காத்மாண்டு, மே.22-
எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. மலையேறும் பருவத்தில் இது 10ஆவது மரண எண்ணிக்கையாகும்.
இம்முறை 40 வயதான ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உயிரிழந்துள்ளார்.மலையேறும் நடவடிக்கையில் அவர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை எவரெஸ்ட் மலையேறும் நடவடிக்கையின் போதும் 5 மரண சம்பவங்கள் பதிவாகிறது.2019ஆம் ஆண்டு 11 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 4 பேர் கூட்ட நெரிசலில் இறந்துள்ளனர்.
அவ்வகையில் ஒரு துயரச்சம்பவமாக இம்முறை மலேசியாவைச் சேர்ந்த அவாங் அஸ்கந்தர் அம்புவான் யாக்கோப் மரணமடைந்தார்.
அதே வேளையில் அங்கு முஹம்மத் ஹவாரி ஹஷிம் எனும் மலேசியர் காணாமல் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments