loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

 

கோலாலம்பூர்,மார்ச் 16-
தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Australian Open Squash Championship 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதற்காக மஇகா விளையாட்டு பிரிவு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இந்த வெற்றி மிகவும் சிறப்புமிக்கதாகும். கடந்த 13 மாதங்களாக எந்தப் போட்டியிலும் பட்டம் பெறாமல் இருந்த நிலையை முறியடித்து, அவர் மீண்டும் சர்வதேச மேடையில் தனது திறமையையும் உறுதியையும் நிரூபித்துள்ளார் என்று விளையாட்டுப் பிரிவின் தலைவர் எண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.

இந்த சாதனை மலேசிய விளையாட்டு உலகிற்கு பெருமை சேர்ப்பதுடன், இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற ஊக்கமளிக்கும் உத்வேகமாகவும் அமைகிறது.

எஸ். சிவசங்கரி தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைப் பெற்று மலேசியாவின் பெயரை உலக விளையாட்டு அரங்கில் உயர்த்துவார் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், மார்ச் 16-

​மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய தேசியத்துவக் கழகம் (Akademi Kenegaraan Malaysia) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், வட மாநில இந்திய இளைஞர்களுக்கான சிறப்புத் தலைமைத்துவப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

 “KEM GENRLS 2.0” எனும் பெயரில், கெடா கூலிமில் உள்ள தேசியத்துவப் பயிற்சி மையத்தில் மூன்று நாட்கள் இந்த முகாம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

​இதில் பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி வளாகங்கள் மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் என மொத்தம் 94 பிரதிநிதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


​இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். 

அவர் தனது உரையில், "நாட்டின் முக்கிய செயல்பாட்டு குறிகாட்டிகள் (KPI) வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும், மக்களின் சுபிட்சக் குறியீடு (KHI) இன்னும் முழுமையான இலக்கை எட்டவில்லை. குறைகளை மட்டுமே பார்க்காமல், முன்னேற்றத்திற்கான வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமானவை; அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி இந்தியச் சமூகம் மேலோங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

​மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலைவர் சேவைச் செம்மல் தனேஷ் பாசில் பேசுகையில், இந்திய இளைஞர்களைத் தேசிய அளவிலான இத்தகைய முகாம்களில் ஒருங்கிணைப்பது ஒரு சவாலான காரியம் என்றும், அதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி இம்முகாமைத் தேசியத்துவக் கழகத்துடன் இணைந்து நடத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு 720 இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 930 இந்திய இளைஞர்களுக்கு இக்கழகம் வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

​இத்திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த பிரவின் ராமகிருஷ்ணன் அவர்கள், முகாமின் ஒவ்வொரு அங்கத்தையும் நுணுக்கமாகத் திட்டமிட்டு வழிநடத்தினார்.

இளைஞர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்துவதையும், நாட்டின் மீதான பற்றை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முகாம், அவரது தலைமையில் வெற்றிகரமாக நிறைவுற்றது.

கோலாலம்பூர், மார்ச் 16-

நம் நாட்டில் பல ஆண்டுகளாக மேடை நாடகம் போடப் படவில்லை. அந்த குறையை தீர்க்கும் வண்ணமாக, மேடைக்கு மேடை அரசியல் நாடகத்தை நடத்தி நடிகர் திலக்கத்தை மிஞ்சும் அளவிற்கு கை வண்ணத்தை காட்டி வருகின்றனர் அரசியல்வாதிகள்.

குறிப்பாக அரசாங்கத்தில் இருக்கும் ஜால்ரா அரசியல்வாதிகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.

