loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ரவாங், ஆக.18-

ரவாங் தமிழ்ப்பள்ளியில் வெ.1.5 மில்லியன் நிதியில் 6 வகுப்பறையை கொண்ட ஒருகட்டடத்தை கட்ட  மடாணி அரசாங்கம்  கல்வி அமைச்சின் வாயிலாக நிதி ஒதுக்கியுள்ளது.

 

அதனை ரவாங் வட்டார மக்களும் பெற்றோர்களும் வரவேற்கும் அதே நேரத்தில் அந்தகட்டடம் திடலை பாதிக்கும் வண்ணம் கட்டப் படக்கூடாது என்பதே அவர்களது நியாமானகோரிக்கை.

 

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்துடன் மக்கள் சொல்லி பார்த்தார்கள் கேட்கவில்லை. அதன்பின் ரவாங் மக்கள் அணி திரண்டு தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.

 

உடனே அங்கு விரைந்த மக்கள் பிரதிநிதி மற்றும் மாநில கல்வி இலாகாவின் வருகையால்  தற்காலிகமாக கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது.

 

அதன் பின் மலேசிய கல்வி இலாக்கா இயக்குனர் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவரிடம்மக்கள் கொடுத்த கோரிக்கை என்வென்றால் ஏற்கனவே கறையான் அடித்து பயன்பாட்டில்இல்லாத கட்டடத்தை உடைத்து அதில் புதிய கட்டத்தை எழுப்புங்கள் என்பது. அதை தவிர்த்துதிடலுக்கு அருகே தற்காலிகமாக அமைக்கபட்ட கட்டட பகுதியை உடைத்து அங்கு புதியகட்டடத்தை  கட்டுங்கள்  என மக்கள் தெரிவித்தனர்.

 

இட வசதி இருக்கும்போது  1000 மாணவர்கள் கொண்ட பள்ளியின் திடலில் கை வைப்பதுநியாயம் இல்லை என தெரிவித்த மக்கள்

விளையாட்டு  தொடர்பான நடவடிக்கைகள் மாணவர்களுக்கு அவசியமானது  அதனால்திடலில் கை வைக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

 

உடனே இது தொடர்பாக கல்வி அமைச்சு பேச்சு வார்த்தை நடத்துவோம் ஒரு ஆக்கபூர்வமானமுடிவை  இரு வாரத்தில் எடுப்போம். அதுவரை தற்காலிகமாக வேலைகள் அனைத்தும்நிறுத்தப்படும் என தெரிவித்து ரமணா படம் போல் பேச்சு வார்த்தை நடத்திகிறோம் என்று 2 வாரம்  படம் காட்டிவிட்டு  கடந்த வெள்ளிக்கிழமை (sorry) நாங்க எவ்வளவோ முயற்சிசெய்தோம் உடைத்து கட்ட நிதி இல்லை ஆதே நேரத்தில் பள்ளி கட்டடம் விரைந்து கட்டப்படவேண்டும் அதுவும் அதே இடத்தில் என தெரிவித்தது.

 

உடனே மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த பழைய கட்டத்தை உடைத்துகொடுக்கும் அனைத்து செலவையும் நாங்களே வசூலித்து ஏற்படுத்தி கொடுக்கிறோம் எனதெரிவித்தனர்.

 

உடனடியாக கடந்த வெள்ளிக் கிழமை  ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு வந்த சிலாங்கூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் பாப்பா ராயுடு பேச்சு வார்த்தை நடத்தினார்.

 

அவருக்கு கல்வி அமைச்சின் கடிதத்தை காட்டி தலைமை ஆசிரியர் கட்டடம் அங்குகட்டப்படுகிறது என்பதே கல்வி அமைச்சின் முடிவு என தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கையை கேட்ட பாப்பா ராயுடு பயன்படாத பழைய கட்டடம் மற்றும் தற்காலிககட்டடம் இரண்டையும்  பார்வையிட்ட பிறகு  அதிலும் அதனை உடைத்து அப்புறப்படுத்தும்செலவையும் மக்களே ஏற்கொள்ள முன்வரும்போது.

 

மக்களின் கோரிக்கை நியாமாக உள்ளது என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக கல்வி அமைச்சருக்கு திங்கட்கிழமை கடிதம் அனுப்புவதாக பாப்பா ராயுடுமக்களிடம் தெரிவித்தார்.

