகூர்ந்த சிவமலர், அது சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளுக்கு சாதகமான நடவடிக்கையாக அமைந்ததாக தெரிவித்தார்.

அதேபோல், மலாயா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டு திருவள்ளுவர் இருக்கை நிறுவப்பட்டதும், தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் ஆய்வுகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தேவையற்ற நிர்வாகத் தடைகள் இன்னும் தொடர்வதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு பாங்கியில் நான்கு மாணவர்கள் தமிழ்மொழி எஸ்.பி.எம். பாடத்திற்குப் பதிவு செய்யத் தடுக்கப்பட்ட சம்பவத்தை எடுத்துக்காட்டினார்.

பொதுமக்கள் மற்றும் பல தரப்பினரின் தலையீட்டிற்குப் பிறகே அந்த முடிவு மாற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்மொழி போன்ற அங்கீகரிக்கப்பட்ட பாடத்தைப் படிக்கவும் தேர்வெழுதவும் மாணவர்கள் தேவையற்ற அலுவலகச் சிக்கல்களையும் முரண்பட்ட விதிமுறை விளக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கக்கூடாது. கல்வி மற்றும் மொழி உரிமைகள் நிர்வாகச் சிக்கல்களால் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, தமிழ்மொழிப் பாடத்தில் மாணவர்கள் பங்கேற்பு குறைந்து வருவதற்கான காரணங்களை கல்வி அமைச்சு முழுமையாக ஆய்வு செய்து, தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் எந்தத் தடையும் இன்றி தமிழ்மொழிக் கல்வியையும் தேர்வையும் அணுகக்கூடிய வகையில் நாடு தழுவிய தெளிவான கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சிவமலர் கணபதி கேட்டுக்கொண்டார்.

தமிழ்மொழிக் கல்வியின் எதிர்காலம் ஒவ்வொரு பிரச்சினையும் எழும் போதும் தனித்தனியான தலையீடுகளின் அடிப்படையில் அமையக் கூடாது என்றும், நிலையான, வெளிப்படையான மற்றும் மாணவர் நலனை மையமாகக் கொண்ட தீர்வு அவசரமாக தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், மே 26–

சுங்கை பெட்டாணி எஸ்.ஜி டிவிசன் பகுதியில் செயலில் இருந்த “கேங் ரமேஸ்” எனப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபரை மலேசிய அரச போலீஸ் ( PDRM) கைது செய்துள்ளது.

குற்றச்செயல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட  “ஒப் திகா” நடவடிக்கையின் கீழ் கடந்த மே 22ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுங்கை பெட்டாணி மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டின் அடிப்படையிலும், உளவுத்துறையின் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு (Red Notice) இருந்ததாலும் அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் திட்டமிட்ட குற்றக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறார். இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 130V கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், வரும் மே 29ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  சந்தேகநபர் மீது, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கெடா மாநிலத்தின் படாங் செராய் மற்றும் பெடோங் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி கொலை வழக்குகள் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கண்டறிந்து கைது செய்ய இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய நெருங்கிய ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என டத்தோ எம். குமார் கூறினார்.

கோலாலம்பூர், மே 22 –
Pertubuhan Bitara Wawasan இயக்கத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை மேம்பாட்டு பயிலரங்கம் இரண்டு நாட்கள் குயில் ஜெயபக்தி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பயிலரங்கில் பல தமிழ்ப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ரவாஙைச் சேர்ந்த Achievers Mind Academy மற்றும் அதன் அரசு சாரா இயக்க குழுவினர் இந்த நிகழ்ச்சியை திறம்பட வழிநடத்தினர்.

மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்ச்சி, மேடைப் பேச்சுத் திறன், பயமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

தெளிவான கருத்தமைப்பு, பேச்சை ஒழுங்குபடுத்துதல், கதை சொல்லும் திறன், நம்பிக்கையுடன் உரையாற்றுதல் போன்ற பல அம்சங்கள் பயிற்சியில் கற்பிக்கப்பட்டன.

பயிலரங்கின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குயில் பத்திரிகை ஆசிரியரும் ஜெய பக்தி நிறுவன இயக்குநருமான டத்தோ டாக்டர் கு.செல்வராஜு தலைமை ஏற்று உரையாற்றி, மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செந்தூல் முத்தக படிபகம் தலைவர் பி. இராமன், பிந்தாரா வாவாசன் இயக்கத் தலைவர் ஆசிரியர் சுப்ரமணியம், Achievers Mind Academy நிறுவனர் மாஸ்டர் அழகன் கோவிந்தன், டத்தோ டாக்டர் சமரான் ரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிறைவு நிகழ்வில் மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட பேச்சுத் திறன்களை மேடையில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

கோலாலம்பூர், மே 25 –
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் தேசிய அளவில் நடைபெற்று வருவதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா தெரிவித்தார்.

இம்மாதம் 21ஆம் தேதி மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இம்மாதம் 31ஆம் தேதி மஇகாவின் மாபெரும் குடும்ப தின விழா நாடு முழுவதும் உள்ள 150 தொகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விழாவிற்கான பரிசுப் பொருட்கள் அனைத்தும் நேற்று சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும்
மூவின மக்களும் இணைந்து கலந்து கொள்ளும் வகையில் இந்த குடும்ப தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல என்றும், கட்சி பாராமல் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்த குடும்ப தின விழா மூலம் மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.

விழாவில் இசை நாற்காலி, பூர்வகுடி மக்களின் “சும்பிட்”, சீனர்களின் “சும்பா” விளையாட்டு, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, வரும் ஜூன் 7ஆம் தேதி மஇகா சார்பில் நாடு தழுவிய அளவில் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், அது 150 மஇகா தொகுதிகளிலும் நடைபெறும் என்றும் கூறினார்.

மக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியே இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் ஏழு முக்கிய நிகழ்ச்சிகளிலும் மூவின மக்களும் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, குடும்ப தின விழா பொறுப்பாளர் டத்தோ மோகனா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வரும் மே 31ஆம் தேதி காலை 7.30 மணி முதல் குடும்ப தின விழா நடைபெறும் என்றும், இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்வாக அமையும் என்றும் அவர் கூறினார்.

மஇகா தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதை இந்த விழா எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர்,மே 25-
கோலாலம்பூரில் இருந்து லண்டன் வரை மோட்டார் சைக்கிளில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் மலேசிய தமிழரான டத்தோ ஆனந்தன், இன்று தனது “MERDEKA RIDE - 2026” பயணத்தை உற்சாகமாகத் தொடங்கினார்.

மலேசியாவின் 2026 ஆம் ஆண்டு மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த அசாதாரண முயற்சியில், சுமார் 24,700 கிலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களுக்குள் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தாய்லாந்து, லாவோஸ், சீனா, கசகஸ்தான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா, ருமேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் வழியாக இந்தப் பயணம் நடைபெறவுள்ளது.

நகர சாலைகள் மட்டுமின்றி, மண் பாதைகள், காட்டு வழிகள், ஆறுகள் மற்றும் சேறு சகதிப் பகுதிகளையும் கடந்து செல்லும் இந்த சாகசப் பயணம் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

இடது முழங்காலில் காயம் இருந்தபோதிலும், ஆனந்தன் தனது உறுதியையும் ஆர்வத்தையும் இழக்காமல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மெர்டேக்கா தினமான ஆகஸ்ட் 31 அன்று லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே அவரது முக்கிய இலக்காகும்.

“SHADOWFOX” எனும் மோட்டார் சைக்கிள் சாகசக் குழுவை வழிநடத்தி வரும் ஆனந்தன், இதற்கு முன்பு சென்னை நோக்கி சர்வதேச சாகசப் பயணமும், நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் தேசிய அளவிலான பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.

கொரோனா காலத் தடைகளுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது பெரிய சாகச முயற்சியாக லண்டன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த சாகசப் பயணத்தை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் செனட்டர் டத்தோ சி. சிவராசா, மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மோட்டார் சைக்கிள் சாகச வீரர்கள் ஒன்று கூடி, டத்தோ ஆனந்தனை வாழ்த்தி உற்சாகமாக வழியனுப்பினர்.

கோலாலம்பூர்,மே 25-
கோலாலம்பூரில் இருந்து லண்டன் வரை மோட்டார் சைக்கிளில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் மலேசிய தமிழரான டத்தோ ஆனந்தன், இன்று தனது “MERDEKA RIDE - 2026” பயணத்தை உற்சாகமாகத் தொடங்கினார்.

மலேசியாவின் 2026 ஆம் ஆண்டு மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த அசாதாரண முயற்சியில், சுமார் 24,700 கிலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களுக்குள் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தாய்லாந்து, லாவோஸ், சீனா, கசகஸ்தான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா, ருமேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் வழியாக இந்தப் பயணம் நடைபெறவுள்ளது.

நகர சாலைகள் மட்டுமின்றி, மண் பாதைகள், காட்டு வழிகள், ஆறுகள் மற்றும் சேறு சகதிப் பகுதிகளையும் கடந்து செல்லும் இந்த சாகசப் பயணம் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

இடது முழங்காலில் காயம் இருந்தபோதிலும், ஆனந்தன் தனது உறுதியையும் ஆர்வத்தையும் இழக்காமல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மெர்டேக்கா தினமான ஆகஸ்ட் 31 அன்று லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே அவரது முக்கிய இலக்காகும்.

“SHADOWFOX” எனும் மோட்டார் சைக்கிள் சாகசக் குழுவை வழிநடத்தி வரும் ஆனந்தன், இதற்கு முன்பு சென்னை நோக்கி சர்வதேச சாகசப் பயணமும், நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் தேசிய அளவிலான பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.

கொரோனா காலத் தடைகளுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது பெரிய சாகச முயற்சியாக லண்டன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த சாகசப் பயணத்தை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் செனட்டர் டத்தோ சி. சிவராசா, மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மோட்டார் சைக்கிள் சாகச வீரர்கள் ஒன்று கூடி, டத்தோ ஆனந்தனை வாழ்த்தி உற்சாகமாக வழியனுப்பினர்.

செனாவாங், மே 24-
மலேசிய மக்கள் சக்தி இன்று செனாவாங்கில் நடத்திய பச்சபா கருத்தரங்கிற்கு மஇகா முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கு, தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அதற்கான தயாரிப்புகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முக்கிய துணையாக அமைந்ததாக அவர் கூறினார்.

தேர்தல் காலத்தில் மஇகாவிற்கு உதவ தாங்கள் தயாராக இருப்பதாகவும், அரசியல் பயணத்தில் இதற்கு முன்பு கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தாலும், இந்திய சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி தற்போது ஒன்றிணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இன்னும் உறுதியாகாதபோதிலும், தேவையான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை தேசிய முன்னணியிலிருந்து எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. தேர்தலில் நாங்கள் போட்டியிடவுள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டோம். போருக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆட்சிக்காலம் இந்திய சமுதாயத்திற்கு பொற்காலமாக இருந்ததை மக்கள் உணர்ந்துவிட்டதாகவும், தற்போதைய சூழ்நிலையில் ஒட்டுமொத்த மலேசியர்களும் அவரது மீள்வரவை எதிர்பார்த்து வருவதாகவும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

செனாவாங், மே 24-
தேர்தல் காலத்தில் கூறப்படும் பொய் வாக்குறுதிகளை நம்பி இந்திய சமுதாயம் ஏமாறக்கூடாது என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

அண்மையில் பிகேஆர் கட்சியை சேர்ந்த ரஃபிசி ரம்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

அன்றைய சூழ்நிலையில் பிகேஆர் கட்சிதான் சிறந்த கட்சி என ப்ற்சிய அவர் கட்சியின் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்விக் கண்டதை தொடர்ந்து, தற்போது அக்கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சியை தொடங்கி அதற்கு ஆதரவு தேடி வருகிறார்.

ஆகையால் இந்திய சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

செனாவாங்கில் நடைப்பெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பச்சபா கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

அரசியலில் நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
மஇகா மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கட்சிகள் வேறுபட்டாலும், இந்திய சமூக நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

கட்சிகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்ற அவர், பொதுநலனை முன்னிறுத்தியே மஇகா மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்து செயல்படுகிறது என விளக்கினார்.

மேலும், இந்திய சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், “எங்களின் பலத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்திய சமுதாயத்திற்கு பாதுகாப்பாகவும் வலுவான ஆதரவாகவும் மஇகா மற்றும் மக்கள் சக்தி கட்சிகள் இரண்டும் இருக்க வேண்டும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.

சிரம்பான், மே 22-
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் கீழ் வியாபாரிகளுக்கு வெ.5.2 மில்லியன் கடன் உதவி பெற்றுத் தரப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திருநாவுகரசு தெரிவித்தார்.

இந்திய இளைய தொழில்முனைவர்கள் தொழிலியல் சங்கங்களில் இணைந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற அரசாங்க உதவிகளை எளிதில் பெற முடியும் என அவர் சொன்னார்.

மேலும் மித்ராவின் கீழ் வெ.7 லட்சம் கடனுதவியை 162 வியாபாரிகளுக்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 38ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று ரோயல் சுங்கை உசோங் கிளப்பில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய போது அவர் மேற்கண்ட தகவலை அவர் கூறினார்.

மேலும் தற்போது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் தற்போது MUDRA திட்டத்தின் கீழ் வெ.220 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்ட்டுள்ளது. இதனை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் குறைந்தபட்சம் 20 மில்லியனைவாது நெகிரி மாநில தொழிலியல் சங்கத்தின் கீழ் பெற்று தர இலக்கு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மே 20 –
சமையல் துறையில் மலேசியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்தும் வகையில், மாஸ்டர் செஃப் மற்றும் சிறந்த சமையல் கலைக்கான விருதைப் பெற்று தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் “செஃப் மன்னன்” என்று அழைக்கப்படும் 35 வயதுடைய லெட்சுமணன் புலேன்ரன்.

உழைப்பு, ஒழுக்கம் மற்றும் புதுமையான சமையல் கலைத்திறன் ஆகியவற்றின் மூலம் சர்வதேச அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள செஃப் மன்னன், மலேசிய சமையல் பாரம்பரியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2025ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற Creative Chefs Forum Season 3 சர்வதேச சமையல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு, " Heritage Cuisine – Hot Cooking" பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

அவர் தயாரித்த மலேசிய மக்களின் விருப்பமான உணவான பிரியாணியின்
பாரம்பரிய முறையிலான தயாரிப்பும்,
தனித்துவமான சுவையும் மற்றும்   அணுகுமுறையும்  நடுவர் குழுவினர்களின்  சிறந்த பாராட்டுகளை பெற்றதோடு, சுவை, அலங்காரம் மற்றும் படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய அவரது திறமை அனைவரையும் கவர்ந்தும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற Indian Culinary Premier League போட்டியிலும் செஃப் மன்னன் மலேசியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இப்போட்டியில் அவர் “Honorary Award – Diploma in Culinary” விருதைப் பெற்றதுடன், அதிகாரப்பூர்வமாக Culinary Gold Winner சமையல் கலைக்கான
தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

Royal Bengal Master Chef Organization (RBMCO) வழங்கிய இந்த அங்கீகாரம், செஃப் மன்னனின் சர்வதேச தரமான சமையல் திறனை உலகுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.

