loader

All News

இலங்கை, மார்ச் 23-

 ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் , இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனை இன்று சந்தித்தார்.  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது. 

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். 

டத்தோ ஸ்ரீ  சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையர் மலேசியாவில் பணிப்புறிவதற்காக  10 ஆயிரம் வேலைவாய்ப்பு வீசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு   அனுமதியை வழங்கியுள்ளார்.  அந்த முயற்சிக்காக 
இலங்கை பிரதமர்,   டத்தோ ஸ்ரீ சரவணனக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார். 

தற்போது இந்த  ஒதுகீட்டினை இலங்கையை சேர்ந்த 1,853 இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

டத்தோ ஸ்ரீ சரவணன் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியில் இருந்து இலங்கையை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் சிறந்த நிர்வாகத்தின் வாயிலாக மிக விரைவாக இலங்கையை  அவர்கள் மீட்டெடுத்தனர். 

ஏனைய  நாடுகள் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் மீண்டெழ கையாண்ட அனுகுமுறைக்கு பாராட்டுக்களையும்  தெரிவித்தனர். 

அத்துடன் இலங்கைக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க  மலேசிய அரசாங்கம் காத்திருப்பதாகவும் 
டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இலங்கை, மார்ச் 22-

இன்று மாலை இலங்கையில்  மட்டக்களப்பு  மாவட்ட , இஸ்லாமியர் அதிகமாக வாழும் காத்தன் குடி   பகுதியில்  5,000 இஸ்லாமியருடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் , சிறப்பு விருந்தினராக  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா-வின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்.

இலங்கை கிழக்கு மாகாணம் ஆளுநர்  செந்தில் தொண்டமான்  அழைப்பை ஏற்று டத்தோ ஸ்ரீ சரவணன் இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை வெளியுறவு  அமைச்சர் எம்.யு.எம்.  அலி சப்ரி கலந்து கொண்டு  சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ சரவணனுக்குச் சிறப்பு செய்தார்.

5,000 இஸ்லாமியர் மத்தியில்  உரையாற்றிய டத்தோ ஸ்ரீ சரவணன், அவர்களுடன் அமர்ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

காஸா, டிச.13-

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில் கடல்நீரை பாய்ச்சும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கிவிட்டது என  அமெரிக்க அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

சுரங்கத்தில் கடல்நீர் பாய்ச்சும் நடவடிக்கை முழுமை அடைய ஒரு சில வாரங்கள் ஆகலாம். எவ்வாறாயினும், இஸ்ரேலிய இராணுவம் இந்த நடவடிக்கை குறித்த மேல் விவரங்கள் எதையும் அறிவிக்க வில்லை. மேலும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூட இது தொடர்பில் பதிலளிக்கவில்லை.

ஹமாஸ் பதுங்கியிருக்கும் அந்த சுரங்கத்தில் பணயக்கைதிகள், போராளிகள் மற்றும் வெடிமருந்துகளும் மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடல் நீரை சுரங்கத்தில் பாய்ச்சுவதினால் காஸாவின் ஏரிகளில் உள்ள நல்ல நீர்கள் பாதிக்கப்படலாம்.

அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே சுமார் 0.4 கிலோமீட்டர் தொலைவில் குறைந்தது ஐந்து பம்புகளை இஸ்ரேலிய இராணுவம் 

அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பம்புகளை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான கனமீட்டர் நீரை அனுப்பி  முழு சுரங்கப்பாதையும் 1 வாரத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கடிக்க முடியும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

காஸா, டிச.6

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில் கடல்நீரை  பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பம்ப் அமைப்பை இஸ்ரேல் நிறுவியுள்ளதாக அமெரிக்க அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே சுமார் 0.4 கிலோமீட்டர் தொலைவில் குறைந்தது ஐந்து பம்புகளை இஸ்ரேலிய இராணுவம் 

அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த பம்புகளை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான கனமீட்டர் நீரை அனுப்பி  முழு சுரங்கப்பாதையும் 1 வாரத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கடிக்க முடியும்.

அவ்வகையில் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ்  விடுவிக்கப்படுவதற்கு முன்னர், இஸ்ரேல் இந்த பம்பைப் பயன்படுத்துவதை பற்றி பரிசீலிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

 ஹமாஸ் தனது பணயக்கைதிகளை பாதுகாப்பான  சுரங்கங்களில் மறைத்து வைத்திருப்பதாக முன்பு கூறியிருந்ததை வைத்து இந்த அனைத்து பணயக்கைதிகளும் சுரங்கங்களில் இருக்கலாம் என்பது கணிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​இஸ்ரேல் சுரங்கப்பாதையை நாசப்படுத்துவது நியாயமானது என்றும், அதற்கான பல்வேறு வழிகளை ராணுவம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஜெருசலேம், அக்.26-

காஸா மீது தரைப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் மேற்கொள்ளவிருக்கும்  நடவடிக்கை குறித்த நேரமோ அல்லது பிற தகவல்களையோ தெரிவிக்க அவர்  மறுத்துவிட்டார்.

ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிக்குள் எப்போது ராணுவம் நுழையும் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசாங்கத்தின் சிறப்புப் போர் அமைச்சரவை முடிவெடுக்கும் என்று அவர் கூறினார்.

நாங்கள் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறோம். எப்போது, ​​எப்படி, எவ்வளவு என்பதை நான் விவரிக்க மாட்டேன். நாங்கள் செய்த பல்வேறு கணக்கீடுகளையும் நான் விரிவாகக் கூறமாட்டேன், அவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களுக்குத் தெரியாது என்று நெதன்யாகு கூறினார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் 1400 பேர் பலியாகினர். அதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களாக காஸா பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளை இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது.

இதனிடையே இந்த தாக்குதலின் வழி 6,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், அக்.17-

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,200-ஐ  கடந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ்  நடத்திய தாக்குதலில் இதுவரையில் 1400 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீன காசா முனை மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 2808 பேர் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரையில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் அடிப்படையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,266 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலியாகியதாக தகவல் கசிந்துள்ளது.ஹமாஸின் முக்கிய அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல் மசினி இஸ்ரேல் நடத்திய  வான்வழி தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.

விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு மட்டும் தான். அதனால் தான் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1958 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர்களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவை தான்.

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியவை. மீதமுள்ள பனிரெண்டும் ஆளில்லாக் கலங்கள். 

1959 ஆம் ஆண்டு முதன் முதலில் ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சோவியத் ரஷ்யா நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு லூனா 9 ஆய்வுக் கலத்தை soft land செய்து வரலாறு படைத்தது ரஷ்யா. நிலவில் மென்மையாக தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் படைத்தது ரஷ்யா. 

ஆனால், அதற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1969ஆம் ஆண்டு ஜூலையில் அப்போலோ 11 ஆய்வுத் திட்டம் மூலம் நிலவில் மனிதனை கால்பதிக்க வைத்தது அமெரிக்கா. வரலாற்று பதிவின் படி அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடை பயின்ற நிமிடங்கள்  சாதனை நொடிகள். அப்போது தொடங்கி 1972ஆம் ஆண்டு வரை அப்போலோ திட்டம் மூலம் 9 முறை விண்கலங்களை அனுப்பி 12 பேரை நிலவில் கால் பதிக்க வைத்துள்ளது அமெரிக்கா.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி நிலவில் கடைசியாக கால்பதித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் கோர்னென்.

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன.

விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு மட்டும் தான். அதனால் தான் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1958 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர்களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவை தான்.

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியவை. மீதமுள்ள பனிரெண்டும் ஆளில்லாக் கலங்கள். 1959 ஆம் ஆண்டு முதன் முதலில் ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சோவியத் ரஷ்யா நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு லூனா 9 ஆய்வுக் கலத்தை soft land செய்து வரலாறு படைத்தது ரஷ்யா.

நிலவில் மென்மையாக தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் படைத்தது ரஷ்யா. ஆனால், அதற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1969ஆம் ஆண்டு ஜூலையில் அப்போலோ 11 ஆய்வுத் திட்டம் மூலம் நிலவில் மனிதனை கால்பதிக்க வைத்தது அமெரிக்கா. வரலாற்று பதிவின் படி அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடை பயின்ற நிமிடங்கள்  சாதனை நொடிகள். அப்போது தொடங்கி 1972ஆம் ஆண்டு வரை அப்போலோ திட்டம் மூலம் 9 முறை விண்கலங்களை அனுப்பி 12 பேரை நிலவில் கால் பதிக்க வைத்துள்ளது அமெரிக்கா.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி நிலவில் கடைசியாக கால்பதித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் கோர்னென்.


