loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர் ஏப்ரல்-4

இந்த நாட்டில் மிக பழைமை வாய்ந்த  இந்து சங்கத்தின் 60 ஆம் ஆண்டு  வைர விழா தலைநகர் கலா மண்டபத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சி  மாலை 5.30 மணிக்கு  சரியாக ஆரம்பித்த நேரத்தில் , சுமார் கால் பகுதி இடமே நிரப்பப்பட்டது.

சிறிது நேரம் கழித்து கூட்டம் வர தொடங்கியது அப்போதும் சபையில் பாதி இடம் நிரப்பப்பட்டது.

தலைவரின் தலைமை உரை முடிந்து செய்தியாளர் சந்திப்பு நடக்கும் வரை  பாதி இடம் காலியாக இருந்தது.

மலேசிய முழுவதும் வட்டாரம் வைத்துள்ள ஒரு சங்கம்.  தனது 60 ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. கூட்டம் இப்படியாகவா?  இருக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.

உறுப்பினர்களுக்கு தகவல் சென்றதா? அல்லது தலைவர் மீது உள்ள அதிருப்தியா? என தெரியவில்லை ஆனால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பல உறுப்பினர்களின் முகம் வாடி புலம்ப தொடங்கியதை  தமிழ் லென்ஸ் கண்காணித்து.

அதோடு மட்டுமல்லாமல் ஆங்காங்கே உறுப்பினர்கள் புலனத்தின் வாயிலாக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும் நமக்கு கிடைத்துள்ளது.

சிலருக்கு முறையான அழைப்பும் கிடைக்கவில்லை எனவும் தகவல் தெரியவந்துள்ளது.

எது எப்படியோ இந்து சங்கம் ஒரு சமய அமைப்பு ,அது அரசியல் கட்சியல்ல ஆனால்   ஒரு பழமை வாய்ந்த சங்கத்தின் வைர விழா வெறிச்சோடி இருந்தது உறுப்பினர்களுக்கு மிக பெரிய வருத்தம் இது உண்மை.

சபை நிறைந்திருக்க வேண்டும்.

பதவி அரசியலில் ஒரு மாபெரும் இயக்கத்தின் விழா இப்படி பாதி சபை பாதி மனதோடு நிறைவுற்றது வருத்தம்.

இதை சம்பத்தப்பட்டவர் உணர வேண்டும் .

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஏப்ரல்-4

இன்று கலா மண்படத்தில்  நடைப்பெற்ற மலேசிய இந்து சங்கத்தின்  60 -ஆம் ஆண்டு வைரவிழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், வட்டார பொருப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.

ம.இ.காவின்  முன்னாள் தேசியத் தலைவர்  டான் ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் சிறப்பு வருகை புரிந்தார்.

நிகழ்ச்சியின் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் பேசுகையில்,  தமிழ் நாட்டில் மேலோங்கி இருக்கும் சாதி கலாச்சாரம் மலேசியாவில் ஊடுருவி வருகிறது. இதை தடுத்து நிறுத்த இந்து சங்கம் போராடும் என்றார்.

மலேசியாவில் தமிழர், தெலுங்கர், மலையாளி என பல இனத்தை சார்ந்த இந்துகள் இருந்தாலும் எங்களை நாங்கள் இந்துகளாக அடையாள படுத்தி வருகின்றோம்.
மலேசிய இந்துகளுக்கு சாதி அடையாளம் தேவை இல்லை  என தங்க கணேசன் தெரிவித்தார்.

இந்த சாதி கலாச்சாரத்தை நிறுத்த இந்து சங்கம் போராடும் என தங்க கணேசன் திட்டமிட்டமாக தெரிவித்தார்.

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 3-
பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் வரை நான் கட்சியின் தலைவர் என நான் கூறிக் கொள்ளமாட்டேன். கட்சியின் சேவகராரகதான் இதுப்பேன். இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்று அவர் சூளுரைத்தார்.

இதுவரை கட்சி சுமுகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் கொள்கை நிறைவேறும் வரை நாங்கள் அனைவரும் உழைப்போம் என அவர் சொன்னார்.

