loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

செகாமாட், ஜூன் 15–

கடந்த 43 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டு மைதான நில பிரச்சினைக்கு மடானி அரசாங்கம் தீர்வை கொடுத்துள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த இப்பிரச்சினை காரணமாக, பள்ளி மாணவர்களுக்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சி பல ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. குறிப்பாக ஹாக்கி விளையாட்டில் மாவட்ட மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள பள்ளி மாணவர்களுக்கு, இந்த மைதானம் நீண்டகால தேவையாக இருந்து வந்தது.

கடந்த மே 31ஆம் தேதி, செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா பள்ளிக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் வழி மாநில கல்வித்துறை, மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட நில அலுவலகம் வைத்திருந்த நில எல்லை ஆவணங்களுக்கும், MY LOT செயலியில் காணப்பட்ட தகவல்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த முரண்பாடுகளே இது நாள் வரையிலும் இப்பிரச்சினை நீடிக்க முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் தொகுக்கப்பட்டு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, இன்று கல்வி அமைச்சர் நேரடியாக பள்ளிக்கு வருகை தந்து, நிலத்தைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப அனுமதிக் கடிதத்தை வழங்கினார்.

இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முதல் முக்கியமான படியாக இந்த அனுமதிக் கடிதம் கருதப்படுவதுடன், கல்வி தொடர்பான பிரச்சினைகளில் மடானி அரசாங்கம் காட்டி வரும் அர்ப்பணிப்பிற்கும் இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சு, ஜொகூர் மாநில கல்வித்துறை, செகாமாட் மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளி நிர்வாகம், பிஐபிஜி, சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தபா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது வெறும் நிலப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல; மாணவர்களின் திறமைகளை வளர்க்கவும், அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் உருவாக்கப்படும் புதிய வாய்ப்பாகும், என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர், ஜூன் 12–
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி அண்மையில் பத்துமலை திருத்தளத்தில் நடைப்பெற்றது.

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர்களின் நலன் கருதி வம்சம் அமைப்பு இந்த யாகத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாகத்தில் தங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 54 தம்பதியர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாகத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை, டாக்டர் உமா மாரியப்பன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றனர். ஆகையால் காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி குருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.

மலேசியாவில் முதல் முறையாக இந்த புத்திர காமஸ்தி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த பெருமை வம்சம் அமைப்பையே சேறும்

கோலாலம்பூர், ஜூன் 12–
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி அண்மையில் பத்துமலை திருத்தளத்தில் நடைப்பெற்றது.

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர்களின் நலன் கருதி வம்சம் அமைப்பு இந்த யாகத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாகத்தில் தங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 54 தம்பதியர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாகத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை, டாக்டர் உமா மாரியப்பன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றனர். ஆகையால் காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி குருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.

மலேசியாவில் முதல் முறையாக இந்த புத்திர காமஸ்தி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த பெருமை வம்சம் அமைப்பையே சேறும்.

கோலாலம்பூர், ஜூன் 10-
எஸ்டிபிஎம் (STPM) கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்றும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா வலியுறுத்தியுள்ளார்.

எஸ்டிபிஎம் என்பது அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான முக்கியமான கல்விப் பாதையாக இருப்பதால், மாணவர்கள் தங்களது உயர்கல்வி இலக்குகளுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு ‘பேக்கேஜ்’ (Pakej) முறையில் பாடங்கள் வழங்கப்படுவதால், பல மாணவர்கள் தாங்கள் விரும்பும் கூடுதல் பாடங்களைத் தேர்வு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட பாடத்திற்கு ஆசிரியர் இல்லாத சூழலில், அந்த பாடத்திற்கான ஆசிரியரை கல்வி அமைச்சிடம் கேட்டு பெற வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமையாகும். உங்களின் தவற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து விடாதீர்கள்.

“ஒரு மாணவர் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய முடியாவிட்டால், அவரது கனவுகளே சிதைந்து போகும். இது அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கும் தடையாக அமையும்,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வருடத்திற்கு சுமார் 40,000 மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் சுமார் 4,000 பேர் இந்திய மாணவர்கள் என மதிப்பிடப்படுகின்றனர். ஆனால், தமிழ்மொழி பாடத் தேர்வை எழுதுபவர்கள் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே, அதாவது சுமார் 15 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ்மொழியைத் தேர்வு செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழி பாடத்தை இந்திய மாணவர்கள் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும். கடந்த 2024ஆம் ஆண்டு எஸ்டிஎம் தேர்வில் 526 மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை தேர்வு செய்திருந்தனர். இரண்டாவது தவணையில் அந்த எண்ணிக்கை 426 மாணவர்களாக குறைந்த வேளையில் மூன்றாவது தவணையில் அதன் எண்ணிக்கை 453ஆக குறைந்துள்ளது. ஏன் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றார் அவர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஸ்ரீ முருகன் நிலையம் வரும் ஜூலை மாதம் முதல் எஸ்டிபிஎம் தமிழ்மொழிப் பாடத்திற்கான இலவச இணையவழிக் கல்வியை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

“தமிழ்மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்கள் தைரியமாக ஸ்ரீ முருகன் நிலையத்தில் கற்கிறோம் என்று பள்ளிகளில் கூறலாம். அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.

மேலும், மாணவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு  உடனடியாகத் தீர்வு காண வேண்டும். ஏனென்றால் எஸ்டிபிஎம் பாடத் தேர்வை மாணவர்கள் இந்த ஒருவாரத்தில் முடிவு செய்தாக வேண்டிய சூழல் உள்ளது.

“அரசின் கல்விக் கொள்கையின்படி மாணவர்களுக்கு பாடங்களைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் பேக்கேஜ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது?” என அவர் கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும், அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரேன் கந்தா வலியுறுத்தினார்.

சிரம்பான், ஜூன் 4-
36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம், 16ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் நாளை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படவுள்ளது.

இவ்விவரத்தை நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன், தனது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார்.
மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதன் மூலம், மாநிலத்தின் புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான 16ஆவது மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.