 

அதன் அடிப்படையில் நேற்று பாப்பா ராயுடு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் ,

 

இன்று அவசர அவசரமாக பள்ளியில் வேலை தொடங்கப்பட்டுள்ளது.  மக்கள்கோரிக்கைக்கும் மதிப்பு இல்லை மக்கள் பிரதிநிதி ஒரு ஆட்சி குழு உறுப்பினர் கடிதத்திற்கும்மரியாதை இல்லை என்பதே இதன் வழி தென்படுகிறது.

 

ஆனால் வேலை மட்டும் அவசர அவசர நடப்பதின் பின்னனி என்ன ? ஊழலா?

யாரவது குத்தகை தொடர்பாக கையூட்டு பெற்றார்களா என்ற சந்தேகம் மக்கள் இடத்தில்இப்போது  எழ தொடங்கி விட்டது.

 

திடலும் எங்களுக்கு வேண்டும் கட்டடமும் எங்களுக்கு வேண்டும்  இப்படி அவசர அவசரமாகவேலையை தொடங்குவது ஏன் என்ற நியாத்தை கேட்டு அதனை நிறுத்த  ரவாங் மக்கள்பிரதமர் அலுவலகம் மற்றும்  கல்வி அமைச்சின் அலுவலகம் முன் போராட்டம் நடத்தபோவதாக  தமிழ் லென்ஸ்-சிடன் தெரிவித்தனர்.

 

செய்தி: வெற்றி விக்டர்

ரவாங், ஆக.18-

ரவாங் தமிழ்ப்பள்ளியில் வெ.1.5 மில்லியன் நிதியில் 6 வகுப்பறையை கொண்ட ஒருகட்டடத்தை கட்ட  மடாணி அரசாங்கம்  கல்வி அமைச்சின் வாயிலாக நிதி ஒதுக்கியுள்ளது.

 

அதனை ரவாங் வட்டார மக்களும் பெற்றோர்களும் வரவேற்கும் அதே நேரத்தில் அந்தகட்டடம் திடலை பாதிக்கும் வண்ணம் கட்டப் படக்கூடாது என்பதே அவர்களது நியாமானகோரிக்கை.

 

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்துடன் மக்கள் சொல்லி பார்த்தார்கள் கேட்கவில்லை. அதன்பின் ரவாங் மக்கள் அணி திரண்டு தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.

 

உடனே அங்கு விரைந்த மக்கள் பிரதிநிதி மற்றும் மாநில கல்வி இலாகாவின் வருகையால்  தற்காலிகமாக கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது.

 

அதன் பின் மலேசிய கல்வி இலாக்கா இயக்குனர் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவரிடம்மக்கள் கொடுத்த கோரிக்கை என்வென்றால் ஏற்கனவே கறையான் அடித்து பயன்பாட்டில்இல்லாத கட்டடத்தை உடைத்து அதில் புதிய கட்டத்தை எழுப்புங்கள் என்பது. அதை தவிர்த்துதிடலுக்கு அருகே தற்காலிகமாக அமைக்கபட்ட கட்டட பகுதியை உடைத்து அங்கு புதியகட்டடத்தை  கட்டுங்கள்  என மக்கள் தெரிவித்தனர்.

 

இட வசதி இருக்கும்போது  1000 மாணவர்கள் கொண்ட பள்ளியின் திடலில் கை வைப்பதுநியாயம் இல்லை என தெரிவித்த மக்கள்

விளையாட்டு  தொடர்பான நடவடிக்கைகள் மாணவர்களுக்கு அவசியமானது  அதனால்திடலில் கை வைக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

 

உடனே இது தொடர்பாக கல்வி அமைச்சு பேச்சு வார்த்தை நடத்துவோம் ஒரு ஆக்கபூர்வமானமுடிவை  இரு வாரத்தில் எடுப்போம். அதுவரை தற்காலிகமாக வேலைகள் அனைத்தும்நிறுத்தப்படும் என தெரிவித்து ரமணா படம் போல் பேச்சு வார்த்தை நடத்திகிறோம் என்று 2 வாரம்  படம் காட்டிவிட்டு  கடந்த வெள்ளிக்கிழமை (sorry) நாங்க எவ்வளவோ முயற்சிசெய்தோம் உடைத்து கட்ட நிதி இல்லை ஆதே நேரத்தில் பள்ளி கட்டடம் விரைந்து கட்டப்படவேண்டும் அதுவும் அதே இடத்தில் என தெரிவித்தது.

