loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், செப்.11-

 கடலோர மீனவ மக்களின் வாழ்க்கை, பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டி, நட்பு, காதல்மற்றும் பழிவாங்குதல் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள புதியதிரைப்படம் ‘மண்டாடி’.

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சத்யராஜ், மகிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகிலுள்ள கடலோர மீனவ கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டஇப்படத்தின் கதையில், அக்கிராம மக்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பாய்மரப்படகுப் போட்டி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

படகுப் போட்டியில் சிறந்து விளங்கும் முத்துக்காளி என்ற காளி கதாபாத்திரத்தில் சூரிநடித்துள்ளார். கடந்த காலத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் சொந்த ஊரை விட்டுசென்னை செல்லும் காளி, அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.

இந்நிலையில், சொந்த ஊரில் பழைய பகை காரணமாக உருவாகும் பிரச்சினை ஒன்றால் பலஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய சூழல்அவருக்கு ஏற்படுகிறது.

கிராமத்திற்குத் திரும்பிய காளி, பழைய நண்பர்கள், கடந்த கால காதல் மற்றும் படகுப்போட்டி என தனது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த பல சம்பவங்களை மீண்டும்எதிர்கொள்கிறார்.

ஒருகாலத்தில் சிறந்த படகுப் போட்டி வீரராக விளங்கிய காளி, மீண்டும் போட்டிக் களத்தில்இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குறிப்பாக, சுஹாஸ் ஏற்றுள்ளகதாபாத்திரத்துடனான பழைய நட்பு, மோதல் மற்றும் போட்டி ஆகியவை கதையைஅடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.

கடலில் நடைபெறும் பரபரப்பான பாய்மரப் படகுப் போட்டிக் காட்சிகளுடன், மீனவ மக்களின்அன்றாட வாழ்க்கைப் போராட்டம், தனிப்பட்ட பகை, நட்பு மற்றும் காதல் ஆகியவை கதையில்ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

சூரியின் நடிப்பு படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. கடலோர கிராமத்து மனிதராகஅவரது உடல்மொழியும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்த விதமும் கவனத்தைஈர்க்கின்றன.

கடலோர மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரியத்தையும் திரையில் பதிவுசெய்யும் வகையில் ‘மண்டாடி’ தனக்கென ஒரு இடத்தைப் பெறுகிறது.

உலகம் முழுவதும் நேற்று வெளியான இப்படம், மலேசியாவிலும் டாமான்சாரா பெவிலியன்வளாகத்தில் உள்ள திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

மலேசியாவில் இப்படத்தின் விநியோகப் பணிகளை 3 Dot Movie நிறுவனமும், சந்தைப்படுத்தல் பணிகளை DAK Evolution Trading நிறுவனமும் மேற்கொள்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர்,செப்.11-

 சிறுவயது முதலே பேக்கரி மற்றும் கேக் தயாரிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தை விடாமல்தொடர்ந்து வளர்த்து, இன்று அதே துறையில் சொந்த தொழிலை உருவாக்கியுள்ளார்விக்னேஸ்வரி நாராஜா.

அவரது முயற்சியின் அடுத்த கட்டமாக ‘பென்சி அக்கடாமி’ என்ற பெயரில் பேக்கரி பயிற்சிநிலையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. OUG Parklane பகுதியில் அமைந்துள்ள இந்தஅக்கடாமி, பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு தங்களது திறமைகளைவளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

தனது பயணம் குறித்து விக்னேஸ்வரி நாராஜா கூறுகையில், சிறுவயது முதலே பேக்கரிதுறையில் தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாக தெரிவித்தார். 

அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் தயாரித்து விற்பனைசெய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது அனுபவத்தையும் திறமையையும்மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சிலருக்கு கேக் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகளைவழங்கியதாகவும் கூறினார்.

கேக் விற்பனையில் தொடங்கிய தனது பயணம், தற்போது பயிற்சி வழங்கும் அக்கடாமியைதொடங்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“சிறுவயதில் எனக்கு இருந்த விருப்பத்தை இன்று ஒரு சொந்த தொழிலாக மாற்றியுள்ளேன். ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் வியாபாரத்தை மேற்கொண்டேன். அதன் பின்னர்என்னிடம் கற்றுக்கொள்ள விரும்பிய சிலருக்கு பயிற்சி வழங்கினேன். அந்த அனுபவத்தின்தொடர்ச்சியாகவே தற்போது பென்சி அக்கடாமியை ஆரம்பித்துள்ளேன்,” என விக்னேஸ்வரிதெரிவித்தார்.

