loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், ஆக. 4 – 

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 123 தொகுதிகளில் ஒரே நாளில் மாபெரும் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக மஇகாவின்தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா அறிவித்தார்.

 

இந்தப் போட்டி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 9.00 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்துதொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. கோலாலம்பூரில் உள்ள நேதாஜி மண்டபத்தில்நடைபெறும் நிகழ்வை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்தொடக்கி வைக்கவுள்ளார்.

 

இதுகுறித்து டத்தோ முருகையா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைமுன்னிட்டு ஏற்கனவே கூட்டு பிரார்த்தனை, குடும்ப தினம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும்நெடுந்தூர ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

 

அதன் தொடர்ச்சியாக, கல்வி மற்றும் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நாடுதழுவிய பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்என்றும் அவர் கூறினார்.

 

இந்த போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காக ஐந்துதலைப்புகளும், இடைநிலைப்பள்ளி மற்றும் பொதுப் பிரிவினருக்காக தனித்தனியாக ஐந்துதலைப்புகளும் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

 

இந்தப் போட்டி இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், மலாய் மற்றும் சீன சமூகத்தினருக்கும்திறந்ததாக இருக்கும். அவர்கள் மலாய் மொழியில் உரையாற்றி போட்டியில் பங்கேற்கலாம்என்றும் அவர் தெரிவித்தார்.

 

போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அவைபள்ளிகளில் வழங்கப்படும் இணைப் பாட நடவடிக்கைகளுக்கான (Co-curricular) மதிப்பெண்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

போட்டிக்கான நடுவர் குழுவில் தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள்இடம்பெறவுள்ளனர். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும்வழங்கி கௌரவிக்கப்படும்.

 

இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களதுபெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார். 

 

மஇகாவின் 80ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும்இந்தப் பேச்சுப் போட்டி, இளைஞர்களின் பேச்சாற்றலை வளர்ப்பதோடு பல இனமக்களிடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அவர் நம்பிக்கைதெரிவித்தார்.

கோலாலம்பூர், ஆக. 4 – 

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 123 தொகுதிகளில் ஒரே நாளில் மாபெரும் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக மஇகாவின்தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா அறிவித்தார்.

 

இந்தப் போட்டி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 9.00 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்துதொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. கோலாலம்பூரில் உள்ள நேதாஜி மண்டபத்தில்நடைபெறும் நிகழ்வை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்தொடக்கி வைக்கவுள்ளார்.

 

இதுகுறித்து டத்தோ முருகையா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைமுன்னிட்டு ஏற்கனவே கூட்டு பிரார்த்தனை, குடும்ப தினம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும்நெடுந்தூர ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

 

அதன் தொடர்ச்சியாக, கல்வி மற்றும் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நாடுதழுவிய பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்என்றும் அவர் கூறினார்.

 

இந்த போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காக ஐந்துதலைப்புகளும், இடைநிலைப்பள்ளி மற்றும் பொதுப் பிரிவினருக்காக தனித்தனியாக ஐந்துதலைப்புகளும் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

 

இந்தப் போட்டி இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், மலாய் மற்றும் சீன சமூகத்தினருக்கும்திறந்ததாக இருக்கும். அவர்கள் மலாய் மொழியில் உரையாற்றி போட்டியில் பங்கேற்கலாம்என்றும் அவர் தெரிவித்தார்.

 

போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அவைபள்ளிகளில் வழங்கப்படும் இணைப் பாட நடவடிக்கைகளுக்கான (Co-curricular) மதிப்பெண்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

போட்டிக்கான நடுவர் குழுவில் தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள்இடம்பெறவுள்ளனர். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும்வழங்கி கௌரவிக்கப்படும்.

 

இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களதுபெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார். 

 

மஇகாவின் 80ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும்இந்தப் பேச்சுப் போட்டி, இளைஞர்களின் பேச்சாற்றலை வளர்ப்பதோடு பல இனமக்களிடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அவர் நம்பிக்கைதெரிவித்தார்.

 

உலு சிலாங்கூர், ஆகஸ்ட் 1 –
மலேசிய தினம் மற்றும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுப்பற்று, இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தும் நோக்கில் உலு சிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் தலைமையில் சிறப்பு திரைப்படக் காட்சி நிகழ்ச்சி ரவாங்  ஏஇயோன் பேரங்காடி திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் கலந்து கொண்டு குடும்பத்தினருடன் திரைப்படங்களை கண்டு மகிழ்ந்தனர். பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி "ஸ்பைடர்மேன்" மற்றும் "ஜனநாயகன்" திரைப்படங்களைப் பார்வையிட்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசியக் கொடியான ஜாலுர் கெமிலாங் திரையில் தோன்றியதுடன் ஜாலுர் ககெர்மிலாங் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது திரையரங்கில் இருந்த அனைத்து இன மக்களும் தன்னெழுச்சியுடன் எழுந்து நின்று, ஒரே குரலில் பாடிய காட்சி அங்கு நிலவிய தேசிய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியது. 

மொழி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைத் தாண்டி மலேசியர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வை அந்த தருணம் பிரதிபலித்தது.

இந்நிகழ்ச்சி குறித்து டாக்டர் சத்திய பிரகாஷ் கூறுகையில், மலேசிய தினம் மற்றும் தேசிய தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; நாட்டின் சுதந்திரத்தையும், பல இன மக்களின் ஒற்றுமையையும் நினைவுகூரும் முக்கியமான தருணம் என்றும் தெரிவித்தார்.

