கோலாலம்பூர், மார்ச் 10-
எஸ்பிஎம், எஸ்டிபிஎம், டிப்ளோமா அல்லது மெட்டிரிகுலேஷன் முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான வழிகாட்டலை வழங்கும் நோக்கில் பினாங்கு மஇகா இளைஞர் பிரிவு “Jejak Menara Gading – மேற்படிப்பு பயணம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
பல மாணவர்கள் UPU விண்ணப்ப முறையைப் பற்றிய சரியான தகவல் இல்லாமல் உயர்கல்வி வாய்ப்புகளை இழக்க நேரிடுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் UPU-க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, எதிர்காலத்திற்கு ஏற்ற படிப்புகளை தேர்வு செய்வது எப்படி, பல்கலைக்கழகங்களை சரியாக தேர்வு செய்வது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், உயர்கல்வி அமைச்சை சேர்ந்த அதிகாரியும் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவருமான பத்மராஜா செல்வராஜா மாணவர்களுக்கு நேரடியாக வழிகாட்ட உள்ளார்.
இந்த நிகழ்ச்சி இம்மாதம் மார்ச் 14ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை செபராங் ஜெயாவில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறும்.
UPU தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாணவர்கள் உடன் கொண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாணவர்களின் உயர்கல்வி பயணத்தை சரியான பாதையில் தொடங்க உதவும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேல் விவரஙகளுக்கு 014-6318183 (நித்தியராஜன்), 016-4900605 (மஹாதேவன்), 019-9901424 (ரூபன்ராஜ்) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.
0 Comments