முன்னாள் சோவியத் யூனியன் தான் முதன் முதலில் விண்கலத்தை மெதுவாக நிலவில் தரையிறங்க வைத்ததுடன், அதன் லூனா 9, லூனா 13 ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்கள் மூலம் நிலவின் தரையில் இருந்து முதல் புகைப்படங்களையும் எடுத்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா சர்வேயர் என்ற திட்டத்தில் 5 ஆளில்லாக் விண் கலங்களையும், அப்போலோ என்ற திட்டத்தின் வழியாக மனிதர்களைக் கொண்ட ஆறு விண்கலங்களையும் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.

அமெரிக்கா நிலாவில் ஆட்களைத் தரை இறக்கிய பின்னர், சோவியத் ஒன்றியம் தனது லூனா 16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் ஆளில்லா விண்கலங்களை நிலவில் இறக்கி மண் மாதிரிகளை எடுத்து வரச் செய்தது. ஜப்பானும் நிலவு குறித்து தனது ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சீன நிலவு ஆய்வுத் திட்டம் 2007-ல் Chang’e 1 என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நிலவின் மிகத் துல்லியமான 3D வரைபடத்தை உருவாக்குவதே சீனாவின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “யுடு”ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய 3-வது நாடானது சீனா. மொத்தமாக, சீனா 7 முறை நிலவு பயணங்களை முடித்துள்ளது. 2030ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

ஆக இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் தான் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகள். ஆனால், மர்மங்கள் நிரம்பிய நிலவின் தென்பகுதியில் இதுவரை எந்த நாடும் வெற்றிகரமாக தரையிறங்கவில்லை. அந்த வரலாற்று சாதனையை செய்து முடிப்பதற்காகத்தான் சந்திரயான்-3 தயாராகியபோது ரஷ்யாவின் லூனா-25 வெற்றிகரமாக நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு முன்பாக தென்துருவ தரையிறக்க சாதனை ரஷ்யாவிற்கு சொந்தமாகிவிடுமோ என உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் ரஷ்யாவின் முயற்சி பலனளிக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணாமாக லூனா-25 நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவில்லை. 

ஆனால் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கி உலகின் முதல் சாதனை படைத்துள்ளது.

வாஷிங்டன், ஜூன் 30-

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண சென்ற 'டைட்டன்' நீர்மூழ்கி வெடித்து சிதறிய சம்பவத்தை தொடர்ந்து அதில் பயணித்த 5 கோடீஸ்வரர்களின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 1912ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் 'டைட்டானிக்' கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. அதன் சிதைந்த பாகங்களை பார்க்கும் ஆர்வத்தில் 5 கோடீசுவரர்கள் கடந்த 18ஆம் தேதி ஆழ்கடல் பயணம் மேற்கொண்டனர். ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் வடிவமைத்த 'டைட்டன்' நீர்மூழ்கியில் அவர்கள் பயணித்தனர்.

அவர்களை பற்றி 4 நாட்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கி வெடித்து சிதறி 5 பேரும் பலியாகி விட்டதாக அதிகாரிகள் 22ஆம்  தேதி அறிவித்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, 'டைட்டன்' நீர்மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பது தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் கனடா அரசு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க கடலோர காவல்படை, நீர்மூழ்கியின் சிதைந்த பகுதிகளை மீட்கும் பணியில் இறங்கியது.

நீர்மூழ்கியின் உடைந்த பாகங்களுடன், மனித உடல் பாகங்கள் என கருதப்படும் பொருட்களும் மீட்கப்பட்டு இருப்பதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. 

இது, நீர்மூழ்கி பற்றிய விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீட்கப்பட்ட பாகங்கள், கனடா நாட்டின் நியூபவுண்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை கனடாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். 

சர்வதேச விசாரணை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அந்த பாகங்கள் அமெரிக்காவுக்கு கொண்டு வந்து தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அமெரிக்க கடலோர காவல் படை கூறியுள்ளது.

 'டைட்டன்' நீர்மூழ்கி எப்படி வெடித்தது? இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பதை அறிய இந்த பாகங்கள் உதவும் என்று கடலோர காவல்படை தலைவர் ஜேசன் நியுபேயர் தெரிவித்தார். 

மேலும், மனித உடல் பாகங்களாக கருதப்படுபவை, பலியான 5 பேரின் உடல் பாகங்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஜகார்த்தா ஜூன் 26

இந்தோனேசியாவில் மீனவர் ஒருவர் 20 ஆண்டுகாலமாக ஒரு முதலையுடன் நட்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த உலகில் சுயநலத்திற்காக பழகும் சில நண்பர்களை முதலை என்று அழைப்பதுண்டு .ஆனால் 59 வயதான அம்போ , ஒரு முதலையே நண்பராக வைத்துள்ளார்.

மீனவரான அம்போ நீண்டகாலமாக  தான் வசிக்கும் பகுதியில்  படகில் மீன் பிடித்து வாழ்கிறார். அப்படி  26வருடங்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்றபோது 1 மீட்டர் அளவிலான ஒரு  முதலையை ஆற்றின் ஓரம் கண்டுள்ளார்.

அப்போது பசியில் இருந்த முதலைக்கு. இவர் உணவு வழங்கினார். பிறகு அந்த முதலை அவரை பின் நோக்கி வந்தது. அவர் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும்  அந்த முதலை  காணாமல் போனது.

மறுநாள் அதே நேரம்  அவரின் படகு பக்கத்தில் அந்த முதலை வந்தது. அம்போவும் அந்த முதலைக்கு உணவு கொடுத்தார். இப்படி தினமும் அவரை காண அந்த முதலை வந்த போது இருவரும் நண்பர்களாகினர். அம்போ அந்த  முதலைக்கு ரிஸ்கா என பெயர் வைத்தார். இப்படி  இவர்களது நட்பு 26 வருடமாக நீடிப்பதாக அம்போ தெரிவித்தார். இப்போது ரிஸ்கா 4 மீட்டர் அளவில் வளர்ந்து பார்த்தாலே பயம் ஏற்படும் அளவில்  உள்ளது. இருந்தபோது அதே குட்டி முதலை போல் தன்னிடம் நடத்துக்கொள்ளும் ரிஸ்காவிற்கு ஒரு நாளைக்கு 3 கோழியை உணவாக தருவதாக  அம்போ தெரிவித்தார்.

தான் வீட்டில் இல்லாத போது அந்த குறிப்பிட்ட நேரத்தில் என் படகு பக்கத்தில் ரிஸ்காவிற்கு உணவு வைக்கும் படி  அண்டை வீட்டாரிடம் உதவி கேட்பேன். அவர்களும் உதவி  செய்வார்கள். இது நாள்வரை  ரிஸ்கா  பகுதி வாழ் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அளவில் நடந்துக் கொள்ளவில்லை என்றாலும் நாங்கள் எப்போது எச்சரிக்கையுடன் பழகுவோம் என அம்போ தெரிவித்தார்.

வாஷிங்டன், ஜூன்.23-

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கிக் கப்பலில் சென்று காணாமல் போன ஐவர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.

 டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பார்வையிட  சென்ற ஐவர் பயணித்த கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த  ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஐந்து நாள் தேடுதல் பணி முடிவுக்கு வந்ததுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடலுக்கு அடியில் சென்று காணாமல் போன இந்த நீர்மூழ்கி கப்பலை தேடும்படி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அவ்வகையில் அந்த நீர்மூழ்கிக் கப்பல், டைட்டானிக் அருகே வெடித்துச் சிதறியதாக நம்பப்படுவதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே டைட்டானிக் அருகே தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் கொண்டு அந்தக் கப்பல் சேதமடைந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, OCEANGATE EXPEDITIONS நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அதன் பயணம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பை இழந்தது .

இதனால் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. 

இந்த நீர்மூழ்கி கப்பலில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெரும் வர்த்தகர் ஷாஸடா டாவூட் (வயது 48), அவரின் மகன் சுலேமான் (வயது 19), பிரிட்டன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங் ( வயது 58), போல் ஹென்ரி (வயது 77)  மற்றும் ஸ்டோக்டன் ருஷ் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர், ஜூன் 21-
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கிரேப் ஹோல்டிங் நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களில் 11 விழுக்காடு அதாவது 1,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

செலவுகளை குறைப்பதற்கும் தரமான சேவை நீண்ட காலம் தொடர்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அந்தோனி டான் தெரிவித்தார்.