“Chicken Rendang உடன் Ghee Rice” என்ற அவரது சிறப்பு உணவு, மலேசியாவின் உண்மையான பாரம்பரிய சுவையை உலக அரங்கில் சிறப்பாக எடுத்துக்காட்டியது.
சுவை சமநிலை, தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் கலைநயமிக்க அலங்காரம் ஆகியவற்றிற்காக அவர் நடுவர்களின் உயர்ந்த பாராட்டுகளைப் பெற்றார்.

சமையல் துறையில் கொடி கட்டிப் பறக்கும் செஃப் மன்னனின் இந்த சாதனைகள், இளம் சமையல் கலைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதுடன், மலேசிய சமையல் கலையின் பெருமையையும் உலகளவில் உயர்த்தியுள்ளது.
அவரின் இந்த மகத்தான சாதனைகளுக்காக சமூகத்தின் பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோலாலம்பூர்,மே 18-
மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (MAICCI) தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன், “MAICCI – MUDRA Roadshow 2026” என்ற திட்டத்தை நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.

இந்த திட்டம், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் (KUSKOP) கீழ் செயல்படுத்தப்படும் MUDRA 2026 பொருளாதார ஊக்கத் திட்டத்தின் ஓர் முக்கிய முயற்சியாகும்.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை வெ.220 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மைக்கி முழுமையாக வரவேற்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த ரோட்ஷோ மூலம் நாடு முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர்களுக்கு நிதி உதவி, பயிற்சி, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் வணிக வலையமைப்பு தொடர்பான தகவல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இளைஞர் தொழில்முனைவோர், பெண்கள் தொழில்முனைவோர் மற்றும் இந்திய கூட்டுறவுச் சங்கங்களை அணுகும் முக்கிய தளமாக இந்த திட்டம் அமையும் எனவும் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

இந்த திட்டத்தின் முதல் நிகழ்ச்சி கடந்த மே 10ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாம், பினாங்கில் நடைபெற்றது. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு உள்ளூர் தொழில்முனைவோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், MUDRA திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து பலர் ஆர்வம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள வெ.220 மில்லியனில் இதுவரை வெ.70 மில்லியன் தொழில் முனைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு தொழில் முனைவர்களுக்கு மைக்கி உதவி செய்யவும் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மே 18-
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாகுறையால் தொழில்முனைவர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்திய வியாபாரிகள் அதிக அளவில் பாதிகப்பட்டு வருகின்றனர் என மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கவலையாக தெரிவித்தார்.

கேட்டு கேட்டு கையேந்தி மனம் உடைந்து போச்சு, அமைச்சகம் அமைச்சகமாக நடந்து கால்கள் ஓய்ந்து போச்சு. ஆனால் எங்களுக்கான தீர்வும் பிறக்கவில்லை கதவும் திறக்கவில்லை என்றார் அவர்.

உள்துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சின்  தொடச்சியான மௌனத்தில் தொழில்முனைவர்கள் எங்களை தெருவில் விட்டு விடாதீர்கள் என டத்தோ கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாக போய் கொண்டிருக்கிறது. வியாபாரத்தை நடத்த முடியாமல் பல கடைகள் மூடப்பட்டு  வியாபாரிகள் கடன் தொல்லையில் சிக்கி தவிக்கிறார்கள்.

இந்த இரண்டு அமைச்சின் மௌனம் நீடிக்குமானால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு ஒரு விடியல் கொடுக்க வேண்டும். அதையும் விரைந்து கொடுக்க காரணம் நிலைமை அதிக மோசமாக உள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் இது நாட்டின் பொருளாதாரத்தை  பாதிக்கும் என்றார் அவர்.

உடனே பிரதமர் தலையிட வேண்டும், இல்லையேல் வெள்ளம் வந்த பிறகு அனைப்போட்டு ஒரு புண்ணியம் இல்லை. அனைவருக்கும் அது பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கும் என்றார் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்.

சிரம்பான், மே 16 —

நாடு முழுவதிலிருந்தும் வந்த சுமார் 300 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் கலந்து கொண்ட “ஸ்மார்ட் ரைடர்ஸ்” தேசிய ஒன்று கூடல் நேற்று இரவு சிரம்பானில் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்மார்ட் ரைடர்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சிரம்பான் காடோங் ஜெயாவில் உள்ள பெட்ரோன் பெட்ரோல் நிலையத்தில் தொடங்கியது. அங்கு ஒன்று திரண்ட பைக்கர்கள் அணிவகுத்து ஊர்வலமாக பயணித்து, பின்னர் View Park Restaurant-இல் “தேநீர் ஒன்று கூடல்” நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மஇகாவின் தேசிய விளையாட்டுப் பிரிவின் தலைவர் எண்ட்ரு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பொறுப்பு, கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து உரையாற்றியதுடன், பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.

டத்தோ பாலன் நாயர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடல், மாநில மற்றும் வட்டார அளவுகளில் செயல்பட்டு வரும் சிறு பைக்கர் குழுக்களை தேசிய ரீதியில் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக எண்ட்ரு தெரிவித்தார்.

மேலும், உறுப்பினர்கள் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த நிகழ்வு வழிவகுத்ததாக அவர் கூறினார்.

ஒரே இடத்தில் 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் ஒன்று கூடிய இந்த நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் சிறப்பம்சமாக, சு. கதிரவன் கௌரவிக்கப்பட்டார். அவர் 109 நாடுகளில் 2,08,941 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

புவி வெப்பமாதல் மற்றும் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தனது 62-ஆவது வயதில் 2023 ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய இந்த உலகப் பயணத்தை, 65 வயதில் இந்த ஆண்டு மே 9ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தார். பயணத்தின் போது பல்வேறு நாடுகளில் 190 மரங்களை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அவர் பங்களித்துள்ளார்.

கோல சிலாங்கூர், மே 16 -
கெஅடிலான் கட்சியின் கோல சிலாங்கூர் கிளையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், கிளைத் தலைவர் எம். சிவபாலனை எதிர்த்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஏற்ப்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்ப்பட்டது.

கூட்டம் முடிந்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு குழுவினர் மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து, சிவபாலனை எதிர்த்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன் விவாதிக்கப்படவில்லை அல்லது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என விளக்கம் கோரியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிளைத் தலைவர் எம். சிவபாலன் கூறுகையில், அந்த தீர்மானம் ஏற்கப்பட்டாலும், அது கட்சியின் மத்திய தலைமையிடம் பரிசீலனைக்காக அனுப்பப்படும் என முன்மொழிந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

அவர்கள் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் இது ஒரு தீர்மானம் மட்டுமே. அதனை வாக்கெடுப்புக்கு விட முடியாது. அது கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

அந்த தீர்மானத்தில் இரண்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், ஒன்று தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் மற்றொன்று கிராமத் தலைவர்களின் நியமனம் தொடர்பானதாகவும் அவர் கூறினார்.

“இந்த இரண்டு விவகாரங்களும் கிளை மட்டத்தில் முடிவு செய்யக்கூடியவை அல்ல. நம்பிக்கையில்லா தீர்மானம் கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் அனுப்பப்பட வேண்டும். கிராமத் தலைவர்களை நியமிப்பதும் எங்கள் அதிகார வரம்பிற்குள் இல்லை,” என்றார்.

இந்த பரபரப்பில் மூன்று பெண் உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும், சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிவபாலன் தெரிவித்தார்.

மேலும், ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு முன்பாக தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அதுதொடர்பாக நேற்று தனியாக போலீஸ் புகார் செய்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கெஅடிலான் பொதுச் செயலாளர் ஃபுசியா சாலே சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், “கோல சிலாங்கூர் கிளை கூட்டம் கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப சுமூகமாகவும் சட்டபூர்வமாகவும் நடைபெற்றது” என்றார்.

கடந்த சில வாரங்களாக, கிளைத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்கட்சி பதற்றங்களால் கெஅடிலான் கோல சிலாங்கூர் கவனத்தை ஈர்த்திருந்தது.

கோலாலம்பூர், மே 15 –

வருமான பாதிப்பால் பிபிஆர் வீடுகளில் வசித்து வரும் குறைந்த வருமான மக்களுக்கு, வீட்டு வாடகை பாக்கியை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

பொருளாதார சிக்கல்களால் அவதிப்பட்டு வரும் பலர், தங்களது வீட்டு வாடகை கட்டணங்களை முறையாக செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால், வாடகை பாக்கி தொகை பல லட்சம் வெள்ளியை எட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வாடகை பாக்கி காரணமாக சம்பந்தப்பட்ட குடும்பங்களின் வீடுகள் பூட்டப்படும் அபாயம் இருப்பதால், அவர்கள் மேலும் கடுமையான சுமையையும் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாக்கி தொகையை படிப்படியாக செலுத்துவதற்கான வாய்ப்பை டிபிகேஎல் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உதாரணமாக, ஒருவர் RM5,000 வாடகை பாக்கி வைத்திருந்தால், முதற்கட்டமாக 25 விழுக்காடு தொகையை செலுத்த அனுமதி வழங்கலாம். பின்னர், மாதாந்திர வாடகை கட்டணத்துடன் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் முறையை பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறு செயல்பட்டால், வாடகை பாக்கி பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக டத்தோ பண்டாருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதனை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் டத்தோ டாக்டர் லோகபாலா கூறினார்.

மேலும், இந்த தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் பணியில், விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் தலைமையில் தொகுதி தலைவர்கள் மற்றும் மகளிர் அணியினர் களமிறங்கி செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வாடகை பாக்கி பிரச்சனையால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இனம், மதம், மொழி பாராமல், வசதி குறைந்த மக்களுக்கு பிபிபி கட்சி எப்போதும் அரணாக இருக்கும்,” என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 14 –

அசாம் பாக்கியின் பொது பங்குதாரத் தொடர்பான சர்ச்சை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டறிதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

The Asian Banker Summit 2026 மாநாட்டின் போது The Edge ஊடகத்திடம் பேசிய அவர், சட்டத்துறை தலைமை அதிகாரி டான் ஸ்ரீ மொஹ்த் துசுக்கி மொக்தார் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை நிறைவு செய்து அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும், அரசின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மேற்கொண்டுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜ.செ.க் கட்சியின் தேசிய தலைவருமான கோபிந்த் சிங் டியோ, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் மீண்டும் விவாதிக்கப்படவில்லை என்றும், தற்போதைய நிலை மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தலைமைச் செயலாளரிடம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இறுதியில் மக்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை என்ன, விசாரணையின் முடிவுகள் என்ன, தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதனை வெளிப்படையாக விளக்கும் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சர்ச்சை, Bloomberg வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து பெரும் கவனத்தை ஈர்த்தது. அதில், முன்னாள் MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி, Velocity Capital Partner Bhd நிறுவனத்தில் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் RM800,000 எனவும் தெரிவிக்கப்பட்டது. இது அரசுப் பணியாளர்களுக்கான RM100,000 பங்கு வைத்திருக்கும் வரம்பை மீறுவதாகக் கூறப்பட்டது.

அசாம் பாக்கி, அந்த பங்குகளை வாங்கியதை ஒப்புக்கொண்டிருந்தாலும், பின்னர் அவற்றை விற்றுவிட்டதாகவும், தாம் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையராக பணியாற்றிய அசாம் பாக்கி, கட்டாய ஓய்வு வயதை கடந்த பின்னரும் மூன்று முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மே 12 அன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம், மே 13 முதல் புதிய தலைமை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோலாலம்பூர்,மே 14-

பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதோர் நலன் காக்கும் இணை பிரிவான டி.எச்.பி.பி (dewan himpunan pendukung pas) அதன் தலைவராக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி அவர்களின் சிறப்பு அதிகாரி குமரேசன் பேராளர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர் பதவிக்கு டத்தோ தீபாகரன் மற்றும் குமரேசன் போட்டியிட்ட நிலையில் குமரேசன் அதிக வாக்கு பெற்று தேர்வு செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் துணைத் தலைவர் பதவிற்கு போட்டி இல்லாத நிலையில் லீம் குவான் செங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

உதவி தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவிய நிலையில் சூரிய நாரயணன் வெற்றி பெற்று தேர்வு செய்யப் பட்டார்.

அதே நேரத்தில் செயலவை உறுப்பினர்களுக்கு 30 பேர்கள் போட்டி போட்ட நிலையில் வாக்கெடுப்பில் பூபாலன் அதிக வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றிப் பெற்றார் .

அவரை தொடர்ந்து லோவ் லீ லீயோங், டத்தோ ராகு, டத்தோ குமார், ,ஹரி ஜானார்தன், சரோஜினி, குண சீலன், பரமசிவம், குணாளன், கணேசன், சோ சியூ மார், ஜெய குமார், சங்கரன், புனிதா பச்சையம்மா, புருத்சோதினி, குண சேகரன் மற்றும் லாவ் சின் சுவா ஆகையோர் செயலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர், மே 14 -
பல மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்த மாத வாடகை கட்டண பாக்கிகளைச் செலுத்துவது குறித்து ஸ்ரீ ஆமான் குடியிருப்பாளர்கள் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற (DBKL) அதிகாரிகளுக்கு இடையில் முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு, நிலுவையில் உள்ள வாடகைத் தொகைகளை ஒருமுறை அல்லது தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால், உடனடியாக முழுத் தொகையையும் செலுத்த முடியாத சூழ்நிலையை பலர் எடுத்துக்கூறினர்.