 

உடனே மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த பழைய கட்டத்தை உடைத்துகொடுக்கும் அனைத்து செலவையும் நாங்களே வசூலித்து ஏற்படுத்தி கொடுக்கிறோம் எனதெரிவித்தனர்.

 

உடனடியாக கடந்த வெள்ளிக் கிழமை  ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு வந்த சிலாங்கூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் பாப்பா ராயுடு பேச்சு வார்த்தை நடத்தினார்.

 

அவருக்கு கல்வி அமைச்சின் கடிதத்தை காட்டி தலைமை ஆசிரியர் கட்டடம் அங்குகட்டப்படுகிறது என்பதே கல்வி அமைச்சின் முடிவு என தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கையை கேட்ட பாப்பா ராயுடு பயன்படாத பழைய கட்டடம் மற்றும் தற்காலிககட்டடம் இரண்டையும்  பார்வையிட்ட பிறகு  அதிலும் அதனை உடைத்து அப்புறப்படுத்தும்செலவையும் மக்களே ஏற்கொள்ள முன்வரும்போது.

 

மக்களின் கோரிக்கை நியாமாக உள்ளது என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக கல்வி அமைச்சருக்கு திங்கட்கிழமை கடிதம் அனுப்புவதாக பாப்பா ராயுடுமக்களிடம் தெரிவித்தார்.

 

அதன் அடிப்படையில் நேற்று பாப்பா ராயுடு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் ,

 

இன்று அவசர அவசரமாக பள்ளியில் வேலை தொடங்கப்பட்டுள்ளது.  மக்கள்கோரிக்கைக்கும் மதிப்பு இல்லை மக்கள் பிரதிநிதி ஒரு ஆட்சி குழு உறுப்பினர் கடிதத்திற்கும்மரியாதை இல்லை என்பதே இதன் வழி தென்படுகிறது.

 

ஆனால் வேலை மட்டும் அவசர அவசர நடப்பதின் பின்னனி என்ன ? ஊழலா?

யாரவது குத்தகை தொடர்பாக கையூட்டு பெற்றார்களா என்ற சந்தேகம் மக்கள் இடத்தில்இப்போது  எழ தொடங்கி விட்டது.

 

திடலும் எங்களுக்கு வேண்டும் கட்டடமும் எங்களுக்கு வேண்டும்  இப்படி அவசர அவசரமாகவேலையை தொடங்குவது ஏன் என்ற நியாத்தை கேட்டு அதனை நிறுத்த  ரவாங் மக்கள்பிரதமர் அலுவலகம் மற்றும்  கல்வி அமைச்சின் அலுவலகம் முன் போராட்டம் நடத்தபோவதாக  தமிழ் லென்ஸ்-சிடன் தெரிவித்தனர்.

 

செய்தி: வெற்றி விக்டர்

பகாங் மாநிலத்தில் புக்கிட் திங்கி பகுதியில் உள்ள மலைப்பாங்கான காட்டுப் பகுதியில்பிரம்மரிஷி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வனத் துறைக்குசொந்தமான நிலமோ அல்லது அரசாங்க நிலமோ, புறம்போக்கு நிலமோ கிடையாது.

 

தனியாருக்கு சொந்தமான நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. நில உரிமையாளரும் பிரிம்மரிஷிமலைக்கோயில் செயல்படுவதற்கு நல்லெண்ண அடிப்படையில் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

 

இந்த ஆலயம் சீராக இயங்கிவந்த நிலையில், கடந்த 15-ஆம் நாள்(ஆகஸ்ட்), அடையாளம்தெரியாத சிலர், சம்பந்தப்பட்ட ஆலய வளாகத்தில் நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளைஉடைத்து சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.

 

இதன்தொடர்பில், கோம்பாக் மாவட்ட தலைமைக் காவல் நிலையம், செந்தூல் மாவட்டதலைமைக் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயத் தரப்பினர் சார்பில்அதிகமான புகார் செய்துள்ளனர்; ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து காலாடித்தனம் புரிந்தகருங்காலிகள்மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலயப் பொறுப்பாளர்மகேந்திரன், தலைமை பூசாரி உள்ளிட்டோர் செய்தியாளர்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் சமூக ஆர்வலரும் மலேசியத் தமிழர்முன்னேற்றக் கழகத் தலைவருமான ஸ்ரீ ரமேஷ், நேற்றிரவு செந்தூல் மாவட்ட தலைமைக்காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,

 

