loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்


ஷா ஆலம், மே 12-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 22ஆவது முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டில் நடத்தப்பட்டவுள்ளது.

இம்முறையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 65 ஆண்கள் அணிகளும் 34 பெண்கள் அணிகளும் இப்போட்டியில் களம் காணவுள்ளதாக சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.

இப்போட்டி வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆர்ஆர்ஐ திடலில் நடைப்பெறவுள்ளது.

இந்த போட்டியை சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் சங்கம் இணைந்து நடத்துகிறது.

ஆண்களுக்கான அணிகளில் முதல் 16 இடங்களில் வெற்றிப்பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. முதல் நிலையில் வெற்றிப்பெறும் அணிக்கு நமசிவாயம் சுழற்கிண்ணம் வழங்கப்படும்.

பெண்களுக்கான அணிகளில் முதல் 12 இடங்களில் வெல்லும் குழுக்களுக்கு பரிசுகள் உண்டு. இந்த பிரிவின் வெற்றி குழுவிற்கு ரவிந்திரன் சுழற்கிண்ணம் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இந்த போட்டிக்கான அணிகள் பிரிப்பதற்கான குலுக்கல் இன்று சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைப்பெற்று. 

இந்த போட்டிக்கு மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பத்துமலை தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே.9-
மைக்கியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு  தமிழ் லென்ஸ் ஆசிரியர்  வெற்றி விக்டர் தனது இரங்கலை தெரிவித்தார்.

நம் நாடு  நாளிதழ் வாயிலாக எனக்கு நன்கு அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், எனக்கு அங்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். வேறொரு நாளிதழில் இருந்து நம் நாடு வந்த எனக்கு உரிமையாளர் என்ற முறையில் நடந்து கொள்ளாமல் திறமை துணிச்சல் உள்ளவர்களை தட்டி கொடுக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்தார்.

மக்கள் செய்தியை எழுதிய என்னை அரசியல் செய்தி எழுத வாய்ப்பு கொடுத்தவர் இவர். அந்த நாளிதழ் என் வாழ்க்கையை மாற்றியது.

ஒரு பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு தகுதியான சம்பளத்தை கொடுத்தது டான்ஸ்ரீ கென்னத் நடத்திய நாளிதழ் மட்டுதான். முழு சுதந்திரமும் அங்குதான்  கிடைத்தது. அரசியல் வாதிகளை கண்டு அச்சம் கொள்ளதே என ஊக்கம் ஊட்டியவர் கென்னத் ஈஸ்வரன் தான். ஒரு சாதாரண செய்தியாளரை அரசியல் செய்தியாளர், செய்தி ஆசிரியர்  என இளம் வயதில் நம்பி வாய்ப்பு கொடுத்தவர் அவர்.

என்னை "CILI PADI" என்று அழைப்பார். அரசியல் செய்தியிலும் சரி, அவர் சார்ந்த மைக்கி இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் சரி என்னை முதல் தேர்வாக விரும்புவார். அந்த நம்பிக்கை கொடுத்து கொடுத்து  என் எழுத்தை ரசித்த நபர் அவர்.

பிறகு மைக்கியில் அவரது  அலுவலக  தமிழ் பிரிவு செயலாளராக  எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் பல நாடு குறிப்பாக இந்தியா,  டெர்பன்  இலங்கை,  பொண்டிச்சேரி என பல  உலகத் தமிழ் பொருளாதார மாநாடுகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பல அரசாங்க பொருளாதார கூட்டத்தில் திட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மைக்கி- யில் அவர் ஒய்வு பெறும் போது...  நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என என் மீது  கவலை பட்டு அவர் எனக்கு விதைத்த விதைதான்... இன்று தமிழ் லென்ஸ்   இணைய ஊடகம்.

வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார். பிறகு  ஒய்வின் காரணமாக மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்ப்பேன். பிறகு தொலைபேசியில் பேசுவோம்
தீடீர்- தீடீர் என்று என்னை அழைத்து பேசுவார். சில நேரங்களில்  அவரது குடும்பத்தினர்  அப்பா பேசவேண்டும் என்று சொல்வார்கள் பேசுவார் இப்போது அந்த பேச்சு நின்று விட்டது.

இப்படி என்ன வானுயர வளர்த்த சாமி இன்று வானம் தொட்டு போனது  என்பது எனக்கு  தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு தான்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் நன்றியுடன்  வெற்றி விக்டர்.

கோலாலம்பூர், மே.9-
மைக்கியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு  தமிழ் லென்ஸ் ஆசிரியர்  வெற்றி விக்டர் தனது இரங்கலை தெரிவித்தார்.

