கோலாலம்பூர்,அக்.14-
பிரதமர் துறையின் கூட்டரசு அமைச்சரின் அரசியல் செயலாளராக வழக்கறிஞர் சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னிலையில் சிவமலர் கணபதி இன்று காலை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான சிவமலர் கணபதி சுகாதார அமைச்சருக்கும், கூட்டரசு அமைச்சருக்கும் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவரின் தொடர் சமூகநலன் நடவடிக்கைகளின் மூலமாக தற்போது கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலெவாவின் அரசியல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரலாற்றில் அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் எனும் சாதனையையும் வழக்கறிஞர் சிவமலர் கணபதி நிகழ்த்தியுள்ளார். அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண சிவமலர் கணபதி முக்கிய பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments