loader
கிள்ளான் ஜாலான் தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் மெட்ராஸ் பேக்ரி புதிய கிளை திறக்கப்பட்டது! நடிகர் பிரேம்ஜி சிறப்பு வருகை!

கிள்ளான் ஜாலான் தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் மெட்ராஸ் பேக்ரி புதிய கிளை திறக்கப்பட்டது! நடிகர் பிரேம்ஜி சிறப்பு வருகை!

கிள்ளான், அக்.8-
காபி, டீ பிரியர்களின் தேர்வாக அமைந்துள்ள மெட்ராஸ் பேக்கரி கடையின் புதிய கிளை தற்போது கிள்ளான், தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ், மஸ்ஜிட் இந்தியா ஆகிய பகுதிகளில் இந்த கடையின் கிளைகள் உள்ளன. எப்போது சென்றாலும் வாடிக்கையாளர் அக்கடைகளில் நிரம்பி இருப்பது வழக்கம்.

வாடிக்கையாளர்களின் ருசிக்கு ஏற்ப காபி, டீ உடன் பலகாரங்களும் அங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடை தெங்கு கிளானாலும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டதாக அதன் இயக்குநர்களான புர்ஹான் மற்றும் டெனேஸ் ஆகியோர்கள் கூறினர்.

அண்மையில் தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் மெட்ராஸ் பேக்கரி கடை திறக்கப்பட்டது. இந்த கடையின் திறப்பு விழாவிற்கு டத்தோ டி.மோகன், கொடை வள்ளர் ஓம்ஸ் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்து கடையை திறந்து வைத்தனர்.

அதன் பின்னர் நடிகர் பிரேம்ஜி கடைக்கு சிறப்பு வருகை புரிந்ததுடன் டீ குடுத்து விட்டு தமிழகத்தில் குடிப்பதுபோல் ருசியாக இருப்பதாக கூறினார்.

டீ, காபி மட்டுமின்றி, பலகாரங்கள், முறுக்கு வகைகள், கேக் வகைகள் என பலவகை இந்த கடையில் உள்ளது. இந்த கடையின் மற்றொரு சிறப்பாக பழசாரும் விற்கப்படுகிறது. பழங்களை கொண்டு இங்கு அலங்காரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவகாடோ பழச்சாறு இந்த கடையில் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேர்வாக இந்த பழச்சாறு உள்ளதாக புர்ஹான் மற்றும் டெனிஸ் கூறினர்.

தீபாவளியை முன்னிட்டு கிள்ளான் லிட்டல் இந்தியாவில் மெட்ராஸ் பேக்கிரியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு உடைகள் மற்றும் தேவைப்படும் பொருட்களை வாங்க இங்கு வரும் மக்கள் தங்களின் தாகத்தை தீர்க்கவும் பசியை ஆற்றவும் தாரளமாக மெட்ராஸ் பேக்கரிக்கு வரலாம் என அவர்கள் கூறினர்.

0 Comments

leave a reply

Recent News