loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

​பேராக் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் டாக்டர் சந்தரசேகரன் சுப்பிரமணியம், சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கல்வி அமைப்பான 'சர்வதேச அமைதி மனித உரிமைகள் கல்வி கவுன்சில்' (IPHREC) வழங்கும் மிக உயரிய 'ராஜதந்திர தூதுவர்' (Royal Ambassador) விருதைப் பெற்றுள்ளார்.

அண்மையில் இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கல்வி மாநாட்டில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை உலக அரங்கில் பெறும் முதல் மலேசியர் மற்றும் முதன்மைப் வெற்றியாளர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

​கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சுமார் 4 ஆண்டுகாலம் IPHREC அமைப்பின் உலகளாவிய கல்வி இயக்குநராக அவர் ஆற்றிய மிகச் சிறந்த நிர்வாகத் திறன் மற்றும் தலைமைத்துவத்தின் அடிப்படையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய IPHREC அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், கற்றல் என்பது அனைத்து நிலைகளிலும் தொடர வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 'அனைவருக்கும் கல்வி' எனும் கொள்கையை பெரிதும் வலியுறுத்தி வருகிறார்.

இதன் மூலமே, வேலைவாய்ப்புச் சூழலையும் மனித வாழ்க்கையையும் எதிர்கொள்வதற்கான முழுமையான மனித மேம்பாட்டை உருவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

​உலக அரங்கில் சுற்றுப்புறச் சூழல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், மலேசியாவிலும் சர்வதேச அளவிலும் பல கல்வி சார்ந்த பயிற்சிகளையும் நடத்தியுள்ளார். பேராசிரியர் டாக்டர் சந்தரசேகரனின் இந்த உலகளாவிய கல்விப் பங்களிப்பானது—சர்வதேச மாநாடுகள், கல்வியாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள், மாணவர்களுடனான அறிவுப் பகிர்வு அமர்வுகள் மற்றும் கல்வித் தர மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் வழி மலேசியாவின் புகழை உலக அரங்கில் ஓங்கச் செய்துள்ளது.

நாட்டின் எல்லையற்ற பெருமிதமாக விளங்கும் இவருடைய இந்த வெற்றி, ஒட்டுமொத்த தேசத்தாராலும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

சென்னை ஜூன் 18-
நெசவாளரின் தொழில் என்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது பட்டு சேலை மற்ற சேலையை கைத்தறி மூல ம் நெய்து விற்பனை செய்து வருகிறோம்.

இன்று நூல் விலை கடுமையாக ஏற்றத்தினால் நாங்கள் சிரமப்படுகிறோம்.

அன்று முதல்வர் எம்ஜிஆர் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் அனைவரும் எங்கள் தொழிலில் பங்கெடுத்து எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்கள்.

அதுபோல இந்த அரசாங்கம் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது நாங்கள் எவ்வளவு போராடியும் சொல்லியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இதில் அரசாங்கம் தலையிட்டு நெசவாளர்களுக்கு விலைகளை குறைத்து எங்கள் எங்கள் வாழ்வில் விளக்கேற்றுங்கள் என்று ஜவுளிக ஜவுளி வியாபாரி வெங்கட்ராமன் தெரிவித்தார்

மக்கள் ஓசை நாளிதழின் பணியாளரான யோகேஸ்வரன் அழகனின் மறைவு மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தமிழ்லென்ஸ் இணைய ஊடகத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்களது  ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்

செகாமாட், ஜூன் 15–

கடந்த 43 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டு மைதான நில பிரச்சினைக்கு மடானி அரசாங்கம் தீர்வை கொடுத்துள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த இப்பிரச்சினை காரணமாக, பள்ளி மாணவர்களுக்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சி பல ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. குறிப்பாக ஹாக்கி விளையாட்டில் மாவட்ட மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள பள்ளி மாணவர்களுக்கு, இந்த மைதானம் நீண்டகால தேவையாக இருந்து வந்தது.

கடந்த மே 31ஆம் தேதி, செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா பள்ளிக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் வழி மாநில கல்வித்துறை, மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட நில அலுவலகம் வைத்திருந்த நில எல்லை ஆவணங்களுக்கும், MY LOT செயலியில் காணப்பட்ட தகவல்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த முரண்பாடுகளே இது நாள் வரையிலும் இப்பிரச்சினை நீடிக்க முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் தொகுக்கப்பட்டு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, இன்று கல்வி அமைச்சர் நேரடியாக பள்ளிக்கு வருகை தந்து, நிலத்தைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப அனுமதிக் கடிதத்தை வழங்கினார்.

இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முதல் முக்கியமான படியாக இந்த அனுமதிக் கடிதம் கருதப்படுவதுடன், கல்வி தொடர்பான பிரச்சினைகளில் மடானி அரசாங்கம் காட்டி வரும் அர்ப்பணிப்பிற்கும் இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சு, ஜொகூர் மாநில கல்வித்துறை, செகாமாட் மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளி நிர்வாகம், பிஐபிஜி, சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தபா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது வெறும் நிலப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல; மாணவர்களின் திறமைகளை வளர்க்கவும், அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் உருவாக்கப்படும் புதிய வாய்ப்பாகும், என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர், ஜூன் 12–
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி அண்மையில் பத்துமலை திருத்தளத்தில் நடைப்பெற்றது.

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர்களின் நலன் கருதி வம்சம் அமைப்பு இந்த யாகத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாகத்தில் தங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 54 தம்பதியர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாகத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை, டாக்டர் உமா மாரியப்பன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றனர். ஆகையால் காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி குருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.

மலேசியாவில் முதல் முறையாக இந்த புத்திர காமஸ்தி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த பெருமை வம்சம் அமைப்பையே சேறும்