loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், மே 26–

சுங்கை பெட்டாணி எஸ்.ஜி டிவிசன் பகுதியில் செயலில் இருந்த “கேங் ரமேஸ்” எனப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபரை மலேசிய அரச போலீஸ் ( PDRM) கைது செய்துள்ளது.

குற்றச்செயல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட  “ஒப் திகா” நடவடிக்கையின் கீழ் கடந்த மே 22ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுங்கை பெட்டாணி மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டின் அடிப்படையிலும், உளவுத்துறையின் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு (Red Notice) இருந்ததாலும் அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் திட்டமிட்ட குற்றக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறார். இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 130V கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், வரும் மே 29ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  சந்தேகநபர் மீது, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கெடா மாநிலத்தின் படாங் செராய் மற்றும் பெடோங் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி கொலை வழக்குகள் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கண்டறிந்து கைது செய்ய இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய நெருங்கிய ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என டத்தோ எம். குமார் கூறினார்.

கோலாலம்பூர், மே 22 –
Pertubuhan Bitara Wawasan இயக்கத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை மேம்பாட்டு பயிலரங்கம் இரண்டு நாட்கள் குயில் ஜெயபக்தி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பயிலரங்கில் பல தமிழ்ப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ரவாஙைச் சேர்ந்த Achievers Mind Academy மற்றும் அதன் அரசு சாரா இயக்க குழுவினர் இந்த நிகழ்ச்சியை திறம்பட வழிநடத்தினர்.

மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்ச்சி, மேடைப் பேச்சுத் திறன், பயமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

தெளிவான கருத்தமைப்பு, பேச்சை ஒழுங்குபடுத்துதல், கதை சொல்லும் திறன், நம்பிக்கையுடன் உரையாற்றுதல் போன்ற பல அம்சங்கள் பயிற்சியில் கற்பிக்கப்பட்டன.

பயிலரங்கின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குயில் பத்திரிகை ஆசிரியரும் ஜெய பக்தி நிறுவன இயக்குநருமான டத்தோ டாக்டர் கு.செல்வராஜு தலைமை ஏற்று உரையாற்றி, மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செந்தூல் முத்தக படிபகம் தலைவர் பி. இராமன், பிந்தாரா வாவாசன் இயக்கத் தலைவர் ஆசிரியர் சுப்ரமணியம், Achievers Mind Academy நிறுவனர் மாஸ்டர் அழகன் கோவிந்தன், டத்தோ டாக்டர் சமரான் ரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிறைவு நிகழ்வில் மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட பேச்சுத் திறன்களை மேடையில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

கோலாலம்பூர், மே 25 –
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் தேசிய அளவில் நடைபெற்று வருவதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா தெரிவித்தார்.

இம்மாதம் 21ஆம் தேதி மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இம்மாதம் 31ஆம் தேதி மஇகாவின் மாபெரும் குடும்ப தின விழா நாடு முழுவதும் உள்ள 150 தொகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விழாவிற்கான பரிசுப் பொருட்கள் அனைத்தும் நேற்று சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும்
மூவின மக்களும் இணைந்து கலந்து கொள்ளும் வகையில் இந்த குடும்ப தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல என்றும், கட்சி பாராமல் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்த குடும்ப தின விழா மூலம் மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.

விழாவில் இசை நாற்காலி, பூர்வகுடி மக்களின் “சும்பிட்”, சீனர்களின் “சும்பா” விளையாட்டு, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, வரும் ஜூன் 7ஆம் தேதி மஇகா சார்பில் நாடு தழுவிய அளவில் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், அது 150 மஇகா தொகுதிகளிலும் நடைபெறும் என்றும் கூறினார்.

மக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியே இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் ஏழு முக்கிய நிகழ்ச்சிகளிலும் மூவின மக்களும் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, குடும்ப தின விழா பொறுப்பாளர் டத்தோ மோகனா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வரும் மே 31ஆம் தேதி காலை 7.30 மணி முதல் குடும்ப தின விழா நடைபெறும் என்றும், இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்வாக அமையும் என்றும் அவர் கூறினார்.

