loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

 

கோலாலம்பூர், ஏப்.19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து இந்திய முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக பேச துணை பிரதமரும்  தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட்  ஹமிடி வாயிலாக உதவி கேட்டும் இப்போது வரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு  கிடைக்கவில்லை.

ஆனால்  கடிதம் மட்டும் வருகிறது. இந்த அமைச்சை பாருங்கள் அந்த அமைச்சை பாருங்கள் என்று. அவர்களை சந்தித்தால் எந்த பதிலும் இல்லை. இது எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள் என கிம்மா தலைவர் 
டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிறகு திரும்பவும் பிரதமர் துறைக்கு கடிதம் எழுதினால் நேரம் இல்லை என்ற பதில் எங்களுக்கு வருகிறது.

கிம்மா கட்சி என்பது 50 ஆண்டுகள் வரலாறு உள்ள கட்சி ஆனால் எங்களுக்கு இந்த் அரசாங்கத்தில் கிடைக்கும் மரியாதை மனநிறைவு கொடுக்கவில்லை என்றார்.

1மில்லியன் இந்திய முஸ்லிம்  வாழும் இந்த நாட்டில் அந்த சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கிம்மா கட்சியை சந்திக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு நேரம் இல்லை... ஆனால்   இந்திய நடிகர்களான ரஜினி- கமல் என்ற நடிகர்களை சந்திக்க நேரம் உண்டும் என கிம்மா தலைவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

எங்கள் சமுதாயமும் வீதியில் வந்து போராடா வேண்டுமா அல்லது பிரதமர் அலுவலகத்தில் வந்து மறியல் செய்ய வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உங்கள் அமைச்சர்கள் மலேசிய இந்திய முஸ்லீம் சமுதாயத்தின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பது இல்லை. சரி பிரதமரை சந்தித்து சொல்லலாம் என்றால் இந்த விவகாரத்தில் பிரதமர் கவனம் செலுத்த நேரம் இல்லை என்றார் கிம்மா தலைவர்.

எங்கள் பிரச்சினை பிரதமர் துறை உடனே கவனிக்க வேண்டும் இல்லை என்றால் எங்களுக்கும் ( reformasi ) தெரியும்.  எங்களின் பிரச்சினையை பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்ல ஒரு சமுதாய முன்னெடுப்பு நடக்கும் என்றார் கிம்மா தலைவர்.

நாங்களும் இந்த நாட்டு மக்கள் ,  இந்திய நாட்டு பிரபலமான ரஜினி கமலுக்கு உள்ள முக்கியதுவம். ஏன் 1 மில்லியன் வாக்கு வைத்துள்ள  எங்கள் சமுதாயத்திற்கு இல்லை என கிம்மா தலைவர் டத்தோ ஸ்ரீ சைட் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நாட்டில் சிறுபான்மையான நாங்கள் 126 தொழில் துறையில் ஈடுபட்டு  தொழில் செய்து நாட்டின் மேம்பாட்டிற்கு எங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறோம் ஆனால் அரசாங்கத்தின் பார்வை எங்கள் சமுதாயத்தின் மீது பட வில்லை என்பது  மிகப் பெரிய கேள்வியை எழுப்புவதாக கிம்மா தலைவர் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர்

 

கோலாலம்பூர், ஏப்.18-
அரசியல் என்றால் அதில் அனைவருக்கும் ஒரு கனவு அல்லது எதிர்கால சிந்தனை இருக்கலாம். ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் அதில் விசுவாசம் இருப்பது அவசியம் என தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.

அந்த வகையில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அதன் பின்னர் மீண்டும் தேசிய முன்னணிக்குள் வருவதாக அறிவிப்பது சம்பந்தப்பட்ட கட்சி கூட்டணிக்கு உண்மையாக இல்லை என்பதை காட்டிவதாக அவர் சொன்னார்.

மேலும் சம்பந்தப்பட்ட கட்சி இன்னும் இருக்கிறதா அல்லது செயலிழந்து விட்டதா என்பது தெரியவில்லை என்ற அவர், எந்த கட்சி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என மறைமுகமாக கூறினார்.

கிம்மாவின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று தலைநகர் உலக வாணிப மையத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தை அதிகாரப்பூரவாக வினைக்கு வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

பல ஆண்டுகளாக ஒரு கூட்டணியிலிருந்து விட்டு அந்த கூட்டணியை விட்டு விலகுவதாக கூறிவிட்டு மற்ற கூட்டணியில் இணைய திட்டம் வகுப்பது மாபெரும் துரோகமாகும் என அவர் மேலும் அழுத்தமாக கூறினார்.

அந்த வகையில் தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக இருக்கும் கிம்மா கூட்டணிக்கு உண்மையாக இருப்பதாக அவர் பெருமையாக கூறினார்.

கோலாலம்பூர், ஏப்.18-

கிம்மா கட்சியின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று தலைநகர் உலக வாணிப மையத்தில் நடைப்பெற்றது.

தேசிய முன்னணியின் தலைவரும் துணை பிரதமருமான  டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சிறப்பு வருகை புரிந்து கூட்டத்தை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஆண்டு கூட்டத்தில் பேசிய கிம்மா தலைவர் சைட் இப்ராஹிம் , மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சுமார் 126 தொழில் துறைகளில் தொழில் செய்துவருகிறது. சிறுபான்மை சமுதாயமாக  நாங்கள் இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் பங்கு அளப்பரியது என்றார்.

இருந்தபோதிலும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்படவில்லை. அது கவலையாக உள்ளது என்றார்.

கிம்மாவை பொறுத்தவரை தேசிய முன்னணி சார்ந்த அமைச்சர்கள் இந்திய முஸ்லிம் சமுதாய பிரச்சனைகளை செவி சாய்க்கின்றனர். ஆனால் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற அமைச்சர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சு , கல்வி அமைச்சு , மனிதவள அமைச்சு எங்கள் பிரச்சினைகளை தீவிரமாக செவி சாய்ப்பது இல்லை என சைட் இப்ராஹிம், துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ  ஹாமாட் சாயிட் இப்ராஹிம்  முன்னிலையில் போட்டு உடைத்தார்.

குறிப்பாக இந்திய முஸ்லிம் மக்கள் செய்யும் தொழில்களான நகைக்கடை,  மளிகை கடை , மற்றும் உணவகங்களுக்கு அந்நிய தொழிலாளர்  பற்றாக்குறை பல ஆண்டுகளாக இருந்தும், தீர்வு இல்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகள் பல கடைகள் மூடப்பட்டு வருகிறது.

நிலைமை இப்படியே நீடித்தால் இந்திய முஸ்லீம் சமுதாயம் மீண்டும் எழுவது கடினம், ஆகையால் அரசாங்கம் இந்த பிரச்சினை மீது கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது  இந்திய முஸ்லீம் குரலாக அரசாங்க பொறுப்பில் கிம்மா ஒரு அங்கமாக அங்கீகரிக்கப் படவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஒரே வழி கிம்மா கட்சி தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக  அங்கீகரப்பட வேண்டும் என சைட் இப்ராஹிம் தேசிய முன்னணி தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.

50 ஆண்டுகளாக காத்திருந்து விட்டோம். எங்களுக்கு  எங்களை உறுப்பு கட்சியாகவும் அதே நேரத்தில் தேர்தலில் 2 நாடாளுமன்ற தொகுதி மற்றும் மூன்று சட்டமன்ற தொகுதி  கிம்மாவுக்கு வழங்கப்படவேண்டும் என கூறினார்.

அதோடு இந்திய முஸ்லிம் மேம்பாட்டிற்கு சிறப்பு நிதி ஆண்டு தோறும் வரவு செலவு திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்படவேண்டும் என சைட் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அன்பு மலேசிய சகோதரர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தத் தமிழ் புத்தாண்டான சித்திரைப் புத்தாண்டு, நமது கடந்த கால சாதனைகளைத் திரும்பிப் பார்ப்பதற்கும், பிரகாசமான, வளமான எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துவதற்கும் முக்கியத் தருணமாக அமைகிறது.

இலக்கவியல் அமைச்சில், எந்த ஒரு பாகுபாடுமின்றி, ஒவ்வொரு மலேசியரும் வருங்காலத்தை நோக்கிய தொழில்நுட்பப் புத்தாக்கதில் வலுப்பெறுவதை உறுதி செய்வதில் நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம். இலக்கவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்,  நமது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தி,  நாட்டை மேம்பாடடையச் செய்வதே எங்கள் இலக்காகும்.

