இஸ்ரேல், அக்.17-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,200-ஐ கடந்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 1400 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீன காசா முனை மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 2808 பேர் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரையில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் அடிப்படையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,266 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலியாகியதாக தகவல் கசிந்துள்ளது.ஹமாஸின் முக்கிய அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல் மசினி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.
0 Comments