loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், மே 14 -
பல மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்த மாத வாடகை கட்டண பாக்கிகளைச் செலுத்துவது குறித்து ஸ்ரீ ஆமான் குடியிருப்பாளர்கள் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற (DBKL) அதிகாரிகளுக்கு இடையில் முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு, நிலுவையில் உள்ள வாடகைத் தொகைகளை ஒருமுறை அல்லது தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால், உடனடியாக முழுத் தொகையையும் செலுத்த முடியாத சூழ்நிலையை பலர் எடுத்துக்கூறினர்.

இதற்கு பதிலளித்த மாநகர் மன்ற அதிகாரிகள், குடியிருப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, நெகிழ்வான கட்டண திட்டங்கள் (installment plans) அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தை கோலாலம்பூர் பிபிபி  தலைவர் சத்யா மற்றும் சிகாம்பூட் தொகுதி தலைவர்   டத்தோ வினோத் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அவர்கள் , குடியிருப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல், மனிதநேய அணுகுமுறையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பில் பேசிய பிபிபி கட்சியின் கூட்டரசுப் பிரதேச தலைவர் சத்தியா, கோலாலம்பூரில் உள்ள பி.பி.ஆர் (PPR) குடியிருப்புகளில் இதுபோன்ற சந்திப்புகளை பி.பி.பி கட்சி  தொடர்ந்து ஏற்பாடு செய்யும் என தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 13 –
சரக்கு ஏற்றுமதி ஆவணங்களுக்கும் உண்மையான சரக்கு நகர்வுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் கடல்சார் மற்றும் உலக வர்த்தகத் துறைக்கு பெரும் அபாயமாக மாறி வருவதாக கடல்சார் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மெரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி கூறுகையில், Bill of Lading (BL) ஆவணம் என்பது சாதாரண கப்பல் போக்குவரத்து ஆவணம் அல்ல; அது வங்கி பரிவர்த்தனை, காப்பீடு, சுங்க அறிவிப்பு, சரக்கு உரிமை மற்றும் சர்வதேச இணக்கப்பாடு போன்ற முக்கிய அம்சங்களுடன் நேரடியாக தொடர்புடையது என்றார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள அவர், BL ஆவணங்களில் உள்ள தகவல்களும் உண்மையான சரக்கு நகர்வுகளும் பொருந்தாமல் போகும் போது செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

கப்பல் முகவர்கள் சரக்கின் உரிமையாளர்கள் அல்லாதபோதிலும், அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளை அதிகாரிகள் மற்றும் துறைமுகங்கள் நம்புவதால், நேரடி பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதனால், கப்பல் முகவர்கள் தற்போது ஆவண நம்பகத்தன்மை, உள்துறை இணக்க கட்டுப்பாடு மற்றும் Know-Your-Customer (KYC) சரிபார்ப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக எண்ணெய் வர்த்தகங்களில், வியாபாரிகள், பெறுநர்கள், துறைமுகங்கள் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் ஆரம்ப BL ஆவணங்களுடன் பொருந்தாமல் இருப்பது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சரக்குகள் மாற்றம், கலவை அல்லது சேமிப்பு நடவடிக்கைகளால் மாறும்போது, அதற்கேற்ப ஆவணங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சுங்க பதிவுகள், டேங்க் அளவீடுகள் மற்றும் உண்மையான சரக்கு நிலைகளில் முரண்பாடுகள் உருவாகி வர்த்தக தகராறுகள், இணக்கப்பாடு குறைபாடுகள் மற்றும் வருவாய் இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி எச்சரித்தார்.

உலு சிலாங்கூர், மே 13- வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ள பாஸ் கட்சியின் “Himpunan Daulat Tuanku” பேரணியில் பங்கேற்கும் மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க உலு சிலாங்கூர் கெஅடிலான் கட்சியினர் தயாராக இருப்பதாக அக்கிளையின் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் அறிவித்துள்ளார்.

பேரணியில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பையும் அவசர மருத்துவ உதவிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு. ஆனால், அது யாருடைய கருத்துரிமையையும் மறுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. பொறுப்புடன் மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பு இல்லாத வகையில் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு.

