loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், மார்ச் 19 –

இனம் மதம் பாராமல் உதவி தேவைபடுபவர்களுக்கு தக்க சமயத்தில் உதவியளிப்பது நாட்டில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் என மஹிமாவின் தலைவர், மஇகாவின் பொருளாளர், மற்றும் டிஎஸ்கே குழுமத்தின் நிர்வாகத்தினருமான டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்தார்.

 

அந்த வகையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு பி40 பிரிவைச் சொந்தவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மற்றும் இறை நம்பிக்கை கொண்ட ஏழை எளிய மக்களுக்கு நன்கொடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியதாக அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை கோலாலம்பூர் ஜாலான் புத்ரா பகுதியில் உள்ள ஹைட்ராபாத் உணவகத்தில் நோன்பு திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து ஏழை மக்களுக்கு இந்த உதவிகளை டத்தோ சிவகுமார் வழங்கியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வு PERKIM சபா பெர்ஹாட் கூட்டுறவுக் கழகம் மற்றும் மலேசிய இஸ்லாமிய ரவ்தா உதவி அமைப்புகளின் ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்டது.

இது போன்ற உதவித் திட்டங்களை நாம் செய்வதன் வழி அனைத்து சமூகத்தினரிடமும் அன்பு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை உணர்வை வளர்க்க முடியும் என்று அவர் கூறினார்.

எங்களிடம் இருந்து இந்த உதவிகளை பெற்றவர்கள் எங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்ததுடன், ரமலான் மாதத்தில் இத்தகைய உதவிகள் மிகுந்த அர்த்தமுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தனர் என டத்தோ சிவகுமார் பெருமிதம் கொண்டார்.

கேப் கேனவரல், மார்.19-

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர்.

அவர்களை மீட்க சென்ற 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று அதிகாலை புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

 

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'போயிங்' நிறுவனத்தின், முதல் விண்கலமான 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.

இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

தற்பொழுது அந்த இரு வீரர்களும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, நாசா விஞ்ஞானிகளையும், மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

செரம்பான், மார்ச் 18-

செரம்பானில் உள்ள கிங் ஜார்ஜ் வி இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ரேய் ஷாமன் மற்றும் நிக்சன் யாப்

2025 ஆம் ஆண்டுக்கான இளைஞர்களின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தீர்வுகளை முன்வைக்கும் உலகளாவிய

போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இவ்விருவரும்

உலகளவில் சிறந்த 11 அணிகளில் இடம்பிடித்து சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் புதுமைக்கான விருதுகளையும் வென்றுள்ளனர்.

இவர்கள் உருவாக்கிய ENVIROGARD சாதனம், காற்று மாசுபாட்டை கண்காணித்து, தரவுகளை சேகரித்து, பாதுகாப்பு எச்சரிக்கைகளை வழங்கும் ஒரு புதுமையான கண்டுபிடிப்பு ஆகும்.

உலகளவில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் பல உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளதால், இந்தப் பிரச்சினையை தடுக்கும் முன்முயற்சியாக இதை உருவாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் 2022 ஆம் ஆண்டில் F1 in Schools Malaysia போட்டியில் முதல் தடவையாக பங்கேற்று, மூன்றாம் இடம் மற்றும் சிறந்த அணிக்கான ரீதியில் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்பின், பல்வேறு தேசிய & சர்வதேச STEM போட்டிகளில் பங்கேற்று, இந்தோனேசியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்து, கண்டுபிடிப்புகளையும் இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ENVIROGARD உருவாக்கம் 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டு, 2025 ஜனவரியில் முடிக்கப்பட்டதாக ரே ஷாமன் மற்றும் நிக்சன் யாப் ஆகியோர் தெரிவித்தனர்.

நாங்கள் கற்ற கணினி அறிவியல் பாடம் மிகவும் கடினமானது. இருப்பினும் நாங்கள் உற்சாகத்துடன் எங்களின் கண்டுபிடிப்பை முன்னெடுத்தோம் என்று அவர்கள் கூறினர்.

வெற்றியை அறிவித்தபோது, "இந்த வெற்றி எங்களுக்கே எதிர்பாராதது!" என்று ரே ஷாமன் உற்சாகமாக பகிர்ந்துள்ளார். “இந்த போட்டி எங்கள் பள்ளி வாழ்க்கையின் முக்கியமான தருணமாகும். இறுதிநேரம் வரை உழைத்தோம். கடின உழைப்பின் பலன் கிடைத்திருக்கிறது” எனவும் அவர் கூறினார்.

இவ்வேளையில் தங்களின் வெற்றிக்கு பெறும் ஆதரவாக இருந்த எங்களின் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இதனைத்தொடர்ந்து

SPM தேர்வுக்கு பின், தாங்கள் ENVIROGARD சாதனத்தை மேம்படுத்த AI மற்றும் Machine Learning முறை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

மேலும், இருவரும் எதிர்காலத்தில் ஒரு தொழில்முனைவோராக ஆகும் முயற்சியில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வேளையில் இவர்கள் இளைய தலைமுறைக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளனர்: "தோல்வி ஏற்பட்டாலும் முயற்சியை கைவிடாதீர்கள். வெற்றி என்பது கடைசி இலக்காக இருக்க முடியாது; தொடர்ந்து வளர்ச்சியடையுங்கள் என்பதாகும்.

-காளிதாசன் இளங்கோவன்

ஜொகூர் பாரு, மார்ச் 17-

நோன்பு மாதத்தில் சாப்பிட்டதற்காக 21 வயது சீன இளைஞரை ஆடவர் ஒருவர் பல முறை அறைந்துள்ள வீடியோ பரவலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணி அளவில் சம்பந்தப்பட்ட இளைஞரிடமிருந்து புகாரை பெற்றதாகவும், விரைவில் இச்சம்பவம் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பால்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறினார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில்

மாட்ர் ஒன்றில் அமர்ந்து உணவு உண்ணும் வேளையில் அங்கு வந்த மலார்காரர் ஒருவர் அந்த சீன இளைஞரிடம் தனது மதத்தை என்னவென்று கேட்டுள்ளார்.

பின்பு அந்த இளைஞரின் அடையாள அட்டையை (MyKad) காண்பிக்குமாறும் அவர் கேட்டுள்ளார். அச்சமயம் சம்பந்தப்பட்ட இளைஞர் அதை அவரிடம் கொடுக்க மறுத்தபோது அந்த ஆடவர் அவரை இருமுறை கன்னத்தில் அறைந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு X சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது இச்சம்பவம் மக்கள் மத்தியில் புகைந்து வருகிறது.

இளைஞரை அறைந்த அந்த ஆடவரின் நடவடிக்கையை கண்டித்து நிறைய பேர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே போலீஸ் தரப்பில் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 323ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சம் வெ.2,000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என பால்வீர் சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் நிலையத்தை 07-5563122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கோசானி, மார்.17-

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் கோசானி நகரில், 'பல்ஸ்' என்ற இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது.

இதில், நேற்று அந்நாட்டின் பிரபல ஹிப் ஹாப் இசைக்குழுவான டி.என்.கே., குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது.

அதை காண கேளிக்கை விடுதியில் 1,500க்கும் மேற்பட்டோர் கூடினர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

அதிகாலை 3:00 மணியளவில் இசை நிகழ்ச்சி நடந்த மேடையில், கூட்டத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில் பைரோடெக்னிக்ஸ் எனப்படும் நீண்ட நேரம் எரியும் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டன

அதிலிருந்து விழுந்த தீப்பொறிகளால் அரங்கத்தில் தீ பிடித்தது.

இதை கவனித்த இசைக்குழுவினர், அனைவரையும் வேகமாக வெளியேறும்படி மைக்கில் அறிவித்தனர்.

இருப்பினும் மளமளவென பரவிய தீயால் கட்டடத்திற்குள் கரும்புகை சூழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, 60 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்