கோலாலம்பூர் நவம்பர்-2
இயக்குனர் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'பரமபதம்' திரைப்படத்தில், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் சிம்டாங்காரன் மற்றும் புள்ளினங்காள் பாடலை பாடிய பம்பா பாக்கியா ஒரு பாடல் பாடியுள்ளதாக விக்னேஷ் பிரபு அண்மையில் அறிவித்திருந்தார்.
இளைஞர்களின் முயற்சியில் மலேசியத் திரையுலகில் அனுபவமிக்க மூத்தக் கலைஞர்களின் வழிகாட்டல் மற்றும் ஆசியுடன் 'பரமபதம்' தயாராகி உள்ள நிலையில், இப்படத்தின் டீசர் நாட்டில் உள்ள திரை அரங்குகளில் தீபாவளி திரைப்படங்களான பிகில் மற்றும் கைதி திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. டீசரைப் பார்த்துவிட்டு # பரமபதம் சரவெடி என்று டைப் செய்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்களில், சிறந்த கருத்தினை வழங்கும் ரசிகர்களுக்கு சிறப்புப் பரிசு காத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படம் விக்னேஷ் பிரபு மற்றும் அவரது இளைஞர் குழுவிற்கு ஒரு முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. திரைப்படத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடத் தயாராய் இருக்கிறது பரம்பதம்!
0 Comments