loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

செபுத்தே, ஏப் 17-
தனது அரசியல் வாழ்வில் கட்சியில் உறுப்பினராக தனது மக்கள் சேவையை தொடங்கியவர் அனிதா வேலாயுதம் பிள்ளை.

கடந்த 10 வருடங்களாக கட்சியிலிருந்து பொது மக்களுக்கும்
செபுத்தே தொகுதி மக்களுக்கும் இவர் வழங்கிய சேவைகள் அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை செபுத்தே கெஅடிலான் தொகுதி தலைவராக வெற்றி பெற்றதே அதற்கு தக்க சான்றாக விளங்குகிறது.

வருகின்ற 19 ஏப்ரல் 2025-இல் நடைபெறவிருக்கும் செபுத்தே கெஅடிலான் தொகுதி தேர்தலில் அனிதா தனது தொகுதி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார்.

தனது தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளையும் தூரநோக்கு திட்டங்களையும் வழங்குவதற்கே மீண்டும் செபுத்தே கெஅடிலான் தொகுதித் தலைவருக்கு போட்டியிடுவதாக அனிதா வேலாயுதம் பிள்ளை கூறினார்.

மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த இவர் கெஅடிலான் கட்சி ஸ்ரீகண்டி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

கட்சியின் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் சேவையாற்றிருப்பதாக கூறிய இவர், மக்களுக்கும் கல்வி உதவி, மருத்துவ உதவி, இயற்கை பேரிடர் கால உதவி என கால நேரம் பாராமல் சேவையை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செபுத்தே தொகுதி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு இன, மத பேதமின்றி தொடர்ந்து சேவையாற்றுவேன் என்றார் அனிதா.

மேலும் ஒற்றுமை மடானி அரசாங்கத்தின் கொள்கைப் படி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மாற்றங்களையும் திட்டங்களையும் கொண்டுவர லட்சியம் கொண்டுள்ளதால், தொகுதியிலுள்ள உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை தனக்களித்து மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று அனிதா கேட்டுக் கொண்டார்.

இவரை தொடர்ந்து அனிதா அணியிலிருந்து டத்தோ டாக்டர் வோங் ஏங் யுவான் துணைத் தலைவருக்காவும் மற்றும் ஹிஷாமுடின் முகமட் ஹல் ஹஜா உதவித் தலைவருக்காக போட்டியிடுகிறார்கள்.

கோலாலம்பூர், ஏப்.18-
பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் தம்பி அப்துல்லா பகுதியில் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி லிட்டில் டாக்காவாக மாறிவருகிறது என டத்தோ கலைவாணர் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்பாக கடந்த 12 ஆம் திகதி அன்று சம்பந்தப்பட்ட இடத்தில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய டத்தோ கலைவாணர், அந்நியர்கள் சட்டத்திற்கு புறம்பாக மாளிகை கடைகள், உணவகங்கள், முடித்திருத்தும் கடைகள் போன்றவற்றை இங்கு நடத்தி வருவதாகவும், இது உள்நாட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாகவும்   தெரிவித்திருந்தார்.

மேலும் அவர்கள் அங்கு சட்ட சட்டவிரோத சிகரெட்டுகள், மதுபானங்கள், உள்நாட்டு அரிசி மற்றும் சமையல் எண்ணெய்களை வியாபாரம் செய்து வந்தததை ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் அம்பலப்படுத்தினார்.

இந்த செய்தி தொடர்பான காணொளி நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில மலாய் ஊடகங்கள் மற்றும் தமிழ் ஊடகமான தமிழ் லென்ஸ்சின் டிக் டாக் கணக்கிலும் பகிரப்பட்டிருந்தது. தமிழ்லென்ஸ்சில் பகிரப்பட்ட அந்த காணொளியை இதுவரையில்  சுமார் 1.1 மில்லியன் மக்கள் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, மாநில அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கலத்தில் இறங்கி அதிரடி சோதனைதை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடத்தப்பட்ட் அதிரடி சோதனையின் வழி  அங்கு செயல்பட்டு வந்த சட்டவிரோத கடைகள்  மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் சில கடைகள் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு இருந்த பல சட்டவிரோத குடியேறிகளும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்று டத்தோ கலைவாணர் நேரடியாக காலத்தில் இறங்கி இந்த நடவடிக்கைதை மேற்கொண்டது மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு விவகாரத்திலும் நேரடியாக களத்தில் இறங்கி செயல்படுவது டத்தோ கலைவாணர் அவர்களின் கொள்கையாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இத்தனை நாட்களாக சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு அந்த இடத்தில்  ஆதிக்கம் செய்துக்கொண்டிருந்த அந்நியர்களின் ஆணவத்தை அடக்கி காட்டியுள்ளார் டத்தோ கலைவாணர்.

இந்த இவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஏப்.16-
ஜாலான் செராஸ் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் (பெர்தாமா) கூட்டு முயற்சியாக அறிமுகம் செய்யும் 'வாசிப்பை நேசிப்போம்' 61 நித்திரை கதைகள்  திட்டம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை வளப்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த அற்புதமான கூட்டு முயற்சியில் முன்னாள் மாணவச் சங்கங்களையும் சமூகத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, நித்திரை கதைகள் தொகுப்பை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் இளைய தலைமுறையை ஒரே  இலக்குடன் செயல்பட பெரிதும் ஊக்குவிக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதுடன் கதை சொல்லும் களத்தை உருவாக்கி, மாணவர்களின் மொழி ஆற்றலை மேம்ப்படுத்த முடியும்.

இந்த வாசிப்பை நேசிப்போம்- 61 நித்திரை கதை புத்தகத்தை ஆசிரியர்கள் நிரோஷா கோபால், கஸ்தூரி ராமலிங்கம் ஆகியோர் எழுதி தயாரித்துள்ளனர்.

இந்த வாசிப்பு திட்டத்தின்அறிமுக விழா இன்று பிரிக்பீல்ட்சிலுள்ள அன்னலட்சுமி உணவகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தொழில் முனைவோத் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சரின் மூத்த செயலாளர் டத்தோ அன்புமணி பாலன