loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர் பிப் 15-
அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் விவகாரம் தொடர்பாக லெசென்ஸ் பெற்ற ஏஜென்சிகளை அழைத்து மனிதவள அமைச்சு ஒரு சுமூகமான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia  கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பூர்வமாக அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் லெசென்ஸ் பெற்ற மலேசிய ஏஜென்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வேண்டும்.

நாங்கள் முறையாக பதிவு பெற்ற ஏஜென்சிகள்.

நாங்கள் செய்யும் வேலைக்கு மட்டுமே ஊதியம் வாங்குகிறோம்.

வெளிநாட்டு ஏஜென்சிகள் தொழிலாளர்களிடம் 20,000 வெள்ளி பணத்தை வாங்கிக் கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதனால் பணத்தை கொடுத்து தொழிலாளர்கள் அவதி படுகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர் ஏஜென்சிகளுக்கு அனுமதி வழங்க  வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருக்கிறோம்.

எவ்வித முறைகேடு இல்லாமல் அந்நியத் தொழிலாளர்களை சட்டப் பூர்வமாக நாட்டிற்கு தருவிக்கும் அனுமதியை பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia உதவித் தலைவர் சுரேஷ் டான் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

இந்த தருணத்தில்
அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் மூன்றாம் தரப்பு - இடைத்தரகர்கள் யார் என்பதை மனிதவள அமைச்சு தெளிவு படுத்த வேண்டும்.

நேப்பாளம் மற்றும் வங்காள தேச தொழிலாளர்களை நாட்டிற்கு தருவிக்கு தலா 20,000 வெள்ளி வாங்குவது  ஏஜென்சிகள் நாங்கள் அல்ல.

ஆகவே இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண மனிதவள அமைச்சை சந்தித்து கலந்துரையாட தயாராக இருக்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் Persatuan Agensi Pekerjaan Malaysia ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பாகோ சிவா கலந்து கொண்டார்.

நாட்டில் பல துறைகளில் குறிப்பாக சிறுதொழில் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உதவ சங்கம் தயாராக இருக்கிறோம்.

இருப்பினும் அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்கு வரவழைக்க சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தை பிறக்கும் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என மலேசிய திராவிட கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் கூறினார்.

இந்த நாளை தமிழர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

தமிழ் புத்தாண்டு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் தமிழர்களாகிய நாம் தை முதல் நாளேயே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி அதனை அடுத்த தலைமுறையினர் வரையில் கொண்டுச் சேர்க்க  வேண்டும். எதற்காகவும் யாருக்காகவும் இதனை நாம் விட்டு கொடுக்க கூடாது.

குறிப்பாக, தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த மலேசியர்களின் விழாவாக கொண்டாடப்பட வேண்டும். மூவினத்தவர்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்க வேண்டும் என மலேசிய திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவில் பேசிய பொன்வாசகம் வலியுறுத்தினார்.

ஷா ஆலம் டாலியா மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அஸ்லி பின் யூசோப் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் சிறுவர்களுக்கென சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பொங்கல் திருநாளன்று பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கழகம் முன்னெடுத்து வந்த தீர்மானம் மீண்டும் இவ்விழா மூலம் கொண்டு வரப்பட்டது.

இவ்விழாவில் கோலாலம்பூர் உட்பட கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களில் இருந்து 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிரம்பான், பிப்.12-
நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம் மற்றும் நானோ பொறியியல் துறைகளில் உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைக்கும் 7-வது மலேசியா–ஜப்பான் அனைத்துலக மாநாடு (MJIC 2026), 2026 ஆம் ஆண்டு சிரம்பானில் அமைந்துள்ள ராயல் சுலான் ஹோட்டலில் நடைபெற்றது.

