loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

 

பாசிர் கூடாங், ஆக. 5 – 
ஜொகூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாசிர் கூடாங் மருத்துவமனை நவீன மருத்துவ வசதிகள், அதிக நோயாளிகளை கையாளும் கொள்ளளவு மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக இன்னும் முழுத் திறனில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்ததாவது, மருத்துவமனைக்கு மொத்தமாக 2,271 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1,079 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால், மேலும் 1,192 பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன என்றார்.

குறிப்பாக மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கான பணியிடங்களே அதிகளவில் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜொகூர் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டுமெனில் மனிதவளப் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

நவீன உபகரணங்கள் மற்றும் உயர்தர மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், போதிய பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனை தனது முழு சேவைத் திறனை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும், இந்த நிலை நோயாளிகளுக்கான சேவையையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் பாசிர் கூடாங் மருத்துவமனை அதன் முழுத் திறனுடன் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றும் ஓன் ஹபிஸ் வலியுறுத்தினார்.

 

கோலாலம்பூர், ஆக. 5- உலு சிலாங்கூரில் உள்ள கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் சுதா உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக மஇகா பிரிகேட் தேசியத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பணியிடத்தில் மிரட்டல், கொடுமைப்படுத்தல், அளவுக்கு மீறிய பணிச்சுமை, பாகுபாடு அல்லது தவறான அணுகுமுறை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், முழுமையான விசாரணை நிறைவடையும் முன்பு எந்தவொரு தனிநபர் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையோ, ஊகங்களின் அடிப்படையில் கருத்து தெரிவிப்பதையோ அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார்.

காவல்துறையின் தகவலின்படி, ஆசிரியர் பள்ளியின் ஆசிரியர் அறையில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் கோலா குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

 சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் மனநலம், உணர்வுப்பூர்வ அழுத்தம் மற்றும் பணியிடக் கொடுமை போன்ற பிரச்சினைகள் குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாக ஆண்ட்ரூ டேவிட் குறிப்பிட்டார்.

எனவே, இந்தச் சம்பவத்தின் உண்மையான பின்னணியை வெளிக்கொணரும் வகையில், மலேசிய அரச காவல்துறை, கல்வி அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை ஆகியவை முழுமையான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மஇகா பிரிகேட் வலியுறுத்தியுள்ளது.

உயிரிழப்பு ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கும் நிலை தொடரக்கூடாது. ஒவ்வொரு புகாரும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்; மனஅழுத்தத்தின் ஒவ்வொரு அறிகுறியும் உரிய முறையில் கையாளப்பட வேண்டும்; பாதிக்கப்படுபவர்கள் நிலைமை மோசமடைவதற்கு முன்பே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு துக்ககாலத்திலும் விசாரணை நடைபெறும் காலத்திலும் தேவையான தனியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மஇகா பிரிகேட் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், உண்மையை வெளிக்கொணரும் நேர்மையான விசாரணைக்காக மஇகா பிரிகேட் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்துடன் உறுதுணையாக நிற்கும் என்றும், விசாரணையில் ஏதேனும் தவறுகள் அல்லது பொறுப்பின்மை உறுதி செய்யப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆண்ட்ரூ டேவிட் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஆக. 4 – 

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 123 தொகுதிகளில் ஒரே நாளில் மாபெரும் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக மஇகாவின்தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா அறிவித்தார்.

 

இந்தப் போட்டி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 9.00 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்துதொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. கோலாலம்பூரில் உள்ள நேதாஜி மண்டபத்தில்நடைபெறும் நிகழ்வை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்தொடக்கி வைக்கவுள்ளார்.

 

இதுகுறித்து டத்தோ முருகையா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைமுன்னிட்டு ஏற்கனவே கூட்டு பிரார்த்தனை, குடும்ப தினம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும்நெடுந்தூர ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

 

அதன் தொடர்ச்சியாக, கல்வி மற்றும் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நாடுதழுவிய பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்என்றும் அவர் கூறினார்.

 

இந்த போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காக ஐந்துதலைப்புகளும், இடைநிலைப்பள்ளி மற்றும் பொதுப் பிரிவினருக்காக தனித்தனியாக ஐந்துதலைப்புகளும் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

 

இந்தப் போட்டி இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், மலாய் மற்றும் சீன சமூகத்தினருக்கும்திறந்ததாக இருக்கும். அவர்கள் மலாய் மொழியில் உரையாற்றி போட்டியில் பங்கேற்கலாம்என்றும் அவர் தெரிவித்தார்.

