loader
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா கார் விபத்தில் மரணம்!

லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா கார் விபத்தில் மரணம்!

லண்டன், ஜூலை 3-
லிவர்பூல் அணியின் பிரபல தாக்குதல் ஆட்டக்காரரான டியோகோ ஜோத்தா கார் விபத்தில் சிக்கி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டியோகோ ஜோத்தாவின் மரண
செய்தி உலக அளவிலான கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

28 வயதான டியோகோ ஜோத்தா தனது 26 வயதான தம்பி ஆண்ட்ரே சில்வாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அவர் செலுத்திய கார் A-52 நெடுஞ்சாலையில் உள்ள Palacios de Sanabria என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியது.

இந்த விபத்தில் சிக்கிய
இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தகவலை தெரிவித்தனர். 

மேலும் மருத்துவரகள் அக்காரில் பயணித்த டியோகோ ஜோத்தா மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும்  இறந்ததை உறுதிப்படுத்தினர்.

கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி, தனது நீண்ட காலத் துணைவி ரூட் கார்டோசோவைத் திருமணம் செய்த இரண்டு வாரங்களுக்குள் இந்தத் துயரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டியோகோ ஜோத்தா -  ரூட் கார்டோசோவா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களிடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வேளையில் சமூக ஊடகங்களில் அவரின் உயிரிழப்புக்கு வீரர்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News