தொற்று நோய் தாக்குதலுக்கு பின்னர் அதிக வேலையாட்கள் பணி நீக்கம் செய்வது இம்முறைதான். வணிக சூழலுக்கு ஏற்ப மறுசீரமைப்பு முயற்சியாக இது உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

2012இல் நிறுவப்பட்ட கிரேப் பயன்பாடு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட எட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விநியோக சேவைகள், பயணம் மற்றும் நிதி சேவைகளை வழங்கிவருகிறது.

தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் அரை மாத சம்பளமும் சினைவு பரிசும் வழங்கப்படும் என் அந்தோனி டான் தெரிவித்தார்.

சோமாலியா,ஜூன்.11-
 
தெற்கு சோமாலியாவின் கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தபோது அங்கு கிடந்த பொருளை கையில் எடுத்துள்ளனர்.

அப்போது அந்த பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 27 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்மப்பொருள் கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு என தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன், ஜூன் 9-
கனடாவில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. இந்த தீயை அணைப்பதற்காக கனடா அரசாங்கம் அண்டை நாடுகளின் உதவியையும் நாடி உள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக அண்டை நாடான அமெரிக்காவிலும் பல இடங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு முகமூடி அணிந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காற்றின் தரம் குறித்து அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அளவீடு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டது. இதில் நியூயார்க், பென்சில்வேனியா உள்பட முக்கிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு 400-ஐ தாண்டியதாக பதிவாகி உள்ளது. இந்த அளவு 300-ஐ தாண்டினாலே ஆபத்து என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காத்மாண்டு,மே 6-
 நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், டென்சி ஷெர்பா 1999 என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எவரெஸ்ட் மலையேற்ற சாகச பயண வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோவில், எவரெஸ்ட் சிகரம் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பதை அம்பலப்படுத்தி உள்ளார். வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இங்கு மலையேற்ற குழுவினர் கூடாரங்கள் அமைத்து தங்கி சென்று உள்ளனர். இதுபோன்ற மோசமான முகாமை நான் பார்க்கவில்லை. ஏராளமான கூடாரங்களை விட்டுச் சென்றுள்ளனர். காலியான ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிதறிக் கிடக்கின்றன. கோப்பைகள், காகிதங்கள், பிளாஸ்டிக் என குப்பைக்கிடங்காக காட்சியளிக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்கள் குப்பைகளை வீசி செல்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

எவரெஸ்டில் குப்பைகளை வீசி செல்வோர் மீது நேபாள அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் லூக் போய்ஸ்நார்ட் தலைமையில் 10 மலையேற்ற வீரர்கள் அண்மையில் எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே 12 மைல் தொலைவில் உள்ள பகுதிகளில் 3.7 டன் குப்பைகளை அகற்றினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “எவரெஸ்ட் பகுதிகளில் குவியும் குப்பைகளில் 45 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும். இமயமலையில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.

 

காபூல், ஜூன் 6-
 ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி பாக்ஸ் நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், அந்த மாகாண கல்வி துறை இயக்குநர் முகமது ரஹ்மானி கூறும்போது, நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும் மற்றும் நஸ்வான்-இ-பைசாபாத் பள்ளியில் 17 குழந்தைகளும் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டனர்.

இந்த இரு பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகே உள்ளன. இந்த இரு பள்ளிகளை இலக்காக கொண்டு இந்த சம்பவம் நடந்து உள்ளது. நாங்கள் அனைத்து மாணவிகளையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறியுள்ளார்.

கல்வி துறை விசாரணையை தொடங்கி நடத்தி உள்ளது. இதில், 3-வது நபருக்கு பணம் கொடுத்து கொடூர தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டு உள்ளனர் என தெரிகிறது என ரஹ்மானி கூறியுள்ளார்.

எனினும், மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை என பாக்ஸ் நியூஸ் தெரிவிக்கின்றது. அண்டை நாடான ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளி மாணவிகளை இலக்காக கொண்டு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் இதனுடன் நினைவு கூரப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கான மாணவிகள் பாதிக்கப்பட்டனர். எனினும், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யாரென்ற விவரங்களை பற்றிய எந்தவித தகவலும் வெளிவரவில்லை. எந்த வகை ரசாயனம், தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரிய வரவில்லை.

ஸ்டாக்ஹோம், ஜூன் 5

 உடலுறவுக்கும் விளையாட்டுக்கும் தொடர்பு உள்ளதா? பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே பதில். ஆனால் தொடர்பு இருப்பதாக ஸ்வீடன் தெளிவுபடுத்துகிறது.

மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.


இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று, சுவீடனில் தற்போது 'உடலுறவு' என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.

இந்த சாம்பியன்ஷிப் பல வாரங்கள் நீடிக்கும் மற்றும் பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் போட்டியிட வேண்டும். போட்டியில் 16 பிரிவுகள் உள்ளன. போட்டியாளர்கள் பொதுமக்கள் மற்றும் ஐந்து நடுவர் குழு அளித்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும் மற்றும் பங்கேற்பாளர்கள் முன்னேற போதுமான புள்ளிகளைப் பெற வேண்டும். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பாலியல் சார்புகளும் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியின் போது மிகவும் சுறுசுறுப்பான ஜோடிகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். இது குறித்து ஸ்வீடிஷ் பெடரேஷன் ஆப் செக்ஸ் தலைவர் டிராகன் பிராட்டிச் கூறியதாவது:- உடலுறவை ஒரு விளையாட்டாக மாற்றுவது அவசியம், இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உற்சாகப்படுத்துகிறது. மேலும் இளைஞர்கள் பாதுகாப்பான மற்றும் மாறுபட்ட பாலியல் முறைகளை பயிற்சி செய்ய அனுமதிக்கிறது, எனவே இது போன்ற போட்டிகள் காலத்தின் தேவை என கூறினார். இந்த விளையாட்டில் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் பங்கேற்பாளரின் மகிழ்ச்சி நேரடியாக மதிப்பெண்ணை பாதிக்கிறது. ஸ்வீடிஷ் செக்ஸ் பெடரேஷன் செக்ஸ் ஒரு விளையாட்டாக படைப்பாற்றல், வலுவான உணர்ச்சிகள், கற்பனை, உடல் தகுதி, சகிப்புத்தன்மை மற்றும் செயல்திறன் தேவை என்பதை அங்கீகரிக்கிறது. இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி. இதுவரை சுமார் இருபது பேர் சாம்பியன்ஷிப்பிற்காக பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொகதிசு, சோமாலியாவில் பாதுகாப்புப் படையினருக்கும், அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகதிசுவிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் பாதுகாப்புப் படை தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர். முன்னதாக அல்-ஷபாப் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகளை சோமாலியா அரசு தீவிரமாக நம்பி இருந்தது. இந்த நிலையில் டிரம்ப் ஆட்சியில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து உகாண்டா ராணுவத்தினர் அல்-ஷபாப் பயங்கரவாதிகளை ஒடுக்க சோமாலியாவுக்கு உதவிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாக்ஹோம், ஜூன் 4-
உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று, சுவீடனில் தற்போது 'உடலுறவு' என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.

இந்தப் போட்டி வருகிற ஜூன் 8-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும், பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த போட்டியை நடத்த 'சுவீடன் செக்ஸ் பெடரேஷன்' ஏற்பாடு செய்துள்ளது. போட்டியில் 70 சதவீதம் வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், நடுவர்கள் 30 சதவீதம் வாக்குகளை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

வாஷிங்டன், ஜூன் 3-

நாம் விரைவில் விழித்துக் கொள்ளாவிட்டால், பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பூமி ஆணையம் நடத்திய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

40 முன்னணி சர்வதேச இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளைக் கொண்ட எர்த் கமிஷன் குழு பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

அதிகப்படியான வளங்கள் சுரண்டல், அலட்சியம், பல சுயநலக் குற்றங்களால் பூமியை நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

மனித ஆதிக்கம் பூமியின் முக்கிய அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை படிப்படியாக சீர்குலைத்து வருகிறது. எதிர்கால சந்ததியினர் மற்றும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நாம் பெரும் ஆபத்தில் ஆழ்த்துகிறோம்.

புவி வெப்பமடைதல், வறட்சி, கடும் வெள்ளம் போன்ற சீற்றங்களால் பூமியின் ஆக்கிரமிப்புகளை நாம் கவனிக்கவில்லை என்றால் நிலைமை கைமீற அதிக காலம் எடுக்காது. ஆய்வின் ஒரு பகுதியாக, சமநிலை முற்றிலுமாக சீர்குலைந்து மிகவும் சிக்கலாக மாறிய பல பகுதிகளை ஆய்வுக் குழு கண்டறிந்து உள்ளது. இதனை ஹாட்ஸ்பாட் என அழைக்கிறார்கள். 

