loader
மோட்டார் சைக்கிள் பேரணியில் துப்பாக்கி சூடு  3 பேர் பலி!

மோட்டார் சைக்கிள் பேரணியில் துப்பாக்கி சூடு 3 பேர் பலி!

வாஷிங்டன், 

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம் ரெட் ரிவர் நகரில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இச்சம்பவத்தில்  மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில்  பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரபலமாக நடைபெற்று வந்த இந்த மோட்டார் சைக்கில் பேரணியில் ஏற்ப்பட்ட இச்சம்பவம் குறித்து அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர் . நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 28 ஆயிரம் பேர் தங்களது மோட்டார் சைக்கிள்களுடன் இப்பேரணியில்  கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

0 Comments

leave a reply

Recent News