கேப் கேனவரல், மார்.19-
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர்.
அவர்களை மீட்க சென்ற 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று அதிகாலை புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'போயிங்' நிறுவனத்தின், முதல் விண்கலமான 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.
இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.
தற்பொழுது அந்த இரு வீரர்களும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, நாசா விஞ்ஞானிகளையும், மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
சியோல், டிச 4-
தென்கொரியாவில் அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந் நாட்டின் நாடாளுமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, தான் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.
கிழக்காசிய நாடான தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. எதிர்க்கட்சிக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், தாராளவாத கொள்கைகளை பின்பற்றும் தென் கொரியாவை, வட கொரியாவின் கம்யூனிச சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது' என்று அதிபர் திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது; நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது. நாட்டை போதைப்பொருள் புகலிடமாகவும், நாட்டில் குழப்பமான நிலையை உருவாக்கவும் எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். கூடிய விரைவில் தேச விரோத சக்திகளை ஒழித்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவேன்' என்றும் கூறினார்.
அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே வெளியிட்ட இந்த அறிவிப்பால் தென் கொரியாவில் பதற்றமான சூழல் நிலவியது. நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டது. பார்லிமென்ட் சுற்றிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தி ராணுவத்தின் ஆட்சியை கொண்டு வருவதற்கு எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நாடு முழுவதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
இதையடுத்து தென்கொரியா நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்தது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், ராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300 சட்டமன்ற உறுப்பினர்களில் 190 பேர் அவசரநிலையை எதிர்த்து ஓட்டளித்தனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இதனால் அந்த நாட்டில் 12 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது.
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா கார் விபத்தில் மரணம்!.
2025-07-03 02:39:43தீப்பற்றி எரிந்தது கேளிக்கை விடுதி: 60 பேர் பலி! நுாற்றுக்கணக்கானோர் காயம்.
2025-03-17 03:29:35நோர்வேவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நான்கு மலேசியர்கள் காயமடைந்துள்ளனர்!.
2024-12-28 01:24:32கஸகஸ்தானில் விபத்துக்குள்ளானது அசர்பைஜான் விமானம்: சம்பவ இடத்தில் 38 பேர் பலி!.
2024-12-25 22:21:59நாங்கள் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் சுனிதா மற்றும் வில்லியம்ஸ் நம்பிக்கை!.
2024-07-13 00:05:06வடகொரியாவின் செயற்கைக்கோள் ஏவுதல் தோல்வி: நடுவானில் வெடித்து சிதறிய ராக்கெட்!.
2024-05-27 18:34:59சுவீடனில் உடலுறவு விளையாட்டுக்கு அங்கீகாரம்: விரைவில் சாம்பியன்ஷிப் போட்டி!.
2023-06-04 00:48:41வடகொரியா ஏவுகணையை ஏவ வாய்ப்புள்ளது - ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்!.
2023-05-30 19:18:53விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர் - சக பயணிகளுக்கு திடீர் மூச்சு திணறல்!.
2023-05-26 20:23:51செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்.
2023-05-21 19:09:51