loader
தொழிலாளர்களின் உரிமையை கோரி டத்தாரான் மெர்டேக்காவிற்கு படையெடுக்கும் மக்கள்!

தொழிலாளர்களின் உரிமையை கோரி டத்தாரான் மெர்டேக்காவிற்கு படையெடுக்கும் மக்கள்!


கோலாலம்பூர், மே 1-
நாட்டிலுள்ள தொழிலாளர்களின் உரிமையைக் கோரி 1,500க்கும் மேற்பட்ட மக்கள் மே பேங் கட்டடத்திலிருந்து டத்தாரான் மெர்டேக்காவிற்கு படையெடுத்துள்ளனர்.

பல துறையை சார்ந்த தொழிலாளர்களுடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டின் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச சம்பள அறிவிப்பை தவிர்த்து காலத்திற்கேற்ப கவெ.2,000 அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களின் பாதுக்காப்பு கவனிக்கப்பட வேண்டும், குடிநீர், மின்சாரம், பொது போக்குவரத்து, கல்வி ஆகியவற்றை தனியார் துறைக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என 8 தொழிலாளர் உரிமைகளை கோரி இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply