loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிரம்பான், ஏப்.20-

4 நாடுகள் பங்கேற்ற ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை இன்று மஇகா துணைத் தலைவரும்,தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்.

மலேசியாவை தவிர்த்து இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் இருந்து வெட்ரன் விளையாட்டாளர்கள் இங்கு ஒன்றுக்கூடி உள்ளனர்.

இந்த ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருக்கும் 2020 கால்பந்து குழுவிற்கு எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்தார்.

2ஆவது ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை மலேசியா ஏற்று நடத்துகிறது.

இப்போட்டி இன்றும் நாளையும் சிரம்பான் பண்டார் ஶ்ரீ  செண்டாயான் ஐஆர்சி அரங்கில் நடைபெறுகிறது.

இந்தியாவில் இருந்து 4 அணிகள், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 1 அணிகளும் கலந்துக்  கொண்டுள்ளன.

மலேசியாவை பிரதிநிதித்து 2020 கிளப் என மொத்தம் 7 அணிகள் கலந்துக் கொண்டுள்ளன என்று அக்கிளப்பின் தலைவர் ஏஎஸ்பி ராஜன் கூறினார்.

இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற பல நிறுவனங்கள், நல்லுள்ளங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளன.

இவ்வேளையில் ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி என்று ராஜன் கூறினார்.

முன்னதாக இந்த கால்பந்துப் போட்டியை மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இன்று தொடக்கி வைத்தார்.

அதே வேளையில் போட்டியை ஏற்பாடு செய்த 2020 கால்பந்து கிளப்பிற்கும் போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர்  ஏப்ரல் - 20

நாட்டில்  புதிய அரசியல் ஜோதிடர் உருவாகி 1 மாதம் கூட நிறைவு பெறாத நிலையில்  அந்த அரசியல் ஜோதிடர் கணித்த கணிப்பு சொதப்பலாகி, இந்த புதிய தொழிலை கைவிடும் அளவில் அந்த ஜோதிடர் இருக்கிறார்.

நான் சொன்னால் எல்லாம் நடக்கும் என பத்திரிக்கையில் விளம்பரம் செய்த அந்த ஜோதிடர்  , யார் பிரதமர், யார் அமைச்சர், யார் கட்சி தலைவர் என அவர் சொன்னால் எல்லாம் நடக்கும்   என்றார்.  இவர் கட்டம்  தான் பார்த்து ஜோதிடம் சொல்கிறாரா ? இல்லை குறுக்கு புத்தி திட்டம் போட்டு ஜோதிடம் சொல்கிறாரா என  தெரியவில்லை , ஆனால் இந்த முறை அவர் சொன்ன ஜோதிடத்தில் மிக பெரிய சொதப்பல் நடந்துள்ளது.

ஜோதிடர் பற்றிய புதிய தகவலும் இப்போது  நமக்கு கிடைத்துள்ளது. நம்ம ஜோசியம் இன்னும் கீழே இறங்கி யார் கவுன்சிலராக வரவேண்டும் என்று எல்லாம் கட்டம் பார்க்கிறாராம்.

தனக்கு கீழே இருந்த பசங்க... அரசியலில் வளர்ச்சி அடைந்து கவுன்சிலர் ஆனதை கூட பொறுத்து கொள்ள முடியாத நம்ம ஜோசியர் , இப்போது அவர்கள் ஜாதகத்தை மாற்ற  திட்டம் - கட்டம் உருட்டுகிறார். ஆனால் எல்லாம் சொதப்பல்.

அடுத்து அடுத்து   இவரது கணிப்பு எல்லாம் சொதப்பல் ஆன நிலையில் இந்த ஜோதிடரின் ஜோசியத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லாமல் போனது , பெரிய பெரியவர்களிடன்  இந்த ஜோதிடர் போட்ட கட்டம்  பலிக்கவில்லை, அவர்கள் இவரை கண்டுகொள்ளவே இல்லை .

அதோடு ஜோதிடர் போட்ட ஒரு கட்டத்தில் அல்லது திட்டத்தில் பாதிப்பு அடைந்த  ஏதோ ஓர் அப்பாவி நம்ம ஜோதிடர்  மீது வழக்கு தொடுத்து  உள்ளதாக தகவல் வருகிறது.  அந்த வழக்கின் முடிவு ஜோதிடரின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் என்கிறார்கள்  .இதனால் மிகுந்த மன  உளைச்சலில் நம்ம  அரசியல் ஜோதிடர்  இருக்கிறார்.