இதற்கு பதிலளித்த மாநகர் மன்ற அதிகாரிகள், குடியிருப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, நெகிழ்வான கட்டண திட்டங்கள் (installment plans) அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தை கோலாலம்பூர் பிபிபி  தலைவர் சத்யா மற்றும் சிகாம்பூட் தொகுதி தலைவர்   டத்தோ வினோத் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அவர்கள் , குடியிருப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல், மனிதநேய அணுகுமுறையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பில் பேசிய பிபிபி கட்சியின் கூட்டரசுப் பிரதேச தலைவர் சத்தியா, கோலாலம்பூரில் உள்ள பி.பி.ஆர் (PPR) குடியிருப்புகளில் இதுபோன்ற சந்திப்புகளை பி.பி.பி கட்சி  தொடர்ந்து ஏற்பாடு செய்யும் என தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 13 –
சரக்கு ஏற்றுமதி ஆவணங்களுக்கும் உண்மையான சரக்கு நகர்வுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் கடல்சார் மற்றும் உலக வர்த்தகத் துறைக்கு பெரும் அபாயமாக மாறி வருவதாக கடல்சார் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மெரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி கூறுகையில், Bill of Lading (BL) ஆவணம் என்பது சாதாரண கப்பல் போக்குவரத்து ஆவணம் அல்ல; அது வங்கி பரிவர்த்தனை, காப்பீடு, சுங்க அறிவிப்பு, சரக்கு உரிமை மற்றும் சர்வதேச இணக்கப்பாடு போன்ற முக்கிய அம்சங்களுடன் நேரடியாக தொடர்புடையது என்றார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள அவர், BL ஆவணங்களில் உள்ள தகவல்களும் உண்மையான சரக்கு நகர்வுகளும் பொருந்தாமல் போகும் போது செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

கப்பல் முகவர்கள் சரக்கின் உரிமையாளர்கள் அல்லாதபோதிலும், அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளை அதிகாரிகள் மற்றும் துறைமுகங்கள் நம்புவதால், நேரடி பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதனால், கப்பல் முகவர்கள் தற்போது ஆவண நம்பகத்தன்மை, உள்துறை இணக்க கட்டுப்பாடு மற்றும் Know-Your-Customer (KYC) சரிபார்ப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக எண்ணெய் வர்த்தகங்களில், வியாபாரிகள், பெறுநர்கள், துறைமுகங்கள் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் ஆரம்ப BL ஆவணங்களுடன் பொருந்தாமல் இருப்பது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சரக்குகள் மாற்றம், கலவை அல்லது சேமிப்பு நடவடிக்கைகளால் மாறும்போது, அதற்கேற்ப ஆவணங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சுங்க பதிவுகள், டேங்க் அளவீடுகள் மற்றும் உண்மையான சரக்கு நிலைகளில் முரண்பாடுகள் உருவாகி வர்த்தக தகராறுகள், இணக்கப்பாடு குறைபாடுகள் மற்றும் வருவாய் இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி எச்சரித்தார்.

உலு சிலாங்கூர், மே 13- வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ள பாஸ் கட்சியின் “Himpunan Daulat Tuanku” பேரணியில் பங்கேற்கும் மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க உலு சிலாங்கூர் கெஅடிலான் கட்சியினர் தயாராக இருப்பதாக அக்கிளையின் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் அறிவித்துள்ளார்.

பேரணியில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பையும் அவசர மருத்துவ உதவிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு. ஆனால், அது யாருடைய கருத்துரிமையையும் மறுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. பொறுப்புடன் மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பு இல்லாத வகையில் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு.

மலேசிய அரசியலமைப்பின் கீழ் கருத்துரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இது சீர்திருத்த அரசியலை முன்னிறுத்தும் பிகேஆர் கட்சியின் கொள்கைகளுடனும் ஒத்துப்போகிறது என்று அவர் தெரிவித்தார்.

மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள “Himpunan Daulat Tuanku” குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறினார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநில அரசு, ஷா ஆலாம் பகுதியில் நடைபெறவுள்ள பாஸ் இளைஞர் அமைப்பின் பேரணியை வரவேற்றதுடன், பேரணி சீராக நடைபெற போலீஸ் உதவியை நாடுவதோடு பங்கேற்பாளர்களுக்கு உணவு மற்றும் பானங்களும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

மேலும் கருத்து தெரிவித்த சத்தியா பிரகாஷ், அமைதியான முறையில் மக்கள் ஒன்று கூடவும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும் இடமளிப்பதே முதிர்ந்த ஜனநாயகத்தின் அடையாளம் என்றார்.

அரச மரபை மதிப்பது என்பது வெறும் அரசியல் முழக்கமாக இருக்கக்கூடாது. பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை பாதுகாப்பதன் மூலமே அது உண்மையில் வெளிப்பட வேண்டும்.

கருத்துரிமை மட்டுமல்லாமல், ஒழுங்கையும் அமைதியையும் பேணும் பொறுப்புணர்வும் முதிர்ந்த ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். தூண்டுதல்களைத் தவிர்த்து, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படாத சூழலை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

கோலாலம்பூர், மே 13 –
சரக்கு ஏற்றுமதி ஆவணங்களுக்கும் உண்மையான சரக்கு நகர்வுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் கடல்சார் மற்றும் உலக வர்த்தகத் துறைக்கு பெரும் அபாயமாக மாறி வருவதாக கடல்சார் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மெரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி கூறுகையில், Bill of Lading (BL) ஆவணம் என்பது சாதாரண கப்பல் போக்குவரத்து ஆவணம் அல்ல; அது வங்கி பரிவர்த்தனை, காப்பீடு, சுங்க அறிவிப்பு, சரக்கு உரிமை மற்றும் சர்வதேச இணக்கப்பாடு போன்ற முக்கிய அம்சங்களுடன் நேரடியாக தொடர்புடையது என்றார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள அவர், BL ஆவணங்களில் உள்ள தகவல்களும் உண்மையான சரக்கு நகர்வுகளும் பொருந்தாமல் போகும் போது செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

கப்பல் முகவர்கள் சரக்கின் உரிமையாளர்கள் அல்லாதபோதிலும், அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளை அதிகாரிகள் மற்றும் துறைமுகங்கள் நம்புவதால், நேரடி பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதனால், கப்பல் முகவர்கள் தற்போது ஆவண நம்பகத்தன்மை, உள்துறை இணக்க கட்டுப்பாடு மற்றும் Know-Your-Customer (KYC) சரிபார்ப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக எண்ணெய் வர்த்தகங்களில், வியாபாரிகள், பெறுநர்கள், துறைமுகங்கள் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் ஆரம்ப BL ஆவணங்களுடன் பொருந்தாமல் இருப்பது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சரக்குகள் மாற்றம், கலவை அல்லது சேமிப்பு நடவடிக்கைகளால் மாறும்போது, அதற்கேற்ப ஆவணங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சுங்க பதிவுகள், டேங்க் அளவீடுகள் மற்றும் உண்மையான சரக்கு நிலைகளில் முரண்பாடுகள் உருவாகி வர்த்தக தகராறுகள், இணக்கப்பாடு குறைபாடுகள் மற்றும் வருவாய் இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி எச்சரித்தார்.

கோலாலம்பூர், மே 12 –
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தளம் பகுதியில் நடைபெறவுள்ளது.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த யாகத்தில் கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். “சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகள் வழங்கவுள்ளனர். “அறிவியல் மருத்துவமாகவும், ஆன்மீகம் நம்பிக்கையாகவும் உள்ளது” என சத்தியவதி கூறினார்.

மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை பேசுகையில், “ஏன் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கப்படும். மலேசியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1.4 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது” என்றார்.

அதேவேளை, டாக்டர் உமா பெண்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றும், காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிகுருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 12 – குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தளம் பகுதியில் நடைபெறவுள்ளது.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த யாகத்தில் கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். “சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகள் வழங்கவுள்ளனர். “அறிவியல் மருத்துவமாகவும், ஆன்மீகம் நம்பிக்கையாகவும் உள்ளது” என சத்தியவதி கூறினார்.

மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை பேசுகையில், “ஏன் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கப்படும். மலேசியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1.4 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது” என்றார்.

அதேவேளை, டாக்டர் உமா பெண்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றும், காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிகுருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.


ஷா ஆலம், மே 12-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 22ஆவது முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டில் நடத்தப்பட்டவுள்ளது.

இம்முறையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 65 ஆண்கள் அணிகளும் 34 பெண்கள் அணிகளும் இப்போட்டியில் களம் காணவுள்ளதாக சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.

இப்போட்டி வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆர்ஆர்ஐ திடலில் நடைப்பெறவுள்ளது.

இந்த போட்டியை சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் சங்கம் இணைந்து நடத்துகிறது.

ஆண்களுக்கான அணிகளில் முதல் 16 இடங்களில் வெற்றிப்பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. முதல் நிலையில் வெற்றிப்பெறும் அணிக்கு நமசிவாயம் சுழற்கிண்ணம் வழங்கப்படும்.

பெண்களுக்கான அணிகளில் முதல் 12 இடங்களில் வெல்லும் குழுக்களுக்கு பரிசுகள் உண்டு. இந்த பிரிவின் வெற்றி குழுவிற்கு ரவிந்திரன் சுழற்கிண்ணம் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இந்த போட்டிக்கான அணிகள் பிரிப்பதற்கான குலுக்கல் இன்று சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைப்பெற்று. 

இந்த போட்டிக்கு மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பத்துமலை தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே.9-
மைக்கியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு  தமிழ் லென்ஸ் ஆசிரியர்  வெற்றி விக்டர் தனது இரங்கலை தெரிவித்தார்.

நம் நாடு  நாளிதழ் வாயிலாக எனக்கு நன்கு அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், எனக்கு அங்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். வேறொரு நாளிதழில் இருந்து நம் நாடு வந்த எனக்கு உரிமையாளர் என்ற முறையில் நடந்து கொள்ளாமல் திறமை துணிச்சல் உள்ளவர்களை தட்டி கொடுக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்தார்.

மக்கள் செய்தியை எழுதிய என்னை அரசியல் செய்தி எழுத வாய்ப்பு கொடுத்தவர் இவர். அந்த நாளிதழ் என் வாழ்க்கையை மாற்றியது.

ஒரு பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு தகுதியான சம்பளத்தை கொடுத்தது டான்ஸ்ரீ கென்னத் நடத்திய நாளிதழ் மட்டுதான். முழு சுதந்திரமும் அங்குதான்  கிடைத்தது. அரசியல் வாதிகளை கண்டு அச்சம் கொள்ளதே என ஊக்கம் ஊட்டியவர் கென்னத் ஈஸ்வரன் தான். ஒரு சாதாரண செய்தியாளரை அரசியல் செய்தியாளர், செய்தி ஆசிரியர்  என இளம் வயதில் நம்பி வாய்ப்பு கொடுத்தவர் அவர்.

என்னை "CILI PADI" என்று அழைப்பார். அரசியல் செய்தியிலும் சரி, அவர் சார்ந்த மைக்கி இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் சரி என்னை முதல் தேர்வாக விரும்புவார். அந்த நம்பிக்கை கொடுத்து கொடுத்து  என் எழுத்தை ரசித்த நபர் அவர்.

பிறகு மைக்கியில் அவரது  அலுவலக  தமிழ் பிரிவு செயலாளராக  எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் பல நாடு குறிப்பாக இந்தியா,  டெர்பன்  இலங்கை,  பொண்டிச்சேரி என பல  உலகத் தமிழ் பொருளாதார மாநாடுகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பல அரசாங்க பொருளாதார கூட்டத்தில் திட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மைக்கி- யில் அவர் ஒய்வு பெறும் போது...  நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என என் மீது  கவலை பட்டு அவர் எனக்கு விதைத்த விதைதான்... இன்று தமிழ் லென்ஸ்   இணைய ஊடகம்.

வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார். பிறகு  ஒய்வின் காரணமாக மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்ப்பேன். பிறகு தொலைபேசியில் பேசுவோம்
தீடீர்- தீடீர் என்று என்னை அழைத்து பேசுவார். சில நேரங்களில்  அவரது குடும்பத்தினர்  அப்பா பேசவேண்டும் என்று சொல்வார்கள் பேசுவார் இப்போது அந்த பேச்சு நின்று விட்டது.

இப்படி என்ன வானுயர வளர்த்த சாமி இன்று வானம் தொட்டு போனது  என்பது எனக்கு  தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு தான்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் நன்றியுடன்  வெற்றி விக்டர்.

கோலாலம்பூர், மே.9-
மைக்கியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு  தமிழ் லென்ஸ் ஆசிரியர்  வெற்றி விக்டர் தனது இரங்கலை தெரிவித்தார்.

நம் நாடு  நாளிதழ் வாயிலாக எனக்கு நன்கு அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், எனக்கு அங்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். வேறொரு நாளிதழில் இருந்து நம் நாடு வந்த எனக்கு உரிமையாளர் என்ற முறையில் நடந்து கொள்ளாமல் திறமை துணிச்சல் உள்ளவர்களை தட்டி கொடுக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்தார்.

மக்கள் செய்தியை எழுதிய என்னை அரசியல் செய்தி எழுத வாய்ப்பு கொடுத்தவர் இவர். அந்த நாளிதழ் என் வாழ்க்கையை மாற்றியது.

ஒரு பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு தகுதியான சம்பளத்தை கொடுத்தது டான்ஸ்ரீ கென்னத் நடத்திய நாளிதழ் மட்டுதான். முழு சுதந்திரமும் அங்குதான்  கிடைத்தது. அரசியல் வாதிகளை கண்டு அச்சம் கொள்ளதே என ஊக்கம் ஊட்டியவர் கென்னத் ஈஸ்வரன் தான். ஒரு சாதாரண செய்தியாளரை அரசியல் செய்தியாளர், செய்தி ஆசிரியர்  என இளம் வயதில் நம்பி வாய்ப்பு கொடுத்தவர் அவர்.

என்னை "CILI PADI" என்று அழைப்பார். அரசியல் செய்தியிலும் சரி, அவர் சார்ந்த மைக்கி இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் சரி என்னை முதல் தேர்வாக விரும்புவார். அந்த நம்பிக்கை கொடுத்து கொடுத்து  என் எழுத்தை ரசித்த நபர் அவர்.

பிறகு மைக்கியில் அவரது  அலுவலக  தமிழ் பிரிவு செயலாளராக  எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் பல நாடு குறிப்பாக இந்தியா,  டெர்பன்  இலங்கை,  பொண்டிச்சேரி என பல  உலகத் தமிழ் பொருளாதார மாநாடுகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பல அரசாங்க பொருளாதார கூட்டத்தில் திட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மைக்கி- யில் அவர் ஒய்வு பெறும் போது...  நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என என் மீது  கவலை பட்டு அவர் எனக்கு விதைத்த விதைதான்... இன்று தமிழ் லென்ஸ்   இணைய ஊடகம்.

வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார். பிறகு  ஒய்வின் காரணமாக மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்ப்பேன். பிறகு தொலைபேசியில் பேசுவோம்
தீடீர்- தீடீர் என்று என்னை அழைத்து பேசுவார். சில நேரங்களில்  அவரது குடும்பத்தினர்  அப்பா பேசவேண்டும் என்று சொல்வார்கள் பேசுவார் இப்போது அந்த பேச்சு நின்று விட்டது.

இப்படி என்ன வானுயர வளர்த்த சாமி இன்று வானம் தொட்டு போனது  என்பது எனக்கு  தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு தான்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் நன்றியுடன்  வெற்றி விக்டர்.