நாட்டில் நிலைநாட்டப்படும் நல்லிணக்கச் சூழலுக்கு ஏற்ப பகாங், புக்கிட் திங்கி வட்டாரமக்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ்கின்றனர். இந்த நிலையில், தனியார் நிலத்தில்அமைக்கப்பட்டுள்ள இந்து வழிபாட்டுத் தலத்தில் தீயநோக்குடன் நுழைந்து அங்குள்ள சாமிசிலைகளை உடைத்ததுடன் மேலும் பலசேதங்களை ஏற்படுத்திய தரப்பினரை அடையாளம்கண்டு, அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தஸ்ரீ ரமேஷ், 15 நாட்கள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால்,  தேசிய போலீஸ் படைத்தலைவர்-ஐஜிபி-யிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஸ்ரீ ரமேஷ் மேலும்தெரிவித்தார்.

புத்ராஜெயா:  ஆகஸ்ட் 12* – 

முன்னாள் மக்கள் முற்போக்கு கட்சியின் (பிபிபி) தலைவர் எம். கேவியஸ், மறைந்த மேக்லின் டென்னிஸ் டி’குரூஸ் கட்சியின் முன்னாள் தலைவராகஅங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத்தொடங்குவதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியில் தோல்வியடைந்தார்.

 

மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஒருமனதாக அவரதுமேல்முறையீட்டை நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 

கடந்த 20 நவம்பர் 2023 அன்று, நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்ககேவியஸ்ஸுக்கு அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடுசெய்திருந்தார்.

 

கேவியஸ்யின் பிரதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அனுமதிவழங்குவதற்கு சட்டத்துறைத் தலைவர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டி’குரூஸிடமிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சித்தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜே. லோகா பாலா மோகன், கட்சியின் பொதுஅதிகாரி என்ற முறையில் கேவியஸ்யின் மேல்முறையீட்டில் தலையிடுவதற்குமேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

 

நீதித்துறை மறுஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனில், விண்ணப்பதாரரின்வழக்கு தேவையான ஆரம்ப நிலையை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதுடன், அதுஅற்பமான அல்லது ஆதாரமற்ற வழக்காக இருக்கக்கூடாது.

 

இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் லிம் சோங் ஃபோங், லிம் ஹொக் லெங்மற்றும் அஹ்மாட் ஷஹ்ரிர் சாலே ஆகியோர், லோகா பாலா மோகனுக்கும் சட்டத்துறைத்தலைவருக்கும் தலா RM30,000 வழக்குச் செலவாக கேவியஸ் செலுத்த வேண்டும் என்றும்உத்தரவிட்டனர்.

 

நீதிபதி லிம் ஹொக் லெங், நீதிமன்றத்தின் விரிவான க

நீதிபதி லிம் ஹொக் லெங், நீதிமன்றத்தின் விரிவான காரணங்களை வாசித்தபோது, இந்தவிவகாரம் ஒரு அரசியல் கட்சியின் உள்நிர்வாகம் தொடர்பானது என்றும், எனவே சங்கங்கள்சட்டம் 1966-ன் பிரிவு 18C-ன் கீழ் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும்தெரிவித்தார்.

 

2023 ஏப்ரல் 11ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர்தெரிவித்த முடிவை ரத்து செய்யுமாறு கேவேஸ் கோரியிருந்தார். அந்தக் கடிதத்தில் மறைந்தமேக்லின் டென்னிஸ் டி’குரூஸ் பிபிபி தலைவராக முறையாக அங்கீகரிக்கப்பட்டதுடன், கட்சிதொடர்பான மேல்முறையீடும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

 

இதற்கு முன்னதாக பிபிபி-யின் பதிவு சங்கங்களின் பதிவாளர் (RoS) மூலம் ரத்துசெய்யப்பட்டிருந்தது.

 

கேவியஸ்சின் முக்கிய வாதங்களில் ஒன்று, அந்தக் கடிதத்தில் உள்துறை அமைச்சர்நேரடியாக கையெழுத்திடாமல், அமைச்சின் அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டிருந்தார்என்பதாகும்.

 

எனினும், அந்தக் கடிதத்தை முழுமையாகப் படிக்கும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள முடிவுஉள்துறை அமைச்சரால் எடுக்கப்பட்டது என்பது தெளிவாக இருப்பதாக நீதிபதி ஹொக் லெங்தெரிவித்தார்.