இந்தப் புதிய வருடத்தை நாம் கொண்டாடும் அதே வேளையில், நம்மைச் சுற்றி நிகழும் உலகின் சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய கிழக்கில் தொடரும் மோதலானது உலகளாவிய நிலையில் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது, அதன் தாக்கம் நமது நாட்டிலும் உணரப்படுகிறது. எரிசக்தி விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் நிலையில்லா ஏற்ற இறக்கங்கள், நமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையில், மக்களுக்குப் பெரும் சுமையாக அமையுவதோடு நமது அன்றாட வாழ்க்கையையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

மடானி அரசாங்கம் இந்தப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக அயராது உழைத்து வருகிறது, இருந்தாலும், மக்களின் ஆதரவில்லாமல், எங்களால் இந்தச் சவாலை எதிர்கொள்வது கடினம்.

உலகளாவிய ரீதியில் நிலைத்தன்மையில்லாத காலகட்டத்தில், ஒவ்வொரு மலேசியரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. நமது எரிசக்திப் பாதுகாப்பையும் பொருளாதார மீட்சியையும் உறுதி செய்ய, நாம் விவேகத்துடன் செயல்படுவதோடு மட்டும் அல்லாமல், அரசின் முன்னெடுப்புகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வலிமையையும் தாண்டி, சமூக நல்லிணக்கமே நமது மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. தற்போதைய காலகட்டத்தில், நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக, வேறுபாடுகளைக் களைந்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டிருப்பது இன்றியமையாததாகும். நிலைத்தன்மையில்லா உலகச் சூழலில், பரஸ்பர மரியாதையும் சுபீட்சமான சூழலை உருவாக்க நாம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளுமே,  வரும் தலைமுறையினருக்காக, இந்த நாட்டில் நாம் உருவாக்கும் நிலையான பாதுகாப்பான அடித்தளமாகும்.

புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தை குறிப்பது போலவே பேதத்தைக் கடந்த ஒற்றுமையான மலேசியாவாக புதுப்பிக்கப்பட்ட உணர்வையும் குறிக்கட்டும்.
நாம் நமது குடும்பத்தினருடன் கலாச்சார உணவுகளை உண்டு மகிழ்ந்து, பெரியோர்களின் ஆசி பெற ஒன்றுகூடும் இந்த வேளையில் உலக அமைதிக்காகவும், நமது அன்புக்குரிய மலேசியாவின் நல்லிணக்கம் நிலைத்திருக்கவும் பிரார்த்திப்போம். இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கு இனிய வைசாகி மற்றும் விஷு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ
இலக்கவியல் அமைச்சர்
ஜ.செ.க தேசியத் தலைவர்

கோலாலம்பூர், ஏப்.11-

நாட்டில் டீசல் விலை வாரத்திற்கு வாரம் உயர்ந்து வருவதால் குத்தகையாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகையால் டீசலுக்கு நிலையான விலையை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கம் மானியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அதன் தலைவர் ஜி.ஆனந்தன் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் நடக்கும் போரால் பெட்ரோல் விலை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக டீசலின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு எங்களை போன்ற குத்தகையாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.

காரணம் ஒரு குத்தகையை பெறுவதற்காக விலைப் பட்டியலை நாங்கள் வழங்குகிறோம்.

அதில் டீசலில் விலையை அடிப்படையாக கொண்டும் மொத்த விலை வழங்கப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு வாரமும் விலை உயர்ந்தால் நாங்கள் எப்படி உறுதியான விலைப் பட்டியலை கொடுக்க முடியும்.
அப்படியே இந்த விலையை வைத்து குத்தகையை பெற்றால் அது எங்களுக்கு நஷ்டத்தை தான் தரும்.

ஆகவே இவ்விவகாரத்தை அரசாங்கம் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் டீசலுக்கு நிலையான விலையை அறிவிக்க வேண்டும்.

இல்லையென்றால் அரசாங்கம் மானியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று ஆனந்தன் மேலும் வலியுறுத்தினார்.