loader
காஸா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயார்!

காஸா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயார்!

ஜெருசலேம், அக்.26-

காஸா மீது தரைப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் மேற்கொள்ளவிருக்கும்  நடவடிக்கை குறித்த நேரமோ அல்லது பிற தகவல்களையோ தெரிவிக்க அவர்  மறுத்துவிட்டார்.

ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிக்குள் எப்போது ராணுவம் நுழையும் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசாங்கத்தின் சிறப்புப் போர் அமைச்சரவை முடிவெடுக்கும் என்று அவர் கூறினார்.

நாங்கள் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறோம். எப்போது, ​​எப்படி, எவ்வளவு என்பதை நான் விவரிக்க மாட்டேன். நாங்கள் செய்த பல்வேறு கணக்கீடுகளையும் நான் விரிவாகக் கூறமாட்டேன், அவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களுக்குத் தெரியாது என்று நெதன்யாகு கூறினார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் 1400 பேர் பலியாகினர். அதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களாக காஸா பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளை இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது.

இதனிடையே இந்த தாக்குதலின் வழி 6,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Comments

leave a reply

Recent News