loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

 

கோலாலம்பூர், ஜூலை 27-
தமிழ்நாட்டில் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருது நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த 10 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி சிறப்புவிக்கப்பட்டது.

உலக அரங்கில் சாதனை படைத்த நம் நாட்டின் இந்திய பெண்களை கௌரவிக்கும் வகையில் இன்று மஇகா நேதாஜி மண்டத்தில் அவர்களுக்கான சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

சிறப்பு விருதுகளைப் பெற்ற ஆசிரியர் கர்ப்பகம் கிருஷ்ணசாமி, டாக்டர் ஜசிந்தா ஜெயரத்னம், சன்சித்தா ஆதிமூலம், உமா ஜெராலென் லோய்ஸ், யோகிஸ்வரி ராஜேந்திரன், செல்வமேரி எம்.கிருஷ்ணா, சுபித்ரா ரத்தினம், ஜெகதீஸ்வரி சீத்தாராமன், திலகவதி கார்மேகம், டாக்டர் சோபனா, செல்வமேரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு இன்று நடைபெற்ற சர்வதேச சாதனைப் பெண்கள் பாராட்டு விழாவில் மஇகாவின் துணைத் தலைவர் சொல்வேந்தர், செந்தமிழ்ச் செல்வர் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் சிறப்பு செய்தார்.

பெண்களுக்கான எடுத்து காட்டாக திகழும் இந்த 10 சிங்கப் பெண்களை பற்றிய காணொளி இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பப்பட்டதுடன் அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றியும் இப்பெண்கள் விளக்கினர்.

விருது பெற்ற நம் நாட்டு பெண்களை கௌரவிக்கும் வகையில் எம்எஸ்கே புரொடக்சனை சேர்ந்த செல்வமேரி இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஜூலை 26-

புக்கிட் பிந்தாங் பகுதியில் 16 வியாபாரிகளின் சாலையோர  கடைகளின் பொருட்களை கோலாலம்பூர் மாநகர மன்றம் நேற்று முந்தினம் பறிமுதல் செய்தது.

கோலாலம்பூர் மாநகர மன்றத்திம் (DBKL)புக்கிட் பிந்தாங் அலுவலகம், உரிமம் மற்றும் வணிக மேம்பாட்டுத் துறை மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாபாரம் செய்வதற்கான முறையான வணிக உரிமம் இல்லாத 15 வெளிநாட்டவர்கள் உட்பட  உள்ளூர் வியாபாரி ஒருவருக்கும் நோட்டிஸ் வழங்கப்பட்டு அவர்களின் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் பதிவு மற்றும் ஆவணச் செயலுக்காக தலைநகர் மிஹார்ஜா ஜாலான் லொம்போங்கில் உள்ள கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.

-காளிதாசன் இளங்கோவன்

சுங்கைப்பூலோ, ஜூலை 26-

துணையமைச்சருக்கான சம்பளத்தையும் சேர்ந்து 425,000 ரிங்கிட்டை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி விட்டதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சரும் சுங்கைப்பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு தருவேன் என வாக்குறுதி வழங்கினேன்.

இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் அலவன்சை வழிபாட்டுத் தளங்களுக்கு வழங்கினேன்.

இதுவரை 452,000 ரிங்கிட் வழிபாட்டுத் தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு 72 வழிபாட்டுத் தளங்களுக்கு 332,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு துணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த சம்பளத்தையும் கடந்த ஜனவரி மாதம் முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி விட்டேன்.

கடந்த 7 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 100 வழிபாட்டுத் தலங்களுக்கு 153,000 ரிங்கிட் நிதியாக வழங்கப்பட்டது.

இன்று மட்டும் வழிபாட்டுத் தலங்களுக்கு 104,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.

ஆலயம், பள்ளிவாசல், சூராவ், சீன கோயில், தேவாலயம் ஆகிவற்றுக்கு இந்நிதி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

இந்நிதி வழிபாட்டுத் தளங்களின் பராமரிப்பு பணிகளுக்கு, சமூக கடப்பாடு நடவடிக்கைகள் உட்பட இதர தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்நிதி வழங்கப்படுகிறது.இத்திட்டம் தொடரும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன்

காத்மாண்டு,ஜூலை 26-

நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் விமானி இருந்த காக்பிட் பகுதி தனியாக உடைந்து விழுந்ததால் விமானி மனீஷ் உயிர் தப்பினார்.மற்ற பகுதியில் இருந்த அனைவரும் தீயில் கருகி பலியாகினர்.

  நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போகரா நகரத்துக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது.

பராமரிப்பு பணிக்காக சென்ற அந்த விமானம், புறப்பட்ட சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது.

இதில், ஒரு குழந்தை உட்பட 18 பேர் பலியாகினர். இரு விமானிகளில் ஒருவரான மனீஷ் சக்யா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மூளையில் காயம் ஏற்பட்ட நிலையில், காத்மாண்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமானி மட்டும் உயிர் தப்பியது எப்படி என்ற கேள்விக்கு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ராம் தத் அதற்கான விளக்கம் அளித்துள்ளார்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, ஓடுதளம் அருகே தாழ்வாக பறந்தது. அப்போது, விமானத்தின் காக்பிட்டின் ஒரு பகுதி அங்கிருந்த கோல்கலனை மோதியதில்  அப்பகுதி மட்டும் துண்டாகி தனியாக விழுந்தது. 

உடைந்த காக்பிட் பகுதியில், விமானி மனீஷ் மட்டும் இருந்தார். கீழே விழுந்த மற்ற பகுதியில் இருந்த அனைவரும் தீயில் கருகி பலியாகினர். மனீஷ் இருந்த பகுதி தனியாக விழுந்ததால்தான் அவர் உயிர் தப்பியது என கூறினார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த முன்னாள் விமான போக்குவரத்து துறை இயக்குனர் ரதீஷ் சந்திரலால் சுமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரீஸ்,ஜூலை 26-

உலக நாடுகள் பங்கு கொள்ளும் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று ஜூலை 26 பிரான்ஸ் தலைநகர் பேரீஸில் கோலாகலமாக துவங்குகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 33வது முறையாக பிரான்ஸ் தலைநகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டி இன்று ஐூலை 26 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நிறைவு பெறுகிறது.

இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இம்முறை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சம எண்ணிக்கையில் பங்கு கொள்கிறார்கள். மொத்தம் உள்ள 32 விளையாட்டுகளில் 46 பந்தயங்கள், 324 வகை பிரிவுகளில் போட்டி நடக்கிறது.

இம்முறை அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பாக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 592 பேரும் சீனாவில் இருந்து 338 பேரும் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கிறார்கள். ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.