.
கோலாலம்பூர் மே- 1
இன்று காலை மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் picc மண்டபத்தில் நடக்கவிருக்கும் அனைத்துலக தொழிலாளர் கொண்டாட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துக்கொள்ள இருக்கும் நிகழ்வு தொடர்பாக தமிழ் லென்ஸ் ஊடகம் உட்பட பல ஊடகங்களுக்கு அழைப்பு வந்த போது.. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் தொழிலாளர்களின் நலன் காக்க அவர்களின் குறைந்த வருமானம் தொடர்பாக நல்ல செய்தி உள்ளதா என அழைப்பு விடுத்த மனிதவள அமைச்சரின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் புலனத்தில் தமிழ் லென்ஸ் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் அளித்த மனிதவள அமைச்சரின் செய்தி பிரிவு அதிகாரி நல்ல செய்தி இருக்கிறது நண்பரே என தெரிவித்து உள்ளார்.
ஆகையால் இன்று காலை நடக்கவிருக்கும் தொழிலாளர் தின கொண்டாட்ட விழாவில் பிரதமர் மற்றும் மனிதவள அமைச்சர் ஒரு இனிப்பான தகவலை தொழிலாளர்களுக்கு கொடுப்பார்கள்
0 Comments