மேலும், இன்று தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை இதுபோன்ற பல்வேறு ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்று சார்ந்த நிகழ்ச்சிகள் உலு சிலாங்கூர் பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களும் இதில் பங்கேற்று தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய உணர்வை மக்களிடையே வேரூன்றச் செய்யும் வகையில் நடைபெற்ற இந்த திரைப்பட நிகழ்ச்சி, பொழுதுபோக்கை மட்டுமல்லாமல் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மலேசியர் என்ற பெருமிதத்தை அனைவரின் மனதிலும் மேலும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

 

செலாயாங், ஆக. 2- நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியின் இந்திய வேட்பாளர்களின் வெற்றிக்காக மஇகா தொண்டர்கள் முழுமனதுடன் பாடுபட்ட போதிலும், அதே அர்ப்பணிப்பு மற்ற தரப்பினரிடமிருந்து கிடைக்கவில்லை என்ற வேதனையை மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா வெளிப்படுத்தினார்.

செலயாங் மஇகா தொகுதியின் மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "மற்றவர்களின் வெற்றிக்காக நாம் ஓடி ஓடி உழைத்தோம். ஆனால் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மற்றவர்கள் செயல்படவில்லை. அதுதான் நெகிரி மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கான மிகப்பெரிய வருத்தம்," என்று தெரிவித்தார்.

நெகிரி மாநிலத்தில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மஇகா உறுப்பினர்கள் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் அந்த அர்ப்பணிப்புக்கு இணையான ஒத்துழைப்பு கூட்டணியின் மற்ற தரப்புகளிடமிருந்து கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணியிலுள்ள கட்சிகள் நமக்கு ஆதரவு அளித்ததுபோல் நெகிரி தேர்தலில் அந்த ஆதரவை வழங்கவில்லை. கூட்டணியை பிரதிநிதித்து நின்ற மற்ற வேட்பாளர்களுக்கு கூட்டணியிலுள்ள கட்சிகள் மஇகாவின் வேட்பாளர்களுக்கு அந்த அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் சொன்னார்.

மேலும், தேர்தல் காலங்களில் பிறரின் வெற்றிக்காக மட்டும் உழைப்பதை விட, நமது சொந்த வேட்பாளர்களின் வெற்றியையே முதன்மையாகக் கருதி திட்டமிட்டு செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்  பதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்பை மஇகா இழந்துள்ளதாகவும், அது இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்தலின் போது பிற இன வாக்காளர்களில் பலர் வாக்களிக்க வராததும் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"தேசிய முன்னணி நெகிரி மாநிலத்தில் ஆட்சியை அமைத்திருந்தாலும், அதில் நமது சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாதது வருத்தமளிக்கிறது. இது எதிர்காலத்தில் திருத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும்," என்றார்.

எதிர்காலத்தில் சிலாங்கூர் மாநிலத் தேர்தல் நடைபெறும்போது, கடந்த அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, தேவையான அரசியல் நுணுக்கங்களையும் வியூகங்களையும் வகுத்து, மஇகா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த செலயாங் முன்னாள் மஇகா தொகுதி தலைவர் எம்.பி. ராஜாவுக்கு டத்தோ முருகையா தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

விழாவில் சிறப்பு பிரமுகர்கள், தொகுதியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மஇகாவின் வரலாறும் அதன் சேவைகளும் நினைவுகூரப்பட்டன.

ரவாங், ஆக 1-

ரவாங்  தமிழ்ப்பள்ளிக்கு  புதிய கட்டடம் கட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில் அது ஒருவரவேற்க கூடிய விஷயமாக இருந்தாலும் அந்த கட்டுமானத்திற்காக மாணவர்கள்விளையாட இருக்கும் திடலை பலி கொடுப்பது நியாமான செயல் இல்லை எனபெற்றோர்கள்  தமிழ் லென்ஸ்சிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

 

இருக்கும் ஒரே திடலை தாரைவாத்து கொடுத்து விட்டு மாணவர் எங்கும் போய்விளையாடுவார்கள்? இருப்பதே ஒரு சிறிய திடல் அதையும் கூறுபோடுவது நியாயமா எனஅவர்கள் கேள்வி எழுப்பினர்.

 

திடலுக்கு அருகே பலகையில் ஒரு மோசமான சூழலில் இருக்கும் கட்டடத்தை உடைத்துஅங்கு 3 அல்லது 4 மாடியில் கட்டடத்தை கட்டுங்கள்.

 

அதை விடுத்து திடலில் கை வைப்பது ஏன் ? திடலை இழந்து மாணவர்கள் விளையாட,பயிற்சி எடுக்க எங்கே செல்வார்கள்? பக்கத்து பள்ளியில் கையேந்தி நிற்கும் சூழலை தயவுசெய்து உருவாக்கி விடாதீர்கள்.

 

கல்வி அமைச்சு மற்றும் பள்ளி நிர்வாகம்  இதனை மறு பரிசீலனை  செய்து திடல் மீது கைவைப்பதை உடனடியாக நிறுத்த வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 2 ஆம்  திகதிபெற்றோர்களும் அவ்வட்டார இந்திய மக்களும் ரவாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் காலை8.30 மணிக்கு  ஒன்று கூடி  தங்களது எதிர்ப்பை கல்வி அமைச்சுக்கும் பள்ளி நிர்வாகதிற்கும்தெரிவிக்கவுள்ளனர்.

செய்தி : வெற்றி விக்டர்