அக்கடாமியின் திறப்பு விழா இன்று நடைப்பெறுகிறது. இதனை திறந்து வைக்ககோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.கே.கே.ராஜாவருகையளித்திருந்தார். இந்த குறுகிய நிலையில், அதற்குள் 5 பேர் பயிற்சியில்இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தமது முயற்சிக்கு கிடைத்துள்ள ஆரம்பகட்ட வரவேற்பாக அமைந்துள்ளதாகவும் அவர்மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், இந்த வார சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பென்சிஅக்கடாமிக்கு நேரடியாக வந்து, அங்கு வழங்கப்படும் பயிற்சிகள், பாடத்திட்டங்கள் மற்றும்பேக்கரி துறை தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும்அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்கடாமியின் தொடக்கத்தை முன்னிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பதிவு செய்யும் புதியபயிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்கள், குறிப்பாக கேக் தயாரிப்பு மற்றும் அதனைதொழிலாக முன்னெடுக்க விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பென்சிஅக்கடாமியை அணுகலாம் என விக்னேஸ்வரி நாராஜா தெரிவித்தார்.

சிறுவயது விருப்பத்தை விடாமுயற்சியுடன் வளர்த்து, சிறிய அளவிலான கேக்வியாபாரத்திலிருந்து பயிற்சி அக்கடாமி வரை தனது பயணத்தை முன்னெடுத்துள்ளவிக்னேஸ்வரி நாராஜாவின் இந்த முயற்சி, பேக்கரி துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு புதியவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொரீஷியஸ், செப் 9- 

13-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகளாவிய பொருளாதார உச்சிமாநாடு நாளை செப்டம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரைவில் மொரீஷியஸில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், உலகத் தமிழர்பொருளாதார அறக்கட்டளையின் (WTEF) தலைவரும், சென்னை மெட்ராஸ் டெவலப்மென்ட்சொசைட்டி (MDS) இன் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், தனது குழுவினருடன்மொரீஷியஸை சென்றடைந்தார்.

மொரீஷியஸ் சென்றடைந்த டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் மற்றும் அவரது குழுவினரை, மொரீஷியஸ் அரசின் வெளியுறவுத்துறை இளைய அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர்ராஜன் நர்சிங்கன் அன்புடன் வரவேற்றார்.

மொரீஷியஸில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச்சேர்ந்த அரசாங்கப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்முறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேசத் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள், சர்வதேச வர்த்தகம், தொழில்முனைவோர் வளர்ச்சி, வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் சர்வதேசத் தொழில்தொடர்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாநாட்டில்கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

மாநாட்டின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைப்பதற்காக டாக்டர்வி.ஆர்.எஸ். சம்பத் மற்றும் அவரது குழுவினர் முன்கூட்டியே மொரீஷியஸ் சென்றுள்ளனர்.

இந்த மாநாட்டை உலகத் தமிழர் பொருளாதார அறக்கட்டளை (WTEF) மற்றும் சென்னைமெட்ராஸ் டெவலப்மென்ட் சொசைட்டி (MDS) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன. மொரீஷியஸைச் சேர்ந்த இந்தியன் பிசினஸ் கவுன்சில் உள்ளூர் கூட்டாளராகசெயல்படுகிறது.

கோலாலம்பூர்,செப்.10-

கேகேபி தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் வாரியத்தில் 2030ஆம் ஆண்டுக்குள்30 விழுக்காடு இளைஞர்களை இணைத்து, சங்கத்தின் எதிர்கால நிர்வாகத்தில் இளையதலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர்என்.எஸ். தங்கராஜ் தெரிவித்தார்.

சங்கத்தின் செயல்பாடுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துதென் கொரியாவைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்றசந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பினரும் தங்களது கூட்டுறவு நிறுவனங்களின்செயல்பாடுகள், நிர்வாக முறைகள் மற்றும் உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்படும்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கேகேபி தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, உறுப்பினர்களின் பங்களிப்பு எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது, சங்கத்தின் திட்டங்கள்எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தென்கொரியக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் கேட்டறிந்தனர்.

அவர்களின் கேள்விகளுக்கு சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் விளக்கங்களைவழங்கியதுடன், சங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

கூட்டுறவுச் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும்முக்கியமானது என்பதை வலியுறுத்திய தங்கராஜ், புதிய தலைமுறையினரை நிர்வாகத்தில்கொண்டு வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் சங்கத்தின் வாரியத்தில் 30 விழுக்காடு இளைஞர்களைஇணைப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்களின் புதிய சிந்தனைகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் நிர்வாகத் திறன்களைகூட்டுறவுத் துறையின் வளர்ச்சியுடன் இணைப்பதன் மூலம் சங்கத்தின் எதிர்காலசெயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, சங்கத்தின் நிதி அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் சொத்துடமைகளைஅதிகரிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தங்கராஜ் தெரிவித்தார்.

