loader
காணாமல் போன நீர் மூழ்கிக்கப்பல் வெடித்து ஐவர் மரணம்

காணாமல் போன நீர் மூழ்கிக்கப்பல் வெடித்து ஐவர் மரணம்

வாஷிங்டன், ஜூன்.23-

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கிக் கப்பலில் சென்று காணாமல் போன ஐவர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.

 டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பார்வையிட  சென்ற ஐவர் பயணித்த கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த  ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஐந்து நாள் தேடுதல் பணி முடிவுக்கு வந்ததுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடலுக்கு அடியில் சென்று காணாமல் போன இந்த நீர்மூழ்கி கப்பலை தேடும்படி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அவ்வகையில் அந்த நீர்மூழ்கிக் கப்பல், டைட்டானிக் அருகே வெடித்துச் சிதறியதாக நம்பப்படுவதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே டைட்டானிக் அருகே தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் கொண்டு அந்தக் கப்பல் சேதமடைந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, OCEANGATE EXPEDITIONS நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அதன் பயணம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பை இழந்தது .

இதனால் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. 

இந்த நீர்மூழ்கி கப்பலில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெரும் வர்த்தகர் ஷாஸடா டாவூட் (வயது 48), அவரின் மகன் சுலேமான் (வயது 19), பிரிட்டன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங் ( வயது 58), போல் ஹென்ரி (வயது 77)  மற்றும் ஸ்டோக்டன் ருஷ் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News