loader
செலாயாங் மற்றும் செனாவாங் கெப்பிட்ட ஹாலில் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெ.500 பண முடிச்சு!

செலாயாங் மற்றும் செனாவாங் கெப்பிட்ட ஹாலில் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெ.500 பண முடிச்சு!

கோலாலம்பூர், ஜன.6-
செலாயாங் கெப்பிட்டல் ஹாலிலும் மற்றும் செனாவாங் ஹாலிலும் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களும் தன் பிறந்தநாளை முன்னிட்டு வெ.500ஐ மொய்யாகா வழங்கவுள்ளதாக இந்த இரு ஹால்களின் உரிமையாளரான டத்தோஸ்ரீ ஹாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டு முழுவதும் இந்த சலுகை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

சாதாராண ஹால் அலங்காரங்களை காட்டிலும் வித்தியாசமான அலங்காரங்களை பிரமாண்ட முறையில் தன் வாடிக்கையாளர் இவர் வழங்கி வருகிறார். என் வாடிக்கையாளர்கள் என் குடும்ப உறுப்பினர்கள்தான் என நான் கருதுகிறேன். ஆகையால் அவர்களுக்கு இந்த சலுகையை வழங்கவுள்ளதாக டத்தோஸ்ரீ ஹரி தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை செலாயாங் கெப்பிட்டல் ஹாலில் டத்தோஸ்ரீ ஹரியின் 40ஆவது பிறந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், தொழிலதிபர் டத்தோஸ்ரீ புலேந்திரன், ரத்தன வள்ளி அம்மையார் உட்பட பல தொழிலதிபர்களும் போலீஸ் அதிகாரிகளும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

தன் பிறந்தநாள் விழாவிற்கு வருகையளித்த அனைவருக்கும் தான் நன்றியை தெரிவித்து கொள்வதாக டத்தோஸ்ரீ ஹரி தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News