குறிப்பாக, எதிர்காலத்தில் நிலங்களை வாங்குவதற்கான திட்டம் இருப்பதாகவும், சங்கத்தின்சொத்து மதிப்பை அதிகரிக்கும் வகையில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ளநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அங்கத்தினர்களின் கூட்டுப் பங்களிப்பின் மூலம் கட்டடங்கள் மற்றும் பிறசொத்துகளை வாங்கி, அதன் மூலம் அங்கத்தினர்களையே அந்தச் சொத்துகளின்உரிமையாளர்களாக மாற்றும் வகையிலான திட்டமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் சங்கத்தின் வளர்ச்சியுடன் அங்கத்தினர்களும் நேரடியாகப் பயனடையும்வாய்ப்பை உருவாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவு என்பது அங்கத்தினர்களின் ஒற்றுமை மற்றும் பங்களிப்பைஅடிப்படையாகக் கொண்ட அமைப்பு என்பதால், சங்கத்தின் அனைத்து திட்டங்களிலும்அங்கத்தினர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றும் தங்கராஜ் கேட்டுக்கொண்டார்.

சங்கத்தின் வளர்ச்சி நிர்வாகிகளின் முயற்சியால் மட்டும் சாத்தியமில்லை என்றும், ஒவ்வொரு அங்கத்தினரின் ஆதரவு, பங்களிப்பு மற்றும் ஈடுபாடும் அவசியம் என்றும் அவர்வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் சங்கத்தை மேலும் வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டகூட்டுறவு நிறுவனமாக உருவாக்குவதுடன், அதன் வளர்ச்சியின் பயன்கள் அனைத்துஅங்கத்தினர்களையும் சென்றடையும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும்அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,செப்.9-

மலேசிய முத்தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ‘முத்தமிழ் விழா ’26’ எதிர்வரும் செப்டம்பர்12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனில்உள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.

 

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநரும், மலேசிய முத்தமிழ்ச்சங்கத்தின்ஆலோசகருமான முத்தமிழ்க்காவலர் தமிழ்வேள் டத்தோ பா. சகாதேவன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளார்.

 

இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இலக்கியவாதிகள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்பான இலக்கிய உரைகளை வழங்கவுள்ளனர். மேலும், தமிழ்நாடு திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளையின் பொறுப்பாளர்களும்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

 

இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘கலைமகள்’ இதழின் ஆசிரியர் கீழாம்பூர்சங்கரசுப்ரமணியன் தொகுத்துள்ள ‘மலேசிய சிறுகதைகள்’ நூல் வெளியீடும் விழாவில்நடைபெறவுள்ளது. தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுகதைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

 

விழாவில் இலக்கிய உரையாற்றவுள்ள சிறப்பு உரையாளர்களுக்கு மலேசியாவின் சோழன்உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் சிறப்பு இலக்கிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

 

மேலும், பத்துமலை கவிஞர் வைரகவி ‘மலேசியத் தமிழர்கள்’ என்ற தலைப்பில் கவிதைவழங்கவுள்ளார்.

 

விழாவில் இடம்பெறும் சிறப்பு இலக்கிய உரைகளும் உரையாளர்களும் வருமாறு:

 

- மேனாள் காவல்துறை ஆணையாளர் டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகன் – தமிழர் வாழ்வியலில்இலக்கிய மாண்புகள்

- தமிழ்நாடு பேராசிரியர் முனைவர் ஞானஜோதி சரவணன் – தமிழர் தம் அகவாழ்வு

- தமிழ்நாடு பேராசிரியர் முனைவர் கா. வேலம்மாள் – திருக்குறள் காமத்துப்பால் – வாழ்வியல் மருந்து

- கலைமாமணி கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் – பாரதியின் அகன்ற பார்வை

- பேராசிரியர் முனைவர் ரவி – உலக வரலாற்றில் தமிழ்ப்பண்பாடு – ஒரு தொல்லியல்பார்வை

- மலேசியா கரு கார்த்தி – கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்

 

தமிழ் இலக்கிய மாண்புகளையும் மரபுகளையும் அறிந்துகொள்வதுடன், தமிழர்களின்வேர்கள் மற்றும் வரலாறுகளைப் புரிந்துகொள்ளும் வகையில் சங்க இலக்கியங்கள் முதல்இக்கால இலக்கியங்கள் வரையிலான பல்வேறு இலக்கிய உரைகளை வழங்குவதேஇவ்விழாவின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதையொட்டி, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டுசிறப்பிக்குமாறு மலேசிய முத்தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

 

மேலதிக தகவல்களுக்கு மலேசிய முத்தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கருபன்னீர்செல்வத்தை 012-3056799 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.