loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஷா ஆலம், மார்ச் 14-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் 548 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு, சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், எம்ஜஇடி, ஏம்ஸ்ட் ஆகிய இணைந்து இந்த சதுரங்கப் போட்டியை நடத்தினர்.

மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் சிறப்பான விளையாட்டு இதுவாகும். 

நம் மாணவர்கள் இந்த விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளது இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.

நம் சிந்தனை மட்டுமல்லாமல் எதிரியின் சிந்தனையையும் தெரிந்து கொள்ளும் ஆட்டம் இதுவாகும் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த போட்டி நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர் டத்தோ முருகையா, சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ஐயங்கர் உட்பட மஇகாவினரும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

ஷா ஆலம், மார்ச் 14-
நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் ஆலய பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் நடத்து நோக்கம் மஇகாவுக்கு இல்லை என்றும் இந்த பிரச்சினையை களைய மலேசிய இந்து சங்கம், மஹிமா ஆகியவற்றுடன் இணைந்து மஇகா செயல்படும் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஆலயங்களை கொண்டு அரசியல் நடத்தியவர்கள் உண்டு.  ஆனால் அந்த பாணி எங்களுக்கு புறம்பானதாகும்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு நான் பிரதமரை சந்தித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் அவருடன் கலந்துரையாடினேன். ஆலய விவகாரம் உட்பட சமுதாயம், அரசியல் ஆகியவற்றை பற்றி பேசினேன். முக்கியமாக தற்போது சர்ச்சையாக உள்ள ஆலய விவகாரம் தொடர்பில் பேசியதாக டான்ஸ்ரீ கூறினார்.

நம் தெய்வங்களை அவமானம் படுத்துவது சரியல்ல. அனைத்து அமைப்புகளும் மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தை நாங்கள் முன்னெடுத்தால் அது அரசியல் ஆகிவிடும். அதனால் இந்த பிரச்சினையை பெரியதாக ஆக்க நாங்கள் விரும்பவில்லை. இதனை மலேசிய இந்து சங்கம் முன்னெடுத்தால் சமய பிரச்சினையாகவே இருந்துவிடும். ஒன்றிணைந்து அனைவரும் இந்த பிரச்சினையை களைவோம் என்றார் அவர்.

கோலாலம்பூர்,மார்ச் 12-

எசான் வர்த்தக குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்வதாக அதன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமிட் கூறினார்.

அவ்வகையில் இன்று சிகாம்புட்டில் 200 பேருக்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தலைமையில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நோன்பு பெருநாளை முன்னிட்டு எசான் வர்த்தக குழுமம் ரமலான் உதவிகளை வழங்கி வருகிறது.

இவ்வாண்டும் கிட்டத்தட்ட 5,000 பேருக்கு இந்த உதவிகளை எசான் வழங்கியுள்ளது.

வசதிக் குறைந்தவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் இவ்விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சி என டத்தோ அப்துல் அமிட் தெரிவித்தார்.

குறிப்பாக இவ்விழா கூட்டரசுப் பிரதேச அறவாரியம் உட்பட பல அமைப்புகளுடன் நடத்தப்பட்டது.

அமைச்சர் ஹன்னா இயோ துடிப்புமிக்க அமைச்சராக உள்ளார்.

அவரின் வருகை கூட்டரசுப் பிரதேசத்திற்கு மேலும் உருமாற்றத்தை கொண்டு வரும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

பாங்கி, மார்ச் 12 - 

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) இந்திய மாணவர் பிரதிநிதி மன்றம் (PMI UKM) மற்றும் UKM கபடி கழகம் இணைந்து “மாவீரன் 3.0” எனப்படும் இடையக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விளையாட்டு போட்டி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கபடி, கால்பந்து, பூப்பந்து போன்ற முக்கிய விளையாட்டுகள் நடைப்பெறவுள்ளதாக இந்திய மாணவர் பிரதிநதி மன்றத்தின் தலைவர் கீர்த்திகன் மகாலிஙகம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதுடன், விளையாட்டு மனப்பான்மை மற்றும் ஆரோக்கியமான போட்டி உணர்வை வளர்ப்பதே இவ்விளையாட்டு போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

மலேசியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ள இந்த பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வை சிறப்பாக நடத்த நிதி ஆதரவும் அனுசரணையும் மிகவும் அவசியமாக உள்ளது.

எனவே, எங்கள் முயற்சிக்கு தங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக அவர் சொன்னார்.

மேல்விவரங்களுக்கு 014-6070331 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.


கோலாலம்பூர், மார்ச் 12-
மலேசியா ரிசைக்ளர்ஸ் அசோசியேஷன் (MRA), நாட்டின் மறுசுழற்சி (recycling) துறை எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் குறித்து விவாதிக்கத் தொழில் துறை பிரதிநிதிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

MRA தலைவர் டத்தோ ஜோ சரவணன் கூறுகையில், அந்தச் சந்திப்பு தொழில் துறையினருக்கு முக்கியமான பல பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 குறிப்பாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் ஸ்கிராப் பொருட்கள் மற்றும் மின்னணு கழிவுகள் (e-waste) தொடர்பான பிரச்சினைகள், சட்டப்படி செயல்படும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே சட்டப்படி வணிகம் செய்து வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

“சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் ஸ்கிராப் பொருட்கள் மற்றும் e-waste பிரச்சினையை கையாள அரசாங்கம் உறுதி எடுத்திருப்பதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

 இது விதிமுறைகளை பின்பற்றி செயல்படும் தொழில் துறை நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும்,” என்று அவர்  தெரிவித்தார்.

மேலும், இந்த பிரச்சினையை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது, பொறுப்புடன் வணிகம் நடத்தும் நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு, மலேசியாவின் மறுசுழற்சி துறை நிலையான முறையில் வளர உதவும் என்றும் அவர் கூறினார்.

அதுடன், தொழில் துறையினரின் கருத்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் கேட்க முனைந்திருப்பது, மறுசுழற்சி துறை வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கையை துறையில் செயல்படும் அனைவருக்கும் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.