சியோல், மே.29-
தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு பறந்த விமானத்தின் கதவை ஆடவர் ஒருவர் திறந்ததில் அதில் பயணித்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த ஆடவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இதில் அந்த ஆடவர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார். எனினும் விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments