loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர்- 9
மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவை எதிர்பார்ப்புகளை  நன்கு கண்டு அறிந்து அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு முறையாக கொண்டு வந்து பல நல்ல திட்டங்கள் உருவாக ஆலோசனை கொடுத்த ஒரு தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது என முன்னாள் பிரதமர் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் தனது முகநூல் வாயிலாக தெரிவித்தார் .

தான் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய வர்த்தகர் பிரச்சினை தொடர்பாக   பல முறை என்னை சந்தித்து பல  திட்ட ஆலோசனைகளை வழங்கினார். ஒரு நல்ல சமுதாய அக்கறை  உடைய தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது என டத்தோ ஸ்ரீ நஜீப் தெரிவித்தார்

கோலாலம்பூர் -9

மைக்கியின் வளர்ச்சிக்கும், இந்திய வர்த்தகர்களின் வளர்ச்சிக்கும் மறைந்த டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என
மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்  தெரிவித்தார்.

மைக்கியின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் இன்று காலை சுமார் 6.00 மணியளவில் காலமானார் என்ற செய்தி மைக்கி  உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது  என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் மிகுந்த துக்கத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.

டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு   மைக்கி இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் ஒரு புகழ்பெற்ற, மதிக்கப்படும் தொழில்முனைவராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

அவர் மைக்கியின் வளர்ச்சிக்கும், மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தக சமூகத்தின் வளர்ச்சிக்கும்  அவர்கள் வலுப்பெறுவதற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கினார்.

தொழில்முனைவோருக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அவரது தலைமைத்துவம், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை என்றும் நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.

அவரது சேவை ஆண்டுகள் முழுவதும், மைக்கியின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் ஒரு முக்கியப் பங்காற்றினார்.

மேலும், வர்த்தக சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பலருக்கு உத்வேகம் அளித்த ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்  தனது இரங்கல் செய்தியில் கூறினார்.

ஷாஆலம், மே 8-
மலேசிய இந்திய இளம் கால்பந்து வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் MISC டச்ட்ரானிக்ஸ் கிளப், 2026 எப்ஏஎம் பிரசிடென்ட் கிண்ண 20 வயதுக்குட்பட்டோர் லீக் தொடரில் ஆறு இந்திய இளம் வீரர்களை இணைத்து களமிறங்கியுள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 11 அணிகள் போட்டியிடும் நிலையில், டச்ட்ரானிக்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி அணியை எதிர்கொண்டது. கடுமையான போட்டியாக அமைந்த இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ-கிக் வாய்ப்பை அணியின் கேப்டன் பிரவினாஷ் திறமையாக கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் கூச்சிங் சிட்டி அணி சமநிலை கோல் அடித்தாலும், பிரவினாஷின் தலைமைத்துவமும் நிதானமான ஆட்டமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
18 வயதான பிரவினாஷ், டச்ட்ரானிக்ஸ் கிளப்பின் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் இளம் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 18 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய அவர், தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது கடின உழைப்பு, தலைமைத்துவ பண்புகள் மற்றும் விளையாட்டு திறனை மதித்து, இந்த சீசனில் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- காளிதாசன் இளங்கோவன்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நமது நாடு உட்பட உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் வரலாற்றை அறிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். தொழிலாளர் வர்க்கம் நிலைத்திருக்கும் வரை தொழிற்சங்கங்களின் அவசியமும் தொடர்கிறது என்பது காலத்தின் நியதி.

இன்றைய சூழலில், தொழிற்சங்கங்களின் தோற்றம், அதன் பின்னணி, அதை உருவாக்கிய முன்னோடிகள் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, மக்கள் தலைவர்களாகப் போற்றப்படும் பி. வீரசேனன் மற்றும் எஸ்.ஏ. கணபதி யார்? அவர்களின் போராட்ட வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கு விளக்கம் வழங்கும் நோக்கில், “வீரசேனன் - மலாயா கணபதி போராட்டமும் வரலாறும் 2.0” என்ற வரலாற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் நாளை முன்னிட்டும், மலாயா கணபதி மற்றும் வீரசேனன் போராட்டவாதிகளின் நினைவுநாளை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த  விழா 09.05.2026 அன்று ஜொகூர், காரைநகர் நட்புறவு மையத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வரலாற்று ஆவணக் கண்காட்சி , சிறப்பு காணொளி வெளியீடு மற்றும்  பேச்சுமன்றமும் நடைபெறும். முக்கிய விருந்தினராக மதிப்பிற்குரிய ரவின்குமார்  கிருஷ்ணசாமி,  ஜொகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு குழுவின் தலைவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவார்.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
 

🗓️ 09.05.2026
⏰ மாலை 6.00 முதல் இரவு 10.00 வரை
📍 காரைநகர் நட்புறவு மையம்

🎯 ஊடக நண்பர்கள் இந்நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

📞 தொடர்புக்கு:
யோகி – 016-5432572
பிரவீன் – 016-7297975
மோகன் – 017-7540597
சங்கத்தமிழன் – 011-17992633

பூச்சோங், மே 3 –
கல்வி அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

இன்று காசிபீல்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் பூச்சோங் நிலையத்தின் “கல்வி யுத்தம்” நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியை கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 1,000க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், இந்திய மாணவர்களுக்கு 2,500 மெட்ரிகுலேசன் இடங்களை ஒதுக்க கல்வி அமைச்சு முன்வர வேண்டும் என ஸ்ரீ முருகன் நிலையம் வலியுறுத்தியது.

இதன் மூலம் கல்வியில் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வின் முடிவில் நன்னெறிக் கல்வியின் தேர்வு முடிகளில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளதை தொடர்ந்து அதனை மறு ஆய்வு செய்ய வேண்டுமென சுரேன் கந்தா கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, நன்னெறிக் கல்வி தேர்வின் முடிவுகள் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 10,000 மாணவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.