கோலாலம்பூர்- 9
மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவை எதிர்பார்ப்புகளை  நன்கு கண்டு அறிந்து அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு முறையாக கொண்டு வந்து பல நல்ல திட்டங்கள் உருவாக ஆலோசனை கொடுத்த ஒரு தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது என முன்னாள் பிரதமர் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் தனது முகநூல் வாயிலாக தெரிவித்தார் .

தான் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய வர்த்தகர் பிரச்சினை தொடர்பாக   பல முறை என்னை சந்தித்து பல  திட்ட ஆலோசனைகளை வழங்கினார். ஒரு நல்ல சமுதாய அக்கறை  உடைய தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது என டத்தோ ஸ்ரீ நஜீப் தெரிவித்தார்

கோலாலம்பூர் -9

மைக்கியின் வளர்ச்சிக்கும், இந்திய வர்த்தகர்களின் வளர்ச்சிக்கும் மறைந்த டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என
மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்  தெரிவித்தார்.

மைக்கியின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் இன்று காலை சுமார் 6.00 மணியளவில் காலமானார் என்ற செய்தி மைக்கி  உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது  என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் மிகுந்த துக்கத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.

டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு   மைக்கி இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் ஒரு புகழ்பெற்ற, மதிக்கப்படும் தொழில்முனைவராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

அவர் மைக்கியின் வளர்ச்சிக்கும், மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தக சமூகத்தின் வளர்ச்சிக்கும்  அவர்கள் வலுப்பெறுவதற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கினார்.

தொழில்முனைவோருக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அவரது தலைமைத்துவம், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை என்றும் நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.

அவரது சேவை ஆண்டுகள் முழுவதும், மைக்கியின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் ஒரு முக்கியப் பங்காற்றினார்.

மேலும், வர்த்தக சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பலருக்கு உத்வேகம் அளித்த ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்  தனது இரங்கல் செய்தியில் கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நமது நாடு உட்பட உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் வரலாற்றை அறிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். தொழிலாளர் வர்க்கம் நிலைத்திருக்கும் வரை தொழிற்சங்கங்களின் அவசியமும் தொடர்கிறது என்பது காலத்தின் நியதி.

இன்றைய சூழலில், தொழிற்சங்கங்களின் தோற்றம், அதன் பின்னணி, அதை உருவாக்கிய முன்னோடிகள் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, மக்கள் தலைவர்களாகப் போற்றப்படும் பி. வீரசேனன் மற்றும் எஸ்.ஏ. கணபதி யார்? அவர்களின் போராட்ட வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கு விளக்கம் வழங்கும் நோக்கில், “வீரசேனன் - மலாயா கணபதி போராட்டமும் வரலாறும் 2.0” என்ற வரலாற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் நாளை முன்னிட்டும், மலாயா கணபதி மற்றும் வீரசேனன் போராட்டவாதிகளின் நினைவுநாளை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த  விழா 09.05.2026 அன்று ஜொகூர், காரைநகர் நட்புறவு மையத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வரலாற்று ஆவணக் கண்காட்சி , சிறப்பு காணொளி வெளியீடு மற்றும்  பேச்சுமன்றமும் நடைபெறும். முக்கிய விருந்தினராக மதிப்பிற்குரிய ரவின்குமார்  கிருஷ்ணசாமி,  ஜொகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு குழுவின் தலைவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவார்.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
 

🗓️ 09.05.2026
⏰ மாலை 6.00 முதல் இரவு 10.00 வரை
📍 காரைநகர் நட்புறவு மையம்

🎯 ஊடக நண்பர்கள் இந்நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

📞 தொடர்புக்கு:
யோகி – 016-5432572
பிரவீன் – 016-7297975
மோகன் – 017-7540597
சங்கத்தமிழன் – 011-17992633

பூச்சோங், மே 3 –
கல்வி அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

இன்று காசிபீல்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் பூச்சோங் நிலையத்தின் “கல்வி யுத்தம்” நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியை கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 1,000க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், இந்திய மாணவர்களுக்கு 2,500 மெட்ரிகுலேசன் இடங்களை ஒதுக்க கல்வி அமைச்சு முன்வர வேண்டும் என ஸ்ரீ முருகன் நிலையம் வலியுறுத்தியது.

இதன் மூலம் கல்வியில் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வின் முடிவில் நன்னெறிக் கல்வியின் தேர்வு முடிகளில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளதை தொடர்ந்து அதனை மறு ஆய்வு செய்ய வேண்டுமென சுரேன் கந்தா கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, நன்னெறிக் கல்வி தேர்வின் முடிவுகள் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 10,000 மாணவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொகூர் பாரு, ஏப். 29- 

ஜொகூர்  மாநிலத் தேர்தலை (PRN16) முன்னிட்டு, புத்ரி வங்சா  சட்டமன்றம் (DUN) தொகுதியில் தங்களது வேட்பாளரை நிறுத்துவதற்கான  விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக மலேசிய மக்கள் சக்தி கட்சி   அறிவித்துள்ளது.

மக்கள் சக்தி கட்சியின் ஜொகூர் மாநில துணைத் தலைவர் ஜேம்ஸ் செல்வநாதன் கூறுகையில், தங்களது அடிமட்ட உறுப்பினர்களிடமிருந்து  இந்திய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையும், மக்கள் தொகை ஆய்வுகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், தெப்ராவ் பகுதியில் கட்சியின் இயந்திரம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கலப்பணி செய்ய முழுமையான தயார்நிலை ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் , ஜொகூர் மந்திரி புசார் ஓன் ஹாபிஸ் காஸி தலைமையை அக்கட்சி வலுவாக ஆதரிப்பதாகவும், அவர் இன, மத வேறுபாடின்றி நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறார் என்றும் மக்கள் சக்தி கட்சி பாராட்டியது.

எதிர்காலத்தில் மாநில நிர்வாக சபை (Exco) அணியில் இணையவும், இந்திய சமூகத்தின் குரலை உயர்த்த மாநில நிர்வாக மட்டத்திற்கு நேரடியாக கொண்டு செல்லவும் நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

புத்ரி வங்சா தொகுதியை முன்னிட்டு மக்கள் சக்தி கட்சி மூன்று முக்கிய இலக்குகளை முன்வைத்துள்ளது.

அவை: சிறு தொழில்முனைவோரின் சமூக-பொருளாதார முன்னேற்றம், B40 பிரிவினரின் கல்வி நலன், மற்றும் உள்ளூர் அடிப்படை கட்டமைப்புகளின் மேம்பாடு ஆகும்.

இந்த விருப்பம் விரைவில் பாரிசான் நேஷனல் (BN) உயர்மட்ட குழு ஆலோசனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிகாமாட்,ஏப்.30-
சுங்கை மூவார் வெள்ளத்தடுப்பு திட்டம் (RTB) கட்டம் 3, பகுதி 1 மற்றும் 2 (சுங்கை ஜெமெந்தா) ஆகியவற்றின் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களைச் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சருமான யுனேஸ்வரன் ராமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலையை மதிப்பீடு செய்வதோடு, உண்மை மற்றும் துல்லியமான தகவல்களை சிகாமாட் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை  இந்த ஆய்வு பயணம் நோக்கமாகக் கொண்டது.

குறிப்பாக, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த நம்பிக்கையைக் ஏற்படுத்தியுள்ளது.

சிகாமாட் பகுதி, கடுமையான மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2006-ஆம் ஆண்டு மற்றும் 2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த பெருவெள்ளங்கள் இதன் தீவிரத்தைக் காட்டின. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் மிகப்பெரிய முயற்சியாக இந்த வெள்ளத்தடுப்பு திட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

RTB கட்டம் 3, பகுதி 1 திட்டத்தின் ஒப்பந்த மதிப்பு RM461 மில்லியனாகவும், மொத்த செலவு RM558 மில்லியனாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோமீட்டர் நீளத்தில் அமையும் இந்தத் திட்டம் 23 ஜூலை 2024 அன்று தொடங்கப்பட்டு, 22 ஜூலை 2029 அன்று நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 35 விழுக்காட்டிற்கும் மேலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முக்கிய பணிகள் நிலம் சுத்திகரிப்பு, நிலப்பணிகள், ஆற்றின் அகல விரிவாக்கம் மற்றும் ஆழப்படுத்தல், அதிவேகக் கால்வாய் அமைத்தல், கரைகள் அமைத்தல் மற்றும் வெளியேற்ற அமைப்புகள் கட்டுமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்தத் திட்டம் கம்போங் செபராங் பத்து படாக், கம்போங் போகோ மற்றும் கம்போங் சோடான் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் சுமார் 22,000 மக்களுக்கு நேரடி நன்மையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுங்கை ஜெமெந்தாவில் அமைந்துள்ள RTB கட்டம் 3, பகுதி 2 திட்டப்பகுதியையும் யுனேஸ்வரன் ஆய்வு செய்தார். 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2029ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவடையும் என திட்டமிடப்பட்டிருந்தாலும், பணிகளை விரைவுபடுத்தும் முயற்சிகள் காரணமாக 2027ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஆய்வின் போது, திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் தயார்நிலையைப் பார்த்து யுனேஸ்வரன் மனநிறையை வெளிப்படுத்தினார். இதற்கு அரசாங்கத் துறைகள், தொழில்நுட்ப பிரிவுகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2023- ஆம் ஆண்டு ஏற்பாட்ட வெள்ளத்தை நேரில் பார்வையிட்டு, உடனடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்த பிரதமருக்குச் சிகாமாட் நாடாளுமன்ற அலுவலகம் நன்றியைத் தெரிவித்து கொள்வதாக யுனேஸ்வரன் கூறினார்.

இந்த RTB திட்டம் ஒரு சாதாரண கட்டுமானத் திட்டமாக அல்லாமல், மக்களின் உயிர், சொத்து மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தேசிய முயற்சியாகும்.

இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், அதன் பலன் மக்களுக்கு முழுமையாக சென்றடைய உறுதி செய்வதாகவும் யுனேஸ்வரன் உறுதியளித்தார்

கோலாலம்பூர், ஏப் 29 —
இளம் தலைமுறையை குற்றச் செயல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஇகா பிரிகேட் பிரிவினர் கோலாலம்பூர் போலீஸ் படையுடன் இணைந்து குற்றச்செயல் தடுப்பு கருத்தரஙகை ஏற்பாடு செய்தது.

கோலாலம்பூரிலுள்ள 15 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் குற்றச்செயல்களை துணிச்சலுடன் நிராகரிக்கும் மனப்பாங்கையும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் திறனையும் வளர்க்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டது.

சமூகத்தில் அதிகரித்து வரும் பல்வேறு சவால்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல்படும் தலைமுறையை உருவாக்குவது முக்கிய இலக்காகக் இது அமைந்தது.

இந்நிகழ்வின் நிறைவு விழாவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

காவல் துறை மற்றும் கல்வித் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முக்கியமான அம்சமாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.

புலாபோல், ஜாலான் செமாராக் பகுதியில் உள்ள டேவான் டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூட்டரசு பிரதேசத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பரவலாக பங்கேற்றனர்.

மேலும், காவல் துறை அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டு குற்றச்செயல்களின் அபாயங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.

கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, பள்ளி மாணவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது என கூறலாம்.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் இலக்கவியல் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இலக்கவியல் தலைமைத்துவம் மற்றும் மடானி கல்வி உருமாற்றுக் கருத்தரங்கம் 2026 மூன்று நாட்கள் நடைபெற்றது.

மலாக்காவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) இலக்கவியல் சிறப்பு கருத்தரங்கை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழ்ப்பள்ளிகள் தமிழாசிரியர் கழகம், இலக்கவியல் அமைச்சு மற்றும் கல்வியமைச்சு இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

2030க்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு முன்னேற்ற நாடாக மாற்றும் இலக்குடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25.5% பங்களிப்பு செய்துள்ளதாகவும், 2030க்குள் அதை 30% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், கல்வித் துறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், மாணவர்களின் திறன் மேம்பாட்டில் பள்ளிகளும் தலைமை ஆசிரியர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என அவர் வலியுறுத்தினார். இதன் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் துறையில் பள்ளிகளின் திறனை வளர்க்க அமைச்சு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன், மாநில அளவிலும் இலக்கவியல் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சிகள் இனி அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்தரங்கில் 470 தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். மலேசிய இலக்கவியல் கூட்டுறவு நிறுவனத் தலைவர் மற்றும் Asia School of Business நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் டாக்டர் டாவிட் ஆசிர்வாதமும் சிறப்பு சொற்பொழிவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமையாசிரியர்கள், இந்த இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகள் தங்களது திறனை மேம்படுத்த உதவியாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.

புத்ராஜெயா, ஏப்.22-

டுரியான் துங்கால்  துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை குறித்து சட்டத்துறை தலைவர் (AG) வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜாசேகாவின் தேசிய தலைவரும்  டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் டிஜிட்டல் அமைச்சருமான கோபின் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சுமார் ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக தெளிவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தெரிகிறது.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆதரிக்கும் வகையில் ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே, இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து விளக்கம் கோருவது முற்றிலும் நியாயமானது.

இது பொதுமக்கள் சார்ந்த ஒரு முக்கிய விவகாரம். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களுக்கு நீதி மற்றும் நியாயமான பதில்கள் கிடைக்கப்பட வேண்டும் என  எதிர்பார்க்கின்றனர்.

எனவே இந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை சட்டத்துறை தலைவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோபின் சிங் அறிக்கை விடுத்துள்ளார்.

பத்துமலை, ஏப்.19-
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் 2026ஆம் ஆண்டிற்கான இளம் தலைவர்களுக்கான பதவி நியமன விழா (Majlis Pelantikan Watikah Pemimpin Muda 2026) இன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவன் நவயுக பாரதி த/பெ தியாகராஜன் இறை வாழ்த்து பாடினார். தொடர்ந்து முனைவர் விக்டர் ஆசிர்வாதம் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி செளண்டேஸ்வரி கிருஷ்ணன் தலைமையுரை வழங்கினார்.
இவ்விழாவின் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட தொடர்புத் துறை அதிகாரி சர்ஜன் கமால் லிங்கம், இளம் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார். தொடர்ந்து, இளம் தலைவர்களுக்கான பதவி நியமன நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் ரத்னக்குமார் வரதராஜு, சர்ஜன் கமால் லிங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ புவனேந்திர குமார், தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமையாசிரியர்கள் இணைந்து கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, பள்ளியின் தலைமை மாணவராக அரண் த/பெ திலிப்குமார் கனகராஜ், முதல் துணைத் தலைமை மாணவியாக ஜனனி த/பெ ஹரிராஜா, இரண்டாம் துணைத் தலைமை மாணவராக தேவ்தர்ஷன் த/பெ சிவகாந்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனச் சான்றிதழ்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.
மேலும், மாணவர் தலைவர்கள், கருவளமைய தலைவர்கள் மற்றும் வழிகாட்டித் தலைவர்கள் என மொத்தம் 238 மாணவர்கள் பதவி நியமனச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
பள்ளியின் நெறியுரைஞர் குமாரி வித்யா தியாகராஜா, நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி புனிதவள்ளி முனீஸ்பரன் மற்றும் மாணவர் தலைவர்களின் பொறுப்பாசிரியர் குமாரி துர்காஷினி சுப்பிரமணியம் ஆகியோரின் தலைமையிலும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பிலும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிய தேவஸ்தான தலைவர் டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா, மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் மற்றும் நலத்திட்ட உறுப்பினர்கள் ஆகியோருக்கு தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார்.
“இன்றைய தலைவர்கள் நாளைய சமுதாயத்தின் தூண்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், ஏப்.19-
சட்டத்திற்கு புறம்பாக அந்நியர்களால் நடத்தப்படும் உலோக மறுசுழற்சி மையங்கள் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இத்தகைய மையங்கள் பல இடங்களில் இயங்கிக் கொண்டிருப்பது தெரிந்திருந்தும், அமலாக்க அதிகாரிகள் அதனை கண்டும் காணாதது போல் இருப்பதாக குற்றச்சாட்டை மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோக மறுசுழற்சி மைய உரிமையாளர் சங்கம் முன்வைத்துள்ளது.

