loader
தமிழ்ச் சான்றோர்களின் பெயரில் நான்கு பேருக்கு விருது !

தமிழ்ச் சான்றோர்களின் பெயரில் நான்கு பேருக்கு விருது !

கோலாலம்பூர், மே.5-

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 61ஆவது ஆண்டுக் கூட்டத்தில் தமிழ்ச் சான்றோர்களின் பெயரில் ,விஜயராணி, பாவலர் கோவதன், குணசேகரன், செல்வன் இளமாறன் ஆகிய நால்வருக்கும் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இன்று காலை 9 மணி அளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் YMCA மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மஇகாவின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன்  தலைமையேற்றுத் தொடக்கி வைத்தார்.

படைப்பாளர்கள் நிறைந்து இருக்கும் இந்த சபை காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளை உருவாக்க வேண்டும். ஆய்வு ரீதியான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும். 

தொடர்ந்து தமிழ் இலக்கியப் பணியை செய்து வரும்  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என டத்தோ ஸ்ரீ சரவணன் தமதுரையில் கூறினார்.

மேலும் இந்த பொன்னான தருணத்தில் தமிழ்ச் சான்றோர்கள் என்ற அடிப்படையில் தங்க விருது பெற்ற நான்கு பேருக்கும் அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

0 Comments

leave a reply