loader
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை நுழை வாசலில் அமைக்கப்பட்டிருந்த மடானி பதாகை கார் மீது விழுந்தது! அலங்காரங்கள் இல்லாத இருள் சூழ்ந்த தீபாவளிச் சந்தை!

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை நுழை வாசலில் அமைக்கப்பட்டிருந்த மடானி பதாகை கார் மீது விழுந்தது! அலங்காரங்கள் இல்லாத இருள் சூழ்ந்த தீபாவளிச் சந்தை!

கோலாலம்பூர், அக்.2-
கூடாரத்தை மாற்றுங்கள், விளக்குகளை பொருத்துங்கள், இங்கு அமைக்கப்பட்ட கூடாரம், நுழை வாசல் பதாகை பாதுகாப்பாக இல்லை என்ற பிரிக்பீல்ட்ஸ் வியாபாரிகளின் குமுறல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டாத பட்சத்தில் இயற்கையின் காதிற்கு எட்டியவாறு ஒவ்வொன்று நடந்து வருகிறது.

இரு நாட்களுக்கு முன்பு பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் அமைக்கப்பட்டிருந்த நான்கு கூடாரங்கள் காற்றில் பறந்தன.

இன்று அங்கு நுழைவாசலில் அமைக்கப்பட்டிருந்த பதாகை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்துள்ளது. நல்ல வேளை மக்கள் யாரும் இதில் பாதிக்கப்படவில்லை.

பார்க்கும் இடமெல்லாம் மடானி சின்னம். இது தீபாவளி சந்தையா அல்லது மடானி அரசாங்கத்தின் எக்ஸ்போ வா என்று தெரியவில்லை என பலர் பேசிவருகின்றனர்.

தீபாவளி வாழ்த்து என்ற சொல்லும் இல்லை தீபாவளி கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அங்கு எந்த அழகாரங்களும் இல்லை. அதற்கும் மேல் விளக்குகள் இல்லாத நிலையில் இருள் சூழ்ந்த நிலையில் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொருத்தப்பட்டுள்ள கூடாரங்கள் தீபாவளி வியாபாரத்திற்கு பொருத்தமாக இருக்காது, கூடாரங்களும் பாதுகாப்பாக இல்லை என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியிருந்தார். அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் பொருட்படுத்தவில்லை.

நேற்று அங்குள்ள வியாபாரிகளும் இதையைதான் சொன்னார்கள். இரவுக்குள்ள பெரிய கூடாரங்கள் மாற்றப்படும் என ஒரு தரப்பு கூறியது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பாதுகாப்பற்ற நிலை கூடாரங்களும் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலட்சிய போக்கு ஏன்?

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை அமைக்கும் விவகாரத்தில் அனுபவம் நிறைந்தவர்கள் பல கருத்துகளை கூறியும் சம்பந்தப்பட்ட அரசு தரப்பு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இவ்வளவு நடந்த பின்னர் இன்று கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரி சிவமலர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். 8x8 உள்ள கூடாரங்களை 10x10 என்ற அளவில் மாற்றி தருவதாக கூறியுள்ளார். கூடாரங்கள் கொஞ்சம் பெரிதாக மாற்றப்பட்டாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி அவர் விவரிக்கவில்லை. தீபாவளி அலங்காரம் இதன் பின் நடக்கும் என சிவமலர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் கூடாரம் அமைப்பதிலும் பாதுகாப்பிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இம்முறை யார் எடுத்த முடிவு என்று தெரியவில்லை கூடாரங்கள் பிரதான சாலையில் பொருத்தப்பட்டுள்ளன. தீபாவளி காலத்தில் பிரிக்பீல்ட்ஸில் சாலை நெரிசல் கடுமையாக இருக்கும். ஆனால் இம்முறை இருந்த சாலையும் பாதி மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறி வசனம்தான் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. எதை செய்தாலும் பிலான் பன்னிதான் செய்யனும் என்ற வசனத்திற்கு ஏற்ப பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை ஏற்பாடுகள் அமைந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

சாதரண மழை, காற்றிற்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசம்பாவிதம் நடக்கிறது. கனத்த காற்று வீசினால் என்னதான் நடக்குமோ தெரியவில்லை.

முறையான பாதுகாப்பு இல்லாதது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தலாம். இதனால் அந்த பகுதியில் வியாபாரம் குறையவும் வாய்ப்பு உள்ளன. அதனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தீபாவளி என்றாலே அது ஒளியை பிரதிபலிக்கும். இதனை கருத்தில் கொண்டு தீபாவளி கொண்டாட்டத்தை போல பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை பகுதியில் அலங்காரங்களும் விளக்குகளும் பொருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அதே நேரத்தில் இந்த முறை கலை நிகழ்ச்சி நடத்தபடாது எனவும்.. அதற்கு யாரும்  இது வரை விண்ணப்பம் செய்ய வில்லை என சிவமலர் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply

Recent News