loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ரவாங், ஆக 1-

ரவாங்  தமிழ்ப்பள்ளிக்கு  புதிய கட்டடம் கட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில் அது ஒருவரவேற்க கூடிய விஷயமாக இருந்தாலும் அந்த கட்டுமானத்திற்காக மாணவர்கள்விளையாட இருக்கும் திடலை பலி கொடுப்பது நியாமான செயல் இல்லை எனபெற்றோர்கள்  தமிழ் லென்ஸ்சிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

 

இருக்கும் ஒரே திடலை தாரைவாத்து கொடுத்து விட்டு மாணவர் எங்கும் போய்விளையாடுவார்கள்? இருப்பதே ஒரு சிறிய திடல் அதையும் கூறுபோடுவது நியாயமா எனஅவர்கள் கேள்வி எழுப்பினர்.

 

திடலுக்கு அருகே பலகையில் ஒரு மோசமான சூழலில் இருக்கும் கட்டடத்தை உடைத்துஅங்கு 3 அல்லது 4 மாடியில் கட்டடத்தை கட்டுங்கள்.

 

அதை விடுத்து திடலில் கை வைப்பது ஏன் ? திடலை இழந்து மாணவர்கள் விளையாட,பயிற்சி எடுக்க எங்கே செல்வார்கள்? பக்கத்து பள்ளியில் கையேந்தி நிற்கும் சூழலை தயவுசெய்து உருவாக்கி விடாதீர்கள்.

 

கல்வி அமைச்சு மற்றும் பள்ளி நிர்வாகம்  இதனை மறு பரிசீலனை  செய்து திடல் மீது கைவைப்பதை உடனடியாக நிறுத்த வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 2 ஆம்  திகதிபெற்றோர்களும் அவ்வட்டார இந்திய மக்களும் ரவாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் காலை8.30 மணிக்கு  ஒன்று கூடி  தங்களது எதிர்ப்பை கல்வி அமைச்சுக்கும் பள்ளி நிர்வாகதிற்கும்தெரிவிக்கவுள்ளனர்.

செய்தி : வெற்றி விக்டர்


ரவாங், ஆக.1-
ரவாங்  தமிழ்ப்பள்ளிக்கு  புதிய கட்டடம் கட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில் அது ஒரு வரவேற்க கூடிய விஷயமாக இருந்தாலும் அந்த கட்டுமானத்திற்காக மாணவர்கள் விளையாட இருக்கும் திடலை பலி கொடுப்பது நியாமான செயல் இல்லை என பெற்றோர்கள்  தமிழ் லென்ஸ்சிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

இருக்கும் ஒரே திடலை தாரைவாத்து கொடுத்து விட்டு மாணவர் எங்கும் போய் விளையாடுவார்கள்? இருப்பதே ஒரு சிறிய திடல் அதையும் கூறுபோடுவது நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

திடலுக்கு அருகே பலகையில் ஒரு மோசமான சூழலில் இருக்கும் கட்டடத்தை உடைத்து அங்கு 3 அல்லது 4 மாடியில் கட்டடத்தை கட்டுங்கள்.

அதை விடுத்து திடலில் கை வைப்பது ஏன் ? திடலை இழந்து மாணவர்கள் விளையாட ,பயிற்சி எடுக்க எங்கே செல்வார்கள்? பக்கத்து பள்ளியில் கையேந்தி நிற்கும் சூழலை தயவு செய்து உருவாக்கி விடாதீர்கள்.

கல்வி அமைச்சு மற்றும் பள்ளி நிர்வாகம்  இதனை மறு பரிசீலனை  செய்து திடல் மீது கை வைப்பதை உடனடியாக நிறுத்த வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 2 ஆம்  திகதி பெற்றோர்களும் அவ்வட்டார இந்திய மக்களும் ரவாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் காலை 8.30 மணிக்கு  ஒன்று கூடி  தங்களது எதிர்ப்பை கல்வி அமைச்சுக்கும் பள்ளி நிர்வாகதிற்கும் தெரிவிக்கவுள்ளனர்.

