பாகான் டத்தோ, பிப்.27-
பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியிலுள்ள இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்த வட்டாரத்திலுள்ள 200 பாலர்பள்ளி மாணவர்களுக்கு வெ.20 ஆயிரம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வெ.69,100 மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு வெ.28 ஆயிரம் வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதித்து அனைத்துலக போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் 10 இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப் பிரதமடருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் இந்த அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.
மாணவர்களின் கல்வியின் மீது அக்கரை கொண்டு அவர் இந்த உதவியை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த தொகுதியிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்க வேண்டும் என்று தான் கூறியபோது, தொகுதியிலுள்ள பாலர்பள்ளிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கும் நாம் உதவ வேண்டும் என்று கூறி இந்த உதவிகளை அவர் வழங்கியதாக அவரின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பலசாமி தெரிவித்தார்.
0 Comments