loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

 

கோலாலம்பூர், மார்ச் 27-

பி.கே.ஆர் கட்சி தொடர்பாக பல விதமான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த கட்சி தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி அவர்கள் பல விதமான குறறசாட்டுகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கடந்த ஒரு வாரமாக பி.கே.ஆர் கட்சி தொடர்பான சர்ச்சை வந்து கொண்டு இருக்கும் நிலையில், இப்போது கட்சியின் துணைத் தலைவர் ராஜினாமா செய்து விட்டார் என்ற தகவலும் இப்போது பரவி வருகிறது.

அடுத்து யார் கட்சியில் ராஜினாமா செய்ய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

யாருடைய  பெயர் பட்டியலில் இருக்கிறது என்று பி.கே.ஆர் வட்டாரத்தில் இப்போது கேள்வி எழுந்து  வருவதாக தமிழ்லென்ஸ் இணையத்திற்கு இப்போது தகவல் கிடைத்து உள்ளது.

யார் அந்த MR.R? அவருக்கும்  பி.கே.ஆர் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?  இதில் சம்பந்தபட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் யார்? அவர்களின் Boss யார் என்ற கேள்வியும் எழுந்து வரும் இந்த நேரத்தில்,

அடுத்து அடுத்து பி.கே.ஆர் கட்சியில் இப்படி பல வதந்திகள்  வருகிறது.

அடுத்து யார் ராஜினாமா செய்ய போகிறார்?  முக்கிய புள்ளியா? அல்லது அவர்கள் சார்ந்த பலியாடா? அதிரடி தகவலுக்கு காத்திருப்போம்...

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 27-

பி.கே.ஆர் கட்சியின் தேசிய துணைத் தலைவர்  நூருல் இசா கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்  தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கடிதம் இப்போது வெளியாகி உள்ளதாக  பி.கே.ஆர் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் உண்மையான காரணம், அதிகாரபூர்வமான தகவல் இன்னும் தெரியாமல் உள்ளது.

ஆனால் இதுவரை தமிழ்லென்ஸ் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்
நூருல் இசா தனது கல்வியை தொடர உள்ளதாக பி.கே.ஆர் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

காத்திருப்போம் அதிகாரபூர்வ தகவலுக்காக...

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர் மார்ச் 27-
இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு மடானி அரசாங்கம் 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

சபா சரவாக் மாநிலங்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் இதற்கு முறையாக விண்ணப்பம் செய்யலாம்.

நாட்டில் உள்ள மாறுபட்ட சமயங்களின் நல்லிணக்கத்தை காக்கவும் ஒரு பல்லின சமுதாய அமைப்பை உறுதிப்படுத்தவும் இத்தகைய உதவிகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

ஒவ்வொரு வழிப்பாட்டு தளத்திற்கும் 2 லட்சத்து 50,000 வெள்ளி ஓதுக்கீடு செய்யப்படும்.

குறிப்பாக வழிபாட்டு தலங்களை பழுது பார்ப்பது, புரணமைப்பு செய்வது, புத்தாக்கம் செய்வது, பராமரிப்பது, புதிய கட்டடங்களை எழுப்ப இந்த தொகை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.


பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25-
தாமான் கனகாபுரம் கம்போங் முனியாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் அம்மன் ஆலயம், இளைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் புதிய உயிர் பெற்றுள்ளது.

சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், நீண்டகாலமாக நடைபெற்று வந்த திருப்பணிகளுக்குப் பிறகு, தற்போது முழுமையாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவை விமரிசையாகக் கொண்டாடியது.

இந்த விழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், இளைஞர்களின் ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது.

ஆலயத் தலைவர் மணிமாறன் முருகேசு கூறுகையில், இவ்விழாவின் வெற்றிக்கு இளைஞர்களின் அயராத முயற்சியே காரணம் எனக் குறிப்பிட்டார். “நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆலயப் பணிகளை, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முடித்து வைத்துள்ளனர்.

அவர்களின் ஒத்துழைப்பே இன்றைய வெற்றியின் அடிப்படை,” என்றார்.

தலைமை குருக்கள் சிவாகம ரத்ன சிவஸ்ரீ பி. யாகேசன் குருக்கள் மற்றும் ஆலய தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சிவஸ்ரீ கனகலிங்க ருத்ரா குருக்கள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், சுற்றுவட்டார மக்களுடன் சேர்ந்து பெருமளவிலான இளைஞர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயம் சமய வழிபாடுகளுக்கு அப்பாற்பட்டு, சமூக சேவைகளிலும் கவனம் செலுத்தி வருவது அதன் சிறப்பாகும். இதனை பாராட்டிய ஆலய ஆலோசகர் மற்றும் பத்துமலை ஐயப்ப சுவாமி தேவஸ்தானத் தலைவர் யுவராஜா குருசாமி, இளைஞர்கள் முன்னிலையில் ஆலயம் வளர்ச்சி அடைவது சமூகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.

இந்த கும்பாபிஷேகம், ஒரு ஆலய விழாவைத் தாண்டி, சமூக ஒற்றுமையையும் இளைஞர் சக்தியையும் எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.

கோலாலம்பூர், மார்ச் 25-
ம.இ.காவின் மத்திய செயலவை இன்று நடைப்பெற்ற நிலையில் எல்லாரும் எதிர்பார்த்த வகையில் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் ம.இ.கா எடுக்கவில்லை என்பதே பதில். ஆனால் ம.இ.கா இப்போதைக்கு தேசிய முன்னணியோடு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு ம.இ.கா தற்போது சொல்லியுள்ள காரணம், கடந்த ஆண்டு  நடத்தப்பட்ட ஆண்டு கூட்டத்தில்  ம.இ.கா உறுப்பினர்கள் தேசிய முன்னணியை விட்டு  ம.இ.கா வெளிய  சென்று பெரிக்காத்தானில் இணைய வேண்டும் என தீர்மாணம் எடுத்த நிலையில், இறுதியான முடிவை ம.இ.கா மத்திய செயலவையிடம் அவர்கள்  கொடுத்தனர்.

அந்த தீர்மாணம் எடுக்கப்பட்ட நேரத்தில் பெரிக்காத்தான் தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பதவி வகித்தார். அதன் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், பெரிக்காத்தான்  தலைமைத்துவமும் மாறியுள்ள நிலையில் மீண்டும் கட்சி தொண்டர்களுடன் கலந்து பேச வேண்டிய சூழல் எழுந்துள்ளதால் இப்போதைக்கு ம.இ.கா தேசிய முன்னணி கூட்டணியில் நிலைத்து இருப்பதாக ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.


இதன் அடிப்படையில் இன்று நடந்த மத்திய செயலவையில் எந்த முடிவையும் ம.இ.கா உறுதியாக எடுக்காத நிலையில் ம.இ.காவின்  தலையெழுத்து எதிர்வரும் பொது தேர்தல் சமயத்தில் தான் தெரியவரும்.

போட்டியிடும் தொகுதி பங்கீட்டில் முரன்பாடு வந்தால்தான்  ம.இ.கா எந்த  கூட்டணியோடு கைகோர்க்கும் என்ற விடை தெரிய வரும். அதுவரை  உறுதியான முடிவு கிடைக்காது என்றுதான் கூற வேண்டும்.