செய்தி : வெற்றி விக்டர்

ஷா ஆலாம், ஜூலை 29-
கிள்ளான் ராக்கெட் கிளப் (கேஆர்சி) துணைத் தலைவர் திரு.உமாகாந்தன், செயலாளர் திரு.தேன்மாறன், பொருளாளர் திரு.சரவணன், துணைப் பொருளாளர் திரு.திருநாவுக்கரசு, பொது உறவு அதிகாரி திரு.மகேந்திர குமார்,  திரு.செல்வராஜு (தளவாடங்கள் பிரிவு), திரு.முனுசாமி (விளம்பர பிரிவு) ஆகிய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த கிண்ண பூப்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். இன்று 2ஆவது நாளாகும். இது 2 நாள் நடத்தப்பட்ட போட்டியாகும் என்று அந்த கிளப்பின் தலைவர் திரு.செண்பகமாறன் சுப்ரமணியம் தெரிவித்தார்.
       இதை 3ஆவது ஆண்டாக நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எனினும், இந்த முறை இப்போட்டிக்கு மகத்தான ஆதரவளித்து இதில் 400 பேர் பங்கேற்றனர். நாடு முழுவதிலுமுள்ள அதாவது பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரை தீபகற்ப மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்ட.னர்.
        உண்மையில் இந்த முறை நடைபெற்ற போட்டியில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுவது கடந்த முறை நடத்தப்பட்ட போட்டியில் 1 வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்தியர்களாக இருந்தால் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இம்முறை இந்தோனேசியா, இலங்கையைச் சேர்ந்த இந்தியர்களும் கலந்து கொண்டதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இது அனைத்துலக இந்திய பூப்பந்து கிண்ண போட்டியாகவும் ஆகி விட்டது. அதனால் இனி வரும் காலங்களில் இப்போட்டியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
      இந்த முறை நடைபெற்ற போட்டியில் 15 பிரிவுகளை நாங்கள் வைத்திருந்தோம். அவற்றில் 8 பிரிவுகள் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறார்களுக்கான பிரிவுகளாகும். இதர 7 பிரிவுகளும் பெரியவர்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் கொடுக்கப்பட்டன. இதில் பகுதிநேர தொழில்முறை விளையாட்டாளர்களுக்கும் நாங்கள் வாய்ப்புகளை வழங்கினோம். இதன் மூலம் சிறார்கள், ஆண்கள், பெண்கள், கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவினரையும் நாங்கள் உள்ளடக்கி விட்டோம். இதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
        அதே சமயத்தில் மாண்புமிகு சுரேஷ் சிங், எம்பிஐ காப்பரேஷன் நிறுவனமும் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதைத் தவிர நமது அரசு சார்ந்த நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகரும் இச்சங்கத்தின் துணைப் பொருளாளருமான திரு.திருநாவுக்கரசு அவர்கள் உட்பட இதர ஆதரவாளர்களும் இருக்கின்றனர். எங்களின் தேவைகளுக்கு அவர்கள் அனைவரும் பங்களிப்பு செய்தனர்.
         இப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றதற்கு ஆதரவாளர்கள் மட்டுமின்றிச் செயலவை உறுப்பினர்களின் அயராத உழைப்பும் முக்கிய காரணமாக இருக்கின்றன. போட்டியாளர்களும் மிகுந்த ஊக்கத்துடன் வந்திருந்தனர். இதுபோன்ற போட்டிகளை நிறைய இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது.
         இப்போட்டி நடத்தப்படுவதன் நோக்கம் வெற்றியாளர்களை அடையாளம் காண்பதற்கு அல்ல, மாறாக மற்றவர்களைப் பார்த்து இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் உற்சாகத்தைப் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி இந்த போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அனைத்து ஏற்பாட்டாளர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
        இதில் சிறார் தொடங்கி பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தமாக 400 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் மிகக் குறைந்த வயதுடைய போட்டியாளராக 6 வயதுடைய சிறுவன் கிருஷ்ண கவினேஷ் கணேசன் கலந்து கொண்டு 10 வயது பிரிவில் விளையாடினார். பெண்களுக்கான பிரிவில் இரட்டையர் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன. கலப்பு இரட்டையர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.
        பெண்களில் 35 வயதிற்கும் மேற்பட்டோர் விளையாடினார்கள். பெரியவர்களுக்கான பிரிவில் பகுதிநேர தொழில்முறை விளையாட்டாளர்கள், இளநிலை மூத்த விளையாட்டாளர்கள், முதுநிலை மூத்த விளையாட்டாளர்கள் விளையாடினார்கள். கடந்த 2 ஆண்டுகளில் பங்கேற்ற 300 பேரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்வாண்டு 400 பேர் பங்கேற்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
         இதில் முதலாவதாக வெற்றி பெற்ற அனைவருக்கும் யோனெக்ஸ் ராக்கெட்கள், ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 2ஆவதாக வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், யோனெக்ஸ் ராக்கெட்கள் வழங்கப்பட்டன. 3ஆவதாக வெற்றி பெற்றவர்களுக்கு பூப்பந்து சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 

சிரம்பான், ஜூலை 29 – 
இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், மொழி, கலாசாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் மடானி அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி  தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, 2023 முதல் இந்திய சமூகத்தின் பல்வேறு முன்னேற்றத் திட்டங்களுக்காக வெ.597.5 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

அதில், மித்ரா அமைப்பின் மூலம் கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக வெ.450 மில்லியன், MIED அமைப்புக்கு வெ.101 மில்லியன் மற்றும் நாடு முழுவதும் 344 இந்து ஆலயங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் வழியாக வெ.46.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

கல்வித் துறையில் மட்டும் வெ.182 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கு வெ.30 மில்லியனும், 2023 முதல் 2026 வரை தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக வெ.130 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், TAFE கல்லூரிக்கு 2026ஆம் ஆண்டில் வெ.22 மில்லியன் வழங்கப்பட்டிருப்பது, 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வெ.2 மில்லியனை ஒப்பிடுகையில் பத்து மடங்குக்கும் அதிகமான உயர்வாகும் என்றார்.

சமூக வசதிகள் மற்றும் மின் தகன மேடைகள் அமைப்பதற்கு வெ.20 மில்லியனும், தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை வலுப்படுத்த இந்திய சமூகத் தமிழ் மாநாடு, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் தமிழ்மொழிக் கற்றல்-கற்பித்தல் உபகரணங்களுக்காக வெ.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தின் பொருளாதார வலிமையை உயர்த்தும் நோக்கில் AIM-இன் PENN திட்டம், தெக்குனின் SPUMI திட்டம், பேங்க் ராக்யாட்டின் BRIEF-i திட்டம், SME வங்கி மற்றும் மடானி VETI திட்டம் உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் மொத்தம் வெ.555.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட வெ.597.5 மில்லியனும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வெ.555.6 மில்லியனும் சேர்த்து, மடானி அரசு இந்திய சமூகத்திற்கு வெ.1.1531 பில்லியன் மதிப்பிலான ஆதரவை வழங்கியுள்ளதாக சிவமலர் கணபதி  கூறினார்.

இந்நிதியில் STR, SARA, BUDI MADANI, குறைந்தபட்ச சம்பள உயர்வு, பள்ளி உதவித்தொகைகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் பொதுநலத் திட்டங்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றமும் இந்திய சமூகத்திற்கு பயனளித்துள்ளதாகக் கூறிய அவர், வேலையின்மை விகிதம் 2023ஆம் ஆண்டின் 3.4 விழுக்காட்டிலிருந்து 2025ஆம் ஆண்டில் 2.9 விழுக்காடாகக் குறைந்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் முதலீட்டு மதிப்பு வெ.329.5 பில்லியனிலிருந்து வெ.426.7 பில்லியனாக அதிகரித்திருப்பது வேலைவாய்ப்புகளையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், குறிப்பாக இந்திய வாக்காளர்கள் அரசியல் வாக்குறுதிகளை விட அரசின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் மதிப்பீடு செய்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான நெகிரி செம்பிலான் மடானி அரசுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் மீண்டும் ஆதரவு வழங்கினால், இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மொழி மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டறிக்கையை கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி  மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

 

சிரம்பான்,ஜூலை 29 – 
தற்போதைய மத்திய அரசு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மட்டுமல்ல; பல கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி அரசாகும் என்பதால், எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது மட்டும் சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுத்து செல்ல பிரதமருக்கு போதுமான காலமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஆலயங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எந்த இந்து ஆலயமும் இடிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், இடமாற்றம் செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புதிய நிலம் வழங்கப்பட்டதோடு, அவற்றின் பிரதமருக்கு முழுமையாக செயல்பட வாய்ப்பு வழங்க வேண்டும்; நெகிரியில் பக்காத்தானுக்கு ஆதரவு அளிக்குங்கள் – குணராஜ் ஜோர்ஜ்

செந்தோசா, ஜூலை 29 – தற்போதைய மத்திய அரசு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மட்டுமல்ல; பல கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி அரசாகும் என்பதால், எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது மட்டும் சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுத்து செல்ல பிரதமருக்கு போதுமான காலமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஆலயங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எந்த இந்து ஆலயமும் இடிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், இடமாற்றம் செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புதிய நிலம் வழங்கப்பட்டதோடு, அவற்றின் வளர்ச்சிக்காக அரசாங்க மானியமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்திய சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் சரியான முறையில் எடுத்துச் சென்றால், அவற்றை பரிசீலித்து நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஹராப்பானுக்கு இந்திய வாக்காளர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல புதிய மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவற்றில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் படகுத் துறையை அமைக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சியை அமைப்பது அவசியம் என்றும் அதற்காக நெகிரி மாநில இந்திய வாக்காளர்கள் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார். வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்திய சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் சரியான முறையில் எடுத்துச் சென்றால், அவற்றை பரிசீலித்து நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்திய வாக்காளர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல புதிய மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவற்றில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் படகுத் துறையை அமைக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சியை அமைப்பது அவசியம் என்றும் அதற்காக நெகிரி மாநில இந்திய வாக்காளர்கள் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.