நாட்டில் பிரச்சினை செய்யும் 4 நபர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று எத்தனை போலீஸ் புகார் செய்து மக்கள் நாட்டு சட்டத்தை மதித்து இந்த அரசாங்கத்திற்கு தெரிய படுத்தினார்கள். அப்போது கண் இருந்தும் குருடராகவும் காது இருந்தும் செவுடராகவும்  வாய் இருந்தும் உமையாகவும் அரசாங்க நாற்காலியை அலங்கரித்த  இந்திய அரசியல் தலைவர்கள் இப்போதுதான் அருவை சிகிச்சை முடித்தார்கள் போல.. நமக்கே ஆச்சரியம் வரும் அளவில் இரண்டு தினங்களாக பல அறிக்கை. இவர்களுக்கு பேச வருமா? காது கேட்க தொடங்கி விட்டதா? இந்தியர்கள் பக்கம் பார்வை தெரிகிறதா என்று பார்த்தால்...

பூனை புலியான கதைக்கு விடை கிடைத்தது. நாட்டில் சர்ச்சை ஏற்படுத்திய இருவர் நாட்டில் இல்லை. உடனே பூனை புலியாக மாரி மியாவ் மியாவ் என்று கத்தி வருகிறது.

இந்த பூனைகள் தான் இந்திய சமுதாயத்தை அமைதியாக இருக்க சொன்ன பூனைகள்.  இப்போது திடீர் என புலியாக மாரி மீண்டும் அதே பூனை சத்தத்தை கொடுத்து தங்களை புலி போல் காட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த இரு சர்ச்சை குறிய நபர் இந்த நாட்டில் இருந்து செய்த நடவடிக்கை  பார்த்து  கண்டு காணாமல் இருந்த இந்த பூனைகள், நமக்கு எதுக்கு பா வம்பு  நாம் பெரும்பான்மையான சமுதாயத்தை பகைத்து கொள்ள வேண்டாம் என்று வாயை பொத்திக்கொண்டிருந்த கூட்டம்.

இரு தனி நபரை அமைச்சரவையில் பேசி நடவடிக்கை எடுக்கத் தெரியாத கையாளகாத கூட்டம் .

அந்த இருவர் இல்லாத போது,   ஒரு அமைச்சர் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் என கூச்சல் போடுவது என்ன..  இன்னொரு துணை அமைச்சர் அவர் பதவி எடுத்ததில் இருந்து அவரை  இப்போது தான் பார்க்கிறோம்.
போலீஸ் படை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது விரைந்து கைது செய்வார்கள் என்று இவர் ஒரு பக்கம் கூச்சல்.

திருசுழத்தை மிதித்து இந்த நாட்டில் தான் அந்த நபர் இருந்தார். நீங்கள் எல்லாம் வாயை திறக்கவே இல்லையே.. இப்போது எப்படி உங்களுக்கு பேச்சு வந்தது என்ற  ஆச்சரியத்தில் மக்கள் உள்ளனர்.

மக்களே இந்த ஆட்சி எப்படி உள்ளது என்றால் முதல்வன் படத்தில் வரும் அரங்கநாதன் அரசியல் ஆட்சி தான் இவர்கள் ஆட்சியும்.

இவர்கள்  4 நாற்காலி கால்களை நம்பி ஆட்சி  நடத்துகிறார்கள். அதில் ஒரு கால் உடைந்தாலும் ஆட்சி கவிழ்ந்து விடும்... ஆகையால்  இவர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்பார்கள்.

அவர்களே அடித்து கொண்டு  ஆவர்களே சமாதானம் ஆகட்டும்..  நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என்பதே இவர்களின் நிலை கடமைக்கு சில கண்துடைப்பு நடக்கும் அவ்வளவு தான்.

இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று  இன்னுமா சமுதாயம் நம்புகிறது... ?

பூனை புலியாகி விட்டது என்று ஆச்சரியம் வேண்டாம் மக்களே இன்னொரு நாடகம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது அரசியல் நடிகர் திலகங்கள் நடிப்பு போட்டியில் கலம் இறங்கியுள்ளனர்..

வேடிக்கை மட்டும் பாருங்கள், இந்த பூனை சத்ததில் கடுகு அளவு கூட பிரோஜனம் இல்லை..

