loader
அரசு ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டுக்கு மேல் சம்பள உயர்வு! -பிரதமர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டுக்கு மேல் சம்பள உயர்வு! -பிரதமர் அறிவிப்பு


கோலாலம்பூர், மே 1-
இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டிற்கும் அதிகமாக சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த சம்பளம் உயர்வு நாட்டில் இதுவரை காணாத அதிக விழுக்காடு உயர்வாகும்.  இதுவரை அரசு ஊழியர்களுக்கு அதிகமாக 13 விழுக்காடு மட்டுமே சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் அதற்கும் கூடுதலாக தற்போது அறிவிக்கப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

0 Comments

leave a reply