loader
குரலிலுள்ள சக்தி விரலிலும் இருந்தால் மட்டுமே சிறந்த கவிதையை படைக்க முடியும்! -டத்தோஸ்ரீ எம்.சரவணன்

குரலிலுள்ள சக்தி விரலிலும் இருந்தால் மட்டுமே சிறந்த கவிதையை படைக்க முடியும்! -டத்தோஸ்ரீ எம்.சரவணன்

கோலாலம்பூர், செப்.28-
சிறந்த கவிதைகளை படைப்பதற்கு நம் குரலிலுள்ள சக்தி விரலிலும் இருப்பது அவசியம் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கவிதைகளை படைப்பதில் நாம் மொழியை கையாழும் விதம்தான் அதனை காலம் கடந்து வாழ வைக்கும் என இன்று மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைப்பெற்ற மனிதம் தேடும் மனிதன் நூல் வெளியீட்டு விழாவில் அவர் சொன்னார்.

தமிழகத்திலிருந்து பிழைப்பை தேடி இங்கு வந்து நாளிதழில் பல கவிதை படைப்புகளை எழுதி புகழ்பெற்ற கவிஞர் பெர்னாட்ஷாவின் கவிதை நூழை இன்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெளியிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இந்த நூலிலுள்ளா கவிதைகளை அவர் எழுதியுள்ளார். இந்த நூழை அன்றே வெளியிட எண்ணம் கொண்டபோது உடல் நல குறையால் கவிஞர் மீண்டும் தமிழகத்திற்கு சென்ற பின்னர் தற்போதுதான் அவரின் நூல் படைப்புகள் தற்போது நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

இந்த நூலில் படைக்கப்பட்டுள்ள மரபுக் கவிதைகள் பொருள் சொல்லும் விதத்தில் மாறுப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அண்மையில் வெளியீடு கண்ட கவிதை நூல்களில் இந்த நூல் சிறந்த கவிதை நூலாக உள்ளாதாக அவர் சொன்னார்.

மேலும் அவர் கடந்து வந்த பாதையில் அவருக்கு உதவியவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அந்த உதவிகளை பற்றி அவர் கவிதை வரியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.

இன்று நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு பிரமுகர்களாக நிலநிதி கூட்டுறவுக் கழகத்தின் இயக்குநர் டத்தோ சகாதேவன், மலேசிய  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆலோசகர் ராஜேந்திரன், வணக்கம் மலேசியா செய்தி இணைய தளத்தின் உரிமையாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

leave a reply

Recent News