கோலாலம்பூர், மே 29-
Budi Madani மானிய உதவித் திட்டத்தின் பதிவு, மத்திய தரவுத்தள மையத்தில் (PADU) சாத்தியமான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்க பேச்சாளர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.
PADU-இன் கீழ் கடந்த மார்ச் 31ஆம் தேதி பதுவுக்கு பதிவு செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிட்ட தனிநபர்களுக்கான மாற்று முயற்சியாக Budi Madani செயல்படுகிறது என்று அவர் விளக்கினார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து குறிப்பாக விவாதிக்கப்படவில்லை என்றாலும், Budi Madani விவரங்களை விளக்க நிதி அமைச்சு விரைவில் செய்தி ஊடக ஆசிரியர்களுடன் ஓர் அமர்வை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட Budi Madani திட்டம் வாயிலாக தீபகற்ப மலேசியாவில் உள்ள B40 மற்றும் M40 வருமான பிரிவைச் சேர்ந்த தனிநபர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் சிறு விவசாயிகள ஆகியோர் வெ.200 மாதாந்திர பண உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அவர் சொன்னார்.
செய்தி: காளிதாசன் தியாகராஜன்
0 Comments