loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

அன்பு மலேசிய சகோதரர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தத் தமிழ் புத்தாண்டான சித்திரைப் புத்தாண்டு, நமது கடந்த கால சாதனைகளைத் திரும்பிப் பார்ப்பதற்கும், பிரகாசமான, வளமான எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துவதற்கும் முக்கியத் தருணமாக அமைகிறது.

இலக்கவியல் அமைச்சில், எந்த ஒரு பாகுபாடுமின்றி, ஒவ்வொரு மலேசியரும் வருங்காலத்தை நோக்கிய தொழில்நுட்பப் புத்தாக்கதில் வலுப்பெறுவதை உறுதி செய்வதில் நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம். இலக்கவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்,  நமது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தி,  நாட்டை மேம்பாடடையச் செய்வதே எங்கள் இலக்காகும்.

இந்தப் புதிய வருடத்தை நாம் கொண்டாடும் அதே வேளையில், நம்மைச் சுற்றி நிகழும் உலகின் சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய கிழக்கில் தொடரும் மோதலானது உலகளாவிய நிலையில் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது, அதன் தாக்கம் நமது நாட்டிலும் உணரப்படுகிறது. எரிசக்தி விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் நிலையில்லா ஏற்ற இறக்கங்கள், நமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையில், மக்களுக்குப் பெரும் சுமையாக அமையுவதோடு நமது அன்றாட வாழ்க்கையையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

மடானி அரசாங்கம் இந்தப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக அயராது உழைத்து வருகிறது, இருந்தாலும், மக்களின் ஆதரவில்லாமல், எங்களால் இந்தச் சவாலை எதிர்கொள்வது கடினம்.

உலகளாவிய ரீதியில் நிலைத்தன்மையில்லாத காலகட்டத்தில், ஒவ்வொரு மலேசியரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. நமது எரிசக்திப் பாதுகாப்பையும் பொருளாதார மீட்சியையும் உறுதி செய்ய, நாம் விவேகத்துடன் செயல்படுவதோடு மட்டும் அல்லாமல், அரசின் முன்னெடுப்புகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வலிமையையும் தாண்டி, சமூக நல்லிணக்கமே நமது மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. தற்போதைய காலகட்டத்தில், நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக, வேறுபாடுகளைக் களைந்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டிருப்பது இன்றியமையாததாகும். நிலைத்தன்மையில்லா உலகச் சூழலில், பரஸ்பர மரியாதையும் சுபீட்சமான சூழலை உருவாக்க நாம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளுமே,  வரும் தலைமுறையினருக்காக, இந்த நாட்டில் நாம் உருவாக்கும் நிலையான பாதுகாப்பான அடித்தளமாகும்.

புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தை குறிப்பது போலவே பேதத்தைக் கடந்த ஒற்றுமையான மலேசியாவாக புதுப்பிக்கப்பட்ட உணர்வையும் குறிக்கட்டும்.
நாம் நமது குடும்பத்தினருடன் கலாச்சார உணவுகளை உண்டு மகிழ்ந்து, பெரியோர்களின் ஆசி பெற ஒன்றுகூடும் இந்த வேளையில் உலக அமைதிக்காகவும், நமது அன்புக்குரிய மலேசியாவின் நல்லிணக்கம் நிலைத்திருக்கவும் பிரார்த்திப்போம். இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கு இனிய வைசாகி மற்றும் விஷு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ
இலக்கவியல் அமைச்சர்
ஜ.செ.க தேசியத் தலைவர்

கோலாலம்பூர், ஏப்.11-

நாட்டில் டீசல் விலை வாரத்திற்கு வாரம் உயர்ந்து வருவதால் குத்தகையாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகையால் டீசலுக்கு நிலையான விலையை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கம் மானியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அதன் தலைவர் ஜி.ஆனந்தன் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் நடக்கும் போரால் பெட்ரோல் விலை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக டீசலின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு எங்களை போன்ற குத்தகையாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.

காரணம் ஒரு குத்தகையை பெறுவதற்காக விலைப் பட்டியலை நாங்கள் வழங்குகிறோம்.

அதில் டீசலில் விலையை அடிப்படையாக கொண்டும் மொத்த விலை வழங்கப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு வாரமும் விலை உயர்ந்தால் நாங்கள் எப்படி உறுதியான விலைப் பட்டியலை கொடுக்க முடியும்.
அப்படியே இந்த விலையை வைத்து குத்தகையை பெற்றால் அது எங்களுக்கு நஷ்டத்தை தான் தரும்.

ஆகவே இவ்விவகாரத்தை அரசாங்கம் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் டீசலுக்கு நிலையான விலையை அறிவிக்க வேண்டும்.

இல்லையென்றால் அரசாங்கம் மானியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று ஆனந்தன் மேலும் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர், மார்ச் 7-
பத்து கேவ்ஸில் உள்ள ஸ்ரீ பாலா இல்லம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒரு சிறுவன் மீது உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் புகாரை மஇகா பிரிகேட் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் மன உளைச்சல், தூக்கக் குறைவு மற்றும் கல்வி பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அவரின் தந்தை செய்த போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது மிகக் கொடூரமானதும் மனிதநேயமற்ற செயலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், போலீசார் உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா பிரிகேட் தலைவர் எண்ட்ரு டேவிட் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சமூக நலத்துறை நாடு முழுவதும் குழந்தைகள் இல்லங்களில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க தயாராக இருப்பதாகவும், அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பும் உளவியல் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்,மார்ச்5-

இசைக் கலைஞர்கள் இணைந்து, அமரர் கலைஞர் நல்லதம்பி அவர்களுக்கு நினைவாக “நிநைவு அஞ்சலி” நிகழ்வை நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சி வரும் 7 ஏப்ரல் 2026 அன்று மாலை 7.11 மணி அளவில், கோலாலம்பூரில் அமைந்துள்ள கே.ஆர்.சோமா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கலைஞர் நல்லதம்பியின் கலைப்பணிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இசை கலைஞர்களுடன் இணைந்து அலை ஓசை அப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். 

இசை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு
T.M.S. சிவகுரு – 016-287 9615,
மாஸ்டர் டாக்டர் அப்பு – 012-666 4652,
அசோக் – 016-346 6916,
நிஷா – 010-251 1639 ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

இந்நிகழ்வு கலைஞர்களின் ஒற்றுமையையும், மறைந்த கலைஞரின் நினைவையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறுகிறது.

கோலாலம்பூர் ஏப்ரல்-4

இந்த நாட்டில் மிக பழைமை வாய்ந்த  இந்து சங்கத்தின் 60 ஆம் ஆண்டு  வைர விழா தலைநகர் கலா மண்டபத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சி  மாலை 5.30 மணிக்கு  சரியாக ஆரம்பித்த நேரத்தில் , சுமார் கால் பகுதி இடமே நிரப்பப்பட்டது.

சிறிது நேரம் கழித்து கூட்டம் வர தொடங்கியது அப்போதும் சபையில் பாதி இடம் நிரப்பப்பட்டது.

தலைவரின் தலைமை உரை முடிந்து செய்தியாளர் சந்திப்பு நடக்கும் வரை  பாதி இடம் காலியாக இருந்தது.

மலேசிய முழுவதும் வட்டாரம் வைத்துள்ள ஒரு சங்கம்.  தனது 60 ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. கூட்டம் இப்படியாகவா?  இருக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.

உறுப்பினர்களுக்கு தகவல் சென்றதா? அல்லது தலைவர் மீது உள்ள அதிருப்தியா? என தெரியவில்லை ஆனால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பல உறுப்பினர்களின் முகம் வாடி புலம்ப தொடங்கியதை  தமிழ் லென்ஸ் கண்காணித்து.

அதோடு மட்டுமல்லாமல் ஆங்காங்கே உறுப்பினர்கள் புலனத்தின் வாயிலாக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும் நமக்கு கிடைத்துள்ளது.

சிலருக்கு முறையான அழைப்பும் கிடைக்கவில்லை எனவும் தகவல் தெரியவந்துள்ளது.

எது எப்படியோ இந்து சங்கம் ஒரு சமய அமைப்பு ,அது அரசியல் கட்சியல்ல ஆனால்   ஒரு பழமை வாய்ந்த சங்கத்தின் வைர விழா வெறிச்சோடி இருந்தது உறுப்பினர்களுக்கு மிக பெரிய வருத்தம் இது உண்மை.

சபை நிறைந்திருக்க வேண்டும்.

பதவி அரசியலில் ஒரு மாபெரும் இயக்கத்தின் விழா இப்படி பாதி சபை பாதி மனதோடு நிறைவுற்றது வருத்தம்.

இதை சம்பத்தப்பட்டவர் உணர வேண்டும் .

செய்தி : வெற்றி விக்டர்