இந்த நிலையைக் குறித்து மிம்தா தீவிர கவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் இம்மையங்கள் திருட்டு பொருட்கள் விற்பனைக்கு வழிவகுக்கின்றன என்றும், இதனால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் தெரிவித்தார்.

திருட்டு பொருட்களை வாங்குபவர்கள் மீது இதுவரை எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வியை மிம்தா முன்வைத்துள்ளது. 

சட்டத்தை மீறும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான அமலாக்கம் தேவைப்படுகின்றது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முறையான வியாபார உரிமைத்தை வைத்திருக்கும் எங்களின் மையங்களில் வாரத்திற்கு ஒரு முறை அமலாக்கப் பிரிவினர் சோதனையை மேற்கொள்கிறார்கள். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு எங்களின் வியாபாரம் பாதிப்படைகிறது என்றும் முத்தப்பன் கூறினார்.

ஆனால் சட்டத்திற்கு புரம்பாக மூன்று சக்கர மோட்டாரில் உலோக பொருட்களை சேகரிக்கும் அந்நியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, அவர்கள் தற்போது லோரிகளை கொண்டு இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சிலர் சொந்தமாக உலோக மறுசுழற்சி மையங்களை வழிநடத்தியும் வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், சட்டவிரோத செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மிம்தா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது  எதிர்பார்ப்பாக உள்ளது. உடனடி நடவடிக்கையை அவர்கள் முன்னெடுப்பார்கள் என்று நாம் நம்புவோம் என்றார்.

 

கோலாலம்பூர், ஏப்.19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து இந்திய முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக பேச துணை பிரதமரும்  தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட்  ஹமிடி வாயிலாக உதவி கேட்டும் இப்போது வரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு  கிடைக்கவில்லை.

ஆனால்  கடிதம் மட்டும் வருகிறது. இந்த அமைச்சை பாருங்கள் அந்த அமைச்சை பாருங்கள் என்று. அவர்களை சந்தித்தால் எந்த பதிலும் இல்லை. இது எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள் என கிம்மா தலைவர் 
டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிறகு திரும்பவும் பிரதமர் துறைக்கு கடிதம் எழுதினால் நேரம் இல்லை என்ற பதில் எங்களுக்கு வருகிறது.

கிம்மா கட்சி என்பது 50 ஆண்டுகள் வரலாறு உள்ள கட்சி ஆனால் எங்களுக்கு இந்த் அரசாங்கத்தில் கிடைக்கும் மரியாதை மனநிறைவு கொடுக்கவில்லை என்றார்.

1மில்லியன் இந்திய முஸ்லிம்  வாழும் இந்த நாட்டில் அந்த சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கிம்மா கட்சியை சந்திக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு நேரம் இல்லை... ஆனால்   இந்திய நடிகர்களான ரஜினி- கமல் என்ற நடிகர்களை சந்திக்க நேரம் உண்டும் என கிம்மா தலைவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

எங்கள் சமுதாயமும் வீதியில் வந்து போராடா வேண்டுமா அல்லது பிரதமர் அலுவலகத்தில் வந்து மறியல் செய்ய வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உங்கள் அமைச்சர்கள் மலேசிய இந்திய முஸ்லீம் சமுதாயத்தின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பது இல்லை. சரி பிரதமரை சந்தித்து சொல்லலாம் என்றால் இந்த விவகாரத்தில் பிரதமர் கவனம் செலுத்த நேரம் இல்லை என்றார் கிம்மா தலைவர்.

எங்கள் பிரச்சினை பிரதமர் துறை உடனே கவனிக்க வேண்டும் இல்லை என்றால் எங்களுக்கும் ( reformasi ) தெரியும்.  எங்களின் பிரச்சினையை பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்ல ஒரு சமுதாய முன்னெடுப்பு நடக்கும் என்றார் கிம்மா தலைவர்.

நாங்களும் இந்த நாட்டு மக்கள் ,  இந்திய நாட்டு பிரபலமான ரஜினி கமலுக்கு உள்ள முக்கியதுவம். ஏன் 1 மில்லியன் வாக்கு வைத்துள்ள  எங்கள் சமுதாயத்திற்கு இல்லை என கிம்மா தலைவர் டத்தோ ஸ்ரீ சைட் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நாட்டில் சிறுபான்மையான நாங்கள் 126 தொழில் துறையில் ஈடுபட்டு  தொழில் செய்து நாட்டின் மேம்பாட்டிற்கு எங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறோம் ஆனால் அரசாங்கத்தின் பார்வை எங்கள் சமுதாயத்தின் மீது பட வில்லை என்பது  மிகப் பெரிய கேள்வியை எழுப்புவதாக கிம்மா தலைவர் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர்

 

கோலாலம்பூர், ஏப்.18-
அரசியல் என்றால் அதில் அனைவருக்கும் ஒரு கனவு அல்லது எதிர்கால சிந்தனை இருக்கலாம். ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் அதில் விசுவாசம் இருப்பது அவசியம் என தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.

அந்த வகையில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அதன் பின்னர் மீண்டும் தேசிய முன்னணிக்குள் வருவதாக அறிவிப்பது சம்பந்தப்பட்ட கட்சி கூட்டணிக்கு உண்மையாக இல்லை என்பதை காட்டிவதாக அவர் சொன்னார்.

மேலும் சம்பந்தப்பட்ட கட்சி இன்னும் இருக்கிறதா அல்லது செயலிழந்து விட்டதா என்பது தெரியவில்லை என்ற அவர், எந்த கட்சி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என மறைமுகமாக கூறினார்.

கிம்மாவின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று தலைநகர் உலக வாணிப மையத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தை அதிகாரப்பூரவாக வினைக்கு வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

பல ஆண்டுகளாக ஒரு கூட்டணியிலிருந்து விட்டு அந்த கூட்டணியை விட்டு விலகுவதாக கூறிவிட்டு மற்ற கூட்டணியில் இணைய திட்டம் வகுப்பது மாபெரும் துரோகமாகும் என அவர் மேலும் அழுத்தமாக கூறினார்.

அந்த வகையில் தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக இருக்கும் கிம்மா கூட்டணிக்கு உண்மையாக இருப்பதாக அவர் பெருமையாக கூறினார்.

கோலாலம்பூர், ஏப்.18-

கிம்மா கட்சியின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று தலைநகர் உலக வாணிப மையத்தில் நடைப்பெற்றது.

தேசிய முன்னணியின் தலைவரும் துணை பிரதமருமான  டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சிறப்பு வருகை புரிந்து கூட்டத்தை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஆண்டு கூட்டத்தில் பேசிய கிம்மா தலைவர் சைட் இப்ராஹிம் , மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சுமார் 126 தொழில் துறைகளில் தொழில் செய்துவருகிறது. சிறுபான்மை சமுதாயமாக  நாங்கள் இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் பங்கு அளப்பரியது என்றார்.

இருந்தபோதிலும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்படவில்லை. அது கவலையாக உள்ளது என்றார்.

கிம்மாவை பொறுத்தவரை தேசிய முன்னணி சார்ந்த அமைச்சர்கள் இந்திய முஸ்லிம் சமுதாய பிரச்சனைகளை செவி சாய்க்கின்றனர். ஆனால் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற அமைச்சர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சு , கல்வி அமைச்சு , மனிதவள அமைச்சு எங்கள் பிரச்சினைகளை தீவிரமாக செவி சாய்ப்பது இல்லை என சைட் இப்ராஹிம், துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ  ஹாமாட் சாயிட் இப்ராஹிம்  முன்னிலையில் போட்டு உடைத்தார்.

குறிப்பாக இந்திய முஸ்லிம் மக்கள் செய்யும் தொழில்களான நகைக்கடை,  மளிகை கடை , மற்றும் உணவகங்களுக்கு அந்நிய தொழிலாளர்  பற்றாக்குறை பல ஆண்டுகளாக இருந்தும், தீர்வு இல்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகள் பல கடைகள் மூடப்பட்டு வருகிறது.

நிலைமை இப்படியே நீடித்தால் இந்திய முஸ்லீம் சமுதாயம் மீண்டும் எழுவது கடினம், ஆகையால் அரசாங்கம் இந்த பிரச்சினை மீது கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது  இந்திய முஸ்லீம் குரலாக அரசாங்க பொறுப்பில் கிம்மா ஒரு அங்கமாக அங்கீகரிக்கப் படவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஒரே வழி கிம்மா கட்சி தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக  அங்கீகரப்பட வேண்டும் என சைட் இப்ராஹிம் தேசிய முன்னணி தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.

50 ஆண்டுகளாக காத்திருந்து விட்டோம். எங்களுக்கு  எங்களை உறுப்பு கட்சியாகவும் அதே நேரத்தில் தேர்தலில் 2 நாடாளுமன்ற தொகுதி மற்றும் மூன்று சட்டமன்ற தொகுதி  கிம்மாவுக்கு வழங்கப்படவேண்டும் என கூறினார்.

அதோடு இந்திய முஸ்லிம் மேம்பாட்டிற்கு சிறப்பு நிதி ஆண்டு தோறும் வரவு செலவு திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்படவேண்டும் என சைட் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அன்பு மலேசிய சகோதரர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தத் தமிழ் புத்தாண்டான சித்திரைப் புத்தாண்டு, நமது கடந்த கால சாதனைகளைத் திரும்பிப் பார்ப்பதற்கும், பிரகாசமான, வளமான எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துவதற்கும் முக்கியத் தருணமாக அமைகிறது.

இலக்கவியல் அமைச்சில், எந்த ஒரு பாகுபாடுமின்றி, ஒவ்வொரு மலேசியரும் வருங்காலத்தை நோக்கிய தொழில்நுட்பப் புத்தாக்கதில் வலுப்பெறுவதை உறுதி செய்வதில் நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம். இலக்கவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்,  நமது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தி,  நாட்டை மேம்பாடடையச் செய்வதே எங்கள் இலக்காகும்.

இந்தப் புதிய வருடத்தை நாம் கொண்டாடும் அதே வேளையில், நம்மைச் சுற்றி நிகழும் உலகின் சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய கிழக்கில் தொடரும் மோதலானது உலகளாவிய நிலையில் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது, அதன் தாக்கம் நமது நாட்டிலும் உணரப்படுகிறது. எரிசக்தி விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் நிலையில்லா ஏற்ற இறக்கங்கள், நமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையில், மக்களுக்குப் பெரும் சுமையாக அமையுவதோடு நமது அன்றாட வாழ்க்கையையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

மடானி அரசாங்கம் இந்தப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக அயராது உழைத்து வருகிறது, இருந்தாலும், மக்களின் ஆதரவில்லாமல், எங்களால் இந்தச் சவாலை எதிர்கொள்வது கடினம்.

உலகளாவிய ரீதியில் நிலைத்தன்மையில்லாத காலகட்டத்தில், ஒவ்வொரு மலேசியரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. நமது எரிசக்திப் பாதுகாப்பையும் பொருளாதார மீட்சியையும் உறுதி செய்ய, நாம் விவேகத்துடன் செயல்படுவதோடு மட்டும் அல்லாமல், அரசின் முன்னெடுப்புகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வலிமையையும் தாண்டி, சமூக நல்லிணக்கமே நமது மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. தற்போதைய காலகட்டத்தில், நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக, வேறுபாடுகளைக் களைந்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டிருப்பது இன்றியமையாததாகும். நிலைத்தன்மையில்லா உலகச் சூழலில், பரஸ்பர மரியாதையும் சுபீட்சமான சூழலை உருவாக்க நாம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளுமே,  வரும் தலைமுறையினருக்காக, இந்த நாட்டில் நாம் உருவாக்கும் நிலையான பாதுகாப்பான அடித்தளமாகும்.

புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தை குறிப்பது போலவே பேதத்தைக் கடந்த ஒற்றுமையான மலேசியாவாக புதுப்பிக்கப்பட்ட உணர்வையும் குறிக்கட்டும்.
நாம் நமது குடும்பத்தினருடன் கலாச்சார உணவுகளை உண்டு மகிழ்ந்து, பெரியோர்களின் ஆசி பெற ஒன்றுகூடும் இந்த வேளையில் உலக அமைதிக்காகவும், நமது அன்புக்குரிய மலேசியாவின் நல்லிணக்கம் நிலைத்திருக்கவும் பிரார்த்திப்போம். இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கு இனிய வைசாகி மற்றும் விஷு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ
இலக்கவியல் அமைச்சர்
ஜ.செ.க தேசியத் தலைவர்

கோலாலம்பூர், ஏப்.11-

நாட்டில் டீசல் விலை வாரத்திற்கு வாரம் உயர்ந்து வருவதால் குத்தகையாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகையால் டீசலுக்கு நிலையான விலையை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கம் மானியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அதன் தலைவர் ஜி.ஆனந்தன் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் நடக்கும் போரால் பெட்ரோல் விலை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக டீசலின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு எங்களை போன்ற குத்தகையாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.

காரணம் ஒரு குத்தகையை பெறுவதற்காக விலைப் பட்டியலை நாங்கள் வழங்குகிறோம்.

அதில் டீசலில் விலையை அடிப்படையாக கொண்டும் மொத்த விலை வழங்கப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு வாரமும் விலை உயர்ந்தால் நாங்கள் எப்படி உறுதியான விலைப் பட்டியலை கொடுக்க முடியும்.
அப்படியே இந்த விலையை வைத்து குத்தகையை பெற்றால் அது எங்களுக்கு நஷ்டத்தை தான் தரும்.

