loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கூலிம்: தமிழ் செய்தி இணையதளமான தினத்தந்தியை சார்ந்த செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியம், அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது தொடர்பாக, அந்த இணையதளத்தின் இயக்குநர் பவளசெல்வன் மாரிமுத்து உறுதிப்படுத்தினார். இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இதுகுறித்த தகவல் தமக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பவளசெல்வன் கூறுகையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி காளிதாஸ் மற்ற ஊடகவியலாளர்களுடனுன் சில அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூலிம் ஹைடெக் பார்க் (KHTP) பகுதிக்கு சென்றிருந்தார்.

அங்கு 300க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் பணியாற்றுவதாக வந்த குற்றச்சாட்டை குறித்து செய்தி சேகரிக்கவே அவர்கள் சென்றதாக பவளசெல்வன் விளக்கினார்.

நாங்கள் தகவல் துறையில் பதிவு செய்யப்பட்டவர்கள்; அதிகாரப்பூர்வ ஊடக அட்டை எங்களிடம் உள்ளது. இப்படியான கைது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறினார்.

மேலும், இதற்கு முன்பே காளிதாஸை  கூலிம் போலீசார் விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.

இதற்கு முன்னர் அவரை போலீசார் அழைத்து விசாரணைக்கு வரச் சொன்னார்கள். அது அத்துமீறல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையது என தெரிவித்தனர்.

ஆனால் இன்று அவர் காவல் நிலையத்துக்கு சென்றபோது மேலதிக விசாரணைக்காக கைது செய்ததாக கூறப்பட்டது என பவளசெல்வன் மேலும் கூறினார்.

இதே குற்றச்சாட்டில் மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*உடனடி விடுதலை கோரிக்கை*

இதற்கிடையில், மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். முத்தமிழ் மன்னன், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அதிருப்தி வெளியிட்டார்.

ஒரு செய்தியாளர் தனது கடமையை செய்ததற்காக கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் அதிகாரப்பூர்வ ஊடக அட்டை உள்ளது. அவரை கைது செய்யாமல் வாக்குமூலம் பதிவு செய்திருந்தாலே போதுமானது என அவர் தெரிவித்தார்.

மேலும், காளிதாஸை உடனடியாக எந்த தாமதமும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்புடைய அமைச்சர் ஃபாமி பட்சில் அவர்களிடம் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடமும் (KDN) கருத்து கோரப்பட்டுள்ளது.


போர்ட்டிக்சன்,மார்ச் 29-

ம.இ.கா-வும் மக்கள் சக்தியும் ஒரே குடும்பமாக இந்திய சமுதாயத்திற்காக களத்தில் நிற்கும் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் டத்தோஸ்ரீ தனேந்திரன்  அவர்களும் ஒருமித்த குரலாக இந்திய சமுதாயம் சார்ந்த முடிவுகள் எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து  பயணக்க வேண்டும் என இன்று நடைப்பெற்ற மக்கள் சக்தியின் தேர்தல் பணிப்படை பயிற்சி நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று 50 பேர்களாக சிறிய அளவில் நடந்தப்பட்ட இந்த பயிற்ச்சியை 500 பேராக உருமாற்றுங்கள் நான் அதன் முழு செயலவை ஏற்கிறேன் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த  நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மக்கள் சக்தி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுக்கு என்னிடம் ஏதாவது கேள்விகள் உள்ளதா என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு தளத்தை அவர்களுக்கு வழங்கினார்.

அப்போது பெருவாரியான உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி என்னவென்றால்  டான்ஸ்ரீ இந்த ஒற்றுமை எல்லா நிலையிலும் ம.இ.கா - மக்கள் சக்தியிடம் இருக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பு இருக்கிறாதா? என்றால் ஒற்றுமை சற்று குறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்தையும் கேட்டு அறிந்த டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் 
கவலை வேண்டாம் நானும் டத்தோஸ்ரீ தனேந்திரன் அவர்களும் மாநிலம் மாநிலமாக இரு தரப்பு கட்சி உறுப்பினர்களை சந்திக்க வருகின்றோம். அனைவரும் தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

இந்த தேர்தலை இந்திய சமுதாயம் ஒற்றுமையாக ஒரு மித்த குரலாக சந்திக்க வேண்டும்.