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு கண்டத்திலும் இதுபோன்ற ஹாட்ஸ்பாட்கள் இருப்பது கவலையளிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் பல பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைக்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஆசியாவில் கிரையோஸ்பியர் மலை விரைவான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதில் தொடங்கி, நடக்கக்கூடாத அனைத்து எதிர்மறை விளைவுகளும் அபாயகரமான வேகத்தில் நடந்து வருகின்றன. இதன் விளைவாக, முழு பிராந்தியமும் மிக விரைவில் சமூக மற்றும் பொருளாதார எழுச்சிகளை சந்திக்கும்" என்று இணை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஏபி எச்சரித்து உள்ளார். 

நில பாதுகாப்பு தொடர்பாக சுமார் 8 வகையான குறிகாட்டிகள் முக்கியமானதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருதுகின்றனர். புவி ஆணையத்தின் ஆய்வில் 7 குறியீடுகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை தாண்டி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கீவ்,ஜூன்.02-

நேட்டோ அமைப்போடு சேர விரும்பும் உக்ரைனுக்கு எதிராக ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி 15 மாதங்களாக நீடித்து வருகிறது. நவீன ராணுவ தளவாடங்கள், வான்வெளி தாக்குதல், கனரக பீரங்கி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ரஷியா உக்ரைனை அச்சுறுத்தி வந்தது. 

இந்தநிலையில் ராணுவவீரர்கள் பலர் போரில் இறந்த காரணத்தினால் இருநாடுகளிலும் களவீரர்கள் தட்டுப்பாடு நிலவியது.

இதன் அடுத்த கட்டமாக தற்போது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் உக்ரைன் தலைநகர் கீவில் 17 முறை டிரோன் தாக்குதலில் ரஷியா ஈடுபட்டது. ரஷியாவின் வான்வெளி ஆயுதங்களை இடைமறித்து தாக்கக்கூடிய நவீன வான்பாதுகாப்பு தளவாடங்களை உக்ரைன் ராணுவம் கொண்டுள்ளது. இடைமறிப்பின் போது வெடித்து சிதறும் டிரோன்களில் உதிரி பாகங்களில் சிக்கி பொதுமக்கள் இறந்து வருகிறார்கள்.

நேற்று கீவ் நகரில் ரஷிய ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் இறந்தனர். இதனால் கீவ் நகரில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்,ஜூன்.02-
சிங்கப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்த விரும்பியது. அதன்படி இரவு உணவுடன் கூடிய கலைநிகழ்ச்சி ஒன்றை அது ஏற்பாடு செய்தது. 

அதில் டெலிவிஷன் தொடர் பாணியில் ஒரு விளையாட்டு அரங்கை தயார் செய்து ஊழியர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தது. அதில் பணமூட்டை அடங்கிய ராட்சத பலூனை அரங்கின் நடுவே கட்டி தொங்கவிடப்பட்டது. சக ஊழியர்களுடன் போட்டியிட்டு யார் அந்த பலூனை பறிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.

இதில் அந்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் செல்வம் ஆறுமுகம் (வயது 42) என்பவர் ராட்சத பலூனை கைப்பற்றி வெற்றி பெற்றார். தமிழரான இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வெற்றி பெற்ற ஆறுமுகத்திற்கு கூடுதல் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தன் ஊழியர்களுக்கு விலையுயர்ந்த கைக்கெடிகாரம் உள்பட பல பரிசு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியது நினைவுகூரத்தக்கது.

சிட்னி, ஜூன் 1-
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார். 

இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மே 31ஆம் தேதி அர்னால்டு LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பிரெஞ்சு வியாபாரியான 74 வயது பெர்னார்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே கடும் போட்டி நிலவி வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார். லூயிஸ் விட்டன், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவியவர் அர்னால்ட். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. 

ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது. மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். 

ஆஸ்டினை சேர்ந்த எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

பீஜிங், ஜூன் 1-
தென் சீன கடல், தைவான் போன்ற சர்ச்சைக்குரிய பிராந்தியங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இது சமீப காலமாக மோசமான சூழலை நோக்கி சென்று வருகிறது.

இதைப்போல உக்ரைன் போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் சீனாவை பகைத்து வருகின்றன. உக்ரைனில் இருந்து ரஷியாவை வெளியேறுமாறு சீனா அறிவுறுத்தாவிடில், சீனாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான உறவு மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனாவின் தேசிய பாதுகாப்பு கமிஷன் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதை அதிபர் ஜின்பிங் தலைமையேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசும்போது, சீனாவுக்கு பாதுகாப்பு சவால் அதிகரிப்பதாகவும், எனவே எந்த சூழலையும் சந்திக்க தயாராக இருக்குமாறும் பாதுகாப்பு படையினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.


தேசிய பாதுகாப்பு அமைப்பையும், அதன் திறனையும் நவீனமயமாக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் உண்மையான போர் மற்றும் நடைமுறை சிக்கல்களை கையாளுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று ஜின்பிங் கூறினார்.

மாஸ்கோ, மே 31-
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 15 மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் வழங்குகின்றன. இதன் மூலம் உக்ரைனும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷியா வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளும் வீசப்பட்டன. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமான டிரோன்களை ரஷியா பயன்படுத்தியது.

இந்த தாக்குதலில் உக்ரைனின் ஹோலோசிவ் நகரில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பிடித்தது. இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் கட்டிடம் தீப்பிடித்ததில் உடல் கருகி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதற்கிடையே இடைமறித்து தாக்கப்பட்ட டிரோன்கள் கீழே விழுந்ததில் பெச்செர்ஸ்கி நகரில் 3 கார்கள் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ராணுவமும் ரஷியா மீது டிரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மாகாண கவர்னர் ஆண்ட்ரே வோரோபியோவ் தெரிவித்தார். இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஆண்ட்ரே கூறினார்.

பீஜிங், மே 31-
ரஷியா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். இதற்காக விண்வெளி துறையில் சீனா கோடிக்கணக்கில் முதலீடு செய்து உள்ளது.

அந்தவகையில் 400 கி.மீ. உயரத்தில் உள்ள தனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்தது. அதன்படி சீனாவின் ஜியுகுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை ஷென்சோ-16 என்ற செயற்கை கோள் அனுப்பப்பட்டது. இது சீனாவின் 4-வது மனித விண்வெளி பயணம் ஆகும். ஆனால் இந்த முறை முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

திரிபோலி, மே 31-
லிபியா நாட்டில் 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை மற்றும் மோதல் போக்கும் காணப்பட்டது. இதனால், சண்டை, உள்நாட்டு குழப்பம் என்ற சூழலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி கொண்டது.

ஈராக் மற்றும் சிரியாவில் அடித்தளம் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு லிபியாவிலும் வளர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, 2015-ம் ஆண்டு திரிபோலி நகரில் கொரிந்தியா ஓட்டலில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த படுகொலை பற்றி லிபியாவில் மிஸ்ரதா நகரில் உள்ள கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில், 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுதவிர, ஒரு நபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 6 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு முன்பே, 3 பேர் உயிரிழந்து விட்டனர். 3 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

டோக்கியோ, மே 31-
கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது. இது தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் ராணுவ உளவு முயற்சியின் ஒருபகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப உள்ளதாக வடகொரிய அரசாங்கம் கூறியது. ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்திருந்தது. மேலும் தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்த செயற்கைகோள் அல்லது விண்வெளி குப்பைகள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருதார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு, எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் அரசாங்கம் டுவீட் செய்தது.

இந்த சூழலில் வட கொரியா இன்று (புதன்கிழமை) தெற்கு நோக்கி விண்வெளி செயற்கைக்கோளை ஏவியது என்றும், தென் கொரியா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் அவசர எச்சரிக்கைகள் மற்றும் சுருக்கமான வெளியேற்ற எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டது என்றும் தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

பியாங்யாங், 
கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியாக  வடகொரியா ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது.

 இது தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் ராணுவ உளவு முயற்சியின் ஒருபகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப உள்ளதாக வடகொரிய அரசாங்கம் கூறியது.

ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்துள்ளது. எனவே தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்த செயற்கைகோள் அல்லது விண்வெளி குப்பைகள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

லிமா,மே.30-
 புவி வெப்பமாதல் காரணமாக மத்திய பசிபிக் பெருங்கடலில் ஒழுங்கற்ற காலநிலை நிலவி ஏற்படுவது எல்நினோ விளைவு என அழைக்கப்படுகிறது. 