இம்மாநாடு நானோ அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளும் முக்கிய அனைத்துலக தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MJIC 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில், மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு சமூக மற்றும் தொழில்நுட்ப நோக்கமுடைய திட்டங்கள் பெரும் கவனம் பெற்றன. இதில் சிறந்த புதுமை திட்டங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அவ்வகையில், ஏம்ஸ்ட்  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்று மொத்தம் ஆறு குழுக்கள் தங்கப்பதக்கங்களையும் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, “HeatMateX” என்ற திட்டம் தங்கப் பதக்கம், இப்புத்தாக்கப் போட்டியின் சிறப்பு பரிசையும் வென்றது. இந்த திட்டத்தை Yogini A/P Malarvannan (தலைவர்), Kirshavina A/P Kumar, Yeoh Jia Ying, Wong Yu Jue, Gaytriambal A/P Sivakumar மற்றும் Voon Qian Hui ஆகியோர் உருவாக்கினர். அதோடு ஐந்து குழுக்கள் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றன.

இந்த மாநாட்டை மலேசியாவின் Universiti Teknologi MARA (UiTM) பல்கலைக்கழகத்தின் Institute of Science அமைப்பு ஏற்பாடு செய்தது. மேலும், UiTM-இன் Faculty of Applied Sciences, ஜப்பானின் Nagoya Institute of Technology, இந்தோனேசியாவின் Universitas Brawijaya, ஜப்பானின் National Institute of Technology Kagawa College மற்றும் Tokuyama College, மலேசியாவின் National Nanotechnology Centre (MOSTI) மற்றும் Malaysia Nanotechnology Association ஆகியவை இணைந்து மாநாட்டிற்கு ஆதரவு வழங்கின.

இந்த மாநாடு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும் வகையில், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நெகரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் பிரபலமான திருத்தலமான ரந்தாவ் ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடு வரும் பிப்ரவரி 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு ரத ஊர்வலம்  நடத்தப்படுவதாகவும் அதோடு  முதல் பூஜை இரவு 8 மணிக்கும் இரண்டாவது பூஜை நள்ளிரவு 12 மணிக்கும் 3ஆவது பூஜை அதிகாலை 3 மணிக்கும் 4ஆவது பூஜை காலை 5 மணிக்கும் நடைப்பெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்தனர்.

வட்டார மக்கள் இந்த பூஜையில் கலந்துகொள்ள  வேண்டும் என ஆலய நிர்வாகம் பக்தர்களை அன்போடு அழைக்கின்றனர்.

பூச்சோங், பிப்.7-

புத்ராஜெயா கபடி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பூச்சோங்கிலுள்ள சுபாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற 23 வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான போட்டியில் 8 அணிகள் பங்குக் கொண்டன.

காலை முதல் நடைப்பெற்ற இந்த போட்டியில் 112 இந்திய இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் Red Giant மற்றும் BL KL அணிகள் களம் கண்டன. இரு அணிகளின் விளையாட்டாளர்கள் அபார விளையாட்டை வெளிப்படுத்தினர்.

இறுதியில் இந்த போட்டியின் வெற்றிக் கிண்ணத்தையும் ரொக்கப் பரிசையும் Red Giant அணி வென்றது.

இதற்கிடையில் இரண்டாவது நிலையில் BL KL அணி இரண்டாவது நிலையில் வென்றது. மூன்றாவது இடத்தில் இரு அணிகள் UNITEN மற்றும் Black Panter வெற்றிப் பெற்றன.

இந்த போட்டியின் சிறந்த முன்படை வீரராக Red Giant அணியின் விளையாட்டாளர் ஐசெக் வென்ற வேளையில் சிறந்த தற்காப்பு வீரருக்கான கோப்பையை BL KL அணியின் விளையாட்டாளர் ரவிந்திரன் வென்றார்.

புத்ராஜெயா கபடி சங்கத்தின் செயல்பாட்டிற்கு தேசிய சங்கத்தினர் பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எங்களின் வாய்ப்புகளை பறிப்பதால் எங்களின் புத்ராஜெயா கபடி சங்கம் மூடு விழா காணும் நிலை ஏற்படும் என அதன் தலைவர் அரசு சண்முகம் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.