loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

செனாவாங், மே 24-
மலேசிய மக்கள் சக்தி இன்று செனாவாங்கில் நடத்திய பச்சபா கருத்தரங்கிற்கு மஇகா முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கு, தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அதற்கான தயாரிப்புகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முக்கிய துணையாக அமைந்ததாக அவர் கூறினார்.

தேர்தல் காலத்தில் மஇகாவிற்கு உதவ தாங்கள் தயாராக இருப்பதாகவும், அரசியல் பயணத்தில் இதற்கு முன்பு கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தாலும், இந்திய சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி தற்போது ஒன்றிணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இன்னும் உறுதியாகாதபோதிலும், தேவையான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை தேசிய முன்னணியிலிருந்து எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. தேர்தலில் நாங்கள் போட்டியிடவுள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டோம். போருக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆட்சிக்காலம் இந்திய சமுதாயத்திற்கு பொற்காலமாக இருந்ததை மக்கள் உணர்ந்துவிட்டதாகவும், தற்போதைய சூழ்நிலையில் ஒட்டுமொத்த மலேசியர்களும் அவரது மீள்வரவை எதிர்பார்த்து வருவதாகவும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

செனாவாங், மே 24-
தேர்தல் காலத்தில் கூறப்படும் பொய் வாக்குறுதிகளை நம்பி இந்திய சமுதாயம் ஏமாறக்கூடாது என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

அண்மையில் பிகேஆர் கட்சியை சேர்ந்த ரஃபிசி ரம்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

அன்றைய சூழ்நிலையில் பிகேஆர் கட்சிதான் சிறந்த கட்சி என ப்ற்சிய அவர் கட்சியின் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்விக் கண்டதை தொடர்ந்து, தற்போது அக்கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சியை தொடங்கி அதற்கு ஆதரவு தேடி வருகிறார்.

ஆகையால் இந்திய சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

செனாவாங்கில் நடைப்பெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பச்சபா கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

அரசியலில் நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
மஇகா மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கட்சிகள் வேறுபட்டாலும், இந்திய சமூக நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

கட்சிகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்ற அவர், பொதுநலனை முன்னிறுத்தியே மஇகா மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்து செயல்படுகிறது என விளக்கினார்.

மேலும், இந்திய சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், “எங்களின் பலத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்திய சமுதாயத்திற்கு பாதுகாப்பாகவும் வலுவான ஆதரவாகவும் மஇகா மற்றும் மக்கள் சக்தி கட்சிகள் இரண்டும் இருக்க வேண்டும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.

சிரம்பான், மே 22-
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் கீழ் வியாபாரிகளுக்கு வெ.5.2 மில்லியன் கடன் உதவி பெற்றுத் தரப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திருநாவுகரசு தெரிவித்தார்.

இந்திய இளைய தொழில்முனைவர்கள் தொழிலியல் சங்கங்களில் இணைந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற அரசாங்க உதவிகளை எளிதில் பெற முடியும் என அவர் சொன்னார்.

மேலும் மித்ராவின் கீழ் வெ.7 லட்சம் கடனுதவியை 162 வியாபாரிகளுக்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 38ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று ரோயல் சுங்கை உசோங் கிளப்பில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய போது அவர் மேற்கண்ட தகவலை அவர் கூறினார்.

மேலும் தற்போது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் தற்போது MUDRA திட்டத்தின் கீழ் வெ.220 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்ட்டுள்ளது. இதனை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் குறைந்தபட்சம் 20 மில்லியனைவாது நெகிரி மாநில தொழிலியல் சங்கத்தின் கீழ் பெற்று தர இலக்கு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மே 20 –
சமையல் துறையில் மலேசியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்தும் வகையில், மாஸ்டர் செஃப் மற்றும் சிறந்த சமையல் கலைக்கான விருதைப் பெற்று தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் “செஃப் மன்னன்” என்று அழைக்கப்படும் 35 வயதுடைய லெட்சுமணன் புலேன்ரன்.

உழைப்பு, ஒழுக்கம் மற்றும் புதுமையான சமையல் கலைத்திறன் ஆகியவற்றின் மூலம் சர்வதேச அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள செஃப் மன்னன், மலேசிய சமையல் பாரம்பரியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2025ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற Creative Chefs Forum Season 3 சர்வதேச சமையல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு, " Heritage Cuisine – Hot Cooking" பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

அவர் தயாரித்த மலேசிய மக்களின் விருப்பமான உணவான பிரியாணியின்
பாரம்பரிய முறையிலான தயாரிப்பும்,
தனித்துவமான சுவையும் மற்றும்   அணுகுமுறையும்  நடுவர் குழுவினர்களின்  சிறந்த பாராட்டுகளை பெற்றதோடு, சுவை, அலங்காரம் மற்றும் படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய அவரது திறமை அனைவரையும் கவர்ந்தும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற Indian Culinary Premier League போட்டியிலும் செஃப் மன்னன் மலேசியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இப்போட்டியில் அவர் “Honorary Award – Diploma in Culinary” விருதைப் பெற்றதுடன், அதிகாரப்பூர்வமாக Culinary Gold Winner சமையல் கலைக்கான
தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

Royal Bengal Master Chef Organization (RBMCO) வழங்கிய இந்த அங்கீகாரம், செஃப் மன்னனின் சர்வதேச தரமான சமையல் திறனை உலகுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.

“Chicken Rendang உடன் Ghee Rice” என்ற அவரது சிறப்பு உணவு, மலேசியாவின் உண்மையான பாரம்பரிய சுவையை உலக அரங்கில் சிறப்பாக எடுத்துக்காட்டியது.
சுவை சமநிலை, தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் கலைநயமிக்க அலங்காரம் ஆகியவற்றிற்காக அவர் நடுவர்களின் உயர்ந்த பாராட்டுகளைப் பெற்றார்.

சமையல் துறையில் கொடி கட்டிப் பறக்கும் செஃப் மன்னனின் இந்த சாதனைகள், இளம் சமையல் கலைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதுடன், மலேசிய சமையல் கலையின் பெருமையையும் உலகளவில் உயர்த்தியுள்ளது.
அவரின் இந்த மகத்தான சாதனைகளுக்காக சமூகத்தின் பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.