கோலாலம்பூர், ஏப்.19-
நாட்டில் இந்திய சமுயல்தாயத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் முக்கிய பங்காற்றிய மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வரலாறு எழுதப்பட வேண்டுமென மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

அன்றைய காலக்கட்டத்தில் நம் சமுயாத்தில் தமிழ் இளைஞர் மணிமன்றம், மஇகா, மலேசிய திராவிடர் கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியவை. இளைஞர் மணிமன்றத்தில் இணைந்து சேவையாற்றிய மூத்த சேவையாளர்கள் கௌரவிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இன்று மஇகா நேதாஜி மண்டத்தில் கூட்டரசுப் பிரதேச முன்னாள் மலேசிய இளைஞர் மணிமன்ற பேரவையின் ஏற்பாட்டில் மன்றத்தின் மூத்த சேவையாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் இளைஞர் மணிமன்றத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கான உதவிநிதி வழங்கப்பட வேண்டும் என பேரவையின் தலைவரும் ஏற்பாட்டுக் குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, அந்த திட்டத்தை முன்னெடுக்குமாறு அதற்கு முதல் கட்டமாக வெ.50 ஆயிரத்தை வழங்குவதாகும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இன்று நடந்த இந்த விழாவில் மணிமன்றத்தின் மூத்த சேவையாளர்கள் 14 பேருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

கோலாலம்பூர்  ஏப்ரல் -19

சமீபகாலமாக ஜாதி அரசியல் ம.இ.காவில் ஊடுருவி வருவதாகவும் சிலர் ம.இ.கா உயர்மட்ட தலைவர்களிடையே சிண்டு முடித்து விடும் வேலையை செய்வதாக தகவல் வெளிவந்தது.

ம.இ.காவின்  கட்சி தேர்தல் நேரத்தில் தங்களது நாரதர் வேலையை தொடங்கி  டத்தோ டி. மோகன் துணை தலைவருக்கு போட்டி போட வேண்டும் என  ம.இ.காவின் வெளிவட்டார நபர்கள் பேசி கொண்டு வந்தனர்.

இந்த ஆருடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ம.இ.காவின் தேசிய உதவி தலைவர் டத்தோ டி.மோகன் இன்று பதில் அடி கொடுத்தார்.

ம.இ.கா-வில்  நான் நீண்டகாலமாக சேவை செய்து வருகிறேன். என்னை பொறுத்தவரை கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம். டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ,டத்தோ ஸ்ரீ சரவணன் நான்,  எங்கள் மூவருக்கு இடையில் நீண்டகால நட்பு உள்ளது.

வெளியில் ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள், அது அவர்களின் கருத்து. அது என் கருத்தாகாது. என்னை பொறுத்தவரை பதவிக்காக  நான் கட்சியையும் உறவையும் இழக்க மாட்டேன் ,கட்சியைப் பிளவு படுத்தவும்  மாட்டேன்.

நான் இந்த முறையும் எனது உதவி தலைவர் பதவியைத் தற்காக்க போட்டி போடுவேன். மற்றவர்கள் சொல்வது போல் நான்  துணை தலைவர் பதவிக்கு  போட்டி போட ஆயத்தமாக இருப்பது எல்லாம் சுத்த பொய்  என  டத்தோ டி .மோகன் தெரிவித்தார்.


எங்கள் மூவருக்குள்  நல்ல புரிந்துணர்வு உண்டு. எப்போது தலைமைக்கு வரவேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் ,சிலர் சொல்வதை கேட்டு அவசரமான முடிவுகளை எடுக்கும் பழக்கம் எங்களுக்கிடையே இல்லை.

ம.இ.கா இப்போதுதான்   உட்கட்சி சண்டை இல்லாமல்  வலுவாக உள்ளது .  பதவிற்காகஎங்கள் மூவர் மத்தியில்  பிளவு ஒருபோதும் நிலவாது என டத்தோ டி. மோகன் வெளிப்படையாக தெரிவித்தார்.

செய்தி: வெற்றி விக்டர் / இ.எஸ் .காளிதாசன்