loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், மே 12 –
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தளம் பகுதியில் நடைபெறவுள்ளது.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த யாகத்தில் கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். “சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகள் வழங்கவுள்ளனர். “அறிவியல் மருத்துவமாகவும், ஆன்மீகம் நம்பிக்கையாகவும் உள்ளது” என சத்தியவதி கூறினார்.

மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை பேசுகையில், “ஏன் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கப்படும். மலேசியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1.4 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது” என்றார்.

அதேவேளை, டாக்டர் உமா பெண்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றும், காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிகுருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 12 – குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தளம் பகுதியில் நடைபெறவுள்ளது.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த யாகத்தில் கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். “சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகள் வழங்கவுள்ளனர். “அறிவியல் மருத்துவமாகவும், ஆன்மீகம் நம்பிக்கையாகவும் உள்ளது” என சத்தியவதி கூறினார்.

மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை பேசுகையில், “ஏன் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கப்படும். மலேசியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1.4 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது” என்றார்.

அதேவேளை, டாக்டர் உமா பெண்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றும், காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிகுருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.


ஷா ஆலம், மே 12-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 22ஆவது முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டில் நடத்தப்பட்டவுள்ளது.

இம்முறையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 65 ஆண்கள் அணிகளும் 34 பெண்கள் அணிகளும் இப்போட்டியில் களம் காணவுள்ளதாக சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.

இப்போட்டி வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆர்ஆர்ஐ திடலில் நடைப்பெறவுள்ளது.

இந்த போட்டியை சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் சங்கம் இணைந்து நடத்துகிறது.

ஆண்களுக்கான அணிகளில் முதல் 16 இடங்களில் வெற்றிப்பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. முதல் நிலையில் வெற்றிப்பெறும் அணிக்கு நமசிவாயம் சுழற்கிண்ணம் வழங்கப்படும்.

பெண்களுக்கான அணிகளில் முதல் 12 இடங்களில் வெல்லும் குழுக்களுக்கு பரிசுகள் உண்டு. இந்த பிரிவின் வெற்றி குழுவிற்கு ரவிந்திரன் சுழற்கிண்ணம் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இந்த போட்டிக்கான அணிகள் பிரிப்பதற்கான குலுக்கல் இன்று சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைப்பெற்று. 

இந்த போட்டிக்கு மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பத்துமலை தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே.9-
மைக்கியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு  தமிழ் லென்ஸ் ஆசிரியர்  வெற்றி விக்டர் தனது இரங்கலை தெரிவித்தார்.

நம் நாடு  நாளிதழ் வாயிலாக எனக்கு நன்கு அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், எனக்கு அங்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். வேறொரு நாளிதழில் இருந்து நம் நாடு வந்த எனக்கு உரிமையாளர் என்ற முறையில் நடந்து கொள்ளாமல் திறமை துணிச்சல் உள்ளவர்களை தட்டி கொடுக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்தார்.

மக்கள் செய்தியை எழுதிய என்னை அரசியல் செய்தி எழுத வாய்ப்பு கொடுத்தவர் இவர். அந்த நாளிதழ் என் வாழ்க்கையை மாற்றியது.

ஒரு பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு தகுதியான சம்பளத்தை கொடுத்தது டான்ஸ்ரீ கென்னத் நடத்திய நாளிதழ் மட்டுதான். முழு சுதந்திரமும் அங்குதான்  கிடைத்தது. அரசியல் வாதிகளை கண்டு அச்சம் கொள்ளதே என ஊக்கம் ஊட்டியவர் கென்னத் ஈஸ்வரன் தான். ஒரு சாதாரண செய்தியாளரை அரசியல் செய்தியாளர், செய்தி ஆசிரியர்  என இளம் வயதில் நம்பி வாய்ப்பு கொடுத்தவர் அவர்.

என்னை "CILI PADI" என்று அழைப்பார். அரசியல் செய்தியிலும் சரி, அவர் சார்ந்த மைக்கி இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் சரி என்னை முதல் தேர்வாக விரும்புவார். அந்த நம்பிக்கை கொடுத்து கொடுத்து  என் எழுத்தை ரசித்த நபர் அவர்.

பிறகு மைக்கியில் அவரது  அலுவலக  தமிழ் பிரிவு செயலாளராக  எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் பல நாடு குறிப்பாக இந்தியா,  டெர்பன்  இலங்கை,  பொண்டிச்சேரி என பல  உலகத் தமிழ் பொருளாதார மாநாடுகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பல அரசாங்க பொருளாதார கூட்டத்தில் திட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மைக்கி- யில் அவர் ஒய்வு பெறும் போது...  நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என என் மீது  கவலை பட்டு அவர் எனக்கு விதைத்த விதைதான்... இன்று தமிழ் லென்ஸ்   இணைய ஊடகம்.

வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார். பிறகு  ஒய்வின் காரணமாக மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்ப்பேன். பிறகு தொலைபேசியில் பேசுவோம்
தீடீர்- தீடீர் என்று என்னை அழைத்து பேசுவார். சில நேரங்களில்  அவரது குடும்பத்தினர்  அப்பா பேசவேண்டும் என்று சொல்வார்கள் பேசுவார் இப்போது அந்த பேச்சு நின்று விட்டது.

இப்படி என்ன வானுயர வளர்த்த சாமி இன்று வானம் தொட்டு போனது  என்பது எனக்கு  தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு தான்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் நன்றியுடன்  வெற்றி விக்டர்.

கோலாலம்பூர், மே.9-
மைக்கியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு  தமிழ் லென்ஸ் ஆசிரியர்  வெற்றி விக்டர் தனது இரங்கலை தெரிவித்தார்.

நம் நாடு  நாளிதழ் வாயிலாக எனக்கு நன்கு அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், எனக்கு அங்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். வேறொரு நாளிதழில் இருந்து நம் நாடு வந்த எனக்கு உரிமையாளர் என்ற முறையில் நடந்து கொள்ளாமல் திறமை துணிச்சல் உள்ளவர்களை தட்டி கொடுக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்தார்.

மக்கள் செய்தியை எழுதிய என்னை அரசியல் செய்தி எழுத வாய்ப்பு கொடுத்தவர் இவர். அந்த நாளிதழ் என் வாழ்க்கையை மாற்றியது.

ஒரு பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு தகுதியான சம்பளத்தை கொடுத்தது டான்ஸ்ரீ கென்னத் நடத்திய நாளிதழ் மட்டுதான். முழு சுதந்திரமும் அங்குதான்  கிடைத்தது. அரசியல் வாதிகளை கண்டு அச்சம் கொள்ளதே என ஊக்கம் ஊட்டியவர் கென்னத் ஈஸ்வரன் தான். ஒரு சாதாரண செய்தியாளரை அரசியல் செய்தியாளர், செய்தி ஆசிரியர்  என இளம் வயதில் நம்பி வாய்ப்பு கொடுத்தவர் அவர்.

என்னை "CILI PADI" என்று அழைப்பார். அரசியல் செய்தியிலும் சரி, அவர் சார்ந்த மைக்கி இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் சரி என்னை முதல் தேர்வாக விரும்புவார். அந்த நம்பிக்கை கொடுத்து கொடுத்து  என் எழுத்தை ரசித்த நபர் அவர்.

பிறகு மைக்கியில் அவரது  அலுவலக  தமிழ் பிரிவு செயலாளராக  எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் பல நாடு குறிப்பாக இந்தியா,  டெர்பன்  இலங்கை,  பொண்டிச்சேரி என பல  உலகத் தமிழ் பொருளாதார மாநாடுகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பல அரசாங்க பொருளாதார கூட்டத்தில் திட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மைக்கி- யில் அவர் ஒய்வு பெறும் போது...  நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என என் மீது  கவலை பட்டு அவர் எனக்கு விதைத்த விதைதான்... இன்று தமிழ் லென்ஸ்   இணைய ஊடகம்.

வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார். பிறகு  ஒய்வின் காரணமாக மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்ப்பேன். பிறகு தொலைபேசியில் பேசுவோம்
தீடீர்- தீடீர் என்று என்னை அழைத்து பேசுவார். சில நேரங்களில்  அவரது குடும்பத்தினர்  அப்பா பேசவேண்டும் என்று சொல்வார்கள் பேசுவார் இப்போது அந்த பேச்சு நின்று விட்டது.

இப்படி என்ன வானுயர வளர்த்த சாமி இன்று வானம் தொட்டு போனது  என்பது எனக்கு  தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு தான்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் நன்றியுடன்  வெற்றி விக்டர்.