8 தொகுதிகளை வென்றோம் என்றால் எங்களின் முழு சேவையை மக்களுக்கு வழங்குவோம். என்களின் எதிர்ப்பார்ப்பு ஒரு நாள் நடக்கும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

அவரின் 60ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று பத்து கேவ்ஸ் செங்கா மண்டபத்தில் விமரிசையாக நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின்போது அவருக்கான AI வடிவத்தில் பாடல் ஒளிப்பரப்பட்டது. சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் சுரேந்திரன் தன் தலைவருக்காக இந்த முயற்சியை ஏடுத்திருந்தார்.

இந்த பாடல் காட்சி வந்திருந்தவர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின்னர் டத்தோ லோகா பாலவிற்கு சிலாங்கூர் பிபிபியினர் பெரிய அளவிலான மாலையை அணிவித்தனர்.

மாலை அணிவிக்கு பிறகு டத்தோ லோகா பாலா பேசுவையில், இந்த கொண்டாட்டத்தையும் மாலையையும் ஏற்பதற்கான காலம் இது கிடையாது. பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைத்த பின்னர் நான் இந்த சிறப்பை ஏற்றுக் கொள்கிறேன் என அவர் சொன்னார்.


கோலாலம்பூர், ஏப்.3- 
செலாயாங்  பகுதியில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களில் உடனடியாக திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளாக ஒரு ஆதரவற்ற இல்லம் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டு இருப்பது என்பது  ஆச்சரியத்தையும் கவலையும்  ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது உரிய அதிகாரிகள் வழங்கும் உரிமம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் குறைபாடு உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

மேலும், இதுபோன்று பதிவு செய்யப்படாத ஆதரவற்ற இல்லங்கள் உள்ளனவா, இல்லங்களிலும், அதில் குழந்தைகள் அபாயத்தில் உள்ளார்களா என்ற அச்சமும் இந்த சம்பவம் எழுப்புகிறது.

ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி இருப்பது மிகவும் வேதனைக்குரியது என்றும், இத்தகைய சம்பவங்கள் இனி எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை விரைவாக வெளிக்கொண்டு வந்து, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய போலீசாரின் உடனடி நடவடிக்கைக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அனைத்து குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிமம் பெறப்பட்டு, வழக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தவறுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து இல்லங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் அதிகாரிகளின் “கண்கள் மற்றும் காதுகள்” ஆக இருந்து, இத்தகைய துஷ்பிரயோகங்களை பற்றி தகவல் அளிக்க வேண்டும் என்றும், பலவீனமானவர்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கோலாலம்பூர், மார்ச் 31-
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்களுக்காக மஇகா இளைஞர் பிரிவு உயர்க்கல்வி குறித்த வழிக்காட்டி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் 4 லட்சம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர். இவ்வாண்டு அதன் முடிவுகள் வெளிடப்பட்ட வேளையில் 14 ஆயிரம் மாணவர் அனைத்து பாடங்களிலும் ஏ-க்கள் பெற்றுள்ளனர்.

ஆகையால் அவர்களின் மேற்கல்வி குறித்த விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கவே உயர்க்ல்வி இலட்சியப் பயணம் எனும் வழிக்காட்டி கருத்தரங்கை மஇகா இளைஞர் பிரிவு நாடு முழுவதிலும் நடத்தவுள்ளதாக தேசிய ரீதியிலான ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எல்.சத்திஸ்குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளிலும் இந்த உயர்க்கல்வி மாணவர்களுக்கான வழிக்காட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் நாடு தழுவிய அளவில் 1,500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.

நாளை ஏப்ரல் 1ஆம் தேதி மலாக்காவிலும் ஏப்ரல் 4ஆம் தேதி பகாங்கிலும் ஏப்ரல் 5ஆம் தேதி கெடா, பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், நெகிரி, ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், எந்த துறையை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என பல விளக்கங்கள் இந்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் மாணவர்களுக்கு நேருக்கு நேர் (1 to 1) விளக்கமும் அளிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

உயர்க்கல்வி பற்றிய விளக்கத்தை போலிடெக்னிக், உயர்க்கல்வி அமைச்சு, போன்றவையை சேர்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும்.

ஆகையால் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு தொடர்பில் விவரங்களை பெற 019-4860087 என்ற எண்ணுடன் சத்திஸ்குமாரை தொடர்புக் கொள்ளலாம்.