மலேசிய அரசியலமைப்பின் கீழ் கருத்துரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இது சீர்திருத்த அரசியலை முன்னிறுத்தும் பிகேஆர் கட்சியின் கொள்கைகளுடனும் ஒத்துப்போகிறது என்று அவர் தெரிவித்தார்.

மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள “Himpunan Daulat Tuanku” குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறினார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநில அரசு, ஷா ஆலாம் பகுதியில் நடைபெறவுள்ள பாஸ் இளைஞர் அமைப்பின் பேரணியை வரவேற்றதுடன், பேரணி சீராக நடைபெற போலீஸ் உதவியை நாடுவதோடு பங்கேற்பாளர்களுக்கு உணவு மற்றும் பானங்களும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

மேலும் கருத்து தெரிவித்த சத்தியா பிரகாஷ், அமைதியான முறையில் மக்கள் ஒன்று கூடவும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும் இடமளிப்பதே முதிர்ந்த ஜனநாயகத்தின் அடையாளம் என்றார்.

அரச மரபை மதிப்பது என்பது வெறும் அரசியல் முழக்கமாக இருக்கக்கூடாது. பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை பாதுகாப்பதன் மூலமே அது உண்மையில் வெளிப்பட வேண்டும்.

கருத்துரிமை மட்டுமல்லாமல், ஒழுங்கையும் அமைதியையும் பேணும் பொறுப்புணர்வும் முதிர்ந்த ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். தூண்டுதல்களைத் தவிர்த்து, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படாத சூழலை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

கோலாலம்பூர், மே 13 –
சரக்கு ஏற்றுமதி ஆவணங்களுக்கும் உண்மையான சரக்கு நகர்வுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் கடல்சார் மற்றும் உலக வர்த்தகத் துறைக்கு பெரும் அபாயமாக மாறி வருவதாக கடல்சார் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மெரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி கூறுகையில், Bill of Lading (BL) ஆவணம் என்பது சாதாரண கப்பல் போக்குவரத்து ஆவணம் அல்ல; அது வங்கி பரிவர்த்தனை, காப்பீடு, சுங்க அறிவிப்பு, சரக்கு உரிமை மற்றும் சர்வதேச இணக்கப்பாடு போன்ற முக்கிய அம்சங்களுடன் நேரடியாக தொடர்புடையது என்றார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள அவர், BL ஆவணங்களில் உள்ள தகவல்களும் உண்மையான சரக்கு நகர்வுகளும் பொருந்தாமல் போகும் போது செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.

கப்பல் முகவர்கள் சரக்கின் உரிமையாளர்கள் அல்லாதபோதிலும், அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளை அதிகாரிகள் மற்றும் துறைமுகங்கள் நம்புவதால், நேரடி பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதனால், கப்பல் முகவர்கள் தற்போது ஆவண நம்பகத்தன்மை, உள்துறை இணக்க கட்டுப்பாடு மற்றும் Know-Your-Customer (KYC) சரிபார்ப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக எண்ணெய் வர்த்தகங்களில், வியாபாரிகள், பெறுநர்கள், துறைமுகங்கள் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் ஆரம்ப BL ஆவணங்களுடன் பொருந்தாமல் இருப்பது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சரக்குகள் மாற்றம், கலவை அல்லது சேமிப்பு நடவடிக்கைகளால் மாறும்போது, அதற்கேற்ப ஆவணங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சுங்க பதிவுகள், டேங்க் அளவீடுகள் மற்றும் உண்மையான சரக்கு நிலைகளில் முரண்பாடுகள் உருவாகி வர்த்தக தகராறுகள், இணக்கப்பாடு குறைபாடுகள் மற்றும் வருவாய் இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் டத்தோ ஸ்ரீ ஜெயேந்தரன் ராமசாமி எச்சரித்தார்.

கோலாலம்பூர், மே 12 –
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தளம் பகுதியில் நடைபெறவுள்ளது.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த யாகத்தில் கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். “சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம்” என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகள் வழங்கவுள்ளனர். “அறிவியல் மருத்துவமாகவும், ஆன்மீகம் நம்பிக்கையாகவும் உள்ளது” என சத்தியவதி கூறினார்.

மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை பேசுகையில், “ஏன் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கப்படும். மலேசியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1.4 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது” என்றார்.

அதேவேளை, டாக்டர் உமா பெண்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றும், காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிகுருக்கள், ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது. வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று தெரிவித்தார்.