loader
பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை.!

பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை.!

அமிர்தசரஸ்,மே 13- 

அரபிக்கடலில் கடல்சார் சர்வதேச எல்லையை கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் பாஸ்போர்டு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை அரபிக்கடலில் அடிக்கடி கடக்கின்றனர். அவர்கள் இரு நாடுகளின் அந்தந்த அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறார்கள்.

கடல் எல்லையை கடக்கும்போது பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலையாகியுள்ள இந்திய மீனவர் ஒருவர் கூறும்போது; 5 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டேன். எல்லை தாண்டியதற்காக இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 பேர் பிடிபட்டோம். கடலின் எல்லையை அடையாளம் காண்பது எங்களுக்கு கடினமாக இருந்தது. தற்போது எனது நாட்டில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களில் பலர் இன்னும் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு உதவுங்கள். எங்கள் படகுகளையும் திருப்பித் தர உதவுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மீனவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News