loader
பற்றி எரிந்த பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள்: நாடு முழுவதும் பதற்றம்!

பற்றி எரிந்த பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள்: நாடு முழுவதும் பதற்றம்!

இஸ்லாமாபாத்,10 மே.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல ராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் ஐஎஸ்ஐ தலைமையகத்தை குறிவைக்க முயன்றபோது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய பொது ஒலிபரப்பான ரேடியோ பாகிஸ்தானின் கட்டிடம் தீவைக்கப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

leave a reply

Recent News