ஆகவே இவ்விவகாரத்தை அரசாங்கம் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் டீசலுக்கு நிலையான விலையை அறிவிக்க வேண்டும்.

இல்லையென்றால் அரசாங்கம் மானியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று ஆனந்தன் மேலும் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர், மார்ச் 7-
பத்து கேவ்ஸில் உள்ள ஸ்ரீ பாலா இல்லம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒரு சிறுவன் மீது உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் புகாரை மஇகா பிரிகேட் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் மன உளைச்சல், தூக்கக் குறைவு மற்றும் கல்வி பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அவரின் தந்தை செய்த போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது மிகக் கொடூரமானதும் மனிதநேயமற்ற செயலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், போலீசார் உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா பிரிகேட் தலைவர் எண்ட்ரு டேவிட் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சமூக நலத்துறை நாடு முழுவதும் குழந்தைகள் இல்லங்களில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க தயாராக இருப்பதாகவும், அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பும் உளவியல் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்,மார்ச்5-

இசைக் கலைஞர்கள் இணைந்து, அமரர் கலைஞர் நல்லதம்பி அவர்களுக்கு நினைவாக “நிநைவு அஞ்சலி” நிகழ்வை நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சி வரும் 7 ஏப்ரல் 2026 அன்று மாலை 7.11 மணி அளவில், கோலாலம்பூரில் அமைந்துள்ள கே.ஆர்.சோமா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கலைஞர் நல்லதம்பியின் கலைப்பணிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இசை கலைஞர்களுடன் இணைந்து அலை ஓசை அப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். 

இசை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு
T.M.S. சிவகுரு – 016-287 9615,
மாஸ்டர் டாக்டர் அப்பு – 012-666 4652,
அசோக் – 016-346 6916,
நிஷா – 010-251 1639 ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

இந்நிகழ்வு கலைஞர்களின் ஒற்றுமையையும், மறைந்த கலைஞரின் நினைவையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறுகிறது.

கோலாலம்பூர் ஏப்ரல்-4

இந்த நாட்டில் மிக பழைமை வாய்ந்த  இந்து சங்கத்தின் 60 ஆம் ஆண்டு  வைர விழா தலைநகர் கலா மண்டபத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சி  மாலை 5.30 மணிக்கு  சரியாக ஆரம்பித்த நேரத்தில் , சுமார் கால் பகுதி இடமே நிரப்பப்பட்டது.

சிறிது நேரம் கழித்து கூட்டம் வர தொடங்கியது அப்போதும் சபையில் பாதி இடம் நிரப்பப்பட்டது.

தலைவரின் தலைமை உரை முடிந்து செய்தியாளர் சந்திப்பு நடக்கும் வரை  பாதி இடம் காலியாக இருந்தது.

மலேசிய முழுவதும் வட்டாரம் வைத்துள்ள ஒரு சங்கம்.  தனது 60 ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. கூட்டம் இப்படியாகவா?  இருக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.

உறுப்பினர்களுக்கு தகவல் சென்றதா? அல்லது தலைவர் மீது உள்ள அதிருப்தியா? என தெரியவில்லை ஆனால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பல உறுப்பினர்களின் முகம் வாடி புலம்ப தொடங்கியதை  தமிழ் லென்ஸ் கண்காணித்து.

அதோடு மட்டுமல்லாமல் ஆங்காங்கே உறுப்பினர்கள் புலனத்தின் வாயிலாக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும் நமக்கு கிடைத்துள்ளது.

சிலருக்கு முறையான அழைப்பும் கிடைக்கவில்லை எனவும் தகவல் தெரியவந்துள்ளது.

எது எப்படியோ இந்து சங்கம் ஒரு சமய அமைப்பு ,அது அரசியல் கட்சியல்ல ஆனால்   ஒரு பழமை வாய்ந்த சங்கத்தின் வைர விழா வெறிச்சோடி இருந்தது உறுப்பினர்களுக்கு மிக பெரிய வருத்தம் இது உண்மை.

சபை நிறைந்திருக்க வேண்டும்.

பதவி அரசியலில் ஒரு மாபெரும் இயக்கத்தின் விழா இப்படி பாதி சபை பாதி மனதோடு நிறைவுற்றது வருத்தம்.

இதை சம்பத்தப்பட்டவர் உணர வேண்டும் .

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஏப்ரல்-4

இன்று கலா மண்படத்தில்  நடைப்பெற்ற மலேசிய இந்து சங்கத்தின்  60 -ஆம் ஆண்டு வைரவிழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், வட்டார பொருப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.

ம.இ.காவின்  முன்னாள் தேசியத் தலைவர்  டான் ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் சிறப்பு வருகை புரிந்தார்.

நிகழ்ச்சியின் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் பேசுகையில்,  தமிழ் நாட்டில் மேலோங்கி இருக்கும் சாதி கலாச்சாரம் மலேசியாவில் ஊடுருவி வருகிறது. இதை தடுத்து நிறுத்த இந்து சங்கம் போராடும் என்றார்.

மலேசியாவில் தமிழர், தெலுங்கர், மலையாளி என பல இனத்தை சார்ந்த இந்துகள் இருந்தாலும் எங்களை நாங்கள் இந்துகளாக அடையாள படுத்தி வருகின்றோம்.
மலேசிய இந்துகளுக்கு சாதி அடையாளம் தேவை இல்லை  என தங்க கணேசன் தெரிவித்தார்.

இந்த சாதி கலாச்சாரத்தை நிறுத்த இந்து சங்கம் போராடும் என தங்க கணேசன் திட்டமிட்டமாக தெரிவித்தார்.

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 3-
பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் வரை நான் கட்சியின் தலைவர் என நான் கூறிக் கொள்ளமாட்டேன். கட்சியின் சேவகராரகதான் இதுப்பேன். இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்று அவர் சூளுரைத்தார்.

இதுவரை கட்சி சுமுகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் கொள்கை நிறைவேறும் வரை நாங்கள் அனைவரும் உழைப்போம் என அவர் சொன்னார்.

8 தொகுதிகளை வென்றோம் என்றால் எங்களின் முழு சேவையை மக்களுக்கு வழங்குவோம். என்களின் எதிர்ப்பார்ப்பு ஒரு நாள் நடக்கும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

அவரின் 60ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று பத்து கேவ்ஸ் செங்கா மண்டபத்தில் விமரிசையாக நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின்போது அவருக்கான AI வடிவத்தில் பாடல் ஒளிப்பரப்பட்டது. சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் சுரேந்திரன் தன் தலைவருக்காக இந்த முயற்சியை ஏடுத்திருந்தார்.

இந்த பாடல் காட்சி வந்திருந்தவர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின்னர் டத்தோ லோகா பாலவிற்கு சிலாங்கூர் பிபிபியினர் பெரிய அளவிலான மாலையை அணிவித்தனர்.

மாலை அணிவிக்கு பிறகு டத்தோ லோகா பாலா பேசுவையில், இந்த கொண்டாட்டத்தையும் மாலையையும் ஏற்பதற்கான காலம் இது கிடையாது. பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைத்த பின்னர் நான் இந்த சிறப்பை ஏற்றுக் கொள்கிறேன் என அவர் சொன்னார்.


கோலாலம்பூர், ஏப்.3- 
செலாயாங்  பகுதியில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களில் உடனடியாக திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளாக ஒரு ஆதரவற்ற இல்லம் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டு இருப்பது என்பது  ஆச்சரியத்தையும் கவலையும்  ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது உரிய அதிகாரிகள் வழங்கும் உரிமம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் குறைபாடு உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

மேலும், இதுபோன்று பதிவு செய்யப்படாத ஆதரவற்ற இல்லங்கள் உள்ளனவா, இல்லங்களிலும், அதில் குழந்தைகள் அபாயத்தில் உள்ளார்களா என்ற அச்சமும் இந்த சம்பவம் எழுப்புகிறது.

ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி இருப்பது மிகவும் வேதனைக்குரியது என்றும், இத்தகைய சம்பவங்கள் இனி எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை விரைவாக வெளிக்கொண்டு வந்து, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய போலீசாரின் உடனடி நடவடிக்கைக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அனைத்து குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிமம் பெறப்பட்டு, வழக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தவறுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து இல்லங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் அதிகாரிகளின் “கண்கள் மற்றும் காதுகள்” ஆக இருந்து, இத்தகைய துஷ்பிரயோகங்களை பற்றி தகவல் அளிக்க வேண்டும் என்றும், பலவீனமானவர்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கோலாலம்பூர், மார்ச் 31-
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்களுக்காக மஇகா இளைஞர் பிரிவு உயர்க்கல்வி குறித்த வழிக்காட்டி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் 4 லட்சம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர். இவ்வாண்டு அதன் முடிவுகள் வெளிடப்பட்ட வேளையில் 14 ஆயிரம் மாணவர் அனைத்து பாடங்களிலும் ஏ-க்கள் பெற்றுள்ளனர்.

ஆகையால் அவர்களின் மேற்கல்வி குறித்த விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கவே உயர்க்ல்வி இலட்சியப் பயணம் எனும் வழிக்காட்டி கருத்தரங்கை மஇகா இளைஞர் பிரிவு நாடு முழுவதிலும் நடத்தவுள்ளதாக தேசிய ரீதியிலான ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எல்.சத்திஸ்குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளிலும் இந்த உயர்க்கல்வி மாணவர்களுக்கான வழிக்காட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் நாடு தழுவிய அளவில் 1,500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.

நாளை ஏப்ரல் 1ஆம் தேதி மலாக்காவிலும் ஏப்ரல் 4ஆம் தேதி பகாங்கிலும் ஏப்ரல் 5ஆம் தேதி கெடா, பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், நெகிரி, ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், எந்த துறையை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என பல விளக்கங்கள் இந்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் மாணவர்களுக்கு நேருக்கு நேர் (1 to 1) விளக்கமும் அளிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

உயர்க்கல்வி பற்றிய விளக்கத்தை போலிடெக்னிக், உயர்க்கல்வி அமைச்சு, போன்றவையை சேர்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும்.

ஆகையால் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு தொடர்பில் விவரங்களை பெற 019-4860087 என்ற எண்ணுடன் சத்திஸ்குமாரை தொடர்புக் கொள்ளலாம்.


கோலாலம்பூர், மார்ச் 31-
மது போதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என மஇகா பிரிகேட் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில், பள்ளிக்கான புத்தகங்களை வாங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த அமிருல் ஹபிஸ் ஒமர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவால் மனைவியும் மூன்று பிள்ளைகளும் தந்தையை இழந்துள்ள நிலையில், “இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் போன்றவை அலட்சியம் மற்றும் பொறுப்பின்மை காரணமாக நிகழும் துயரமான நிகழ்வுகளாகும். மது போதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் நாட்டில் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது என மஇகா பிரிகேட் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மஇகா பிரிகேட் தேசியத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட், அரசாங்கம், குறிப்பாக போக்குவரத்து அமைச்சும், காவல்துறையும் சாலைப் போக்குவரத்து துறையும் மது போதையில் வாகனம் ஓட்டும் குற்றச்சாட்டுகளுக்கான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தடுப்புச் செயல்திறன் கொண்ட கடுமையான தண்டனைகள், கட்டாய சிறைத் தண்டனை மற்றும் அதிகபட்ச அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும் என்றும்  அவர் கூறினார்.

அதேபோல், “போர்ட் பானாஸ்” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முறையான சோதனைச்சாவடிகள் அமைத்து, தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், தேசிய கயாக் வீராங்கனை சிதி நுருல் மசியிதா மது போதையில் இருந்த ஓட்டுநரால் மோதி கடுமையாக காயமடைந்த சம்பவமும் நினைவுகூரப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் உயிரிழப்புகளையே அல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தையும் அழித்து விடுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மீண்டும் மீண்டும் குற்றம் புரியும் ஓட்டுநர்களுக்கு நீண்டகாலம் அல்லது வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கூடுதல் நடவடிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“#GenANTIjenayah” என்ற இயக்கத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மஇகா பிரிகேட் விரிவுபடுத்தப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூலிம்: தமிழ் செய்தி இணையதளமான தினத்தந்தியை சார்ந்த செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியம், அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது தொடர்பாக, அந்த இணையதளத்தின் இயக்குநர் பவளசெல்வன் மாரிமுத்து உறுதிப்படுத்தினார். இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இதுகுறித்த தகவல் தமக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பவளசெல்வன் கூறுகையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி காளிதாஸ் மற்ற ஊடகவியலாளர்களுடனுன் சில அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூலிம் ஹைடெக் பார்க் (KHTP) பகுதிக்கு சென்றிருந்தார்.

அங்கு 300க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் பணியாற்றுவதாக வந்த குற்றச்சாட்டை குறித்து செய்தி சேகரிக்கவே அவர்கள் சென்றதாக பவளசெல்வன் விளக்கினார்.

நாங்கள் தகவல் துறையில் பதிவு செய்யப்பட்டவர்கள்; அதிகாரப்பூர்வ ஊடக அட்டை எங்களிடம் உள்ளது. இப்படியான கைது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறினார்.

மேலும், இதற்கு முன்பே காளிதாஸை  கூலிம் போலீசார் விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.

இதற்கு முன்னர் அவரை போலீசார் அழைத்து விசாரணைக்கு வரச் சொன்னார்கள். அது அத்துமீறல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையது என தெரிவித்தனர்.

ஆனால் இன்று அவர் காவல் நிலையத்துக்கு சென்றபோது மேலதிக விசாரணைக்காக கைது செய்ததாக கூறப்பட்டது என பவளசெல்வன் மேலும் கூறினார்.

இதே குற்றச்சாட்டில் மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*உடனடி விடுதலை கோரிக்கை*

இதற்கிடையில், மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். முத்தமிழ் மன்னன், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அதிருப்தி வெளியிட்டார்.

ஒரு செய்தியாளர் தனது கடமையை செய்ததற்காக கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் அதிகாரப்பூர்வ ஊடக அட்டை உள்ளது. அவரை கைது செய்யாமல் வாக்குமூலம் பதிவு செய்திருந்தாலே போதுமானது என அவர் தெரிவித்தார்.

மேலும், காளிதாஸை உடனடியாக எந்த தாமதமும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்புடைய அமைச்சர் ஃபாமி பட்சில் அவர்களிடம் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடமும் (KDN) கருத்து கோரப்பட்டுள்ளது.


போர்ட்டிக்சன்,மார்ச் 29-

ம.இ.கா-வும் மக்கள் சக்தியும் ஒரே குடும்பமாக இந்திய சமுதாயத்திற்காக களத்தில் நிற்கும் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் டத்தோஸ்ரீ தனேந்திரன்  அவர்களும் ஒருமித்த குரலாக இந்திய சமுதாயம் சார்ந்த முடிவுகள் எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து  பயணக்க வேண்டும் என இன்று நடைப்பெற்ற மக்கள் சக்தியின் தேர்தல் பணிப்படை பயிற்சி நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று 50 பேர்களாக சிறிய அளவில் நடந்தப்பட்ட இந்த பயிற்ச்சியை 500 பேராக உருமாற்றுங்கள் நான் அதன் முழு செயலவை ஏற்கிறேன் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த  நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மக்கள் சக்தி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுக்கு என்னிடம் ஏதாவது கேள்விகள் உள்ளதா என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு தளத்தை அவர்களுக்கு வழங்கினார்.

