loader
இலங்கை பிரதமருடன் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சந்திப்பு !

இலங்கை பிரதமருடன் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சந்திப்பு !

இலங்கை, மார்ச் 23-

 ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் , இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனை இன்று சந்தித்தார்.  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது. 

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். 

டத்தோ ஸ்ரீ  சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையர் மலேசியாவில் பணிப்புறிவதற்காக  10 ஆயிரம் வேலைவாய்ப்பு வீசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு   அனுமதியை வழங்கியுள்ளார்.  அந்த முயற்சிக்காக 
இலங்கை பிரதமர்,   டத்தோ ஸ்ரீ சரவணனக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார். 

தற்போது இந்த  ஒதுகீட்டினை இலங்கையை சேர்ந்த 1,853 இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

டத்தோ ஸ்ரீ சரவணன் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியில் இருந்து இலங்கையை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் சிறந்த நிர்வாகத்தின் வாயிலாக மிக விரைவாக இலங்கையை  அவர்கள் மீட்டெடுத்தனர். 

ஏனைய  நாடுகள் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் மீண்டெழ கையாண்ட அனுகுமுறைக்கு பாராட்டுக்களையும்  தெரிவித்தனர். 

அத்துடன் இலங்கைக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க  மலேசிய அரசாங்கம் காத்திருப்பதாகவும் 
டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News