சுங்கைபூலோ,ஜூலை.14-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் பூச்சோங் 14, வாகிசர் தமிழ்ப்பள்ளிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.
சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ மைதானத்தில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியில் 101 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.
இதில் ஆண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்திற்கு பூச்சோங் 14 ஆவது தமிழ்ப் பள்ளியும் பத்து ஆராங் தமிழ்ப் பள்ளியும் தேர்வு பெற்றன.
இதில் பூச்சோங் 14 தமிழ்ப்பள்ளி பெனால்டியில் பத்து ஆராங் தமிழ்ப் பள்ளியை வீழ்த்தி நமச்சிவாயம் கிண்ணத்தையும் 3,000 வெள்ளி ரொக்கத்தையும் வென்றது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த பத்து ஆராங் தமிழ்ப்பள்ளிக்கு கிண்ணமும் 1,500 வெள்ளி வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை பெஸ்தாரி ஜெயா தமிழ்ப் பள்ளி, நான்காவது இடத்தை பத்து கேவ்ஸ் தமிழ்ப் பள்ளி பிடித்தன.
பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்திற்கு பெஸ்தாரி ஜெயா,வாகிசர் தமிழ்ப்பள்ளி தேர்வு பெற்றன.பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில் பெனால்டியில் வெற்றி பெற்ற வாகிசர் தமிழ்ப்பள்ளி ரவிந்திரன் கிண்ணத்தையும் 3,000 வெள்ளி ரொக்கத்தையும் வென்றது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த பெஸ்தாரி ஜெயா தமிழ்ப் பள்ளிக்கு 1,500 வெள்ளி ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பெண்கள் பிரிவில் 3ஆவது இடத்தை பத்து ஆராங் தமிழ்ப் பள்ளியும் 4 ஆவது இடத்தை கோல்ட் பீல்ட்டு தமிழ்ப்பள்ளியும் பிடித்தன.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை, துணை தலைவர் குணா, கென்னத் கண்ணா, செயலாளர் குணா, பொருளாளர் இராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.
0 Comments