loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், ஜூலை 19-
மலேசிய இந்து சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில், தலைவர் தங்க கணேசன் தலைமையிலான "வெற்றி அணி" அனைத்து ஒன்பது இடங்களிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது.

சன்வே திருமுருகன் கோவில் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 49-ஆவது ஆண்டு மாநாட்டை தொடர்ந்து, உச்சமன்றத்தின் ஒன்பது உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தேர்தலில், தற்போதைய தலைவர் தங்க கணேசன் தலைமையிலான வெற்றி அணி மற்றும் டாக்டர் முரளி தலைமையிலான மறுமலர்ச்சி அணி நேருக்கு நேர் மோதின.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர், வெற்றி அணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களின் விவரம்:
பொன் சந்திரன் – 1,027 வாக்குகள்
சுகுமாரன் – 1,026 வாக்குகள்
முனைவர் லிங்கேஸ்வரன் – 1,026 வாக்குகள்
ஜி. முனிஸ்வரன் – 1,021 வாக்குகள்
உமாசுதன் – 1,009 வாக்குகள்
எம். ராதா – 1,001 வாக்குகள்
எம். குமார் – 985 வாக்குகள்
பரமசிவம் – 981 வாக்குகள்
விஜய பாஸ்கர் – 980 வாக்குகள்
இந்த வெற்றியின் மூலம், மலேசிய இந்து சங்கத்தின் நிர்வாகத்தில் தங்க கணேசன் தலைமையிலான அணிக்கு உறுப்பினர்களின் வலுவான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்கள் கருதுகின்றன.

ஆகஸ்டு முதல் தேதியில் நடைபெறும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்ற தேர்தலில் இந்தியர்கள் சிந்தித்து தங்களின்   வாக்குகளை செலுத்த வேண்டும் என சிலாங்கூர் மாநில கெஅடிலான் தேர்தல் அமைப்பின் தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் அறிவுறுத்தினார்.

இன்று ஜூலை 18ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநில தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
இதில் சிகாமாட், சுவா, அம்பாங்கான் ஆகிய மூன்று தொகுதிக்கான பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து தனது குழுவுடன் டாக்டர் சத்யபிரகாஷ் களமிறங்கினார்.

இந்த மூன்று தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கான ஆதரவு சிறப்பாக உள்ளது.

இந்த தேர்தலை பொறுத்த வரையில் பச்சை நிற கொடி கொண்ட கட்சியுடன் இணைந்து செயல்பட முற்படும் கட்சிகளை ஆதரிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற ஜோகூர் மாநில தேர்தலின் முடிவுகளை நெகிரி செம்பிலானுடன் ஒப்பிட முடியாது. இரு மாநிலங்களிலும் வெவ்வேறு சூழல் நிலவுகின்றன.

எனவே, இந்திய சமூகம் இந்த தேர்தலை முக்கியமான வாய்ப்பாக கருதி, தங்கள் சமூகத்தின் எதிர்காலம், கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளைப் பாதுகாக்கும் வகையில் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் டாக்டர் சத்யபிரகாஷ் வலியுறுத்தினார்.

பெஸ்தாரி ஜெயா, ஜூலை 15-
பெஸ்தாரி ஜெயா சுங்கை டாரா ஸ்டார்த்மோர் தோட்டம் (கல்லுகுழி)
அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில்  2026 ஆம் ஆண்டுக்கான ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் ஜூலை 17 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, பஜனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல் ஆடி வெள்ளி பூஜை ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 24, ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் ஆடி வெள்ளி வழிபாடுகள் நடைபெறுவதாக ஆலயத்தின் தலைவர் திரு.இராம கணேசன் தெரிவித்தார்.

நிறைவாக செப்டம்பர் 4-ஆம் தேதி கோகுலாஷ்டமி மற்றும் மகாலட்சுமி பூஜை நடைபெறவுள்ளது.
ஆடி மாதம் முழுவதும் நடைபெறும் அனைத்து சிறப்பு வழிபாடுகளிலும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், சிறப்பு பூஜைகளுக்கான உபயம் மற்றும் காணிக்கை வழங்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தை 016-3758273 (ஆலயத்தலைவர்) அல்லது 016-8417335 ( ஆலய அர்ச்சகர்) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்

பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்தநாள் விழாவையொட்டி, சமூக மற்றும் பொதுச் சேவைகளுக்காக டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முருகன் த/பெ துரைசாமி அவர்களுக்கு, Darjah Gemilang Pangkuan Negeri (D.G.P.N.) என்ற உயரிய மாநில விருது வழங்கப்பட்டு, அதனுடன் “டத்தோஸ்ரீ” என்ற கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது, மதம், சமூக நலன், மாநில வளர்ச்சி மற்றும் நாட்டிற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையையும், பல ஆண்டுகளாக வழங்கி வரும் பங்களிப்பையும் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கப்பட்டதையொட்டி, மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, Dato’-Dato’ Indian Muslim Malaysia அமைப்பின் நிறுவனர் YH. Dato’ Mohammed Gazali bin Haji Mohd Hussain தனது வாழ்த்து செய்தியில், டத்தோ’ ஸ்ரீ முருகன் துரைசாமி அவர்கள் நல்ல உடல்நலம், மேலும் பல வெற்றிகள் மற்றும் இறையருளுடன் தொடர்ந்து சமூகத்திற்கும், பினாங்கு மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் D.G.P.N. விருது வழங்கப்பட்டிருப்பது, டத்தோஸ்ரீ முருகன் துரைசாமியின் நீண்டகால அர்ப்பணிப்புக்கும் சேவைக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

 

புத்ராஜெயா, ஜூலை 11-
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரை பார்ட்டி வாவாசான் நெகாரா (Parti Wawasan Negara – WAWASAN NEGARA) என மாற்றியதை, மலேசிய சங்கங்களின் பதிவுத் துறை (RoS) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தப் பெயர் மாற்றம் 2026 ஜூலை 6 அன்று RoS-ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த அதிகாரப்பூர்வ அங்கீகாரம், அக்கட்சிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதுடன் மலேசிய அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் பரவலான அரசியல் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

பார்ட்டி வாவாசான் நெகாரா (Parti Wawasan Negara), பெரிக்கத்தான் நேஷனல் (Perikatan Nasional – PN) கூட்டணியின் முக்கிய அங்கக் கட்சிகளில் ஒன்றாக குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கூட்டணியின் அரசியல் வலிமையும் எதிர்கால திசையும் மேலும் வலுப்பெறும் என நம்பப்படுகிறது.