அதன்படி தென் அமெரிக்க நாடான பெருவில் எல்நினோ விளைவு காரணமாக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இதனை சமாளிக்கும் திறன் அரசின் பல துறைகளுக்கு இல்லை என கூறப்படுகிறது. எனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாகாணங்களில் உள்ள 131 மாவட்டங்களில் அடுத்த 60 நாட்களுக்கு அவசர நிலையை அறிவித்து பெரு அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.

நியூயார்க், மே.30-

சூரிய மண்டலத்தில் நாம் வாழும் பூமியை சுற்றி பல குறுங்கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயணம், பாதை உள்ளிட்டவற்றை பற்றி அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், 100 அடி நீளமுள்ள குறுங்கோள் ஒன்று பூமிக்கு மிக நெருக்கத்தில் இன்று வரக்கூடும் என நாசா தெரிவித்து உள்ளது. இதேபோன்று பூமியை நெருங்கி வரும் மொத்தம் 5 குறுங்கோள்களின் பட்டியலை நாசா வெளியிட்டு உள்ளது.

அவற்றில் 2023 JZ4 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, ஒரு விமானம் அளவுக்கு பெரியது. 100 அடி நீளத்திற்கு, பூமியை 14.3 லட்சம் மைல் தொலைவில் இன்று நெருங்கி செல்கிறது. அப்போது அதன் வேகம் மணிக்கு 57,885 கி.மீ. ஆக இருக்கும்.

2021 KO2 என பெயரிடப்பட்ட குறுங்கோள், 28 அடி நீளத்திற்கு, பஸ் அளவுக்கு பெரியது. இது 37.5 லட்சம் மைல் தொலைவில் இன்று பூமியை நெருங்குகிறது. அப்போது மணிக்கு 50,215 கி.மீ. வேகத்தில் அது பயணிக்கும்.

2023 KV3 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, பூமியை 29.6 லட்சம் மைல் தொலைவில் இன்று நெருங்கி வருகிறது. இதேபோன்று, 2023 KV2 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, ஒரு பஸ் அளவுக்கு பெரியது. 73 அடி நீளத்திற்கு, 15.8 லட்சம் மைல் தொலைவில் பூமியை இன்று நெருங்கி செல்கிறது. 2023 KU2 என பெயரிடப்பட்ட குறுங்கோள், ஒரு பஸ் அளவுக்கு பெரிய, 36 அடி நீளம் கொண்டது. இது பூமியை 6.75 லட்சம் மைல் தொலைவில் நெருங்கும்போது அதன் வேகம் மணிக்கு 52,800 கி.மீ. ஆக இருக்கும்.

பெய்ஜிங், மே.29-

 சீனாவில் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளை பரப்புதல், பணமோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் அரசாங்கத்துக்கு சென்றன.
 
 அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனையை சீன அரசாங்கம் மேற்கொண்டது. இதில் சினா, வெய்போ, வீசாட் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் தவறான பதிவுகளை பதிவிட்ட சுமார் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை மூடி உள்ளதாக அந்த நாட்டின் இணையதள விவகார ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 மேலும் டிக்-டாக் செயலியின் சீன பதிப்பான டூயினில் சுமார் 9 லட்சம் கணக்குகள் தவறான தகவல்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம் ரெட் ரிவர் நகரில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இச்சம்பவத்தில்  மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில்  பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரபலமாக நடைபெற்று வந்த இந்த மோட்டார் சைக்கில் பேரணியில் ஏற்ப்பட்ட இச்சம்பவம் குறித்து அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர் . நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 28 ஆயிரம் பேர் தங்களது மோட்டார் சைக்கிள்களுடன் இப்பேரணியில்  கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சியோல், மே.29-

தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு பறந்த  விமானத்தின் கதவை ஆடவர் ஒருவர் திறந்ததில் அதில் பயணித்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த ஆடவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இதில் அந்த ஆடவர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார். எனினும் விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான், மே 28-
சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. 

அதன்படி தைவானுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த சீனா இதுபோன்ற செயலில் அமெரிக்கா இனி ஈடுபட்டால் தைவான் மீது படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய்-இங்-வென் கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை அவர் சந்தித்து பேசியது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

அதுமுதல் தைவான் எல்லையில் சீனா அடிக்கடி போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தங்கள் நாட்டு எல்லையில் 33 சீன போர் விமானங்கள் தென்பட்டதாகவும், அந்த போர் விமானங்கள் தைவானின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்து உள்ளது.

அமெரிக்கா, மே 28-
இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக தீபாவளி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்பட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களால் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவில் பெண் எம்.பி. கிரேஸ் மெங் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்கு பல்வேறு எம்.பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது கிரேஸ் மெங் கூறுகையில், `தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ளவும், அதனை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடவும் இந்த சட்டம் வாய்ப்பாக இருக்கும்' என கூறினார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் தீபாவளி பண்டிகைக்கு அதிகாரபூர்வ விடுமுறை அளிக்கும் சட்டத்தை சமீபத்தில் இயற்றிய நிலையில் தற்போது இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பீஜிங், மே 28-
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள டச்செங் பகுதியில் ஒரு பட்டாசு கடை உள்ளது. இங்கு திடீரென தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். படுகாயம் அடைந்த 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிலர் மாயமாகி உள்ளதால் அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் அந்த கடை சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சியோல், மே 27-
தென் கொரியாவின் ஜேஜூ விமான நிலையத்திலிருந்து 194 பயணிகளுடன் இன்று தேயாகு விமான நிலையம் வந்தடைந்த ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ321-200 ரக விமானம் தரை இறங்க தயாராகி கொண்டிருந்தது.

தரையில் இருந்து சுமார் 200மீ உயரத்தில் விமானம் இருந்தபோது, அவசரகால வெளியேற்ற கதவின் அருகே அமர்ந்திருந்த ௩௦ வயது மதிக்கத்தக்க நபர் கதவை திறந்துள்ளார். இதனால் விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். பலருக்கு மூச்சு திடீரென திணறல் ஏற்பட்டது.

பிறகு சரியாக மதியம் 12.40 மணி அளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் 9 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பயணி கதவை திறந்தது குறித்து காரணம் எதுவும் சொல்லப்படாத நிலையில் ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனம் அவசரகால கதவுகளை நிர்வகிப்பதற்கான நெறிமுறைகளை பின்பற்றியதா என்பதை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பேஜிங்,மே 26.
சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் வியாபித்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின.

பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. வைரஸ் பரவலால் பொருளாதார அளவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது. தற்போது வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து விட்டது.

மக்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டனர். உலக சுகாதார அமைப்பும் கொரோனா அவசர நிலை அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்றும் உலக சுகாதர அமைப்பு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், சீனாவில் மீண்டும் வைரஸ் பரவல் மெல்ல தலை தூக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஒமிக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி வைரஸ் பரவலால் சீனாவில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே தொற்று பாதிப்பு சற்று உயரத் தொடங்கியிருப்பதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. நடப்பு மாத இறுதியில் ஒரு வாரத்தில் 4 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


இதேபோல் ஜூன் மாத இறுதியில் இந்த கொரோனா அலை உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஏற்படும் மிகப்பெரும் அலையாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சிட்னி, மே 26-
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் பாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார். பொதுவாகவே பெண்களுக்கு பார்பி பொம்மைகள் விருப்பமான ஒன்றுதான். தங்களது வீடுகளில் விதவிதமான நிறத்தில், விதவிதமான ஆடை அணிந்த பார்பி பொம்மைகளை வாங்கி வைப்பதுடன் அவைகளுடன் விளையாடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டவர்களும் உண்டு.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஃபாரஸ்ட். இவருக்கு வயது 25. இவர் தான் பார்பி பொம்மை போல் மாறுவதற்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதற்காக தனது மார்பகத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

மேலும், கை வயிறு முதுகு தொடை கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை மேற்கொண்டுள்தோடு, பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் இருபாலராலும் நான் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், அதே நேரம் தன்னுடைய தன்னம்பிக்கை அளவு உயர்ந்துள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலன் பாடோர், மே 26-
கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சுக்பாதர் மற்றும் கென்டி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பெய்த கனமழையில் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் மின்சாரம் இல்லாததால் பல நகரங்கள் இருளில் மூழ்கின. இதற்கிடையே கால்நடை மேய்க்க சென்ற 130-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வந்தது. அதன்பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 125 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 2 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் சுமார் 2.90 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிட்னி, மே.25-
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் உலோகங்கள் உருக்கும் ராட்சத எந்திரங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றை சோதனை செய்துள்ளனர்.

