loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்


பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25-
தாமான் கனகாபுரம் கம்போங் முனியாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் அம்மன் ஆலயம், இளைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் புதிய உயிர் பெற்றுள்ளது.

சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், நீண்டகாலமாக நடைபெற்று வந்த திருப்பணிகளுக்குப் பிறகு, தற்போது முழுமையாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவை விமரிசையாகக் கொண்டாடியது.

இந்த விழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், இளைஞர்களின் ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது.

ஆலயத் தலைவர் மணிமாறன் முருகேசு கூறுகையில், இவ்விழாவின் வெற்றிக்கு இளைஞர்களின் அயராத முயற்சியே காரணம் எனக் குறிப்பிட்டார். “நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆலயப் பணிகளை, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முடித்து வைத்துள்ளனர்.

அவர்களின் ஒத்துழைப்பே இன்றைய வெற்றியின் அடிப்படை,” என்றார்.

தலைமை குருக்கள் சிவாகம ரத்ன சிவஸ்ரீ பி. யாகேசன் குருக்கள் மற்றும் ஆலய தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சிவஸ்ரீ கனகலிங்க ருத்ரா குருக்கள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், சுற்றுவட்டார மக்களுடன் சேர்ந்து பெருமளவிலான இளைஞர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயம் சமய வழிபாடுகளுக்கு அப்பாற்பட்டு, சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருவது அதன் சிறப்பாகும். இதனை பாராட்டிய ஆலய ஆலோசகர் மற்றும் பத்துமலை ஐயப்ப சுவாமி தேவஸ்தானத் தலைவர் யுவராஜா குருசாமி, இளைஞர்கள் முன்னிலையில் ஆலயம் வளர்ச்சி அடைவது சமூகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.

இந்த கும்பாபிஷேகம், ஒரு ஆலய விழாவைத் தாண்டி, சமூக ஒற்றுமையையும் இளைஞர் சக்தியையும் எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.

கோலாலம்பூர், மார்ச் 25-
ம.இ.காவின் மத்திய செயலவை இன்று நடைப்பெற்ற நிலையில் எல்லாரும் எதிர்பார்த்த வகையில் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் ம.இ.கா எடுக்கவில்லை என்பதே பதில். ஆனால் ம.இ.கா இப்போதைக்கு தேசிய முன்னணியோடு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு ம.இ.கா தற்போது சொல்லியுள்ள காரணம், கடந்த ஆண்டு  நடத்தப்பட்ட ஆண்டு கூட்டத்தில்  ம.இ.கா உறுப்பினர்கள் தேசிய முன்னணியை விட்டு  ம.இ.கா வெளிய  சென்று பெரிக்காத்தானில் இணைய வேண்டும் என தீர்மாணம் எடுத்த நிலையில், இறுதியான முடிவை ம.இ.கா மத்திய செயலவையிடம் அவர்கள்  கொடுத்தனர்.

அந்த தீர்மாணம் எடுக்கப்பட்ட நேரத்தில் பெரிக்காத்தான் தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பதவி வகித்தார். அதன் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், பெரிக்காத்தான்  தலைமைத்துவமும் மாறியுள்ள நிலையில் மீண்டும் கட்சி தொண்டர்களுடன் கலந்து பேச வேண்டிய சூழல் எழுந்துள்ளதால் இப்போதைக்கு ம.இ.கா தேசிய முன்னணி கூட்டணியில் நிலைத்து இருப்பதாக ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.


இதன் அடிப்படையில் இன்று நடந்த மத்திய செயலவையில் எந்த முடிவையும் ம.இ.கா உறுதியாக எடுக்காத நிலையில் ம.இ.காவின்  தலையெழுத்து எதிர்வரும் பொது தேர்தல் சமயத்தில் தான் தெரியவரும்.

போட்டியிடும் தொகுதி பங்கீட்டில் முரன்பாடு வந்தால்தான்  ம.இ.கா எந்த  கூட்டணியோடு கைகோர்க்கும் என்ற விடை தெரிய வரும். அதுவரை  உறுதியான முடிவு கிடைக்காது என்றுதான் கூற வேண்டும்.

கோலாலம்பூர், மார்ச் 25-
அன்று ஆலய கும்பாபிஷேகத்திற்கு சென்று மாலைகளை மட்டும் அணிந்து கொண்ட அரசியல் தலைவர்கள், சென்ற ஆலயங்களின் பதிவுகளை கேட்டிருந்தால் இன்று ஆலய பிரச்சினைகள் எழுந்திருக்காது என புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் தெரிவித்தார்.

அதேபோல் 1960ஆம் ஆண்டுகளில் உருவாகி மலேசிய இந்து சங்கமும் நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களின்  முழுமையான ஆவணங்களை இதுவரை கொண்டிருக்கவில்லை. இன்னமும் இந்து சங்கத்தை நம்புவதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

ஆலய சர்ச்சைகளுக்கு உண்மையான காரணங்களை கண்டறிய தான் சமாதான கூட்டத்தில் பங்கேற்றதாகவும் அதனை விளக்கும் வகையில் இன்று ஊடக சந்திப்பை நடத்தியதாகவும் அவர் சொன்னார்.

நாட்டில் ஆலயம் தொடர்பான சர்ச்சைகள் பரவலாக நடந்தது.

இதற்கு தீர்வு காண வேண்டும் அடிப்படையில் தான்  புத்ராஜெயாவில் ஒரு சமாதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் என அவர் சொன்னார்.

உடனே நான் ஆலயங்கள் உடைத்ததற்கு காரணமானவர்களுடன் கைகுலுக்கி விட்டோம். அவர்களுடன் சாப்பிட்டோம் என பல குற்றச்சாட்டுகள்கள் எழுந்துள்ளது.

ஆனால் அதில் உள்ள உண்மைகள் யாருக்கும் தெரியாது. முதலில் இக்கூட்டம் போலிஸ் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் வேளையில் ஆலய சர்ச்சைகளுக்கு உண்மையிலேயே என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டன் என அவர் மேலும் சொன்னார்.

அக்கூட்டத்தில் யாரும் சமாதானமாக பேசவில்லை. எங்களின் ஆதங்களையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்.

குறிப்பாக ஜம்ரி வினோத், செக்கு சந்திரா உட்பட பலர் பேசுவதும் செய்வதும் இந்துக்களை பாதிக்கிறது என்பதை எடுத்துக் கூறவே நான் அங்கு சென்றேன்.

ஆகையால் சமூக ஊடங்களில் பொய்யான தவறுகளை பரப்ப வேண்டாம். உண்மை என்னவென்று தெரியாமல் பேச வேண்டாம் என்று உமாகாந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கோலாலம்பூர்,மார்ச் 18-

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, உணவகத் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பிரேஸ்மா தலைவர் டத்தோ முகமட் மொசின் தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் தற்போது செலவினச் சுமையை தாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றும், உடனடியாக உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதில்லை என்றாலும், இந்த நிலையை எவ்வளவு நாள் தாங்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என அவர் கூறினார்.

இந்த நிலைக்கு நாங்கள் காரணமல்ல; உலகளாவிய சூழ்நிலைகளே காரணம். எனவே, அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், உணவகங்களில் விலை உயர்வை தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் சில உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இத்துடன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனை சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். 

அதேபோல், பிரதமரையும் சந்திக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராதது மேலும் சிக்கலை அதிகரித்துள்ளதாகவும், உணவகத் துறையை அரசு சாதாரண துறையாக பார்க்கும் போக்கு இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஆனால் உணவகத் துறை நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றாகும் என்றும் டத்தோ முகமட் மொசின் மேலும் குறிப்பிட்டார்.

 

கோலாலம்பூர்,மார்ச் 16-
தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Australian Open Squash Championship 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதற்காக மஇகா விளையாட்டு பிரிவு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இந்த வெற்றி மிகவும் சிறப்புமிக்கதாகும். கடந்த 13 மாதங்களாக எந்தப் போட்டியிலும் பட்டம் பெறாமல் இருந்த நிலையை முறியடித்து, அவர் மீண்டும் சர்வதேச மேடையில் தனது திறமையையும் உறுதியையும் நிரூபித்துள்ளார் என்று விளையாட்டுப் பிரிவின் தலைவர் எண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.

இந்த சாதனை மலேசிய விளையாட்டு உலகிற்கு பெருமை சேர்ப்பதுடன், இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற ஊக்கமளிக்கும் உத்வேகமாகவும் அமைகிறது.

எஸ். சிவசங்கரி தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைப் பெற்று மலேசியாவின் பெயரை உலக விளையாட்டு அரங்கில் உயர்த்துவார் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.