அப்போது பெருவாரியான உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி என்னவென்றால்  டான்ஸ்ரீ இந்த ஒற்றுமை எல்லா நிலையிலும் ம.இ.கா - மக்கள் சக்தியிடம் இருக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பு இருக்கிறாதா? என்றால் ஒற்றுமை சற்று குறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்தையும் கேட்டு அறிந்த டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் 
கவலை வேண்டாம் நானும் டத்தோஸ்ரீ தனேந்திரன் அவர்களும் மாநிலம் மாநிலமாக இரு தரப்பு கட்சி உறுப்பினர்களை சந்திக்க வருகின்றோம். அனைவரும் தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

இந்த தேர்தலை இந்திய சமுதாயம் ஒற்றுமையாக ஒரு மித்த குரலாக சந்திக்க வேண்டும்.

அதற்கு நமது பணிப்படை தயாராக இருக்க வேண்டும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  தெரிவித்தார்.

ஒற்றுமையான ஒரு சமுதாயமாக தேர்தலை நிர்ணயம் செய்யும் சக்தியாக மீண்டும்  உருவெடுப்போம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

போர்ட்டிக்சன், மார்ச் 29-
மக்கள் சக்தி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் போர்ட்டிக்சனில் நடைபெற்ற நிகழ்வில், வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சி தீவிரமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் தனது தலைமை உரையில், தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை “Retreat” நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கூறினார். 

கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ஏமாற்றத்தை சரிசெய்யும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த தேர்தலுக்காக 300 பேர் கொண்ட பணிப்படை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“ஒன்றாய் வெல்வோம்” என்பது இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக இருந்ததாகவும், மஇகாவுடன் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு, அடுத்த பொதுத் தேர்தலிலும் கூட்டாக பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எந்த சவாலையும் எதிர்கொள்ள கட்சி தயாராக இருப்பதாகவும், உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு கட்சியின் ஆதரவு தொடரும் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் பதவி வகித்திருப்பது அரசியல் நிலையற்ற தன்மையை காட்டுவதாகவும், பதவிக்கு வரும் சிலர் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நாட்டின் வளர்ச்சியில் மஇகாவின் பங்கு முக்கியமானது என்றும், அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளில் மக்கள் சக்தி கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களின் ஆதரவை பெறும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

 

கோலாலம்பூர், மார்ச் 27-

பி.கே.ஆர் கட்சி தொடர்பாக பல விதமான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த கட்சி தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி அவர்கள் பல விதமான குறறசாட்டுகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கடந்த ஒரு வாரமாக பி.கே.ஆர் கட்சி தொடர்பான சர்ச்சை வந்து கொண்டு இருக்கும் நிலையில், இப்போது கட்சியின் துணைத் தலைவர் ராஜினாமா செய்து விட்டார் என்ற தகவலும் இப்போது பரவி வருகிறது.

அடுத்து யார் கட்சியில் ராஜினாமா செய்ய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

யாருடைய  பெயர் பட்டியலில் இருக்கிறது என்று பி.கே.ஆர் வட்டாரத்தில் இப்போது கேள்வி எழுந்து  வருவதாக தமிழ்லென்ஸ் இணையத்திற்கு இப்போது தகவல் கிடைத்து உள்ளது.

யார் அந்த MR.R? அவருக்கும்  பி.கே.ஆர் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?  இதில் சம்பந்தபட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் யார்? அவர்களின் Boss யார் என்ற கேள்வியும் எழுந்து வரும் இந்த நேரத்தில்,

அடுத்து அடுத்து பி.கே.ஆர் கட்சியில் இப்படி பல வதந்திகள்  வருகிறது.

அடுத்து யார் ராஜினாமா செய்ய போகிறார்?  முக்கிய புள்ளியா? அல்லது அவர்கள் சார்ந்த பலியாடா? அதிரடி தகவலுக்கு காத்திருப்போம்...

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 27-

பி.கே.ஆர் கட்சியின் தேசிய துணைத் தலைவர்  நூருல் இசா கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்  தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கடிதம் இப்போது வெளியாகி உள்ளதாக  பி.கே.ஆர் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் உண்மையான காரணம், அதிகாரபூர்வமான தகவல் இன்னும் தெரியாமல் உள்ளது.

ஆனால் இதுவரை தமிழ்லென்ஸ் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்
நூருல் இசா தனது கல்வியை தொடர உள்ளதாக பி.கே.ஆர் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

காத்திருப்போம் அதிகாரபூர்வ தகவலுக்காக...

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர் மார்ச் 27-
இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு மடானி அரசாங்கம் 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

சபா சரவாக் மாநிலங்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் இதற்கு முறையாக விண்ணப்பம் செய்யலாம்.

நாட்டில் உள்ள மாறுபட்ட சமயங்களின் நல்லிணக்கத்தை காக்கவும் ஒரு பல்லின சமுதாய அமைப்பை உறுதிப்படுத்தவும் இத்தகைய உதவிகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

ஒவ்வொரு வழிப்பாட்டு தளத்திற்கும் 2 லட்சத்து 50,000 வெள்ளி ஓதுக்கீடு செய்யப்படும்.

குறிப்பாக வழிபாட்டு தலங்களை பழுது பார்ப்பது, புரணமைப்பு செய்வது, புத்தாக்கம் செய்வது, பராமரிப்பது, புதிய கட்டடங்களை எழுப்ப இந்த தொகை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.


பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25-
தாமான் கனகாபுரம் கம்போங் முனியாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் அம்மன் ஆலயம், இளைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் புதிய உயிர் பெற்றுள்ளது.

சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், நீண்டகாலமாக நடைபெற்று வந்த திருப்பணிகளுக்குப் பிறகு, தற்போது முழுமையாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவை விமரிசையாகக் கொண்டாடியது.

இந்த விழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், இளைஞர்களின் ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது.

ஆலயத் தலைவர் மணிமாறன் முருகேசு கூறுகையில், இவ்விழாவின் வெற்றிக்கு இளைஞர்களின் அயராத முயற்சியே காரணம் எனக் குறிப்பிட்டார். “நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆலயப் பணிகளை, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முடித்து வைத்துள்ளனர்.

அவர்களின் ஒத்துழைப்பே இன்றைய வெற்றியின் அடிப்படை,” என்றார்.

தலைமை குருக்கள் சிவாகம ரத்ன சிவஸ்ரீ பி. யாகேசன் குருக்கள் மற்றும் ஆலய தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சிவஸ்ரீ கனகலிங்க ருத்ரா குருக்கள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், சுற்றுவட்டார மக்களுடன் சேர்ந்து பெருமளவிலான இளைஞர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயம் சமய வழிபாடுகளுக்கு அப்பாற்பட்டு, சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருவது அதன் சிறப்பாகும். இதனை பாராட்டிய ஆலய ஆலோசகர் மற்றும் பத்துமலை ஐயப்ப சுவாமி தேவஸ்தானத் தலைவர் யுவராஜா குருசாமி, இளைஞர்கள் முன்னிலையில் ஆலயம் வளர்ச்சி அடைவது சமூகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.

இந்த கும்பாபிஷேகம், ஒரு ஆலய விழாவைத் தாண்டி, சமூக ஒற்றுமையையும் இளைஞர் சக்தியையும் எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.

கோலாலம்பூர், மார்ச் 25-
ம.இ.காவின் மத்திய செயலவை இன்று நடைப்பெற்ற நிலையில் எல்லாரும் எதிர்பார்த்த வகையில் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் ம.இ.கா எடுக்கவில்லை என்பதே பதில். ஆனால் ம.இ.கா இப்போதைக்கு தேசிய முன்னணியோடு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு ம.இ.கா தற்போது சொல்லியுள்ள காரணம், கடந்த ஆண்டு  நடத்தப்பட்ட ஆண்டு கூட்டத்தில்  ம.இ.கா உறுப்பினர்கள் தேசிய முன்னணியை விட்டு  ம.இ.கா வெளிய  சென்று பெரிக்காத்தானில் இணைய வேண்டும் என தீர்மாணம் எடுத்த நிலையில், இறுதியான முடிவை ம.இ.கா மத்திய செயலவையிடம் அவர்கள்  கொடுத்தனர்.

அந்த தீர்மாணம் எடுக்கப்பட்ட நேரத்தில் பெரிக்காத்தான் தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பதவி வகித்தார். அதன் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், பெரிக்காத்தான்  தலைமைத்துவமும் மாறியுள்ள நிலையில் மீண்டும் கட்சி தொண்டர்களுடன் கலந்து பேச வேண்டிய சூழல் எழுந்துள்ளதால் இப்போதைக்கு ம.இ.கா தேசிய முன்னணி கூட்டணியில் நிலைத்து இருப்பதாக ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.


இதன் அடிப்படையில் இன்று நடந்த மத்திய செயலவையில் எந்த முடிவையும் ம.இ.கா உறுதியாக எடுக்காத நிலையில் ம.இ.காவின்  தலையெழுத்து எதிர்வரும் பொது தேர்தல் சமயத்தில் தான் தெரியவரும்.

போட்டியிடும் தொகுதி பங்கீட்டில் முரன்பாடு வந்தால்தான்  ம.இ.கா எந்த  கூட்டணியோடு கைகோர்க்கும் என்ற விடை தெரிய வரும். அதுவரை  உறுதியான முடிவு கிடைக்காது என்றுதான் கூற வேண்டும்.

கோலாலம்பூர், மார்ச் 25-
அன்று ஆலய கும்பாபிஷேகத்திற்கு சென்று மாலைகளை மட்டும் அணிந்து கொண்ட அரசியல் தலைவர்கள், சென்ற ஆலயங்களின் பதிவுகளை கேட்டிருந்தால் இன்று ஆலய பிரச்சினைகள் எழுந்திருக்காது என புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் தெரிவித்தார்.

அதேபோல் 1960ஆம் ஆண்டுகளில் உருவாகி மலேசிய இந்து சங்கமும் நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களின்  முழுமையான ஆவணங்களை இதுவரை கொண்டிருக்கவில்லை. இன்னமும் இந்து சங்கத்தை நம்புவதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

ஆலய சர்ச்சைகளுக்கு உண்மையான காரணங்களை கண்டறிய தான் சமாதான கூட்டத்தில் பங்கேற்றதாகவும் அதனை விளக்கும் வகையில் இன்று ஊடக சந்திப்பை நடத்தியதாகவும் அவர் சொன்னார்.

நாட்டில் ஆலயம் தொடர்பான சர்ச்சைகள் பரவலாக நடந்தது.

இதற்கு தீர்வு காண வேண்டும் அடிப்படையில் தான்  புத்ராஜெயாவில் ஒரு சமாதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் என அவர் சொன்னார்.

உடனே நான் ஆலயங்கள் உடைத்ததற்கு காரணமானவர்களுடன் கைகுலுக்கி விட்டோம். அவர்களுடன் சாப்பிட்டோம் என பல குற்றச்சாட்டுகள்கள் எழுந்துள்ளது.

ஆனால் அதில் உள்ள உண்மைகள் யாருக்கும் தெரியாது. முதலில் இக்கூட்டம் போலிஸ் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் வேளையில் ஆலய சர்ச்சைகளுக்கு உண்மையிலேயே என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டன் என அவர் மேலும் சொன்னார்.

அக்கூட்டத்தில் யாரும் சமாதானமாக பேசவில்லை. எங்களின் ஆதங்களையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்.

குறிப்பாக ஜம்ரி வினோத், செக்கு சந்திரா உட்பட பலர் பேசுவதும் செய்வதும் இந்துக்களை பாதிக்கிறது என்பதை எடுத்துக் கூறவே நான் அங்கு சென்றேன்.

ஆகையால் சமூக ஊடங்களில் பொய்யான தவறுகளை பரப்ப வேண்டாம். உண்மை என்னவென்று தெரியாமல் பேச வேண்டாம் என்று உமாகாந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கோலாலம்பூர்,மார்ச் 18-

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, உணவகத் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பிரேஸ்மா தலைவர் டத்தோ முகமட் மொசின் தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் தற்போது செலவினச் சுமையை தாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றும், உடனடியாக உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதில்லை என்றாலும், இந்த நிலையை எவ்வளவு நாள் தாங்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என அவர் கூறினார்.

இந்த நிலைக்கு நாங்கள் காரணமல்ல; உலகளாவிய சூழ்நிலைகளே காரணம். எனவே, அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், உணவகங்களில் விலை உயர்வை தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் சில உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இத்துடன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனை சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். 

அதேபோல், பிரதமரையும் சந்திக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராதது மேலும் சிக்கலை அதிகரித்துள்ளதாகவும், உணவகத் துறையை அரசு சாதாரண துறையாக பார்க்கும் போக்கு இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஆனால் உணவகத் துறை நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றாகும் என்றும் டத்தோ முகமட் மொசின் மேலும் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், மார்ச் 16-

​மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய தேசியத்துவக் கழகம் (Akademi Kenegaraan Malaysia) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், வட மாநில இந்திய இளைஞர்களுக்கான சிறப்புத் தலைமைத்துவப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

 “KEM GENRLS 2.0” எனும் பெயரில், கெடா கூலிமில் உள்ள தேசியத்துவப் பயிற்சி மையத்தில் மூன்று நாட்கள் இந்த முகாம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

​இதில் பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி வளாகங்கள் மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் என மொத்தம் 94 பிரதிநிதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


​இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். 

அவர் தனது உரையில், "நாட்டின் முக்கிய செயல்பாட்டு குறிகாட்டிகள் (KPI) வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும், மக்களின் சுபிட்சக் குறியீடு (KHI) இன்னும் முழுமையான இலக்கை எட்டவில்லை. குறைகளை மட்டுமே பார்க்காமல், முன்னேற்றத்திற்கான வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமானவை; அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி இந்தியச் சமூகம் மேலோங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

​மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலைவர் சேவைச் செம்மல் தனேஷ் பாசில் பேசுகையில், இந்திய இளைஞர்களைத் தேசிய அளவிலான இத்தகைய முகாம்களில் ஒருங்கிணைப்பது ஒரு சவாலான காரியம் என்றும், அதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி இம்முகாமைத் தேசியத்துவக் கழகத்துடன் இணைந்து நடத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு 720 இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 930 இந்திய இளைஞர்களுக்கு இக்கழகம் வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

​இத்திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த பிரவின் ராமகிருஷ்ணன் அவர்கள், முகாமின் ஒவ்வொரு அங்கத்தையும் நுணுக்கமாகத் திட்டமிட்டு வழிநடத்தினார்.

