கோலாலம்பூர், டிச.26-
1எம்டிபி வழக்கு விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் பாதுகாப்பு குழு சமர்பித்த அரபு நன்கொடை கடிதத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் அந்த ஆவணம் போலியானது என்று வலியுறுத்தியுள்ளது.
இன்று காலை நீதிமன்றத்தின் தீர்ப்பைப் படித்த நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா, நஜிப் இந்த நிதியை அரபு நன்கொடைகள் என்று கூறியதே அதை நம்ப முடியாததாக மாற்றியதாகக் கூறினார்.
சவூதி அரேபியா நன்கொடை விவரிப்புக்கு எந்த தகுதியும் இல்லை. சவூதி நன்கொடை கடிதங்கள் போலியானவை.
மேலும் பணம் உண்மையில் 1 எம்டிபி நிதியிலிருந்து வந்தது என்பதை ஆதாரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
சவூதி நன்கொடைக்கான வாதங்கள் நம்பகமானவை அல்ல என்பதை இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
மேலும் எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் லஞ்சம் என்ற அனுமானத்தை அழுத்தமாக மறுக்கத் தவறிவிட்டது என்று நீதிபதி கூறினார்.
0 Comments