வாஷிங்டன், மே.08-
அமெரிக்காவின் டெக்சாஸ் பிரவ்ன்ஸ்வெலி நகரத்தில் உள்ள அகதிகள் முகாம் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தும் இடத்தில் கார் ஒன்று மோதியது.
நேற்று நடந்த இச்சம்பவத்தில் அந்த பேருந்து நிறுத்தும் இடத்தின் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments