loader
ஹமாஸ் இருக்கும் சுரங்கத்தில் கடல்நீரை பாய்ச்ச இஸ்ரேல் அதிரடி நடவடிக்கை!

ஹமாஸ் இருக்கும் சுரங்கத்தில் கடல்நீரை பாய்ச்ச இஸ்ரேல் அதிரடி நடவடிக்கை!

காஸா, டிச.6

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில் கடல்நீரை  பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பம்ப் அமைப்பை இஸ்ரேல் நிறுவியுள்ளதாக அமெரிக்க அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே சுமார் 0.4 கிலோமீட்டர் தொலைவில் குறைந்தது ஐந்து பம்புகளை இஸ்ரேலிய இராணுவம் 

அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த பம்புகளை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான கனமீட்டர் நீரை அனுப்பி  முழு சுரங்கப்பாதையும் 1 வாரத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கடிக்க முடியும்.

அவ்வகையில் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ்  விடுவிக்கப்படுவதற்கு முன்னர், இஸ்ரேல் இந்த பம்பைப் பயன்படுத்துவதை பற்றி பரிசீலிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

 ஹமாஸ் தனது பணயக்கைதிகளை பாதுகாப்பான  சுரங்கங்களில் மறைத்து வைத்திருப்பதாக முன்பு கூறியிருந்ததை வைத்து இந்த அனைத்து பணயக்கைதிகளும் சுரங்கங்களில் இருக்கலாம் என்பது கணிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​இஸ்ரேல் சுரங்கப்பாதையை நாசப்படுத்துவது நியாயமானது என்றும், அதற்கான பல்வேறு வழிகளை ராணுவம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News