 

போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அவைபள்ளிகளில் வழங்கப்படும் இணைப் பாட நடவடிக்கைகளுக்கான (Co-curricular) மதிப்பெண்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

போட்டிக்கான நடுவர் குழுவில் தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள்இடம்பெறவுள்ளனர். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும்வழங்கி கௌரவிக்கப்படும்.

 

இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களதுபெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார். 

 

மஇகாவின் 80ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும்இந்தப் பேச்சுப் போட்டி, இளைஞர்களின் பேச்சாற்றலை வளர்ப்பதோடு பல இனமக்களிடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அவர் நம்பிக்கைதெரிவித்தார்.

கோலாலம்பூர், ஆக. 4 – 

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 123 தொகுதிகளில் ஒரே நாளில் மாபெரும் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக மஇகாவின்தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா அறிவித்தார்.

 

இந்தப் போட்டி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 9.00 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்துதொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. கோலாலம்பூரில் உள்ள நேதாஜி மண்டபத்தில்நடைபெறும் நிகழ்வை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்தொடக்கி வைக்கவுள்ளார்.

 

இதுகுறித்து டத்தோ முருகையா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைமுன்னிட்டு ஏற்கனவே கூட்டு பிரார்த்தனை, குடும்ப தினம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும்நெடுந்தூர ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

 

அதன் தொடர்ச்சியாக, கல்வி மற்றும் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நாடுதழுவிய பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்என்றும் அவர் கூறினார்.

 

இந்த போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காக ஐந்துதலைப்புகளும், இடைநிலைப்பள்ளி மற்றும் பொதுப் பிரிவினருக்காக தனித்தனியாக ஐந்துதலைப்புகளும் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

 

இந்தப் போட்டி இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், மலாய் மற்றும் சீன சமூகத்தினருக்கும்திறந்ததாக இருக்கும். அவர்கள் மலாய் மொழியில் உரையாற்றி போட்டியில் பங்கேற்கலாம்என்றும் அவர் தெரிவித்தார்.

 

போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அவைபள்ளிகளில் வழங்கப்படும் இணைப் பாட நடவடிக்கைகளுக்கான (Co-curricular) மதிப்பெண்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

போட்டிக்கான நடுவர் குழுவில் தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள்இடம்பெறவுள்ளனர். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும்வழங்கி கௌரவிக்கப்படும்.

 

இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களதுபெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார். 

 

மஇகாவின் 80ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும்இந்தப் பேச்சுப் போட்டி, இளைஞர்களின் பேச்சாற்றலை வளர்ப்பதோடு பல இனமக்களிடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அவர் நம்பிக்கைதெரிவித்தார்.

 

உலு சிலாங்கூர், ஆகஸ்ட் 1 –
மலேசிய தினம் மற்றும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுப்பற்று, இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தும் நோக்கில் உலு சிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் தலைமையில் சிறப்பு திரைப்படக் காட்சி நிகழ்ச்சி ரவாங்  ஏஇயோன் பேரங்காடி திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் கலந்து கொண்டு குடும்பத்தினருடன் திரைப்படங்களை கண்டு மகிழ்ந்தனர். பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி "ஸ்பைடர்மேன்" மற்றும் "ஜனநாயகன்" திரைப்படங்களைப் பார்வையிட்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசியக் கொடியான ஜாலுர் கெமிலாங் திரையில் தோன்றியதுடன் ஜாலுர் ககெர்மிலாங் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது திரையரங்கில் இருந்த அனைத்து இன மக்களும் தன்னெழுச்சியுடன் எழுந்து நின்று, ஒரே குரலில் பாடிய காட்சி அங்கு நிலவிய தேசிய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியது. 

மொழி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைத் தாண்டி மலேசியர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வை அந்த தருணம் பிரதிபலித்தது.

இந்நிகழ்ச்சி குறித்து டாக்டர் சத்திய பிரகாஷ் கூறுகையில், மலேசிய தினம் மற்றும் தேசிய தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; நாட்டின் சுதந்திரத்தையும், பல இன மக்களின் ஒற்றுமையையும் நினைவுகூரும் முக்கியமான தருணம் என்றும் தெரிவித்தார்.

மேலும், இன்று தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை இதுபோன்ற பல்வேறு ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்று சார்ந்த நிகழ்ச்சிகள் உலு சிலாங்கூர் பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களும் இதில் பங்கேற்று தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய உணர்வை மக்களிடையே வேரூன்றச் செய்யும் வகையில் நடைபெற்ற இந்த திரைப்பட நிகழ்ச்சி, பொழுதுபோக்கை மட்டுமல்லாமல் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மலேசியர் என்ற பெருமிதத்தை அனைவரின் மனதிலும் மேலும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.