loader
செமிஞ்யே சட்டமன்றம் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்! மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அன்பளிப்பு

செமிஞ்யே சட்டமன்றம் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்! மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அன்பளிப்பு

செமிஞ்யே, டிசம்பர் 24 –

செமிஞ்யே சட்டமன்றத்தின் இந்தியர் சிறப்பு பிரிவின் ஏற்பாட்டில், செமிஞ்யே சட்டமன்ற உறுப்பினர் உஸ்தாட் நுஷி மக்ஃபோஸ் அவர்களுடன் இணைந்து  2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது, செமிஞ்யே சட்டமன்ற பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு உணவு கூடைகள் உள்ளிட்ட அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என நிகழ்வின் ஏற்பாட்டாளரும், செமிஞ்யே சட்டமன்றத்தின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரியுமான பூபாலன் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்விற்கு டத்தோ டாக்டர் பன்னீர்செல்வம் அவர்கள் ஆதரவு வழங்கியதுடன், மக்களுக்கு உணவுக் கூடைகளை நேரடியாக வழங்கி தனது பங்களிப்பையும் வெளிப்படுத்தினார்.

கிறிஸ்துமஸ் 2025 கொண்டாட்டம், மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை  இந்த பண்டிகை காலம் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என நிகழ்ச்சி பூபாலன்  தெரிவித்தார்

இந்த நிகழ்வின் வாயிலாக, உதவி பொருட்கள் அனைத்தும் முறையாக  திட்டமிட்ட வகையில் தேவையான மக்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் பூபாலன் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டார்.

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மத நல்லிணக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இந்த நிகழ்வு அமைந்ததாக அவர் தெரிவித்ததுடன், நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்வதாகவும் பூபாலன் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News