இளைஞர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்துவதையும், நாட்டின் மீதான பற்றை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முகாம், அவரது தலைமையில் வெற்றிகரமாக நிறைவுற்றது.

கோலாலம்பூர், மார்ச் 16-

நம் நாட்டில் பல ஆண்டுகளாக மேடை நாடகம் போடப் படவில்லை. அந்த குறையை தீர்க்கும் வண்ணமாக, மேடைக்கு மேடை அரசியல் நாடகத்தை நடத்தி நடிகர் திலக்கத்தை மிஞ்சும் அளவிற்கு கை வண்ணத்தை காட்டி வருகின்றனர் அரசியல்வாதிகள்.

குறிப்பாக அரசாங்கத்தில் இருக்கும் ஜால்ரா அரசியல்வாதிகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.

நாட்டில் பிரச்சினை செய்யும் 4 நபர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று எத்தனை போலீஸ் புகார் செய்து மக்கள் நாட்டு சட்டத்தை மதித்து இந்த அரசாங்கத்திற்கு தெரிய படுத்தினார்கள். அப்போது கண் இருந்தும் குருடராகவும் காது இருந்தும் செவுடராகவும்  வாய் இருந்தும் உமையாகவும் அரசாங்க நாற்காலியை அலங்கரித்த  இந்திய அரசியல் தலைவர்கள் இப்போதுதான் அருவை சிகிச்சை முடித்தார்கள் போல.. நமக்கே ஆச்சரியம் வரும் அளவில் இரண்டு தினங்களாக பல அறிக்கை. இவர்களுக்கு பேச வருமா? காது கேட்க தொடங்கி விட்டதா? இந்தியர்கள் பக்கம் பார்வை தெரிகிறதா என்று பார்த்தால்...

பூனை புலியான கதைக்கு விடை கிடைத்தது. நாட்டில் சர்ச்சை ஏற்படுத்திய இருவர் நாட்டில் இல்லை. உடனே பூனை புலியாக மாரி மியாவ் மியாவ் என்று கத்தி வருகிறது.

இந்த பூனைகள் தான் இந்திய சமுதாயத்தை அமைதியாக இருக்க சொன்ன பூனைகள்.  இப்போது திடீர் என புலியாக மாரி மீண்டும் அதே பூனை சத்தத்தை கொடுத்து தங்களை புலி போல் காட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த இரு சர்ச்சை குறிய நபர் இந்த நாட்டில் இருந்து செய்த நடவடிக்கை  பார்த்து  கண்டு காணாமல் இருந்த இந்த பூனைகள், நமக்கு எதுக்கு பா வம்பு  நாம் பெரும்பான்மையான சமுதாயத்தை பகைத்து கொள்ள வேண்டாம் என்று வாயை பொத்திக்கொண்டிருந்த கூட்டம்.

இரு தனி நபரை அமைச்சரவையில் பேசி நடவடிக்கை எடுக்கத் தெரியாத கையாளகாத கூட்டம் .

அந்த இருவர் இல்லாத போது,   ஒரு அமைச்சர் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் என கூச்சல் போடுவது என்ன..  இன்னொரு துணை அமைச்சர் அவர் பதவி எடுத்ததில் இருந்து அவரை  இப்போது தான் பார்க்கிறோம்.
போலீஸ் படை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது விரைந்து கைது செய்வார்கள் என்று இவர் ஒரு பக்கம் கூச்சல்.

திருசுழத்தை மிதித்து இந்த நாட்டில் தான் அந்த நபர் இருந்தார். நீங்கள் எல்லாம் வாயை திறக்கவே இல்லையே.. இப்போது எப்படி உங்களுக்கு பேச்சு வந்தது என்ற  ஆச்சரியத்தில் மக்கள் உள்ளனர்.

மக்களே இந்த ஆட்சி எப்படி உள்ளது என்றால் முதல்வன் படத்தில் வரும் அரங்கநாதன் அரசியல் ஆட்சி தான் இவர்கள் ஆட்சியும்.

இவர்கள்  4 நாற்காலி கால்களை நம்பி ஆட்சி  நடத்துகிறார்கள். அதில் ஒரு கால் உடைந்தாலும் ஆட்சி கவிழ்ந்து விடும்... ஆகையால்  இவர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்பார்கள்.

அவர்களே அடித்து கொண்டு  ஆவர்களே சமாதானம் ஆகட்டும்..  நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என்பதே இவர்களின் நிலை கடமைக்கு சில கண்துடைப்பு நடக்கும் அவ்வளவு தான்.

இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று  இன்னுமா சமுதாயம் நம்புகிறது... ?

பூனை புலியாகி விட்டது என்று ஆச்சரியம் வேண்டாம் மக்களே இன்னொரு நாடகம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது அரசியல் நடிகர் திலகங்கள் நடிப்பு போட்டியில் கலம் இறங்கியுள்ளனர்..

வேடிக்கை மட்டும் பாருங்கள், இந்த பூனை சத்ததில் கடுகு அளவு கூட பிரோஜனம் இல்லை..

-வெற்றி  விக்டர்

உலு சிலாங்கூர், மார்ச் 15
அரசியல் எல்லைகளைத் தாண்டி மருத்துவத் தொண்டின் மூலம் சமூகத்தின் பேராதரவைப் பெற்றுவரும் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன், கடந்த வெள்ளிக்கிழமை சமத்துவ நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.


நோன்பு மாதத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இணைந்து நோன்பு துறப்பில் கலந்து கொள்ள வேண்டும்; அதில் நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்தார்.

விருந்தோம்பலுடன் இலக்கிய நிகழ்ச்சியும் சமூக நலத்திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவாங், கோல குபு பாரு, பாதாங் காளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியதுடன், திருக்குர்ஆன் நூலையும் வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் டாக்டர் சத்ய பிரகாஷ்.


அதேபோல் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பௌத்த சமய நூல்கள், கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பைபிள், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பகவத் கீதை ஆகியவற்றையும் அன்பளிப்பாக வழங்கினார்.


இதன் மூலம் உலு சிலாங்கூர் மக்கள் அனைத்து சமயங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து, ஒற்றுமையை விரும்பும் மக்கள் என்பதை சிலர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


மேலும், யார் எவ்வாறு கபடநாடகம் ஆடியாலும் மலேசியர்களின் ஒற்றுமையை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 15
30 ஆண்டுகளாக இந்த நாட்டில் பல சமூக மக்களுக்கு உதவி செய்து வரும் கெபிமா இயக்கம், 27-வது முறையாக நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்கள் மற்றும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளும் உணவுப் பொருட்களும் வழங்கியது. இந்த நிகழ்ச்சி நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.


இந்த நாட்டின் மக்கள் பெருநாள் காலங்களில் சந்தோஷமாகவும் ஒற்றுமையுடனும் பெருநாளைக் கொண்டாடும் வகையில் கெபிமா கடந்த 27 ஆண்டுகளாக இந்த உதவியை செய்து வருவதாக, கெபிமாவின் தோற்றுநர் ஜனாப் முகமது பின் காதிர் அலி தெரிவித்தார்.


சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்களை பார்த்து மிகவும் வருத்தம் அடைவதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் அடையாளமே பல்லின மக்களின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மதித்து ஒற்றுமையாக வாழும் நாடு என்பதே என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த ஒற்றுமையை கட்டிக் காக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்களும் நடவடிக்கைகளும் சில மதவெறி நபர்களால் ஒரு நொடியில் சிதைந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.


இப்போதே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் இந்த நாட்டின் அடையாளமும் அமைதியும் பாதிக்கப்படும் என மூத்த சமூக சேவகரான ஜனாப் முகமது பின் காதிர் அலி கவலை தெரிவித்தார்.
அதே நேரத்தில் இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரான் மோதலால் பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சாணக்கியமான முன்னேற்பாடுகளை செய்து, அதே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.


அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ததும், நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சிகளை ரத்து செய்ததும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இருப்பு நிலையை சரியாக பராமரித்து வருவதும் பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் டத்தோ வீர நைனா முகமாட் பின் சுல்தான் அப்துல் காதிர், முகமாட் பின் அப்துல் காதிர், டத்தோ ஹாஜி ஹிஷாமுடீன், டான் ஸ்ரீ உபையத்துல்லா, டத்தோ ஹாஜி டாக்டர் சையட் இப்ராஹிம், டத்தோ சேக் ஜமீல், அலி சாஜாஹான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மேலும், கெபிமா தலைவர் முகமட் இப்ராஹிம் தலைமையில் சங்கம் சிறப்பாக செயல்பட்டு பல புதிய சிந்தனைகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது என அவர்கள் இப்ராஹிம் அவர்களை பாராட்டினர்.


செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 15-
சமீபகாலமாக ஒரு சில தரப்பினரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இன - மத ரீதியிலான தூண்டல் நடவடிக்கைகள், பொதுப் பாதுகாப்புக்கும் நாட்டின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலான இச்செயல்களை ஒடுக்க அரசாங்கம் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளை மலேசிய இந்தியச் சமூக அமைப்புகள் ஒருமனதாக வரவேற்றுப் பாராட்டியுள்ளன.

முன்னதாக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் இத்தகைய தூண்டுதல் ஏஜெண்டுகளின் செயல்களைக் கடுமையாகச் சாடியதோடு, நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய, இப்பிரச்சினையை அமைச்சரவைக் கூட்டத்திற்கும் கொண்டு சென்றார்.

அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக, அரசாங்கம் அரச மலேசிய போலீஸ் படையின் மூலம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியதற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்குப் பல்வேறு இந்திய வணிகச் சங்கங்கள் தங்களது நன்றியையும் பாராட்டையும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.

இது குறித்து மலேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் - மைக்கி (MAICCI) தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் கூறுகையில், பிரதமர் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ‘மலேசியா மடாணி’ கொள்கையின் கீழ் இந்தியச் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் தெளிவான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது என்றார்.

தூண்டுதல் ஏஜெண்டுகளைக் கைது செய்து தண்டிப்பதன் மூலம், இந்தியச் சமூகத்தின் குரலுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதுடன் பல்லின சமூக அமைதியைப் பேணுவதில் தனது உறுதியை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக, தொழில்துறை சங்கத்தின் - மிம்காய்ன் (MIMCOIN) தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் பி.வி. அப்து, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணும் அரசாங்கத்தின் முயற்சிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் பல தசாப்தங்களாகப் பல்வேறு இன மக்கள் இணக்கமாக வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தனித்துவமான ஒற்றுமையைச் சிதைக்க முயலும் எவருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

அதேபோல், கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சங்கத்தின் (KLSICCI) தலைவர் நிவாஸ் ராகவன், இந்திய வணிகச் சமூகம் அரசாங்கத்துடன் இணைந்து அமைதியைப் பாதுகாக்கும் என்றும், எவ்விதமான இன-மதத் தூண்டல்களையும் நிராகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் இச்சமயத்தில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தின.

இனங்களுக்கிடையிலான இணக்கமான உறவே நாட்டின் பொருளாதாரத் தாரக மந்திரம் என்றும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறவும் வணிக வளர்ச்சியை உறுதி செய்யவும் அமைதியான சூழல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கிடையில், மார்ச் 14 அன்று போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், ஜம்ரி வினோத் - தமீம் தஹ்ரி ஆகிய இரு நபர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் 505(பி) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது அவ்விருவரும் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யத் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஷா ஆலம், மார்ச் 14-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் 548 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு, சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், எம்ஜஇடி, ஏம்ஸ்ட் ஆகிய இணைந்து இந்த சதுரங்கப் போட்டியை நடத்தினர்.

மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் சிறப்பான விளையாட்டு இதுவாகும். 

நம் மாணவர்கள் இந்த விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளது இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.

நம் சிந்தனை மட்டுமல்லாமல் எதிரியின் சிந்தனையையும் தெரிந்து கொள்ளும் ஆட்டம் இதுவாகும் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த போட்டி நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர் டத்தோ முருகையா, சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ஐயங்கர் உட்பட மஇகாவினரும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

ஷா ஆலம், மார்ச் 14-
நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் ஆலய பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் நடத்து நோக்கம் மஇகாவுக்கு இல்லை என்றும் இந்த பிரச்சினையை களைய மலேசிய இந்து சங்கம், மஹிமா ஆகியவற்றுடன் இணைந்து மஇகா செயல்படும் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஆலயங்களை கொண்டு அரசியல் நடத்தியவர்கள் உண்டு.  ஆனால் அந்த பாணி எங்களுக்கு புறம்பானதாகும்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு நான் பிரதமரை சந்தித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் அவருடன் கலந்துரையாடினேன். ஆலய விவகாரம் உட்பட சமுதாயம், அரசியல் ஆகியவற்றை பற்றி பேசினேன். முக்கியமாக தற்போது சர்ச்சையாக உள்ள ஆலய விவகாரம் தொடர்பில் பேசியதாக டான்ஸ்ரீ கூறினார்.

நம் தெய்வங்களை அவமானம் படுத்துவது சரியல்ல. அனைத்து அமைப்புகளும் மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தை நாங்கள் முன்னெடுத்தால் அது அரசியல் ஆகிவிடும். அதனால் இந்த பிரச்சினையை பெரியதாக ஆக்க நாங்கள் விரும்பவில்லை. இதனை மலேசிய இந்து சங்கம் முன்னெடுத்தால் சமய பிரச்சினையாகவே இருந்துவிடும். ஒன்றிணைந்து அனைவரும் இந்த பிரச்சினையை களைவோம் என்றார் அவர்.

கோலாலம்பூர்,மார்ச் 12-

எசான் வர்த்தக குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்வதாக அதன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமிட் கூறினார்.

அவ்வகையில் இன்று சிகாம்புட்டில் 200 பேருக்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தலைமையில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நோன்பு பெருநாளை முன்னிட்டு எசான் வர்த்தக குழுமம் ரமலான் உதவிகளை வழங்கி வருகிறது.

இவ்வாண்டும் கிட்டத்தட்ட 5,000 பேருக்கு இந்த உதவிகளை எசான் வழங்கியுள்ளது.

வசதிக் குறைந்தவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் இவ்விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சி என டத்தோ அப்துல் அமிட் தெரிவித்தார்.

குறிப்பாக இவ்விழா கூட்டரசுப் பிரதேச அறவாரியம் உட்பட பல அமைப்புகளுடன் நடத்தப்பட்டது.

அமைச்சர் ஹன்னா இயோ துடிப்புமிக்க அமைச்சராக உள்ளார்.

அவரின் வருகை கூட்டரசுப் பிரதேசத்திற்கு மேலும் உருமாற்றத்தை கொண்டு வரும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

Recent News