 

கேவியஸ்சின் கட்சி உறுப்பினர் நிலை தொடர்பான வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

 

கேவியஸ் இதுவரை விடுவிக்கப்படாத திவாலானவர் என்பதால், சங்கங்கள் சட்டத்தின் பிரிவு9A-ன் கீழ் அவர் எந்தப் பதவியையும் வகிக்க முடியாது என நீதிபதி ஹொக் லெங்தெரிவித்தார்.

 

மேலும், 2018ஆம் ஆண்டு கட்சியின் உச்ச மன்றம் ஒருமனதாக எடுத்த முடிவைத் தொடர்ந்துகேவியஸ் பிபிபி உறுப்பினர் பதவியிலிருந்து விலகியவர் என்ற வாதத்தையும் நீதிமன்றம்ஏற்றுக்கொண்டது.

 

பிபிபி-யின் கட்சி அரசியலமைப்புச் சட்டத்தின் 30.4ஆம் பிரிவையும் நீதிபதிகள்சுட்டிக்காட்டினர். அதன் கீழ், கட்சி தொடர்பான எந்தவொரு விவகாரத்தையும்நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லும் உறுப்பினர் தானாகவே கட்சி உறுப்பினர் பதவியைஇழப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கேவியஸ் தனது நடவடிக்கை பொதுநலன் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப்பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது எனக் கூறியிருந்தபோதிலும், அவர் கோரியநிவாரணங்கள், அதில் பிரகடனங்களும் அடங்கும், தனிப்பட்ட தன்மை கொண்டவை எனநீதிபதி ஹொக் லெங் தெரிவித்தார்.

 

“உறுப்பினர் அல்லாதவராகவும், இன்னும் விடுவிக்கப்படாத திவாலானவராகவும் இருக்கும்மேல்முறையீட்டாளருக்கு எந்தவொரு பதவியையும் வகிக்கும் உரிமை இல்லை,” என அவர்தெரிவித்தார்.

 

சங்கங்கள் சட்டத்தின் கீழ் mandamus எனப்படும் கட்டாய உத்தரவையும் பிறப்பிக்க முடியாதுஎன்ற வாதத்தையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

 

கேவியஸ் சார்பில் வழக்கறிஞர்கள் எம். மனோகரன் மற்றும் கணேந்திர மனோகரன்ஆஜராகினர். சட்டத்துறைத் தலைவர் சார்பில் மூத்த மத்திய அரசின் சட்ட ஆலோசகர்நூர்ஹஃபிஸ்ஸா அஸிஸான் மற்றும் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முஹைரி நோஹ்ஆஜராகினர். லோகா பாலா மோகன் சார்பில் கவின் ஜெயபால் மற்றும் பர்வீனா கவுர்ஆகியோர் ஆஜராகினர்.

சென்னை, ஆக. 16:

மலேசியத் தமிழர் கலை, கலாச்சாரம் மற்றும் சமூகப் பணிகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, எஸ்.பி. மணிவாசகத்திற்கு ‘பெருந்தமிழன் ராஜராஜன்’ உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

 

மல்லை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், மல்லை சி.ஏ. சத்யா தலைமையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு வருகையாளராக மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

 

நிகழ்வில் பேசிய மல்லை சத்யா, “மணிவாசகம் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரிந்தவர். நல்ல மனிதராகவும், அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவராகவும் திகழ்கிறார். மலேசியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

 

கலை மற்றும் கலாச்சாரத் துறையிலும் அவர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரைப் போற்றும் வகையில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், மலேசியாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தியுள்ளார்.

 

அவரது நீண்டகால சேவையைப் பாராட்டும் வகையில், மல்லை தமிழ் சங்கத்தின் சார்பில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. அவரது புகழும் சேவையும் என்றும் நிலைத்திருக்க வேண்டும்” என்றார்.

 

மேலும், மலேசியாவில் இருந்து நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்த மல்லை சத்யா, டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரின் வருகைக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

விருது பெற்ற எஸ்.பி. மணிவாசகம் பேசுகையில், “எனது முக்கிய நண்பராகவும், நல்ல மனிதராகவும் இருந்து வரும் அண்ணன் சத்யா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சேவையைப் பாராட்டி இந்த உயரிய விருதை வழங்கிய மல்லை தமிழ் சங்கத்திற்கும், அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் எஸ்.பி. மணிவாசகத்தின் பணியைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்ட இந்த விருது, மலேசியத் தமிழர்களின் பங்களிப்பையும் சர்வதேச அளவில் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.