அதற்கு நமது பணிப்படை தயாராக இருக்க வேண்டும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  தெரிவித்தார்.

ஒற்றுமையான ஒரு சமுதாயமாக தேர்தலை நிர்ணயம் செய்யும் சக்தியாக மீண்டும்  உருவெடுப்போம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

போர்ட்டிக்சன், மார்ச் 29-
மக்கள் சக்தி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் போர்ட்டிக்சனில் நடைபெற்ற நிகழ்வில், வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சி தீவிரமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் தனது தலைமை உரையில், தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை “Retreat” நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கூறினார். 

கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ஏமாற்றத்தை சரிசெய்யும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த தேர்தலுக்காக 300 பேர் கொண்ட பணிப்படை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“ஒன்றாய் வெல்வோம்” என்பது இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக இருந்ததாகவும், மஇகாவுடன் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு, அடுத்த பொதுத் தேர்தலிலும் கூட்டாக பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எந்த சவாலையும் எதிர்கொள்ள கட்சி தயாராக இருப்பதாகவும், உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு கட்சியின் ஆதரவு தொடரும் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் பதவி வகித்திருப்பது அரசியல் நிலையற்ற தன்மையை காட்டுவதாகவும், பதவிக்கு வரும் சிலர் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நாட்டின் வளர்ச்சியில் மஇகாவின் பங்கு முக்கியமானது என்றும், அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளில் மக்கள் சக்தி கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களின் ஆதரவை பெறும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

 

கோலாலம்பூர், மார்ச் 27-

பி.கே.ஆர் கட்சி தொடர்பாக பல விதமான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த கட்சி தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி அவர்கள் பல விதமான குறறசாட்டுகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கடந்த ஒரு வாரமாக பி.கே.ஆர் கட்சி தொடர்பான சர்ச்சை வந்து கொண்டு இருக்கும் நிலையில், இப்போது கட்சியின் துணைத் தலைவர் ராஜினாமா செய்து விட்டார் என்ற தகவலும் இப்போது பரவி வருகிறது.

அடுத்து யார் கட்சியில் ராஜினாமா செய்ய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

யாருடைய  பெயர் பட்டியலில் இருக்கிறது என்று பி.கே.ஆர் வட்டாரத்தில் இப்போது கேள்வி எழுந்து  வருவதாக தமிழ்லென்ஸ் இணையத்திற்கு இப்போது தகவல் கிடைத்து உள்ளது.

யார் அந்த MR.R? அவருக்கும்  பி.கே.ஆர் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?  இதில் சம்பந்தபட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் யார்? அவர்களின் Boss யார் என்ற கேள்வியும் எழுந்து வரும் இந்த நேரத்தில்,

அடுத்து அடுத்து பி.கே.ஆர் கட்சியில் இப்படி பல வதந்திகள்  வருகிறது.

அடுத்து யார் ராஜினாமா செய்ய போகிறார்?  முக்கிய புள்ளியா? அல்லது அவர்கள் சார்ந்த பலியாடா? அதிரடி தகவலுக்கு காத்திருப்போம்...

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 27-

பி.கே.ஆர் கட்சியின் தேசிய துணைத் தலைவர்  நூருல் இசா கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்  தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கடிதம் இப்போது வெளியாகி உள்ளதாக  பி.கே.ஆர் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் உண்மையான காரணம், அதிகாரபூர்வமான தகவல் இன்னும் தெரியாமல் உள்ளது.

ஆனால் இதுவரை தமிழ்லென்ஸ் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்
நூருல் இசா தனது கல்வியை தொடர உள்ளதாக பி.கே.ஆர் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

காத்திருப்போம் அதிகாரபூர்வ தகவலுக்காக...

செய்தி: வெற்றி விக்டர்