loader
கிரேப் ஊழியர்கள் 1,000 பேர் பணி நீக்கம்!

கிரேப் ஊழியர்கள் 1,000 பேர் பணி நீக்கம்!

சிங்கப்பூர், ஜூன் 21-
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கிரேப் ஹோல்டிங் நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களில் 11 விழுக்காடு அதாவது 1,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

செலவுகளை குறைப்பதற்கும் தரமான சேவை நீண்ட காலம் தொடர்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அந்தோனி டான் தெரிவித்தார்.

தொற்று நோய் தாக்குதலுக்கு பின்னர் அதிக வேலையாட்கள் பணி நீக்கம் செய்வது இம்முறைதான். வணிக சூழலுக்கு ஏற்ப மறுசீரமைப்பு முயற்சியாக இது உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

2012இல் நிறுவப்பட்ட கிரேப் பயன்பாடு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட எட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விநியோக சேவைகள், பயணம் மற்றும் நிதி சேவைகளை வழங்கிவருகிறது.

தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் அரை மாத சம்பளமும் சினைவு பரிசும் வழங்கப்படும் என் அந்தோனி டான் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News