loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர்:

 

14 வயதான கெசியா நிஷா என்ற மாணவியின் மரணம் தொடர்பான சம்பவத்தில்எழுந்துள்ள துன்புறுத்தல் மற்றும் இனவாதக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையானவிசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர்யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

 

இவ்விவகாரம் தொடர்பாக முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை என்றும், உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தீர்மானிக்க அரச மலேசியக் காவல்துறை (PDRM) பாரபட்சமின்றி முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

 

துன்புறுத்தல், அவமதிப்பு அல்லது இனவாதக் கூறுகள் தொடர்பாக முன்வைக்கப்படும்ஒவ்வொரு குற்றச்சாட்டும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றம்நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு கடுமையானநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

“துன்புறுத்தல் வேடிக்கை அல்ல. இனவாதமும் வேடிக்கை அல்ல. எந்தவொரு குழந்தையும்தனது பெயர், நிறம், மொழி, மதம் அல்லது இனப் பின்னணி காரணமாகஅவமதிக்கப்படவோ, துன்புறுத்தப்படவோ கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

 

குழந்தைகள் இனவாதத்தைக் கொண்டு பிறப்பதில்லை என்றும், அவர்கள்பெரியவர்களிடமிருந்து கேட்டு, பார்த்து, அதனைப் பின்பற்றுகின்றனர் என்றும் கூறியயுனேஸ்வரன், பெற்றோர், குடும்பத்தினர், ஆசிரியர்கள், சமூகத்தினர், அரசியல் தலைவர்கள்மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்கள் என அனைவரும் இவ்விடயத்தில் பொறுப்புடன்செயல்பட வேண்டும் என்றார்.

 

பள்ளிகள் கல்வியை வழங்கும் இடமாக மட்டுமின்றி, தேசிய ஒற்றுமையை உருவாக்கும்முதல் தளமாகவும் இருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் அச்சமின்றி தங்களதுபிரச்சனைகளைத் தெரிவிக்கவும், துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்கவும் பாதுகாப்பானசூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

“விசாரணையின் முழுமையான உண்மை இன்னும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவிடயத்தில் நாம் அனைவரும் உடன்பட முடியும்; எந்தவொரு குழந்தையும் தான் யார்என்பதற்காக பள்ளிக்குச் செல்ல அஞ்சக்கூடாது,” என்று யுனேஸ்வரன் ராமராஜ்வலியுறுத்தினார்.

 

மறைந்த கெசியா நிஷாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்த அவர், பள்ளிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், துன்புறுத்தல் தடுக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளின் வாழ்க்கையில்இனவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், ஆக.19 — 

கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் அமைந்துள்ளகோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 23ஆம் தேதிஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.

 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சமயநிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கும்பாபிஷேக நாளில் அதிகளவிலானபக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த காலங்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களைக் காட்டிலும் இம்முறை பக்தர்களின்வருகை அதிகமாக இருக்கும் என்று டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும்சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

குறிப்பாக, கும்பாபிஷேக நாளில் சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வாழை இலையில் உணவும், தேவைக்கேற்பபொட்டல உணவுகளும் வழங்கப்படவுள்ளன.

 

அன்னதானத்திற்காக தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் ஆலய வளாகத்திலேயேசுகாதாரமான முறையில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கானபணிகளில் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனிடையே, கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் ஆலயத்தின்புனிதத்தையும் தூய்மையையும் பாதுகாக்கும் வகையில், ஆலய வளாகத்தை சுத்தமாகவைத்துக்கொள்ள வேண்டும் என டான்ஸ்ரீ ஆர். நடராஜா கேட்டுக்கொண்டார்.

 

பக்தர்கள் அதிகளவில் கூடும் என்பதால், உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை கண்ட இடங்களில் வீசாமல், அதற்கெனஏற்பாடு செய்யப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டு ஆலய வளாகத்தின் தூய்மையைப்பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இதற்கிடையில், ஸ்கோன்ஸ் செனாய், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில்கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

 

அந்த அமைப்பின் தலைவர் நாஜாராஜு கூறுகையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும்வாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் என்றார்.

 

“நாங்கள் வழங்கும் அன்னதானத்தை பக்தர்கள் வந்து சாப்பிட்டு செல்ல வேண்டும். பக்தர்களுக்கு உணவு வழங்குவது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம். அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டும்,” என்றார்.

 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் ஒழுங்கையும் ஆலயத்தின் தூய்மையையும்கடைப்பிடித்து, சமய நிகழ்வுகளில் பக்தியுடன் கலந்து கொள்ள வேண்டும் எனஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரவாங், ஆக.18-

ரவாங் தமிழ்ப்பள்ளியில் வெ.1.5 மில்லியன் நிதியில் 6 வகுப்பறையை கொண்ட ஒருகட்டடத்தை கட்ட  மடாணி அரசாங்கம்  கல்வி அமைச்சின் வாயிலாக நிதி ஒதுக்கியுள்ளது.

 

அதனை ரவாங் வட்டார மக்களும் பெற்றோர்களும் வரவேற்கும் அதே நேரத்தில் அந்தகட்டடம் திடலை பாதிக்கும் வண்ணம் கட்டப் படக்கூடாது என்பதே அவர்களது நியாமானகோரிக்கை.

 

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்துடன் மக்கள் சொல்லி பார்த்தார்கள் கேட்கவில்லை. அதன்பின் ரவாங் மக்கள் அணி திரண்டு தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.

 

உடனே அங்கு விரைந்த மக்கள் பிரதிநிதி மற்றும் மாநில கல்வி இலாகாவின் வருகையால்  தற்காலிகமாக கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது.

 

அதன் பின் மலேசிய கல்வி இலாக்கா இயக்குனர் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவரிடம்மக்கள் கொடுத்த கோரிக்கை என்வென்றால் ஏற்கனவே கறையான் அடித்து பயன்பாட்டில்இல்லாத கட்டடத்தை உடைத்து அதில் புதிய கட்டத்தை எழுப்புங்கள் என்பது. அதை தவிர்த்துதிடலுக்கு அருகே தற்காலிகமாக அமைக்கபட்ட கட்டட பகுதியை உடைத்து அங்கு புதியகட்டடத்தை  கட்டுங்கள்  என மக்கள் தெரிவித்தனர்.

 

இட வசதி இருக்கும்போது  1000 மாணவர்கள் கொண்ட பள்ளியின் திடலில் கை வைப்பதுநியாயம் இல்லை என தெரிவித்த மக்கள்

விளையாட்டு  தொடர்பான நடவடிக்கைகள் மாணவர்களுக்கு அவசியமானது  அதனால்திடலில் கை வைக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

 

உடனே இது தொடர்பாக கல்வி அமைச்சு பேச்சு வார்த்தை நடத்துவோம் ஒரு ஆக்கபூர்வமானமுடிவை  இரு வாரத்தில் எடுப்போம். அதுவரை தற்காலிகமாக வேலைகள் அனைத்தும்நிறுத்தப்படும் என தெரிவித்து ரமணா படம் போல் பேச்சு வார்த்தை நடத்திகிறோம் என்று 2 வாரம்  படம் காட்டிவிட்டு  கடந்த வெள்ளிக்கிழமை (sorry) நாங்க எவ்வளவோ முயற்சிசெய்தோம் உடைத்து கட்ட நிதி இல்லை ஆதே நேரத்தில் பள்ளி கட்டடம் விரைந்து கட்டப்படவேண்டும் அதுவும் அதே இடத்தில் என தெரிவித்தது.

 

உடனே மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த பழைய கட்டத்தை உடைத்துகொடுக்கும் அனைத்து செலவையும் நாங்களே வசூலித்து ஏற்படுத்தி கொடுக்கிறோம் எனதெரிவித்தனர்.

 

உடனடியாக கடந்த வெள்ளிக் கிழமை  ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு வந்த சிலாங்கூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் பாப்பா ராயுடு பேச்சு வார்த்தை நடத்தினார்.

 

அவருக்கு கல்வி அமைச்சின் கடிதத்தை காட்டி தலைமை ஆசிரியர் கட்டடம் அங்குகட்டப்படுகிறது என்பதே கல்வி அமைச்சின் முடிவு என தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கையை கேட்ட பாப்பா ராயுடு பயன்படாத பழைய கட்டடம் மற்றும் தற்காலிககட்டடம் இரண்டையும்  பார்வையிட்ட பிறகு  அதிலும் அதனை உடைத்து அப்புறப்படுத்தும்செலவையும் மக்களே ஏற்கொள்ள முன்வரும்போது.

 

மக்களின் கோரிக்கை நியாமாக உள்ளது என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக கல்வி அமைச்சருக்கு திங்கட்கிழமை கடிதம் அனுப்புவதாக பாப்பா ராயுடுமக்களிடம் தெரிவித்தார்.

 

அதன் அடிப்படையில் நேற்று பாப்பா ராயுடு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் ,

 

இன்று அவசர அவசரமாக பள்ளியில் வேலை தொடங்கப்பட்டுள்ளது.  மக்கள்கோரிக்கைக்கும் மதிப்பு இல்லை மக்கள் பிரதிநிதி ஒரு ஆட்சி குழு உறுப்பினர் கடிதத்திற்கும்மரியாதை இல்லை என்பதே இதன் வழி தென்படுகிறது.

 

ஆனால் வேலை மட்டும் அவசர அவசர நடப்பதின் பின்னனி என்ன ? ஊழலா?

யாரவது குத்தகை தொடர்பாக கையூட்டு பெற்றார்களா என்ற சந்தேகம் மக்கள் இடத்தில்இப்போது  எழ தொடங்கி விட்டது.

 

திடலும் எங்களுக்கு வேண்டும் கட்டடமும் எங்களுக்கு வேண்டும்  இப்படி அவசர அவசரமாகவேலையை தொடங்குவது ஏன் என்ற நியாத்தை கேட்டு அதனை நிறுத்த  ரவாங் மக்கள்பிரதமர் அலுவலகம் மற்றும்  கல்வி அமைச்சின் அலுவலகம் முன் போராட்டம் நடத்தபோவதாக  தமிழ் லென்ஸ்-சிடன் தெரிவித்தனர்.

 

செய்தி: வெற்றி விக்டர்

ரவாங், ஆக.18-

ரவாங் தமிழ்ப்பள்ளியில் வெ.1.5 மில்லியன் நிதியில் 6 வகுப்பறையை கொண்ட ஒருகட்டடத்தை கட்ட  மடாணி அரசாங்கம்  கல்வி அமைச்சின் வாயிலாக நிதி ஒதுக்கியுள்ளது.

 

அதனை ரவாங் வட்டார மக்களும் பெற்றோர்களும் வரவேற்கும் அதே நேரத்தில் அந்தகட்டடம் திடலை பாதிக்கும் வண்ணம் கட்டப் படக்கூடாது என்பதே அவர்களது நியாமானகோரிக்கை.

 

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்துடன் மக்கள் சொல்லி பார்த்தார்கள் கேட்கவில்லை. அதன்பின் ரவாங் மக்கள் அணி திரண்டு தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.

 

உடனே அங்கு விரைந்த மக்கள் பிரதிநிதி மற்றும் மாநில கல்வி இலாகாவின் வருகையால்  தற்காலிகமாக கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது.

 

அதன் பின் மலேசிய கல்வி இலாக்கா இயக்குனர் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவரிடம்மக்கள் கொடுத்த கோரிக்கை என்வென்றால் ஏற்கனவே கறையான் அடித்து பயன்பாட்டில்இல்லாத கட்டடத்தை உடைத்து அதில் புதிய கட்டத்தை எழுப்புங்கள் என்பது. அதை தவிர்த்துதிடலுக்கு அருகே தற்காலிகமாக அமைக்கபட்ட கட்டட பகுதியை உடைத்து அங்கு புதியகட்டடத்தை  கட்டுங்கள்  என மக்கள் தெரிவித்தனர்.

 

இட வசதி இருக்கும்போது  1000 மாணவர்கள் கொண்ட பள்ளியின் திடலில் கை வைப்பதுநியாயம் இல்லை என தெரிவித்த மக்கள்

விளையாட்டு  தொடர்பான நடவடிக்கைகள் மாணவர்களுக்கு அவசியமானது  அதனால்திடலில் கை வைக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

 

உடனே இது தொடர்பாக கல்வி அமைச்சு பேச்சு வார்த்தை நடத்துவோம் ஒரு ஆக்கபூர்வமானமுடிவை  இரு வாரத்தில் எடுப்போம். அதுவரை தற்காலிகமாக வேலைகள் அனைத்தும்நிறுத்தப்படும் என தெரிவித்து ரமணா படம் போல் பேச்சு வார்த்தை நடத்திகிறோம் என்று 2 வாரம்  படம் காட்டிவிட்டு  கடந்த வெள்ளிக்கிழமை (sorry) நாங்க எவ்வளவோ முயற்சிசெய்தோம் உடைத்து கட்ட நிதி இல்லை ஆதே நேரத்தில் பள்ளி கட்டடம் விரைந்து கட்டப்படவேண்டும் அதுவும் அதே இடத்தில் என தெரிவித்தது.

 

உடனே மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த பழைய கட்டத்தை உடைத்துகொடுக்கும் அனைத்து செலவையும் நாங்களே வசூலித்து ஏற்படுத்தி கொடுக்கிறோம் எனதெரிவித்தனர்.

 

உடனடியாக கடந்த வெள்ளிக் கிழமை  ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு வந்த சிலாங்கூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் பாப்பா ராயுடு பேச்சு வார்த்தை நடத்தினார்.

 

அவருக்கு கல்வி அமைச்சின் கடிதத்தை காட்டி தலைமை ஆசிரியர் கட்டடம் அங்குகட்டப்படுகிறது என்பதே கல்வி அமைச்சின் முடிவு என தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கையை கேட்ட பாப்பா ராயுடு பயன்படாத பழைய கட்டடம் மற்றும் தற்காலிககட்டடம் இரண்டையும்  பார்வையிட்ட பிறகு  அதிலும் அதனை உடைத்து அப்புறப்படுத்தும்செலவையும் மக்களே ஏற்கொள்ள முன்வரும்போது.

 

மக்களின் கோரிக்கை நியாமாக உள்ளது என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக கல்வி அமைச்சருக்கு திங்கட்கிழமை கடிதம் அனுப்புவதாக பாப்பா ராயுடுமக்களிடம் தெரிவித்தார்.

 

அதன் அடிப்படையில் நேற்று பாப்பா ராயுடு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் ,

 

இன்று அவசர அவசரமாக பள்ளியில் வேலை தொடங்கப்பட்டுள்ளது.  மக்கள்கோரிக்கைக்கும் மதிப்பு இல்லை மக்கள் பிரதிநிதி ஒரு ஆட்சி குழு உறுப்பினர் கடிதத்திற்கும்மரியாதை இல்லை என்பதே இதன் வழி தென்படுகிறது.

 

ஆனால் வேலை மட்டும் அவசர அவசர நடப்பதின் பின்னனி என்ன ? ஊழலா?

யாரவது குத்தகை தொடர்பாக கையூட்டு பெற்றார்களா என்ற சந்தேகம் மக்கள் இடத்தில்இப்போது  எழ தொடங்கி விட்டது.

 

திடலும் எங்களுக்கு வேண்டும் கட்டடமும் எங்களுக்கு வேண்டும்  இப்படி அவசர அவசரமாகவேலையை தொடங்குவது ஏன் என்ற நியாத்தை கேட்டு அதனை நிறுத்த  ரவாங் மக்கள்பிரதமர் அலுவலகம் மற்றும்  கல்வி அமைச்சின் அலுவலகம் முன் போராட்டம் நடத்தபோவதாக  தமிழ் லென்ஸ்-சிடன் தெரிவித்தனர்.

 

செய்தி: வெற்றி விக்டர்

பகாங் மாநிலத்தில் புக்கிட் திங்கி பகுதியில் உள்ள மலைப்பாங்கான காட்டுப் பகுதியில்பிரம்மரிஷி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வனத் துறைக்குசொந்தமான நிலமோ அல்லது அரசாங்க நிலமோ, புறம்போக்கு நிலமோ கிடையாது.

 

தனியாருக்கு சொந்தமான நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. நில உரிமையாளரும் பிரிம்மரிஷிமலைக்கோயில் செயல்படுவதற்கு நல்லெண்ண அடிப்படையில் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

 

இந்த ஆலயம் சீராக இயங்கிவந்த நிலையில், கடந்த 15-ஆம் நாள்(ஆகஸ்ட்), அடையாளம்தெரியாத சிலர், சம்பந்தப்பட்ட ஆலய வளாகத்தில் நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளைஉடைத்து சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.

 

இதன்தொடர்பில், கோம்பாக் மாவட்ட தலைமைக் காவல் நிலையம், செந்தூல் மாவட்டதலைமைக் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயத் தரப்பினர் சார்பில்அதிகமான புகார் செய்துள்ளனர்; ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து காலாடித்தனம் புரிந்தகருங்காலிகள்மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலயப் பொறுப்பாளர்மகேந்திரன், தலைமை பூசாரி உள்ளிட்டோர் செய்தியாளர்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் சமூக ஆர்வலரும் மலேசியத் தமிழர்முன்னேற்றக் கழகத் தலைவருமான ஸ்ரீ ரமேஷ், நேற்றிரவு செந்தூல் மாவட்ட தலைமைக்காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,

 

நாட்டில் நிலைநாட்டப்படும் நல்லிணக்கச் சூழலுக்கு ஏற்ப பகாங், புக்கிட் திங்கி வட்டாரமக்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ்கின்றனர். இந்த நிலையில், தனியார் நிலத்தில்அமைக்கப்பட்டுள்ள இந்து வழிபாட்டுத் தலத்தில் தீயநோக்குடன் நுழைந்து அங்குள்ள சாமிசிலைகளை உடைத்ததுடன் மேலும் பலசேதங்களை ஏற்படுத்திய தரப்பினரை அடையாளம்கண்டு, அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தஸ்ரீ ரமேஷ், 15 நாட்கள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால்,  தேசிய போலீஸ் படைத்தலைவர்-ஐஜிபி-யிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஸ்ரீ ரமேஷ் மேலும்தெரிவித்தார்.