மஇகா தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதை இந்த விழா எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர்,மே 25-
கோலாலம்பூரில் இருந்து லண்டன் வரை மோட்டார் சைக்கிளில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் மலேசிய தமிழரான டத்தோ ஆனந்தன், இன்று தனது “MERDEKA RIDE - 2026” பயணத்தை உற்சாகமாகத் தொடங்கினார்.

மலேசியாவின் 2026 ஆம் ஆண்டு மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த அசாதாரண முயற்சியில், சுமார் 24,700 கிலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களுக்குள் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தாய்லாந்து, லாவோஸ், சீனா, கசகஸ்தான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா, ருமேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் வழியாக இந்தப் பயணம் நடைபெறவுள்ளது.

நகர சாலைகள் மட்டுமின்றி, மண் பாதைகள், காட்டு வழிகள், ஆறுகள் மற்றும் சேறு சகதிப் பகுதிகளையும் கடந்து செல்லும் இந்த சாகசப் பயணம் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

இடது முழங்காலில் காயம் இருந்தபோதிலும், ஆனந்தன் தனது உறுதியையும் ஆர்வத்தையும் இழக்காமல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மெர்டேக்கா தினமான ஆகஸ்ட் 31 அன்று லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே அவரது முக்கிய இலக்காகும்.

“SHADOWFOX” எனும் மோட்டார் சைக்கிள் சாகசக் குழுவை வழிநடத்தி வரும் ஆனந்தன், இதற்கு முன்பு சென்னை நோக்கி சர்வதேச சாகசப் பயணமும், நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் தேசிய அளவிலான பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.

கொரோனா காலத் தடைகளுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது பெரிய சாகச முயற்சியாக லண்டன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த சாகசப் பயணத்தை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் செனட்டர் டத்தோ சி. சிவராசா, மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மோட்டார் சைக்கிள் சாகச வீரர்கள் ஒன்று கூடி, டத்தோ ஆனந்தனை வாழ்த்தி உற்சாகமாக வழியனுப்பினர்.

கோலாலம்பூர்,மே 25-
கோலாலம்பூரில் இருந்து லண்டன் வரை மோட்டார் சைக்கிளில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் மலேசிய தமிழரான டத்தோ ஆனந்தன், இன்று தனது “MERDEKA RIDE - 2026” பயணத்தை உற்சாகமாகத் தொடங்கினார்.

மலேசியாவின் 2026 ஆம் ஆண்டு மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த அசாதாரண முயற்சியில், சுமார் 24,700 கிலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களுக்குள் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தாய்லாந்து, லாவோஸ், சீனா, கசகஸ்தான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா, ருமேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் வழியாக இந்தப் பயணம் நடைபெறவுள்ளது.

நகர சாலைகள் மட்டுமின்றி, மண் பாதைகள், காட்டு வழிகள், ஆறுகள் மற்றும் சேறு சகதிப் பகுதிகளையும் கடந்து செல்லும் இந்த சாகசப் பயணம் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

இடது முழங்காலில் காயம் இருந்தபோதிலும், ஆனந்தன் தனது உறுதியையும் ஆர்வத்தையும் இழக்காமல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மெர்டேக்கா தினமான ஆகஸ்ட் 31 அன்று லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே அவரது முக்கிய இலக்காகும்.

“SHADOWFOX” எனும் மோட்டார் சைக்கிள் சாகசக் குழுவை வழிநடத்தி வரும் ஆனந்தன், இதற்கு முன்பு சென்னை நோக்கி சர்வதேச சாகசப் பயணமும், நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் தேசிய அளவிலான பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.

கொரோனா காலத் தடைகளுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது பெரிய சாகச முயற்சியாக லண்டன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த சாகசப் பயணத்தை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் செனட்டர் டத்தோ சி. சிவராசா, மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மோட்டார் சைக்கிள் சாகச வீரர்கள் ஒன்று கூடி, டத்தோ ஆனந்தனை வாழ்த்தி உற்சாகமாக வழியனுப்பினர்.