loader
வேலையிலும் பாகுபாடு! வீட்டு வாடகையிலும் இனப்பாகுபாடு ! இதற்கு முற்றுப்புள்ளி எப்போது  - டத்தோ சிவகுமார் கேள்வி

வேலையிலும் பாகுபாடு! வீட்டு வாடகையிலும் இனப்பாகுபாடு ! இதற்கு முற்றுப்புள்ளி எப்போது - டத்தோ சிவகுமார் கேள்வி

கோலாலம்பூர் ஆகஸ்ட் -2
தற்போது வேலை வாய்ப்பு, வாடகை வீடு விளம்பரங்களில் காட்டப்படும் இனப்பாகுபாடுகள்  மன கசப்பை ஏற்படுத்துகிறது இது தொடர்பாக 
எம்.பிக்கள்  நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ  சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக  புக்கிட் பெண்டேராவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷர்லினா அப்துல் ரஷித் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரின்  எதிர்ப்பு குரல்  நான் மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படி பட்ட  அறிவிப்பு விளம்பரங்கள்  நீண்ட காலமாக இருந்தாலும், மிகச் சில தலைவர்களே இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.

வேலை வாய்ப்புகள்,  வீடு வாடகைகளுக்கு வழங்குவதும் ஒரு குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு வெளிப்பட்டையாக இப்போது அதிகளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

தங்கள் பணிகளைச் செய்வதில் புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் இருக்கும் பல பட்டதாரிகளுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சரியான வேலைகள் வழங்கப்படுவதில்லை.

இனம், மொழி காரணங்களால் தகுதியானவர்கள் ஒதுக்கித் தள்ளப்படுகிறார்கள்.
இதனால் பதவிகளை வகிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வாடகைக்கு வீடுகள், அறைகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கலுடன், உண்மையில் தேவைப்படுபவர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தை இன்னும் துல்லியமான  மட்டத்தில் விவாதிக்க  ஷர்லினா நாடாளுமன்ற கூட்டத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அதே வேளையில் அவர் தொடர்புடைய அமைச்சர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷர்லினாவின் துணிச்சல்
பாராட்டுக்குரியது.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு. காரணம் அவரது கட்சி தான் ஆட்சியிலும் உள்ளது.

ஆக இந்த விவகாரத்தல் கொள்கை மட்டத்தில் பேசி அதை சட்டமாகவும் மாற்ற வேண்டும்.

இதனால் இந்த விஷயத்தை செய்பவர்கள் எதிர்காலத்தில் பயப்படுவார்கள்.

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இது தொடர்பாக  வாதிட்டு அதை ஒரு சட்டமாகப் பெறுவது பொருத்தமானதாகும்.

குறிப்பாக மடானி அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்கும் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் இந்தப் பிரச்சினையை ஜசெக கட்சியின் மத்திய தலைமையின் பார்வைக்கு இதனை  கொண்டுச் செல்லவேண்டும். அதன் பின் மத்தியத் தலைமை  மத்திய அரசை வலியுறுத்த வழி வகுக்க வேண்டும்.

இதனால் நமது  நாட்டில் நீண்ட காலமாகப் பரவி வரும் இந்தப் பிரச்சினையை ஒழிக்க முடியும் என்று டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News