loader
கேகேபி இந்தியர்களின் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்!  எங்களின் வாக்குகளை வழங்குகிறோம்!

கேகேபி இந்தியர்களின் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்! எங்களின் வாக்குகளை வழங்குகிறோம்!


கோலாலம்பூர், ஏப்.28-
கோல குபு பாருவில் இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ள வீடமைப்பு திட்டம் மற்றும் வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முன் வரும் கட்சிக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஆகையால் இந்த இடைத்தேர்தலில் இவ்விரு பிரச்சினையை யார் களையபோகிறார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் பிரச்சினையை களையும் கூட்டணிக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அவர்கள் ஆதரவளிக்கவுள்ளனர்.

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியில் 18 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளின் அடிப்படையில்தான் இங்கு யார் வெற்றிப்பெறுவார் என்பது உறுதி செய்யப்படும் என கருதப்படுகிறது. ஆகையால் இந்த இடைத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் பெரும் பங்கையாற்றவுள்ளது.

இந்த தொகுதியிலுள்ள பல இந்தியர்கள் சொந்த வீடு இல்லாமல் உள்ளனர். அதுமட்டுமின்றி வேலை இல்லாமலும் உள்ளனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அந்நிய நாட்டவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

நாட்டில் தற்போது விலைவாசி உயர்ந்துள்ள பட்சத்தில் வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு அது பெரும் சுமையாக அமைந்துள்ளது. அவர்களின் பொருளாதார பிரச்சினை தீர்வுக் காணப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் இந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் களம் கண்டவர்களின் வாக்குறுதிகளும் முறையாக நிறைவேற்றப்படாததால் அவர்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளதுடன் தேர்தலை அவர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 11ஆம் தேதி கோல குபு பாரு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply