(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் நவம்பர் - 19
தற்போது வெளியீடு கண்டுள்ள மலேசியத் திரைப்படமான 'புலனாய்வு', வெளியீடு கண்ட ஜந்தே நாட்களில் மூன்று லட்சம் வெள்ளி வசூலைக் குவித்துள்ளது. இது இப்படத்திற்கு நல்லதொரு துவக்கமாக அமைந்துள்ளது.
ஷாலினி, ஷைலா நாயர் இருவருக்கும் இப்படம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இயக்குனர் சதீஸ் நடராஜன் தனது முதல் படத்திலேயே சிறந்த மலேசிய இயக்குநர் தரவரிசைக்குத் தேர்வு பெற்றுவிட்டார். பாடகியாக, மென்மையான நாயகியாக அனைவரும் அறிந்த டத்தின் ஷைலா நாயர், இப்போது மாஸ் ஹிரோயினாக மலேசிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஜந்தே நாட்களில் 3 லட்சம் வசூல் செய்ததன் மூலம், இவ்வாண்டின் சிறந்த வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியத் தமிழ்த் திரை உலகின் வசூல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள 'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தை இப்படம் முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
0 Comments