-வெற்றி  விக்டர்

உலு சிலாங்கூர், மார்ச் 15
அரசியல் எல்லைகளைத் தாண்டி மருத்துவத் தொண்டின் மூலம் சமூகத்தின் பேராதரவைப் பெற்றுவரும் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன், கடந்த வெள்ளிக்கிழமை சமத்துவ நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.


நோன்பு மாதத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இணைந்து நோன்பு துறப்பில் கலந்து கொள்ள வேண்டும்; அதில் நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்தார்.

விருந்தோம்பலுடன் இலக்கிய நிகழ்ச்சியும் சமூக நலத்திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவாங், கோல குபு பாரு, பாதாங் காளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியதுடன், திருக்குர்ஆன் நூலையும் வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் டாக்டர் சத்ய பிரகாஷ்.


அதேபோல் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பௌத்த சமய நூல்கள், கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பைபிள், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பகவத் கீதை ஆகியவற்றையும் அன்பளிப்பாக வழங்கினார்.


இதன் மூலம் உலு சிலாங்கூர் மக்கள் அனைத்து சமயங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து, ஒற்றுமையை விரும்பும் மக்கள் என்பதை சிலர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


மேலும், யார் எவ்வாறு கபடநாடகம் ஆடியாலும் மலேசியர்களின் ஒற்றுமையை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 15
30 ஆண்டுகளாக இந்த நாட்டில் பல சமூக மக்களுக்கு உதவி செய்து வரும் கெபிமா இயக்கம், 27-வது முறையாக நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்கள் மற்றும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளும் உணவுப் பொருட்களும் வழங்கியது. இந்த நிகழ்ச்சி நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.


இந்த நாட்டின் மக்கள் பெருநாள் காலங்களில் சந்தோஷமாகவும் ஒற்றுமையுடனும் பெருநாளைக் கொண்டாடும் வகையில் கெபிமா கடந்த 27 ஆண்டுகளாக இந்த உதவியை செய்து வருவதாக, கெபிமாவின் தோற்றுநர் ஜனாப் முகமது பின் காதிர் அலி தெரிவித்தார்.


சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்களை பார்த்து மிகவும் வருத்தம் அடைவதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் அடையாளமே பல்லின மக்களின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மதித்து ஒற்றுமையாக வாழும் நாடு என்பதே என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த ஒற்றுமையை கட்டிக் காக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்களும் நடவடிக்கைகளும் சில மதவெறி நபர்களால் ஒரு நொடியில் சிதைந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.


இப்போதே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் இந்த நாட்டின் அடையாளமும் அமைதியும் பாதிக்கப்படும் என மூத்த சமூக சேவகரான ஜனாப் முகமது பின் காதிர் அலி கவலை தெரிவித்தார்.
அதே நேரத்தில் இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரான் மோதலால் பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சாணக்கியமான முன்னேற்பாடுகளை செய்து, அதே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.


அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ததும், நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சிகளை ரத்து செய்ததும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இருப்பு நிலையை சரியாக பராமரித்து வருவதும் பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் டத்தோ வீர நைனா முகமாட் பின் சுல்தான் அப்துல் காதிர், முகமாட் பின் அப்துல் காதிர், டத்தோ ஹாஜி ஹிஷாமுடீன், டான் ஸ்ரீ உபையத்துல்லா, டத்தோ ஹாஜி டாக்டர் சையட் இப்ராஹிம், டத்தோ சேக் ஜமீல், அலி சாஜாஹான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மேலும், கெபிமா தலைவர் முகமட் இப்ராஹிம் தலைமையில் சங்கம் சிறப்பாக செயல்பட்டு பல புதிய சிந்தனைகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது என அவர்கள் இப்ராஹிம் அவர்களை பாராட்டினர்.


செய்தி : வெற்றி விக்டர்