loader
'நான் தான்டா இனிமேலு’  - ரஜினியின் தர்பார் ஓப்பனிங்

'நான் தான்டா இனிமேலு’ - ரஜினியின் தர்பார் ஓப்பனிங்

ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் திருநாளொல் வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 7-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்பாக இப்டத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். 'நான் தான்டா இனிமேலு' என தொடங்கும் இந்தப் பாடல், படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்துள்ளது. பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அனிருத் இரண்டாவது முறை இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply