loader
ஹமாஸ் இருக்கும் சுரங்கத்தில் கடல்நீரை பாய்ச்ச தொடங்கிவிட்டது  இஸ்ரேல்!

ஹமாஸ் இருக்கும் சுரங்கத்தில் கடல்நீரை பாய்ச்ச தொடங்கிவிட்டது இஸ்ரேல்!

காஸா, டிச.13-

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில் கடல்நீரை பாய்ச்சும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கிவிட்டது என  அமெரிக்க அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

சுரங்கத்தில் கடல்நீர் பாய்ச்சும் நடவடிக்கை முழுமை அடைய ஒரு சில வாரங்கள் ஆகலாம். எவ்வாறாயினும், இஸ்ரேலிய இராணுவம் இந்த நடவடிக்கை குறித்த மேல் விவரங்கள் எதையும் அறிவிக்க வில்லை. மேலும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூட இது தொடர்பில் பதிலளிக்கவில்லை.

ஹமாஸ் பதுங்கியிருக்கும் அந்த சுரங்கத்தில் பணயக்கைதிகள், போராளிகள் மற்றும் வெடிமருந்துகளும் மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடல் நீரை சுரங்கத்தில் பாய்ச்சுவதினால் காஸாவின் ஏரிகளில் உள்ள நல்ல நீர்கள் பாதிக்கப்படலாம்.

அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே சுமார் 0.4 கிலோமீட்டர் தொலைவில் குறைந்தது ஐந்து பம்புகளை இஸ்ரேலிய இராணுவம் 

அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பம்புகளை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான கனமீட்டர் நீரை அனுப்பி  முழு சுரங்கப்பாதையும் 1 வாரத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கடிக்க முடியும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

0 Comments

leave a reply

Recent News