அந்த எந்திரங்களை என்ஜினீயரிங் வல்லுனர்களை கொண்டு ஆராய்ந்தபோது அவற்றின் உள்ளே பாலித்தீன் பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. 

300 கிலோ அளவில் மெத்தபேட்டமைன் என்னும் உயர்ரக போதைப்பொருளை கைப்பற்றி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட இருந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் எந்த நாட்டில் இருந்து வந்தது, கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அமெரிக்கா, மே 23-
தென்அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியாவில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே மீட்பு படையினர் விடுதிக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் அதிகாலை நேரம் மாணவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தீ விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக செத்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாஷிங்டன்,மே.23-

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளிக்கு பல செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அதன் கிளை நிறுவனமான புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தற்போது வணிக குழுவை அனுப்பி உள்ளது.

ஆக்சியம் ஸ்பேஸ்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், அமெரிக்க பைலட் ஜான் ஷோப்னர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

இந்த வணிக குழு கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்தில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆக்சியம் ஸ்பேஸ்-1 கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.

காத்மாண்டு, மே.22-

எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. மலையேறும் பருவத்தில் இது  10ஆவது மரண எண்ணிக்கையாகும்.

இம்முறை 40 வயதான ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உயிரிழந்துள்ளார்.மலையேறும் நடவடிக்கையில் அவர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை எவரெஸ்ட் மலையேறும் நடவடிக்கையின் போதும் 5 மரண சம்பவங்கள் பதிவாகிறது.2019ஆம் ஆண்டு 11 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 4 பேர் கூட்ட நெரிசலில் இறந்துள்ளனர்.

அவ்வகையில் ஒரு துயரச்சம்பவமாக இம்முறை மலேசியாவைச் சேர்ந்த அவாங் அஸ்கந்தர் அம்புவான் யாக்கோப் மரணமடைந்தார்.

அதே வேளையில் அங்கு  முஹம்மத் ஹவாரி ஹஷிம் எனும் மலேசியர் காணாமல் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்ரிட், மே.22-
ஸபெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள காட்டில் திடீரென தீப்பிடித்தது. அங்கு பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக தீ மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதனால் காடுகளை சுற்றியுள்ள கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே தீயணைப்பு படையினர் அந்த காட்டுக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 8 ஆயிரத்து 500 எக்டேர் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளதாகவும், தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஷிங்டன், மே 22.
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 89 லட்சத்து 82 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 29 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 29 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 80 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

காத்மாண்டு, மே.22-

இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர்(43) தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் உச்சத்தை எட்டினார்.

நேபாளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார். 

கடந்த 2010-ம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

2017ம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால், 2018-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார். பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ, மே 21.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் இன்று 451வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அதேவேளை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் போருக்கு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் இந்தியா உள்பட சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெனல்ஸ்கியும் கலந்துகொண்டார். அவர் ஜி7 நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். அதன் பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு கடந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின் போது ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி கூறுகையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மற்றும் தனிப்பட்ட முறையில் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த மோதலை அரசியல், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இது மனிதாபிமானம், மனித மதிப்பு தொட்ர்பான பிரச்சினையாக பார்க்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பேசியுள்ளோம். நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் நேருக்கு நேர் சந்தித்துள்ளோம். உக்ரைன் போர் ஒட்டுமொத்த உலகத்திற்கும் பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகத்திலும் பல்வேறு பாதிப்புகளை போர் ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

மாஸ்கோ, மே 21-
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. கடந்த ஒராண்டாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைன் ராணுவம் ரஷியாவின் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போரில் சர்வதேச நாடுகள் உக்ரைன் அரசுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

அதே சமயம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. கடந்த வெள்ளியன்று மேலும் நூற்றுக்கணக்கான ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழைய ரஷிய அரசு தடை விதித்துள்ளது.

மாஸ்கோ, மே 21-
ரஷியாவின் வெளியுறவு துறை துணை மந்திரி அலெக்சாண்டர் கிரஷ்கோ அந்நாட்டின் 31-வது வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான கவுன்சில் கூட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

அப்போது, உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறும்போது, மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக போர் சூழலை அதிகரிக்கும் வகையிலான நிலைப்பாட்டை எடுக்கும் நிகழ்வை நாம் காண முடிகின்றது.

இதனால், அவர்களுக்கு பெரிய அளவிலான ஆபத்துகள் ஏற்பட கூடும். நாங்கள் திட்டமிடும்போது, இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படும். எங்களது இலக்குகளை அடைய அனைத்து தேவையான விசயங்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சட்டவிரோத போருக்கு எதிராக ஒன்றாக நிற்போம் என ஜி-7 நாடுகள் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு, மே 21-
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது. விடுதலைப்புலிகளுடனான அந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் மாயமாக்கப்பட்டனர்.

இந்த போரின் 14-வது நினைவு தினம் கடந்த 18-ந் தேதி உலகமெங்கும் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் கனடாவில் வாழும் தமிழர்களும் இந்த தினத்தை அனுசரித்தனர்.

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை உள்ளிட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏராளமானோர் மாயமாகினர், காயம் அடைந்தனர், இடம்பெயர்ந்தனர்.

அதனால்தான் மே 18-ந் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

கனடா பிரதமரின் இந்த உரை இலங்கைக்கு கடும் ஆத்திரத்தை கொடுத்து உள்ளது. அவரது இந்த கருத்துகளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்ததுடன், கடும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் இலங்கைக்கான கனடா தூதர் எரிக் வால்ஷுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி வைத்தது. அத்துடன் நேரில் கண்டனத்தையும் பதிவு செய்தது.

கொழும்பு,மே 20-
இலங்கையின் தென்பகுதியில் டோன்ட்ராவை சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து சுற்றி வந்தது. அப்போது, டோன்ட்ராவில் இருந்து 413 கடல் மைல் தொலைவில் ஒரு மீன்பிடி படகு சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்தது. அந்த உள்நாட்டு படகை இலங்கை கடற்படை அதிகாரிகள் இடைமறித்து நிறுத்தி  சோதனை நடத்தினர். 

அதில், 111 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களும், 10 கிலோ கஞ்சாவும் இருந்தன. அவற்றை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றினர். படகில் 6 பேர் இருந்தனர். அவர்களை கைது செய்தனர். 

படகையும், போதைப்பொருட்களையும், கைதான 6 பேரையும் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.280 கோடி ஆகும். இத்துடன், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 760 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ளது.

டோக்கியோ, மே 20-

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் ஜி7 என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே, இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.

அதேவேளை, ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடியும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு மகாத்மா காந்தி உருவ சிலையை திறந்துவைத்தார். ஹிரோஷிமாவில் இன்று காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

காந்தி சிலையை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ளபோது மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹிரோஷிமாவில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை அமைதி பாதைக்கு அழைத்து செல்லும்' என்றார்.

இம்பால்,மே 19.
மணிப்பூரில் ராணுவத்தினரை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெடிமருந்து உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மணிப்பூர் மாநிலத்தில் நாகா- குக்கி இன பழங்குடிகள் மற்றும் மைத்தேயி இன மக்களிடையே அண்மையில் பெரும் மோதல் வெடித்தது. மைத்தேயி இன மக்களை பழங்குடி பட்டியலில்- எஸ்டி பட்டியலில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த மோதல் நிகழ்ந்தது.

இம்மோதல்களால் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. இன வன்முறைகளில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாகினர்.

மணிப்பூர் மாநிலம்- மியான்மர் நாட்டின் எல்லையான மோரே சிறுநகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது மணிப்பூரில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டது. 3 கிலோ வெடி மருந்து, 15 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களுடான இந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் கிழக்கு இம்பாலில் ராணுவத்தை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கர சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

பெல்கிரேட், மே 18-

செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் கடந்த 3ஆம் தேதி 13 வயது பள்ளி மாணவன் தன் சக மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர சம்பவம் அரங்கேறிய மறுநாளே தென்பெல்கிரேடில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 

அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் செர்பியாவை அதிரவைத்தது. இந்தநிலையில் செர்பியாவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுவரை 78 தொடக்கப்பள்ளிகள், 37 உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதைதொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி கூடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, மே 18-

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார்.

பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறும்போது, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. அது போன்ற கோரிக்கையை அதிபரிடம் இலங்கை பொதுஜன பெரமுனா முன் வைக்கவில்லை என்றார்.