நம் நாடு  நாளிதழ் வாயிலாக எனக்கு நன்கு அறிமுகமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், எனக்கு அங்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். வேறொரு நாளிதழில் இருந்து நம் நாடு வந்த எனக்கு உரிமையாளர் என்ற முறையில் நடந்து கொள்ளாமல் திறமை துணிச்சல் உள்ளவர்களை தட்டி கொடுக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்தார்.

மக்கள் செய்தியை எழுதிய என்னை அரசியல் செய்தி எழுத வாய்ப்பு கொடுத்தவர் இவர். அந்த நாளிதழ் என் வாழ்க்கையை மாற்றியது.

ஒரு பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு தகுதியான சம்பளத்தை கொடுத்தது டான்ஸ்ரீ கென்னத் நடத்திய நாளிதழ் மட்டுதான். முழு சுதந்திரமும் அங்குதான்  கிடைத்தது. அரசியல் வாதிகளை கண்டு அச்சம் கொள்ளதே என ஊக்கம் ஊட்டியவர் கென்னத் ஈஸ்வரன் தான். ஒரு சாதாரண செய்தியாளரை அரசியல் செய்தியாளர், செய்தி ஆசிரியர்  என இளம் வயதில் நம்பி வாய்ப்பு கொடுத்தவர் அவர்.

என்னை "CILI PADI" என்று அழைப்பார். அரசியல் செய்தியிலும் சரி, அவர் சார்ந்த மைக்கி இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் சரி என்னை முதல் தேர்வாக விரும்புவார். அந்த நம்பிக்கை கொடுத்து கொடுத்து  என் எழுத்தை ரசித்த நபர் அவர்.

பிறகு மைக்கியில் அவரது  அலுவலக  தமிழ் பிரிவு செயலாளராக  எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் பல நாடு குறிப்பாக இந்தியா,  டெர்பன்  இலங்கை,  பொண்டிச்சேரி என பல  உலகத் தமிழ் பொருளாதார மாநாடுகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பல அரசாங்க பொருளாதார கூட்டத்தில் திட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மைக்கி- யில் அவர் ஒய்வு பெறும் போது...  நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என என் மீது  கவலை பட்டு அவர் எனக்கு விதைத்த விதைதான்... இன்று தமிழ் லென்ஸ்   இணைய ஊடகம்.

வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார். பிறகு  ஒய்வின் காரணமாக மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்ப்பேன். பிறகு தொலைபேசியில் பேசுவோம்
தீடீர்- தீடீர் என்று என்னை அழைத்து பேசுவார். சில நேரங்களில்  அவரது குடும்பத்தினர்  அப்பா பேசவேண்டும் என்று சொல்வார்கள் பேசுவார் இப்போது அந்த பேச்சு நின்று விட்டது.

இப்படி என்ன வானுயர வளர்த்த சாமி இன்று வானம் தொட்டு போனது  என்பது எனக்கு  தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு தான்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் நன்றியுடன்  வெற்றி விக்டர்.

கோலாலம்பூர்- 9
மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவை எதிர்பார்ப்புகளை  நன்கு கண்டு அறிந்து அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு முறையாக கொண்டு வந்து பல நல்ல திட்டங்கள் உருவாக ஆலோசனை கொடுத்த ஒரு தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது என முன்னாள் பிரதமர் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் தனது முகநூல் வாயிலாக தெரிவித்தார் .

தான் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய வர்த்தகர் பிரச்சினை தொடர்பாக   பல முறை என்னை சந்தித்து பல  திட்ட ஆலோசனைகளை வழங்கினார். ஒரு நல்ல சமுதாய அக்கறை  உடைய தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது என டத்தோ ஸ்ரீ நஜீப் தெரிவித்தார்

கோலாலம்பூர் -9

மைக்கியின் வளர்ச்சிக்கும், இந்திய வர்த்தகர்களின் வளர்ச்சிக்கும் மறைந்த டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என
மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்  தெரிவித்தார்.

மைக்கியின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் இன்று காலை சுமார் 6.00 மணியளவில் காலமானார் என்ற செய்தி மைக்கி  உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது  என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் மிகுந்த துக்கத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.

டான் ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு   மைக்கி இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் ஒரு புகழ்பெற்ற, மதிக்கப்படும் தொழில்முனைவராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

அவர் மைக்கியின் வளர்ச்சிக்கும், மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தக சமூகத்தின் வளர்ச்சிக்கும்  அவர்கள் வலுப்பெறுவதற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கினார்.

தொழில்முனைவோருக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அவரது தலைமைத்துவம், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை என்றும் நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.

அவரது சேவை ஆண்டுகள் முழுவதும், மைக்கியின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் ஒரு முக்கியப் பங்காற்றினார்.

மேலும், வர்த்தக சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பலருக்கு உத்வேகம் அளித்த ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்  தனது இரங்கல் செய்தியில் கூறினார்.