கோலாலம்பூர், அக.8-
தொழில்நுட்ப மேம்பாட்டை கையாழ உணவக முதலாளிகளுக்கும் நிர்வாக பணியாளர்களுக்கும் சிறப்பு பயிற்சியை வழங்க இம்முறை அறிவிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் சிறப்பு மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என பிரிமாஸ் எனப்படும் இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கூறினார்.
இன்றைய சூழலில் உணவக உரிமையாளர்கள் பல வகையான சவால்களை எதிர்கொள்கின்றனர். அதில் முதன்மையாக அந்நிய தொழிலாளர்கள் தேவை இருந்தாலும் அதை சரிகட்ட தொழில்நுட்ப பயன்பாடு பற்றிய புரிதல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு AI தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு மிகவும் அவசியம் என அவர் சொன்னார்.
இதன் மூலம் தொழிலாளர் பிரட்சினையை அவர்கள் களையலாம். ஆகையால் அரசாங்க சிறப்பு நிதியை ஒதுக்கி அவர்களுக்கு பயிற்சியை வழங்க முன்வரவேண்டும் என சுரேஸ் கூறினார்.
இன்றைய நிலையில் இந்திய உணவக உரிமையாளர்களுக்கென சுமார் 8,000 அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் தொடர்பில் பல பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னர் gantian முறையை அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இருந்தாலும் தொழிலாளர் பிரச்சினை தீர்ந்தப்பாடில்லை என அவர் சொன்னார்.
இதற்கு மத்தியில் நாட்டில் விலைவாசி ஏற்றம் எங்களுக்கு மற்றொரு பெரும் பாரமாக அமைகிறது. அடிப்படை பொருட்களின் விலை ஏற்றம் காண்பது எங்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. அடிப்படை பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியம். விலைவாசி ஏற்றம் தொடர்ந்தால் அதனை சரிகட்ட உணவு விலையை நாங்கள் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர் சொன்னார்.
பிரிமாஸிசின் 25ஆவது வெள்ளி விழா நேற்று தலைநகரிலுள்ள பிரசித்திப் பெற்ற தங்குவிடுதியில் நடைப்பெற்றது. 25 ஆண்டுகள் என்பது சாதரண விடையம் அல்ல என சங்கத்தின் காப்பாளர் டத்தோ ரேனா ராமலிங்கம் தெரிவித்தார்.
உணவக துறையில் இந்திய இளைஞர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அங்காடி கடை வழி அவர்கள் இத்துறையில் கால் பதித்து குளிர்சாதண வசதி கொண்ட உணவகம் வரை உருவாக்கி அவர்கள் இத்துறையில் சாதனை படைக்க வேண்டும்.
இத்துறையில் தான் 40 ஆண்டுகள் உள்ளதாகவும் தொடக்க காலத்தில் பல இன்னல்கள் மத்தியில் இந்த தொழிலை ஆரம்பித்து விடமுயற்சியுடன் அயராத உழைப்பால் இன்று இந்நிலையை அடைந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஆகையால் முறையான பயிற்சியை பெற்று இளைஞர்கள் இத்துறையில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
0 Comments