வாஷிங்டன்,மே.17-
 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சவுதந்ரா சோப்ரா (வயது 76). இந்தியாவை சேர்ந்த இவர் அங்கு டாக்டராக பணியாற்றிய காலத்தில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் சில மருந்துகளை பலருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த மருந்துகள் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் சில குறிப்பிட்ட மருத்துவ தேவைக்காக மட்டுமே அங்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இவற்றை சட்ட விரோதமாக பலருக்கு பரிந்துரை செய்ததாக சோப்ரா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவர் தனது டாக்டர் லைசென்சை திரும்ப ஒப்படைத்தார்.

இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை சோப்ரா ஒப்புக்கொண்டார். எனவே அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், சுமார் ரூ.8 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

நைரோபி, மே 16-
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என கடந்த மாதம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட தேடலில் இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என துப்பறியும் அதிகாரி சார்லஸ் கமாவ் கூறினார்.

சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்.

சீடர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. இதில் பல அதிர்ச்சிகர விசயங்கள் தெரிய வந்து உள்ளன.

வெலிங்டன், மே 16-
 நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தீ விபத்தில் பலியானோருக்கு பிரதம மந்திரி கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாக்கா, மே.15-

 வங்க கடலில் உருவான 'மோக்கா' புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை சேதப்படுத்தியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புயல் கரையை கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பலத்த சூறாவளி காற்றால் 700 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. 

அங்காரா, மே 13- 
துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமிர்தசரஸ்,மே 13- 

அரபிக்கடலில் கடல்சார் சர்வதேச எல்லையை கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் பாஸ்போர்டு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை அரபிக்கடலில் அடிக்கடி கடக்கின்றனர். அவர்கள் இரு நாடுகளின் அந்தந்த அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறார்கள்.

கடல் எல்லையை கடக்கும்போது பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலையாகியுள்ள இந்திய மீனவர் ஒருவர் கூறும்போது; 5 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டேன். எல்லை தாண்டியதற்காக இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 பேர் பிடிபட்டோம். கடலின் எல்லையை அடையாளம் காண்பது எங்களுக்கு கடினமாக இருந்தது. தற்போது எனது நாட்டில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களில் பலர் இன்னும் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு உதவுங்கள். எங்கள் படகுகளையும் திருப்பித் தர உதவுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மீனவர் கூறினார்.

வாஷிங்டன்,மே.12-

 சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 81 லட்சத்து 20 ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 7 ஆயிரத்து 745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 5 லட்சத்து 39 ஆயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 73 ஆயிரத்து 392 பேர் உயிரிழந்துள்ளனர்.

லாகூர்,மே 11-

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இல்லத்தின் மீது, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் பிரதமரின் மாடல் டவுன் லாகூர் இல்லத்தை அடைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும், பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களிலும் நேற்று இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளனர்.

கேப்டவுன், மே.11-

உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து  நடத்திய ஆய்வில்  கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் 37 வாரத்துக்கு முன்பே பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1.34 கோடி. இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன.

கடந்த 2020-ல் வங்கதேசத்தில் குறை பிரசவம் அதிகபட்ச அளவாக (16.2%) பதிவாகி உள்ளது. மலாவி (14.5%), பாகிஸ்தான் (14.4%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிரீஸ் (11.6%), அமெரிக்கா (10%) ஆகிய அதிக தனிநபர் வருவாய் கொண்ட நாடுகளிலும் குறை பிரசவம் அதிக அளவில் பதிவாகி உள்ளது. 2020-ம் ஆண்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 45% பேர் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

2010 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் போர், பருவநிலை மாற்றம், கொரோனா வைரஸ் மற்றும் விலைவாசி உயர் ஆகிய 4 முக்கிய காரணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்துள்ளன. உதாரணமாக, காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது தெரியவந்துள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த 10-ல் 1 குழந்தை மனித உரிமை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் கர்ப்பிணிகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. 

ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதிக்குள் காணாமல் போன 48 வயது பெண், 5 நாள்களுக்கு லாலி பாப் மிட்டாய்களையும் ஒரு போத்தல் பழரசமும் குடித்து உயிர்வாழ்ந்துள்ளார். 

லில்லியன் இப் என்னும் அந்த பெண் ஏப்ரல் 30ஆம் தேதி விக்டோரியா மாநிலத்தில் ஒரு சிறு காட்டுப் பயணம் மேற்கொண்டார்.

ஒரு இடத்தில் தவறுதலாக அவர் வழிமாறிச் சென்றார். வாகனமும் சேற்றில் சிக்கிக்கொண்டது.
மது குடிக்கும் பழக்கம் இல்லாத லில்லியன் தமது காரில் தன் நண்பருக்கு பரிசாகக் கொடுக்க வைத்திருந்த பழரசத்தைப் பசிக்காகக் குடிக்கத் தொடங்கினார்.

ஐந்து இரவுகள் கடந்த பின்னர் தேடுதல் பணியில் இருந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை லில்லியனைக் கண்டுபிடித்தனர்.

காருக்குள்ளே தனக்கு மரணம் ஏற்பட்டுவிடும் என்று பயந்து கொண்டிருந்ததாக லில்லியன் கூறினார். ஐந்தாவது நாள் தாம் மிகவும் சோர்ந்து சிரமப்பட்டதாக அவர் கூறினார். 
லில்லியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்லாமாபாத்,10 மே.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல ராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் ஐஎஸ்ஐ தலைமையகத்தை குறிவைக்க முயன்றபோது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய பொது ஒலிபரப்பான ரேடியோ பாகிஸ்தானின் கட்டிடம் தீவைக்கப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டன், 

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், டுவிட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் டுவிட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லிமா, மே 9-

தென் அமெரிக்க நாடான பெரு தங்கம் உற்பத்தி செய்வதில் உலகளவில் முதன்மை வகிக்கிறது. அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் காணப்படுகின்றன. அதே சமயம் சுரங்கம் தொடர்பான விபத்துகள் அதிகம் நிகழும் நாடுகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது.

லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் வழக்கம்போல் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து சுமார் 300 அடி ஆழத்துக்கு அடியில் தோண்டி கொண்டிருந்தபோது அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ வேகமாக சுரங்கம் முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் சுரங்கத்தை சுற்றிலும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத், மே 9-

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்த நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையி்ல் வருகிற 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 199 இந்திய மீனவர்களை விடுதலை செய்யப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் கூறி உள்ளது. அதன்படி முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டு பின்னர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

 

 

 

வாஷிங்டன், மே.06-

அமெரிக்காவில் கொரோனா பரவலின்போது, தொற்று ஏற்பட்டவர்கள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டின் எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பும்படி எல்லை படை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

டிரம்ப் அரசில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பைடன் அரசாங்கம் வந்த பின்னர் இந்த விதிகளில் வருகிற 11 ஆம் தேதிக்கு பின்னர், தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்பட்டால், எண்ணற்ற புலம்பெயர்வோர் அமெரிக்காவில் நுழைய கூடிய சாத்தியம் உள்ளது. இதனால், நியூ மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.

இந்த விவகாரம் பைடன் நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, எல்லை வழியே ஏற்கனவே லத்தீன் அமெரிக்கர்கள் அலைகடல் போன்று திரண்டு வருகின்றனர் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெல்கிரேட், மே 5-

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று பிற்பகலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்திய மர்ம நபர், நகரும் வாகனத்தில் இருந்து தானியங்கி ஆயுதத்தால் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னதாக புதன்கிழமை, பெல்கிரேட் தொடக்கப் பள்ளியில் 13 வயது மாணவன் ஒருவன் எட்டு மாணவர்களையும் ஒரு பாதுகாவலரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாஷிங்டன்,மே 5- உக்ரைன் - ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு புதிதாக சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை அறிவித்துள்ளது. ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் ஹோவிட்சர்கள், பீரங்கிக்காக வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கிகாலி, மே 5-

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அரசாங்கம் வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் மேற்கு மற்றும் வடக்கு ருவாண்டாவில் கடந்த 2 நாட்களாக கனத்த மழை  பெய்து வருகிறது. இதனால் வென்சோரி, கேசிசி மலைப்பகுதிகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பல வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

மேலும் அங்குள்ள சேபேயா ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ருட்சிரியோ, ருபாவு, கோரோரெேரா உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஏராளமான வீடுகள் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இதற்கிடையே மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் மாயமானதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ருவாண்டாவின் மேற்கு மாகாண கவர்னர் பிரான்கோயிஸ் ஹபிடெகெகோ தெரிவித்தார்.

சிலாத் எனப்படும் சோம்பல் கரடிகளின் ரோமத்தில் வீரியமிக்க ஆண்டிபயாடிக் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை கரடிகள் மத்திய அமெரிக்காவின் கோஸ்டா ரிகா கடற்பகுதிகளில் அதிகம் கானப்படுகிறது.

இந்த விலங்கின் ரோமத்தை அன்மையில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், அதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆண்டிபயாடிக்குகள் உற்பத்திசெய்யும் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்தனர்.

மருந்துகளுக்கு கட்டுப்படாத நுண்ணுயிர்களான சூப்பர்பக்ஸ், மருத்துவத்துறையில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், இந்த பாக்டீரியாக்கள் அதற்கு தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பென்சிலின் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது போல, சோம்பல் கரடியின் ரோமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாக்டீரியாக்கள், மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

.

கோலாலம்பூர் மே- 1

இன்று காலை  மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில்  picc  மண்டபத்தில் நடக்கவிருக்கும் அனைத்துலக  தொழிலாளர் கொண்டாட்டத்தில்  பிரதமர் டத்தோ ஸ்ரீ  அன்வார்  இப்ராஹிம் கலந்துக்கொள்ள இருக்கும் நிகழ்வு தொடர்பாக தமிழ் லென்ஸ் ஊடகம்  உட்பட பல ஊடகங்களுக்கு  அழைப்பு வந்த போது.. இந்த மாபெரும் நிகழ்ச்சியில்  தொழிலாளர்களின் நலன் காக்க அவர்களின் குறைந்த வருமானம் தொடர்பாக நல்ல செய்தி உள்ளதா என அழைப்பு விடுத்த மனிதவள அமைச்சரின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் புலனத்தில்   தமிழ் லென்ஸ்  கேள்வி எழுப்பியது.

அதற்கு பதில் அளித்த மனிதவள அமைச்சரின் செய்தி பிரிவு அதிகாரி நல்ல செய்தி இருக்கிறது நண்பரே என தெரிவித்து உள்ளார்.

 ஆகையால் இன்று காலை நடக்கவிருக்கும் தொழிலாளர் தின கொண்டாட்ட விழாவில் பிரதமர் மற்றும்  மனிதவள அமைச்சர்  ஒரு இனிப்பான தகவலை தொழிலாளர்களுக்கு கொடுப்பார்கள்

ஆம்ஸ்டர்டாம், ஏப்.30-

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் ஜேக்கப் (வயது 41). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு உதவிடும் நோக்கத்தில் விந்தணுக்களை தானம் செய்து வருகிறார்.

இதனை ஒரு சேவையாகத் தொடங்கிய இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாகப் பின் நாளில் இதையே தொழிலாக மாற்றி விட்டார். நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்பு சட்ட விதிமுறைகளின் படி, விந்தணு தானம் மூலம் ஒரு நபர் 12 மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பிற்கு காரணமாக இருக்கக் கூடாது. அதேசமயம் செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவர் மட்டுமே தந்தையாக இருக்க அனுமதியும் கிடையாது.

நெதர்லாந்து நாட்டில் உள்ள 11 சேர்க்கை கருத்தரிப்பு மையங்கள், மற்ற நாடுகளில் இரண்டு மையங்கள் என 13 மையங்களின் மூலமாக ஜோனாதன் தனது விந்தணுவை தானம் செய்துள்ளார். இந்த தானங்களின் விவரங்களை வெளிப்படுத்தாமல் இதுவரை 600 குழந்தைகள் பிறப்புக்கு இவர் உதவியாக இருந்துள்ளார். இவர் மூலமாகக் கருவுற்றுப் பிரசவித்த ஒரு பெண்மணி இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சடைந்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இனிமேல் ஜோனாதனின் ஜேக்கப் விந்தணுக்களை தானம் செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. ஆனால் இவர், வெளிநாடு தம்பதிகள், உள்நாட்டில் உள்ள தம்பதிகள் என அனைவரையும் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு தனது சேவையைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார் என்பதைக் கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவர் மட்டுமே தந்தை என்றால் இவர் மூலமாக மரபணுக்களின் பரிமாண வளர்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் இருக்க கூடும். ஒரே தந்தையின் கீழ் பல்வேறு நாடுகளில் பிறந்த உடன்பிறப்புகள் உண்மை தெரியாமல் எதிர்காலத்தில் திருமணப் பந்தத்தில் ஈடுபட்டால் சகோதரத்துவம் பாழகை விடும் என்பது வேதனைக்குரியவிஷயமாக பார்க்கப்படுகிறது. பின்னால் தெரிய வந்தால் இவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுவார்கள். இனிமேல் இவர் யாருக்கும் விந்தணு தானம் செய்யக்கூடாது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என நினைத்து அந்த பெண் ஹாக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மற்றொரு தொண்டு நிறுவனமும் ஜோனாதனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கு குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஜோனாதன் ஜேக்கப் யாருக்கும் இனிமேல் விந்தணு தானம் செய்யக்கூடாது. தனது சேவை தொடர்பாக இனிமேல் விளம்பரப்படுத்தவும் கூடாது" என உத்தரவிட்டார். ஒருவேளை நெதர்லாந்து நீதிமன்றத்தின் தடையை அவர் மீறினால் ஒரு லட்சம் யூரோக்கள் செலுத்த நேரிடும். இசைக் கலைஞரான ஜோனாதன் ஜேக்கப் தற்போது  கென்யா நாட்டில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜகார்த்தா,ஏப்.29-

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு சென்ற படகு புளாவ் புருங் என்ற இடத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில்  திடீரென  கவிழ்ந்தது.

 இச்சம்பவத்தில்  படகில் பயணித்த 80-க்கும் மேற்பட்டோர்  கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர்.இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
அதன்பேரில் அவர்கள் மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மற்றொரு படகு மூலம் மீட்டனர்.

ஆனாலும் 11 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் கடலில் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

அந்த படகு 80 பேரை ஏற்றி செல்லும் அளவுக்கு பெரியது இல்லை என்பதும், அதிகமான பாரத்தை ஏற்றி சென்றதாலேயே கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

 

குயின்ஸ்லாந்து, ஏப்.27- ஆஸ்திரேலியாவின்  கெயின்ஸ் நகரில் இருந்து வடக்கு பிரதேசத்தில் உள்ள குரூட் எய்லாண்ட் நகர் நோக்கி செல்லும் விமானத்தில் பயணிகள் சிலர் அடிதடியில் ஈடுபட்டனர்.

அடிதடியில் ஈடுபட்ட பயணிகள் பாட்டிகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில்  விமானத்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அடிதடியில் ஈடுபட்ட 4 பயணிகளை போலீசார் கைது செய்தனர். உள்நோக்கத்துடன் பிறருக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்தல், சொத்துகளுக்கு பாதிப்பு, ஒழுங்கற்ற நடத்தை, வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கீழ் அந்த  நபர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.  

 

தர்மசாலா,ஏப்.27-

64 ஆண்டுகளுக்குப்பிறகு 
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு  மகசேசே விருது வழங்கப்பட்டது.

 திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் உத்வேகமான புனித மதத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது தலாய்லாமாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த 1959-ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.இவர் அப்போது திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து இருந்தார். இதனால் அப்போது இந்த விருதை அவரால் நேரில் பெற முடியவில்லை.

இதைத்தொடர்ந்து 64 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று இந்த விருது அவரிடம் நேரில் வழங்கப்பட்டது. இதற்காக மகசேசே விருது அறக்கட்டளை தலைவர் சுசன்னா, அறங்காவலர் எமிலி அப்ரேரா ஆகியோர் தர்மசாலாவில் உள்ள தலாய்லாமாவின் வீட்டுக்கு நேரில் சென்று இந்த விருதை வழங்கினர்.

தலாய்லாமா அமைதிக்கான நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகள் பெற்றிருந்தாலும், இந்த மகசேசே விருதுதான் அவருக்கு கிடைத்த முதல் சர்வதேச விருது என தலாய்லாமாவின் அலுவலகம் கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்படும் இந்த விருது, ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தைவான், ஏப்.25-

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில்   தயாரிக்கப்படும்  இரண்டு வகையான உடனடி மீ வகையில்  புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாக நேற்று தைபேய் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தைவான் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி மீ- ,க்களில் சோதனைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட இரு உடனடி 'மீ' வகைகளில் புற்றுநோயை உண்டாக்கும்  பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு உடனடி 'மீ'க்களையும் உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மீ வகைகளை தாய்வானில் இறக்குமதி செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அவ்விரு உடனடி 'மீ'க்களையும் இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Recent News