கோலாலம்பூர், பிப்.25-
நடந்து முடிந்த மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து குவாந்தான் உயர் நீதிமன்றத்தில் தற்போது சுமுகமான முடிவு கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் அனைத்து பதவிகளுக்கும் போட்டிகளை நடுத்தும் வகையில் அந்த முடிவு கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் தலைவர் பதவியை தவிர்த்து அனைத்து பதவிகளுக்கும் போட்டி நடத்த முடிவு கிடைத்தது. அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போது வழக்கு முடிவில் அனைத்து பதவிகளுக்கும் போட்டி நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்புகளும் தற்போது தலையிட முடியாது. மாறாக இந்த தேர்தலை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியப்படுகிறது.
கடந்த 23ஆம் தேதி ஜூன் மாதம் 2024ஆம் ஆண்டு ஆலயத்தின் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.
தற்போது அதற்கு நல்ல முடிவு கிடைத்துள்ளதாக நம்புவோம்.
0 Comments