loader
சிற்பக் கலாலய நிறுவனத்தின் உரிமையாளர் சிவ ஸ்ரீ யோகேஸ்வர சிவாச்சாரியாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

சிற்பக் கலாலய நிறுவனத்தின் உரிமையாளர் சிவ ஸ்ரீ யோகேஸ்வர சிவாச்சாரியாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

 

கோலாலம்பூர், டிச.30-
பாரத பிரதமர் உயர்திரு நரேந்திர மோடி அவர்களின் முழு ஆதரவுடன் டெல்லியில் Constitution Club Of India ஏற்பாட்டில் நடைபெற்ற   நிகழ்வில்  World Educationl Achievement Award லில் மலேசிய நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலாலய நிறுவனத்தின் உரிமையாளர் சிவ ஸ்ரீ யோகேஸ்வர
சிவாச்சாரியார் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டில் மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் ஆசிரியர் உயர்திரு திருஞானம் அவர்களிடம் முறையாக சிற்ப ஆகமங்களை பயின்று மலேசியாவில் சிற்ப கலாலயம் என்ற நிறுவனத்தை நிறுவி பல்வேறு சிற்ப வேலைகளையும் மற்றும் ஆலய வழிபாடுகளையும் இவர் செய்து வருவதோடு அண்மையில் Punca Alam சிவனாலயம் மற்றும்  Puchon-இல் அம்மன் ஆலயமும் முழுமையாக கருங்கல்லால்  இவரது நிறுவனமே ஏற்று நடத்தி வருகிறது. 

தமிழ்நாட்டில்  பூங்குன்றம் ,சித்தூர், ஆவடி போன்ற இடங்களில் கருங்கல் இவர் ஆலயங்கள் அமைத்து வருவதோடு நம் நாட்டினர் பெயர் விளங்க செய்திருக்கிறார். 

இவ்வேளையில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தமைக்கு அவருக்கும் அவர்தான் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

0 Comments

leave a reply

Recent News