loader
மலேசிய சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் மதராஸி திரைப்பட கொண்டாட்டம்!

மலேசிய சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் மதராஸி திரைப்பட கொண்டாட்டம்!

ஜொகூர் பாரு, செப்.12-
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜொகூர் பாரு, பிலாஸா தாசேக் எல்எஃப்எஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டு முதல் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 10,000 சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்ளனர். அன்றைய தினத்தில் சுமார் 200 பேர் முதல் காட்சியில் கலந்து கொண்டனர். இந்த முதல் நாள் சிறப்பு காட்சியை ஜொகூர் மாநில சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கொண்டாட்டம் ஆடல் பாடல், அணிச்சல் வெட்டுதல், சிறுவர்களுக்கு பரிசு வழங்குதல் உட்பட இன்னும் பல்வேறு அம்சங்களுடன் நடைபெற்றது.

இளைஞர்களின் கூட்டமைப்பில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இதுபோன்ற அமைப்புகளில் இந்திய இளைஞர்கள் இணைந்து செயலாற்றும்போது அவர்கள் மத்தியில் ஒற்றுமை மேலோங்குவதுடன் தீயச் செயல்களில் ஈடுபடும் போக்கு தவிர்க்கப்படும் என ஜொகூர் மாநில சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் ஜெயமலர் தெரிவித்தார்.

திரைப்படம் மிக சிறப்பாக இயக்கப்பட்டுள்ளது. இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்ததாக குறிப்பிடப்பட்டது

0 Comments

leave a reply

Recent News