loader
பக்காத்தானுக்கு வாக்களிக்காதீர்!  ராமசாமி பிரச்சாரம்

பக்காத்தானுக்கு வாக்களிக்காதீர்! ராமசாமி பிரச்சாரம்

 

கோலாலம்பூர், ஏப்.29-
முன்னாள் ஜசெக உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட உரிமை கட்சி கோல குபு பாருவில் இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரிக்காதீர் என்ற பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

நாட்டு மக்களிடம் வழங்கிய வாக்குறுதியை மத்திய அரசாங்கம் நிறைவேற்றாததால் மக்கள் அதனை புறக்கணிக்க வேண்டுமென உரிமை கட்சியின் தலைவரும் முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வருமான பி.ராமசாமி தெரிவித்தார்.

கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு உரிமை கட்சியினர் நேற்று அங்கு முதல் நாள் பிரச்சாரத்தில் இறங்கியதுடன் பக்காத்தான் ஹராப்பானை மக்கள் ஆதரிக்கக் கூடாது என கூறினர்.

நாங்கள் எந்த கூட்டணிக்கும் ஆதரவாக இங்கு வரவில்லை. மாறாக மக்கள் பக்காத்தான் ஹராப்பானை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்க்கொள்ள வந்ததாக பி.ராமசாமி தெரிவித்தார்.

நேற்று காலை தொடங்கி உரிமை கட்சியினர் ராசா, கெர்லிங், பத்தாங் காலி, கோல குபு பாரு பட்டணம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோல குபு பாரு இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிகழ்கிறது. எங்களின் நிலைப்பாடு பக்காத்தான் ஹராப்பானை மக்கள் ஆதரிக்கக்கூடாதுதான் என ராமசாமி தெரிவித்துள்ளார்.

0 Comments

leave a reply